search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruthani"

    • வருகிற 24-ந்தேதி வரை தடை விதித்து கோவில் இணை ஆணையர் ரமணி உத்தர விட்டு உள்ளார்.
    • பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது.

    திருத்தணி:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடந்த 4-ந் தேதி இரவு திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் 12 மீட்டர் நீளத்திற்கு திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் வாகனங்கள் சென்றால் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளதால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மலை கோவிலுக்கு வாகனங்கள் செல்ல வருகிற 24-ந்தேதி வரை தடை விதித்து கோவில் இணை ஆணையர் ரமணி உத்தர விட்டு உள்ளார். இதனால் பக்தர்கள் அனைவரும் சரவண பொய்கை மலை படிக் கட்டுகள் வழியாக மட்டுமே சென்று சாமி தரிசனம் செய்து வருகி றார்கள். மலைப்பாதையில் வாகனங்கள் மேலே செல்லாதவாறு போலீசார் இரும்பு தடுப்பு கள் அமைத்து உள்ளனர். சேதம் அடைந்த மலைப் பாதை சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் வேக மாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மலைப்பாதை சீரமைப்பு பணிகளை அமைச்சர் காந்தி, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது.

    ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் தீபா, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன், நகர மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, துணைத் தலைவர் சாமி ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • திருத்தணி முருகன் கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது.
    • தணிந்து அமர்ந்த தலம் ஆதலின் திருத்தணிகை எனப் பெயர் அமைந்தது.

    திருத்தணி முருகன் கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது.

    இது தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது.

    முருகப் பெருமான் தேர்களின் துயரம் நீங்கும்பொருட்டு சூரபது மனுடன் செய்த பெரும் போரும்,

    வள்ளியம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறு போரும் முடிந்து,

    தணிந்து அமர்ந்த தலம் ஆதலின் திருத்தணிகை எனப் பெயர் அமைந்தது.

    தேவர்களின் அச்சம் தணிந்த இடம், முனியவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம்,

    அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும்,

    இதற்கு தணிகை என்று பெயர் அமைந்தது.

    ஆங்கில புத்தாண்டு மற்றும் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை என்பதால் திருத்தணி கோவிலில் காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.
    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில், இன்று அதிகாலை, 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், நடந்தது, தொடர்ந்து, மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.



    இரவு, 7.30 மணிக்கு வெள்ளிநாக வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, மாடவீதியில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆங்கில புத்தாண்டு மற்றும் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை என்பதால் திருத்தணி கோவிலில் காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால், பொது வழியில் 6 மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.
    ×