என் மலர்
செய்திகள்

மறியலில் ஈடுபட்ட பெண்கள்.
திருத்தணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல் போராட்டம்
திருத்தணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருத்தணி:
திருத்தணியை அடுத்த அகுர் கிராமத்தில் 350 குடும்பங்கள் உள்ளன. கடந்த 5 நாட்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.
அதனால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். நீண்ட தூரம் சென்று பெண்கள் குடங்களில் தண்ணீர் பிடித்து தேவையை சமாளித்தார்கள்.
இதுபற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை 8 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருத்தணி-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் கிடைக்கும் வரை அங்கிருந்து செல்ல மாட் டோம் என ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வரிசையாக நின்றன.
தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஊராட்சி ஒன்றிய அலுவலர் லட்சுமணன், டி.எஸ்.பி. சேகர் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியலை அவர்கள் கைவிட்டனர். #Tamilnews
திருத்தணியை அடுத்த அகுர் கிராமத்தில் 350 குடும்பங்கள் உள்ளன. கடந்த 5 நாட்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.
அதனால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். நீண்ட தூரம் சென்று பெண்கள் குடங்களில் தண்ணீர் பிடித்து தேவையை சமாளித்தார்கள்.
இதுபற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை 8 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருத்தணி-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் கிடைக்கும் வரை அங்கிருந்து செல்ல மாட் டோம் என ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வரிசையாக நின்றன.
தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஊராட்சி ஒன்றிய அலுவலர் லட்சுமணன், டி.எஸ்.பி. சேகர் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியலை அவர்கள் கைவிட்டனர். #Tamilnews
Next Story