search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meenakshi"

    • பிரசாத் ஸ்டூடியூவில் படப்பிடிப்புகளை முடித்து விட்டு அடுத்த கட்டமாக சென்னை மெட்ரோ நிலையத்தில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.
    • தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது.

    நடிகர் விஜய்யின் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத், மாஸ்கோ உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில் தற்போது சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் திரிஷா மற்றும் விஜய்யின் காம்பினேஷன் பாடல் மிகப்பெரிய அளவில் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மெட்ரோ ஸ்டேஷனில் அடுத்த கட்ட ஷூட்டிங்கை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    தொடர்ந்து இரு வாரங்கள் இந்த படத்தின் சூட்டிங் நடைபெறும் எனவும். இப்படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, மீனாட்சி சவுத்ரி, சினேகா என நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். கில்லி படத்திற்கு பிறகு விஜய்யும் திரிஷாவும் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படத்தில் நடித்தனர்.

    அதைத்தொடர்ந்து கோட் திரைப்படத்திலும் விஜய்யுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார். பிரசாத் ஸ்டூடியூவில் படப்பிடிப்புகளை முடித்து விட்டு அடுத்த கட்டமாக சென்னை மெட்ரோ நிலையத்தில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது.

    சமீபத்தில் படத்தில் நடித்துள்ள அஜ்மல் தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணலில் படத்தின் அப்டேட்டை குறித்து பேசினார். சிஎஸ்கே ஐ.பி.எல் அணி வீரர்கள் இதில் நடித்துள்ளதாக வந்த தகவல்கள் உண்மையெனவும் , ஆனால் அது யார் என்று என்னால் சொல்ல முடியாது. படத்தின் தயாரிப்பாளர்கள் தான் அதை கூற வேண்டும் என கூறியுள்ளார். படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த பாடல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த பாடல் ஒரு காதல் பாடலாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்தனர்
    • தனுஷ் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே வீட்டைவிட்டு ஓடிவிட்டதாகவும், அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்

    தனுஷ் தனது மகன் என வழக்கு தொடுத்த மேலூர் கதிரேசன் (79) உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று காலமானார்.

    மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்தனர். அப்போது இந்த வழக்கு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

    தனுஷ் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே வீட்டைவிட்டு ஓடிவிட்டதாகவும், அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும், இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் வளர்ப்பு மகனாக இருந்து நடிகரானது பிறகே தெரிய வந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.

    நடிகர் தனுஷ் எங்களது மகன் என்ற முறையில் பெற்றோரான எங்களது பராமரிப்பு செலவிற்காக மாதாமாதம் உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என அவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். பல ஆண்டுகளாக இந்த சட்டப்போராட்டம் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கை மேலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் கதிரேசன் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனு மீது கடந்த மார்ச் 13 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், தவறான உள்நோக்கத்தில் மனுதாரர்களான கதிரேசன் மீனாட்சி தம்பதி இந்த மனுவை தாக்கல் செய்தது மட்டுமின்றி குற்றச்சாட்டுகளை நிரூபிக்க உரிய ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கதிரேசன் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். கதிரேசனின் வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தற்போதும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆடி பூரத்தன்று மீனாட்சியம்மன் உற்சவர் கருவறைக்கு எழுந்தருள்வார்.
    • வெற்றிலையை அடுக்கடுக்காக தைத்து மாலை போல் சூட்டுவர்.

    சக்தி தலங்களில் முதன்மையான தலங்களில் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு சித்திரை மாதம் தொடங்கி ஆடி மாதம் வரை நான்கு மாதங்கள் அம்பிகை பட்டத்தரசியாக மூடி சூட்டிக் கொண்டு ஆட்சி செய்வதாக ஐதீகம்.

    ஆடியில் மீனாட்சியம்மனுக்குரிய தனி விழாவாக முளைக்கொட்டுத் திருவிழா நடக்கும். இந்த விழா பத்து நாட்கள் நடக்கும். கோவிலுக்குள் இருக்கும் ஆடி வீதியில் மீனாட்சியம்மன் தினமும் வாகனத்தில் பவனி வருவதை தரிசிக்கலாம்.

    விழா நடக்கும் மாதத்தின் பெயரையே இந்த வீதிக்கு சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆடி பூரத்தன்று மீனாட்சியம்மன் உற்சவர் கருவறைக்கு எழுந்தருள்வார். அங்கு மீனாட்சிக்கும், உற்சவருக்கும் ஒரே சமயத்தில் சடங்கு உற்சவம் (பூப்புனித நீராட்டு) நடத்துவார்கள்.

    வெற்றிலை அலங்காரம்

    ஆடிப்பூரம் அம்மனுக்கு மட்டுமல்ல வீரபத்திரருக்கும் சிறப்பான ஒரு தினமாகும். வீரபத்திரருக்குரிய அலங்காரங்களுள் ஒன்று வெற்றிலையைக் கொண்டு செய்யப்படுகிறது. அதாவது வெற்றிலையை அடுக்கடுக்காக தைத்து மாலை போல் சூட்டுவர்.

    சில ஆலயங்களில் வெற்றிலைக்குள் பாக்கு வைத்து சுருட்டி, அந்தச் சுருளை மாலையாக்கி அணிவிப்பார்கள்.

    பல தெய்வங்கள் வீராவேசம் கொண்ட போர் தெய்வங்களாக, வெற்றிக் கடவுளாகத் திகழ்ந்தாலும் வீரபத்திரருக்கு மட்டுமே வெற்றிலைப்படல் உற்சவம் உண்டு. ஆடிப்பூரமே அதற்குரிய விசேஷ நாள். அன்று சென்னை அருகே அனுமந்தபுரத்தில் உள்ள வீரபத்திரருக்கு 12,800 வெற்றிலைகளால் அணிவித்து வழிபடுவது பாரம்பரிய பழக்கமாக உள்ளது.

    • திருமங்கலத்தில் நடந்த மீனாட்சி திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • பெண்கள் புதுதாலி மாற்றிக் கொண்டனர்.



    எட்டுப்பட்டறை மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

     திருமங்கலம்

    650 ஆண்டு கால பழமை வாய்ந்த திருமங்கலம் மீனாட்சி-சொக்கநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரை மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தில் திருமாங்கல்யம் செய்து தந்த ஊர் என்பதால் திருமாங்கல்யபுரம் என்று அழைக்கப்பட்டதாகவும் நாளடைவில் திருமங்கலமாக மாறியதாகவும் வரலாறு உள்ளது.

    இத்தகைய பெருமை வாய்ந்த திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் இன்று திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது.

    இதை முன்னிட்டு இன்று காலை கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. பச்சை பட்டு உடுத்தி மீனாட்சியும், பிரியாவிடையுடன் சொக்க நாதரும் மணமேடையில் எழுந்தருளினர்.

    அதனை தொடர்ந்து காப்பு காட்டும் நிகழ்ச்சி நடந்தது. காலை 8.40 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க மீனாட்சி-சொக்கநாதர் திருமணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணம் நடந்த போது கோவிலில் திரண்டிருந்த பெண்கள் புதுதாலி மாற்றிக் கொண்டனர்.

    இதே போல் திருமங்கலம் எட்டுப்பட்டறை மாரியம்மன் கோவிலிலும் மீனாட்சி திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. மீனாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தியும், சொக்க நாதர் வெண்ணிற பட்டு உடுத்தியும் மணமேடையில் எழுந்தருளினர். தொடர்ந்து மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. இதில்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


    • மீனாட்சியை, தாரை வார்த்து கொடுக்க பவளக்கனிவாய் பெருமாள் 1-ந்தேதி புறப்படுகிறார்.
    • 6-ந்தேதி வரை கோவிலுக்குள் தங்கத்தேர் புறப்பாடு இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    திருப்பரங்குன்றம்

    மீனாட்சி பட்டணமான மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கடந்த 23-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் முத்தாய்ப் பாக வருகிற 2-ந்தேதி காலை 8.35 மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரே வரருக்கு திருக்கல்யாண வைபோகம் நடக்கிறது. மீனாட்சி அம்மனை சுந்த சுவரருக்கு திருப்பரங்குன்ற பவளக்கனிவாய் பெருமாள் தாரை வார்த்து கொடுப்ப தாக வரலாறாக இருந்து வருகிறது.

    இதையொட்டி மீனாட்சி அம்மன் அருளாட்சி புரிய மதுரைக்கு திருப்பரங் குன்றம் முருகன் கோவிலில் இருந்து வருகிற 1-ந்தேதி மாலை 5 மணிக்கு மேள தாளங்கள் முழங்க பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு வருகிறார்.

    இதேவேளையில் முருகப் பெருமான், தெய்வானையு டன் புறப்பட்டு மீனாட்சி பட்டணத்திற்கு வருகிறார். திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை வரை வழிநெடுகிலுமாக ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து முருகப் பெருமான் தெய்வானை மற் றும் பவளக்கனிவாய் பெரு மாளை வழிபடுகின்றனர்.

    2-ந்தேதி மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் பவளக்கனிவாய் பெருமாள் பங்கேற்று மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுக்கிறார்.

    இதே வேளையில் தெய்வானையுடன் இதே முருகப்பெருமான் திருக் கல்யாணத்தில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலிக் கிறார். 5-ந்தேதி வரை மதுரையிலே தெய்வானையுடன் முருகப்பெருமான், பவளக்கனிவாய் பெருமாள் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    5-ந்தேதி மாலை 5 மணியளவில் நகை வீதியில் இருந்து பல்லக்கில் பவளக் கனிவாய் பெருமாளும், பூப்பல்லக்கில் தெய்வானை யுடன் முருகப்பெருமானும் புறப்பட்டு தன் இருப்பிடமான திருப்பரங்குன்றம் வருகின்றனர்.

    மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் வரை வழி நெடுகிலும் பக்தர்கள் திருக்கண் அமைத்து வழிபடுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப தங்கத்தேர் உலா நடைபெற்று வருகிறது. இதற்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது தங்கத்தேர் உலாவின் போது உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வா னையுடன் சுப்பிரமணியசாமி. தங்கத் தேரில் எழுந்தருளி வலம் வருகிறார்.

    இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி மதுரைக்கு மீனாட்சி அம்மன்-சுந்தரேசு வரர் திருக் கல்யாணத்திற்கு தெய்வா னையுடன் சுப்பிர மணியசாமி புறப்பட்டு செல்வதால் அன்று முதல் 6-ந்தேதி வரை கோவிலுக் குள் தங்கத்தேர் புறப்பாடு இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்று வழக்கு தொடர்ந்திருந்தனர்.
    • இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கதிரேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால் பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை, எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கதிரேசன் (70) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கதிரேசன் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், வழக்கின் விசாரணைக்காக அவரது மரபணுவை (டி.என்.ஏ) சேகரித்து பாதுகாக்க வேண்டும் எனக் கூறி அவரது மனைவி மீனாட்சி மற்றும் வழக்கறிஞர் டைட்டஸ் ஆகியோர் மருத்துவமனை டீன் ரத்தினவேலிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


    கதிரேசன் -மீனாட்சி

    இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் டைட்டஸ் கூறியதாவது, நடிகர் தனுஷின் அப்பா கதிரேசனின் உடல்நிலை மோசமாக உள்ளது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கதிரேசன் உயிருக்கு ஆபத்து ஏற்பட கூடும் என்பதால், அவரது டி.என்.ஏ. வை எடுத்து பராமரிக்க வேண்டும் என மனு அளித்து உள்ளோம். ஏற்கனவே வழக்கு விசாரணையின் போது நடிகர் தனுஷ் அவரது அங்க அடையாளத்தை லேசர் மூலம் அழித்திருந்தார்.

    பள்ளிக்கூட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தவறாக தாக்கல் செய்துள்ளார். எனவே, தனுஷின் பெற்றோர் கதிரேசன் - மீனாட்சி ஆகியோர் தான் என்பதை ஆவணங்கள் உறுதி செய்கின்றது. எங்கள் மீது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் பதிவு செய்வோம் என்று சொன்ன தனுஷ் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. தனுஷ் உண்மையை மறைக்க பார்க்கிறார். இது ஒரு கதிரேசனின் பிரச்சனை அல்ல. இப்படி எத்தனையோ பெற்றோர் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்" என கூறினார்.

    ×