என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thaipusam"

    • வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
    • தைப்பூசத் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

    தமிழ் நாடு முழுக்க இன்று தைப்பூச திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. காலை முதலே மாநிலும் முழுவதிலும் உள்ள முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தைப்பூச திருநாளை ஒட்டி அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வரிசையில், பிரதமர் நரேந்திர மோடி தைப்பூச திருநாளுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! புனிதமான தைப்பூசத் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்கட்டும். நல்ல ஆரோக்கியம், வெற்றி மற்றும் வளத்துடன் அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும்," என தெரிவித்துள்ளார்.

    • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடைபெறுகிறது.
    • அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    இந்நிலையில், தைப்பூச நிகழ்வை ஒட்டி அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளை காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகப் பெருமானுக்கு பூஜை நடக்கிறது.
    • மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்க உள்ளது.

    தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 1-ந்தேதி நாளை நடக்க இருக்கிறது. நாளை காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகப் பெருமானுக்கு பூஜை நடக்கிறது. காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறும். 9 மணிக்கு வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி திருக்கல்யாண நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.

    முதலில் அபிஷேகமும் அதன்பின் அலங்காரம் நடைபெறும். இதனை அடுத்து மண மகன், மணமகள் ஊர்வலம், எதிர்சேவை, சீர்வரிசை தட்டு கொண்டு வருதல் நடைபெறும். அதன்பின் மேடையில் திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து, ஊட்டி திருக்குந்த சப்பை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடக்கிறது.

    மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்க உள்ளது. பக்தர்கள் எடுத்து வரும் பால்குடங்கள் மூலம் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 5 மணிக்கு கோவில் அடிவாரத்தில் மகா சரவண ஜோதி ஏற்றப்படுகிறது.

    மதியம் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், இரவில் வள்ளியம்மாள்புரம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது. காலை முதல் மாலை வரை தொடர் அன்னதானமும் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்து வருகிறார்.

    • மலையின் உச்சியில் உள்ள குகையில் தான் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
    • பத்திரகாளி அம்மனுக்கு தனியே ஒரு சன்னதி உள்ளது.

    தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் மேற்கே வெள்ளைப் பட்டை தீட்டியது போல் ஒரு அழகிய மலைக்குன்று நம் கண்களுக்கு தென்படும். யானை படுத்திருப்பது போன்று காட்சியளிக்கும் அந்த மலைதான், தோரணமலை. யானைக்கு 'வாரணம்' என்ற பெயர் உண்டு. அந்த வகையில் 'வாரணமலை' என்று அழைக்கப்பட்ட இந்த மலை, காலப்போக்கில் மருவி, 'தோரணமலை' என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

    2 நதிகளுக்கிடையே ஒரு கோவில் இருந்தால் அது சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும். அந்த வகையில் தோரணமலையும் தனிச்சிறப்பு பெற்றது. தோரணமலைக்கு தென்புறம் மலையில் இருந்து பாய்ந்து வருகிறது ராமநதி, மலையின் வடபுறம் ஜம்பு நதி தவழ்ந்து வருகிறது.

     

    இந்த 2 நதிகளுக்கு இடையேதான் தோரண மலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த நதிகள் இரண்டும் தோரணமலைக்கு மாலையிட்டது போல் காணப்படுகிறது. இந்த மலைக்குச் சென்றாலே நம்மை அறியாமல் உடல் நம் சிலிர்ப்தை நாம் அறிய முடியும்.

    வழியில் சுயம்பாக அமைந்த சிவபெருமானை தரிசிக்கலாம். இந்த இடங்கள் எல்லாம் நல்லசுவாச காற்றும், அருமையான நறுமணம் தரும் மூலிகை காற்றும் நமது உடல் பிணியை போக்கும் வண்ணம் நம்மை தொட்டு செல்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை அழகையும் அதில் தவழ்ந்து வரும் மேகக்கூட்டங்களையும், ரசித்துக்கொண்டே உச்சியை அடையலாம்.

     

    சுனை

    மலையின் உச்சியில் உள்ள குகையில் தான் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கையில் வேல் ஏந்தி மயில் வாகனத்தோடு நின்ற கோலத்தில் அழகின் அரசனாக திகழ்கிறார் மூலவர் முருகப்பெருமான். இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். அதேபோல் முருகப்பெருமானின் வலதுபுறம்பாறையில் ஒரு கை மட்டுமே போகும் அளவுக்கு துவாரம் ஒன்று உள்ளது. அது சாதாரண துவாரம் அல்ல அதுவும் ஒரு சுனை தான். அதனுள்ளும் தண்ணீர் எப்போதும் இருக்கும். எதிரே ராமர் பாதம் உள்ளது. அதன் அருகே பத்திரகாளி அம்மனுக்கு தனியே ஒரு சன்னதியும் உள்ளது.

    அடிவாரத்தில் வல்லப விநாயகர், கன்னிமார் அம்மன், வியாழ பகவான் மற்றும் நவகிரகங்களுக்கு தனி சன்னதி, சிவபெருமான், சரஸ்வதி, மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளன. அரச மரத்தடியில் வீற்றிருக்கும் சப்த கன்னியரை வணங்கி வளையல்களும் தொட்டில்களும் பிராத்தனையாக கட்டினால் வேண்டுதல் நிறைவேறுகிறது. மலைக்கு செல்லும் படிக்கட்டு தொடங்கும் இடத்தில் தனிச் சன்னிதியில் பாலமுருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மலை ஏறி மூலவரை தரிசிக்கும் முன் இவரை வணங்கிச் செல்வது நலம் பயக்கும்.

     

    துன்பம் தீர்க்கும் தோரணமலை முருகனுக்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், வைகாசி விசாகம், சித்திரை திருநாளும் முக்கிய திருவிழாக்களாக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பாவம் போக்கும் புண்ணியமலை, யானை முகம் கொண்ட மலையின் மேல் வீற்றிருக்கும் இம்முருகனின் திருவீடு ஏழாம் படை வீடு என்று சொன்னால் மிகை அல்ல. பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் இருப்பதாலோ என்னவோ, இந்த முருகன் மிகச்சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறார்.

    பல சித்தர்கள் அரூபமாக இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இன்றும் சித்தர்கள் அரூபமாக உலாவும் இந்த மலையில் பல அபூர்வ மூலிகைகளும், நோய் தீர்க்கும் சுனைகளும், அரியவகை உயிரினங்களும் காணப்படுகின்றன. இங்கு வந்து சென்றாலே எல்லா வகை உடல்-மன வியாதிகளும் நீங்குவதாக பல அன்பர்கள் கூறுகிறார்கள்.

    இங்கு வந்து குகை முருகப்பெருமானை தரிசித்தால் திருமண வரம், குழந்தை பாக்கியம் உடனே கிடைப்பதாகவும் பலரும் கூறுகிறார்கள். கடுமையான மூட்டு வலி கொண்டவர்கள் கூட இங்கு வந்தால், நெட்டுக்குத்தாக அமைந்துள்ள இந்த மலை மீது ஏறத்துவங்கி விடுகிறார்கள் என்று ஆச்சர்யமாக சொல்கிறார்கள் இந்த ஊர் மக்கள். இங்கு வந்து எந்த வேண்டுதலை வேண்டிக் கொண் டாலும் அவை உடனே நிறைவேறி விடுவதாகவும், அந்த அன்பர்களே இந்த கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ள தாகவும் கூறுகிறார்கள். நலம் தரும் தோரணமலை தைப்பூச நாயகனை வணங்கி அருள் பெறலாம்.

    • முருகப்பெருமானுக்கு உரிய முக்கிய வேண்டுதல்களில் காவடி எடுப்பதும் ஒன்றாகும்.
    • லட்சக்கணக்கான பக்தர்கள், முருகனுக்கு விரதம் இருந்து பச்சை உடை தரித்து பாத யாத்திரையாக பழனிக்கு வருவார்கள்.

    தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை வழிபடும் மிக முக்கியமான தினங்களில் தைப்பூசத் திருநாள் ஒன்று. தை மாதத்தில் பூசம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் நாளை தைப்பூசத் திருநாளாக கொண்டாடுகிறோம்.

    தைப்பூச நாளில் முருகப் பெருமானை போற்றி வழிபட்டால் பல மடங்கு நன்மைகள் பெறலாம். இந்த ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசத் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. தைப்பூசத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

     

    முருகப்பெருமானுக்கு உரிய முக்கிய வேண்டுதல்களில் காவடி எடுப்பதும் ஒன்றாகும். இந்த காவடி எடுக்கும் முறை தோன்றிய தலமாக பழனி உள்ளது. பழனியில் தைப்பூச விழா 10 நாள் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அன்றையை தினம் லட்சக்கணக்கான பக்தர்கள், முருகனுக்கு விரதம் இருந்து பச்சை உடை தரித்து பாத யாத்திரையாக பழனிக்கு வருவார்கள்.

    தைப்பூச நாளில் அதிகாலையில் எழுந்து, வீட்டை சுத்தம் செய்து நீராடிவிட்டு, திருநீறு அணிந்து விரதத்தை தொடங்கலாம். பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைத்து, மலர்களால் அலங்கரித்து விளக்கேற்றி வழிபடலாம். கந்தசஷ்டி கவசம், திருமுருகாற்றுப் படை, திருப்புகழ் போன்ற முருகப் பெருமானுக்கு உகந்த பாடல்களை பாட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் 'ஓம் சரவணபவ' எனும் ஆறெழுத்து திருமந்திரத்தை உச்சரித்தபடியே இருப்பது நல்லது.

    காலை மற்றும் மதியம் இரு வேளைகளிலும் உணவு உண்ணாமல், பால், பழம் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும். அன்றைய தினம் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்வது சிறப்பு. முருகப்பெருமானை மனதார நினைத்து, அவன் அருள் வேண்டி விரதம் இருக்க வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

    தைப்பூச விரதத்தை 48 நாட்கள், 21 நாட்கள் அல்லது அன்று ஒரு நாள் மட்டும் என அவரவர் விருப்பத்திற்கேற்பவும், உடல்நிலைக்கு ஏற்பவும் மேற்கொள்ளலாம். சிலர், காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும், அலகு குத்தியும், பாத யாத்திரையாக சென்றும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். தீராத நோயால் அவதிபடுபவர்கள், முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்படி நோய் நீங்கி, உடல் ஆரோக்கியம் பெற்றதும் தைப்பூசத்தன்று காவடி எடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கிறார்கள்.

     

    27 நட்சத்திரங்களில், பூசம் நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பவர், குரு பகவான். எனவே, தைப்பூச நாளில் முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு குரு பகவானின் அருளும் சேர்ந்து கிட்டும்.

    தைப்பூச நாளில் தொட்டது துலங்கும் என்பார்கள். எனவே அன்றைய தினம், குழந்தைகளுக்கு காது குத்துதல், ஏடு தொடங்குதல், திருமணப் பேச்சுக்கள், புதிய தொழில் ஒப்பந்தம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். தைப்பூசத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கும், தீராத பகை மாறும், ஒற்றுமை அதிகரிக்கும், தொடங்கும் காரியத்தில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    • பார்வதி தேவி தனியாக ஆனந்த தாண்டவம் ஆடிய நாள் 'தைப்பூசம்' என்கிறார்கள்.
    • சிவாலயங்களில் தைப்பூசத்தன்று தெப்ப உற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை வழிபடும் மிக முக்கியமான தினங்களில் ஒன்று தைப்பூசத் திருநாள். தை மாதத்தில் பூசம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் நாளை தைப்பூசத் திருநாளாக கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில் முருகப் பெருமானை போற்றி வழிபட்டால் பல மடங்கு நன்மைகள் பெறலாம். தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை, தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா என உலகம் முழுவதும் பல நாடுகளில் சிறப்பிக்கப்படுகிறது.

    தைப்பூசத் திருநாளுக்கு பல்வேறு புராணக் காரணங்கள் சொல்லப்படுகிறது. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி போர் ஏற்பட்டது. இதில் தாரகாசுரன், சூரபத்மன் போன்ற அசுரர்கள், தேவர்களை சிறைப்படுத்தினர். இதனால் வருந்திய தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். இதையடுத்து, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் தான் முருகப்பெருமான். இவர் தேவர்களின் சேனாதிபதியாக இருந்து, அசுரர்களை அழித்து, தேவர்களை காத்தார். இதனைப் போற்றும் விதமாக தைப்பூசம் கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.

    ஞானப் பழம் வேண்டி, முருகனுக்கும் விநாயகருக்கும் போட்டி ஏற்பட்டது. அதில் சிவன் - பார்வதியை சுற்றி வந்து விநாயகர் ஞானப்பழத்தை பெற்றுக்கொண்டார். இதனால் கோபம் கொண்ட முருகப் பெருமான், பழனி மலையில் ஆண்டி கோலத்தில் வந்து நின்றார். அந்த தினமே 'தைப்பூசம்' என்றும் கூறப்படுகிறது. மேலும், அன்னை பராசக்தி, பழனி மலையில் ஆண்டி கோலத்தில் நின்ற முருகனுக்கு ஞானவேல் கொடுத்த தினமே 'தைப் பூசம்' என்ற கருத்தும் உள்ளது.

     

    சிவபெருமான், நடராஜராக தனித்து ஆனந்த தாண்டவம் ஆடிய திருநாள், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை. இந்த நடனத்தை பிரம்மா, மகாவிஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்காக சிவபெருமான், சிதம்பரத்தில் அரங்கேற்றினார். இந்த நடனத்தை ரசித்து பார்த்த பார்வதி தேவிக்கும், அதே போன்று நடனம் ஆட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

    அதன்படி, பார்வதி தேவி தனியாக ஆனந்த தாண்டவம் ஆடிய நாள் 'தைப்பூசம்' என்கிறார்கள். சிதம்பரத்தில் சிவன் - பார்வதியாக இணைந்து நடனம் ஆடியதும் இந்த தைப்பூசம் திருநாளில் தான் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த நாள், சிவன் மற்றும் அம்பிகை வழிபாட்டுக்கும் உகந்த நாளாக உள்ளது. அன்றைய தினம் சிவாலயங்களில் சிவபெருமானுக்கும், நடராஜருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    இந்த உலகத்தில் முதன்முதலில் நீர்தான் உருவானதாக கருதப்படுகிறது. அதன்பின்பு, அதில் இருந்து நிலம், உலக உயிர்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. அவ்வாறு, உலகம் உருவாகத் (நீர் உருவாக) தொடங்கிய தினமே 'தைப்பூசம்' என்பது நமது முன்னோர்களின் கருத்து. இதன் நினைவாக தான், பல சிவாலயங்களில் தைப்பூசத்தன்று தெப்ப உற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    முருகப்பெருமான், அகத்திய முனிவருக்கு தமிழ் கற்றுக்கொடுத்ததும், வள்ளி தேவியை மண முடித்ததும் இந்த தைப்பூச நாளில் தான் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு பல சிறப்புகளை கொண்ட தைப்பூசத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு தைப்பூசத் திருநாள், தை மாதம் 18-ந்தேதி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது.

     

    தைப்பூசத் நாளில் முருகப்பெருமானின் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதிலும் குறிப்பாக, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அறுபடை வீடுகளிலும் பழனியில் தான் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

    முருகப்பெருமானுக்கு உரிய முக்கிய வேண்டுதல்களில் காவடி எடுப்பதும் ஒன்றாகும். இந்த காவடி எடுக்கும் முறை தோன்றிய தலமாக பழனி உள்ளது. பழனியில் தைப்பூச விழா 10 நாள் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அன்றையை தினம் லட்சக்கணக்கான பக்தர்கள், முருகனுக்கு விரதம் இருந்து பச்சை உடை தரித்து பாத யாத்திரையாக பழனிக்கு வருவார்கள்.

    • நாளை மறுநாள் (1-ந்தேதி) தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது.
    • பக்தர்கள் வசதிக்காக இலவச பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படுகிறது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் திருத்தணி கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (1-ந்தேதி) தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது.

    இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள், சுவாமி தரிசனம் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், மலர் காவடி, மயில் காவடி சுமந்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமியை வழிபட உள்ளனர். மேலும் சண்முக கடவுளுக்கு காவடி மண்டபத்தில் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    தைப்பூச நாளில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருத்தணிக்கு வருவார்கள் என்பதால் மலைக் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    இதையடுத்து வாகன நெரிசலை தடுக்கும் வகையில் தைப்பூசத்தன்று ஆட்டோக்கள் மற்றும் பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மலைக்கு சென்று வர அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக இலவச பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • மதுரை - பழனி இடையே முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
    • காலை 6.00 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு அதே நாளில் காலை 8.30 மணிக்கு பழனி வந்தடையும்.

    பிப்ரவரி 1 அன்று பழனியில் தைப்பூச விழாவையொட்டி மதுரை சந்திப்புக்கும் பழனிக்கும் இடையே முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

    ரெயில் எண் 06145: மதுரை சந்திப்பு - பழனி முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரெயில் 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 06.00 மணிக்கு மதுரை சந்திப்பிலிருந்து புறப்பட்டு அதே நாளில் காலை 08.30 மணிக்கு பழனியை வந்தடையும்.

    மறுமார்க்கமாக ரெயில் எண். 06146: பழனி - மதுரை சந்திப்பு முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரெயில் 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிற்பகல் 2.25 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு அதே நாளில் மாலை 5.00 மணிக்கு மதுரை சந்திப்பை வந்தடையும்.

    இந்த ரெயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அன்றைய தினம் காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு பூஜை நடக்கிறது.
    • ஊட்டி திருக்குந்த சப்பை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடக்கிறது.

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே அகத்தியர், தேரையர் சித்தர்கள் வழிபட்ட தோரணமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 1-ந்தேதி நடக்க இருக்கிறது.

    அன்றைய தினம் காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு பூஜை நடக்கிறது. காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், 8 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். திருக்கல்யாணத்தை கணேச சிவாச்சாரியார், ஈஸ்வரன் சர்மா நடத்தி வைக்கின்றனர். அதனைத்தொடர்ந்து, ஊட்டி திருக்குந்த சப்பை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடக்கிறது.

    மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்க உள்ளது. பக்தர்கள் எடுத்து வரும் பால்குடங்கள் மூலம் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு கோவில் அடிவாரத்தில் மகா சரவண ஜோதி ஏற்றப்படுகிறது.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு முத்துமாலைபுரம் மறைந்த ஆதி நாராயணன்-சந்திராலீலா நினைவு மாலை நேர கட்டணமில்லா படிப்பக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், வள்ளியம்மாள்புரம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது. காலை முதல் இரவு வரை தொடர் அன்னதானமும் வழங்கப்படுகிறது.


    • தைப்பூச திருவிழா ஜனவரி 29-ந்தேதி தொடங்குகிறது.
    • விநாயகரிடம் தைப்பூச திருவிழாவுக்கு அனுமதி பெறப்பட்டது.

    பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். வெகுவிமரிசையாக நடக்கும் இந்த திருவிழா அடுத்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி தற்போதே பல்வேறு இடங்களில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர்.

    இந்தநிலையில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் வந்து சாமி தரிசனம் செய்வதற்கும், திருவிழாவுக்கு அனுமதி பெறுவதற்கும் மலைக்கோவில் ஆனந்த விநாயகர் சன்னதியில் நேற்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதையொட்டி ஆனந்த விநாயகருக்கு 16 வகை அபிஷேகம், பூர்ணாகுதி, கலச புறப்பாடு, கலச அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகரிடம் தைப்பூச திருவிழாவுக்கு அனுமதி பெறப்பட்டது.

    அதன்பிறகு மூலவர் சன்னதியில் தண்டாயுதபாணி சுவாமியிடம் அனுமதி பெறும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடைபெற்றது. இதேபோல் பக்தர்கள் நலனுக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு கிரிவீதியில் உள்ள வீரதுர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, பிரார்த்தனை நடைபெறுகிறது.

    • பிப்ரவரி 3-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • திருத்தேரோட்டம் பிப்ரவரி 4-ந்தேதி நடக்கிறது.

    தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு கோவிலுக்கு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

    இந்த நிலையில் 2023-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அடிப்படை வசதிகள் குறித்து கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தின்போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேதமாக முத்துக்குமாரசாமி தந்த பல்லக்கு, வெள்ளி ஆட்டுகிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் பிப்ரவரி 3-ந்தேதி இரவு 7 மணிக்குமேல் 8 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு மேல் வெள்ளி ரதத்தில் வள்ளி-தெய்வானை சமேதமாக முத்துகுமாரசாமி உலாவரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. முத்திரை நிகழ்ச்சியான தைப்பூச திருத்தேரோட்டம் 4-ந்தேதி நடக்கிறது.

    வழக்கமாக தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் டிசம்பர் மாத இறுதியில் இருந்தே வரத்தொடங்கி விடுவார்கள். மேலும் பொங்கல் பண்டிகை, தைப்பூச திருவிழாவின்போதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தைப்பூச திருவிழா ஜனவரி 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • திருவிழா தொடங்கும் ஒரு மாதத்துக்கு முன்னரே பாதயாத்திரை பக்தர்கள் வருகை தருவர்

    உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வௌிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இதில் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்து வரும் பக்தர்களே அதிகம். அதன்படி பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற ஜனவரி 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    வழக்கமாக திருவிழா தொடங்கும் ஒரு மாதத்துக்கு முன்னரே பாதயாத்திரை பக்தர்கள் வருகை தருவர். அதன்படி தற்போது பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை தொடங்கி உள்ளது. குறிப்பாக திண்டுக்கல் சாலை, பழைய தாராபுரம் சாலை வழியாக காவடி எடுத்து பக்தர்கள் வருகின்றனர். இதில் குழுவாக பாதயாத்திரை வருபவர்கள் வேன், லாரி போன்றவற்றில் சமையலுக்கு தேவையான பொருட்களை ஏற்றி வருகின்றனர். வரும் வழியில் சாலையோரம் தங்கி சமைத்து சாப்பிடுவதுடன், மரத்தடியில் ஓய்வு எடுக்கின்றனர்.

    அந்த வகையில் ஈரோடு, திருப்பூர் பகுதியில் இருந்து தாராபுரம், அலங்கியம், மானூர் வழியாக பழனி வரக்கூடிய பக்தர்கள் சாலையோரம் உள்ள மரத்தடியில் தங்கி உள்ளனர். பாதயாத்திரை குறித்து பக்தர்களிடம் கேட்டபோது, இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவுக்கு முன்பு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. எனவே முன்னதாக வந்து சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டு வந்தோம். தாராபுரம்- பழனி இடையிலான பாதயாத்திரை பாதை புதர் மண்டியும், சேதமடைந்தும் உள்ளது. அதை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ×