search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pregnant women"

    • வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஹேமராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம், கந்தம்பாளையத்தில் வசித்துவரும் ஆந்திர மாநிலம், சித்தூர், மங்கலசமுத்திரத்தைச் சேர்ந்த ஜெமினி ஜோசப்பின் மனைவி ரேவதி (வயது 36) என்ற 4 மாத கர்ப்பிணிப் பெண் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக கடந்த 6-ந்தேதி பிற்பகல் கோயம்புத்தூர் திருப்பதி விரைவு ரெயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணித்தபோது, ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் அப்பெட்டியில் ஏறிய கே.வி.குப்பம், பூஞ்சோலை கிராமம், சின்ன நாகல் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவன் அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்று அப்பெண்ணைத் தாக்கி, வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம், சீதாராமன் பேட்டை அருகில் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்தப் பெண் பலத்த காயம் அடைந்துள்ளார்.

    அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தப் பெண்ணிற்கு நேற்று கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ரேவதிக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரேவதியின் முழு மருத்துவச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

    இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஹேமராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரேவதியின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவருக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டது தெரிய வந்தது.
    • பாதுகாப்பான ரெயில் பயணம் தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    திருப்பூர் வழியாக பெங்களூரு செல்லும் ரெயிலில் கடந்த 2 நாட்களுக்கு முன் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணை கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கை, கால் உடைந்த நிலையில் அந்த கர்ப்பிணி மீட்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை நேற்று பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டது தெரிய வந்தது.

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவத்தின் எதிரொலியாக, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஐஜி ஏ.ஜி. பாபு ஆய்வு நடத்தினார்.

    அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பாதுகாப்பான ரெயில் பயணம் தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

    • தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை காட்டிலும் அந்த பெண்ணுக்கு கூடுதல் உயர் சிகிச்சை தேவைப்பட்டுள்ளது.
    • ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நடந்த இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    திருப்பூரில் இருந்து சித்தூருக்கு கடந்த 6-ந் தேதி ரெயிலில் பயணித்த 36 வயதுடைய 4 மாத கர்ப்பிணி பெண் பயணம் செய்தார்.

    அப்போது ஹேமராஜ் என்ற கொடூரனால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி விடப்பட்டார்.

    இதில் கர்ப்பிணி கை, கால் முறிவு ஏற்பட்டது. பலத்த படுகாயத்துடன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்து 4 மாத சிசு நேற்று உயிரிழந்தது.

    இதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு உயர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் ராணிப்பேட்டையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    அங்கு வயிற்றில் உயிரிழந்த சிசுவை அகற்றுவதற்கான தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-

    தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை காட்டிலும் அந்த பெண்ணுக்கு கூடுதல் உயர் சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஒவ்வொரு பிரச்சனையாக தொடர்ந்து உடலில் ஏற்படுவதால் சிறப்பு மருத்துவ வல்லுனர் குழுவினர் அப்பெண்ணை பரிசோதித்தனர்.

    அவர்களின் ஆலோசனைக்கு பிறகு அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்படுகிறது என்பதாலும், பெண்ணின் நலன் கருதியும் தற்போது அரசு மருத்துவமனையில் இருந்து, ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவியையும் அரசு செய்து வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நடந்த இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரெயில் பயணம் பாதுகாப்பானது தானா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த அச்சத்தை போக்கும் வகையில் ரெயில்வே போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரெயில்வே போலீசார்.
    • 4 மாத கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக நேற்று தெற்கு ரெயில்வே தெரிவித்தது.

    கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரெயிலில் கர்ப்பிணி பெண் பயணம் செய்தார்.

    வேலூர் கே.வி. குப்பம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சிலர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து கத்திக் கூச்சலிட்டுள்ளார்.

    கர்ப்பிணி பெண் குரல் கேட்டு சக பயணிகள் வருவதற்குள் அந்த நபர்கள் அவரை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

    தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரெயில்வே போலீசார் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    மேலும், கோவை- திருப்பதி விரைவு ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்தது.

    இந்நிலையில், ஓடும் ரெயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், இறந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவம் தகவல் வெளியாகியுள்ளது.

    • கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரத்தை முழுமையாகக் கவனிக்க வேண்டும்.
    • நெரிசலான பகுதிக்கு செல்லும் போதெல்லாம் முககவசம் அணியுங்கள்.

    HMPV நேரடியாக கர்ப்பத்திற்குத் தீங்கு விளைவிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், HMPV நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் கடுமையான சுவாச சிக்கல்களை அனுபவிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது தாயின் ஆரோக்கியம் மற்றும் கருவின் வளர்ச்சி இரண்டையும் பாதிக்கலாம். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் HMPV நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.


    இதுதவிர, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் அல்லது சில தீவிர நோய்களால் பாதிக்கப்படக்கூடியவர்களும் உள்ளனர். கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த அச்சம் ஏற்படலாம்.

    HMPV வயிற்றில் உள்ள குழந்தையை எவ்வாறு பாதிக்கும்?

    கர்ப்பிணிப் பெண்களுக்கு எப்போதுமே சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகம். உண்மையில், கர்ப்ப காலத்தில் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது.

    எனவே அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இது மட்டுமின்றி, கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு HMPV இருந்தால், அது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    கர்ப்ப காலத்தில் HMPV இருப்பது கர்ப்பகால வயதிற்கு சிறிய குழந்தை பிறக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. இதுவரை போதிய ஆதாரங்கள் இல்லாததால், பெண்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.


    HMPV கர்ப்பத்தை எவ்வாறு பாதிக்கிறது?

    HMPV காரணமாக, கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு சுவாச பிரச்சனைகள் இருக்கும். இந்த வகையான பிரச்சனை தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல.

    கர்ப்ப காலத்தில் தாய்க்கு HMPV இருந்தால், தாய்க்கு சுவாசிப்பதில் சிரமம் இருக்கும். குழந்தைக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படலாம்.

    HMPV காரணமாக, பிறக்கும் போது குழந்தையின் எடை குறைவாக இருக்கலாம் அல்லது அவரது உயரம் சாதாரண மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளை விட சிறியதாக இருக்கலாம்.


    கர்ப்ப காலத்தில் HMPVக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது நிமோனியா போன்ற தீவிர நோயாக மாறும்.

    இதன் காரணமாக குறைப்பிரசவம், குழந்தையின் எடைக் குறைவான பிறப்பு மற்றும் குழந்தைக்கும் தொற்று ஏற்படும் அபாயம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம்.


    * HMPV ஐத் தவிர்க்க, கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரத்தை முழுமையாகக் கவனிக்க வேண்டும். எதையும் தொட்டவுடன் உங்கள் முகம் மற்றும் கண்களைத் தொடாதீர்கள்.

    * HMPV தடுக்க, ஆல்கஹால் அல்லாத சானிடைசர் மூலம் கைகளைச் சுத்தப்படுத்தவும்.

    * HMPV -ன் அறிகுறிகள் தோன்றினால், வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.

    * நீங்கள் நெரிசலான பகுதிக்கு செல்லும் போதெல்லாம், எப்போதும் முககவசம் அணியுங்கள்.

    * கர்ப்பிணிப் பெண்கள் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி, தங்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    • தமனிகளில் அழுத்தம் அதிகமாக இருந்தால், உயர் ரத்த அழுத்தம் உள்ளது.
    • கர்ப்ப கால சிக்கல்களைத் தடுக்க மருத்துவரை அணுகவும்.

    பொதுவாக ரத்த அழுத்தம் என்பது உங்கள் தமனிகளின் சுவர்களுக்கு எதிராகத் தள்ளும் ரத்தத்தின் சக்தியாகும். தமனிகள் இதயத்திலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்கள்.

    ஒவ்வொரு முறையும் இதயம் துடிக்கும்போது, அது தமனிகளுக்கு ரத்தத்தை செலுத்துகிறது. தமனிகளில் அழுத்தம் அதிகமாக இருந்தால், உயர் ரத்த அழுத்தம் உள்ளது.


    உயர் ரத்த அழுத்தம் உங்கள் உறுப்புகளுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது மாரடைப்பு, இதய செயலிழப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

    சில பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் முன் உயர் ரத்த அழுத்தம் இருக்கும். மற்றவர்களுக்கு கர்ப்ப காலத்தில் முதல் முறையாக உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.

    கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்த அளவு எவ்வளவு இருக்க வேண்டும், அதிகமாக இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

    கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் பொதுவாக 140/90 mm Hg அல்லது அதற்கும் அதிகமாக வரையறுக்கப்படுகிறது.

    குறைந்த ரத்த அழுத்தம் பொதுவாக 90/60 mm Hg அல்லது அதற்கும் குறைவாக வரையறுக்கப்படுகிறது.


    அறிகுறிகள்:

    சிவந்த தோல், கைகள் அல்லது கால்களின் வீக்கம், தலைவலி, மூச்சு திணறல், வயிற்று வலி, குமட்டல், வாந்தி, பார்வை மாற்றங்கள்

    உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது உயர் ரத்த அழுத்தம் அறிகுறிகள் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், கர்ப்ப கால சிக்கல்களைத் தடுக்க உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.

    • பனிக்குட நீரானது, குழந்தையை தொற்றுகளிலிருந்து காப்பாற்றுகிறது.
    • குழந்தையின் சுதந்திரமான அசைவுக்கும் உதவுகிறது.

    கருவிலுள்ள குழந்தையை சுற்றியுள்ள நீரையே நாம் பனிக்குட நீர் என்கிறோம். இந்த நீர் வற்றிப்போகும் நிலையை `ஆலிகோஹைட்ராமினியாஸ்' (Oligohydramnios) என்கிறோம்.


    குழந்தையின் சிறுநீரகங்கள், 16 வாரங்களுக்குப் பிறகு, சிறுநீரை உற்பத்தி செய்யத் தொடங்கும். இந்த பனிக்குட நீரானது தாயின் ரத்தம் மற்றும் கருவிலுள்ள சிசுவின் சிறுநீர் இரண்டும் சேர்ந்து உருவாவது.

    பனிக்குட நீரானது, குழந்தையை தொற்றுகளிலிருந்து காப்பாற்றுகிறது. வெளிப்புற அதிர்ச்சி உள்ளிட்டவற்றிலிருந்தும் கருவிலுள்ள குழந்தையைப் பாதுகாக்கிறது. குழந்தையின் சுதந்திரமான அசைவுக்கும் உதவுகிறது.

    கர்ப்ப காலத்தில் ஒரு பெண் பனிக்குட நீரை சரியான அளவில் வைத்திருந்து பிரசவக்காலம் நெருங்கும் போது நீரின் அளவு குறைந்தால் அதுவும் சிக்கலே.

    அப்போது கர்ப்பபைக்கு செயற்கையாக நீரை ஏற்றி சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்வார்கள். அரிதாக சில குழந்தைகள் மலம் கழித்துவிடக்கூடும்.

    எனினும் குழந்தை மலத்தை விழுங்காமல் இருக்க இந்த அம்னியா இன்ஃப்யூஷன் செய்வதன் மூலம் தடுக்கலாம். இந்நிலையிலும் சிக்கல் தொடர்ந்தால் பாதுகாப்பான தாய் சேய் ஆரோக்கியத்துக்கு சிசேரியன் செய்வதற்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

    ஏனெனில் இது குழந்தைக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும். சில பெண்கள் பனிக்குட நீர் வெளியேறுதலை சிறுநீர் கழிவதாக நினைத்து முழு நீரும் வெளியேறிய பிறகு வருவார்கள்.


    இவர்களுக்கு உடனடி சிசேரியன் அவசியமாகிறது. இந்த பனிக்குட நீர் குறைவாக பெற்றுள்ள குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களது நுரையீரல் வளர்ச்சி, சிறுநீரகம், மலம் போன்ற இயற்கை உபாதைகள் சீராக இருக்கிறதா என்ற பரிசோதனையும் செய்யப்படும்

    பனிக்குட நீர் குறைந்தால் என்ன செய்ய வேண்டும்?

    பனிக்குட நீர் குறைந்தால் மருத்துவர் சில வழிமுறைகளை பரிந்துரைப்பார்.

    பெண்கள் தண்ணீர் குடிப்பதை அதிகரிக்க செய்ய வேண்டும். கர்ப்பகாலத்தில் பனிக்குட நீர் குறைவாக கொண்டிருந்த பெண்கள் சிகிச்சையில் தண்ணீர் அதிகமாக குடித்த பெண்களை ஆய்வு செய்ததில் அவர்களது அம்னோடிக் திரவம் அதிகரித்தது கண்டறியப்பட்டது. இவர்கள் அதிக உடல் உழைப்பில்லாமல் சில காலம் ஓய்வில் இருக்க வேண்டும்.


    பனிக்குட நீர் அதிகரிக்கும் வரை உடல் செயல்பாடுகலை குறைக்க மருத்துவர் அறிவுறுத்துவர். அம்னியோஇன்ஃப்யூஷன் எனப்படும் செயல்முறையுடன் குறைந்த அளவு அம்னோடிக் திரவத்துக்கு சிகிச்சையளிக்கலாம்.

    இந்த சிகிச்சைக்கு திரவ அளவை அதிகரிக்க மருத்துவர் கருப்பை வாய் வழியாக அம்னோடிக் சாக்கில் உப்பு கரைசலை அறிமுகப்படுத்துவார்.

    கர்ப்பத்தின் இறுதி கட்டங்களில் அம்னோடிக் திரவம் மிக குறைவாக இருந்தால் மருத்துவர்கள் பிரசவத்தை பரிந்துரைக்கலாம். இதனால் பிரசவத்தின் போது ஏற்படக்கூடிய சிக்கல்களை தடுக்க உதவும்.

    ஒரு பெண் முதல்முறை கருத்தரிக்கும் போது கர்ப்பகால உடல் மாற்றம், உடலில் உண்டாகும் அறிகுறிகள், கவனமாக இருக்க வேண்டிய அறிகுறிகள் என அனைத்தையும் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

    குறிப்பிட்ட மாதங்களுக்கு மேல் குழந்தையின் அசைவு உணர்வீர்கள். குழந்தையின் அசைவு குறித்தும் விழிப்புணர்வு வேண்டும்.

    ஏனெனில் ஸ்கேன் பரிசோதனை தவிர்த்து குழந்தையின் அசைவை கொண்டு தான் பனிக்குட நீர் குறைவதை கண்டறியமுடியும் என்பதால் ஒவ்வொரு விஷயங்களிலும் கர்ப்பிணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

    • ஆரம்ப கால ஸ்கேன்களில் பனிக்குட நீர் குறைவதை எளிதாக கண்டறியலாம்.
    • பெண்ணின் ஆறாம் மாதத்தில் குழந்தையின் அனாடமியை பரிசோதிப்பார்கள்.

    கர்ப்பத்தின் ஆரம்ப கால ஸ்கேன்களில் பனிக்குட நீர் குறைவதை எளிதாக கண்டறியலாம். ஒருவேளை பனிக்குட நீர் குறைபாடு கண்டறியப்பட்டால் குரோமோசோமல் பரிசோதனை செய்ய வேண்டும்.


    அப்போது இந்த பிரச்சனையின் தீவிரத்தையும், அதை சரிசெய்ய முடியுமா என்பதையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள்.

    கர்ப்பத்தின் ஆரம்ப கட்டம் என்றால் அதை பொறுத்து கர்ப்பத்தை தொடர்வதா வேண்டாமா என்று முடிவு செய்வார்கள். பெண்ணின் ஆறாம் மாதத்தில் குழந்தையின் அனாடமியை பரிசோதிப்பார்கள்.

    அப்போது பனிக்குட நீரின் அளவு, நஞ்சுக்கொடி, குழந்தைக்கு போதுமான ரத்த ஓட்டம் கிடைக்கிறதா, ஆக்சிஜன் தேவையான அளவு கிடைக்கிறதா என்பதையும் பரிசோதிப்பார்கள். குறிப்பாக கர்ப்பிணியின் கடைசி மூன்றாம் மாதத்தில் பரிசோதனை செய்யப்படும்.


    பனிக்குட நீர் குறைவதற்கு காரணம்:

    ஒரு பெண்ணின் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் பனிக்குட நீர் பற்றாக்குறையால் உண்டாகும் பல பிரச்சனைகள் சரி செய்யகூடியவை தான். குரோமோசோம் குறைபாடு காரணமாக சில குழந்தைகளுக்கு இப்பிரச்சனை உண்டாகலாம்.

    நஞ்சுக்கொடி வழியாக குழந்தைக்கு ரத்த ஓட்டம் குறையும் போதும், குழந்தைக்கு சிறுநீரக வளர்ச்சி குறைபாடு இருந்தாலும் பனிக்குட நீர் குறையலாம்.

    நஞ்சுக்கொடி சரியான நிலையில் இல்லாமல் கர்ப்பப்பை ஒட்டி இருந்தாலும் பனிக்குட நீர் அளவு மாறுபடலாம். பெண்ணுக்கு கர்ப்பப்பை காலம் தாண்டி பிரசவக்காலம் நெருங்கும் போது பிரசவ தேதி கடந்தால் அப்போது பனிக்குட நீர் குறையத் தொடங்கும்.

    குழந்தையை தாண்டி தாய்க்கு ஏதேனும் கர்ப்பப்பையில் ஏற்படும் நோய்த்தொற்று ஒரு முக்கிய காரணம் ஆகும்.

    கர்ப்பிணிக்கு கர்ப்பத்துக்கு முன்னரே அல்லது கர்ப்பகாலத்தில் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனைகள் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.

    தாயால் குழந்தைக்கு பனிக்குட நீர் பிரச்சனை ஏற்பட்டால் அடுத்து கருத்தரிக்கும் போதும் இந்த பிரச்சனை உண்டாகலாம்.


    பனிக்குட நீர் குறைவதை கர்ப்பிணிகளால் கண்டறிய முடியுமா?

    கர்ப்பிணிக்கு குறிப்பிட்ட மாதத்தில் குழந்தையின் அசைவு நன்றாக உணர முடியும். பனிக்குட நீர் குறைவதற்கான அறிகுறிகள் என்றால் அதில் முக்கியமானது குழந்தையின் அசைவு தெரியாமல் உணர்வதுதான்.

    குழந்தையின் அசைவை உணர்ந்த பெண்கள் திடீரென்று குழந்தையின் அசைவை உணர முடியவில்லை என்று டாக்டரிடம் செல்வார்கள். நீரின் அளவு குறையும் போது பனிக்குட நீரில் மிதக்கும் குழந்தை கர்ப்பப்பையை சுற்றி வராமல் ஒரே இடத்தில் நின்று விடும்.

    இந்நிலை கர்ப்பத்தின் இறுதி வாரங்களில் இருந்தால் குழந்தை தலைக்கீழாக அல்லது சில நேரங்களில் குறுக்கு நெடுக்காகவும் நின்றுவிடும். அப்போது தான் சிசேரியன் அவசியமாகிவிடுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தை பாதுகாப்பாகவும் இருக்கும்.
    • குழந்தையின் மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது.

    ஒரு பெண் கர்ப்பத்தின் போது, கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையை சுற்றி ஒரு நீர்ப்படலம் இருக்கும். இந்த நீர்ப்படலம் தான் பனிக்குட நீர் அல்லது அம்னோடிக் திரவம் என்று அழைக்கப்படுகிறது.


    பனிக்குட நீர் நிறமற்றது. இது வெள்ளையாகவோ அல்லது இளஞ்சிவப்பாகவோ இருக்கலாம். பனிக்குட நீர் அளவு சீராக இருந்தால் தான் குழந்தையின் சுவாசம் இயல்பாக இருக்கும். குழந்தை பாதுகாப்பாகவும் இருக்கும்.

    ஒரு சில கர்ப்பிணிக்கு பனிக்குட நீர் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும். இது குறையும் போது குழந்தைக்கு பாதிப்புகளை உண்டாக்கும்.


    பனிக்குட நீர் குறைவாக இருந்தால் என்ன ஆகும்?

    * தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சிசுவின் நஞ்சுக்கொடியானது கர்ப்பப்பையோடு ஒட்டி கொண்டு விடும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு போக வேண்டிய ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போகும்.

    * இதனால் குழந்தையின் மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம்.

    * நுரையீரல் வளர்ச்சியிலும் குறை உண்டாகலாம். பிரசவத்துக்கு முன்னும் பின்னும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் போன்ற சிக்கல்கள் ஏற்படும். சமயங்களில் குழந்தைக்கு வளைந்த நிலையில் பாதங்கள் ஏற்படலாம்.


    * குழந்தை பனிக்குட நீர் குறையும் போது நஞ்சுக்கொடியின் அழுத்தத்தால் குழந்தையின் முகத்தில் மாறுதல்கள் உண்டாகலாம்.

    * பனிக்குட நீர் அதிகமாக குறைந்தால் அது அப்பெண்ணுக்கு அவசரமான மருத்துவ சிகிச்சை தேவை என்று சொல்லலாம்.

    இது அப்பெண்ணின் கர்ப்பகாலத்தில் எந்த மாதத்தில் உண்டாகிறது என்பதை பொறுத்து பாதிப்புகள் தீவிரமாகவோ சிகிச்சைக்குரியதாகவோ இருக்கலாம்.

    • குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் தாயிடமிருந்து தான் பெறுகிறது.
    • வழக்கத்தை காட்டிலும் கர்ப்பகாலத்தில் அதிகமான ஊட்டச்சத்து தேவை.

    கர்ப்பகாலம் முழுக்க ஆரோக்கியமான உணவை எடுத்துகொள்ள வேண்டும். அப்போது தான் பிரசவக்காலமும் ஆரோக்கியமாக இருக்கும்.

    கர்ப்பிணி பெண்களுக்கு பிரத்யேகமாக மல்டி வைட்டமின்கள் பரிந்துரைக்கப்படும். எனினும் இதை சுயமாக எடுத்துகொள்ளாமல் மருத்துவரின் அறிவுரையோடு எடுத்துகொள்ள வேண்டும்.

    வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் தாயிடமிருந்து தான் பெறுகிறது. அதனால் வழக்கத்தை காட்டிலும் கர்ப்பகாலத்தில் அதிகமான ஊட்டச்சத்து தேவை.


    ஃபோலிக் அமிலம்

    ஃபோலிக் அமிலம் என்பது வைட்டமின் பி ஆகும். இது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களுக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.

    கர்ப்பத்துக்கு முன்பு ஃபோலிக் அமிலத்தை எடுத்துகொள்வதால் கருவின் மூளை மற்றும் முதுகெலும்புகள் குறைபாடுகள் நரம்புகுழாய் குறைபாடுகள் போன்றவற்றை தடுக்க உதவும்.

    இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால் குழந்தைக்கு அன்னபிளவு, இதய குறைபாடுகள் பிறப்பு குறைபாடுகள் உண்டாகலாம்.


    இரும்புச்சத்து

    இரும்புச்சத்து, ஹீமோகுளோபின் என்னும் புரதத்தை உருவாக்க உதவுகிறது. நுரையீரலிலிருந்து ஆக்ஸிகனை எடுத்து செல்ல இது உதவுகிறது.

    கர்ப்ப காலத்தில் வழக்கத்தை காட்டிலும் இரும்புச்சத்து அதிகமாக தேவைப்படும். கர்ப்பிணிக்கு அதிக ரத்த ஓட்டம் உருவாக்க உடலுக்கு இரும்புச்சத்து அதிகம் தேவை. அப்போதுதான் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆக்ஸிஜன் குறையில்லாமல் செல்லும்.


    கால்சியம்

    கர்ப்பகாலத்தில் கால்சியம் சத்தும் அவசியம். கால்சியம் குழந்தையின் எலும்புகள், பற்கள், இதயம், தசைகள் மற்றும் நரம்புகளை உருவாக்க உதவும். கால்சியத்தை உணவு வழியாகவே பெற்றுவிட முடியும். நாள் ஒன்றுக்கு 1000 மில்லி கிராம் அளவு கால்சியம் தேவை

    பால், சீஸ், தயிர், புரக்கோலி, காலே என கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்ப்பதன் மூலம் குறைபாடில்லாமல் காக்கலாம்.

    கர்ப்பிணிக்கு கால்சியம் குறைபாடு இருந்தால் குழந்தைக்கு கால்சியம் சத்து தேவைப்படும் போது தாயின் உடலில் உள்ள எலும்புகளிலிருந்து உறிஞ்சப்பட்டு குழந்தைக்கு கொடுக்கும்.


    வைட்டமின் டி

    உடலில் கால்சியம் உறிஞ்ச வேண்டுமென்றால் வைட்டமின்- D சத்து உடலுக்கு தேவை. வைட்டமின்-D உடலின் நரம்புகள், தசைகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் பணியை மேம்படுத்துகிறது.

    நோயெதிர்ப்பு அமைப்பு சீராக இருந்தால் உடல் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கலாம். குழந்தைக்கு எலும்புகள், பற்கள் வளர வைட்டமின் டி தேவை. 

    • பருத்தியால் செய்த உள்ளாடைகளை வாங்கி அணியுங்கள்.
    • மாய்ஸ்சரைசிங் க்லென்சிங் லோஷனை பயன்படுத்துங்கள்.

    கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள், பல விதமான உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களை சந்திப்பார்கள். கர்ப்பத்தோடு சம்பந்தப்பட்டுள்ள ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களின் காரணமாகவே இவ்வகை மாற்றங்கள் ஏற்படுகிறது.

    கர்ப்ப காலத்தில் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருந்திட இவ்வகை ஹார்மோன் மாற்றங்கள் அவசியமான ஒன்றே. ஆனால் அதே நேரம், கர்ப்ப காலத்தில் சில கஷ்டங்களையும் நீங்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும்.

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு உங்கள் உடல் தயாராகிக் கொண்டிருக்கும். இதற்கு சம்பந்தமான உடல் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள், மார்பக காம்புகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.

    மார்பக காம்புகளின் அளவு பெரிதாவது அல்லது மிகவும் மென்மையாக மாறுவது போன்றவைகளே மார்பக காம்புகளில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்.

    பிரசவ நேரம் நெருங்கும் வேளையில், உங்கள் மார்பக காம்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியின் உருவத்திலும் அளவிலும் மாற்றங்கள் ஏற்படும்.

    சில நேரம் காம்பிலிருந்து கடும்புப்பால் எனப்படும் மஞ்சள் நிற திரவம் வெளியேறும். உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய நேரம் நெருங்குவதற்கான அறிகுறிகளே இவைகள்.

    கர்ப்ப காலத்தில் கஷ்டப்படாமல் இருக்க மார்பக காம்புகளை பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

    கர்ப்பமாக இருக்கும் போது மார்பக காம்புகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கவலை தேவையில்லை.

    கர்ப்பமாக இருக்கும் போது மார்பக காம்புகளை பரமாரிக்க சில டிப்ஸ்களை பின்பற்றினாலே போதுமானது. அவ்வாறான சில ஐடியாக்களை பற்றி இப்போது பார்க்கலாமா?


    வசதியான உள்ளாடைகளை அணியுங்கள். கர்ப்ப காலத்தில் சரியான உள்ளாடை தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில் உங்கள் மார்பகங்களின் அளவு பெரிதாகியிருக்கும்.

    மென்மையான பருத்தியால் செய்த உள்ளாடைகளை வாங்கி அணியுங்கள். இதனால் மார்பக காம்புகளில் ஏற்படும் வலியை தணிக்கும்.

    கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்கும் வேளையில் பேடெட் பிராவை தவிர்க்கவும். ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள் ஆலிவ் எண்ணெய்யை கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்வது கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகள் பராமரிப்புக்கு சிறந்த ஐடியாவாகும். இப்படி செய்வதால் சருமத்தில் ஈரப்பதம் நீடித்து நிற்க உதவும்.

    மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையான வறண்ட சருமத்தால் உண்டாகும் பல பிரச்சனைகளையும் அது தடுக்கும். காம்புகளின் மீது சோப்பு கூடாது மார்பக காம்புகளின் மீது சோப் பயன்படுத்தாதீர்கள். அப்படி செய்தால் காம்புகள் வறண்டு போய் விடும். அளவுக்கு அதிகமாக வறண்டு போகும் போது வெடிப்புகள் உண்டாகி விடும்.


    அதனால் வாசனையுள்ள சோப்புக்கு பதிலாக நல்லொதொரு மாய்ஸ்சரைசிங் க்லென்சிங் லோஷனை பயன்படுத்துங்கள். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பரமாரிக்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான டிப்ஸ்....

    மாய்ஸ்சுரைசிங் க்ரீம் மார்பக காம்புகள் வறட்சியாக இருந்தால் நல்லதொரு மாய்ஸ்சுரைசிங் க்ரீம் அல்லது லோஷனை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் மார்பக காம்புகள் ஈரப்பதத்துடன் இருக்கும்.

    இவ்வகையான கிரீம்கள் மற்றும் லோஷன்கள், முக்கியமாக கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளுக்கு தடவுவதற்காகவே சந்தையில் விற்கப்படுகிறது

    காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் மார்பக காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. இது காம்புகளில் ஏற்படும் வலியை நீக்கும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளில் வலியெடுக்கும் பெண்களுக்கு இது பெரிதும் உதவியாக விளங்கும். 

    • கர்ப்ப காலத்தில் செரிமானம் மெதுவாகக் கூடும்.
    • செரிமானப் பிரச்சனை இருக்கும் பெண்கள் உணவை பிரித்து எடுத்துக்கொள்வது நல்லது.

    கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்திருப்பார்கள். கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பப்பை அழுத்தம், இரும்புச்சத்து போன்றவையே இதற்கு காரணம்.

    கர்ப்ப காலத்தில் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் அதிகரிக்கத்தொடங்கும் இதனால் செரிமானம் மெதுவாகக் கூடும். இதனால் தான் தொடர்ந்து மலச்சிக்கல் உண்டாகிறது.


    கர்ப்ப காலத்தில் செரிமானப் பிரச்சனை இருக்கும் பெண்கள் உணவை பிரித்து எடுத்துக்கொள்வது நல்லது. தினசரி 3 வேளை உணவை 6 வேளையாக பிரித்து எடுத்துக்கொள்ளலாம்.

    அதிக அளவு உணவு ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளும் போது வயிற்றுக்கு சுமை கூடும். இது செரிமானத்தை கடினமாக்கும். நீங்கள் எடுத்துக்கொள்ளும், உணவும் மலச்சிக்கலை உண்டாக்கும்.

    நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மலச்சிக்கலை தடுக்க உதவும். கர்ப்பிணிகளுக்கு வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்களை இவை அளிக்கிறது.

    நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், கீரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், பீன்ஸ், பட்டாணி, பயறு வகைகள், தானியங்கள் மற்றும் பழங்களில் ஆப்பிள், வாழைப்பழங்கள், அத்திப்பழம், ரோஸ்பெர்ரி போன்றவை எடுத்துக் கொள்ளலாம்.


    கர்ப்ப காலத்தில் நாள் ஒன்றுக்கு 8 முதல் 12 டம்ளர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். உடலில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் அது குடலை மென்மையாகவும், செரிமான பாதையை சீராக்கவும் செய்ய உதவும்.

    கால்சியம் நிறைந்த உணவு, அதாவது பால் பொருட்களை அதிகம் சேர்க்கும் போது மலச்சிக்கல் உண்டாகலாம் எனவே அதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    கர்ப்பிணி பெண்கள் இயன்றவரை மலச்சிக்கலுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்வதை தவிர்ப்பதே நல்லது. அதேநேரம் அதிக மலச்சிக்கலை சந்திக்கும் போது மலம் இளகி வெளியேற மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள்.


    இவை குடலை இயக்கி மலத்தை இளக்கி எளிதாக வெளியேற்ற உதவும். ஆனாலும் தொடர்ச்சியாக மருந்துகள் மூலமே மலத்தை வெளியேற்ற முயலக்கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கர்ப்ப கால மலச்சிக்கலுக்கு தீர்வு மருந்துகள் தான் என்றில்லாமல் கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலை தவிர்க்க சிறந்த வழிகள் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை என்பதை மனதில் கொள்ளுங்கள். 

    ×