சூர்யா 44 திரைப்படத்தில் சிறப்பு நடனம் ஆடும் ஸ்ரேயா

சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
சூர்யா 44 திரைப்படத்தில் சிறப்பு நடனம் ஆடும்  ஸ்ரேயா
Published on

சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது என படக்குழு கடந்த மாதம் அறிவித்தது. இப்படம் ஒரு காதல் திரைப்படம் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் கூறீனார்.

இந்நிலையில் படத்தில் சிறப்பு நடனமாடியுள்ளார் நடிகை ஸ்ரேயா. இதை அவர் கோவாவில் தற்பொழுது நடைப்பெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட அவர் கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் பேசுகையில் " நான் இந்த திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு சூர்யா சாருடன் இணைந்து நடனம் ஆடியுள்ளேன். அப்பாடல் டிசம்பர் மாதம் வெளியாகும் என நினைக்கிறேன்" என்றார்.

படத்தின் இசையை சந்தோஷ் நாராயணன் மெற்கொண்டுள்ளார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com