என் மலர்
நீங்கள் தேடியது "கர்ப்பிணி"
- தைராய்டு மாத்திரை மற்றும் அயோடின் எடுத்தாலே முன்கழுத்துகழலை நோய் வராமல் தடுக்கலாம்.
- பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருப்பது தைராய்டு ஹார்மோன்.
கர்ப்ப காலத்தில் கருக் குழந்தை வளர்ச்சிக்கு தைராய்டு ஹார்மோன் மிக மிக இன்றியமையாதது. முதல் மூன்று மாதங்கள் தாயின் தைராய்டு சுரப்பையே குழந்தை நம்பியுள்ளது. பிறகு சிறிது சிறிதாக கரு குழந்தையின் தைராய்டு சுரப்பி வேலை செய்யத்தொடங்கும்.
கர்ப்பம் உறுதியான உடனேயே தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
ராதா தன்னுடைய முதல் கர்ப்பத்தில் இருக்கிறார். மிகவும் சந்தோஷம் திருமணம் ஆகி முதல் வருடத்திலேயே குழந்தை உண்டானது. மருத்துவரிடம் சென்றதும் கர்ப்பத்தை ஸ்கேனில் உறுதி செய்த பின் ரத்த பரிசோதனை செய்தனர்.
ரிப்போர்ட்ஸ் வந்த பிறகு டாக்டர் அவர்களை வரச் சொல்லி இருந்தார்.
அடுத்த நாள் பரிசோதனை முடிவுகள் வாட்ஸ் அப்பில் வந்துவிட்டன. ராதாவும் அவர் கணவரும் பரிசோதனை முடிவுகளை அவர்களே ஒப்பிட்டு பார்த்து எல்லாமே சரியாக இருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
ராதாவும் கணவரும் அவர்களே பரிசோதனை முடிவுகளை பார்த்து விட்டதால், அடுத்த ஸ்கேன் இரண்டு வாரம் கழித்து தானே! அப்போது சென்று டாக்டரை பார்க்கலாம் என்று ஒத்திப்போட்டனர். இரண்டு வாரம் கழித்து மருத்துவரிடம் சென்றனர். ராதாவின் கணவர் " டாக்டர்! ரிசல்ட் எல்லாவற்றையும் நானே பார்த்து விட்டேன். எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது. நீங்களும் அதை ஒப்புக்கொள்வீர்கள் "என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
டாக்டர் "மிகவும் வருத்தமாக இருக்கிறது படித்தவர்களே இவ்வாறு செய்கிறீர்கள்! கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் ரத்த அளவுகள் முற்றிலும் மாறுபட்டிருக்கும். நீங்கள் பார்க்கும் போது எல்லாம் நார்மல் போல தெரிந்தாலும் இவருக்கு தைராய்டு குறைபாடு உள்ளது. கட்டாயம் தைராய்டு மாத்திரை எடுக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்டாயம் தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும். பிரசவமான பிறகு மீண்டும் தைராய்டு டெஸ்ட் செய்துவிட்டு தேவைப்பட்டால் தொடரலாம். இல்லை என்றால் நிறுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.

ஜெயஸ்ரீ சர்மா
டி.எஸ்.ஹெச் சாதாரண ஒருவருக்கு இருப்பதை விட பாதி அளவு தான் கர்ப்பிணிகளுக்கு இருக்க வேண்டும். அந்த அளவுக்கு கர்ப்ப காலத்தில் பரிசோதனை முடிவுகள் மாறுபடும்.
எனவே கர்ப்பகாலத்தில் லேபில் கொடுக்கப்படும் ரிசல்டுகளை பார்த்துவிட்டு நீங்களாகவே முடிவு செய்ய வேண்டாம்.
பிறந்த குழந்தைகளுக்கு வரும் தைராய்டு குறைபாடு
பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருப்பது தைராய்டு ஹார்மோன். அதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு தைராய்டு பரிசோதனை செய்யப்படுகிறது. பரம்பரை நோயாக ஒரு சில குழந்தைகளுக்கு பிறந்த உடனேயே தைராய்டு குறைபாடு ஏற்படலாம். இதனால் குழந்தையின் அடுத்தடுத்த வளர்ச்சி படிகளான, 'முகம் பார்த்து சிரிப்பது, குப்புற விழுவது, தவழுவது, உட்காருவது, நிற்பது, நடப்பது, வார்த்தைகளை பேசுவது, என்று எல்லாவற்றிலும் தாமதமாகலாம். எனவே பிறந்த குழந்தைகளுக்கு செய்யப்படக்கூடிய முக்கியமான பரிசோதனைகளில் தைராய்டும் ஒன்று.
மெனோபாஸில் வரும் தைராய்டு நோய்
மெனோபாஸ் (மாதவிலக்கு நின்று போகுதல்).அந்த நேரத்திலும் தைராய்டு சுரப்பில் மாற்றம் ஏற்படும். தைராய்டு குறைபாடு ஏற்படும். அதனால் மாதவிலக்கு நின்றவர்கள் ஒருமுறை மருத்துவரிடம் சென்று உடலை முழுமையாக பரிசோதித்து கொள்வது நல்லது. குறைவான சுரப்பு உள்ளவர்கள் தைராய்டு மாத்திரை எடுத்துக் கொண்டால் மனோபாஸ் காலத்தில் வரும் பல பிரச்சனைகளுக்கு அது தீர்வாக இருக்கலாம்.
முன் கழுத்து கழலை கட்டி (காய்ட்டர்) எப்படி வருகிறது?
அயோடின் சத்து குறைபாடு அல்லது தைராய்டு ஹார்மோன் குறைபாட்டால், தைராய்டு சுரப்பி அதிகமாக சுரக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறது. தொடர்ந்து தலைமை சுரப்பியிலிருந்து வரும் "தைராய்டு தூண்டி ஹார்மோன்" தைராய்டு சுரப்பியை மேலும் மேலும் வளரச் செய்து தேவையான அளவு தைராய்டு சுரக்கும்படி கட்டளை இடுகிறது. அதனால் கழுத்தில் தைராய்டு கட்டி காயிட்டர் உருவாகிறது. தைராய்டு மாத்திரை மற்றும் அயோடின் எடுத்தாலே முன்கழுத்துகழலை நோய் வராமல் தடுக்கலாம்.
தைராய்டு இருப்பவர்கள்என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது? எது சாப்பிடலாம்?
பொதுவாக எல்லோரும் நினைப்பது தைராய்டு வந்து விட்டாலே பெரிய பட்டியலிட்டு இந்த காயெல்லாம் சாப்பிடக்கூடாது என்று.ஆனால் உண்மையில் அப்படி அந்த பட்டியலில் எந்த காயும் இல்லை. ஒரு சில க்ரூஸிபிரஸ் என்று சொல்லக்கூடிய காய் வகைகளை பச்சையாக உண்ணுவது தைராய்டுக்கு ஏற்றதல்ல. எடுத்துக்காட்டாக காலிபிளவர் முட்டைக்கோஸ், புரோக்கலி மற்றும் சோயா உணவுகள். இவற்றை சமைத்து சாப்பிடலாம். இது தவிர எந்த விதமான கடினமான உணவு பத்தியமும் தைராய்டுக்கு தேவை இல்லை.
கடல் சார்ந்த உணவுகளில் அயோடின் இருப்பதால் கடற்கரை பகுதிகளில் இருப்பவர்களுக்கு தைராய்டு நோய் வெகு அரிதாகவே வருகிறது. கடற்கரையை விட்டு விலகி இருப்பவர்களுக்கு முக்கியமாக பாலைவனப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தைராய்டு நோய் அதிகம் வரும். ஒரு சில பாறை உப்புகளில் அயோடின் சத்து இருந்தாலும் மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் தைராய்டு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
அதனால்தான் அரசு தைராய்டு சத்தை உப்பில் ஏற்றி உண்ண வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி உள்ளது. மேலும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் பகுதிகளில் நெற்றியில் வைக்க அயோடின் சத்து கலந்த பொட்டுகள் அரசால் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. அது நெடு நேரம் நெற்றியில் ஒட்டியிருக்கும்போது பெண்களுக்கு தைராய்டு நோய் வருவது தவிர்க்கப்படுகிறது.
பெரும்பாலும் வெகு அரிதாகவே ஏற்படும். மீன் மற்றும் கடல்பாசிகளில் அயோடின் சத்து நிறைந்திருப்பதால் கடல் சார்ந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அயோடின் குறைபாட்டால் வரும் தைராய்டு வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு மற்றும் பால் பொருட்களிலும் அயோடின் சத்து நிறைந்துள்ளது.
தைராய்டு மாத்திரையின் பக்க விளைவுகள் என்ன?
தைராய்டு மாத்திரைக்கு பெரியதாக ஒன்றும் பக்கவிளைவுகள் இல்லை. ஆனால் 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது தைராய்டு ரத்த பரிசோதனை செய்து மருத்துவரிடம் காண்பித்து மாத்திரையின் அளவு சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
வாட்ஸ்அப்: 8925764148
- சேகரின் தந்தை சட்டையா அவர்களின் திருமணத்தை சிறிதும் விரும்பவில்லை
- ராணி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தார்.
தெலுங்கானாவில் மகன் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த தந்தை கர்ப்பிணி மருமகளை வெட்டிக்கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் தாஹேகம் மண்டலத்தில் உள்ள கெர்ரே கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். BC சமூகத்தை சேர்ந்த இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராணி என்ற பட்டியலின (ST) பெண்ணை காதலித்து மணந்தார்.
சேகரின் தந்தை சட்டையா அவர்களின் திருமணத்தை சிறிதும் விரும்பவில்லை. மகன் மற்றும் மருமகள் மீது அவர் வஞ்சத்துடன் இருந்து வந்துள்ளார்.
தற்போது ராணி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சட்டையாவின் சாதிவெறி ரத்த வெறியாக மாறியுள்ளது. நேற்று(சனிக்கிழமை) கர்ப்பிணி மருமகளை அவர் இரக்கமின்றி கோடரியால் தாக்கினார். தாக்குதலில் பலத்த காயமடைந்த ராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சட்டையாவை கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
- இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர்களுக்கு திருமணம் நடந்தது.
- ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் அவரது உடலை தங்கள் வயலில் வைத்து எரித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில், வரதட்சணை கேட்டு 21 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் கணவர் மற்றும் உறவினர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் .
மைன்புரி மாவட்டத்தின் கோபால்பூர் கிராமத்தில் ரஜினி குமாரி என்ற அந்த 21 பெண் கணவர் சச்சின் உடன் வசித்து வந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர்களுக்கு திருமணம் நடந்தது. ரஜினி அண்மையில் கர்ப்பமாகி உள்ளார்.
ரஜினியை கணவர் சச்சினும் அவரது உறவினர்களும் ரூ.5 லட்சம் கூடுதல் வரதட்சணை கேட்டு அழுத்தம் கொடுத்து வந்தனர்.
இதை நிறைவேற்றத்தால், அவர்கள் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) ராஜனியை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் ரஜினி உயிரிழந்தார்.
பின்னர், ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் அவரது உடலை தங்கள் வயலில் வைத்து எரித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த ராஜனியின் தாயார் சுனிதா தேவி சனிக்கிழமை அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையே தாயார் சுனிதா தேவி அளித்த குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் சச்சின், அவரது சகோதரர்கள் பிரான்ஷு மற்றும் சஹ்பாக், உறவினர்களான ராம்நாத், திவ்யா மற்றும் டினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
- சீனாவில் ஒரு பெண் அடுத்தடுத்து கர்ப்பமாகி 3 குழந்தைகளை பெற்றெடுத்தார்.
- இதனால் அவர் ஜெயிலுக்குப் போவதை தவிர்த்துள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பீஜிங்:
சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 2020-ம் ஆண்டில் மோசடி வழக்கில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால் சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார்.
இப்படி ஒரு விலக்கு இருப்பதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் தனது மகப்பேறு காலம் முடிவடையும்போது மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்து வந்துள்ளார்.
இதன் விளைவாக, அவர் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்து ஜெயிலுக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார்.
தான் பெற்ற 3 குழந்தைகளில் 2 குழந்தைகளை விவாகரத்தான கணவரிடமும், மேலும் ஒரு குழந்தையை அவரது சகோதரரிடமும் கொடுத்துள்ளார்.
போலீசார் நடத்திய விசாரணையில், இதுபோல் தொடர்ந்து கர்ப்பம் தரிப்பதை அறிந்து கொண்டனர். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டினால் அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்படலாம் என தெரிவிக்கிறது.
- வழக்கமான மாதவிடாய் ஏற்படுவதில் எந்த மாறுபாடும் இல்லாமல் இருந்துள்ளது.
- வயிற்று வலியால் கழிவறைக்கு சென்றபோது, பெண் குழந்தை பிறந்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்தவர் மைக்கேல் க்ரீன். இவரது மனைவி ஹெலன். இவர்களுக்கு 6 வயதில் டார்சி என்ற பெண் குழந்தை உள்ளது.
மைக்கேல் க்ரீன் தனது குடும்பத்துடன் 10 நாள் சுற்றுப் பயணமாக கனடா சென்றுள்ளார். டோரான்டோவில் தங்கியிருந்தபோது ஹெலனுக்கு சற்று வயிறு வலித்துள்ளது. இதனால் கழிவறைக்கு சென்றுள்ளார். திடீரென வயிற்றில் இருந்து வெளியே ஏதோ ஒன்று தள்ளுவது போன்று உணர்ந்துள்ளார். அப்போது கீழே பார்த்தபோதுதான், அவரது வயற்றில் இருந்து குழந்தை பிறந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஹெலன், தான் கர்ப்பிணியாக இருப்பதாக உணர்ந்ததே இல்லையாம். அதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லையாம் எனத் தெரிவித்துள்ளார். இந்த வகையான கர்ப்பத்திற்கு cryptic pregnancy ஆகும். அவருக்கு வழக்கமாக வரக்கூடிய மாதவிடாயில் எந்த மாறுபாடும் ஏற்படவில்லையாம். அப்படி இருந்தும் குழந்தை பிறந்துள்ளது.
என்றாலும், தற்போது தங்களது குடும்பத்தில் கூடுதலான ஒரு பெண் குழந்தை இணைந்துள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளனர். இது மிக மிகப்பெரிய ஷாக். இருந்தாலும் லவ்லி சர்ப்பிரைஸ் என ஹெலன் தெரிவித்துள்ளார்.
- பாரதியின் உயிருக்கு ஆபத்து என்பதால் பெண் போலீஸ் கோகிலா தைரியமாக ஆட்டோவில் வைத்தே அவருக்கு பிரசவம் பார்த்தார்.
- கோகிலாவை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.
திருப்பூர்:
சுதந்திர தினத்தையொட்டி நேற்றிரவு திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு ஏ.வி.பி., பள்ளி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்தது. அதில் வந்த பெண் கதறி அழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ் கோகிலா மற்றும் போலீசார் உடனே ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாரதி என்பவரை பிரசவத்திற்காக இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அவரது கணவர் அழைத்து செல்வது தெரியவந்தது.
மேலும் பாரதிக்கு பாதி குழந்தை வெளியே வந்த நிலையில் அவர் கதறி துடித்தார். ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்கு முன் குழந்தை பிறந்து விடும் என்பதாலும், பாரதியின் உயிருக்கு ஆபத்து என்பதாலும் நர்சிங் படித்திருந்த பெண் போலீஸ் கோகிலா தைரியமாக ஆட்டோவில் வைத்தே பாரதிக்கு பிரசவம் பார்த்தார். இதில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதனைத்தொடர்ந்து உடனடியாக பாரதி மற்றும் குழந்தையை திருப்பூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலையில் தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
பாரதிக்கு பிரசவம் பார்த்து அவரது உயிரை காப்பாற்றிய கோகிலாவை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.
இதுதொடர்பாக கோகிலா கூறுகையில், நர்சிங் படித்துள்ள நான் மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளேன். பிரசவங்களும் பார்த்துள்ளேன். சில மாதங்களுக்கு முன்புதான் தமிழக காவல்துறை பணியில் சேர்ந்தேன். பிரசவம் பார்த்த அனுபவம் இருந்ததால் எந்தவித பதற்றமின்றி நேற்றிரவு பாரதிக்கு பிரசவம் பார்த்தேன். தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர் என்றார்.
- 2 மாதங்களுக்கு முன்பு என் மனைவி கர்ப்பம் தரித்தார்
- முதலில் என் அமணிவியிடம் வேலையை விடுமாறு கூறினேன்.
கர்ப்பிணி மனைவியை கவனித்துக்கொள்ள பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது ரூ.1.2 கோடி (வருடத்திற்கு) ஊதிய வேலையை ராஜினாமா செய்துள்ள சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இளைஞர் ஒருவர் Reddit இல் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "நான் WHF (WORK FROM HOME) முறையில் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி ஊதியம் பெற்று வருகிறேன். 2 மாதங்களுக்கு முன்பு என் மனைவி கர்ப்பம் தரித்தார். இதையடுத்து முதலில் அவளை வேலையை விட சொன்னேன். ஆனால் மனைவி தொடர்ந்து வேலை செய்ய விரும்பியதால் மனைவியை கவனித்துக்கொள்ள நான் வேலையை விட்டுவிட்டேன். வீட்டிலிருந்து மனைவியை கவனித்துக்கொள்ள போகிறேன். உங்கள் குடும்பத்தினருக்கு தேவைப்படும் போது நீங்கள் அவர்களுடன் இருப்பதை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாக அந்த இளைஞரை பாராட்டி பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
- விசாரணையில் அவரது சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது
- இத்தகைய நபர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கக் குடும்பங்களை குறிவைக்கின்றனர்.
அசாமில் உள்ள ஸ்ரீபூமியைச் சேர்ந்தவர் புலோக் மலாக்கர். இவர் சில்சாரில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில் கடந்த 10 ஆண்டுகளாக கைனகாலஜிஸ்ட்டாக பணியாற்றி வந்துள்ளார்.
இதுவரை சுமார் 50 பிரசவங்களை செய்துள்ளார். அதுவும் சிசேரியன் பிரசவங்கள். இந்நிலையில் அவர் போலி மருத்துவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடைசியாக ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் போது ஆபரேஷன் தியேட்டரில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார்.
மூத்த காவல்துறை அதிகாரி நுமல் மஹாதா கூறுகையில், புலோக் ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்றும், விசாரணையில் அவரது சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது என்றும் கூறினார். ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இத்தகைய நபர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கக் குடும்பங்களை குறிவைக்கின்றனர். இந்த ஆண்டு ஜனவரியில் போலி மருத்துவர்களைப் பிடிக்க அசாம் அரசு சிறப்பு நடவடிக்கையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
- நான் எந்த முஸ்லிம் நோயாளிகளையும் பார்க்கப் போவதில்லை"
- துயரத்திலும் பயத்திலும் இருக்கிறாள். தனக்காக மட்டுமல்ல, அவளுக்குள் வளரும் உயிருக்காகவும்.
காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கடந்த ஏப்ரல் 22 அன்று பயகரவாத்திகளால் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு அவர்களின் மத அடையாளங்களை பயங்கரவாதிகள் கேட்டதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவத்துக்குப் பின் வட இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், இஸ்லாமியர் என்பதால் 7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கஸ்தூரி தாஸ் நினைவு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவரான டாக்டர் சி.கே. சர்க்கார், "உங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் என் மதத்தைச் சேர்ந்தவர்களைக் கொல்கிறார்கள், நீங்கள் கொலைகாரர்கள்.
உங்கள் கணவர் இந்துக்களால் கொல்லப்பட வேண்டும், அப்போதுதான் இந்துக்கள் அனுபவித்த வலியை நீங்கள் உணர முடியும். முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக மாறக் கற்பிக்கப்படும் மதரஸாக்கள் மற்றும் மசூதிகளுக்கு மட்டுமே நீங்கள் சிகிச்சைக்காகச் செல்ல வேண்டும்.திரும்பி வராதே, நீங்களெல்லாம் ஒரே மாதிரிதான்" என்று கூறி, அவர் 7 மாதமாக சிகிச்சை அளித்து வந்த முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
"இந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம், மனம் உடைந்துள்ளோம். கடந்த ஏழு மாதங்களாக டாக்டர் சர்க்காரின் பராமரிப்பில் இருக்கும் எனது கர்ப்பிணி மைத்துனிக்கு நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்காக மட்டுமே அவருக்கு சிகிச்சையளிக்க அவர் வெளிப்படையாக மறுத்ததைக் கண்டு திகைப்பு ஏற்பட்டது.
அப்போதிருந்து அவள் அழுது கொண்டிருக்கிறாள். துயரத்திலும் பயத்திலும் இருக்கிறாள். தனக்காக மட்டுமல்ல, அவளுக்குள் வளரும் உயிருக்காகவும்.
அவளுக்கு ஆதரவு, இரக்கம் மற்றும் கவனிப்பு தேவைப்படும் நேரத்தில், அவள் வெளிப்படையான தப்பெண்ணத்தையும் கொடுமையையும் சந்தித்தாள்" என்று அந்தப் பெண்ணின் உறவினரான வழக்கறிஞர் மெஹ்ஃபுசா கதுன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய சமூக ஆர்வலர் மோனா அம்பேகோன்கர், "அவர் (மருத்துவர்) ஒரு ஆபத்தான குற்றவாளி. மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
- இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது.
- கர்ப்பிணித் தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாக சிறுவன் தெரிவித்துள்ளான்.
சீனாவில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.
இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது. 13 வயது சிறுவன் ஒருவன் அவசர சிகிச்சை மையத்தை அழைத்து, தனது 37 வார கர்ப்பிணித் தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாகவும், அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், செல்போனில் மருத்துவ உதவியாளர் சென் சாயோஷூனின் ஆலோசனையின் படி தனது தாய்க்கு சிறுவன் பிரசவம் பார்த்துள்ளார். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, மருத்துவ உதவியாளர்கள் வந்து தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
- 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் சிசேரியன் முறையில் குழந்தை பெற்றெடுத்தார்.
- பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது
உத்தரபிரதேசத்தில் பிரசவத்தின்போது மருத்துவரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் 17 ஆண்டுகளுக்கு பின் எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் ஷி மெடிக்கல் கேர் என்ற மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தார். அதன்பின் பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சமீபத்தில் லக்னோ மருத்துவக் கல்லூரியில் சந்தியா எடுத்த எக்ஸ்ரேயில் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. மார்ச் 26 ஆம் தேதி அவரது வயிற்றிலிருந்த கத்திரிக்கோலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
இதனையடுத்து தனது மனைவி சந்தியாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வால் மீது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், 17 ஆண்டுகளாக தனது மனைவி வேதனைப்பட்டதற்கு மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வாலின் அலட்சியம் தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
- கர்ப்பிணி பெண்களுக்கு தலா ரூ.1000 உதவித்தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
- அனைத்து வட்டார ங்களிலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தொடர்ந்து நடைபெறும்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் சமுதாய வளை காப்பு விழா நடந்தது.
கா்ப்பிணிப் பெண்க ளுக்கு வளைகாப்பு பொருட்களை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு கா்ப்பிணிப் பெண்ணும் நிலைப்பாட்டை பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் அரசே சமுதாய வளைகாப்பு விழாவை நடத்துகிறது. அதன்மூலம் ஏழை, பணக்காரா் என பாகுபாடின்றி ஒரே நிலையில் அனைத்து மதத்தை சேர்ந்த கா்ப்பிணிப் பெண்களுக்கு இந்த விழாவின் மூலம் 5 வகையான கலவை சாதம், வளையல்கள், பூ மற்றும் பழங்கள் உள்ளிட்ட வளைகாப்பு பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 12 வட்டா ரங்களில் உள்ள 43 தொகுதிகளில் மொத்தம் 9 ஆயிரத்து 611 கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர். அதில் ஒரு தொகுதிக்கு 50 கர்ப்பிணிப் பெண்கள் வீதம் 43 தொகுதிகளில் 2 ஆயிரத்து 150 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற உள்ளது.
அனைத்து வட்டார ங்களிலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தொடர்ந்து நடைபெறும்.
கா்ப்பிணி தாய்மார்கள், கா்ப்பகால மாதம் முதல் தொடங்கி, 10 மாதமும் அரசு மருத்துவமனையில் பதிவு செய்து, சாியான மாதாந்திர பாிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமான குழந்தை யைப் பெற்றெடுப்பதுடன், தானும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
அதன்படி, தனியார் மருத்துவமனைகளுக்கு மேல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயா்தர சிகிச்சை வழங்கப்பட்டு, தற்போது கா்ப்பகால உயிரிழப்பு என்பது முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் 150 கா்ப்பிணி தாய்மா ர்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.1000 தொகையை வழங்கினார்.
திருப்பத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் கான்முகமது, துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) பரமேஸ்வரி, நெற்குப்பை பேரூராட்சித் தலைவா் புசலான், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலா் தங்கம், திருப்பத்தூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி சேகர், ஹரி சரண்யா, திருப்பத்தூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






