என் மலர்
நீங்கள் தேடியது "Tamilisai Soundararajan"
- ரேடியோவை நாம் மறந்திருந்த காலத்தில் ‘மன் கி பாத்’ மூலம் அதனை மக்களிடம் எடுத்து சென்றுள்ளார் பாரத பிரதமர்.
- போஸ்ட் ஆபீஸ் மறந்த போது செல்வமகள் திட்டம் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த அதனை மக்களிடையே எடுத்துச் சென்றுள்ளார்.
நெல்லை:
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நெல்லை வந்தார்.
விருந்தினர் மாளிகையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்குவதற்கு நானும் ஒரு காரணம். உணர்வு பூர்வமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன்.
ஐதராபாத்திலும் கவர்னர் என்ற வகையில் முதல் குடிமகனாக வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்க திட்டமிருந்தது. ஆனால் நான் சாதாரண குடிமகனாக உணர்வு பூர்வமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ள நெல்லை வந்துள்ளேன்.
ரேடியோவை நாம் மறந்திருந்த காலத்தில் 'மன் கி பாத்' மூலம் அதனை மக்களிடம் எடுத்து சென்றுள்ளார் பாரத பிரதமர். அதேபோல் போஸ்ட் ஆபீஸ் மறந்த போது செல்வமகள் திட்டம் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த அதனை மக்களிடையே எடுத்துச் சென்றுள்ளார்.
அது போல் தான் ரெயில் என்றாலே மிக தாமதமாக செல்லும். அதனால் ரெயிலில் போக முடியாது என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ரெயிலில் பழமை இருக்கும்.
ஆனால் புதுமையாக வேகத்தை அதிகரிப்போம் என இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார். வந்தே பாரத் ரெயில் நெல்லைக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
முதலமைச்சர் இன்று ஒன்றை சொல்லி இருக்கிறார். அதாவது பிரதம அமைச்சர் ஐந்து டீ யை முன்னிலைப்படுத்தினார்.
டேலண்ட், டூரிசம், டெக்னாலஜி, ட்ரேட் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தினார். ஆனால் எதுவுமே இப்பொழுது இல்லை என கூறி உள்ளார்.
ஆனால் டேலண்ட் ஆகத்தான் இந்த வந்தே பாரத் ரெயில் வந்துள்ளது. டெக்னாலஜி காரணமாகத்தான் வந்தே பாரத் வந்துள்ளது. டூரிசம் காரணமாகத்தான் வந்தே பாரத் வந்துள்ளது.
அதை மாதிரி ட்ரேட் எனப்படும் வியாபாரத்தை மேம்படுத்துவதற்கு தான் வந்தே பாரத் வந்துள்ளது. எந்த டீ யும் நீங்கள் செயல்படுத்தவில்லை என சொன்னீர்கள். ஆனால் அத்தனை டீ யையும் செயல்படுத்தி தான் இந்த வந்தே பாரத் ரெயில் வந்துள்ளது.
இந்து மதம் சார்ந்த எந்த நிகழ்வாக இருந்தாலும் அதற்கு அனாவசியமாக பல கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டும். அதனை சீர்கெடுக்க வேண்டும் என யாரும் நினைப்பதில்லை. விநாயகர் சிலையை உயரமாக வைக்கக்கூடாது என கூறினார்கள். அதற்காக அளவீடுகளை கட்டுப்படுத்தி குறைத்தோம். அதிக கட்டுப்பாடுகளை விதித்தால் வைக்கும் எண்ணிக்கை குறையும் என்கிற உள்நோக்கத்தோடு தான் செயல்படுத்துகிறார்கள்.
ஆனால் விநாயகரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
சனாதனத்தை எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சனாதனம் இங்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் எந்தவித பாகுபாடும் இல்லாமல் எந்த ஏற்றத் தாழ்வுகள் இல்லாமலும் ஆயிரக்கணக்கான மக்கள் விநாயகரை வைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் சனாதனத்தை ஒழிப்போம் என்று கொசுவை கூட உங்களால் ஒழிக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- நெல்லையில் உள்ள மாலைமலர் அலுவலகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆன்மீக துறையிலும் சிறந்து விளங்கினார்.
நெல்லை:
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு நெல்லையில் உள்ள மாலைமலர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
வழக்கமாக அவரது பிறந்த நாளுக்கு சென்னையில் அவர் வாழ்ந்த வீட்டில் தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவேன். இன்று நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்துள்ளேன்.
எனவே இங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளேன்.
விளையாட்டு துறையில் இளைஞர்களை ஊக்கப் படுத்துவதிலும், ஊடகத் துறையில் இளைஞர்களை ஊக்கப்படுத்துவதிலும் தன்னிகரற்று விளங்கிய பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆன்மீக துறையிலும் சிறந்து விளங்கினார்.
ஆசிய அளவிலான விளையாட்டு போட்டியில் இந்தியா 2 வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளது. இத்தகைய சாதனைகளுக்கு அவர் விளையாட்டு துறையில் முன்னுதாரணமாக விளங்கியதே காரணமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பா.ஜனதா நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர், மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட பொது செயலாளர் முத்துபலவேசம் ஆகியோர் உடன் இருந்தனர்.
- வீடு தோறும் குடிநீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மோடி கொண்டு வந்து இருக்கிறார்.
- தவறு சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக மோடி 9 ஆண்டுகாலம் எதையுமே செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
தூத்துக்குடி:
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடு பல முன்னேற்றங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது. மகளிருக்கு 33 சதவிதம் இட ஒதுக்கீடு கவலை அளிக்க கூடியது இல்லை. இங்கு இருக்க கூடியவர்களுக்கு கவலை அளிக்கிறது. காரணம் என்னவென்றால் நாடு வேகமாக முன்னேறுகிறது.
அதைப்பற்றி தவறு சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக மோடி 9 ஆண்டுகாலம் எதையுமே செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
தென் பகுதியில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் தொகுதியில் தண்ணீர் பஞ்சம் இருக்கிறது என கேள்விப்பட்டேன். வீடு தோறும் குடிநீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மோடி கொண்டு வந்து இருக்கிறார். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி மக்களுக்கு செயல்படவைக்க வேண்டும்.
அமைச்சர் கீதாஜீவன் 33 சதவித இட ஒதுக்கீடு வரும், ஆனா வராது என்று நேற்று கூறினார். மகளிர் இட ஒதுக்கீடு 33 சதவீதம் எங்களை பொறுத்த அளவிற்கும் வரும். அவர்களை பொறுத்த அளவிற்கு வராது. அவர்கள் நெகட்டிவாக யோசிக்கிறார்கள். வராது என்று சொல்லிக் கொண்டிருந்தால் பாராளுமன்றத்திலும் இதுதான் அவர்களுடைய மனநிலை. அவர்கள் வரவேண்டாம் என்று நினைத்தார்கள்.
முன்னர் கூட்டணி ஆட்சியில் அதிக பெரும்பான்மையாக இருந்தார்கள். ஆனால் கொண்டும் வர முடியவில்லை. தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் கொண்டு வரப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுத்து 2028 அல்லது 29-ல் வரும். இதற்கு முன்னர் வருமா, வராதா என்றனர்.
ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அவர்கள் இப்படி பேசகூடாது. 33 சதவீதம் இட ஒதுக்கீட்டால் பல பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. மற்ற பெண்களுக்கு இட ஒதுக்கீடு ஒதுக்கும்போது அவர்களுக்கு எப்படி பிடிக்கும்? அரசியலில் இருப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கிறதே என்று பெண்ணாக இருந்து முதலில் வரவேற்போம். அதற்கு அப்புறம் விமர்சிப்போம். இதுதான் இங்கு உள்ள பிரச்சனையாக உள்ளது. நல்லது செய்தாலும் வரவேற்பது கிடையாது.
இது மிகப்பெரிய சமுதாயப் புரட்சி. சிறிய மாநிலம் புதுச்சேரியில் 13 பெண் எம்.எல்.ஏ.க்கள் உட்காரப் போகிறார்கள். என்னதான் விமர்சனம் செய்தாலும் நன்றியை சொல்லிக் கொள்கிறோம்.
காவிரி நீர் வரும், ஆனால் வராது. தற்போது கூட்டணியில் தானே உள்ளனர். பேச்சுவார்த்தை நடத்தி கொண்டுவர வேண்டியது தானே. 9 வருடமாக நாடு பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளது.
சென்னையில் இசை கச்சேரியை இவர்களால் கட்டுப்படுத்தப்படுத்த முடியவில்லை. ஆனால் டெல்லியில் மிகச் சிறப்பாக ஜி 20 மாநாடு நடத்தினோம்.
2015-ல் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டால் 2023 முடிவடையும். திட்டம் என்று வரும் போது 8 வருடம் ஆகும். இது தான் எதார்த்தமான உண்மை. உலகத்துக்கே தெரியும் மோடி ஊழல் இல்லாத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீட் தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தால் மட்டுமே மருத்துவ மேற்படிப்பில் சேரலாம்.
- இந்தியாவில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்கள் அனைவருக்குமே மருத்துவ மேற்படிப்பு படிக்க இடம் கிடைப்பதில்லை.
சென்னை:
நீட் தேர்வால் பூஜ்யம்தான் பலன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறி இருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் "பூஜ்யம்" மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை போல தவறாக விமர்சிப்பவர்களுக்கு நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண், பூஜ்ஜியம் பர்சன்டைல் என்றால் என்ன? என்பதை பற்றிய புரிதல் முதலில் அறிந்து கொள்ளவும்.
நீட் தேர்வை பற்றிய புரிதல் இன்றி நீட் தேர்வை ஒழிப்பதாக கூறிக்கொண்டிருப்பவர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லாதது ஒன்றும் ஆச்சரியமல்ல?
நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் மேற்படிப்பு படிக்க இடம் கிடைக்காது என்பது நிதர்சனமான உண்மை.
நீட் தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தால் மட்டுமே மருத்துவ மேற்படிப்பில் சேரலாம். இந்தியாவில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்கள் அனைவருக்குமே மருத்துவ மேற்படிப்பு படிக்க இடம் கிடைப்பதில்லை.
மருத்துவ மேற்படிப்பில் நீட் தேர்வில் உச்சபட்ச மதிப்பெண்கள் பெற்றவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க முன்னுரிமை. அத்தகைய இடங்கள் முழுமையாக நிரம்பிய பின்னர் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கட்ஆப் மதிப்பெண்கள் பெற முடியாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் காலியாக உள்ள இடங்களை பயன்படுத்திக் கொள்ளும் இந்த முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் புரிதல் மிக அவசியம்.
நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு நிச்சயம் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காது.
குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கே இந்த முறை. இதை விமர்சிப்பவர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் மிக அவசியம்.
இதைப்பற்றி புரிதல் இல்லாமல் மக்களையும், மாணவர்களையும் குழப்பி மாணவச் செல்வங்களிடம் தவறான எண்ணங்களை கொண்டு சேர்க்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காய்ச்சல் முகாம்களை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- புதுவை அரசு ஆஸ்பத்திரியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதிகளை உருவாக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சுகாதாரத்துறை ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, வளர்ச்சி ஆணையர் ஜவகர், சுகாதாரத்துறை செயலாளர் முத்தம்மா , இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
புதுவையில் டெங்கு நோய் பரவதை தடுக்கவும், அதற்கு உரிய சிகிச்சை அளிக்கவும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சமீபத்தில் தொடங்கப்பட்ட சந்திரயான் திட்டத்தை விரிவாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவ ஊழியர்கள் அனைவருக்குமான பொதுவான ஒரே சீருடை வழங்கவும், டாக்டர்களின் வருகை பதிவினை கண்காணிக்கும் விதமாக பயோமெட்ரிக் வருகைப்பதிவையும் நிறுவவேண்டும்.
நிபா தொற்று பரவி வரும் சூழலில் நோய்த்தொற்று உள்ள பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் முகாம்களை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை அரசு ஆஸ்பத்திரியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதிகளை உருவாக்க வேண்டும். சேவா பக் வாடா கொண்டாட்டத்தையொட்டி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தூய்மையாக வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நாங்கள் கடுமையாக படித்ததால்தான் முன்னேறியுள்ளோம்.
- ஒழுக்கத்தோடு கூடிய வாழ்வியல் முறைதான் சனாதனம்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தது.
கருணாநிதி சிலையை ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்து பேசினார். அவர் பேசும்போது, திராவிட இயக்கங்களால்தான் கவர்னராக தமிழிசை பதவி வகிக்கிறார் என்று பேசினார். அவர் பேச்சுக்கு கவர்னர் தமிழிசை இன்று பதிலடி கொடுத்தார்.
புதுவை கடற்கரை சாலையில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்த கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் கடுமையாக படித்ததால்தான் முன்னேறியுள்ளோம். மற்றொருவரின் முன்னேற்றத்தில் மற்றவர்களுக்கு பங்கு உள்ளது என கூறுவது அவருக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.
அவர்களை தூக்கிக்கொண்டுபோய் மேலே வைத்தனர். நான் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்தேன். என் முயற்சியால் வெளிநாட்டிற்கு சென்று படித்தேன். சனாதனம் என்றால் தவறான கருத்தை முன்னிறுத்துகின்றனர். ஆ.ராசா எப்போதும் அப்படித்தான் பேசி வருகிறார். தம்பி உதயநிதி அதைப்பற்றி தெரியாமல் பேசக்கூடாது.
ஒழுக்கத்தோடு கூடிய வாழ்வியல் முறைதான் சனாதனம். சனாதனம் என்றால் சாதி மட்டும்தான் என சொல்கின்றனர். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் எதற்கும் சாதி கேட்காதீர்கள். சாதிரீதியாக ஒதுக்கீடு தராதீர்கள், ஏன் தி.மு.க.வில் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஏன் முதலமைச்சர் பதவியை தர மறுக்கிறீர்கள்?
உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது. உங்கள் கட்சியில் உங்களைப்போல ஒருவர் தலைவராக வர முடியுமா? சனாதனத்தை எதிர்ப்பவர்கள் உங்கள் கட்சியில் உள்ள சர்வாதிகாரத்தை முதலில் எதிருங்கள். உதயநிதியை விட நன்றாக உழைத்தவர்கள் யாருமே தி.மு.க.வில் இல்லையா? ஆனால் அவர்கள் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது.
ஆ.ராசா கட்சியின் தலைவராகிவிட முடியுமா? மிகவும் அடிமட்டத்தில் உள்ளவர்களை உங்கள் கட்சியின் தலைவராகவோ? முதலமைச்சராகவோ? ஆக்கிவிட முடியுமா?
நீங்கள் எதையும் செய்வதில்லை. உலகிற்கு சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம்? தமிழகம் கல்வியில் உயர பெருந்தலைவர் காமராஜர் போட்ட விதை. நீங்களே எல்லாவற்றுக்கும் சொந்தம் கொண்டாடுவதை ஒப்புக்கொள்ள முடியாது. ஆ.ராசா உங்கள் கட்சியில் நீங்கள் தலைவராக முடியுமா? என முதலில் சொல்லுங்கள். அதன்பின் சனாதனம் பற்றி பேசுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புரட்டாசி மாதம் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம் ஊர்வலத்தில் 21 அழகிய திருக்குடைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று சமர்ப்பிப்பது வழக்கம்.
- திருக்குடை ஊர்வலம் வருகிற 13-ந்தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் ஊர்வலமாக புறப்படுகிறது.
அம்பத்தூர்:
அயனாவரம் திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளையும் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம் ஊர்வலத்தில் 21 அழகிய திருக்குடைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று சமர்ப்பிப்பது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் சிறப்பு பூஜைகளுடன் 21 திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த திருக்குடை ஊர்வலம் வருகிற 13-ந்தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் ஊர்வலமாக புறப்படுகிறது. ஊர்வலத்துக்கு மாநில விஷ்வ இந்து பரிஷத் தலைவர் முனைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமை தாங்குகிறார். திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜி.ராமலிங்கம் வரவேற்கிறார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத வழக்கறிஞர் பிரிவு சு.சீனிவாசன் முன்னிலை வகிக்கிறார். திருக்குடை ஊர்வலத்தை அகில பாரத சன்னியாசிகள் சங்க அறங்காவலர் சுவாமி ஈஸ்வரானந்தா ஆசியுரையுடன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியில் திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் அறங்காவலர்கள் தணிகை வேல், எஸ். சீனிவாசன் உட்பட திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
திருக்குடை ஊர்வலமானது என்.எஸ்.சி.போஸ் ரோடு, வால்டாக்ஸ் ரோடு, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா ரோடு, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, ஸ்டாரன்ஸ் ரோடு, கொன்னூர் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் பக்தர்கள் புடை சூழ ஊர்வலமாக சென்று இரவு அயனாவரத்தில் உள்ள காசி விசுவநாதர் ஆலயம் சிவசக்தி சத்சங் மண்டபத்தில் தங்குகிறது.
- புகார்தாரரான தமிழிசை, தற்போது கவர்னராக பதவி வகித்து வருவதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார்.
- வழக்கில் தூத்துக்குடி போலீசார் சென்னை சிட்டி போலீஸ் பயன்படுத்தக்கூடிய சட்ட பிரிவினை பயன்படுத்தி உள்ளனர்.
மதுரை:
தூத்துக்குடியைச் சேர்த்த லூயிஸ் சோபியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2018-ம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் பயணித்தேன். அந்த விமானத்தில் அப்போதைய தமிழக பாரதிய ஜனதாவின் தலைவரும், தற்போதைய புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களின் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜனும் பயணம் செய்தார்.
விமானத்தில் இருந்து இறங்கும் போது மத்திய அரசை விமர்சித்து நான் கோஷம் எழுப்பினேன். இதையடுத்து கோபமடைந்த தமிழிசை, என்னை மிரட்டும் நோக்கில் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு வந்து, நிலுவையில் இருந்தது. இதற்கிடையே சோபியா மீதான வழக்கில் புகார்தாரரான தமிழிசை சவுந்தரராஜன், தற்போது கவர்னராக பதவி வகித்து வருவதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார்.
மேலும் இந்த வழக்கில் தற்போதைய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை ஒரு தரப்பினராக சேர்க்க கோரி தாக்கல் செய்து இருந்தார் அதன் பெயரில் அவரும் ஒரு எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் அன்புநிதி, இந்த வழக்கில் தூத்துக்குடி போலீசார் சென்னை சிட்டி போலீஸ் பயன்படுத்தக்கூடிய சட்ட பிரிவினை பயன்படுத்தி உள்ளனர். இது சென்னை, கோவை, மதுரை காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்த முடியும். தூத்துக்குடி போலீசார் இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியாது. அதற்கான அதிகாரம் இல்லை என வாதாடினார்.
இதனை பதிவு செய்த நீதிபதி சோபியா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
- நடைபெற வேண்டிய விழாக்கள் எல்லாம் சிறப்பாக ஒரு நட்புணர்வோடு நடக்க வேண்டும்.
- தெலுங்கானா விழாக்களுக்கு முதல்-மந்திரி வருவதில்லை. அதை கவலையோடுதான் எதிர்கொள்கிறேன்.
புதுச்சேரி:
புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் கவர்னர் தமிழிசை கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
விழா முடிந்த பின்னர் கவர்னர் தமிழிசையிடம் தமிழகத்தில் கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பது, நீட் தேர்வு தற்கொலை விவகாரங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து கவர்னர் தமிழிசை கூறியதாவது:-
நாடு 100-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் போது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்று இருக்கும்.
அதேபோல் புதுச்சேரியும் முன்னேறிய மாநிலமாக மாறியிருக்கும். தமிழக முதலமைச்சரின் தேநீர் புறக்கணிப்பு பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
பொதுவாக எதிர் கருத்துகள் இருக்கலாம். ஆனால் நடைபெற வேண்டிய விழாக்கள் எல்லாம் சிறப்பாக ஒரு நட்புணர்வோடு நடக்க வேண்டும். தெலுங்கானா விழாக்களுக்கு முதல்-மந்திரி வருவதில்லை. அதை கவலையோடுதான் எதிர்கொள்கிறேன்.
கருத்து மோதல், கருத்து பரிமாற்றம் இருக்கலாம். ஒருவர் கருத்தை ஒருவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது இல்லை.
விழாவில் கலந்து கொள்ளாமல் இளைய சமுதாயத்தினருக்கு எதை சொல்ல போகிறோம்? தொடர்ச்சியான வழிமுறையை பின்பற்றுவதுதான் சரியானதாக இருக்கும். நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்தே ஆதரித்தவள் நான். இதன்மூலம் பாமர மக்கள் பயனடைந்துள்ளனர்.
இதை வைத்து அரசியல் செய்கின்றனர். தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து என்றார்கள். முடியாது என்று தெரிந்தும் பொய் வாக்குறுதி அளித்தனர். நீட் தேர்வு என்பது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு.
நீட் தேர்வு வேண்டாம் என்பவர்கள் கோர்ட்டுக்கு போக வேண்டியதுதானே? அதை விடுத்து மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம். மாணவர்களை படிக்க விடுங்கள். எதிர்மறையான கருத்துகளை பரப்பாதீர்கள். நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தான் அதிக அளவில் வெற்றி பெறுகிறார்கள்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.