என் மலர்

    நீங்கள் தேடியது "tiruttani"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருத்தணி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ. 1½ கோடி மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருத்தணியை அடுத்த கோரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாமோதரன், ருக்மாங்கதன். இவர்கள் சென்னை திருமுல்லைவாயில் ஜெயலட்சுமி நகரை சேர்ந்த தாமோதரனுடன் இணைந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

    இவர்களிடம் கோரமங்கலம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி ராஜூ உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்தனர். முனுசாமி ராஜூ கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை ரூ. 3½ லட்சம் கட்டி இருந்தார்.

    ஏலச்சீட்டு முடிந்ததும் அவருக்கு பணம் கொடுக்கப்படவில்லை. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டோருக்கும் பணம் வழங்கவில்லை.

    ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முனுசாமி ராஜூ ஏலச்சீட்டு மோசடி குறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    இதுபற்றி விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு போலீஸ் சூப்பிரண்டு சிபி. சக்கரவர்த்தி உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் அனுமந்தன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் ரூ. 1½ கோடி வரை ஏலச்சீட்டு மோசடி நடந்து இருப்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து ஏலச்சீட்டு நடத்திய தாமோதரன், ருக்மாங்கதன், வெங்கடராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். #Tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருத்தணி அருகே அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள ஈஸ்வரர் சிலை மற்றும் 2½ அடி உயரம் உள்ள பார்வதி சிலையை மர்ம கும்பல் கொள்ளையடித்து தப்பி சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிப்பட்டு:

    திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டையில் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜை முடிந்து கோவிலை பூசாரி பூட்டிச் சென்றார்.

    நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்து ஐம்பொன்னால் ஆன சுமார் 3 அடி உயரம் உள்ள ஈஸ்வரர் சிலை மற்றும் 2½ அடி உயரம் உள்ள பார்வதி சிலையை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.

    இன்று அதிகாலை கோவிலுக்கு வந்த பூசாரி ஐம்பொன் சிலைகள் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து பொதட்டூர் பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. சேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கோவிலுக்கு வந்த கொள்ளை கும்பல் ஐம்பொன் சிலைகளை மட்டும் தூக்கிச் சென்று உள்ளனர். எனவே மர்ம கும்பல் திட்டமிட்டு கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.#tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருத்தணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    திருத்தணி:

    திருத்தணியை அடுத்த அகுர் கிராமத்தில் 350 குடும்பங்கள் உள்ளன. கடந்த 5 நாட்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.

    அதனால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். நீண்ட தூரம் சென்று பெண்கள் குடங்களில் தண்ணீர் பிடித்து தேவையை சமாளித்தார்கள்.

    இதுபற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை 8 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருத்தணி-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தண்ணீர் கிடைக்கும் வரை அங்கிருந்து செல்ல மாட் டோம் என ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வரிசையாக நின்றன.

    தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஊராட்சி ஒன்றிய அலுவலர் லட்சுமணன், டி.எஸ்.பி. சேகர் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியலை அவர்கள் கைவிட்டனர். #Tamilnews
    ×