என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilisai Soundararajan"

    • பீகார் மக்கள் பற்றி தி.மு.க.வினர் தரக்குறைவாக பேசியது சரித்திரத்தில் உள்ளது.
    • தமிழர்கள் மீது பிரதமர் மரியாதை வைத்திருப்பதால்தான் செங்கோலை பாராளுமன்றத்தில் வைத்தார்.

    தமிழகத்தில் தி.மு.க.வும், பிற மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் இருப்பவர்களும் பீகார் மக்களை துன்புறுத்துகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

    * பீகார் மக்களை தி.மு.க.வினர் கீழ்த்தரமாக நடத்துவதாக பிரதமர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது?

    * பீகார் மக்கள் பற்றி தி.மு.க.வினர் தரக்குறைவாக பேசியது சரித்திரத்தில் உள்ளது.

    * பீகாரிகள் அறிவில்லாதவர்கள் என கே.என்.நேரு சொன்னார். டேபிள் துடைக்க, பாத்ரூம் கழுவத்தான் சரியானவர்கள் என தயாநிதி கூறினார்.

    * தி.மு.க. மீது வைக்கப்படும் விமர்சனம் தி.மு.க. மீது மட்டும் தான், தமிழர்கள் மீது இல்லை என்பதை முதல்வருக்கு சொல்லிக்கொள்கிறேன்.

    * தமிழர்கள் மீது பிரதமர் மரியாதை வைத்திருப்பதால்தான் செங்கோலை பாராளுமன்றத்தில் வைத்தார்.

    * தமிழக முதல்வரின் வேற்றுமை அரசியல் எடுபடாது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் பா.ஜ.க.வின் கொள்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாலை சரி செய்யாமல் கட்டுப்பாட்டு அறையில் என்ன செய்கிறீர்கள் துணை முதலமைச்சர் அவர்களே.
    • திண்டாடும் திராவிட மாடல் அரசு. வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டிய அரசு.

    சென்னை:

    பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் மிதமான மழைக்கே பல தெருக்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. அசாதாரண மழை என்றால் பரவாயில்லை. சாதாரண மழைக்கு சென்னை தாங்குவதாக தெரியவில்லை. இயற்கையான மழைக்கு கூட 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை துணை முதலமைச்சர் கண்காணித்தார் என்று விளம்பர போட்டோக்கள் வருகின்றன.

    சாலையை சரி செய்து விட்டு கட்டுப்பாட்டு அறையில் பார்த்தால் தான் நல்ல சாலை தெரியும். சாலை சரி செய்யாமல் கட்டுப்பாட்டு அறையில் என்ன செய்கிறீர்கள் துணை முதலமைச்சர் அவர்களே.

    சென்னை மட்டுமல்ல டெல்டாவிலும் இதே கதை தான். ஒரே நாளில் 20 லட்சம் டன் நெற்பயிர்கள் வீணாகி இருக்கின்றன. எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் என்று சொல்லும் முதலமைச்சரே இந்தியாவிற்கே வழிகாட்டுகிறோம் என்று சொல்லிக்கொண்டு தமிழ் மக்களின் வலியைத் தான் கூட்டிக் கொண்டிருக்கிறீர்கள். திண்டாடும் திராவிட மாடல் அரசு. வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டிய அரசு.

    இவ்வாறு அதில் கூறினார்.

    • நீட்டை எதிர்த்து போராட வேண்டுமென்றால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து தான் போராட வேண்டும்...
    • இன்றும் ஆணவக் கொலைகளை தடுக்க முடியாத உங்கள் அரசை எதிர்த்துப் போராடுங்கள்...

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் அவர்களே இந்தியை ஏற்றுக் கொண்டால்தான் கல்வி நிதி என்று எக்காலத்திலும் மத்திய அரசு சொல்லவில்லை. புதிய கல்விக் கொள்கை என்பது தாய் மொழியை ஊக்குவிப்பது தானே தவிர இந்தி மொழியை ஊக்குவிப்பது அல்ல... நீங்கள் இந்தி மொழியை எதிர்த்து போராடுகிறேன் என்றால் இந்தி மொழியை தமிழகத்தில் திணித்த காங்கிரசோடு தான் நீங்கள் போராட வேண்டும்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டு மொழி.. ஆனால் தனியார் பள்ளிக்கு மூன்று மொழி என்று உங்களது பாரபட்சமான கல்வித் திட்டத்திற்கு எதிராக போராடுங்கள்.

    நீட்டை எதிர்த்து போராட வேண்டுமென்றால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து தான் போராட வேண்டும்... நீட்டை எதிர்த்து போராடுவேன் கையெழுத்து போடுவேன் என்று பொய் சொன்னது யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.

    இன்று இல்லாத ஒன்றை எதிர்த்து போராடுகிறேன் என்பது உங்களது திராவிட மாடல் என்கின்ற பொய் மாடல்.

    உலகத்திற்கே பொதுவான வள்ளுவர் ஆரம்ப காலத்தில் காவி உடையில் தான் இருந்தார் இறைவணக்கத்தோடு இறை உணர்வோடு இருந்த வள்ளுவரை வெள்ளுடை உடுக்க வைத்த பாவம் செய்பவர்கள் நீங்கள்... ஆக உங்களையே எதிர்த்து போராடப் போகிறீர்களா..?..

    மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் நாடு முழுவதும் மறைந்திருக்கின்ற நேரத்தில் உங்கள் சொந்த தொகுதியிலேயே துப்புரவு தொழிலாளர்கள் மரணித்திருக்கிறார்களே அதை எதிர்த்து போராடுங்கள்.

    வேங்கை வயலில் நலமுடன் தண்ணீர் இல்லாமல் மலமுடன் தண்ணீர் குடித்த மக்களுக்கு இன்றும் நியாயம் கிடைக்காமல் இருப்பதற்கு எதிராக உங்களுக்கு எதிராக நீங்களே போராடுங்கள்.

    கள்ளச்சாராயத்தினால் 67 உயிர்களை பலிவாங்கி.. அங்கு ஆறுதல் கூட செல்ல முடியாத உங்களது மனிதாபிமானமற்ற செயலை எதிர்த்து போராடுங்கள்.

    இன்றும் ஆணவக் கொலைகளை தடுக்க முடியாத உங்கள் அரசை எதிர்த்துப் போராடுங்கள்...

    பல்கலைக்கழகமாக இருக்கட்டும், காவலர்களிடம் இருந்து இருக்கட்டும்... பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத உங்கள் அவல நிலையை எதிர்த்து போராடுங்கள்.. திராவிட மாடல் ஆட்சியில் இன்று பள்ளி குழந்தைகளுக்கிடையே தலைவிரித்தாடும் சாதிய வேற்றுமையை எதிர்த்து போராடுங்கள்.

    ஒரு விமான சாகசத்தில் கூட பாதுகாப்பு கொடுக்க முடியாமல் ஐந்து பேரின் உயிரை காவு வாங்கிய உங்களது காவல்துறைக்கு எதிராக போராடுங்கள். ஒரு அரசியல் கட்சிக்கு சரியான பாதுகாப்பு கொடுக்காமல் 41 உயிர் பலியாக காரணமாக இருந்த உங்களது பாதுகாப்பு நடவடிக்கைக்கு எதிராக போராடுங்கள். இன்று தமிழகத்தில் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் பொழுது... அதை எதிர்த்து நீங்கள் போராடினால் தான் சரியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தி.மு.க எத்தனை கூட்டங்கள் போட்டாலும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.
    • பா.ஜ.க அடக்குமுறை செய்கிறது என தேவையில்லாத குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.

    கோவை:

    முன்னாள் கவர்னரும், பா.ஜ.க முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன், கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டின் துணை ஜனாதிபதியாக, ஒரு தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெருமை.

    தி.மு.க தமிழருக்கு எந்த ஒரு ஆதரவையும் கொடுக்காததை வரலாறு மன்னிக்காது. முப்பெரும் விழா நடத்தினாலும் நாப்பெரும் விழா நடத்தினாலும் இனிமேல் உங்களுக்கு வெளியேற்றம் தான்.

    தி.மு.க எத்தனை கூட்டங்கள் போட்டாலும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. நோ ரீ என்ட்ரி தி.மு.க.



    எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்தது தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் தான் தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் ஒரு பதற்றம் தெரிந்தது.

    பா.ஜ.க அடக்குமுறை செய்கிறது என தேவையில்லாத குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.

    உங்கள் அமைச்சரவையில் உள்ள ஊழலை முதலில் பாருங்கள். செந்தில்பாலாஜி எத்தனை நாள் வெளியே இருக்க போகிறார் என்று பார்ப்போம்.

    2026 தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று பலமாக ஆட்சி அமைப்போம். தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் ஏதாவது மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை பேசினார்களா. ஒன்றும் இல்லை.

    இதுவரை தி.மு.க. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி கொடுத்து வந்தார்கள். இப்போது விருதையும் அவர்களே பெற்றுக் கொள்கிறார்கள். வாக்கு திருட்டு என காங்கிரஸ் கட்சி சொல்வதே ஒரு நகைச்சுவை தான்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பேட்டியின் போது, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ரமேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • 12-வது ஆண்டாக பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று காலை 6 மணி முதல் ஏழுமலை இலவசமாக டீ வழங்கி வருகிறார்.
    • மாலை 6 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீயை வழங்குகிறார்.

    சென்னை:

    பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை பா.ஜ.க.வினரும், அவரது தீவிர ஆதரவாளர்களும் வித்தியாசமான முறையில் கொண்டாடினார்கள்.

    திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மெயின் ரோட்டில் டீ கடை நடத்தி வரும் ஏழுமலை என்பவர் பிரதமர் மோடியின் தீவிர ரசிகர் ஆவார். மோடி பிரதமரான 2-வது ஆண்டு முதல் அவரது பிறந்தநாள் அன்று ஏழுமலை தனது கடையில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீ வழங்கி வருகிறார்.

    12-வது ஆண்டாக பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று காலை 6 மணி முதல் ஏழுமலை இலவசமாக டீ வழங்கி வருகிறார். மாலை 6 மணி வரை அவர் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீயை வழங்குகிறார்.

    இதற்கிடையே ஏழுமலையின் கடைக்கு இன்று காலை பா.ஜ.க. முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன், கராத்தே தியாகராஜன், ஏ.என்.எஸ். பிரசாத், மாவட்ட தலைவர் குமார் உள்ளிட்ட பா.ஜ.க.தா நிர்வாகிகள் சென்றனர். அவர்கள் ஏழுமலைக்கு பாராட்டு தெரிவித்து டீ குடித்தனர்.

    மேலும் தமிழிசை சவுந்தரராஜன், டீ போட்டு கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.



    • விஜய்யின் தி.மு.க. எதிர்ப்பு ஆரோக்கியமானது.
    • விஜய் ஒன்றிரண்டு நாட்கள் வருவதால்தான் அதிக அளவில் கூடுகிறார்கள்.

    சென்னை:

    த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் பிரசாரத்தில் திருச்சியில் திரண்ட கூட்டம் பற்றி பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    திருச்சியில் பெரிய அளவில் கூட்டம் திரண்டு இருப்பது உண்மைதான். நடிகருக்காக கூட்டம் கூடுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.

    ஆனால் இவ்வளவு கூட்டத்தின் பாதுகாப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் தேவை. காவல் துறை 23 கட்டளை 43 கட்டளை என்று பிறப்பித்து விட்டு அரசியல் கட்சி தலைவர்களை போல் இருக்கக்கூடாது.

    எவ்வளவு கூட்டம் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து எவ்வளவு கூட்டம் வந்தாலும் கூட்டத்தை நெறி முறைப்படுத்த வேண்டும். திரண்டு இருப்பது இளைய தலைமுறை. அவர்கள் மனம் நோகாதபடியும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் கூட்டத்தை காவல் துறையினர் ஒழுங்குப்படுத்த வேண்டும். ஆளும் கட்சிக்கு கொடுக்கும் பாதுகாப்பை மற்ற கட்சிகளுக்கும் கொடுக்க வேண்டும்.

    விஜய்யின் தி.மு.க. எதிர்ப்பு ஆரோக்கியமானது. அதை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். நடக்கப் போவது மாநில தேர்தல். ஆட்சி மாற்றம் தேவை. எனவே தி.மு.க. அரசின் தவறுகளை மக்கள் மத்தியில் விஜய் தீவிரமாக பரப்ப வேண்டும். அதுதான் தமிழக மக்களுக்கு செய்யும் தொண்டு.

    விஜய் ஒன்றிரண்டு நாட்கள் வருவதால்தான் அதிக அளவில் கூடுகிறார்கள். அதிக நாட்கள் அவர் மக்களை சந்திக்க வேண்டும். திரளும் கூட்டம் ஒட்டு மொத்தமாக ஓட்டாகி விடுமா என்பது தெரியாது. ஆனால் இவ்வாறு திரளும் கூட்டத்தை சமூகத்துக்கு எப்படி பயன்படுத்துவது என்பதில் விஜய் அக்கறை காட்ட வேண்டும்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    • மிஸ்டர் பி.எம். என்று நடிகர் விஜய் கூறுவதை மக்கள் ரசிக்க மாட்டார்கள்.
    • தாமரை இலையில் தண்ணீர் ஒட்ட வேண்டாம்.

    தூத்துக்குடி:

    நெல்லையில் இன்று மாலை நடைபெறும் பா.ஜ.க. பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார்.

    அங்கு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    மிஸ்டர் பி.எம். என்று நடிகர் விஜய் கூறுவதை மக்கள் ரசிக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரை ஒப்பிட்டு இவர் பேசுகிறார். மாநாட்டிற்கு பிளாக்கில் சாப்பாட்டிற்கு டிக்கெட் கொடுக்கிறார்கள். புதிய வரவு நம்மை ஒன்றும் செய்யாது. பா.ஜ.க. பலம் பொருந்திய கட்சியாக வந்து கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கும், எங்களுக்கும் தான் போட்டி.

    தாமரை இலையில் தண்ணீர் ஒட்ட வேண்டாம். தாமரை தண்ணீரில் வளரப்போகுது, மலர போகுது, தாமரை இலையில் ஏன் ஒட்ட வேண்டும்? அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு பா.ஜ.க. வளரப்போகுது. தம்பி விஜய் இதனை பார்ப்பார்.

    தமிழக முதலமைச்சர் அப்பா என்று கூப்பிட சொல்கின்றார். இவர் அங்கிள் என்ற குறிப்பிடுகிறார். விஜய்க்கு எழுதிக் கொடுத்தவர் அவ்வாறு எழுதி கொடுத்துவிட்டார் போல, நானே பயந்து விட்டேன்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பொருந்தாதது என்ற விஜய் கூறுகிறார். அவருக்கு என்ன அரசியல் தெரியும்? அரசியல் ஞானம் இருக்கின்றதா? கச்சத்தீவு மீட்பு பற்றி பேசுகிறார். இதிலிருந்து அவருக்கு அரசியல் ஞானம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

    பாரத பிரதமர் என்ன செய்தார் என்று கேட்கின்றார். சினிமா வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி தான் காரணம். நடிகர் விஜய் தனி விமானத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அந்த அளவிற்கு விமான நிலையம் முன்னேற்றி இருக்கின்றது. நாடு முன்னேறி இருக்கின்றது. தூத்துக்குடி விமான நிலையத்தை எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் விஜய்யால் ஒரு மாநாட்டை ஒழுங்காக நடத்த முடிந்ததா? ஒரு கொடியை ஒழுங்காக நட முடிந்ததா?. எனவே இவர் சொல்வதை பொருட்படுத்த தேவையில்லை. அ.தி.மு.க. பாஜக கூட்டணி வெற்றி பெறும்.

    இருமொழிக்கொள்கை வேண்டாம் என்று சொல்லவில்லை. அனைவரும் அதில் தான் படித்துக் கொண்டு வந்தோம். நாடு விரிவடையும்போது, தேசம் விரிவுபடும்போது உலக அரங்கில் நாடு முன்னேறும்போது 3 மொழி தேவைப்படுகிறது. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிற்கு 3 மொழிகளில் டுவீட் செய்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தனியார் பள்ளியில் 2 மொழி தான் சொல்லிக் கொடுக்கின்றீர்களா? என்று வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். தி.மு.க. கட்சிக்காரர்கள் நடத்தும் பள்ளிகளில் 3மொழி உள்ளது. 3 மொழி படித்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகம் வளர்ந்து இருக்கிறது. அதில் அனைவரின் பங்கு இருக்கிறது.

    தி.மு.க. காங்கிரஸ் ஆட்சி செய்தபோது இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தமிழை பற்றி பேசும் தகுதி உங்களுக்கு உள்ளதா? தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார்.
    • தமிழக ஆளுநர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல.கணேசன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    நாகாலாந்து ஆளுநராக இருந்தவர் இல.கணேசன். நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த இல.கணேசன் (80), கடந்த மாதம் சென்னை வந்தார். கால் பாதத்தில் ஏற்பட்ட புண் காரணமாக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வீடு திரும்பினார்.

    கடந்த 5-ந்தேதி, கால் மரத்துப்போன நிலையில் வீட்டில் மயங்கி விழுந்த இல.கணேசனை, அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். தொடர்ந்து கடந்த 8-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. எனவே அவரை சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

    இதையடுத்து அவரது உடல், ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    இதுபற்றிய தகவல் அறிந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல.கணேசன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைவர்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    • தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி எண் 285-ன் படி பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்
    • பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    சென்னையில் உள்ள இரண்டு மண்டல (5 மற்றும் 6) தூய்மை பணிகளை தனியாருக்கு விட்டதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகையில் கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

    தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி எண் 285-ன் படி பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்

    இதற்கிடையே போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    நேற்று சேகர்பாபு உள்ளிட்ட அமைசர்கள் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து இரவில் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக தூமைப்பனியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

    முன்னதாக நேற்று மாலை தடையை மீறி போராட்டம் நடைபெறும் ரிப்பன் மாளிகை கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தூய்மை பணியாளர்களை சந்தித்தார்.

    இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் மீது பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நீதிமன்ற உத்தரவை மீறி தூய்மை பணியாளர்களை சந்தித்ததாக தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக தமிழிசை சவுந்தரராஜன் தூய்மை பணியாளர்களை சந்திக்க விடாமல் அவரது வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.  

    • ஆணவ படுகொலை விவகாரங்களில் திருமாவளவன் பதுங்குகிறார்.
    • தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல் துறையினரே கொலை செய்யப்படுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வந்த முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமியிடம் தங்களின் ஆசி தனக்கு அரசியலிலும் தேவை என தெரிவித்தார். இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி, அவருக்கு வாழ்த்து கூறினார்.

    பின்னர் முன்னாள் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் மற்றும் புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே வருகிற 2026-ம் ஆண்டில் பயணிக்கும். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற சில வழிமுறைகள் உள்ளது. நடைமுறை என்னவோ அதையொட்டி மத்திய அரசு செயலாற்றும்.

    தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுவேன் என கூறும் திருமாவளவன் போன்றோர், ஆணவ கொலைகளை அனுமதித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான கண்டனத்தை கூறுகிறார்களே தவிர, ஆட்சியின் மீது கடுமையான விமர்சனம் வைக்க தயங்குகின்றனர்.

    ஆணவ கொலைகள் தடுக்கப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலிமையாக இவர்கள் சொல்வதில்லை. ஆணவ படுகொலை விவகாரங்களில் திருமாவளவன் பதுங்குகிறார்.

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல் துறையினரே கொலை செய்யப்படுகின்றனர். போலீஸ் நிலையத்தில் ஒரு தற்கொலை நடந்துள்ளது மிகவும் வேதனையாக உள்ளது. தமிழகத்தில் விளம்பர அரசியல் தான் நடக்கிறது.

    வளர்ச்சியடைந்த பாரதம் என்ற மத்திய அரசு திட்டத்தின் காப்பி தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம். கடந்த 4 ½ ஆண்டுகளாக தமிழக ஆட்சியாளர்கள் மக்கள் குறையை தீர்க்காமல், கேட்காமல் என்ன செய்தார்கள்.? என மக்கள் கேள்வி கேட்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏற்கனவே வாங்கிய மனுக்கள் தூங்கியது போல இந்த மனுக்களும் தூங்கும்.
    • மக்களுக்கு ஒரு சிகிச்சை. தமிழக முதலமைச்சருக்கு ஒரு சிகிச்சையாக இருக்கிறது?

    நெல்லை:

    தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்று வீட்டுக்கு வீடு சென்று சொல்லுங்கள் என தமிழக முதலமைச்சர் தெரிவித்து வருகிறார்.

    தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ரூ.4800 கோடி திட்ட பணிகளை பிரதமர் தமிழகத்திற்கு வழங்க உள்ளார்.

    இதனை வீடு வீடாக சென்று தமிழக முதலமைச்சர் சொல்வாரா? ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று அங்குள்ள பொதுமக்களிடம் வாங்கிய சுமார் 14 லட்சம் மக்கள் இன்னும் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் வருவதை முன்னிட்டு பொதுமக்களை ஏமாற்றும் விதமாக தற்போது உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தையும் தொடங்கி மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே வாங்கிய மனுக்கள் தூங்கியது போல இந்த மனுக்களும் தூங்கும்.

    தமிழகத்தில் சுகாதாரத்துறை மிக சிறப்பாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தினம்தோறும் தெரிவித்து வருகிறார். அப்படி என்றால் ஒவ்வொரு மருத்துவமனையும் சிறப்பாக இருப்பதாக தான் அர்த்தம். ஆனால் தமிழக முதலமைச்சர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இருந்தால் ஏன் அவர் நேரடியாக அங்கே சென்று சிகிச்சை பெற்று இருக்கலாமே?. மக்களுக்கு ஒரு சிகிச்சை. தமிழக முதலமைச்சருக்கு ஒரு சிகிச்சையாக இருக்கிறது? பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சி.டி ஸ்கேன் உள்ளிட்ட எந்தவித வசதிகளும் இல்லாமல் இருப்பதும், பிறந்த குழந்தைகளை கூட தரையில் படுக்க வைப்பதும் என்ற நிலையில் தான் தமிழகத்தில் சுகாதாரத்துறை நிலை தொடர்ந்து நிலவிக் கொண்டிருக்கிறது.

    தமிழகத்தில் பெண்கள், பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையாக இருக்கிறது. தற்போது காவல்துறை டி.எஸ்.பி.க்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையாக இருக்கிறது. ஆகவே தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருவதை நாங்கள் மிகப் பெருமையாக கருதுகிறோம்.
    • பெரியார் தான் தமிழை தூற்றினார்.

    வேலூர்:

    வேலூரில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    அரசு செலவில் பலகோடி ரூபாய் பிரசாரத்துக்கு பயன்படுத்துவது போல் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் உள்ளது.

    4 ஆண்டில் செய்ய முடியாததை 45 நாளில் செய்வதாக சொல்கிறார்கள். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திலும் ஊழல் உள்ளது. சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கிறார்கள். மனு அளிக்க வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்பது வேதனை அளிக்கிறது. மிக தவறான சூழல் உள்ளது.

    கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருவதை நாங்கள் மிகப் பெருமையாக கருதுகிறோம்.

    ஆண்டாள் காலம் தான் தமிழை வளர்த்தது. பெரியார் தான் தமிழை தூற்றினார். பிரதமர் வருகை எங்களுக்கு புத்துணர்ச்சி தரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×