search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pregnant women"

    • பொதுவான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும்.
    • முதல் மூன்று மாதங்களில் இருந்து தொடங்குகிறது.

    கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தின் மிகவும் பொதுவான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். இது முதல் மூன்று மாதங்களில் தொடங்குகிறது. பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பத்தின் பிற்பகுதியில், இன்னும் அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது.

     அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணங்கள்:

    ஹார்மோன் மாற்றங்கள்

    கர்ப்பத்தின் தொடக்கத்தில் ஹார்மோன் மாற்றங்கள் உடலில் ரத்த ஓட்டம் மற்றும் திரவத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது. அதற்கு மேல், உங்கள் சிறுநீரகங்கள், உங்கள் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்ற கடினமாக உழைக்கின்றன.

    அதிக திரவம் கொண்ட சிறுநீரகங்களுடன், சிறுநீர்ப்பை கருப்பையை அழுத்தினால், அதை அடிக்கடி காலி செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இதனால் தான் கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்கிறார்கள்.

    வயிறு மற்றும் கருப்பை வளர்தல்

    உங்கள் கர்ப்ப காலம் தொடரும் போது, உங்கள் உடல் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப மாறத் தொடங்குகிறது. அதேநேரத்தில், உங்கள் வளர்ந்து வரும் கருப்பை வயிற்று குழிக்குள் உயர்ந்து, உங்கள் சிறுநீர்ப்பையின் அழுத்தத்தை குறைக்கிறது.

    இந்த காரணங்களுக்காக, இரண்டாவது ட்ரிமெஸ்டரில் கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்லுவார்கள். மேலும் உங்கள் கருப்பையில் உங்கள் கருவில் உள்ள குழந்தை இடுப்புக்குள் மூழ்கி சிறுநீர்ப்பையில் அழுத்துவதால், அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஏற்படும்.

    சிறுநீர் பாதை நோய் தொற்று

    அடிக்கடி சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தின் ஒரு பகுதியா அல்லது சிறுநீர் பாதை நோய் தொற்று என்று பல பெண்கள் கவலைப்படுகிறார்கள்.

    சிறுநீர் பாதை நோய் தொற்று என்றால், சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் உணர்வு, காய்ச்சல், சிறுநீர் அடர்த்தியாக இருப்பதைக் காணலாம் அல்லது கழிப்பறையில் ரத்தத்தைப் பார்க்கலாம். சிறுநீர் கழிப்பதற்கான வலுவான தூண்டுதலையும் நீங்கள் உணரலாம், ஆனால் சில துளிகள் மட்டுமே வெளியே வரும்.

    பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் 6 முதல் 24 வாரங்கள் வரை சிறுநீர் பாதை நோய் தொற்று ஆபத்தை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் வளர்ந்து வரும் கருப்பை சிறுநீர் பாதையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இது பாக்டீரியா தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

    உங்களுக்கு சிறுநீர் பாதை நோய் தொற்று இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், மருத்துவரை அணுகலாம். ஏனெனில் இந்த நோய்த்தொற்றுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படும்.

    கர்ப்ப கால நீரிழிவு

    கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது சில சமயங்களில் கர்ப்பகால நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம், பொதுவாக கர்ப்பத்தின் இது ஒரு தற்காலிக நீரிழிவு நோயாகும். கர்ப்பத்தின் 24 முதல் 28 வாரங்களுக்கு இடையில் கர்ப்ப கால நீரிழிவு நோயை மருத்துவர்கள் பொதுவாக பரிசோதிப்பார்கள்.

    கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டால், குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படாது, மேலும் நீங்கள் குழந்தையை பெற்றெடுத்த பிறகு நீரிழிவு பொதுவாக மறைந்துவிடும்.

    தொடர்ச்சியான தாகம், குமட்டல் அல்லது சோர்வுடன் கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகளை நீங்கள் கண்டால், உங்கள் மருத்துவரை தாமதிக்காமல் அணுகவும்.

    மேலும் சில காரணங்கள்:

    கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக நிறைய தண்ணீர் அல்லது பிற திரவங்களை இரவு நேரத்தில் குடிப்பது. கர்ப்ப காலத்தில் காஃபின் அதிகம் குடிப்பது.

    • கர்ப்பமாக இருக்கும் போது, இவ்வாறான வலிகள் ஏற்படுவது சாதாரணம் தான்.
    • கரு உருவாகும் போது, ஒருவிதமான வலி அடிவயிற்றில் ஏற்படும்.

    கர்ப்ப காலத்தில் குழந்தை வளரும் போது குழந்தைக்கு ஏற்றவாறு உடல் மாறும் போது கர்ப்பிணிகளுக்கு மேல் வயிற்றில் வலி ஏற்படும். பொதுவாகவே இந்த வயிற்று வலிக்கு அபாயகரமான காரணங்கள் இல்லை என்றாலும் சில தீவிரமானதாக இருக்கலாம்.

    கர்ப்பத்தின் ஒன்பது மாதங்களில் ஒரு கட்டத்தில் வயிற்று வலி அல்லது பிடிப்புகள் வருவது இயல்பானது. கர்ப்ப காலத்தில் வயிறு வலியே வரக்கூடாது, என்று நினைக்க கூடாது. வயிற்று வலி அல்லது பிடிப்புகள் இயல்பானது.

    பெரும்பாலான நேரங்களில் அது சாதாரணமாக இருக்கும். ஏனெனில் குழந்தையை வயிற்றில் சுமக்கும் போது தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் அதீத அழுத்தம் உங்கள் வயிற்றை சில நேரங்களில் அசெளகரியமாக உணர்த்தலாம்.

    பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அடிக்கடி வலி ஏற்பட்டால், மிகவும் பயமாக இருக்கும். அதிலும் முதல் தடவை லேசான வலி ஏற்பட்டாலே, அனைவரும் பதட்டம் அடைவோம். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது, இவ்வாறான வலிகள் ஏற்படுவது சாதாரணம் தான். அதற்காக சாதாரணமாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில் சில சமயங்களில் சிக்கலான பிரசவம் நடைபெறப்போகிறது என்பதற்கான அறிகுறியாகவும் அடிவயிற்றி வலி ஏற்படும்.

    மேலும் இத்தகைய வலி, கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் ஏற்படும். சொல்லப்போனால், கர்ப்பத்தில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமான வலி அடிவயிற்றில் ஏற்படும். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் வலிகளை விட, இரண்டாம் கட்டத்தில் ஏற்படும் வலியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரி, இப்போது அத்தகைய வலி அடிவயிற்றில் ஏற்படுவதற்கான காரணத்தை பற்றி பார்க்கலாம்....

    * கர்ப்பத்தின் 2 முதல் 6 வாரங்களில், கருவானது உருவாக ஆரம்பிக்கும். அவ்வாறு அவை உருவாகும் போது, ஒருவிதமான வலி, அடிவயிற்றில் ஏற்படும். சொல்லப்போனால், இந்த காலத்தில் மாதவிடாய் சுழற்சி ஏற்படப்போவது போன்று உணர்வு இருக்கும். ஆனால் உண்மையில், இந்த காலத்தில் வலி ஏற்பட்டால், கரு உருவாக ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.

    * கர்ப்பமாக இருக்கும் போது ஹார்மோன்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய ஹார்மோன் மாற்றங்களாலும், வயிற்றில் வலி அல்லது ஒருவித பிடிப்பு ஏற்படும். இது கூட, கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் தான் உண்டாகும்.

    * சில சமயங்களில் கருமுட்டையானது கருப்பையில் இல்லாமல், பெல்லோப்பியன் குழாய்களில் இருந்தால், அது வளரும் போது மிகவும் கடுமையான வலியானது ஏற்படும். இந்த நிலையில் மருத்துவரிடம் சென்றால், நிச்சயம் கருவை அகற்றிவிட வேண்டும். இல்லையெனில் கருச்சிதைவு ஏற்படும். இந்த மாதிரியான வலி, 4-6 வாரங்களில் ஏற்படாது. ஆனால் அதற்கு பின்னர் வலியானது ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும். ஏனெனில் கரு வளரும் போது, குழாயும் விரிவடைந்து கடும் வலி ஏற்படும்.

    * கர்ப்பமாக இருக்கும் போது வலியுடன் கூடிய ரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கருச்சிதைவிற்கான அறிகுறியாகும். அதிலும் ரத்தப்போக்கு அதிகமாக இருந்து, வலி தொடர்ந்து அரை மணிநேரத்திற்கு இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

    * பொதுவாகவே 36 வாரங்கள் முடிந்ததும், எந்த நேரத்திலும் பிரசவ வலி ஏற்படலாம். சில நேரங்களில் அவை பிரசவ வலியாக இல்லாவிட்டாலும், சில சமயங்களில் குறை பிரசவத்தை ஏற்படுத்தும். அதிலும் 7 அல்லது 8 -வது மாதத்தில், இந்த மாதிரியான வலி ஏற்பட்டால், அது குறைபிரவத்திற்கான அறிகுறியாக இருக்கும்.

    * நஞ்சுக்கொடி சிதைவு என்பது உயிருக்கு ஆபத்தான நிலை. இதில் குழந்தை பிறப்பதற்கு முன்பே நஞ்சுக்கொடி கருப்பையிலிருந்து பிரிந்துவிடும். இதன் அறிகுறியே நிலையான இடைவிடாத வயிறு வலி தான். இது உங்கள் வயிற்றில் நிவாரணம் இல்லாமல் நீண்ட காலத்துக்கு கடினமாக இருக்கும்.

    மற்றொன்று ரத்தம் தோய்ந்த திரவம் அல்லது பனிக்குட நீர் கசிவு. கூடுதல் அறிகுறிகளில் உங்கள் அடிவயிற்றில் மென்மை, முதுகுவலி, அல்லது ரத்தத்தின் தடயங்களை உள்ளடக்கிய திரவ வெளியேற்றம் ஆகியவை அடங்கும்.

    • குறைப்பிரசவம் சில இயற்கை காரணங்களினால் நிகழ்கின்றன.
    • ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும் எடுத்துக் கொள்வது சிறப்பு.

    குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றன. அது குழந்தைகள் இறப்பதற்கு காரணமாகவும் அமையும். குழந்தைகள் கர்ப்பத்தில் இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, குழந்தை எடை குறைவாகப் பிறக்கும். இந்த குழந்தையை வளர்ச்சி குறைந்த அல்லது முதிராத குழந்தை என்று கூறுவர். இதனை ஆங்கிலத்தில் பிரிமெச்சூர் என்று கூறுவர்.

    குறைப் பிரசவம்

    கருப்பை திசுச்சுரண்டல் எனப்படக்கூடிய டி அன்ட் சி செய்வதன் காரணமாக, கருப்பையின் கழுத்துப் பகுதி வலுவிலந்து விடலாம். இதன் காரணமாக, கருப்பைத் திசு தளர்வதுடன் அதில் குழந்தை வளரும் போது குழந்தையைத் தங்க வைக்க முடியாமல், கருப்பை வாய் திறக்க ஆரம்பித்து விடும். இந்த நிலையில் கரு சிதைந்து விட வாய்ப்புள்ளது. இவ்வாறு நிகழாத சமயத்தில் குறை பிரசவம் உண்டாவது உறுதியாகும்.

    குறைபிரசவ மற்றும் முதிராத குழந்தை

    கர்ப்பம் தரித்ததில் இருந்து 37-வது வாரத்திற்கு முன்பு பிறக்கும் குழந்தை குறை பிரசவக் குழந்தை எனக் கூறப்படுகிறது. அதேபோல, 37-வது வாரத்திற்குப் பிறகு பிறந்தாலும், குழந்தையின் எடை மிகக் குறைவாக இருப்பதை முதிராத குழந்தை எனக் கூறுவர்.

     குறைபிரசவத்திற்கான காரணம்

    பெண்கள் சாதாரண நிலையில் இருப்பதை விட கர்ப்ப காலத்தில் இருக்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் போதுமான அளவு ஊட்டச்சத்து சாப்பிடாமல், கர்ப்பகாலத்தில் தேவையான பராமரிப்பு போதுமானதாக இல்லாவிட்டாலும் குறைபிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

    மேலும், ரத்த சோகை ஏற்படுவதால் உண்டாகும் அசதியினால் பாதிக்கப்பட்டவர்களும், பால்வினை நோய்களால் தாக்கப்பட்ட சமயத்திலும் குறைபிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

    மேலும், கர்ப்பிணி பெண்கள் கடுமையான காய்ச்சல், சர்க்கரை வியாதி, மஞ்சள் காமாலை, இதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பினும் குறைபிரசவம் நிகழ வாய்ப்புண்டு.

    முக்கியமாக, கர்ப்பம் தரித்த பெண்களின் வயதைப் பொறுத்தும் ஏற்படலாம். அதாவது, கர்ப்பிணி பெண்கள் 16 வயதுக்கு உட்பட்டவராகவோ 35 வயதுக்கு மேற்பட்டவராகவோ உள்ள இருந்தால் அவர்களுக்கு குறை பிரசவம் நிகழ அதிக வாய்ப்பு உள்ளது.

    இருப்பினும், குறைப்பிரசவம் சில இயற்கை காரணங்களினால் நிகழ்கின்றன. எனவே, கர்ப்பிணி பெண்கள் இந்த காலகட்டங்களில் மிகுந்த பாதுகாப்புடனும், ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும் எடுத்துக் கொள்வது சிறப்பு.

    • டிரைமெஸ்டரில் எந்த பொசிஷனில் வேண்டுமானாலும் தூங்கலாம்.
    • இடப்பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்குவதே சரியானது.

    கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் (முதல் டிரைமெஸ்டர்) இருக்கும்போது எந்த பொசிஷனில் வேண்டுமானாலும் தூங்கலாம். அதாவது, உங்களுக்குப் பிடித்த, வசதியான எந்த நிலையிலும் தூங்கலாம். ஒருக்களித்தும் படுக்கலாம், மல்லாந்தும் படுக்கலாம், குப்புறகூட படுத்தும் தூங்கலாம், பிரச்னை இல்லை.

     முதல் மூன்று மாதங்களில் எந்த பொசிஷனில் படுத்து உறங்கினாலும் பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு அது எந்த சிரமத்தையும் தருவதில்லை. அதுவே, இரண்டாவது, மூன்றாவது டிரைமெஸ்டரில், ஒருக்களித்துப் படுத்து உறங்குவதுதான் சரியானது. அதிலும் குறிப்பாக, இடப்பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்குவதே சரியானது. அது சவுகரியமாகவும் இருக்கும், அந்த பொசிஷன் பாதுகாப்பானதும்கூட.

    இடப்பக்கமாக ஒருக்களித்துப் படுப்பதன் மூலம், நஞ்சுக்கொடிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். கர்ப்ப கால சிக்கல்களையும் தவிர்க்க உதவும். படுத்திருக்கும்போது இரண்டு கால்களுக்கு இடையில் தலையணை வைத்துக்கொள்வது, முதுகுப் பகுதிக்கு தலையணை வைத்துக்கொள்வது போன்றவையும் கர்ப்பிணிகளுக்கு சவுகரியமான உணர்வைத் தரும். நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.

     முதுகுப்பகுதி சமமாக இருக்கும்படி மல்லாந்து படுக்கும்போது, அதிலும், பிரசவ காலம் நெருங்கும் நேரத்தில் அப்படிப்படுப்பது, ஒருவித அசவுகரியத்தைத் தரும். ரத்தக் குழாய்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். அதன் காரணமாக ரத்த ஓட்டம் குறையலாம். அதனால் உங்களுக்கு மயக்கம், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம். ரத்த அழுத்த அளவும் குறையலாம்.

    இந்த பிரச்சினைகளை எல்லாம் தவிர்க்கவே, ஒருக்களித்துப் படுக்கவும், தலையணை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒருக்களித்துப் படுத்த நிலையிலும் உங்களுக்கு மூச்சு விட சிரமம் இருந்தாலோ, அசவுகரிகயமாக உணர்ந்தாலோ மருத்துவ ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.

    • சாப்பிடும் உணவுகளில் இன்னும் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    • கருவில் உள்ள குழந்தைக்கு உடல்நல பிரச்சினைகளை உண்டாக்கக் கூடும்.

    கர்ப்ப காலத்தின் போது நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இன்னும் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான சர்க்கரை மற்றும் மதுபானம் போன்ற நச்சுப்பொருட்களை தவிர்ப்பது மட்டுமின்றி, சமைக்கப்படாத மீன், வறுத்த உணவுகள், அரைகுறையாக சமைக்கப்பட்ட மாமிசம், சரியாக கழுவப்படாத பழங்கள் மற்றும் குறிப்பிட்ட காய்கறிகளையும் உண்பதை தவிர்க்க வேண்டும். அவற்றில் தூய்மைக் கேடு ஏற்படும் வாய்ப்புள்ளதால் கருவில் உள்ள குழந்தைக்கு உடல்நல பிரச்சினைகளை உண்டாக்கக் கூடும்.

    நன்றாக சமைக்கப்பட்ட, ஊட்டச்சத்து மிகுந்த, ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்த உணவினை தினமும் அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லது.

    தவிர்க்க வேண்டியவை:

    * மீன்களில் அதிக அளவில் மெர்க்குரி இருக்கும், இதனை அதிக அளவில் உட்கொள்ளும் பட்சத்தில், குழந்தைக்கு நரம்பு சம்பந்தமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். சுறா, மர்லின், ப்ளூஃபின் டியூனா, மற்றும் ஆரஞ்சு மற்றும் ஸ்வார்ட் மீன் போன்ற மீன்களை கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டும்.

    * பச்சை உணவுகளையும், மாமிசம் போன்ற அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அவை லிஸ்டீரியா பாக்டீரியாவினால் மாசுபடுத்தப்பட்டிருக்கலாம், இதன்மூலம் கருக்கலைப்பு, குறைப்பிரசவம் போன்றவை ஏற்படலாம்.

    * பலருக்கு பச்சை முட்டை சாப்பிடுவது வழக்கமாக இல்லாமல் இருக்கலாம், ஆயினும் மயோனேஸ், சீஸர் சாலட் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும் சமைத்த முட்டைகளையே உண்ண வேண்டும்.

    * பதப்படுத்தப்படாத பால் அல்லது பதப்படுத்தப்படாத பால் சார்ந்த பொருட்களைத் தவிர்க்க வேண்டும், ஏனென்றால் இவற்றில் லிஸ்டீரியா உள்ளது. இந்த பாக்டீரியாவால் கர்ப்பத்திலுள்ள சிசு அல்லது பிறந்த குழந்தைக்கு மோசமான தீங்குகள், குறைப்பிரசவம் கூட ஏற்படலாம்.

    * பச்சை நிற பப்பாளியில் கருச்சிதைவிற்கு இட்டுச் செல்கிற, கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நொதி உள்ளது. பழுக்காத பப்பாளியை உண்பது குறைப்பிரசவத்திற்கு இட்டுச் செல்லக் கூடிய வாய்ப்புள்ளது. எனவே, கர்ப்ப காலத்தின் போது இந்த உணவினை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    * நன்றாக சுத்தம் செய்யப்பட்ட பழங்களையும், காய்கறிகளையும் நீங்கள் உண்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஒரு வேளை அவை சரியாக கழுவப்படாவிட்டால், இவைகளின் மூலம் டாக்ஸோப்ளாஸ்மோசிஸ் என்னும் நோய் பரவும் வாய்ப்புள்ளது.

    * காரமான உணவுகள் என்பது சில சமயங்களில், கர்ப்பகாலத்தின் போது உண்பதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனென்றால், அவற்றால் வயிற்று அமிலம் அல்லது பிற இரைப்பை சிக்கல்கள் போன்றவை உருவாக வாய்ப்பிருப்பதால் இவ்வாறு கருதப்படுகிறது.

    * துளசி, கற்பூரவள்ளி, பெருஞ்சீரகம், அல்லது கடுங்காரமுள்ள சிவப்பு மிளகு போன்றவை கருப்பை சுருக்கத்திற்கு உதவுவதாக நம்பப்படுகிறது. எனினும், ஒரு சில பொருட்களால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளதால், அவற்றை கர்ப்ப காலத்தின் போது சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

    • உடல் மற்றும் மன மாற்றங்கள் அதிகம் ஏற்படும்.
    • கருச்சிதைவு அவர்களின் மனதை பெரிதும் பாதிக்கும்.

    பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள், உடல் மற்றும் மன மாற்றங்கள் அதிகம் ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழிப்பது, ஹார்மோன் மாற்றம் அல்லது உணர்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்களால் அவதிப்படுவார்கள். அப்படியான நேரத்தில் ஏற்படும் கருச்சிதைவு அவர்களின் மனதை பெரிதும் பாதிக்கும்.

    கருச்சிதைவு என்பது குழந்தை பிறப்பதற்கு முன்னரே கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை கருவிலே உயிரிழப்பது ஆகும். ஒரு தாய் தனது கருவை இழக்கும்போது ஏற்படும் திடீர் சில உடல்நல சிக்கல்களால் உடல் வலிமையை இழப்பது மட்டுமல்லாமல், கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த நாளில் இருந்து அவள் திட்டமிட்டிருந்த முழு கனவுகளையும் இழக்கிறாள். கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர் மிகுந்த மன உளைச்சலுடன் உயிரற்றவராக உணர்க்கிறார்.

    கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே கூட கருச்சிதைவு ஏற்படலாம். எனவே நீங்கள் புள்ளி அல்லது ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு செல்வது தான் நல்லது.

    நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்த பிறகு உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால் அதிர்ச்சி மற்றும் அதனால் வரும் மன அழுத்தம் என்பது இயல்பானது. ஆனால் முதலில், கருச்சிதைவின் போது மனச்சோர்வின் அறிகுறிகளை நீங்கள் அடையாளம் காண வேண்டும்.

    அறிகுறிகள்

    * எரிச்சல் அல்லது விரக்தி உணர்வு

    * சோகம், வெறுமை அல்லது நம்பிக்கையற்ற உணர்வு

    * பெரும்பாலான அல்லது அனைத்து வழக்கமான நடவடிக்கைகளிலும் ஆர்வம் அல்லது மகிழ்ச்சியை இழப்பது

    * வழக்கத்திற்கு மாறாக சோர்வாகவும் கவலையாகவும் இருப்பது

    * தூங்குவது மற்றும் மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சாப்பிடுவது

    * பயனற்ற அல்லது குற்ற உணர்வு

    * விஷயங்களை நினைவில் வைத்து கவனம் செலுத்துவதில் சிரமம்

    * மரணம் அல்லது தற்கொலை பற்றிய எண்ணங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகள்

    * சீரற்ற வலிகள்

    மேற்கூறிய அறிகுறிகளில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் இருந்தால், ஒரு பெண் குணமடைய மருத்துவரின் ஆலோசனை தேவைப்படலாம்.

    கருச்சிதைவுக்குப் பிறகு, கோபம், மனச்சோர்வு போன்றவற்றை அனுபவிப்பது பொதுவானது. ஆனால் கருச்சிதைவுகளால் பாதிக்கப்படும் பெரும்பாலான பெண்களுக்கு எதிர்காலத்தில் ஆரோக்கியமான கர்ப்பம் இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுவது மற்றும் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்வது விரும்பத்தகாத அனுபவத்தையும் குற்ற உணர்வையும் போக்க உதவும். இருப்பினும், மனச்சோர்வு கடுமையாக இருந்தால், மருத்துவர்களிடம் செல்லலாம்

    சிகிச்சைமுறை

    * ஆரோக்கியமான உணவை உண்ணுதல் மற்றும் சரியான நேரத்தில் தூங்குதல், சிறிது ஓய்வுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்தல் உடலைக் குணப்படுத்தும்

    * மனச்சோர்வு அறிகுறிகளைக் குறைக்க ஆண்டிடிரசண்ட்ஸ்

    * துக்கத்தை ஆரோக்கியமான முறையில் சமாளிக்க உதவும் உளவியல் சிகிச்சை

    * எலெக்ட்ரோகான்வல்சிவ் தெரபி (ECT), அதாவது உங்கள் மூளைக்கு லேசான மின்சாரத்தை பயன்படுத்துதல், ஆனால் இது மன அழுத்தத்தின் கடுமையான நிகழ்வுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

    • கர்ப்ப காலத்தில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் அவசியம்.
    • கர்ப்பமாக இருக்கும்போது உயர் ரத்த அழுத்தம் கரு வளர்ச்சியை பாதிக்கும்.

    கர்ப்ப காலத்தில் உங்களுக்குத் அனைத்து ஊட்டச்சத்துக்களும் அவசியம் தேவை. கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற மேக்ரோ நியூட்ரியண்ட்களை நீங்கள் உட்கொள்ள வேண்டும்.

    வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் கர்ப்பத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தாய் மற்றும் கரு வளர்ச்சிக்கு உதவுகின்றன, மேலும் உங்கள் குழந்தையின் உயிரணு வளர்ச்சி, எலும்பு மற்றும் உறுப்பு வளர்ச்சி போன்றவற்றுக்கு மிகவும் முக்கியமாகும்.

    ஃபோலேட்

    ஃபோலேட் ஒரு பி வைட்டமின் ஆகும், இது சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தி மற்றும் கருவின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. ஃபோலிக் அமிலம் என்பது பெரும்பாலான மக்கள் உட்கொள்ளும் ஃபோலேட்டின் செயற்கை வடிவமாகும். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு நரம்புக் குழாய் குறைபாடுகள் மற்றும் பிறவி குறைபாடுகள், பிளவு அண்ணம் மற்றும் இதயக் குறைபாடுகள் போன்ற பிறவி குறைபாடுகளின் அபாயத்தை குறைக்க கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளைக்கு 600 யூஜி ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

    இரும்புச்சத்து

    கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் இரும்புச்சத்துக்கான தேவை கணிசமாக அதிகரிக்கிறது, ஏனெனில் தாயின் ரத்த அளவு கிட்டத்தட்ட 50 சதவிகிதம் அதிகரிக்கிறது. இது ஆக்சிஜன் போக்குவரத்து மற்றும் கருவின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் நஞ்சுக்கொடி, உங்கள் கர்ப்பத்தின் மூலம் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கும்.

    வைட்டமின் டி

    சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின் டி சத்துக்கள் உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருப்பதோடு, நீரிழிவு, டிமென்ஷியா மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற பல நோய்களைத் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.

    மெக்னீசியம் சத்து

    கர்ப்பமாக இருக்கும்போது உயர் ரத்த அழுத்தம் கரு வளர்ச்சி குன்றிய மற்றும் முன்கூட்டிய பிறப்பையும் ஏற்படுத்தும். பச்சை இலை காய்கறிகள், அத்திப்பழங்கள், வாழைப்பழங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை உண்ணலாம்.

    மீன் எண்ணெய்

    மீன் எண்ணெயில் டிஹெச்ஏ மற்றும் இபிஏ ஆகிய இரண்டு அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியமானவை. குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் தாயின் மனச்சோர்வைக் குறைக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. கருவின் கண் வளர்ச்சிக்கும் நன்மை தரும்.

    புரோபயாடிக்

    புரோபயாடிக்குகள் குடலில் வாழும் மற்றும் செரிமானத்திற்கு உதவும் நட்பு பாக்டீரியா. தாய்மார்கள் தங்கள் கர்ப்பத்தின் மூலம் செரிமான பிரச்சினையைத் தடுக்க புரோபயாடிக்குகளை எடுப்பதி ஆச்சரியமில்லை. அவை ஒன்பது மாதங்கள் மற்றும் அதற்கு பிறகும் எடுத்துக்கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது.

    • 70 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • அமைச்சர் முத்துசாமி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், வெள்ளோட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 70 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகி த்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    இதில் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், சென்னிமலை யூனியன் தலைவர் காயத்ரி இளங்கோ, குமாராவலசு ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டணர்.

    • கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • 150 கர்பிணிகளுக்கு வளையல் அணிவித்து 5 வகையான உணவு வகை களை பரிமாரினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கொங்கம்பட்டி ஊராட்சி இடையவலசை கிராமத்தில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்டம் தொடங்கியது. இதில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை முகாம்மை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    அதை தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட கர்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருள்கள் அடங்கிய மருந்து பெட்ட கங்களை வழங்கினார்.

    பின்னர் இளையான்குடி நகரில் நடை பெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 150 கர்பிணி பெண் களுக்கு வளையல் அணிவித்து 5 வகையான உணவு வகை களை பரிமாரினார்.

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ சுபமதியரசன், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் வட்டார ஊட்டச்சத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ராதாபுரம் வட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமையில் திசையன்விளையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியினை ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சவுமியா ஜெகதீஷ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சமுதாய வளைகாப்பு விழா நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலை மையில் திசையன்விளை வி.எஸ்.ஆர். மாலில் அமைந் துள்ள கெட்டி மேளம் மகாலில் நடைபெற்றது.

    100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியினை ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சவுமியா ஜெகதீஷ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    விழாவில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று கர்ப்பிணி பெண்களுக்கு புடவை மற்றும் பரிசு பொரு ட்கள் வழங்க ப்பட்டது. அதன் தொடர்ச்சி யாக விழா முடிவுற்றதும் 7 வகையான உணவுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெ ண்கள் கூறுகையில், அரசு நிகழ்ச்சியாக இருப்பினும் வீட்டில் நடைபெறும் வளை காப்பு நிகழ்ச்சியை போன்று சிறப்பாக செய்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    விழாவில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஒன்றிய கவுன்சிலர் நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதிகா சரவணகுமார், பொன் மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், சூசை ரத்தினம், பஞ்ச வர்ணம் ஜெயகுமார், வளர்மதி, திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், உதயா, மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் முரளி, பால சுப்ரமணியம், திசை யன்விளை பேரூர் இளை ஞரணி அமைப்பாளர் நெல்சன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாகமணி மார்த்தாண்டம், அனைச்சியார், உறுமன்குளம் பொன் இசக்கி பாண்டியன், நவ்வலடி சரவணகுமார், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராம்கிஷோர் பாண்டியன், பொற்கிழி நடராஜன், கிங்ஸ்டார் சேர்மதுரை, அன்பழகன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கோகுல், புளியடி குமார், முத்து, எழில் ஜோசப், சாகுல் ஹமீது, முத்தையா, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • களக்காடு வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி களக்காடு அருணா மகாலில் நடைபெற்றது.
    • வளைகாப்பு நிகழ்ச்சியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து சீர் வரிசை பொருட்களை வழங்கினார்.

    நெல்லை:

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் களக்காடு வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி களக்காடு அருணா மகாலில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான நாங்குநேரி ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சீர் வரிசை பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பிரிய தர்ஷினி, முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ் செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத் தலைவர்கள் சந்திர சேகரன், செல்லபாண்டி, கக்கன், களக்காடு நகராட்சி காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், தி.மு.க. நகர செயலாளர் மணி சூரியன், களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், களக்காடு வடக்கு வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர் பால்பாண்டி, நாங்குநேரி மேற்கு வட்டார தலைவர் வாகைதுரை, பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் கமலா, கவுன்சிலர்கள் மீகா கண்ணன், வனிதா காமராஜ், படலையார் குளம் பஞ்சாயத்து தலைவர் முருகன், சீவலப்பேரி பஞ்சா யத்து தலைவர் அய்யம்மாள், மகளிர் அணி வட்டார தலைவி பிரியா, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் டேனியல், வில்சன் , தங்கராஜ், வேலம்மாள், லதா மற்றும் குழந்தை நல பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவில் கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
    • அங்கன்வாடி பணியாளர்கள் ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடனமாடி கர்ப்பிணிகளை மகிழ்வித்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பல்நோக்கு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலங்குளம் வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர் மங்கள நாயகி தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணி கண்டன், துணை சேர்மன் செல்வக் கொடி ராஜாமணி, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் முத்துலெட்சுமி அன்பழகன், பள்ளி சிறார் மருத்துவர் சித்ரா, நெட்டூர் வட்டார சுகாதார மேற்பார் வை யாளர் கங்காதரன், புள்ளி யல் ஆய்வாளர் சண்முக சுந்தரம், உணவு பாதுகாப்பு அலுவலர் மகாராஜன் ஆகி யோர் சிறப்பு அழைப்பா ளர்களாக கலந்து கொண்டனர். விழாவில் கர்ப்பிணி களுக்கு வளையல் அணி வித்து வளைகாப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடை பெற்றது. சேலை, பழ ங்கள்,சத்துமாவு அடங்கிய சீர் வரிசைகள் வழங்க ப்பட்டது. 5 வகை யான உணவுகள் வழங்க ப்பட்டது.

    இதில் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 120 கர்ப்பிணிகள் பங்கேற்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடனமாடி கர்ப்பிணிகளை மகிழ் வித்தனர். விழாவில் பங்கேற்றவர்கள் அர்சதை தூவி கர்ப்பிணிகளுக்கு ஆசி வழங்கினர்.

    ×