என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரத்குமார்"

    • அவரது நடிப்பில் வெளியான படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.
    • பிளாக் காபியில் நெய் கலந்து சாப்பிடும் யுக்தி, அவர் மூலமாகவே ‘டிரெண்ட்' ஆகி போயிருக்கிறது.

    தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சரத்குமார், 71 வயதிலும் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் நடித்துக் கொண்டிருக்கிறார். '3 பி.எச்.கே.', 'டியூட்', 'கொம்புசீவி' என வரிசையாக அவரது நடிப்பில் வெளியான படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.

    நடிப்பு தாண்டி கட்டுடலுக்கும் சொந்தக்காரரான சரத்குமார், உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்க வழக்கங்களை (டயட்) கடைபிடித்து உடலை பேணிக்காத்து வருகிறார். பிளாக் காபியில் நெய் கலந்து சாப்பிடும் யுக்தி, அவர் மூலமாகவே 'டிரெண்ட்' ஆகி போயிருக்கிறது.

    இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சரத்குமாரிடம் '71 வயதிலும் இப்படி உடற்கட்டுடன் இருக்க என்ன காரணம்?' என கேட்கப்பட்டது. அதற்கு, "71 வயதில் நான் இப்படி இருக்கிறேன் என்றால் நான் புகைப்பிடிப்பதில்லை, குடிப்பழக்கமும் கிடையாது. என்னிடம் நல்ல பழக்க வழக்கங்களே உள்ளன. அதுதான் இதற்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன்" என சரத்குமார் கூறியுள்ளார்.

    • மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை
    • எதிர்த்து பேசினால் தான் அரசியல் என்ற எண்ணத்தில் விஜய் பயணிக்கிறார்

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லைக்கு சென்ற பா.ஜனதாவின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமாருக்கு அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கு செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், 

    "100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயரை மாற்றினார்கள் என்றால் பொதுவான பெயரை வைத்துள்ளார்கள். காந்தி பெயரை தூக்க வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. ஏதாவது ஒரு காரணத்தை சொல்ல வேண்டும் என்பதற்காகவே இதனை எதிர் கட்சியினர் சொல்கிறார்கள். வேலை வாய்ப்பு திட்டத்தில் உள்ள பலன்கள் என்ன என்பதை அறிந்து பேச வேண்டும். 100 நாட்களை 125 நாட்களாக உயர்த்தி உள்ளனர். மாநில அரசு இந்த திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என சொல்வதால் தான் இந்த திட்டம் அவர்களுக்கு இடிக்கிறது.

    மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் 90 சதவீதம் திட்டங்கள் மத்திய அரசின் திட்டமே செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி விட்டு தி.மு.க தனது பெயரை வைத்துக் கொள்கி றது. மதச்சார்பின்மை குறித்து தி.மு.க. பேசுவது வேடிக்கையாக உள்ளது.

    தீபாவளி கொண்டாட மாட்டார்கள். வேறு எந்த விழாவும் கொண்டாட மாட்டார்கள். ஆனால் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடி கொள்கிறார்கள். இந்துக்களை புறக்கணிப்பது தி.மு.க. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். தீப தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது. தீபத்தூண் விவகாரத்தில் அரசு மாற்றி மாற்றி பேசி வருகிறது.

    தேவையற்ற விஷயங்களை புகுத்துவது தவறான ஒன்று. பிறர் நம்பிக்கையை கெடுக்கும் விதமாக பேசக்கூடாது. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் உங்களோடு இருக்க வேண்டும். பிறரது நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் செய்யக் கூடாது. தேர்தல் வரும்போது மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை தெளிவாக மக்களிடம் எடுத்துச் சொல்ல இருக்கிறோம். அதன் பின்னர் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது தெரியும்.

    தமிழக வெற்றிக் கழகம் என்று முழுசாக சொன்னால் எனக்கு தெரியவில்லை. த.வெ.க., இ.வெ.க., மு.வெ.க. என சொன்னால்தான் தெரிகிறது. அரசியல் கட்சி ஆரம்பித்தால் தேர்தல் பணி தொடங்குவது அவர்களது வேலை. அதனை அவர்கள் தொடங்கியுள்ளார்கள். விஜய்க்கு யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்? என்று தெரியவில்லை. அவர் அரசியல் பேசுகிறார். எதிர்த்து பேசினால் தான் அரசியல் என்ற எண்ணத்தில் அவர் பயணித்து வருகிறார்.

    விஜயை பிரம்மாண்டமாக காட்டி அவரது கட்சி பெரிய கட்சியாக மக்கள் மத்தியில் காட்டப்பட்டு வருகிறது. உலகத்தில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க. உள்ளது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. தான் பெரிய கட்சி. 2026-ம் ஆண்டு தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னுடன் இருப்பவர்களை போட்டியிட்டு வெற்றி பெற செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கிறேன்.

    ஜனவரி மாதம் கூட்டணி நிர்ணயிக்கப்பட்ட பின்னர் முழுவதுமாக இறங்கி தேர்தல் பணியாற்ற தயாராகி வருகிறேன். நான் சட்டமன்றத் தேர்தலில் எங்கும் போட்டியிடவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்தாலும் பிறருக்காக பிரசாரம் செய்து ஆட்சி மாற்றத்திற்காக பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். 

    • இப்படம் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    யுகபாரதி, பா. விஜய், சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு ஆகியோரின் பாடல் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். இப்படம் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இதற்கு முன்னதாக, இப்படத்தின் 'உன்ன நான் பாத்தா', 'வஸ்தாரா' ஆகிய பாடல்கள் வெளியானது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து தற்போது 'கொம்புசீவி' படத்தின் 3-வது பாடலான 'கருப்பன்' வெளியாகி உள்ளது. பாலா சிவசாமி எழுதியுள்ள பாடல் வரிகளுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க மகாலிங்கம் பாடியுள்ளார். 



    • இயக்குநர் பொன்ராமிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும்.
    • இன்றைய தலைமுறையினர் இதைத்தான் ரசிக்கிறார்கள் என தெரிந்து கொண்டு இப்படி ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்.

    இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    யுகபாரதி, பா. விஜய், சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு ஆகியோரின் பாடல் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். இப்படம் நாளை மறுநாள் முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்த நிலையில், 'கொம்புசீவி' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பிரேமலதா விஜயகாந்த், எல். கே. சுதீஷ், விஜய பிரபாகரன், இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், எம். ராஜேஷ், மித்ரன் ஆர். ஜவகர், நடிகர் ரியோ, நாயகர்கள் சரத்குமார் - சண்முக பாண்டியன் விஜயகாந்த், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், கலை இயக்குநர் சரவணன் அபிராமன், படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், நடிகர் கல்கி ராஜா, தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா, இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில், ''கொம்பு சீவி படத்தின் போஸ்டரை பார்க்கும்போது எனர்ஜியாக இருக்கிறது. கொம்பு சீவி என கிராமப்புறத்தில் காளையை குறிப்பிடுவார்கள். இதில் யார் கொம்பு சீவி என தெரியவில்லை. இரண்டு பேரும் அந்த அளவிற்கு இருக்கிறார்கள். கேப்டன் விஜயகாந்த் கண்களில் ஒரு நெருப்பு இருக்கும், ஒரு வேகம் இருக்கும். அந்த நெருப்பு கலந்த பார்வை சண்முக பாண்டியனிடமும் இருக்கிறது. 'உனக்கு நான் சளைத்தவன் இல்லடா..!' என சரத்குமாரும் அதில் ஆக்ரோஷமாக இருக்கிறார். அவரது கெட்டப் நன்றாக இருக்கிறது. 'வயதானாலும் நான் கொம்பு சீவின காளை டா..!' என்பது போல் இருக்கிறது அவருடைய தோற்றம். அந்த வகையில் இந்த போஸ்டரே படத்தின் வீரத்தை காட்டுகிறது.

    இயக்குநர் பொன்ராமிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நகைச்சுவையை விட வேகம் - ஆக்ஷன் அதிகம் இருக்கும் என நம்புகிறேன். ஏனெனில் இன்றைய தலைமுறையினர் இதைத்தான் ரசிக்கிறார்கள் என தெரிந்து கொண்டு இப்படி ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு படமும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏனென்றால் பொன்ராம் என்னுடைய பிள்ளைகளில் ஒருவர்.

    இயக்குநர் ஒரு இளைஞர், ஹீரோ ஒரு இளைஞர், சரத்குமார் ஒரு இளைஞர், இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா ஒரு இளைஞர். இப்படி இளைஞர்கள் புதிய வேகத்துடன் இணைந்திருக்கிறார்கள்.

    உலகத்திற்கே உரிய ஒரு சரித்திரம் இருக்கிறது. மாற்றம் என்பது மட்டுமே மாறாதது. அது எல்லாத்துறையிலும் உண்டு. சமூகம்- அரசியல்- திரைத்துறை- என எல்லாத் துறையிலும் இது உண்டு. எனக்குத் தெரிந்து திரையுலகில் ஒரு காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர்-பி யு சின்னப்பா, அதற்குப் பிறகு எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல் அதற்குப் பிறகு இன்றைய சூப்பர் ஸ்டார்கள் என மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை யாராலும் மாற்ற முடியாது. இது காலத்தின் கட்டாயம். ஆகவே மாற்றத்திற்குரிய இளைஞர்கள் வெற்றி பெற வேண்டும். ஏனெனில் இந்த இளைஞர்களும், தமிழகத்தில் உள்ள மக்களும் ஒரு மாற்றத்தை விரும்பி கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்றம் இந்த திரைப்படத்திலும் நிகழ வேண்டும், வாழ்த்தி விடைபெறுகிறேன், நன்றி,'' என்றார்.

    • இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
    • ‘கொம்புசீவி’ கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.

    இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    யுகபாரதி, பா. விஜய், சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு ஆகியோரின் பாடல் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.

    இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் என வெளியானது. அதனை தொடர்ந்து 'கொம்புசீவி' கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், 'கொம்புசீவி' படம் கிறிஸ்துமஸுக்கு முன்னதாக வருகிற 19-ந்தேதி வெளியாகும் என டிரெய்லரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. டிரெய்லரில் கிராமத்திற்காக போராடும் சரத்குமார், சண்முக பாண்டியனை சுற்றி வரும் கதையில் ஆக்ஷன், காதல், நகைச்சுவை கலந்து உருவாகி உள்ளது. 



    • இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
    • யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்.ஜி.ஆர் மகன்' மற்றும் 'டி.எஸ்.பி' போன்ற திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் தற்போது 'கொம்புசீவி' என்ற படத்தை இயக்கியுள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ள இந்தப் படத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    மேலும் இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் வெளியானது.

    இந்த நிலையில், 'கொம்புசீவி' படத்தின் 'வஸ்தாரா' பாடல் வெளியாகி உள்ளது. சூப்பர் சுப்பு வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்பாடலை விஷ்ணு பிரியாவுடன் இணைந்து யுவனும் பாடியுள்ளார்.



    • இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் என வெளியானது.

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குநர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

    அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.

    இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் என வெளியானது. இருப்பினும் இப்படம் வெளியாவது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில், 'கொம்புசீவி' படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று அருண் விஜயின் 'ரெட்ட தல' படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 




    • பைசன் படம் சாதியை பற்றிய படமில்லை.
    • ஹாலிவுட் படங்களில் கூட கறுப்பின மக்களின் துன்பங்களை பற்றி பேசுகிறார்கள்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக பிரமுகரான சரத்குமாரிடம், முந்தைய காலகட்டத்தில் எஜமான், தேவர் மகன், நாட்டாமை போன்ற சாதிய படங்கள் மக்களால் ரசிக்கப்பட்ட நிலையில், தற்போது சாதிக்கு எதிரான பைசன் போன்ற படங்கள் வருகிறது. இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த சரத்குமார், "நாட்டாமை படம் சாதிய படம் கிடையாது. அது ஒரு பஞ்சாயத்துத் தலைவர் கதை. அதே போல் தேவர் மகன் படம் அந்த பகுதியில் படம் எடுத்ததால் தேவர் மகன் என்று பெயர் வைத்தார்கள்.

    பைசன் படம் சாதியை பற்றிய படமில்லை. ஹாலிவுட் படங்களில் கூட கறுப்பின மக்களின் துன்பங்களை பற்றி பேசுகிறார்கள். அதனால் பழைய காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருக்கிறது, அது நடக்கக்கூடாது என்று படம் எடுப்பது தவறில்லை" என்று தெரிவித்தார்.

    • ஒரு தியேட்டரில் ரசிகர்களின் மனநிலை அறிய காத்திருந்தோம்.
    • சில நேரம் நம் பார்வையை விட ரசிகர்களின் பார்வை வேறுவிதமானது என்பதையும் புரிந்துகொண்டேன்.

    தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் சரத்குமார், சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

    சமீபத்தில் வெளியான 'டியூட்' படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் கவனம் ஈர்த்தது. இதற்கிடையில் தனது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த 'சூர்ய வம்சம்' படம் குறித்த நினைவலைகளை அவர் பகிர்ந்துள்ளார்.



    அவர் கூறுகையில், ''சூர்ய வம்சம் படம் ரிலீசான சமயத்தில் ஒரு தியேட்டரில் ரசிகர்களின் மனநிலை அறிய காத்திருந்தோம். அப்போது ஒரு இயக்குனர் என்னிடம் வந்து 'என்ன படம் எடுத்துள்ளீர்கள், இது எப்படி ஓடும்?' என்று கேட்டு சென்றார். எல்லோரும் சூப்பர் என்று சொல்லும் சூழலில், இவர் இப்படி சொல்லிட்டாரே... என்று யோசித்தேன். சில நேரம் நம் பார்வையை விட ரசிகர்களின் பார்வை வேறுவிதமானது என்பதையும் புரிந்துகொண்டேன்.

    என்னை பொறுத்தவரை இன்று வரை தியேட்டர்களில் அதிக ரசிகர்கள் பார்த்த படம் என்றால், அது சூர்ய வம்சம் படம் தான். அதை உறுதியாகவே சொல்வேன்'', என்றார்.

    • இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

    அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.

    இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

    இந்த நிலையில், 'கொம்புசீவி' படத்தின் முதல் சிங்கிளான 'உன்ன நான் பாத்த' பாடல் இன்று மாலை 4.45 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. 

    • கீர்த்தி செதுக்கிய சரத்குமாரைதான் நீங்கள் திரையில் பார்த்தீர்கள்.
    • பிரேக்கப் சீனில் மமிதா மிகச்சிறப்பாக நடித்திருந்தார்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'டியூட்'. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியானது முதல் வசூல் குவித்து வரும் நிலையில் 5 நாட்களில் ரூ.95 கோடி வசூலித்தது. விரைவில் ரூ.100 கோடியை எட்டுகிறது.

    இதனை தொடர்ந்து, 'டியூட்' படம் வெற்றி அடைந்ததற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இப்படத்தில் நடித்த நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் சரத்குமார் பேசுகையில்,

    "படத்திற்கு ஆதரவு கொடுத்த மீடியா, ரசிகர்களுக்கு நன்றி. படத்தில் வாய்ப்பு கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு நன்றி. அப்பா, தாத்தா கதாபாத்திரங்கள் வெறுமனே நடிக்காமல் அந்தக் கதையின் நாயகனாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படித்தான் 'காஞ்சனா', 'போர் தொழில்' போன்ற படங்களில் நடித்தேன்.

    'டியூட்' படத்திலும் நல்ல கதாபாத்திரம் கொடுத்த கீர்த்திக்கு நன்றி. அழகான சோஷியல் மெசேஜை சரியாக கீர்த்தி கொண்டு சேர்த்திருக்கிறார். மூன்று முறை இந்தப் படம் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிதாக தெரிகிறது. கீர்த்தி செதுக்கிய சரத்குமாரைதான் நீங்கள் திரையில் பார்த்தீர்கள். பிரேக்கப் சீனில் மமிதா மிகச்சிறப்பாக நடித்திருந்தார். எல்லோருமே சிறப்பாக 'டியூட்' படத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி என்றார். 

    • மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
    • இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது.

    1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டது.

    தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

    இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், இந்த ஒன்றுகூடல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    ×