search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admk bjp"

    40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பா.ஜ.க.வினர் கடுமையாக தேர்தல் பணியாற்றுவார்கள் என்று, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார். #aiadmkalliance
    பெரம்பலூர்:

    பா.ஜ.க.வின் திருச்சி பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், திருச்சி, கரூர், சிதம்பரம் (தனி) உள்ளிட்ட 10 பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த கட்சி தேர்தல் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதற்கு திருச்சி கோட்ட பொறுப்பாளர் சிவசுப்ரமணியம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்து கொண்டு பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். 

    இதையடுத்து இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிடும் 5 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல், இரண்டொரு நாளில் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு மூலம் முறைப்படி அறிவிக்கப்படும். தமிழகத்தில் 5 இடங்களில் பா.ஜ.க. போட்டியிட்டாலும், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற பா.ஜ.க தொண்டர்கள் கடுமையாக தேர்தல் பணியாற்றுவார்கள்.

    இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைவரது நோக்கமும் மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என்பதே. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒரு கவலைக்குரிய பிரச்சினை தான் என்றாலும், பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களைச் சொல்லி வாக்கு சேகரித்து, அத்தொகுதியில் மக்களிடம் வெற்றி வாய்ப்பைப் பெறுவோம். பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு அதிகப்படியான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #aiadmkalliance
    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் பணம் நிச்சயமாக ஏழை மக்களுக்கு போய் சேராது என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார். #Congress #Elangovan
    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள மேட்டூரில் இ.காங்கிரஸ் சார்பில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

    இதில் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தீவிரவாதத்தை ஒழிப்போம் என ஆட்சிக்கு வந்த பா.ஜனதாவினர் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர். ஆனால் இந்த பணம் ஏழை மக்களுக்கு போய் சேராது.

    அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கு வழங்க பயனாளிகள் பட்டியல் தயாராவதாக கூறப்படுகிறது.

    100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் ஏழை தொழிலாளர்களுக்கு கூட சரியான கூலி கொடுக்காமல் குறைந்த கூலியை கொடுக்கிறார்கள்.



    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனியாக போட்டியிட்டால் டெபாசீட் வாங்க வாய்ப்புள்ளது. ஆனால் பா.ஜனதாவுடன் சேர்ந்து போட்டியிட்டால் டெபாசீட் கூட கிடைக்காது.

    தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு என வாக்கு வங்கியே கிடையாது. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும் டெல்லி சென்றுள்ளார். கூட்டணி குறித்து நல்ல தகவல் வெளியாகும்.

    இவ்வாறு இளங்கோவன் கூறினார். #Congress #Elangovan
    ×