என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhra Pradesh"

    • இந்த விபத்து வழக்கை சந்தேக வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.
    • இந்தக் கொலைக்கு உதவிய எல்ஐசி முகவர் நானாஜி மற்றும் ததாஜி என்ற மற்றொரு நபரையும் கைது செய்தனர்.

    ஆந்திராவின் அனகப்பள்ளி மாவட்டம் கோத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குரு நாராயணமூர்த்தி (54)

    இவர் கடந்த டிசம்பர் 9-ம் தேதி சாலையில் சடலமாக கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் நாராயணமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாலை விபத்தில் அவர் மரணம் அடைந்து விட்டதாக நாராயண மூர்த்தியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நாராயணமூர்த்தியின் உடல் மீது இருந்த காயங்கள் கொலைக்கான சாத்தியக்கூறுகளுடன் இருப்பதால் இந்த விபத்து வழக்கை சந்தேக வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.

    விசாரணையின் ஒரு பகுதியாக, ஆறு மாதங்களுக்கு முன்பு நாராயணமூர்த்தியின் பெயரில் பல்வேறு எல்ஐசி உள்ளிட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களிலிருந்து ரூ.1.08 கோடி மதிப்புள்ள காப்பீட்டுக் பாலிசிகள் பெறப்பட்டிருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

    நாராயண மூர்த்தி இறந்தால் காப்பீட்டுத் தொகை தங்களுக்கு வந்துவிடும் என்ற பேராசையில் மருமகன் சுன்கரி மற்றும் பேரன் சுன்கரி ஜோதி பிரசாத் ஆகியோர் அவரை இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொன்றதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

    அவர்களை கைது செய்த போலீசார் இந்தக் கொலைக்கு உதவிய எல்ஐசி முகவர் நானாஜி மற்றும் ததாஜி என்ற மற்றொரு நபரையும் கைது செய்தனர்.   

    • டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆந்திர பிரதேச அணி 19.1 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    புனே:

    சையத் முஷ்டாக் அலி கோப்பையின் நடப்பு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ந்டந்து வருகிறது.

    இந்நிலையில், புனேவில் உள்ள டி.ஒய்.பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆந்திர பிரதேச அணி 19.1 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்ரீகர் பரத் 39 ரன்னும், நிதிஷ் ரெட்டி 25 ரன்னும் எடுத்தனர்.

    மத்திய பிரதேச அணி சார்பில் ஷிவம் ஷுக்லா 4 விக்கெட்டும், திரிபுரேஷ் சிங் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    எளிய இலக்கை துரத்திய மத்திய பிரதேச அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. நிதிஷ்குமார் ஒரே ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இதன்மூலம் நடப்பு தொடரில் ஹாட்ரிக் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை நிதிஷ் ரெட்டி பெற்றுள்ளார்.

    அடுத்து இணைந்த ரிஷப் சௌகான்-ராகுல் ஜோடி பொறுப்புடன் ஆடியது. ரிஷப் சௌகான் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

    இறுதியில், மத்திய பிரதேச அணி 17.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணி வெற்றியைப் பதிவுசெய்தது.

    • 37 பேருடன் சென்ற பேருந்து நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
    • னித யாத்திரைக்காக பத்ராசலத்தைப் பார்வையிட்ட பிறகு அன்னாவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

    ஆந்திரப் பிரதேச மாநிலம் மாரடி மல்லி பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர்.

    37 பேருடன் சென்ற பேருந்து நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சிந்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    தனியார் பேருந்தில் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 பயணிகள் இருந்தனர். இந்தக் குழு புனித யாத்திரைக்காக பத்ராசலத்தைப் பார்வையிட்ட பிறகு அன்னாவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவுக்குப் பிறகு பேருந்து வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை வழியாகச் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தெரிவித்ததோடு, அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார்.

    விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து செல்லுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதல்வர், காயமடைந்த பயணிகள் மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

    • ரோகிணி ரஷ்யாவில் மருத்துவ படிப்பை முடித்தார்.
    • அமெரிக்காவில் மேற்படிப்பை தொடர ஜே-1 விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார்.

    ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர் ரோகிணி (வயது 38). இவர் தற்போது ஐதராபாத்தில் உள்ள பத்மாராவ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    ரோகிணி ரஷ்யாவில் மருத்துவ படிப்பை முடித்தார். அமெரிக்காவில் வசிக்கவும், மேற்படிப்பை தொடரவும், பயிற்சி பெறவும் ஜே-1 விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார். அதற்கான ஏற்பாடுகளை செய்ய அமெரிக்காவிற்கு சென்ற ரோகிணி விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல மாதங்கள் காத்திருந்தார்.

    அவரது விசா நிராகரிக்கப்பட்டது. இதனால் ரோகிணியின் அமெரிக்காவில் பயிற்சி பெற வேண்டும் என்ற கனவு தகர்ந்து போனது. விரக்தியுடன் காணப்பட்ட ரோகிணி மீண்டும் ஐதராபாத் திரும்பினார்.

    நேற்று வீட்டின் அறையில் தனியாக இருந்த ரோகிணி அதிக அளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் ரோகிணியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் ரோகிணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு ரோகிணியின் பெற்றோர் கதறி துடித்தனார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பந்தபள்ளி பெண்கள் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது.
    • மாணவிகள் உதவுவதாகக் கூறி அச்செயலை செய்ததாகவும் ஆசிரியை விளக்கமளித்தார்.

    ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், மேலியபுட்டி மண்டலத்தில் பந்தபள்ளி பெண்கள் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது.

    இங்கு பாட நேரத்தில் ஆசிரியை ஒருவர் நாற்காலியில் அமர்ந்தபடி தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்க, மாணவிகள் அவருக்குக் கால்கள் பிடித்துவிடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்பட்ட நிலையில் தான் முழங்கால் வலியால் அவதிப்பட்டதாகவும், அன்றைய தினம் கீழே விழுந்ததாகவும், மாணவிகள் உதவுவதாகக் கூறி அச்செயலை செய்ததாகவும் ஆசிரியை விளக்கமளித்தார்.

    இதுதொடர்பாக விசாரணை முடியும் வரை அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கு முன்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை, மாணவர்களைத் தனது காரைக் கழுவவும் பிற தனிப்பட்ட வேலைகளைச் செய்யுமாறு வற்புறுத்தியதற்காகவும் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • ஆந்திராவில் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் நின்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
    • பாதுகாப்பு வேண்டும் என காவல்துறையிடம் அனுமதி ஏதும் கேட்கவில்லை.

    ஆந்திர மாநிலம் காசிபுக்கா ஸ்ரீகாகுளத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 9 பக்தர்கள் மூச்சுதிணறி உயிரிழந்தனர்.

    இது தொடர்பாக 94 வயதான அந்த கோவிலின் நிறுவனர் கூறுகையில் ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் வந்தால், நான் என்ன செய்ய வேண்டும்? எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முகுந்தா பண்டா கூறியதாவது:-

    ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் வந்தால், நான் என்ன செய்ய வேண்டும்?. வழக்கமாக நான் வரிசையில் ஒவ்வொரு நபராக அனுப்புவேன். ஆனால் சம்பவத்தன்று, ஏராளமான மக்கள் வருகை தந்தனர். என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. நான் எந்த போலீஸ்க்கும் தகவல் தெரிவிக்கவில்லை.

    நான் போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கவில்லை. எனக்கு தைரியம் இருக்கு. லைனில் செல்லுமாறு ஒவ்வொருவரிடமும் தெரிவித்தேன். மக்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள். அவர்கள் அவரசமாக முந்திச் சென்று, இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் நான் என்ன செய்ய முடியும்?.

    இவ்வாறு முகுந்தா பண்டா தெரிவித்தார்.

    போலீஸ் விசாரணையில் கோவில் தனியாருக்கு சொந்தமானது. முறையான ஒப்புதல் இல்லாமல் இயக்கப்பட்டு வந்துள்ளது. ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற தவறியது தெரியவந்துள்ளது.

    • கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
    • பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்

    ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஏகாதசி பண்டிகையை ஒட்டி கோவிலில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

    கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கூட்டநெரிசலில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் வழங்கப்படும் என அம்மாநில அமைச்சர் நர லோகேஷ் அறிவித்துள்ளார்.

    முன்னதாக கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். 

    • கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஏகாதசி பண்டிகையை ஒட்டி கோவிலில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கூட்டநெரிசலில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    • ஏகாதசி பண்டிகையை ஒட்டி கோவிலில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
    • கூட்டநெரிசலில் சிக்கி சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஏகாதசி பண்டிகையை ஒட்டி கோவிலில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதுகுறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா வெங்கடேஸ்வரா கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெய்வத்தை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இவ்வாறு உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வான்வழியாக ஆய்வு செய்தார்.
    • சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தார்.

    வங்கக் கடலில் உருவான புயல் மோன்தா தீவிர புயலாக மாறியது. இந்த புயல் நேற்று இரவு மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் இடையே கரையை கடந்தது.

    இந்த புயல் காரணமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    பல இடங்களில் மரங்கள் பலத்த காற்றால் சாய்ந்தன. ஆபத்தான பகுதிகளில் இருந்து 76,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். 800 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டது.

    இந்நிலையில், ஆந்திராவில் மோன்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டர் மூலம் வான்வழியாக ஆய்வு செய்தார்.

    இதனையடுத்து கொனசீமா மாவட்டத்தில் மோன்தா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட மறுவாழ்வு மையத்தை பார்வையிட்ட சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தார்.

    பின்னர், நீரில் மூழ்கிய பயிர் வயல்களை ஆய்வு செய்த அவர், பயிர் சேதம் விரைவில் மதிப்பிடப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

    • வங்கக் கடலில் உருவான புயல் மோன்தா தீவிர புயலாக மாறியது.
    • பெண் பயணித்த ஆட்டோ மீது கனமழையால் மரம் முறிந்து விழுந்தது.

    வங்கக் கடலில் உருவான புயல் மோன்தா தீவிர புயலாக மாறியது. இந்த புயல் இன்றிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    அதன்படி இன்று 7.30 மணியளவில் மோன்தா புயல் மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் இடையே கரையை கடக்க தொடங்கியது. தொடர்ந்து நள்ளிரவில் புயல் கரையை கடந்தது.  

    இந்த புயல் காரணமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    கோனசீமா பகுதியில் மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பிக்கொண்டிருந்த பெண் பயணித்த ஆட்டோ மீது கனமழையால் மரம் முறிந்து விழுந்தது. இதில் அப்பெண் உயிரிழந்தார். மேலும் ஆட்டோ ஓட்டுனரும் 1 சிறுவனும் படுகாயமடைந்தனர்.

    அல்லூரி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை மீட்புப்படையினர் மீட்டனர். ஸ்ரீகாகுளத்தில் சிவன் சிலை வெள்ளத்தில் பாதி மூழ்கிய நிலையில் இருந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.

    பல இடங்களில் மரங்கள் பலத்த காற்றால் சாய்ந்தன. ஆபத்தான பகுதிகளில் இருந்து 76,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். 800 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டது. இதற்கிடையே இன்று ஆந்திராவில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    • ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவுக்குச் சென்று தரிசித்தார்.

    ஆந்திர மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று கர்னூல் வந்தார். அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர்.

    அங்கிருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீசைலம் சென்றார். ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் சிறிது நேரம் தியானம் செய்தார்.

    அதைத் தொடர்ந்து ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவுக்குச் சென்று தரிசித்தார்.

    இதனைத் தொடர்ந்து நன்னூர் அருகே 'சூப்பர் ஜிஎஸ்டி- சூப்பர் சேமிப்பு' என்ற பொதுக் கூட்டம் நடந்தது. ஆந்திர மாநில கவர்னர் நசீர், முதல்வர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், லோகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் ரூ.13,430 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார். முடிவற்ற திட்ட பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    'சூப்பர் ஜி.எஸ்.டி சூப்பர் சேமிப்பு' என்ற கருப்பொருளில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 450 ஏக்கர் பரப்பளவில் நடந்த இந்த கூட்டத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ×