என் மலர்
நீங்கள் தேடியது "Yuvan Shankar Raja"
- இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
- யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்.ஜி.ஆர் மகன்' மற்றும் 'டி.எஸ்.பி' போன்ற திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் தற்போது 'கொம்புசீவி' என்ற படத்தை இயக்கியுள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ள இந்தப் படத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் வெளியானது.
இந்த நிலையில், 'கொம்புசீவி' படத்தின் 'வஸ்தாரா' பாடல் வெளியாகி உள்ளது. சூப்பர் சுப்பு வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்பாடலை விஷ்ணு பிரியாவுடன் இணைந்து யுவனும் பாடியுள்ளார்.
- இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் என வெளியானது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குநர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் என வெளியானது. இருப்பினும் இப்படம் வெளியாவது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், 'கொம்புசீவி' படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று அருண் விஜயின் 'ரெட்ட தல' படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- ஆனந்த கிருஷ்ணன் தற்போது 'நான் வயலன்ஸ் (NON Violence) என்ற படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது 'நான் வயலன்ஸ் (NON Violence) என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில், நான் வயலன்ஸ் படத்திலிருந்து நடிகை ஸ்ரேயா நடனமாடியுள்ள 'கனகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
திருமணம் ஆனதில் இருந்து தமிழில் நடிப்பதை குறைத்துகொண்ட ஸ்ரேயா, இந்தாண்டு வெளியான ரெட்ரோ படத்தில் பாடல் ஒன்றுக்கு சிறப்பு நடனம் ஆடி கம்பேக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
- அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும்.
'கன்னி மாடம்', 'சார்' ஆகிய பாராட்டுகளை குவித்த வெற்றி படங்களை தொடர்ந்து போஸ் வெங்கட் தற்போது கே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
கடந்த 35 ஆண்டுகளாக துபாயில் முன்னணி தொழிலதிபராக திகழும் கண்ணன் ரவி தனது கே ஆர் ஜி மூவிஸ் நிறுவனத்தின் ஏழாவது படைப்பாக இப்படம் உருவாகிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்த 'புரொடக்ஷன் நம்பர் 7' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முன்னணி நடிகர் நடிகைகளும், முதன்மையான தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்திற்காக இணைந்துள்ளனர்.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் போஸ் வெங்கட், "விளையாட்டை மையமாகக் கொண்ட இந்த படம் காதல், குடும்பம், சமூகம் என்று பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து சுவாரசியமாக பேசும். அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சி. இதை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன," என்று கூறினார்.
கே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கும் திரைப்படத்தின் பெயர், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமைமிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'.
இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.
தொடர்ந்து, 'கொம்புசீவி' படத்தின் முதல் சிங்கிளான 'உன்ன நான் பாத்த' பாடல் இன்று மாலை 4.45 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்தது. இந்த நிலையில், "கொம்புசீவி" படத்தின் முதல் பாடலான "உன்ன நான் பாத்த" பாடல் வெளியாகியுள்ளது.
- இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.
இந்த நிலையில், 'கொம்புசீவி' படத்தின் முதல் சிங்கிளான 'உன்ன நான் பாத்த' பாடல் இன்று மாலை 4.45 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, அனுயா, சந்தானம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது சிவா மனசுல சக்தி திரைப்படம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய ஹிட்டானது. மேலும் திரைப்படமும் ப்ளாக்ப்ஸ்டர் திரைப்படமாக உருவானது.
படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகள் இன்றும் பலரின் மனதில் இருக்கும். மச்சி ஒரு க்வாட்டர் சொல்லேன், தெரியல மச்சி, அவ போய் 6 மாசம் ஆகுது போன்ற வசனங்கள் இன்றும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
அப்படத்திற்கு பிறகு ஜீவாவும் ராஜேஷும் இணைந்து பணியாற்றவில்லை. இந்நிலையில் இந்த மெகா வெற்றி கூட்டணி 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒன்றாக இணைகின்றனர். ஜீவா நடிப்பில் ராஜேஷ் இயக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை யுவன் பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மனதை திருடி விட்டாய் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளி வந்தது.
- வடிவேலு, பிரபு தேவாவின் காம்போ மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது.
மனதை திருடி விட்டாய் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளி வந்தது. இதில் நடிகர் பிரபு தேவா,வடிவேலு,விவேக்,கவுசல்யா போன்ற பலர் நடித்து இருந்தனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் வரும் அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட்டானது.
விவேக்,வடிவேலு, பிரபு தேவாவின் காம்போ மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது. அதில் வரும் சிங் இன் தி ரெயின். வொய் ப்ளட் சேம் ப்ளட், வடிவேலு ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும் நகைச்சுவை காட்சிகள் மிகவும் பிரபலம். இன்று வரை நாம் அனைவராலும் பார்த்து ரசிக்கப் பட்ட காட்சிகள் அவை. இன்றும் அவை இன்ஸ்டாகிராமில் மீம் டெம்ப்லேட்டுகளாக உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.
மனதை திருடிவிட்டாய் படத்திற்கு அடுத்து பிரபு தேவாவும், வடிவேலும் இணைந்து படம் நடிக்கவில்லை.
இவர்கள் இருவரும் சேர்ந்து மீண்டும் படம் நடிக்க மாட்டார்களா என்று ஏக்கம் ரசிகர்களுக்கு இப்போதும் உண்டு.
இந்நிலையில், 23 ஆண்டு கழித்து பிரபு தேவாவும், வடிவேலும் சேர்ந்து நடிக்கின்றனர். இப்படத்தை சாம் ரொட்ரிகஸ் இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்நிலையில் படத்தின் பூஜை விழா இன்று துபாயில் நடைப்பெற்றது.
- தமிழில் 1,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார்.
- யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நா. முத்துக்குமார் தான். இவர்கள் இணைந்து 400-க்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கினர்.
தமிழ் திரையுலகின் எளிமையும் ஆழமும் கலந்த பாடல்களை பரிசளித்த கவிஞர், பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அவரின் மறைவு நாளில் ரசிகர்களாலும், திரைப்பட உலகினராலும் நினைவுகூறப்படுகிறார்.
பெரும் ஞானம் கொண்ட உணர்வுகளை, மிக எளிய தமிழ்ச் சொற்களில் பாடலாக வடிப்பது. 2001-ஆம் ஆண்டு சீமான் இயக்கிய *வீர நடை* திரைப்படம் வழியாக பாடலாசிரியராக அறிமுகமானார். அதற்கு முன், இயக்குநர் பாலுமகேந்திரா-வின் உதவி இயக்குநராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியிருந்தார். அங்கே தான் இயக்குநர்களான வெற்றிமாறன் மற்றும் ராம் ஆகியோருடன் வாழ்நாள் நட்பு உருவானது.
திரையுலகில் தனது பயணத்தில், தமிழில் 1,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார்.
யுவன் – முத்துக்குமார் காம்போ
தமிழ் சினிமாவின் எவர்கிரீன* ஹிட் பாடல்களை வழங்கிய கூட்டணி என்றால், அது யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நா. முத்துக்குமார் தான். இவர்கள் இணைந்து 400-க்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கினர். நந்தா திரைப்படத்தில் முதன்முறையாக யுவன் இசைக்கு முத்துக்குமார் பாடல் எழுதினார்.
'ஒரு நாளில்', 'என் காதல் சொல்ல', 'நினைத்து நினைத்து பார்த்தேன்', 'தேவதையை கண்டேன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'பறவையே எங்கு இருக்கிறாய்' போன்ற பல ஹிட் பாடல்களின் பின்னணியில் முத்துக்குமாரின் வரிகள் உள்ளன. கடைசியாக, யுவன் இசையில் *தரமணி* படத்திற்கு பாடல்கள் எழுதினார்.
இயக்குநர் **செல்வராகவன்** இயக்கிய *காதல் கொண்டேன்*, *7ஜி ரெயின்போ காலனி*, *புதுப்பேட்டை* படங்களில் உள்ள ஒவ்வொரு பாடலும் பெரும் வெற்றி பெற்றது.
இயக்குநர் ராம் இயக்கிய அனைத்து படங்களுக்கும் முத்துக்குமார் பாடல் எழுதியுள்ளார். குறிப்பாக *கற்றது தமிழ்* மற்றும் *தங்க மீன்கள்* பாடல்கள் இன்றும் மக்களிடையே வாழ்கின்றன.
மறைவுக்குப் பின் மரியாதை
2016-ஆம் ஆண்டு, வெறும் 41 வயதில், மஞ்சள்காமாலை நோயால் நா. முத்துக்குமார் காலமானார். அவரது இழப்பை தமிழ் திரையுலகம் இன்னும் மறக்கவில்லை; அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.
அவரின் வரிகள் துவண்டுபோனவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சக்தி கொண்டவை. தனிமையில் வாடுவோருக்கு தோழனாக இருந்து, அவர்களின் மனங்களை நிம்மதிப்படுத்துகின்றன.
- 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை திரைப்படம் வெளியானது.
- யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின.
நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு 'புதுப்பேட்டை' திரைப்படம் ஜூலை 26ல் புதுப்பொலிவுடன் 4K தரத்தில் ரீ-ரிலீஸ் ஆகிறது
2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை திரைப்படம் வெளியானது. இப்படத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின.
புதுப்பேட்டை திரைப்படம் வெளியான சமயத்தில் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் இத்திரைப்படம் பின்னாளில் மக்களிடம் பெரும் கவனத்தை பெற்று கல்ட் கிளாசிக் கேங்ஸ்டர் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
- தமிழ் திரையுலகில் ஒரு ஆகச்சிறந்த பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருந்தவர் நா. முத்துகுமார்.
- சீமான் இயக்கிய வீர நடை என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாடலாசிரியராக களமிறங்கினார்
தமிழ் திரையுலகில் ஒரு ஆகச்சிறந்த பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருந்தவர் நா. முத்துகுமார். இவர் பெரும் ஞானம் உடைய கவிதைகளை மிகவும் எளிமையான தமிழ் சொற்களில் பாடலாக எழுதும் திறம் பெற்றவர்.
சீமான் இயக்கிய வீர நடை என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாடலாசிரியராக களமிறங்கினார்.பாடலாசிரியர் ஆவதற்கு முன் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குநராக பணியாற்றினார். அங்குதான் இயக்குநர்களான வெற்றிமாறன் மற்றும் ராம் அவர்களின் நட்பு இவருக்கு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு பாடலாசிரியராக இருந்துள்ளார். தமிழில் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார்.

குறிப்பாக யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நா முத்துகுமார் காம்போவில் வெளியான பாடல்கள் எவர்கிரீன் ஹிட்ஸ் என்றுதான் சொல்லவேண்டும். இந்த கூட்டணியில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட பாடல்கள் உருவாகியுள்ளது. நந்தா படத்தில் முதன்முறையாக முத்துகுமார் யுவன் இசைக்கு பாடல் வரிகளை எழுதினார்.

யுவன் இசையில் உருவான ஒரு நாளில், என் காதல் சொல்ல, , நினைத்து நினைத்து பார்த்தேன், தேவதையை கண்டேன், ஒரு கல் ஒரு கண்ணாடி, பறவையே எங்கு இருக்கிறாய் போன்ற பல வெற்றி பாடல்களுக்கு நா.முத்துகுமார் வரிகளை எழுதியுள்ளார். கடைசியாக யுவன் இசையில் தரமணி படத்திற்கு பாடல்களை எழுதினார்.

செல்வராகவன் இயக்கத்தில் யுவன் இசையமைத்த காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை படங்களில் நா.முத்துகுமார் வரிகளில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டானது.
இயக்குநர் ராம் இயக்கிய அனைத்து திரைப்படங்களுக்கும் நா. முத்துகுமார் பாடல் எழுதியுள்ளார்.

குறிப்பாக இன்றும் கற்றது தமிழ், தங்க மீன்கள் பாடல்கள் வலம் வந்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்று நா. முத்துகுமாரின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்ந்து அவரது பாடல் வரிகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
எதிர்பாராத விதமாக 2016 ஆம் ஆண்டில் மஞ்சள்காமாலை நோயினால் முத்துகுமார் காலமானார். தமிழ் திரையுலகில் அவர் விட்டுச்சென்ற இடத்தை இன்னும் யாராலும் நிரப்பமுடியவில்லை.

கவிஞர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளையொட்டி, வரும் ஜூலை 19ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‛ஆனந்த யாழை' என்ற தலைப்பில் மாபெரும் இசைக்கச்சேரி நடக்க உள்ளது. அதில் முத்துக்குமாருடன் பணியாற்றிய யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், தமன், விஜய்ஆண்டனி, கார்த்திக்ராஜா, நிவாஸ் கே பிரசன்னா உள்ளிட்ட பல இசைமைப்பாளர்கள் இசை விருந்து கொடுக்கிறார்கள். தமிழ் சினிமா சரித்திரத்தில் இப்படி பல இசையமைப்பாளர்கள் ஒன்றிணைவது இதுவே முதன்முறையாகும்.
நா.முத்துகுமார் மக்களை விட்டு பிரிந்தாலும், அவருடைய வரிகள் இன்னும் மக்களை வழிநடத்தி கொண்டிருக்கிறது. பல துவண்டுப்போன மனிதர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது தனிமையில் வாடும் மனிதர்களுக்கு சக தோழனாய் அவர் பயணித்துக் கொண்டிருக்கிறார்..
- பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்
- மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பாடலான சன்ஃப்ளவர் மற்றும் டேடி ரொம்ப பாவம் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான கஷ்டம் வந்தா பாடல் வரும் ஜூன் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






