திருத்தணியில் தங்கதேர் உலா

திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து விடுவார்கள்.
திருத்தணியில்  தங்கதேர்  உலா
Published on

திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து விடுவார்கள்.

அன்று காலை சுமார் 5 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்துச் செல்வார்கள்.

மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படும்.

தொடர்ந்து காலை 10 மணி மற்றும் மாலை 4 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.

இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்திலும், இரவு, 7.30 மணிக்கு தங்கத்தேரிலும் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com