என் மலர்
நீங்கள் தேடியது "சரத்குமார்"
- படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
- படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார். அம்ரித் ராம்நாத் கடந்தாண்டு வெளியான வருஷங்களுக்கு சேஷம் என்ற மலையாள திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் 3 BHK வீடு வாங்க ஆசைப்படும் குடும்பத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், இப்படம் ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் படத்தின் கதை தொனியை நுட்பமாக குறிக்கும் ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் படம் வெளியாவதையொட்டி படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- சரவணன் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படம்.
- இப்படத்தை ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் பேனரில் எம்.எஸ். சரவணன் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன், ஜி.வி. பிரகாஷ் குமார், விநியோகஸ்தர் ஜி.என். அழகர்சாமி, ஃபைனான்சியர் பதம், இயக்குநர் திருமலை, தயாரிப்பாளர் ராஜராஜன், ஒளிப்பதிவாளர் பிரமோத், இயக்குநர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் படத்தை ஜூன் மாதம் வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டது.
'அடங்காதே' படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இன்றைய அரசியலை விறுவிறுப்பாக இப்படம் பேசுகிறது. சுரபி நாயகியாக நடித்துள்ள 'அடங்காதே' படத்தில் பிரபல பாலிவுட் நடிகை மந்திரா பேடி முக்கிய பாத்திரத்தில் தோன்றுகிறார். யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பு மூலம் படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.
'அடங்காதே' குறித்து பேசிய இயக்குநர் சண்முகம் முத்துசாமி, "இது ஒரு அரசியல் திரில்லர் ஆகும். சமகால அரசியல் குறித்து இப்படம் பரபரப்பாக விவரிக்கிறது. இரு சக்கர வாகனங்களை ரிப்பேர் செய்யும் இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் குமாரும், அரசியல் தலைவராக சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரும் மிரட்டியுள்ளனர். கதையில் திருப்பம் ஏற்படுத்தும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அண்ணன் சீமான் அவர்களுக்கு மிக்க நன்றி," என்று கூறினார்.
ஜி.வி. பிரகாஷ் குமாரே 'அடங்காதே' திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை பி.கே. வர்மா கவனிக்க, டி. சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்கத்திற்கு ஏ.ஆர். மோகனும், சண்டைப் பயிற்சிக்கு ராஜசேகரும், நடன இயக்கத்திற்கு தினேஷும், வடிவமைப்புக்கு 24 ஏஎம் டியூனி ஜானும் பொறுப்பேற்றுள்ளனர். பாடல் வரிகளை கபிலன், சாஹிதி, அருண்ராஜா காமராஜ், உமாதேவி, பார்வதி மற்றும் சிவகங்கா எழுத, உடைகளை சுஜித் வடிவமைத்துள்ளார். புரொடக்ஷன் கன்ட்ரோலர்: எம். செந்தில்; நிர்வாகத் தயாரிப்பு: எம். சுரேஷ் ராஜா, டி, ரகுநாதன்; ஸ்டில்ஸ்: தேனி முருகன்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.
- தமிழக வெற்றிக் கழக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
- மாநில அரசு சொல்லும் அதே கருத்துகளை விஜய் பிரதிபலித்திருப்பது தான் மேலும் வேடிக்கை என்றார்.
சென்னை:
பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசை விமர்சித்து விஜய் பேசியது வினோதமாகவும், வேடிக்கையாகவும் இருந்தன.
பிரதமருக்கு தமிழகம் என்றால் அலர்ஜி, தமிழக ஜி.எஸ்.டி. வருவாயை வாங்கிக் கொண்டு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதியே ஒதுக்குவதில்லை, இருமொழிக் கொள்கையில் உறுதி, வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறவேண்டும், தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்று மாநில அரசு சொல்லும் அதே கருத்துகளை விஜய் பிரதிபலித்திருப்பது தான் மேலும் வேடிக்கை.
ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேசுவதாக எண்ணி, மத்தியிலே நடந்துகொண்டிருக்கின்ற சிறந்த ஆட்சியை, ஒரு இந்திய குடிமகனாக பாரதத்தை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் பாரத தலைவரை, உலகம் போற்றுகின்ற ஒரு சாதனை மனிதரை, சாதாரண மனிதராக எண்ணிக் கொண்டு கேலியாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இனி வருங்காலங்களில் இவை அனைத்தும் தவிர்த்து அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து உண்மையான கருத்துகளைப் பேசி ஆக்கப்பூர்வமான, நாகரிகமான அரசியலில் விஜய் ஈடுபடுவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், ரம்மி விளம்பரத்தில் நடித்திருந்தார்.
- இதுகுறித்து அவர் தற்போது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், சமீபத்தில் ரம்மி விளையாட்டு விளம்பத்திரத்தில் நடித்திருந்தது பல விவாதத்தை கிளப்பியது. அவர் சூதாட்டத்தை ஆதரிப்பதாகவும் இதனால் பல குடும்பங்களில் வாழ்கை சீரழியும் அவலம் உள்ளது எனவும் பலரும் அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

சரத்குமார் நடித்த ரம்மி விளம்பர காட்சி
இந்நிலையில் இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் அவரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு ஓட்டு போடுங்கள் என கேட்கிறேன் ஆனால், யாரும் ஓட்டுப் போடுவதில்லை; சரத்குமார் சொன்னால் ரம்மி மட்டும் எப்படி விளையாடுவார்கள் என காட்டமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
- மது மற்றும் போதை பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள்.
- 34 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்துள்ளது.
சென்னை:
மது மற்றும் போதை பொருட்களுக்கு எதிராகவும், பூரண மது விலக்கை அமல்படுத்த கோரியும் சென்னை எழும்பூரில் இன்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு கட்சி தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் சுந்தர் முன்னிலை வகித்தார்.
துணை பொதுச்செயலாளர் மகாலிங்கம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். தலைமை நிலைய துணை செயலாளர் அந்தோணி ராஜ் உறுதிமொழியை வாசித்தார்.
ஆந்திர மாநில தென் மண்டல செயலாளர் லோகநாதன், மாணவர் அணி துணை செயலாளர் கிஷோர், வர்த்தகர் அணி செயலாளர் பெருமாள், இளைஞர் அணி செயலாளர் கிச்சா ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்ற சரத்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மது மற்றும் போதை பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருவதாக கூறுகிறார்கள்.
இதனை தடுக்க தற்போதுள்ள 1 லட்சம் போலீசார் போதாது. இதற்காக தனிப்படை அமைக்க வேண்டும். 36 ஆயிரம் கோடி வருவாய் மதுவால் கிடைப்பதாக கூறுகிறார்கள்.
அதனை ஈடுகட்ட தொழில் வளத்தை மேம்படுத்தி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். 34 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்துள்ளது.
அப்போது எப்படி சமாளித்தார்கள் என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம்.
இவ்வாறு சரத்குமார் கூறினார்.
- வட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ரெட்ரோஸ் முருகேசபாண்டியன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
- தென் சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக எஸ்.ஜி.ராஜாவும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.ஜெ.எஸ்.பாஸ்கரனும், திருவள்ளூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.வேல்ராஜனும் நியமிக்கப்படுகிறார்கள்.
சென்னை:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கட்சி பணிகளை திறன்பட செயல்படுத்தாத காரணத்தால், தென் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஏ.பாலகிருஷ்ணன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.வி.சிவராஜூ, தென் சென்னை மத்திய மாவட்டச் செயலாளர் ஆர்.நடராஜ்குமார், திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சந்தனக்குமார் ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட பிரதிநிதிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.
மேலும், வட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ரெட்ரோஸ் முருகேசபாண்டியன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
தென் சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக எஸ்.ஜி.ராஜாவும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.ஜெ.எஸ்.பாஸ்கரனும், திருவள்ளூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.வேல்ராஜனும் நியமிக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தை கட்சியின் சென்னை மண்டல நிலையச் செயலாளர் புரசை டி.நாகப்பனும், வட சென்னை மேற்கு மாவட்டத்தை கட்சியின் மாநில மாணவரணி துணைச் செயலாளர் கிஷோரும், தென் சென்னை மத்திய மாவட்டத்தை கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் டி.மகாலிங்கமும் மேற்பார்வை செய்வார்கள்.
புதிய நிர்வாகிகளுக்கு சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
- மாஸ்டர் படத்திற்குப் பிறகு நடக்கும் விழா என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'வாரிசு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காகத் தமிழ்நாடு முழுவதுமிருந்தும் ரசிகர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.

வாரிசு இசை வெளியீட்டு விழா
மாஸ்டர் படத்திற்குப் பிறகு நடக்கும் விழா என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் ரசிகர்களுக்கு விஜய் குட்டி கதை சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அரசியல் தொடர்பான தனது நிலைப்பாட்டையும் மறைமுகமாக வெளிப்படுத்துவார் எனவும் பரவலாக பேசப்படுகிறது.

வாரிசு இசை வெளியீட்டு விழா
இந்நிலையில், 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் கூறியதாவது, "விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று நான் 'சூர்யவம்சம்' திரைப்படத்தின் 175-வது நாள் விழாவில் கூறினேன். தற்போது அது நடந்து விட்டது. விஜய் தான் இப்போது சூப்பர் ஸ்டார். நான் அப்போது இதை சொன்ன போது கலைஞர் கருணாநிதி கூட ஆச்சர்யப்பட்டார்" என்று கூறினார்.
- தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து, சென்னை டிபிஐ வளாகத்தில் 3-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகிறார்கள்.
- இடைநிலை ஆசிரியர்களை அழைத்து பேசி, சம வேலைக்கு, சம ஊதியம் என்ற அடிப்படையில் அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்க பரிசீலித்து, நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
சென்னை:
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
7- வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கிடையே பெரிய அளவில் இருக்கின்ற ஊதிய முரண் பாடுகளை களையவும், "சம வேலைக்கு சம ஊதியம்" என்கின்ற கொள்கையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசின் தொடக்க பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து, சென்னை டிபிஐ வளாகத்தில் 3-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகிறார்கள்.
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினையும், உண்ணாவிரத போராட்டத்தின் தீவிரத்தையும் உணர்ந்து, முதல்-அமைச்சர் சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, 6-வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களைந்து, இடைநிலை ஆசிரியர்களை அழைத்து பேசி, "சம வேலைக்கு, சம ஊதியம்" என்ற அடிப்படையில் அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்க பரிசீலித்து, நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு சாதாரணமாக எளிதில் கிடைத்துவிடவில்லை.
- இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தமிழ்நாடு என்ற பெயர் அமலுக்கு வந்த நாளான ஜனவரி 14-ஐ தமிழ்நாடு தினமாக நாம் ஏன் கொண்டாடக்கூடாது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'தமிழ்நாடு' என்ற பெயர் நமக்கு சாதாரணமாக எளிதில் கிடைத்துவிடவில்லை. எண்ணற்ற தலைவர்கள், தியாகிகளின் போராட்டம் மற்றும் உயிர்த்தியாகத்தால் தான் சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் பெற்றது. முக்கியமாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல சுதந்திர போராட்ட வீரர் சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். அதன் காரணமாக 1967-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி, சென்னை மாகாணத்துக்கு 'தமிழ்நாடு'என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தமிழ்நாடு என்ற பெயர் அமலுக்கு வந்த நாளான ஜனவரி 14-ஐ தமிழ்நாடு தினமாக நாம் ஏன் கொண்டாடக்கூடாது. தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகையை ஜனவரி 14-ல் கொண்டாடும் அதே தினத்தில் தமிழ்நாடு தினம் கொண்டாடினால் கூடுதல் சிறப்பாக இருக்கும். மேலும், தமிழ்நாடு பெயர் உருவாக காரணமாக அமைந்த தியாகி சங்கரலிங்கனாருக்கு மெரீனாவில் சிலை வைத்தும், அவர் தியாகத்தை கவுரவிக்கும் விதமாக, தியாகி சங்கரலிங்கனார் தினம் அனுசரிக்கப்பட வேண்டும். இனி எந்தவொரு காலக்கட்டத்திலும் தமிழ்நாடு, 'தமிழ்நாடு' என்றே அழைக்கப்படும். ஜனவரி 14 தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படம் வெளியான ஏழு நாட்களில் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வாரிசு
பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் வெளியான ஏழு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.

ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடிய சரத்குமார்
இப்படத்தில் விவேக் வரிகளில் விஜய் மற்றும் மானசி பாடிய 'ரஞ்சிதமே' பாடல் தற்போது வரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து யூ டியூபில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், 'ரஞ்சிதமே' பாடலுக்கு நடிகர் சரத்குமார் குத்தாட்டம் போட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'கிரிமினல்'.
- இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர்.
அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

கிரிமினல் படக்குழு
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 23-ஆம் தேதி மதுரையில் தொடங்கியது. 'கிரிமினல்'படம் குறித்து பார்சா பிக்சர்ஸின் தயாரிப்பாளர் பி.ஆர். மீனாக்ஷி சுந்தரம் பேசும்போது, "எங்களுடைய புதிய புராஜெக்ட்டான 'கிரிமினல்' வெற்றிகரமாக மதுரையில் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி. மொத்தப் படத்தையும் ஒரே ஷெட்யூலாக 40 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். இதற்கு முன்பு நடித்திராத தனித்துவமான கதாபாத்திரங்களில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் நடிக்க இருக்கிறார்கள். கவுதம் கார்த்திக் அக்யூஸ்ட்டாக நடிக்க காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடிக்கிறார். பல படங்களில் அவர் ஸ்டைலிஷான காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் இதில் தனித்துவமாகவும் புதிதாகவும் பார்வையளர்களுத் தெரிவார்".
பிக் பிரிண்ட் பிக்சர்ஸின் தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறியதாவது, "கிரிமினல்' படத்தின் கதையும், தக்ஷிண மூர்த்தி ராம்குமார் அதைத் திரைக்கதையாக மாற்றியிருக்கக் கூடிய விதமும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டும் விதமாக அமையும். அவர் கதையை சொன்னபோது, கதையின் பல தருணங்கள் ஒரு அனுபவமிக்க தேர்ந்த இயக்குனர் சொல்வது போல இருந்தது. கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமாரின் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருக்கும். திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த படத்தில் அங்கம் வகிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அடுத்த மாதம் பிப்ரவரி 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.