search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shriya Saran"

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா, நரகாசூரன் படத்தை தொடர்ந்து சண்டைக்காரியாக விமலுடன் களமிறங்க இருக்கிறார்.
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை, ஸ்ரேயா. சிம்புவுடன் இணைந்து `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் நடித்தார். பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் `நரகாசூரன்’ படத்தில் நடித்தார்.

    அரவிந்த்சாமி ஜோடியாக இப்படத்தில் இவர் நடித்திருந்தார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. இதற்குப் பிறகு தமிழில் எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா, தற்போது நடிகர் விமலுடன் இணைந்து `சண்டக்காரி’ படத்தில் அவருக்கு பாஸாக நடித்துக்கொண்டிருக்கிறார்.



    `சண்டக்காரி’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் கிராமம் சார்ந்த ஏரியாவில் நடக்க இருக்கிறது.

    இந்தப் படத்தில் விமலுக்கு வில்லன் ரோலில் `மகதீரா’ படத்தில் நடித்த `தேவ் கில்’ நடிக்கிறார். விமல் நடிப்பில் விரைவில் `களவாணி 2’ ரிலீசாக இருக்கிறது.
    தமிழில் ரஜினி, விஜய்யுடன் நடித்து பிரபலமான ஸ்ரேயா, தற்போது நடுரோட்டில் நடனம் ஆடும் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். #Shriya
    நடிகைகள் தங்களுக்கு பிடித்த வி‌ஷயங்களை செய்து அதை வீடியோ படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். இதில் தற்போது நடுரோடு வரைக்கும் கூட வர தொடங்கிவிட்டார்கள். ரஜினி, விஜய் என்று பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரேயா தற்போது நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார்.

    இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. தமிழில் புதிய படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் இவர் காத்திருக்கிறார். இந்தியில் தட்கா என்ற ஒரு படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நிலையில் வெளிநாடுகளுக்கு பறந்துவிடுகிறார் ஸ்ரேயா. 



    சமீபத்தில் வெளிநாடு சென்ற ஸ்ரேயா அங்குள்ள இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தார். பின்னர் அப்பகுதியில் நடந்த திருவிழாவுக்கு சென்றவர் அங்கு நடந்த காட்சிகளை ரசித்தார். உற்சாக மிகுதியில் நடுரோட்டிலேயே நடனம் ஆடத் தொடங்கினார். அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா, திருமணம் செய்து சுற்றுலா சென்று பனிமழையில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். #ShriyaSaran
    ‘இஷ்டம்’ தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா. ‘எனக்கு 20 உனக்கு 18’ மூலம் தமிழிலும் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ள ஸ்ரேயா சில ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.

    தமிழில் இவர் நடிப்பில் வெளியான கடைசிப் படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்த ‘நரகாசூரன்’ படம் ரிலீசுக்குத் தயாராகி இருக்கிறது. சமீபத்தில் ரஷ்ய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், பனியில் ஜாலியாக விளையாடும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஸ்ரேயா.



    அதில், மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படத்தில் இடம்பெற்ற ‘புது வெள்ளை மழை’ பாடலை பாடுகிறார் ஸ்ரேயா. ‘புது வெள்ளை மழை’ பாடலில், பனிப் பிரதேசத்தில் அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா இருவரும் இருப்பது போல் படமாக்கப்பட்டிருக்கும். அந்தக் காட்சியை நினைவுபடுத்தி, தற்போது அதை பாடி உள்ளார் ஸ்ரேயா. #ShriyaSaran

    ஸ்ரேயா தற்போது தெலுங்கில் நடித்து வரும் ‘வீர போக வசந்த ராயலு’ வீடியோவில் அவரது பிறந்தறாளில் வெளியாகிய நிலையில், அதில் ஸ்ரோயா புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. #ShriyaSaran
    நடிகை ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படம் மூலம் அறிமுகமானார். விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், விஷாலுடன் தோரணை, விக்ரமுடன் கந்தசாமி, தனுசுடன் திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, உத்தமபுத்திரன், ஆர்யாவுடன் சிக்குபுக்கு, ஜீவாவுடன் ரெளத்திரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தும் 2011-க்குப் பிறகு வாய்ப்புகள் குறைந்தன. அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்த நரகாசூரன் வெளியாக இருக்கிறது.



    நேற்று முன் தினம் ஸ்ரேயாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் தெலுங்கில் நடித்து வரும் ‘வீர போக வசந்த ராயலு’ என்ற படத்தின் சிறிய காட்சி வெளியாகி உள்ளது. அதில் ஸ்ரேயா புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. #ShriyaSaran

    சிறு இடைவெளிக்குப் பிறகு ‘நரகாசூரன்’ படத்தில் நடித்திருக்கும் ஸ்ரேயா, அந்த மாதிரி படங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியிருக்கிறார். #Shriya #ShriyaSaran
    நடிகை ஸ்ரேயா தற்போது சிறு இடைவெளிக்குப் பிறகு ‘நரகாசூரன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அவர் மாலைமலருக்கு அளித்த பேட்டி வருமாறு...

    நரகாசூரன் படத்தில் நடித்த அனுபவம்?

    இந்த படம் மாறுபட்ட கதையம்சம் கொண்டது. இதுவரைக்கும் இதுபோன்ற கதையில் நடித்ததில்லை. படக்குழுவினர் அனைவரும் இப்படத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் என்ஜாய் பண்ணி டீம் ஒர்க்காக வேலை பார்த்தோம்.

    இயக்குனர் கார்த்திக் நரேன் பற்றி?

    மிகவும் திறமையானவர். அவருடைய கதை, மற்றும் சொன்ன விதம் எல்லாம் சிறப்பாக உள்ளது. ரசிகர்களின் பார்வையில் அவர் நினைக்கிறதை செய்து முடிப்பார். புதுமையான இயக்குனர். திரைக்கதையை திறமையாக திட்டமிட்டு அதை வரை படமாக வரைந்து இயக்கி இருக்கிறார். இவர் எனக்கான இடத்தை கொடுத்தார்.



    நரகாசூரன் எதை சொல்ல வருகிறது?

    இப்படம் திரில்லர் படம். ஆனால், திரில்லர் மட்டும் சொல்ல வரவில்லை. இதில் காதல், மாயகதை உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது.

    இப்படத்தில் உங்கள் கதாபாத்திரம்?

    இதில் கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பக்கத்து வீட்டு பெண் போல் அனைவரும் உணர்வீர்கள். என் நண்பர் ஒருவர் சோகமாக இருக்கும்போது, நான் பேசினால் அவர்கள் சிரித்து விடுவார்கள். அதுபோல், தான் இந்த கீதாவின் கதாபாத்திரம். கதையை படிக்கும் போது என்னையே பிரதிபலிப்பதுபோல் உணர்ந்தேன்.

    இளம் இயக்குனர் படத்தில் நடிக்க எப்படி சம்மதித்தீர்கள்?

    நிறைய அறிமுக இயக்குனர் படத்தில் நடித்திருக்கிறேன். அனுபவம் வாய்ந்த இயக்குனர் படத்திலும் நடித்திருக்கிறேன். புதுமுகம், அனுபவம் எல்லாம் முக்கியம் இல்லை. அவர்கள் கதை, திரைக்கதை எப்படி சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அதில் கார்த்திக் நரேன் கதை எனக்கு பிடித்தது. அதனால் நடிக்க சம்மதித்தேன்.

    பெண் இயக்குனர்கள் பற்றி?

    நிறைய பெண்கள் திரையில் வந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், திரைக்கு பின்னாலும் அவர்கள் வர வேண்டும். பெண் விநியோகஸ்தர், பெண் கேமராமேன், இயக்குனர்கள் வர வேண்டும்.



    கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் எப்போது பார்க்கலாம்?

    கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நம்பிக்கை இல்லை. நல்ல படம், கெட்ட படம் அவ்வளவுதான். வலிமை மற்றும் புத்திசாலித்தனம் எனக்கு முக்கியம்.

    அடுத்தடுத்த படங்கள்?

    தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறேன். விரைவில் இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
    கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா நடித்துள்ள நரகாசூரன் படம் ஒரு வழக்கமான படமாக இருக்காது என்று சந்தீப் கிஷன் கூறியுள்ளார். #Naragasooran #SundeepKishan
    சந்தீப் கி‌ஷன் நடிப்பில் நரகாசூரன் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அவரிடம் பேசியதில் இருந்து...

    பாடல்கள், சண்டை என்று வழக்கமான படமாக இருக்காது. இந்த படம் பார்த்த அனுபவமே வேறு மாதிரியாக இருக்கும். படத்தை தியேட்டரில் பார்த்தால் மட்டும் தான் அந்த அனுபவம் கிடைக்கும். எனக்கு மட்டுமல்ல அரவிந்த்சாமி, ஸ்ரேயா, ஆத்மிகா என அனைவருக்குமே முக்கிய படமாக இருக்கும். நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும்.

    தமிழில் 4 படங்கள் தான் நடித்துள்ளேன். ரசிகர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த தான் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கிறேன். அஜித், விஜய் படத்துக்கும் எனக்கும் ஒரே விலை டிக்கெட் தான். என்னை போன்ற வளரும் நடிகர்கள் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். நான் பிறந்தது வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில் தான். வாய்ப்பு தேடும்போது தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா மொழிகளிலுமே தேடினேன். தெலுங்கில் கிளிக் ஆனது. ஐதராபாத் சென்றால் தமிழ் பையனாக பார்க்கிறார்கள். சென்னை வந்தால் தெலுங்கு நடிகராக பார்க்கிறார்கள். என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று காத்திருக்கிறேன்.

    தெலுங்கில் பெரிய போட்டி இருக்குமே... எப்படி ஜெயித்தீர்கள்?

    எனக்கு அப்படி தெரியவில்லை. நாம் நேர்மையாக இருந்து கடினமாக உழைத்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். எனக்கு பிறகு வந்தவர்கள் தான் விஜய்சேதுபதியும், சிவகார்த்திகேயனும். ஆனால் எனக்கு முன்பு இருந்தே அவர்கள் தங்கள் கடின உழைப்பை கொட்டியிருக்கிறார்கள். அதுதான் அவர்களின் வெற்றிக்கு காரணம். சினிமாவில் நேரம் முக்கியம்.



    தெலுங்கில் இந்தி இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் நடிக்கிறேன். தமன்னா எனக்கு ஜோடியாக நடிக்கிறார். திருடன் போலீஸ் இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ஒரு படம் சென்று கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் என்று கட்டுப்பாடு வைத்துள்ளேன்.

    அதிகமாக நண்பர்கள் இல்லாமல் தனியாக இருக்கிறீர்களே?

    எனக்கு மது பழக்கம் இல்லை. அதனால் பார்ட்டிகளில் என்னை பார்க்க முடியாது. விஷால் என் உடன் பிறக்காத அண்ணன். சித்தார்த், விஷ்ணு என சில நண்பர்கள் இருக்கிறார்கள். வரு சரத்குமார், ராகுல் ரவீந்தர், தமன்னா, ரெஜினா என்று நண்பர்கள் பட்டியல் கொஞ்சம் நீளும் என்றார். #Naragasooran #SundeepKishan

    ரஷ்ய தொழில் அதிபரான ஆன்ட்ரூ கோட்சீயை திருமணம் செய்த பிறகு படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #ShriyaSaran
    திருமணத்துக்கு பின் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் நடிகைகள் பட்டியலில் இணைந்து இருக்கிறார் ஸ்ரேயா.

    ஸ்ரேயா தனது காதலரான ரஷ்ய தொழில் அதிபரான ஆன்ட்ரூ கோட்சீயை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் ரஷ்யாவில் செட்டில் ஆகவில்லை.

    மாறாக இந்தியாவில் தங்கி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கணவருடன் வெளிநாடுகளில் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது அவர் குரோஷியாவில் உள்ள ஹவார் தீவுக்கு சென்றுள்ளார்.

    Smiles and laughter

    A post shared by @ shriya_saran1109 on


    அங்கு தான் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பிங்க் நிற பிகினி புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. #ShriyaSaran

    கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நரகாசூரன்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Naragasooran
    கார்த்திக் நரேன் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான படம் துருவங்கள் 16. கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டு உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. 

    இதில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ரோன் ஈதன் யோகன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.



    சமீபத்தில் படத்தை பார்த்த குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
    திருமணம் செய்துகொண்டாலும் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை. இன்னும் 20 படங்கள் நடித்த பிறகே அதுபற்றி யோசிப்பேன் என்று ஸ்ரேயா கூறியிருக்கிறார். #ShriyaSaran
    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரேயா சமீபத்தில் அவரது காதலரான ரஷ்ய தொழில் அதிபரும், டென்னிஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 

    திருமணத்திற்கு பிறகு ஸ்ரேயா ரஷ்யாவில் குடியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார்.

    தற்போது தொடர்ந்து 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘திருமணம் செய்துகொண்டாலும் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை. இன்னும் 20 படங்கள் நடித்த பிறகே அதுபற்றி யோசிப்பேன். திருமணம் என் சினிமா வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது’ என்று கூறி இருக்கிறார். #ShriyaSaran
    தமிழில், ரஜினி, விஜய்யுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா, சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம் இருப்பதாக கூறியிருக்கிறார். #Shriya
    வெளிநாட்டு காதலரை காதல் திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளாக கேட்டுவரும் ஸ்ரேயா தமிழ் சினிமாவை சாடியுள்ளார். 

    ‘என்னைத் தேடி பல பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் கதை பிடிக்காமல் தவிர்த்துவிடுகிறேன். எல்லா படங்களிலுமே ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது. நடிகைகளின் முக்கியத்துவம் குறைவாக உள்ளது.



    கதை சொல்லும்போது பெரிதாக தெரியும் கதாபாத்திரம் படம் வரும்போது சிறியதாக மாறிவிடுகிறது. தமிழை விட தெலுங்கில் தான் எனக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைத்தன’ என்று கூறியிருக்கிறார். ஸ்ரேயா தமிழில் ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் உட்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
    தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா, தற்போது சமந்தா வழியை பின்பற்ற இருக்கிறார். #Shriya #ShriyaSaran
    தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரேயா. ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படங்களிலும் நடித்தார். தற்போது தமிழில் அரவிந்த் சாமியுடன் ‘நரகாசுரன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில், திடீரென்று திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தாவை போல ஸ்ரேயா மீண்டும் நடிக்க வருகிறார். 



    தற்போது பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். பாலகிருஷ்ணாவுடன் ஏற்கனவே கவுதமபுத்ர சாதகர்ணி, பைசா வசூல் என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இப்படம் மூலம் மூன்றாவது முறையாக இணைகிறார்.
    ×