என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "premalatha vijayakanth"

    • கூட்டணி குறித்து ஊடகங்கள் தேவையற்ற செய்திகளை வெளியிட வேண்டாம்.
    • தமிழகம், தேசிய அளவில் உள்ள அனைத்து கட்சிகளும் தே.மு.தி.க.விற்கு தோழமை கட்சிகள் தான்.

    சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கூட்டணி குறித்து தே.மு.தி.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதுதான் இறுதியான அறிவிப்பு.

    * கூட்டணி குறித்து ஊடகங்கள் தேவையற்ற செய்திகளை வெளியிட வேண்டாம்.

    * வெகு விரைவில் அனைவரையும் அழைத்து நல்ல செய்தியை கூறுவோம்.

    * இன்று கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

    * இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என வெளியான செய்தியிலும் உண்மையில்லை.

    * தமிழகம், தேசிய அளவில் உள்ள அனைத்து கட்சிகளும் தே.மு.தி.க.விற்கு தோழமை கட்சிகள் தான்.

    * மற்றவர்கள் பேசினால் பேச்சுவார்த்தை, தே.மு.தி.க. பேசினால் தனிப்பெயரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2011-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து அந்த கட்சி தோல்வியையே தழுவி வந்துள்ளது.
    • வருகிற சட்டமன்றத் தேர்தல் அந்த கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும்.

    சென்னை:

    தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக தே.மு.தி.க. தீவிரமாக தயாராகி வருகிறது.

    கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த் அடுத்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலேயே களமிறங்கினார்.

    இந்த தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. 8.4 சதவீத வாக்குகளை பெற்றது. முதல் தேர்தலிலேயே விஜயகாந்த் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க. சாதித்து காட்டியது. அந்தக் கட்சியின் வாக்கு சதவீதம் பாராளுமன்ற தேர்தலில் 10 சதவீதமாக கூடியது.

    இப்படி 2 தேர்தல்களில் பெரிய அளவில் வாக்குகளைப் பெற்ற தே.மு.தி.க. 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. இந்தத் தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. 29 இடங்களில் வெற்றி பெற்றது. தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் அப்போது 7.9 சதவீதமாக இருந்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் அமர்ந்தார்.

    இப்படி கட்சியை தொடங்கிய பிறகு தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் கவனம் ஈர்த்த தே.மு.தி.க. இதன் பின்னர் நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் வெற்றி பெறவில்லை. 2011-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து அந்த கட்சி தோல்வியையே தழுவி வந்துள்ளது.

    2016-ம் ஆண்டு தேர்தலில் அமைக்கப்பட்ட மக்கள் நல கூட்டணி தே.மு.தி.க.வுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

    அந்த தேர்தலில் விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை களமிறங்கின. 103 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அந்தக் கட்சியின் வாக்கு சதவீதம் 2.4 ஆக குறைந்தது.

    இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் நடத்தப்பட்ட கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதன் காரணமாக டி.டி.வி. தினகரனுடன் கூட்டணி அமைத்து தே.மு.தி.க. தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் மொத்தம் 60 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. வாக்கு சதவீதம் 0.43 ஆக அடியோடு சரிந்தது.

    இப்படி தமிழக தேர்தல் களத்தில் தே.மு.தி.க. எப்படி எழுச்சி பெற்றதோ அதே போன்று வீழ்ச்சியையும் சந்தித்திருக்கிறது.

    இது போன்ற சூழலில் தான் வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தே.மு.தி.க. தயாராகி வருகிறது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அந்தக் கட்சிக்கு மீண்டும் தோல்வியே பரிசாக கிடைத்தது. மேல் சபை எம்.பி. பதவியை தருவதாக அ.தி.மு.க. உறுதி அளித்திருந்த நிலையில் அதனை அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் அ.தி.மு.க. மீது தே.மு.தி.க. கடும் கோபத்திலேயே உள்ளது.

    இது போன்ற சூழலில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தே.மு.தி.க.வுக்கு பெரும் சவாலாக மாறி இருக்கிறது. எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று இன்னும் முடிவெடுக்காத அந்த கட்சி தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

    வருகிற சட்டமன்றத் தேர்தல் அந்த கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். இதனை கருத்தில் கொண்டு சட்டமன்றத் தேர்தலில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் தே.மு.தி.க. என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    அ.தி.மு.க, தி.மு.க. 2 கட்சிகளிடமும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும், ஒரு மேல் சபை எம்.பி. பதவியை ஒதுக்கி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தே.மு.தி.க. பிரதானமாக முன் வைத்திருக்கிறது. இதுவே 2 கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதற்கு தடைக்கல்லாகவே இருந்து வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    தே.மு.தி.க.வுக்கு 10 இடங்கள் வரையில் ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. முன் வந்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும் தே.மு.தி.க.வோ, பா.ம.க.வுக்கு இணையாக தங்களுக்கு 17 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் பல்வேறு சிறிய கட்சிகள் இடம் பெற்றிருப்பதால் அவற்றுக்கெல்லாம் தொகுதிகளை ஒதுக்கி கொடுக்க வேண்டி இருப்பதால் 10 தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொள்ளுமாறு தே.மு.தி.க.விடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அதனை அந்த கட்சி ஏற்றுக்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

    அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகள் வரை ஒதுக்கி தருவதாக தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள தே.மு.தி.க. தயங்குவதாகவும் கூறப்படுகிறது. இப்படி ஒரே நேரத்தில் தே.மு.தி.க. 2 கட்சிகளுடனும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாலேயே தே.மு.தி.க. இன்னும் கூட்டணி முடிவை எடுக்காமல் இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் பலரும் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

    இதன் காரணமாக வருகிற சட்டமன்றத் தேர்தலில் பிரேமலதா எடுக்கும் முடிவு அந்த கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லுமா? என்கிற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

    இது தொடர்பான கேள்விகளுக்கெல்லாம் தொடர்ந்து ஒரே வரியிலேயே பிரேமலதா பதில் அளித்து வருகிறார்.

    இன்னும் கூட்டணிக்கு கால அவகாசம் உள்ளது. பொறுத்திருந்து பாருங்கள் என்பதே அவரது பதிலாக இருந்து வருகிறது.

    • தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காட்டிய வழியில் தொடர்ந்து மக்களுக்காக பாடுபடுவேன்.
    • மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் தே.மு.தி.க. நிச்சயமாக செய்து கொடுக்கும்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி எனும் கேப்டன் ரத யாத்திரை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    பிரசாரத்தில் விஜய பிரபாகரன் பேசுகையில், கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு நம் கையை விட்டு சென்றாலும், வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் நிச்சயமாக தே.மு.தி.க. வெற்றி பெரும் என்றார்.

    அவரைத் தொடர்ந்து பிரேமலதா பேசியதாவது:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காட்டிய வழியில் தொடர்ந்து மக்களுக்காக பாடுபடுவேன். அவர் தொடங்கிய அன்னதானத் திட்டத்தை தற்பொழுது வரை கேப்டனின் கோவிலில் தினமும் நடைபெற்று வருகிறது. கடந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்ட மக்களின் சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் தான் வெற்றி பெற்றார். ஆனால் அறிவிக்கப்பட்டது வேறொருவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தே.மு.தி.க. மாநாட்டில் கூடிய தொண்டர்கள் மூலம் நமது வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது.

    கேப்டன் விஜயகாந்த் விட்டுச்சென்ற பணியை இதுவரை அண்ணியாக இருந்து செயல்படுத்தி வந்த நான், இனிமேல் அம்மாவாக மக்களின் குறைதீர்க்க பாடுபடுவேன். மக்கள் விரும்பும் கூட்டணியையே தே.மு.தி.க. கையில் எடுக்கும் என்றும் தே.மு.தி.க. இணையும் கூட்டணியை நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும். அப்பொழுது மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் தே.மு.தி.க. நிச்சயமாக செய்து கொடுக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

      திருச்செந்தூர்:

      தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.

      சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

      உள்ளம் தேடி, இல்லம் நாடி, மக்களை தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரை நிகழ்ச்சிக்காக தூத்துக்குடி மாவட்டம் வந்துள்ளேன்.

      கட்சி நிர்வாகிகள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்.

      முருகன் அருளால் நல்ல மகத்தான கூட்டணி அமையும், அது எல்லோருக்கும் நிச்சயமாக நன்மை பயன் அளிக்கும் என்று கூறினார்

      விஜய் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது அவரிடம் அவர் கட்சியைப் பற்றி கேளுங்கள். என்னிடம் எங்கள் கட்சியைப் பற்றி கேளுங்கள் நான் சொல்கிறேன். மற்றவர்களைப் பற்றி கேட்கும்போது நான் எப்போதும் பதில் சொல்வதில்லை.

      2026 தேர்தல் நிச்சயமாக தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் ஒரு மாற்றத்தையும், வெற்றியையும் கொடுக்கும். நாங்கள் ஒரு நல்ல கூட்டணி அமைப்போம் என்றார்.

      • பிரதமர் அவருடைய கூட்டணி கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கின்றார்.
      • தி.மு.க. 5 ஆண்டு காலத்தில் திட்டங்கள் நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் கருத்து இருக்கிறது.

      தூத்துக்குடி:

      தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

      அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடியில் பிரசாரத்தை மேற்கொள்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

      கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பிப்ரவரி 3-ந் தேதி வரை சுற்றுப்பயணம் இருக்கிறது.

      கூட்டணி குறித்து கூறுவதற்கு நேரம் இருக்கிறது.பிப்ரவரி 20-ந் தேதிக்கு பின்பு தான் தேர்தல் தேதி அறிவிக்க இருக்கிறது. அதனால் உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுத்து தலைமைக் கழகத்தில் அறிவிப்பேன்.

      தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு எதிர்காலத்தில் எந்த கூட்டணி நல்லதோ, மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள் யாரை அதிகம் விரும்புகிறார்களோ, தே.மு.தி.க.விற்கு எதிர்காலத்திற்கு எது நல்லதோ அந்த வகையில் தாயாக இருந்து கழகத்தை கட்டிக்காக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. இந்த கடமையை கேப்டன் கையில் கொடுத்து இருக்கிறார். சரியான நேரத்தில் கூட்டணியை அறிவிப்பேன்.

      பிரதமர் அவருடைய கூட்டணி கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கின்றார். அவருடைய கூட்டணி சார்பாக பங்கேற்று இருக்கின்றார்.

      விஜய் படத்திற்கு தொடர்ந்து இடையூறுகள் வருவது குறித்து கேட்கிறீர்கள். படத்தில் ஏதேனும் இருக்கிறதா? என்று உரியவரான விஜய் தான் பதில் சொல்ல வேண்டும். சட்டம் தன் கடமையை செய்யும் அதைத்தான் நான் சொல்கிறேன்.

      தி.மு.க. 5 ஆண்டு காலத்தில் திட்டங்கள் நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் கருத்து இருக்கிறது. பல தடவை எந்த மார்க் என்று நான் கூறி இருக்கின்றேன். 50 சதவீதம் நல்லது நடந்து இருக்கிறது. நடக்க வேண்டியதும் இருக்கின்றது. எல்லா காலத்திலும் போராட்டம் இருக்க தான் செய்கின்றது. இடைநிலை ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், செவிலியர்கள் எல்லோரின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேர இருப்பதாக கூறுகிறார்கள்.
      • தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தெளிவான முடிவை எடுப்போம்.

      சென்னை:

      தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி தே.மு.தி.க. இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் இன்று அளித்த பேட்டி வருமாறு:-

      தூத்துக்குடியில் இன்று 4-ம் கட்ட பிரசார பயணத்தை தொடங்குகிறேன். இந்த பிரசாரம் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடைபெறுகிறது. கன்னியாகுமரியில் இருந்து விருதுநகர் வரையிலும் பயணம் மேற்கொள்ள உள்ளோம்.

      கேள்வி: ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் கூட்டணியை இறுதி செய்துள்ளன. தே.மு.தி.க. கூட்டணி முடிவை எடுப்பதில் ஏன் தாமதமாகிறது?

      பதில்: தாமதம் எல்லாம் இல்லை. தேர்தல் தேதி அறிவித்து விட்டார்களா? யார், யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவெடுத்து வேட்பாளர்களை அறிவித்து விட்டார்களா? இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. நீங்கள் தான் (பிரபல பத்திரிகையாளர்கள்) அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

      பிப்ரவரி 20-ந்தேதிக்கு பிறகுதான் தேர்தல் தேதியே அறிவிக்கப் போகிறார்கள். எனவே இப்போதே அவசரம் ஒன்றுமில்லை. தே.மு.தி.க. எங்கள் குழந்தை. ஒரு அம்மாவாக எனக்கு கடமைகள், பொறுப்புகள் அதிகம் உள்ளன. எந்த நேரத்தில் அந்த குழந்தையை யாருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

      கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் எல்லோரும் போற்றக்கூடிய நல்ல முடிவை எடுப்பேன்.

      கேள்வி: தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தே.மு.தி.க. தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறதே?

      பதில்: எல்லா பக்கமும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பத்திரிகைகளில் தினமும் ஒரு செய்தியை போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. நான் தெளிவாக பல முறை கூறி உள்ளேன். உரிய நேரத்தில் நல்ல முடிவை நிச்சயம் எடுப்போம்.

      கேள்வி: தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் முக்கிய பிரமுகர் ஒருவரை சந்தித்து பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதே?

      பதில்: அப்படியெல்லாம் ரகசியம் ஒன்றும் இல்லை. அதுபோல் எதுவும் இருந்தாலும் வெளிப்படையாகவே பேசி கூட்டணி அமைப்போம்.

      கேள்வி: தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?

      பதில்: அதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேர இருப்பதாக கூறுகிறார்கள். எதுவுமே இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதுதான் உண்மையாகும்.

      எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம். யார் வேண்டுமானாலும் எந்த கூட்டணியையும் அமைக்கலாம். தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தெளிவான முடிவை எடுப்போம்.

      கேள்வி: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான கவுண்டவுன் தொடங்கி இருப்பதாக பிரதமர் மோடி கூறி இருக்கிறாரே? அதனை எப்படி பார்க்கிறீர்கள்?

      பதில்: எப்படி இருந்தாலும் தேர்தலுக்கு பிறகு ஒரு ஆட்சி வரத்தான் போகிறது. 2026-ம் ஆண்டில் நல்லது நடக்கும். நல்லாட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாகும். எனவே எல்லோருக்கும் நல்லதே நடக்கும்.

      இவ்வாறு பிரேமலதா கூறினார்.

      • நாங்கள் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்பதை தெரிந்து கொள்வதில் எங்களைவிட நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள்.
      • தே.மு.தி.க.வை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை கலந்தாலோசித்து தெளிவான ஒரு முடிவை உங்களை அழைத்து அறிவிப்பேன்.

      சென்னை:

      தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

      கேள்வி: மத்திய மந்திரி பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். கூட்டணியை பலப்படுத்துவதற்காக பேச்சுவார்த்தைகள் போய் கொண்டிருக்கிறது. கூட்டணி தொடர்பாக உங்கள் முடிவு என்ன என்று தொண்டர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

      பதில்: எங்கள் தொண்டர்கள் காத்திருக்கிறார்கள் என்றால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள்தான் காத்திருக்கிறீர்கள். தொண்டர்கள் அனைவரும் தெளிவாக இருக்கிறார்கள்.

      நாங்கள் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்பதை தெரிந்து கொள்வதில் எங்களைவிட நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள். உங்களை நான் அழைத்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். பியூஷ் கோயல் வந்திருப்பதாகவும் எங்களுடன் பேச இருப்பதாகவும் நீங்கள்தான் சொல்கிறீர்கள். எங்களுக்கு இன்னும் தகவல் வரவில்லை. இது தான் உண்மை.

      எங்களுக்கு அப்படி ஒரு செய்தி இந்த நிமிடம் வரை வரவில்லை. எங்களை யாரும் அணுகவும் இல்லை. தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ளவில்லை. பியூஷ் கோயல் எதற்காக வந்திருக்கிறார் என்பது எனக்கு தெரியாது. கூட்டணி தொடர்பாக முடிவு எடுத்தால் முதலில் உங்களை கூப்பிட்டு தெரிவிக்கிறேன்.

      கேள்வி: யாருடன் கூட்டணி என்று முடிவு எடுத்திருக்கிறீர்கள்?

      பதில்: நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நாளை மறுநாள் (23-ந்தேதி) பிரதமர் வருகிறார் என்பதை தொலைக்காட்சியில்தான் பார்த்தேன். அது அவர்கள் கட்சி சார்பான கூட்டமா அல்லது கூட்டணி தொடர்பான கூட்டமா என்பது கூட தெரியவில்லை.

      தே.மு.தி.க.வை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை கலந்தாலோசித்து தெளிவான ஒரு முடிவை உங்களை அழைத்து அறிவிப்பேன். வருகிற 24-ந்தேதி முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை 4-ம் கட்ட பயணத்துக்கு நாங்கள் கிளம்புகிறோம். அந்த பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்.

      கேள்வி: கூட்டணி குறித்து நாங்கள் உறுதி செய்து விட்டோம். உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று மாநாட்டில் அறிவித்தீர்களே?

      பதில்: எங்கள் கட்சிக்குள் கலந்து ஆலோசித்து இருக்கிறோம். அவர்களின் கருத்துக்களை கேட்டு இருக்கிறேன். அவர்கள் விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்கள். அதை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.

      கேள்வி: தேசிய ஜனநாயக கூட்டணி குழப்பத்தில் உள்ளதா?

      பதில்: பா.ஜ.க. தலைவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டால் பதில் இல்லை.

      கேள்வி: தேசிய ஜனநாயக கூட்டணியில் அழைத்தால் சேருவீர்களா?

      பதில்: நடக்காத ஒரு விஷயத்துக்கு இப்போது என்னால் பதில் சொல்ல முடியாது. தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

      கேள்வி: பியூஷ் கோயல் அழைத்தால் சந்தித்து பேச தயாராக இருக்கிறீர்களா?

      பதில்: இதுவரை அழைக்கவில்லை. அப்படி வந்தால் உங்களுக்கு சொல்கிறேன். பிரதமர் மோடி நாளை மறுநாள் (23-ந்தேதி)தான் வருகிறார். அன்றைக்கு பார்ப்போம்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • எல்.ஐ.சி. மேலாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட தி.மு.க. அரசு, காவல்துறைக்கு பாராட்டுகள்.
      • பியூஷ் கோயலை சந்திப்பதாக வெளியான செய்தி தவறானது.

      சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

      * எல்.ஐ.சி. மேலாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட தி.மு.க. அரசு, காவல்துறைக்கு பாராட்டுகள்.

      * காப்பீட்டுத் தொகை முறைகேட்டை கண்டித்த மேலாளர் கல்யாணியை கொன்ற சக ஊழியருக்கு கடும் தண்டனை தர வேண்டும்.

      * கூட்டணி தொடர்பாக செய்தியாளர்களிடம் உரிய நேரத்தில் அறிவிப்பேன்.

      * தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக யாரும் எங்களை அணுகவில்லை.

      * பியூஷ் கோயலை சந்திப்பதாக வெளியான செய்தி தவறானது.

      * பியூஷ் கோயலை சந்திக்க எனக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை.

      * கூட்டணி பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. பிரதமர் பங்கேற்கும் கூட்டத்திற்கும் அழைப்பில்லை.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறது.
      • விஜய் கட்சியுடன் கூட்டணிஅமைப்பதற்கு ஒரு சில மாவட்ட செயலாளர்களே வாக்களித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

      சென்னை:

      தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

      அந்த வகையில் தே.மு.தி.க.வும் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாகி உள்ளது. 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த் அடுத்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலேயே அதிரடியாக களமிறங்கினார். அந்த தேர்தலில் விஜயகாந்த் வெற்றி பெற்ற நிலையில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்றனர். முதல் தேர்தலிலேயே 8 சதவீத வாக்குகளை பெற்ற விஜயகாந்த் 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 10 சதவீத வாக்குகளை பெற்றார்.

      இதனை அடுத்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டிப்பிடித்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார்.

      இதன் பிறகு நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் தே.மு.தி.க. தோல்வியையே தழுவியுள்ளது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 15 ஆண்டுகளாக தே.மு.தி.க. எந்த தேர்தலிலும் வெற்றி பெறாத நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியை வெற்றி பாதைக்கு மீண்டும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வியூகம் வகுத்துள்ளார்.

      கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல் சபை எம்.பி. பதவியை அளிப்பதாக அ.தி.மு.க. உறுதி அளித்து இருந்தது.

      ஆனால் சமீபத்தில் மேல்சபை எம்.பி.க்கள் தேர்வான போது தே.மு.தி.க.வை அந்த கட்சி புறக்கணித்து இருந்தது. அ.தி.மு.க.வினர் இருவரை மேல்சபை எம்.பி.யாக்கி எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.

      இதனால் கோபமடைந்த தே.மு.தி.க. அதுபற்றி கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியது. இதற்கடுத்து இந்த மாதம் மேல்சபை எம்.பி. பதவி தே.மு.தி.க.வுக்கு அளிக்கப்படும் என்று அ.தி.மு.க. சார்பில் உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது. தே.மு.தி.க. கூட்டணியை தக்க வைப்பதற்காகவே அ.தி.மு.க. இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

      இதுபோன்ற சூழலில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி நேற்று நடைபெற்ற மாநாட்டில் பிரேமலதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரேமலதாவோ யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம் என்று மாநாட்டில் அறிவித்துவிட்டார்.

      இது பிரேமலதாவின் தேர்தல் வியூகத்தை காட்டுவதாகவே அந்த கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் ஏற்கனவே உள்ள கூட்டணியில் நீடிக்க போகிறது? என்பது இன்னும் முடிவாகாத நிலையில் நாங்கள் மட்டும் எதற்காக அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டும் என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

      ஒவ்வொரு தேர்தலின் போதும் எங்களது ஆதரவை பெற்றுவிட்டு ஏமாற்றி விடுகிறார்கள். எனவே வருகிற தேர்தலில் அதற்கெல்லாம் இடம் கொடுக்காத அளவுக்கு முடிவெடுக்க வேண்டும் என்பதே தே.மு.தி.க.வினரின் எண்ணமாக உள்ளது.

      எனவே மேல்சபை எம்.பி. பதவியுடன் இரட்டை இலக்கத்தில் சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கும் கட்சியோடு கூட்டணி அமைக்கலாம் என்பதே அந்த கட்சியினரின் விருப்பமாக உள்ளது. இதனையே தே.மு.தி.க. சார்பில் நிபந்தனையாக வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

      தே.மு.தி.க. அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறது.

      அதே நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியை முறிக்க வேண்டாம் என்றும் பலர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் கட்சியுடன் கூட்டணிஅமைப்பதற்கு ஒரு சில மாவட்ட செயலாளர்களே வாக்களித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

      எல்லாம் கருத்தில் வைத்தே தே.மு.தி.க. கூட்டணி தொடர்பாக காய் நகர்த்தி வருகிறது, இதற்கிடையே தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். இதையடுத்து விரைவில் தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. தலைமை பேச்சு நடத்தும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

      தி.மு.க. தரப்பிலும் மேல்சபை எம்.பி. பதவி தருவதாக உறுதியளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தே.மு.தி.க.- அ.தி.மு.க. கூட்டணியில் சேருவதா இல்லை தி.மு.க. அணியில் இணைவதா என்கிற குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

      இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தை பிறந்த பிறகு கூட்டணி தொடர்பான அதிரடி அறிவிப்பை பிரேமலதா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

      • இவ்வளவு நாள் சத்ரியனாக வாழ்ந்து விட்டோம்.
      • இனிமேல் சாணக்கியனாக வாழ வேண்டும்.

      கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற்றது. இந்த மாநாட்டில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

      * கடலூரில் என்றாலே கேப்டன் கோட்டை.

      * கேப்டனுக்கு வெற்றி கொடுத்த மாவட்டம்.

      * கடலூரில் கேப்டன் இருந்தபோது, மாநாடு நடத்தப்படவில்லை. அவருக்கு வெற்றி தேடிக்கொடுத்த மாவட்டத்தில் நாம் மாநாடு நடத்துகிறோம்.

      * கேப்டன் இல்லாமல் நாம் யாரும் கிடையாது.

      * தொண்டர்களுடைய பணிக்கு ஈடு இணை கிடையாது. மாநாட்டில் நிறைவேற்ற தீர்மானம் மக்களுக்கானவை.

      * கேப்டன் பேசிய டயலாக்குதான் உலக பிரசித்தி பெற்றது.

      * நான் உங்களில் (தொண்டர்கள்) கேப்டனை பார்க்கிறேன்.

      * எப்படி ஒரு தலைவராக இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்தவர் கேப்டன்.

      * கேப்டனுக்கு இணை எந்த தலைவரும் இல்லை. தலைமைக் கழகத்தில் விதைக்கப்பட்டிருக்கிறார். புதைக்கப்படவில்லை. தேமுதிக கட்சிக்க இணையான கட்சி ஏதும் இல்லை.

      * கேப்டன் என்ற சொல்லுக்கு, அன்புக்கு வந்த தொண்டர்களை இரு கை கூப்பி வணங்குகிறேன்.

      * தேமுதிக-வை பற்றி ஏளமாக எந்த கொம்பனாலும் இருந்தாலும் சரி பேசினால், தொண்டர்கள் பதில் கொடுப்பார்கள்.

      * 1971-ல் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றம் அமைக்கப்பட்ட நாள்.

      * தேர்தல் வந்தால் எவ்வளவு பேரம் பேரம் என்கிறார்கள். நான் பேசுவேன். கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுடன் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பேசுவேன். அவர்கள் விரல்கள் காட்டுபவர்களுடன்தான் கூட்டணி.

      * தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தேமுதிக உடன் கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும்.

      * தேமுதிக-விற்கு வெற்றி ஒன்றுதான் கொள்கை.

      * யாருடன் கூட்டணி என்ற முடிவை எடுத்தாகிவிட்டது.

      * அதை இந்த மாநாட்டில் அறிவிக்க வேண்டுமா? என்பதுதான் கேள்வி.

      * எந்த கட்சியும் கூட்டணி அறிவிக்கவில்லை. மாவட்ட கழக செயலாளர்கள் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்றார். தை பிறந்தால் வழி பிறக்கும்.

      * இவ்வளவு நாள் சத்ரியனாக வாழ்ந்து விட்டோம். இனிமேல் சாணக்கியனாக வாழ வேண்டும். மற்ற கட்சிகள் அறிவிக்காதது போது, நாம் மட்டும் ஏன் முந்திரி கொட்டையாக முந்த வேண்டும்.

      * நமக்கு கண்ணியம் உண்டு. தொண்டர்களை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி.

      * தை பிறந்தால் வழி பிறக்கும்.

      • 2011-ல் 29 தொகுதிகளில் வெற்றிப்பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றம் சென்றார்.
      • 10 லட்சம் தொண்டர்கள் இன்று மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.

      கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமத்தில் தேமுதிகவின் மாநாடு நடைபெற்றது. 2026 சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது என்பது உட்பட மாநாட்டில் 11 தீர்மானங்கள் போடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ், 

      "கடலூர் என்றாலே கேப்டனின் கோட்டை. ராசியான மாவட்டம் கடலூர். 2011-ல் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் தேமுதிக வெற்றிப் பெற்ற மாவட்டம். 2011-ல் 29 தொகுதிகளில் வெற்றிப்பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றம் சென்றார். மீண்டும் அதேபோல தேதிமுக வெற்றிப்பெற்று பிரேமலதா விஜயகாந்த் துணை முதலமைச்சராக வேண்டும் என்பது எனது ஆசை. 10 லட்சம் தொண்டர்கள் இன்று மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். அதனால் தேமுதிக சீட்டு எண்ணிக்கையில் பேரம் பேசுவதில் தவறில்லை. தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெறுகிறதோ அந்தக் கட்சிதான் வெற்றிப்பெறும்." என தெரிவித்தார்.  

      • தேமுதிக உடன் கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும்.
      • தேமுதிக-விற்கு வெற்றி ஒன்றுதான் கொள்கை.

      கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற்றது. இந்த மாநாட்டில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

      * கடலூரில் என்றாலே கேப்டன் கோட்டை.

      * கேப்டனுக்கு வெற்றி கொடுத்த மாவட்டம்.

      * கடலூரில் கேப்டன் இருந்தபோது, மாநாடு நடத்தப்படவில்லை. அவருக்கு வெற்றி தேடிக்கொடுத்த மாவட்டத்தில் நாம் மாநாடு நடத்துகிறோம்.

      * கேப்டன் இல்லாமல் நாம் யாரும் கிடையாது.

      * தொண்டர்களுடைய பணிக்கு ஈடு இணை கிடையாது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மக்களுக்கானவை.

      * கேப்டன் பேசிய டயலாக்குதான் உலக பிரசித்தி பெற்றது.

      * நான் உங்களில் (தொண்டர்கள்) கேப்டனை பார்க்கிறேன்.

      * எப்படி ஒரு தலைவராக இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்தவர் கேப்டன்.

      * கேப்டனுக்கு இணை எந்த தலைவரும் இல்லை. தலைமைக் கழகத்தில் விதைக்கப்பட்டிருக்கிறார். புதைக்கப்படவில்லை. தேமுதிக கட்சிக்கு இணையான கட்சி ஏதும் இல்லை.

      * கேப்டன் என்ற சொல்லுக்கு, அன்புக்கு வந்த தொண்டர்களை இரு கை கூப்பி வணங்குகிறேன்.

      * தேமுதிக-வை பற்றி ஏளனமாக எந்த கொம்பனாலும் இருந்தாலும் சரி பேசினால், தொண்டர்கள் பதில் கொடுப்பார்கள்.

      * 1971-ல் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றம் அமைக்கப்பட்ட நாள்.

      * தேர்தல் வந்தால் எவ்வளவு பேரம் பேரம் என்கிறார்கள். நான் பேசுவேன். கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுடன் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பேசுவேன். அவர்கள் விரல்கள் காட்டுபவர்களுடன்தான் கூட்டணி.

      * தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தேமுதிக உடன் கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும்.

      * தேமுதிக-விற்கு வெற்றி ஒன்றுதான் கொள்கை.

      ×