என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murugan"

    • 'மருதமலை மாமணியே முருகையா' பாடலை மாற்றி விஜயை புகழ்வதுபோல் பாடியதற்கு எதிர்ப்பு
    • நெல்லை மற்றும் சேலம் காவல் நிலையங்களில் புகார்

    தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா நேற்று பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகன், முருகன் பாடல் ஒன்றில் விஜய்யை உருவகப்படுத்தி பாடியிருந்தார். இந்த பாடலின்போது விஜய்யும் நடனமாடி இருந்தார். 

    விஜய்யின் இந்த நடனத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் முருகன் பாடலை இழிவுபடுத்தும் விதமாக பாடியதாகவும், அதற்கு விஜய் சைகை செய்து முருக கடவுளை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொண்டதாகவும் விஜய் மீதும், அக்கட்சி நிர்வாகி ராஜ்மோகன் மீதும், பாடகர் வேல்முருகன் மீதும் பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 

    மேலும் வழக்கறிஞர் குற்றாலநாதன் என்பவரும் நெல்லை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், முருகன் பக்தர்களால் போற்றப்படும் புனித பாடல் அரசியல் நோக்கத்திற்காக மாற்றிப் பாடப்பட்டதாகவும், இதனால் இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக திருநெல்வேலி மாநகர போலீசார் மனுவை பெற்றுக் கொண்டு, உரிய விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். 

    • திருவண்ணாமலையில் முருகன் அருணகிரி நாதருக்கு உபதேசம் செய்தார்.
    • முருகனிடம் நேரடி உபதேசம் பெற்றவர்கள் அகத்தியர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆவர்.

    வாழ்க்கை என்பது இன்றைய கால கட்டத்தில் ஒரு பெரிய சவாலாகவே இருக்கின்றது. எல்லோர் மனதிலும் எனக்கு மகிழ்ச்சியும் வேண்டாம். துக்கமும் வேண்டாம். பிரச்சினை இல்லாமல் ஒவ்வொரு நாளையும் கடந்தால் போதும் என்றுதான் இருக்கின்றது. ஆனால் அதனை கடப்பதற்கே ஆரோக்கியம், படிப்பு, உத்தியோகம், வருமானம் இவை அடிப்படை தேவை ஆகின்றன. இதில் குடும்பம், உறவுகள் இவர்களின் மீதுள்ள பாசமே நம்மை துரத்தி இயக்குகின்றது எனலாம். நூறு பிரச்சினைகளும், போராட்டங்களும் 24 மணி நேரமும் நம் உடலினையும், மனதினையும் ஆட்டிப் படைக்கின்றன. முயற்சி செய்தும் இலக்கை-அடிப்படை தேவையை அடைய முடியாத பொழுது அநேகர் நடமாடும் ஜீவன் அற்றவர்களாக இருக்கின்றோம். அந்நேரங்களில் மனிதனுக்கு ஒரு வடிகால் தேவைப்படுகின்றது. அந்த வடிகால்தான் இறைவன்.

    அவரை நீங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் எனலாம்

    குல தெய்வம் எனலாம். இஷ்ட தெய்வம் எனலாம்

    பிள்ளையார், முருகன், அம்மன் எனலாம்

    அல்லா எனலாம் இயேசு எனலாம்

    இன்னும் எத்தனையோ தெய்வங்களின் பெயரைச் சொல்லி வழிபடலாம்.

    பலர் தன் மீது நம்பிக்கை, தன்னம்பிக்கை என்ற உறுதியுடனும் இருக்கலாம்.

    இது ஒவ்வொரு தனி மனிதனின் விருப்பம் சுதந்திரம். அநேகர் அவரவர் பரம்பரை வழியில் பார்த்து வருவதால் அதனை தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.

    ஆக மனிதனுக்கு அவன் வாழ்க்கையினைக் கடக்க ஒரு துடுப்பு தேவையாக இருக்கின்றது. பிடிப்பு தேவையாக இருக்கின்றது. பொதுவாக நம் தமிழ்நாட்டில் முருக வழிபாடு என்பது காலம் காலமாய் இருக்கின்றது. சஷ்டி விரதமும், காவடி வழிபாடும் கோலாகலமாக காணப்படும் ஒன்று.

    'எங்களுக்கு பாதுகாப்பு கொடு, ஞானம் கொடு... என்று அவரவர் தேவைக்கேற்ப வேண்டுதல்களை வைத்து விரதம், மவுன விரதம், பாதயாத்திரை செய்து ஊர் குலுங்கும் விழாவாக நடத்துகின்றனர்.

    * முருகன் என்றாலே அழகுதான். ஓம் என்ற பிரணவத்தின் வடிவம்.

     

    * ஆறு பகைவர்களை அழித்தவர். (ஆணவம், கம்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்)

    * சரவணப் பொய்கையில் முருகன் ஆறு குழந்தைகளாய் பிறந்தார்.

    * தமிழ் குறிஞ்சி நிலக் கடவுள். எத்தனை பெயர்கள் இவருக்கு கார்த்திகேயா, கந்தா, சுப்ரமணியா, குமரா, குகா, சண்முகா, ஆறுமுகா....

    * பரம சிவன், பார்வதியின் புதல்வர், பிள்ளையாரின் இளைய சகோதரர்.

    * சிவபிரான் நெற்றிக் கண்ணில் உதித்தவர்.

    * கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர்.

    * ஆறு குழந்தைகளை பார்வதி தாயார் ஒரு சேர அணைக்க ஆறு முகங்கள் கொண்ட ஒருவரானார்.

    * என்றும் இளமையானவர்.

    * அவரது வேல் வெறும் ஆயுதம் மட்டுமல்ல. அறியாமை தடைகளை நீக்கும் சக்தி கொண்டவை. அன்னை சக்தியால் அதை பெற்றவர்.

    * மயில் வாகனம் கொண்டவர். மயில் காலில் பாம்பு. இவை ஆணவம், அழிவுப் பூர்வமான சிந்தனைகளை அழிக்கும் என குறிப்பிடுகின்றது.

    * குகர்- குகைகளிலும், குன்றுகளிலும் இருப்பவர்.

    * தந்தைக்கே உபதேசம் செய்த சாமிநாதன்.

    * போர் கடவுள். அசுரர்களை அழித்தவர்.

    * தமிழ் கடவுள்.

    * ஆறுபடை வீடுகளைக் கொண்டவர்.

    * தைப்பூச விழா மிகவும் சிறப்பு பெற்றது.

    * வட இந்தியாவில் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றவர்.

    * சிலோன், மலேசியா என ஏனைய நாடுகளிலும் இவர் கோவில்கள் உண்டு.

    * அறுபடை வீடுகள்

    * திருப்பரங்குன்றம்-தெய்வானை திருமணம் செய்த இடம்.

    * திருச்செந்தூர்-சூரபத்மனை அழித்து சூரசம்ஹாரம் செய்த இடம்.

    * பழநி-ஞானம் நிறைந்த இடம். சுவாமிமலை- ஓம் என்ற பிரணவத்தின் பொருளை தந்தைக்கு உபதேசித்த தலம்.

    திருத்தணி- அமைதி தரும் இடம்.

    * பழமுதிர் சோலை-அவ்வையார் ஆசி பெற்ற இடம்.

    கமலி ஸ்ரீபால்


     

    எத்தனை எததனையோ முருக பக்தர்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால் பழநியில் நவபாஷாண முருக சிலையினை உருவாக்கி ஸ்தாபித்த போகர் சித்தரை மறக்க முடியுமா? கி.மு. 200களில் வாழ்ந்தவர். இன்றும் பழநியில் ஜீவ சமாதியாக இருப்பவர். சீன நாட்டிற்க்கும் சென்றவர். பழநி நவபாஷாண சிலையின் அபிஷேக தீர்த்தம் மக்களின் நோய்களை போக்க வல்லது. இறைவன் மார்பில் இரவில் சந்தனம் சாற்றி மறுநாள் அதனையும் பிரசாதமாக வழங்குவர். இதே போன்று அவர் மற்றொரு நவ பாஷாண முருகர் சிலையினை உருவாக்கி உள்ளார் என்றும் கூறப்படுகின்றது. சிறந்த ஆன்மீக, தியான முறைகளை அருளியவர்.

    அருணகிரி நாதரை அறியாத ஆன்மீக வழி மக்கள் குறைவு எனலாம். தன் வாழ்வினை எண்ணி வருந்தி கோவில் உச்சியில் இருந்து விழுந்து தற்கொலை செய்ய முயன்ற பொழுது அவரை தடுத்தாட் கொண்டவர் முருகபிரான். பின்னர் தன் வாழ்நாள் முழுவதும் முருகனைப் பாடியே முக்தி அடைந்தார். திருப்புகழினை பாடியவர். 15-ம் நூற்றாண்டினைச் சார்ந்தவர். ஆறு எழுத்து மந்திரமான 'சரவண பவ' அருணகிரிநாதரின் நாக்கில் முருகன் வேல் கொண்டு எழுதினார் என்றும் "ஓம்" என எழுதினார் என்றும் கூறப்படுகின்றன.

    இவருக்கு பல இடங்களில் முருகர் காட்சி அளித்துள்ளார். திருவண்ணாமலையில் முருகன் அருணகிரி நாதருக்கு உபதேசம் செய்தார்.

    திருச்செந்தூரில் நடன தரிசனம் தந்தார்.

    வயலூரில் மயில் மீது அமர்ந்து காட்சி தந்தார். மேலும் சுவாமிமலை, திருவிடைக்கழி என பல இடங்களில் முருகனை கண்ணார கண்டுகளித்தவர் அருணகிரிநாதர். முருகனிடம் நேரடி உபதேசம் பெற்றவர்கள் அகத்தியர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆவர்.

    மன்னர் ஒருவருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்ட போது அருணகிரி நாதர் கிளியாக மாறி தேவலோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வந்து மன்னரின் கண் பார்வையினை மீட்டார் எனவும் கூறப்படுகின்றது.

    இவரது திருப்புகழ் பாடல்களை ஒரு முறையாவது பொருள் அறிந்து படித்துதான் பார்க்கலாமே.

    அது போலவே 'கந்தர் சஷ்டி கவசத்தினை' அன்றாடம் சொல்ல சிறு வயது முதலே குழந்தைகளை பழக்கலாமே.

    இது போலத்தான் போகர் சித்தரும், மாபெரும் சித்தர் என்பதனை அறிந்தோம். ரசவாத ரகசியங்கள், மருத்துவ நுட்பங்கள், போகர்-1000 போன்ற நூல்களை படித்தால் பல அரிய விஷயங்களைக் கற்கலாம். மேரு மலையே சுற்றி வந்தவர். செவ்வாய் ஆதிக்கம் பெற்ற பழனிக்கு செல்லும் பக்தர்கள் முருகனை தரிசித்து, செவ்வாய் ஆதிக்கம் கொண்ட போகர் சமாதியிலும் வணங்கி வருவர்.

    பாம்பன் சுவாமிகள்

    பாம்பன் ஸ்ரீ மத் குமரகுரு சுவாமிகள் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான், ஞானி. 666 பாடல்களை சைவ சமயம், முருக வழிபாட்டில் பாடியுள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள இவரது ஜீவ சமாதி உலகப் பிரசித்தி பெற்றது.

    சண்முக கவசம், குமாரஸ்தவம், பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் என்ற பாடல்களை இயற்றியவர். 1929ல் ஜீவசமாதி அடைந்தவர். 'வேலும், மயிலும் துணை'. இது இவரது மந்திரச் சொல். அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் தங்க வேலினை வருடம் ஒருமுறை மலை சுனைக்கு எடுத்துச் சென்று அபிஷேகம் செய்து மேலே காசி விஸ்வநாதர் கோவிலில் பூஜை செய்து கொண்டு வருவர். மேள தாளங்களுடன் மிகச் சிறப்பாக நடைபெறும் இந்த வேல் பூஜை.

    பாம்பன் சுவாமிகளுக்கு 1920-ல் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் எதுவும் செய்ய இயலவில்லை என்று வருந்திய நிலையில் அவரது பக்தர் 'சண்முக கவசத்தினை' தினமும் 11 முறை படித்தார். 11-ம் நாள் அவரது கனவில் இரு மயில்கள் வந்து நடனமாட, வேல் சுவாமிகளின் கால்களை சீர் செய்ய, முருக பிரான் சுவாமிகளின் அருகில் அமர்ந்திருப்பதனைக் கண்டார். பாம்பன் சுவாமிகளின் கால்களும் முழுமையாய் குணமடைந்து இருப்பதனைப் பார்தார். என்ன ஆச்சர்யம்! மறுநாள் மருத்துவமனை சென்ற பொழுது அவர் கனவில் கண்ட அனைத்தும் உண்மையிலேயே நடந்து இருந்தது. இன்றும் இதற்கான சாட்சியங்கள் உள்ளன.

    பாம்பன் சுவாமிகள் கடுந்தவம் புரிந்த காலத்தில் முருகன், அருணகிரி நாதர், அகத்திய சுவாமிகள் ஆகிேயார் ஒரு சேர காட்சி அளித்தனர். அவர் தவம் செய்த காலத்தில் அவரை நெருங்கிய துஷ்ட சக்திகளை அவரது 'தண்டம்' துரத்தியது. இன்றும் திருப்பரங்குன்றம் பாம்பன் சுவாமிகளின் ஆலயத்தில் அத்திரு தண்டம் பூஜிக்கப்படுகின்றது.

    தைப்பூசம்

    இந்த விழா உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்களால் கொண்டாடப்படும் விழா. கோலா கலமான விழா. ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் என்று கொண்டாடப்படும் விழா. இம்முறை2026-ல் நாளை (1-ந்தேதி) அன்று வருகின்றது. ஆனால் அதற்கான ஆரம்ப வேலைகள் தை மாதத்திற்கு முன்பே ஆரம்பித்து விடும். பலர் 48 நாள் விரதம் எடுப்பர். கடும் விரதம் எடுப்பவர்களும் உண்டு. பலர் 21 நாள், 7 நாள் என்றும் விரதம் இருப்பர். விரத கோட்பாடுகளை பக்தியுடன் கடைபிடிப்பர். சிலர் பால், பழம் மட்டுமே அருந்துவார்கள். காவடி எடுப்பது, பால் குடம் ஏந்தி செல்வது என பல வேண்டுதல்கள் இருக்கும். அலகு குத்துவார்கள். பூசம் நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்த தைப்பூசத்தில்தான் அகிலமே தோன்றி யது என்பவரும் உண்டு. பழநியில் இந்த விழா கூடுதல் சிறப்புடன் நிகழும்.

    வறுமை நீங்க, வேண்டுதல்களின் காணிக்கையாக, பில்லி சூனியம் போன்ற தீய சக்திகள் நீங்க இந்நாளில் சிறப்பு பூஜைகளும், விழாக்களும் நடக்கின்றன. சிவ, பார்வதி ஆனந்த நடனம் நிகழ்வது இந்நாளில் என்ற கருத்து உண்டு. குரு பகவான் வழிபாடும் நடைபெறும். வணங்கி வளம் பெறுவோம்.

    • டிசம்பர் மாதம் வந்தாலே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள்.
    • இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வரவேற்பை பெற்றுள்ளன.

    உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று, கிறிஸ்துமஸ். டிசம்பர் மாதம் வந்தாலே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

    அவ்வகையில் மதுரை புனித மரியன்னை பேராலயத்தில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது

    கிறிஸ்மஸ் விழாவில் மீனாட்சி அம்மன் வேடத்தில் சிறுமியும், திருப்பரங்குன்றம் முருகன் வேடத்தில் சிறுவனும் பங்கேற்று கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வரவேற்பை பெற்றுள்ளன.

    • கவலைகளுக்கான காரணம் என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான காரணங்கள்.
    • பக்குவம் வருவதற்கு துணை செய்வது இந்த கந்த சஷ்டி விரதம்.

    முருகப் பெருமான் அருளைப் பெறுவதற்கு வைகாசி விசாகம், தைப்பூசம், மாத சஷ்டி, கிருத்திகை என எத்தனையோ விரதங்கள் இருப்பினும் அதற்கெல்லாம் மணி மகுடம் போல இருப்பது மகா கந்த சஷ்டி விரதம். ஆம்! தீயவை அழியும் நல்லது நிலைத்திருக்கும் என்பதற்கு உதாரணமாக சூரபதுமன் அழிந்து தேவர்கள் வாழ்வு பெற்ற அந்த நிகழ்வினை நாம் சூரசம்ஹாரம் என்று கொண்டாடி வருகிறோம்.

    தற்போது நாமும் சூரபதுமன் போன்ற கொடிய, தீய குணங்களால் சூழப்பட்டிருக்கிறோம். அதனைப் போக்குவதற்கு ஒரே வழி கந்தக் கடவுளிடம் சரணடைவதே. அதிலும் இந்த மகா கந்த சஷ்டி விரதம் என்பது நமது அகப் பகை மற்றும் புறப் பகைகளை அடியோடி நீக்கி நமக்கு நன்மை தரக்கூடியதாக அமைந்துள்ளது.

    மகா கந்த சஷ்டி எல்லா முருகப் பெருமானின் ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இருப்பினும் திருச்செந்தூரில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவதற்கான காரணம் முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்வதற்கு முன் இங்கு படை வீடு அமைத்து தங்கினார். சூரனை சம்ஹாரம் செய்த பின்னரும் பஞ்ச லிங்கங்கள் அமைத்து தனது தந்தையான சிவபெருமானை இத்தலத்தில்தான் முருகப்பெருமான் வழிபட்டார். எனவே திருச்செந்தூரில் நடைபெறும் சூர சம்ஹாரம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

    உலகெங்கும் இருந்து பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து கடலில் நீராடி, பின் முருகன் வேலினால் உண்டாக்கிய நாழிக்கிணற்றிலும் நீராடி, பச்சை நிற ஆடை உடுத்தி, 6 முதல் 7 நாட்கள் தங்கி விரதம் இருந்து தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறப் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பச் செல்கிறார்கள்.

     

    தேச மங்கையர்க்கரசி

    முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு அடுத்த நாளில் தன்னிடம் இருந்து பிரிந்திருந்த இச்சா மற்றும் கிரியா சக்தியான வள்ளி, தெய்வானையை மணம் புரியும் நாளாகிய 7-ஆம் நாளில் அதாவது வள்ளி தேவசேனா திருக்கல்யாண தினத்தில் விரதம் நிறைவு செய்வது மிகவும் சிறப்பானது என்று எனது குருநாதர் வள்ளல் வாரியார் சுவாமிகள் சொல்லுவார்கள். ஏனென்றால் திருமணக் கோலத்தில் வள்ளி தெய்வானையுடன் அருள் புரியும் விதமாக முருகப் பெருமான் காட்சி தரும் நேரத்தில் நாம் எதற்காக விரதம் இருந்தோமோ அது 100% நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    மகா கந்த சஷ்டி விரதமானது கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் என உறுதியிட்டு சொல்லும் அளவுக்கு நற்பலன்களை அள்ளித்தரும் விரதம். முருகன் என்றாலே இளமை. இளமை என்றால் அழகு. புற அழகல்ல அக அழகு. மனதில் கவலை இல்லாமல் இருக்கும்போதுதான் அகமும், புறமும் அழகாக இருக்கும்.

    கவலைகளுக்கான காரணம் என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான காரணங்கள். வேலை, திருமணம், குழந்தைப்பேறு, வறுமை, நோய் போன்ற பல காரணங்களால் பலரும் அல்லல் உற்று மனக்கவலைகளுடன் வாழ்கின்றனர். அந்த மனக் கவலைகளை தீர்க்கும் மாமருந்தே முருகன்தான். முருகனிடம் நம் கவலைகளை எல்லாம் சொல்லி சரணாகதி அடைந்து இந்த கந்த சஷ்டி காலத்தில் வழிபட்டால் அனைத்து நலன்களும் கிடைக்கும்.

    எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ

    சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்

    கந்தா, கதிர் வேலவனே, உமையாள்

    மைந்தா, குமரா, மறை நாயகனே.

    குழந்தைகள் எவ்வளவு வளர்ந்தாலும் தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பெற்றோரின் இல்லம் தேடி வந்து தங்கி இருந்து தன் பிரச்சனைகளை சொல்லி அதற்கான தீர்வைக் கண்டு திரும்புவது பிள்ளைகளின் வழக்கம். நமக்கு முருகனே தாயும், தந்தையும்; நாம் அனைவரும் அவருக்கு பிள்ளைகள்; அவன் உறையும் இடமே நாம் கதி என செல்லும் வீடு. இந்த சஷ்டி காலத்தில் செந்திலம்பதி என்ற வீட்டில் வந்து தங்கியிருந்து தனது துன்பங்களை எல்லாம் அவனிடம் சொல்லி அதைத் தீர்க்க வழியும் கண்டறிந்து திரும்பும் பிள்ளைகளாகவே நாம் இன்றும் வாழ்ந்து வருகிறோம். முருகனின் பதம் பணியாமல் வாழ்பவர்களை அருணகிரிப் பெருமான் கடுமையாகவே சாடுகிறார்.

    'கோழிக்கொடியன் அடிபணியாமல் குவலயத்தே

    வாழக் கருதும் மதியிலிகாள் உங்கள் வல்வினைநோய்

    ஊழின் பெருவலி உண்ண ஒட்டாது உங்கள் அத்தம் எல்லாம்

    ஆழப்புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப் பிறகே?'

    முருக வழிபாடு என்பது அருணகிரிநாதரைப் பொறுத்தவரை ஒரு சாதாரண வழிபாடு மட்டுமல்ல. முருகனே எல்லாம் என்ற சரணாகதி நிலை வேண்டும் என்கிறார் அருணகிரிநாதர். அந்த பக்குவம் வருவதற்கு துணை செய்வது இந்த கந்த சஷ்டி விரதம்.

    தங்கத்தை ஆபரணம் ஆகும் வரை அடித்து துன்புருத்தினால்தான் அது விலை மதிப்பு பெறும். அடிக்கு பயந்து அது மண்ணிலேயே இருந்து விட்டால் அதன் மதிப்பு இழந்து போகும். முருகனை வழிபட்டால் சோதிக்கின்றானே என்று சொல்பவர்களுக்குத்தான் இந்த வரிகள். சோதனைக்கு உட்பட்டால்தான் மாணவன் மருத்துவன் ஆகலாம், விஞ்ஞானி ஆகலாம், பொறியாளர் ஆகலாம். சோதனையைத் தவிர்க்க நினைப்பவன் அறிவற்ற வனாகவே இருப்பான்.

    வருவது வரட்டும், வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை. குகனுண்டு குறைவில்லை என்று சொல்லி கந்தன் கழலடியே கதி என்று நம்பி வருவோரை அவன் வாரி அனைத்து அருளை மாரி எனத் தருவதில் செந்தில் ஆண்டவர் வல்லவர். தேவர் சிறை மீட்ட வேலன் நம்மையும் காத்து அருளும் பாலன். இந்த சஷ்டி காலத்தில் அவரை வழிபட்டு எல்லோரும் எல்லா நலனும் பெற்று மகிழலாம்.

    • உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான்.
    • எனது நம்பிக்கையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது.

    மதுரையில் பிரமாண்டமாக முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரைக்கும் முருகனுக்கும் நெருக்கம் அதிகம். என்னை மதுரைக்கு வரவழைத்தது முருகன். என்னை வளர்த்தது முருகன். எனக்கு துணிச்சல் தந்தது முருகன்.

    எனது நம்பிக்கையை கொண்டாட உரிமை உள்ளது. அதை நீங்கள் கேள்வி கேட்க முடியுமா? என் மதத்திற்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவமரியாதை செய்யாதீர்கள். இந்துக்களை சீண்டி பார்க்காதீர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது.

    உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன். அவருக்காக நாம் இங்கு வந்துள்ளோம். நமது அறம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆழமாக இருந்தது. இனியும் இருக்கும்.

    ஒருவன் இந்துவாக இருந்தாலே பிரச்சினை. மதவாதி என சொல்கிறார்கள். மாநாட்டை உ.பி.யில் நடத்தலாமே என கேட்கிறார்கள். இந்த சிந்தனை மிக மிக ஆபத்தானது.

    என் கடவுளை கேலி செய்துவிட்டு அதை மதசார்பின்மை என்கிறார்கள். அரசமைப்பு கொடுத்த கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி இவ்வாறு பேசுகின்றனர்.

    முருக பக்தர்கள் ஒரு பார்வை பார்த்தாலே போதும். நம் கடவுளை திட்டும் கூட்டம் காணாமல் போகும். நம்மை காப்பாற்றும் முருகனை நாம் காப்பாற்றத் தேவையில்லை. ஆனால் நன்றியை காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்துக்களின் வாழ்வியல் முறைக்கு பிரச்சனை.
    • மொழியும், ஆன்மீகமும், இலக்கியமும் சேர்ந்ததுதான் தமிழ்.

    மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

    இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதால் சிலருக்கு பிரச்னை. நமது வாழ்வியல் முறையை தொந்தரவு செய்து பஹல்காமில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    எனது வாழ்வியல் முறைக்கு பிரச்னை வந்தால் எழுந்து நிற்பேன்; அடிப்பேன். இந்து என்பதற்காக நமது கடைகோடி தொண்டர்கள் கொல்லப்படுகிறார்கள்.

    மொழியும், ஆன்மீகமும், இலக்கியமும் ஒன்றாக இருக்கும் பெருமை தமிழுக்கு உண்டு; கந்த சஷ்டி கவசத்தில் அறிவியல், விஞ்ஞானம் உள்ளது.

    5,400 ஆண்டுகள் பழமையானவன் தமிழன். அந்த பழமையோடு வாழ விடுவார்களா? செல்பி கேட்டால் ஒரு அரசியல் தலைவர் திருநீறை அழிக்கிறார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அன்னதானம் வழங்கினார்.
    • முருகன் படத்திற்கு அதிமுக தொட்டினார்கள் பூஜை செய்தனர்.

    தமிழ்நாட்டின் பல்வேறு முருகன் கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

    இதனையொட்டி மதுரையில் பொதுமக்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அன்னதானம் வழங்கினார்.

    அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த முருகன் படத்திற்கு அதிமுக தொட்டினார்கள் பூஜை செய்தனர். பூஜையின்போது முருகனுக்கு அரோகரா என தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது செல்லூர் ராஜுவுக்கு அரோகரா என தொண்டர் ஒருவர் கோஷம் எழுப்பவே சட்டெனெ செல்லூர் ராஜு கோவம் அடைந்து இப்படி எல்லாம் கோஷமிட கூடாது என்று தொண்டரை கடிந்து கொண்டார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • மந்திரங்களும், பதிகங்களும் தெரியவில்லையே என்று மனம் வருந்த வேண்டாம்.
    • அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும் என்பது நம்பிக்கை.

    இறை வழிபாடு என்பது நம் மனதை ஒருநிலைப்படுத்தும். நம் வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து நம்மை மீட்டெடுக்கும். இதை உணர்ந்தவர்கள் இறை வழிபாட்டையும் விரத நாட்களையும் எப்போதும் தவறவிடுவதில்லை. அதிலும் முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம் என்றால் சொல்லவா வேண்டும்.

    இந்த ஆண்டு வைகாசி விசாகம் நாளை வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க வைகாசி விசாகம் நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழா தான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்! விரும்பியது நடக்கும்! அதனால் தான் திருசெந்தூர் முதல் தேசமெங்கும் உள்ள முருகனின் திருத்தலங்களில் வைகாசி விசாக விழாவை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.



    நினைத்தது நடக்க வேண்டும், நம்முடைய வேண்டுதல்களும், வழிபாடுகளும் இரு மடங்கு பலனை அள்ளி தர வேண்டும் என்றால் வைகாசி விசாக நாளில் விரதமிருந்து, முருகப் பெருமானை மனம் உருக வழிபட வேண்டும். அவருக்குரிய மந்திரங்கள், பதிகங்கள் முதலானவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.

    மந்திரங்களும், பதிகங்களும் தெரியவில்லையே என்று மனம் வருந்த வேண்டாம். எளிமையாக 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையோ அல்லது முருகனுக்குரிய 'ஓம் சரவண பவ' என்ற ஆறெழுத்து மந்திரத்தையோ உச்சரித்தால் போதும். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம். அனைத்து பலன்களும் உங்களை வந்து சேரும்.

    விசாகத் திருநாளில் முருகனின் சன்னதிக்கு சென்று வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும். திருத்தலத்திற்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டு பூஜையறையில் முருகப்பெருமானின் படத்தை வைத்து அரளி, செம்பருத்தி முதலான மலர்களைக் கொண்டு அலங்கரிக்கலாம். சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியமாக செய்து விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். முடிந்தால், ஏழை, எளிய மக்களுக்கு எலுமிச்சை சாதம் வழங்குங்கள். குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு ஆபத்துக்கள் அகலும். அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும் என்பது நம்பிக்கை.

    கடன் உள்ளிட்ட கவலைகளில் இருந்தும் வழக்கு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்தும் நம்மை விடுவித்து அருளும் முருகனை

    வைகாசி விசாக நட்சத்திர நாளில் வணங்கி வளம் பெறுவோம்.

    • வெற்றிலை மற்றும் பாக்கு மகாவிஷ்ணு மற்றும் பார்வதி தேவியின் மறு உருவம் எனவும் கூறுவர்.
    • வெற்றிலை தீபத்தை தொடர்ச்சியாக 9 வாரங்கள் ஏற்ற வேண்டும்.

    தமிழ்க் கடவுளான முருகனை மனம் உருகி வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் அதிகளவில் உள்ளது. வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் முருகனுக்கு மிகவும் பிடித்த நாளாக உள்ளது செவ்வாய் கிழமை. செவ்வாய்க்கிழமையில் வெற்றிலை தீபம் ஏற்றி முருகனை வழிபட்டால் முருகன் அகமகிழ்ந்து நாம் கேட்ட வரங்களை அள்ளிக் கொடுப்பான் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    வெற்றிலைக்கு மட்டும் அப்படியென்ன மகிமை என்று கேட்டால், "வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும் காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக வரலாறு சொல்கிறது" அந்த அளவிற்கு வெற்றிலையானது புராண காலங்களை எல்லாம் தாண்டி தற்போதும் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற ஒரு புனிதப் பொருள் ஆகும்.

    அனைத்து செடிகளும் மொட்டாகி பூவாகி காயாகி பழமாகும் மீண்டும் அதிலிருந்து விதை கிடைக்கும். ஆனால் வெற்றிலை மட்டும் ஒரே ஒரு உருவம் எடுத்தாலும் அது கடவுளையே சேரும். வெற்றிலை மற்றும் பாக்கு மகாவிஷ்ணு மற்றும் பார்வதி தேவியின் மறு உருவம் எனவும் கூறுவர்.

    இப்படிப்பட்ட ஒரு தனி சிறப்பு மிகுந்த வெற்றிலையை தீபமேற்றி வழிபட வெற்றிகள் வந்து சேரும். வெற்றியில் தீபம் ஏற்றுவது என்பது ஒரு வழிபாட்டு முறையாகும்.

    வெற்றிலை தீபத்தின் நன்மைகள்:

    நெய் தீபம், எலுமிச்சை தீபம் போன்ற தீபங்களை ஏற்றுவதோடு முருகனுக்கு மிகவும் பிடித்த வெற்றிலை தீபத்தை தொடர்ச்சியாக 9 வாரங்கள் ஏற்ற வேண்டும். மனம் உருகி வெற்றிலை தீபம் ஏற்றி முருகனை வழிபடும் போது நினைத்த காரியங்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம். குறிப்பாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் முதல் திருமணம் விரைவில் கைக்கூட வேண்டும் என்று நினைப்பவர்கள் வெற்றிலை தீபம் ஏற்றுவதால் விரைவாக அனைத்தும் கைக்கூடும்.

    வெற்றிலை தீபம் ஏற்றும் முன் கட்டாயம் செய்ய வேண்டியது:

    வெற்றிலை தீபம் ஏற்றுவதற்கு முன்னதாக பூஜை அறையை நன்கு சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். பனீர் தெளித்து சுத்தம் செய்யும் போது வாசனை நமது மனதை அமைதியாக்கும்.

    வெற்றிலை தீபத்தை எப்போது ஏற்றினாலும் நுனி இல்லாத வெற்றிலையைப் பயன்படுத்தக்கூடாது. மேலும் வெற்றிலையில் காம்போடு விளக்கேற்றக்கூடாது.

    வெற்றிலை தீபம் ஏற்றும் முறை:

    முதலில் 12 வெற்றிலைகளை எடுத்துக்கொண்டு முதல் ஆறு வெற்றிலைகளை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து மயில் தோகை போல் வட்டமாக அடுக்கி வைக்கவேண்டும்.

    அடுக்கி வைக்கப்பட்ட வெற்றிலைக்கு நடுவில் தீபமேற்றி வழிபட வேண்டும். வீட்டில் சிறிய வேல் இருந்தால் அதையும் வைத்துக் கொள்ளலாம். பிறகு அதில் இரண்டாவது ஆறு வெற்றிலையில் காம்புகளை கிழித்து காம்புகளை எல்லாம் விளக்கிலிருக்கும் நல்லெண்ணெயில் போட்டு விடவேண்டும் விளக்கு எரியும் பொழுது ஒரு நல்ல நறுமணம் வீசும். இவ்வாறான வெற்றிலை வழிபாடு நல்ல பலன்களைத் தரும்.

    வெற்றிலை தீபம் எப்போது ஏற்ற வேண்டும்?

    முருகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த நாள் செவ்வாய் கிழமை. இந்த நாளில் வெற்றிலை தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. எனவே செவ்வாய் ஹோரையில் விளக்ககேற்ற வேண்டும். அதாவது அதிகாலை 3 மணியிலிருந்து 4 மணி வரையும், காலை 6 மணியிலிருந்து 7 மணி வரையும், மதியம் 1 மணியிருந்து 2 மணி வரையும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையும் விளக்கேற்றுவது நல்லது.

    • இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
    • ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் இருக்க வேண்டும்.

    முருகனை வழிபட செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள், கிருத்திகை நட்சத்திரம் சஷ்டி திதி உகந்தவை. கந்த சஷ்டி, தைப்பூசம் நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது. வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கு உகந்தது. வெள்ளிக்கிழமைகளில் முருகனை வழிபட்டால் இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம்.

    வேண்டுதல் நிறைவேற வெள்ளிக்கிழமை அன்று காலையில் நீராடி முருகன் படத்திற்கு மாலை அணிவித்து விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் எந்த கெட்ட சொற்களையும் பேச கூடாது. கந்தசஷ்டி கவசம், கந்த புராணம் படிக்க வேண்டும். ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகில் உள்ள சிவன் கோவில் சென்று சிவபெருமானுக்கும், முருகனுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வடக்கு புற வெளிபிரகாரத்தில் மூலவர் கும்ப விமான தரிசனம் காணும் வகையில் ஒரு துவாரம் உள்ளது. அதன் வழியாக பார்த்தால் மூலவர் கும்ப விமானத்தை காணலாம். இங்கு அமைக்கப்பட்ட படியில் ஏறி நின்று பக்தர்கள் மூலவரின் கும்ப கலசத்தை பார்த்து வணங்கி செல்கிறார்கள்.

    • சுப்பிரமணிய சுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 30-ந்தேதி சண்முகார்ச்சனை நடைபெறுகிறது.

    கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவில் உள்ளது. இது 7-வது படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இக்கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடந்தது. இதை தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டது.

    பின்னர் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வேடர் அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி காட்சிஅளித்தார்.

    இதை அடுத்து காலை 7 மணி அளவில் விநாயகர் பூஜை, புண்யாகம், விழா நடைபெற இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல் முளைப்பாளிகை இடுதல் ஆகியவை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து கருவறையை அடுத்துள்ள மகா மண்டபத்தில் சுப்பிமணியசுவாமி வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளினார். இதை அடுத்து சுப்பிரமணிய சுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து அர்த்தமண்டபத்தில் யாகசாலை பூஜை நடந்தது. கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முருகப் பெருமானை வேண்டி காப்பு கட்டிக் கொண்டனர். கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வருகிற 29-ந் தேதி வரை தினமும் காலையிலும் மாலையிலும் அர்த்தமண்டபத்தில் யாகசாலை பூஜை, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரம் நடைபெறுகிறது.

    30-ந் தேதி காலை 6மணி முதல் 7.30 மணி வரை சண்முகார்ச்சனை நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் 12 மணி வரை உற்சவர் சண்முகார்ச்சனை நடக்கிறது.மதியம் 3 மணிக்கு அன்னையிடம் வேல் வாங்குதல் மற்றும் சூரசம்காரத்திற்கு எழுந்தருளுதல், சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்கார விழா நடைபெறுகிறது. 31-ந் தேதிகாலை 9.30.மணி முதல் 10.30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து புஷ்பபல்லக்கில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா வருகிறார். விழா ஏற்பாடுகளை மருதமலை கோவில் துணை கமிஷனர் ஹர்ஷினி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    இதுபோல் கோவை கோவில்பாளையத்தில் சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்த காலகாலேஸ்வரர் கோவிலில்கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா நேற்று காலை 9 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதனைத் தொடர்ந்து 10 மணிக்கு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    • 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • நவம்பர் 1-ந்தேதி வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாகை மாவட்டம் சிக்கலில் பிரசித்தி பெற்ற சிங்காரவேலவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம், முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. முருகன், வேல்நெடுங்கன்னியிடம், வேல் வாங்கும் போது முருகனின் முகம் மற்றும் திருமேனி முழுவதும் வியர்வை சிந்தும் அற்புத காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவார்கள்.

    சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 10 நாட்கள் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நேற்று முன்தினம் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் சிங்காரவேலவர் தங்கமஞ்சத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். இந்த விழா அடுத்த மாதம்( நவம்பர்) 3-ந்தேதி வரை நடக்கிறது, நேற்று இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. இன்று (வியாழக்கிழமை) தங்கமயில் வாகனத் திலும், நாளை (வெள்ளிக்கிழமை) ரிஷப வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.

    29-ந்தேதி(சனிக்கிழமை) காலை தேரோட்டமும், இரவு வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 30-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை9 மாலை சூரசம்ஹார நிகழ்ச்சியும், 31-ந் தேதி(திங்கட்கிழமை) தெய்வ சேனை திருக்கல்யாணமும், நவம்பர் 1-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ×