என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abortion"

    • கருக்கலைப்பு செய்ய உள்ள பெண்ணின் கருவானது 12 வாரத்துக்கு கீழே உள்ளதாக இருக்க வேண்டும்.
    • கருக்கலைப்பின்போது முதல் முக்கியமான பிரச்சினை உடல் ரீதியான பிரச்சினை ஆகும்.

    இன்றைய காலகட்டத்தில் திருமணத்துக்கு முன்பே கருத்தரித்தல் மற்றும் கருக்கலைப்பு அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சினைகள் பெண்களின் வாழ்க்கையில், குறிப்பாக இளம்பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. திருமணத்துக்கு முன்பு கர்ப்பம் தரித்தலும், அதை செய்கிற கருக்கலைப்பு முறைகளும், இளம் வயது பெண்களின் இறப்பு, அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கிய பாதிப்பில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    எனவே கருக்கலைப்பை எப்படி பாதுகாப்பாக செய்வது? பாதுகாப்பாக கருக்கலைப்பை செய்தாலும் என்னென்ன பிரச்சி னைகள் ஏற்படுகிறது? இந்த பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு காண்பது எப்படி என்பது பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.

    கருக்கலைப்பு செய்வதற்கு முன்பு பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

    பெண்களுக்கு கருக்கலைப்பை பாதுகாப்பாக செய்வதற்கு, அதற்கான தகுதி பெற்ற மருத்துவர் இருக்க வேண்டும். கருக்கலைப்பு செய்வதற்கு தகுதி பெற்ற அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக இருக்க வேண்டும். அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். அந்த மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ய உள்ள பெண்ணின் உடல் நலனை காப்பதற்கான வழிமுறைகள் சரியாக இருக்க வேண்டும்.

    கருக்கலைப்பு செய்ய உள்ள பெண்ணின் கருவானது 12 வாரத்துக்கு கீழே உள்ளதாக இருக்க வேண்டும். கருக்கலைப்பு செய்யலாம் என்று ஒரு மருத்துவர் உறுதி செய்தால் அந்த கருவை கலைக்க முடியும். கருக்கலைப்பு செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஒரு முறையான கவுன்சிலிங் பெறவேண்டும். கருக்கலைப்பு செய்யலாம் என்று அவரிடம் முறையாக ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகு தான் கருக்கலைப்பு செய்ய முடியும்.

    இதுவே கருவில் உள்ள குழந்தைக்கு உடல் பாதிப்பு என்றால், அதற்கான ஒரு சரியான ஸ்கேன் பரிசோதனை அறிக்கை இருக்க வேண்டும். அதற்கு ஒரு முதுநிலை மருத்துவர் சான்றிதழ் வழங்கி இருக்க வேண்டும். கருக்கலைப்பு செய்வதற்கு இதெல்லாம் சில வரைமுறைகள் ஆகும்.

    கருக்கலைப்பு செய்வதற்கு முன்பு பெண்கள் இந்த விஷயங்களை கவனிக்க வேண்டும். இந்த வகையில் இவை எல்லாமே சரியாக இருந்தால் கருக்கலைப்பு என்பது சாத்தியமானது. அதற்கு கணவரின் கையெழுத்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெண்களின் முடிவையே இதில் ஏற்றுக் கொள்ள முடியும்.

    கருக்கலைப்பு விஷயத்தில் பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள்:

    என்னிடம் ஆலோசனைக்கு வரும் பெண்கள் முதலில் சில சந்தேகங்களை கேட்பார்கள். டாக்டர் நான் திருமணத்துக்கு முன்பு கருத்தரித்தேன், அதன்பிறகு பெரிய கார்ப்பரேட் ஆஸ்பத்திரியில் மிகவும் பாதுகாப்பான முறையில் தான் கருக்கலைப்பு செய்தேன். நல்ல மருத்துவமனையில் போய் தான் பார்த்தேன், தகுதியற்ற மருத்துவர்களிடம் போகவில்லை. அப்படிப்பட்ட நிலையில் கருக்கலைப்பு செய்துள்ள எனக்கு பின் விளைவுகள் வருமா,,,? என்பார்கள். இன்றைய பெண்கள் கேட்கிற முதல் கேள்வியே இப்படித்தான் இருக்கும்.

    அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இதுதான். கருக்கலைப்பு செய்வதால் கண்டிப்பாக பிரச்சினைகள் வரலாம். இந்த பிரச்சினைகள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், எப்போது வேண்டுமானாலும் வரலாம், திருமணம் என்பது இதற்கு தடையே அல்ல. திருமணமாகி இருந்தாலும், திருமணமாகவில்லை என்றாலும், எந்த காலகட்டத்திலும் கருக்கலைப்பு செய்யும்போது, சில பிரச்சினைகள் அதிகமாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தகுதி பெற்ற மருத்துவர் கருக்கலைப்பு செய்தால் கூட பிரச்சினைகள் வருமா என்றால் வரலாம். என்னென்ன பிரச்சினைகள் வரலாம்? முதலில் உடல் ரீதியான பிரச்சினைகள் வரலாம். இரண்டாவதாக, மன ரீதியான பிரச்சினைகள் வரலாம். மூன்றாவது, அவர்களுக்கு தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏற்படலாம். நான்காவதாக, சமுதாய ரீதியாக பிரச்சினைகள் வரலாம்.

    எனவே ஒரு தேவையில்லாத கர்ப்பத்தை, திருமணத்துக்கு முன்பே உருவான கர்ப்பத்தை கருக்கலைப்பு செய்யும்போது பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள்.

    கருக்கலைப்பின்போது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்:

    கருக்கலைப்பின்போது முதல் முக்கியமான பிரச்சினை உடல் ரீதியான பிரச்சினை ஆகும். அவர்களுக்கு உடல் ரீதியாக என்ன பிரச்சினை வரலாம் என்று பார்த்தால், கருக்கலைப்பு செய்யும்போது பல நேரங்களில் ரத்தப்போக்கு அதிகமாகலாம். கர்ப்ப வாயில் தொற்றுகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படலாம். கர்ப்பப்பையில் காயங்கள் ஏற்படலாம்.

    அதனால் கர்ப்பம் தரிக்காத நிலை உருவாகலாம். கர்ப்பப்பையில் ஓட்டை விழுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். பல நேரங்களில் கர்ப்பப்பையில் தொற்றுகளும் ஏற்படலாம். அதனால் அந்த பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு பிற்காலத்தில் கருத்தரிக்க முடியாத நிலையும் வரலாம்.

    தேர்ச்சி பெற்ற மருத்துவர் கருக்கலைப்பு செய்தாலும் கூட, அல்ட்ரா சவுண்ட் வழிகாட்டுதலில் செய்தாலும் கூட சில நேரங்களில் கர்ப்பப்பை பழுது அடைவது, ரத்தப்போக்கு ஏற்படுவது என்பது போன்ற பிரச்சினைகளும் வரலாம்.

    இரண்டாவது மன ரீதியான என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என்றால், இவர்களை பாதிக்கின்ற ஒரு முக்கியமான விஷயம் மன அழுத்தம். அதாவது கவலை, தேவையில்லாத மன கஷ்டம், இதனால் குற்ற உணர்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. பல நேரங்களில் கருக்கலைப்பு செய்யும்போது, தாய்மைக்கான ஒரு விஷயத்தை, ஏதோ ஒரு காரணத்துக்காக கலைத்தோம் என்கிறபோது, அதனால் ஏற்படுகிற மன அழுத்தமும் பெண்களை பாதிக்கின்ற மன ரீதியான பிரச்சினைகள் ஆகும்.

    மூன்றாவதாக, சமுதாய ரீதியாக பிரச்சினைகள் வருகிறது. திருமணத்துக்கு முன்பு கர்ப்பம் தரித்து கருக்கலைப்பு செய்வது என்பது சமுதாய ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் ஆகும். அந்த வகையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அவர்களுடைய நிலை தாழ்ந்து விடுகிறது. இதனால் அவர்கள் சமூகத்தில் பழகுவதே குறைவாகிறது. சமூக ரீதியாக தேவையில்லாத செயல் செய்துவிட்டார் என்ற குற்ற உணர்ச்சியோடு அவர்களை பார்ப்பவர்களும் அதிகம். இந்த மாதிரியான பிரச்சினைகள் சமுதாய ரீதியாக ஏற்படுகிறது.

    நான்காவது, இதுபோன்ற பிரச்சினைகளால் அந்த பெண்கள் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் ஏற்படுகிற குழப்பங்களால் அவர்களுடைய வேலைத்திறன் குறைவாகிறது. பல நேரங்களில் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. தேவையில்லாத பண செலவு ஏற்படுகிறது. உடல் நிலை பாதிப்பினால் நீண்ட நாள் பிரச்சினைகள் நிறைய வரலாம். இவை தவிர பல நேரங்களில் இவர்களுக்கு பிற்காலத்தில் குழந்தையின்மை பாதிப்பும் ஏற்படலாம். குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியாக மாறும் நிலையும் வரலாம்.

    ஒவ்வொரு பெண்ணும் தேவையில்லாத கர்ப்பம், தேவையில்லாத கருக்கலைப்பு, திருமணத்துக்கு முன்பு உருவாகும் கர்ப்பம் ஆகியவற்றை கண்டிப்பாக தடுக்க முடியும். ஏனென்றால் இதை தடுப்பதற்கு நிறைய முக்கியமான வழிமுறைகள் இருக்கிறது. இன்றைக்கு கருத்தடை முறை என்பது மிகவும் பொதுவாக இருக்கிறது. கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு சட்ட ரீதியாகபாதுகாப்பு இருந்தாலும், அந்த பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கி யத்துக்கு இது பங்கம் விளைவிக்கிறது.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    தேவையில்லாத கர்ப்பம், கருக்கலைப்பை கண்டிப்பாக தடுக்க முடியும்:

    இந்த வகையில் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், தேவையில்லாத கர்ப்பத்தை தடுக்க முடியும். இன்றைக்கு எத்தனையோ வகையில் கருத்தடை முறைகள் இருக்கிறது. இந்த கருத்தடை முறைகளை சரியான வகையில் பயன்படுத்த வேண்டும். இதைப்பற்றி ஒரு தெளிவான புரிதல் இருக்க வேண்டும்.

    தேவையில்லாத உறவுகளால் ஏற்படுகிற கர்ப்பம், அதை கலைப்பதால் ஏற்படுகிற மன உளைச்சல், இதனால் ஏற்படுகிற உடல் ரீதியான பிரச்சினைகள், அதனால் நீண்ட நாட்களாக குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் இவர்களில் நிறைய பேரை நாங்கள் பார்க்கிறோம்.

    பெண்களுக்கு நாங்கள் சொல்கின்ற முக்கியமான விஷயம் என்னவென்றால், குழந்தை பேறு என்பது நமது நாட்டை பொறுத்த வரைக்கும் திருமணத்துக்கு பிறகு என்பதுதான். தற்காலத்தில் எத்தனையோ கருத்தடை முறைகள் இருக்கிறது. இவற்றினை தெளிவாக தெரிந்து கொண்டு, உங்களுடைய பாலியல் உறவுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். பல நேரங்களில் தேவையில்லாமல் பாலியல் உறவு கொண்டு, அதனால் வருகிற தேவையில்லாத கர்ப்பத்தை கலைக்க போய் உடல், மன ஆரோக்கியம் எல்லாமே கெட்டுப்போகிறது. நல்ல கருத்தடை முறைகள் நமது நாட்டில் மிகவும் எளிதாக கிடைக்கிறது. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். திருமணத்துக்கு முன்பே உறவு கொள்வது தவறு தவறு இல்லை என்பது ஒவ்வொருவரின் மனம் சார்ந்த விஷயம். அதேபோல் திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் தரிப்பதும் சரியா தவறா என்பது சொல்வதற்கில்லை. ஆனால் உங்களது கர்ப்பத்தை திட்டமிடுவது என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

    நீங்கள் முறையாக உங்கள் கருத்தரிப்பை திட்டமிட்டால், கண்டிப்பாக இந்த தேவையில்லாத கர்ப்பமும், கலைக்க வேண்டிய அவசியமும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளும் வராது. உணர்வு ரீதியான விஷயங்களில் தேவையில்லாமல் உங்களை இழந்து கருத்தரித்து, அதனால் ஏற்படுகிற மன உளைச்சல், நீண்ட நாள் உடல் ரீதியான பாதிப்பு, பிற்காலத்தில் குழந்தையின்மை ஏற்பட்டு அதனால் உருவாகும் குற்ற உணர்வு, அதோடு உங்களுடைய துணையுடன் ஏற்படுகிற பிரச்சினைகள் ஆகிய அனைத்துமே உங்களால் கண்டிப்பாக தடுக்கக்கூடியது தான். எனவே தேவையில்லாமல் கர்ப்பம் அடைந்து, அதை கருக்கலைப்பு செய்து, உங்கள் உடல், மன ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் உடல் ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் இந்த விஷயங்களில் தெளிவாக பொறுப்புடன் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முழுமையாக தடுக்க முடியும்.

    • ஆந்திர மாநிலத்தில் உள்ள கிளினிக்கில் சிறுமி சண்முகபிரியாவின் 5 மாத கர்ப்பத்தை கலைத்ததாக தெரிகிறது.
    • சிறுமியுடன் பழகிய உறவினரான சிறுவனிடமும் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே உள்ள கொடிவலசா கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சண்முகபிரியா (வயது 19) டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான சிறுவன் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகியதால் சண்முகபிரியா 5 மாத கர்ப்பம் அடைந்தார். இது பற்றி ஆரம்பத்தில் சண்முகப்பிரியா பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்தார்.

    இந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள கிளினிக்கில் சிறுமி சண்முகபிரியாவின் 5 மாத கர்ப்பத்தை கலைத்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த அவருக்கு தொடர்ந்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் சண்முகபிரியாவை திருத்தணியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகபிரியா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருத்தணி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு கர்ப்பத்தை கலைத்த நர்சு மற்றும் உதவியாளர் ஆகிய 2 பேரையும் போலீஸ்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுமியுடன் பழகிய உறவினரான சிறுவனிடமும் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.

    • சிறுமியின் காதலை ஏற்காத பெற்றோர் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளனர்.
    • கருக்கலைப்பு செய்தபோது சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சகோதரர் உறவுமுறை உள்ளவரை காதலித்த சிறுமி (17) 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

    சிறுமியின் காதலை ஏற்காத பெற்றோர் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளனர். கருக்கலைப்பு செய்தபோது சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

    சிறுமியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் மருந்தகத்தில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை பரிசோதனை செய்தார்.
    • இதேபோல் மருந்தகத்திற்குச் சென்று மருத்துவம் பார்ப்பதும் தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், இவரது மனைவி அமுதா (வயது 27). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அமுதா மீண்டும் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதைத்தொடர்ந்து இவர் தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் உள்ள தனியார் மருந்தகத்தில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை பரிசோதனை செய்தார். அதில் பெண் சிசு என தெரிய வந்ததால் கருவை கலைக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதை யொட்டி அந்த மருந்தகத்தில் கருவை கலைப்ப தற்கான மாத்திரைகள் வழங்க ப்பட்டது. தொடர்ந்து நிராமணியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்ற அமுதவிற்கு ரத்தப்போக்கு இருந்ததாகவும் இதனால் அருகே உள்ள வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற அவர் இறந்து போனார். இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர், தேசிய சுகாதார குழுமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அசகளத்தூர் கிராமத்தில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்ட மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதில் மருந்தகத்தில் மருத்துவம் பார்க்கப்படுகிறதா? கருக்கலைப்பு செய்யப்பட்டதா? கருக்கலைப்பு செய்வதற்கான உபகரண ங்கள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.  இதில் கள்ளக்குறிச்சி அருகே விளாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (45) என்பவர் அமுதவிற்கு ஸ்கேன் செய்து பார்த்து கருக்கலைப்பு மாத்திரை வழங்கி உள்ளார். இவர் ஐ.டி.ஐ மட்டும் முடித்துள்ளதாகவும், முறையாக அனுமதியின்றி மருந்தகம் நடத்தியதும், மேலும் கடந்த செப்டம்பர் மாதம் மலைக்கோடட்டாலம் பகுதியில் அனுமதியின்றி கருக்கலைப்பு கண்டறியும் மையம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு பிணையில் தற்போது வெளியில் வந்ததும் தெரியவந்தது. இதேபோல் விருகாவூர், மலைக்கோட்டாலம், இந்திலி ஆகிய பகுதிகளில் இதேபோல் மருந்தகத்திற்குச் சென்று மருத்துவம் பார்ப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து வடிவேலை கைது செய்தனர். செய்து வடிவேலிடம் விசாரணை செய்து வருகின்றனர். வடிவேல் மீது கள்ளக்குறிச்சி, வரஞ்சரம், சின்னசேலம் ஆகிய காவல் நிலையங்களில் கருக்கலைப்பு செய்ததாக ஏற்கனவே வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • முறையான அனுமதியின்றி மருந்தகம் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
    • மருந்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல் சில மருந்துகளை வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது,

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே தனியார் மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி சாப்பிட்ட அமுதா என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அசகளத்தூர் கிராமத்தில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்ட மருந்தகத்தில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கள்ளக்குறிச்சி அருகே விளாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (45) என்பவர் அமுதாவிற்கு ஸ்கேன் செய்து பார்த்து கருக்கலைப்பு மாத்திரை வழங்கியதும், அவர் முறையான அனுமதியின்றி மருந்தகம் நடத்தியதும் தெரியவந்தது. மேலும், கடந்த செப்டம்பர் மாதம் மலைக்கோடட்டாலம் பகுதியில் அனுமதியின்றி கருக்கலைப்பு கண்டறியும் மையம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு பிணையில் தற்போது வெளியில் வந்ததும் தெரியவந்தது.

    உயிரிழந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து வடிவேலை கைது செய்தனர். செய்து வடிவேலிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    கருக்கலைப்புக்கான மாத்திரை சாப்பிட்ட பெண் உயிரிழந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை தொடர்பாக அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தார்.

    மேலும், மருந்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல் சில மருந்துகளை வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது, மருத்துவர்களின் ஆலோசனை, பரிந்துரைகளின் அடிப்படையில் மருந்துகளை பெற வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

    • போதை மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது, மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
    • கருக்கலைப்புக்கு மாத்திரைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் பனியன் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இதனால் வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த வாரம் திருப்பூரில் உள்ள மருந்துக்கடைக்கு சென்ற வாலிபர்கள், போதை மாத்திரை கேட்டு கடை உரிமையாளரை தாக்கியதில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தின் எதிரொலியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள மருந்துக்கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டனர். போதை மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

    இதற்கிடையே திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள சில மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி தலைமையிலான மருத்துவ குழுவினர் வீரபாண்டி பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது அதுபோன்ற மாத்திரைகள் விற்பனை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும் கருக்கலைப்புக்கு தொடர்பான மாத்திரைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது.
    • கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்தால் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் 5லட்சம் பேர் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் என 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    பெரும்பாலான தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களிலும் மற்ற தொழிலாளர்கள் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம், அவிநாசி உள்பட பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் திருப்பூர் வீரபாண்டி, பலவஞ்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் தங்கியிருந்து பணிக்கு சென்று வரும் தமிழகம் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண்கள் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.

    தொடர்ந்து பெண் தொழிலாளர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவே அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் இது குறித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்தியதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தது தெரியவந்தது. தவறான உறவால் கர்ப்பமான இளம்பெண்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியாமல் இருக்க மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியுள்ளனர். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

    டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அதனை மீறி திருப்பூர் மாநகரில் உள்ள சில மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரூ.1000, ரூ.1500 என கூடுதல் விலைக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்துள்ளது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனக ராணி தலைமையிலான மருத்துவத்துறை அதிகாரிகள் திருப்பூர் வீரபாண்டி, பல்லடம் சாலை உள்பட மாநகர் பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சில மருந்துக்கடைகளில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் எச்சரிக்கையும் விடுத்தனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனகராணி கூறுகையில், டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது. மேலும் பெண்களும் அதனை பயன்படுத்தக்கூடாது. அதனை பயன்படுத்துவதால் உடல் உபாதைகள் ஏற்படும். எனவே விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்தால் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேவைபட்டால் காவல்துறை மூலமும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    • கருகலைப்பு செய்யக் கூடாது என எச்சரிக்கை
    • அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் அதிகாரி ஆய்வு

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார். அவர் கூறியதாவது:-

    பாலினம் ஆணா பெண்ணா என ஸ்கேன் செய்வது நமது மாவட்டத்தில் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் எங்களுக்கு புகார் வரும் போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து நமது மாவட்டத்தில் உள்ள மையங்களுக்கு வருகின்ற தாய்மார்களுக்கு நமது மருத்துவர்கள் கண்டிப்பாக ஸ்கேன் செய்யக்கூடாது.

    நமது மாவட்டத்தில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 944 பெண் குழந்தைகளே இருப்பதால் இனி வரும் காலங்களில் கருகலைப்பு போன்ற நிகழ்வு நடைபெற்றால் பெரும் சட்ட சிக்கல்கள் ஏற்படும்.

    அனைத்து மருத்துவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் . அவர்கள் பராமரிக்கின்ற அனைத்து பதிவேடுகளையும் சரியான உரிய முறையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

    தாய்மார்களுடைய பதிவேடுகளில் அவருடைய அனைத்து தகவல்களும் தவறாமல் இடம் பெற வேண்டும் அதில் பெயர் மட்டும் பதிவு செய்ய கூடாது.

    இனிவரும் காலங்களில் விதி விதிமீறல் சற்றும் இருக்கக் கூடாது ஆய்வு மேற்கொண்டு மீறலில் செயல்படும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள் இந்த இலவச சேவையை பயன்படுத்தி குடும்ப நலத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
    • கருக்கலைப்பு மாத்திரைகள் வினியோகம் செய்யும் மருந்தகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    திருப்பூர்:

    மருத்துவர்களின் பரிந்துரையில்லாமல் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்யும் மருந்துக்கடைகளினால் கர்ப்பிணிகளுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பான கருக்கலைப்பு முறைகள் குறித்து அரசு பயிற்சி அளித்துள்ளது.கருக்கலைப்பு மாத்திரைகள் பாதுகாப்பான முறையில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் சட்டத்துக்கு உட்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

    இந்த சேவைகள் குறித்த தகவல் மற்றும் கல்வி தொடர்பு சாதனங்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த இலவச சேவையை பயன்படுத்தி குடும்ப நலத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் கவுரி தெரிவித்துள்ளார்.

    மருத்துவரின் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி தெரிவித்துள்ளார்.அரசின் ஆணையை மீறி கருக்கலைப்பு மாத்திரைகள் வினியோகம் செய்யும் மருந்தகங்கள் மற்றும் போலி மருத்துவர்கள் மீது இணை இயக்குனர் தலைமையிலான மருத்துவக்குழு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த குற்றங்களுக்கு தண்டனை, அபராதம் விதித்தல், சிறை தண்டனை மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும். பாதுகாப்பான கருக்கலைப்பு குறித்த அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

    • நம் நாட்டில் மருத்துவ ரீதியான கருக்கலைப்பு மேற்கொள்ள சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
    • குழுவினர் விண்ணப்பங்களை ஆய்வு செய்து உரிய காரணங்கள் இருந்தால் கர்ப்பிணிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து உரிய முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

    திருப்பூர்:

    நம் நாட்டில் மருத்துவ ரீதியான கருக்கலைப்பு மேற்கொள்ள சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கென தனி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் ஒரே ஒரு வாரியம் செயல்படுவதால், உரிய நேரத்தில் விண்ணப்பங்களுக்கு முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது.

    மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கருக்கலைப்பு அனுமதி வழங்குவதற்கென தனி வாரியம், குழு அமைக்க சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    அதன்படி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தலைமையில், மகப்பேறு மற்றும் பெண்கள் நல டாக்டர், பச்சிளம் குழந்தைகள் நலன் நிபுணர், கதிரியக்கவியல், குழந்தைகள் இதய நலன் மற்றும் நரம்பியல் ஆகிய துறைத்தலைவர்கள், மனநல ஆலோசகர், மருத்துவமனை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாரிய குழுவினர் விண்ணப்பங்களை ஆய்வு செய்து உரிய காரணங்கள் இருந்தால் கர்ப்பிணிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து உரிய முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    • மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

    சிவகங்கை தேவஸ்தா னத்துக்கு பாத்தியப்பட்ட சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோவில் விவசாய நிலத்தில் 2 சமூக மக்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகின்ற னர். இந்த ஆண்டு கோவி லுக்கு சொந்தமான 70 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் சோளம், நிலக்கடலை பயிரிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அந்த நிலத்தில் அனுமதி பெறாமல் இளவட்ட மஞ்சு விரட்டு நடத்த ஏற்பாடு செய்துள் ளனர். எனவே அரசு அனுமதி பெறாமல் மஞ்சு விரட்டு நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில் ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு அரசாணை யில் இப்பகுதி இடம் பெறவில்லை. மஞ்சுவிரட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்றார்.

    போலீசார் தரப்பிலும் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த மனு மீது வேறு உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

    இதையடுத்து சிங்கம்பு ணரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் இள வட்ட மஞ்சுவிரட்டு நடை பெறாது என போலீசார் அறிவிப்பு செய்தனர். இந்த நிலையில் சிங்கம்புணரி கிழவன் கண்மாய் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் இளவட்ட மஞ்சு விரட்டு நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் சிலர் விளம்பரம் செய்து வருவதாகவும், அதை நம்ப வேண்டாம் எனவும் ேபாலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதனை மீறி மஞ்சுவிரட்டு நடத்த முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள் ளன. தற்போது அந்த பகுதியில் திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 900 சட்டவிரோத கருக்கலைப்பு.
    • மருத்துவமனையின் மேலாளர் மீனா மற்றும் வரவேற்பாளர் ரிஸ்மா கான் ஆகியோரும் கைது.

    கர்நாடகா மாநிலம், மைசூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்த மருத்துவர் மற்றும் உதவியாளர் ஆகியோர் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதை அடுத்து இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

    கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 900 சட்டவிரோத கருக்கலைப்புகளை செய்ததாகக் கூறப்படும் மருத்துவர் மற்றும் அவரது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநரை பெங்களூரு போலீஸார் கைதுள்ளனர்.

    மருத்துவர் சந்தன் பல்லால் மற்றும் அவரது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் நிசார் ஆகியோர் ஒவ்வொரு கருக்கலைப்புக்கும் 30,000 ரூபாய் வசூலித்ததாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

    இந்த மருத்துவமனையின் மேலாளர் மீனா மற்றும் வரவேற்பாளர் ரிஸ்மா கான் ஆகியோர் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், சந்தேக நபர்களை பிடிக்க அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×