என் மலர்
நீங்கள் தேடியது "சையத் முஷ்டாக் அலி கோப்பை"
- ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன.
- சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாட உள்ளார்.
அகமதாபாத்:
18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன.
இந்த நிலையில், சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடர் வரும் 6-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பின்னர் ரோகித் சர்மா, சையத் முஷ்டாக் அலி தொடருக்காக மும்பை அணியில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.
- சாய் சுதர்சன் துணை கேப்டன் பொறுப்பை கவனிப்பார்.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் வருண் சக்ரவர்த்தி இடம் பெற்றுள்ளார்.
சென்னை:
18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அகமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. இதில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வி என 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது.
இதற்கிடையே, தமிழக அணியின் கேப்டனாக இருந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் துணை கேப்டனாக இருந்த என்.ஜெகதீசன் எஞ்சிய போட்டிக்கான தமிழக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சாய் சுதர்சன் துணை கேப்டன் பொறுப்பை கவனிப்பார். தமிழக அணி தனது 5-வது லீக் ஆட்டத்தில் இன்று திரிபுராவை ஆமதாபாத்தில் (மாலை 4.30 மணி) சந்திக்கிறது.
- சையத் முஷ்டாக் அலி தொடரின் இன்றைய ஆட்டம் ஒன்றில் பரோடா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.
- இதில் பரோடா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சையத் முஷ்டாக் அலி தொடர் இந்தியாவில் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் பரோடா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பரோடா அணி 19.1 ஓவரில் 224 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் பரோடா அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது களத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர் ஹர்திக் பாண்ட்யாவுடன் செல்பி எடுத்தக் கொண்டார். இதனையடுத்து அந்த ரசிகரை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றினர். செல்பி எடுத்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் துள்ளி குதித்துக் கொண்டு வெளியேறினார். அவர் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- முதலில் பேட்டிங் செய்த பீகார் அணி 177 ரன்கள் எடுத்தது.
- இதனையடுத்து விளையாடிய மகாராஷ்டிரா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா:
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பீகார் - மகாராஷ்டிரா (குரூப் பி) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணியின் கேப்டன் பிரித்வி ஷா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பீகார் அணி தொடக்க ஆட்டக்காரர் ஆன வைபவ் சூர்யவன்ஷியின் அபார சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் அடித்தது. சூர்யவன்ஷி 108 ரன்களுடனும், ஆயுஷ் லோஹருகா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய மகாராஷ்டிரா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரித்வி ஷா அதிரடியாக ஆடி அணிக்கு வலு சேர்த்தார். வெறும் 30 பந்துகளில் 66 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்களில் நிரஜ் ஜோஷி 30 ரன்கள், ரஞ்சித் நிகாம் 27 ரன்கள், நிகில் நாய்க் 22 ரன்கள் ஆகியோரின் கணிசமான பங்களிப்பால் மகாராஷ்டிரா அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் அடித்த 3 விக்கெட்டுள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரித்வி ஷா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
முன்னதாக இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் புதிய சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். அதன்படி சையது முஸ்தாக் அலி கோப்பை தொடரில் இளம் வயதில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். வைபவ் 61 பந்துகளில் 108 ரன்களை விளாசினார். 14 ஆண்டுகள் 250 நாட்களில் வைபவ் சதம் அடித்து இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
- சையத் முஷ்டாக் அலி தொடரின் லீக் போட்டியில் தமிழ்நாடு- டெல்லி அணிகள் இன்று மோதினர்.
- இந்த ஆட்டத்தில் டெல்லி அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.
18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு- டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 72 ரன்கள் விளாசினார். டெல்லி தரப்பில் பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.'
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 15 ஓவரில் 142 ரன்களுக்கு 2 விக்கெட்டை மட்டும் இழந்திருந்தது. இதனால் கடைசி 5 ஓவரில் 57 ரன்கள் தேவை என்ற நிலையில் டெல்லி அணி விளையாடியது.
பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அதனை ஹிம்மாட் சிங் வேகமாக சுற்றினார். அந்த பந்து பவுண்டரி லைனில் நின்ற ஷாருக்கானிடம் சென்றது. அதனை பார்த்த அவர் உடனே முன்னாடி வந்தார். ஆனால் பந்து பின் நோக்கி செல்வதை அறிந்து மீண்டும் பின்னாடி போய் பந்தை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் பந்து அவரின் கையில் பட்டு சிக்சர் ஆனது.
இதனால் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 2 போட்டியில் விளையாடும் தமிழக அணிக்கு மீண்டும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
- அரியானா- பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் 207 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிரா ஆனது.
- இதனால் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது.
18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அங்கிட் குமார் தலைமையிலான அரியானா அணியும் அபிஷேக் சர்மா தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது. இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த ஓவரை அன்ஷுல் காம்போஜ் வீசினார். முதல் பந்தில் 1 ரன் விட்டுக்கொடுத்த அவர் அடுத்த 2 பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அபிஷேக் சர்மா, சன்வீர் சிங் ஆகியோர் முதல் பந்தில் டக் அவுட் ஆனார்கள். இதனால் அரியானா அணிக்கு 2 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை அரியானா அணி முதல் பந்திலேயே அடித்து வெற்றி பெற்றது.
சூப்பர் ஓவரில் மிரட்டிய அன்ஷுல் காம்போஜ் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
- ஐதராபாத்தில் நடந்த போட்டியில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.
ஐதராபாத்:
சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இன்று நடந்த போட்டியில் சர்வீசஸ் மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் ஆடிய சர்வீசஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய குஜராத் அணி 12.3 ஓவரில் வெற்றி இலக்கை விரட்டிப் பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கேப்டன் உர்வில் படேல் 37 பந்தில் 12 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இவர் ஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில், இன்றைய போட்டியில் 31 பந்தில் சதமடித்ததன் மூலம் டி20 போட்டியில் அதிவேக சதமடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் மீண்டும் இணைந்துள்ளார்.
ஏற்கனவே 28 பந்தில் அவர் சதமடித்து அந்தப் பட்டியலில் அபிஷேக் சர்மாவுடன் முதல் இடத்தில் இருக்கும் நிலையில், தற்போது 31 பந்துகளில் சதமடித்து 2வது இடம்பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி திரிபுரா அணிக்கு எதிராக 28 பந்தில் உர்வில் படேல் சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 3 முறை சாம்பியனான தமிழ்நாடு ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
- ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் லீக்' சுற்றுக்கு தகுதி பெறும்.
18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை ஐதராபாத், ஆமதாபாத், கொல்கத்தா, லக்னோ, புனே ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் அணிகள் 'எலைட்', 'பிளேட்' என இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளன. 'எலைட்' பிரிவில் களம் காணும் 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.
நடப்பு சாம்பியன் மும்பை அணி 'ஏ' பிரிவிலும், 3 முறை சாம்பியனான தமிழ்நாடு 'டி' பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் லீக்' சுற்றுக்கு தகுதி பெறும்.
'பிளேட்' பிரிவில் அருணாச்சலபிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த பிரிவு ஆட்டங்கள் புனேயில் நடக்கின்றன. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு போட்டியில் 'எலைட்' பிரிவுக்கு ஏற்றம் பெறும். 'எலைட்' பிரிவில் கடைசி 2 இடத்தை பெறும் அணிகள் அடுத்த ஆண்டு 'பிளேட்' பிரிவுக்கு தரம் இறக்கப்படும்.
இந்த போட்டியில் இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே (இருவரும் மும்பை), ஹர்திக் பாண்ட்யா (பரோடா), சஞ்சு சாம்சன் (கேரளா), அக்ஷர் பட்டேல் (குஜராத்), வருண் சக்ரவர்த்தி (தமிழ்நாடு), ரியான் பராக் (அசாம்), வெங்கடேஷ் அய்யர் (மத்தியபிரதேசம்), தீபக் ஹூடா (ராஜஸ்தான்), ரவி பிஷ்னோய் (குஜராத்) உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் விளையாடும் தமிழ்நாடு சீனியர் அணியில் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
- நடப்பு சாம்பியன் மும்பை அணி ‘ஏ’ பிரிவிலும், 3 முறை சாம்பியனான தமிழ்நாடு ‘டி’ பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.
- ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் லீக்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
ஐதராபாத்:
18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை ஐதராபாத், ஆமதாபாத், கொல்கத்தா, லக்னோ, புனே ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் அணிகள் 'எலைட்', 'பிளேட்' என இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளன. 'எலைட்' பிரிவில் களம் காணும் 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.
நடப்பு சாம்பியன் மும்பை அணி 'ஏ' பிரிவிலும், 3 முறை சாம்பியனான தமிழ்நாடு 'டி' பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் லீக்' சுற்றுக்கு தகுதி பெறும்.
'பிளேட்' பிரிவில் அருணாச்சலபிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த பிரிவு ஆட்டங்கள் புனேயில் நடக்கின்றன. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு போட்டியில் 'எலைட்' பிரிவுக்கு ஏற்றம் பெறும். 'எலைட்' பிரிவில் கடைசி 2 இடத்தை பெறும் அணிகள் அடுத்த ஆண்டு 'பிளேட்' பிரிவுக்கு தரம் இறக்கப்படும்.
இந்த போட்டியில் இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே (இருவரும் மும்பை), ஹர்திக் பாண்ட்யா (பரோடா), சஞ்சு சாம்சன் (கேரளா), அக்ஷர் பட்டேல் (குஜராத்), வருண் சக்ரவர்த்தி (தமிழ்நாடு), ரியான் பராக் (அசாம்), வெங்கடேஷ் அய்யர் (மத்தியபிரதேசம்), தீபக் ஹூடா (ராஜஸ்தான்), ரவி பிஷ்னோய் (குஜராத்) உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 9-ந் தேதி தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து ஐ.பி.எல். மினி ஏலம் 16-ந் தேதி நடக்கிறது. இந்திய அணியில் இடம் உறுதி இல்லாத வீரர்கள் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்கவும், ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்கும் அணி நிர்வாகத்தின் பார்வையை தங்கள் பக்கம் திருப்பவும் இந்த போட்டியை சரியான களமாக பயன்படுத்தி கொள்ள முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் வருண் சக்ரவர்த்தி தலைமையிலான தமிழக அணி, ராஜஸ்தானை ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு சந்திக்கிறது. மற்ற ஆட்டங்களில் கர்நாடகா-உத்தரகாண்ட், மும்பை- ரெயில்வே, ஜம்மு காஷ்மீர்-மராட்டியம், இமாசலபிரதேசம்- பஞ்சாப், பரோடா-பெங்கால், டெல்லி-ஜார்கண்ட் அணிகள் மோதுகின்றன.
- துணை கேப்டனாக நாராயண் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்தத் தொடரில், தமிழ்நாடு அணி எலைட் குரூப் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ளது.
சென்னை:
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் வருகிற நவம்பர் 26-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டனாக, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை கேப்டனாக நாராயண் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆர். சாய் கிஷோர் மற்றும் இளம் வீரர் ஆண்ட்ரே சித்தார்த் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
நடப்பு ரஞ்சி டிராபி சீசனில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தமிழ்நாடு அணி, டி20 தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு முத்திரை பதிக்கும் முனைப்பில் உள்ளது. இந்தத் தொடரில், தமிழ்நாடு அணி எலைட் குரூப் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பிரிவில் ராஜஸ்தான், டெல்லி, கர்நாடகா, உத்தரகாண்ட், திரிபுரா, ஜார்கண்ட் மற்றும் சௌராஷ்டிரா போன்ற பலம் வாய்ந்த அணிகளும் உள்ளன. தமிழ்நாடு அணி தனது முதல் போட்டியில் அகமதாபாத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணி விவரம்:-
வருண் சக்கரவர்த்தி (கேப்டன்), நாராயண் ஜெகதீசன் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்),துஷார் ரஹேஜா (விக்கெட் கீப்பர்)வி.பி. அமித் சாத்விக், ஷாருக் கான், ஆண்ட்ரே சித்தார்த், பிரதோஷ் ரஞ்சன் பால், சிவம் சிங், ஆர். சாய் கிஷோர், எம். சித்தார்த், டி. நடராஜன், குர்ஜப்னீத் சிங், ஏ. இசக்கிமுத்து, ஆர். சோனு யாதவ், ஆர். சிலம்பரசன், எஸ். ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்).
- கொல்கத்தாவில் நடந்த இறுதிப்போட்டியில் மும்பை, இமாசல பிரதேசம் அணிகள் மோதின.
- டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
கொல்கத்தா:
சையத் முஷ்டாக் அலி டி 20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் ஈடன் கார்டனில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இமாசல பிரதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஏகாந்த் சென் 37 ரன்னும், ஆகாஷ் வசிஷ்ட் 25 ரன்னும் எடுத்தனர்.
மும்பை அணி சார்பில் தனுஷ் கோடியான், மோஹித் அவஸ்தி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய மும்பை அணி 19.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 34 ரன்கள் எடுத்தார்.
சர்ப்ராஸ் கான் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் முதல்முறையாக மும்பை அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையை கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருதை தனுஷ் கோடியான் வென்றார்.
- முதலில் பேட் செய்த ரெயில்வே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் குவித்தது.
- இதனையடுத்து விளையாடிய அருணாச்சலபிரதேச அணி 18.1 ஓவர்களில் 119 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
ராஞ்சி:
16-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை, மொகாலி, ஜெய்ப்பூர், ராஞ்சி உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ராஞ்சியில் நேற்று நடந்த 'சி' பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் ரெயில்வே-அருணாச்சலபிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ரெயில்வே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உபேந்திர யாதவ் ஆட்டம் இழக்காமல் 103 ரன்னும், அசுதோஷ் ஷர்மா 53 ரன்னும் (12 பந்து, ஒரு பவுண்டரி, 8 சிக்சர்) நொறுக்கினர்.
அசுதோஷ் ஷர்மா 11 பந்துகளில் அரைசதத்தை எட்டி சாதனை படைத்தார். இதன் மூலம் அவர் ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் (சர்வதேச மற்றும் உள்ளூர் 20 ஓவர் போட்டி) அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை யுவராஜ்சிங்கிடம் இருந்து தட்டிப்பறித்தார். 2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் யுவராஜ்சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
ஒட்டுமொத்த அளவில் கடந்த மாதம் நடந்த ஆசிய விளையாட்டில் மங்கோலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நேபாள வீரர் திபேந்திர சிங் 9 பந்தில் அரைசதம் அடித்ததே உலக சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஆடிய அருணாச்சலபிரதேச அணி 18.1 ஓவர்களில் 119 ரன்னில் அடங்கியது. இதனால் ரெயில்வே அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.






