என் மலர்
நீங்கள் தேடியது "Laddu"
- கேழ்வரகில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாலிபீனால் ஆகியவை நிறைந்துள்ளன.
- கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும்.
ராகி எனும் கேழ்வரகு தென்னிந்திய மக்களின் முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றாகும். இதில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாலிபீனால் ஆகியவை நிறைந்துள்ளன. கேழ்வரகில் உள்ள அமினோ அமிலங்கள், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றன. இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும். சரும ஆரோக்கியம், எலும்புகளின் வலிமை, முடி வளர்ச்சி போன்றவற்றுக்கும் கேழ்வரகில் உள்ள சத்துக்கள் பயன்படுகின்றன. கேழ்வரகைக் கொண்டு பாரம்பரிய சுவையுடன் தயாரிக்கப்படும் 'ராகி சிமிலி' செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 200 கிராம்
வெல்லம் - 100 கிராம்
வேர்க்கடலை - 100 கிராம்
எள் - 4 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
உப்பு - ¼ தேக்கரண்டி
செய்முறை:
பாத்திரத்தில் கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, நெய் ஊற்றி சப்பாத்திகளாக சுட்டுக்கொள்ளவும்.
பின்னர் வாணலியில் எள் மற்றும் வேர்க்கடலையை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.
வறுத்த வேர்க்கடலையின் தோலை நீக்கி பொடித்துக்கொள்ளவும்.
கேழ்வரகு சப்பாத்தி ஆறியதும் மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் ஏலக்காய்த்தூள் மற்றும் வெல்லம் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாகப் பிசையவும். கலவை கையில் ஒட்டும் பதத்தில் வரும்போது உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும்.
இப்பொழுது சுவையான மற்றும் சத்து மிகுந்த 'கேழ்வரகு சிமிலி' தயார்.
கேரட் - 200 கிராம்,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
பொடித்த கோவா - 1/2 கப்,
சர்க்கரை - 1/2 கப் அல்லது தேவைக்கு,
மெல்லியதாக சீவிய பாதாம், பிஸ்தா - தேவைக்கு,
உடைத்த முந்திரி, காய்ந்த திராட்சை - தேவைக்கு,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,

செய்முறை :
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
நான்ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து நெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி சூடானதும் முந்திரி, காய்ந்த திராட்சையை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
அதே கடாயில் மீதியுள்ள நெய்யை ஊற்றி கேரட்டை போட்டு வதக்கவும். ‘
கேரட் சிறிது வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் பொடித்த கோவாவை சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் 10 நிமிடம் வதக்கவும்.
அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
சர்க்கரை கரைந்து அனைத்தும் சுருண்டு கடாயில் ஒட்டாமல் வரும்பொழுது வறுத்த முந்திரி, காய்ந்த திராட்சை கலந்து இறக்கவும்.
ஆறியதும் லட்டுகளாக பிடித்து பிஸ்தா, பாதாம் சீவலால் அலங்கரித்து பரிமாறவும்.
சூப்பரான கேரட் கோவா லட்டு ரெடி.
கவுனி அரிசி மாவு - அரை கப்
பொட்டுக்கடலை மாவு - அரை கப்
பாதாம் பவுடர் - 4 டேபிள்ஸ்பூன்
நெய் - கால் கப்
துருவிய வெல்லம் - முக்கால் கப்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
முந்திரி - தேவையான அளவு

செய்முறை:
வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சூடானதும், முந்திரியைச் சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் கவுனி அரிசி மாவைச் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து அடுப்பை அணைக்கவும்.
மாவு ஆறியதும் மீதமுள்ளவற்றில் நெய், முந்திரி தவிர்த்து பொட்டுக்கடலை மாவு, பாதாம் பவுடர், துருவிய வெல்லம், ஏலக்காய்த்தூள், போட்டு இதில் உருக்கிய நெய்யை ஊற்றி கைப்பொறுக்கும் சூட்டில் லட்டுகளாகப் பிடிக்கவும்.
லட்டின் மேலே முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.
உலர்ந்த அத்திப்பழம் - 20
உடைத்த முந்திரி, உடைத்த வால்நட், வெள்ளரி விதை - தலா கால் கப்
ரூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம்,
பேரீச்சம்பழம் - 15

செய்முறை :
உலர்ந்த அத்திப்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பேரீச்சம்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்சியில் பேரீச்சம்பழம, அத்திப்பழத்தை போட்டு ஒரு சுற்று சுற்றி இறக்கவும். நைசாக அரைக்க கூடாது. ஒரு சுற்று சுற்றினால் போதுமானது.
அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உடைத்த முந்திரி, உடைத்த வால்நட், வெள்ளரி விதை, தேன், ரூட்டி ஃப்ரூட்டி சேர்த்து நன்கு கலந்து கெட்டியாக உருண்டைகளாக வேண்டிய வடிவில் பிடிக்கவும்.
அத்திப்பழம் நட்ஸ் உருண்டை ரெடி.
திருப்பதியில் ஏழுமலையானுக்கு நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படும் பிரசாதங்கள் அனைத்தும் கோவிலுக்குள் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும் என்பது ஆகம விதியாகும்.
ஆனால் நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரிப்பதன் காரணமாக கோவிலுக்குள் கூட்ட நெரிசல் ஏற்படுவதால், பிரசாதம் தயாரிப்பதற்கு தேவையான இடத்தை ஒதுக்க தேவஸ்தானத்தால் இயலவில்லை.
அதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லட்டுக்கான பூந்தியை மட்டும் கோவிலுக்கு வெளியே தயாரிக்க முடிவு செய்து, அதற்கான பிரிவை வெளியில் அமைத்தது.
அதைத் தொடர்ந்து கோவிலுக்கு வெளியில் தற்போது பூந்தி தயாரிக்கப்படுகிறது.
அதை எவர்சில்வர் பெட்டிகளில் அடைத்து கோவிலுக்குள் அனுப்பி மடப்பள்ளியில் வைத்து, சர்க்கரைப்பாகு கலந்து, உருண்டையாக லட்டு பிடித்து அதே பெட்டிகளில் வெளியில் அனுப்பி பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
பக்தர்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு லட்டு இருப்பதை தேவஸ்தானம் கண்காணித்து வருகிறது. இந்நிலையில் லட்டு தயாரிப்பு தொடர்பாக புதிய நடைமுறையை உருவாக்குவது குறித்து தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.
அதாவது, கடந்த மாதம் நடைபெற்ற அறங்காவலர் குழுக்கூட்டத்தில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மடப்பள்ளியை அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி புதிய மடப்பள்ளியில் பூந்தி தயாரிப்பதற்கு கடலை மாவைக் கலப்பது, பூந்தி பொரிப்பது, சர்க்கரைப் பாகு செய்து, அதில் பூந்திகளைக் கலந்து தேய்ப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
லட்டுகளை உருண்டையாகப் பிடிப்பதற்கு மட்டும் கோவிலுக்குள் அனுப்புவது பற்றி தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.
அவ்வாறு செய்வதால் கோவிலுக்குள் ஏற்பட்டிருக்கும் இடப்பற்றாக்குறையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.
இதுதொடர்பாக ஆகம பண்டிதர்களுடன் தேவஸ்தான அதிகாரிகள் கலந்துரையாடி வருவதாகத் தெரிகிறது.
எனினும், இடப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி ஏழுமலையான கோவிலுக்குள் இருக்கும் லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களைத் தயாரிக்கும் மடப்பள்ளி முழுவதையும் கோவிலுக்கு வெளியில் கொண்டுவர தேவஸ்தானம் திட்டமிடுவதாக பக்தர்கள் குறை கூறியுள்ளனர். #Tirupati #Laddu

பாசிப் பருப்பு -1 கப்
பொடித்த சர்க்கரை - 1 கப்
நெய் - 100 கிராம்
ஏலக்காய் - 4

செய்முறை :
வாணலியில் பாசிப்பருப்பை போட்டு வறுத்து மிக்சியில் மாவாக்கிக்கொள்ளவும். அதனை சலித்துக் கொள்ளவும்.
ஏலக்காய் மற்றும் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய்யை ஊற்றி அதனை உருக்கி மாவு மீது ஊற்றி சூடு பொறுக்கும் அளவுக்கு இருக்கும் போதே லட்டுகளாக பிடிக்கவும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடக்கிறது. முதல் பிரம்மோற்சவம் செப்டம்பர் மாதம் 13-ந் தேதியில் இருந்து 21-ந் தேதி வரையும், 2-வது பிரம்மோற்சவம் (நவராத்திரி) அக்டோபர் மாதம் 10-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையும் நடக்கிறது.
முதல் பிரம்மோற்சவம் செப்டம்பர் 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 17-ந் தேதி கருடவாகனம், 18-ந் தேதி தங்கத்தேர், 20-ந்தேதி மரத்தேர், 21-ந் தேதி சக்கரஸ்நானம் ஆகியவையும், 2-வது பிரம்மோற்சவத்தின்போது அக்டோபர் 14-ந் தேதி கருடவாகனம், 17-ந் தேதி தங்கத்தேர், 18-ந் தேதி சக்கரஸ்நானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தேவஸ்தான அதிகாரி அனில்குமார்சிங்கால் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரம்மோற்சவ விழாவுக்காக ரூ.4½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதிக்குள் சிறப்பு ஏற்பாடு பணிகளை முடிக்கவேண்டும். பக்தர்களுக்காக 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கருடசேவை அன்று திருமலைக்கு இரு சக்கர வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்படுகிறது. 6,800 கார்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. 165 சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருடசேவையின்போது வி.ஐ.பி.தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 10 மாநிலங்களை சேர்ந்த கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தேவஸ்தான துணை அதிகாரிகள் பாலபாஸ்கர், சீனிவாசராஜி, பாதுகாப்பு அதிகாரி சிவகுமார் ரெட்டி, என்ஜினீயர் சந்திரசேகர் ரெட்டி, கோவில் அதிகாரி அரிந்திரநாத், சித்தூர் மாவட்ட கலெக்டர் பிரதியும்ணா, போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்மகந்தி பங்கேற்றனர். #TirupatiTemple