என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Premalatha vijayakanth"
- அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் விஜயகாந்த் நலம் பெற வேண்டுவதாக தெரிவித்தனர்.
- பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலையில் கடந்த 18-ந்தேதி பின்னடைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதற்கு அவர் சிரமப்பட்டார். கடுமையான இருமல் மற்றும் சளித்தொல்லையும் ஏற்பட்டது.
இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து நேற்று ஒரே நாளில் மருத்துவமனை சார்பில் 2 அறிக்கைகள் வெளியிடப்பட்டதால் தே.மு.தி.க. தொண்டர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் விஜயகாந்த் நலம் பெற வேண்டுவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார்.
மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர், அன்பு சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண குணம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.@iVijayakant @AIADMKOfficial pic.twitter.com/Bq4r3EWgBN
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) November 30, 2023
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர், அன்பு சகோதரர் விஜயகாந்த் விரைவில் பூரண குணம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.
- கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. தோல்வியை சந்தித்து இருந்தது.
- பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை பிரேமலதா நேரில் சென்று சந்திக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தே.மு.தி.க.வும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. தோல்வியை சந்தித்து இருந்தது. இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று முதல் முறையாக பாராளுமன்றத்தில் கால் பதிக்க வேண்டும் என்று அந்த கட்சி காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில் பாராளுமன்ற தேர்தல் பேச்சுவார்த்தையின்போது மேல் சபை எம்.பி. பதவியை கேட்டு பெறுவது என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தையின்போது இதனை வலியுறுத்தி எந்த கட்சி மேல்சபை எம்.பி. பதவியை தர ஒத்துக்கொள்கிறதோ அந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என தே.மு.தி.க. முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே தே.மு.தி.க.வை தங்களது கூட்டணிக்கு கொண்டு வருவதற்கு பாரதிய ஜனதா கட்சியும், அ.தி.மு.க.வும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
பாரதிய ஜனதா கட்சி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் எனவே அந்தக் கட்சியுடன் இணக்கமாக சென்று மேல்சபை எம்.பி. பதவியை கேட்டு பெற வேண்டும் என்றும் தே.மு.தி.க.வில் ஒரு சாரார் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்றால்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும் என்றும் எனவே எடப்பாடி பழனிசாமியுடன் கை கோர்ப்பதே நல்லது என்றும் இன்னொரு பிரிவினர் கருத்து கூறி வருகிறார்கள். எனவே பா.ஜ.க. பக்கம் சாய்வதா? இல்லை அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து களமிறங்குவதா? என்பது பற்றி தே.மு.தி.க. தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை பிரேமலதா நேரில் சென்று சந்திக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் பண்டிகையை யொட்டி நடைபயண நிறைவு விழாவை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அந்த விழாவில் அக்கட்சியின் தேசிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். அந்த நேரத்தில் பாரதிய ஜனதா கூட்டணியை தே.மு.தி.க. முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை தே.மு.தி.க. மூத்த நிர்வாகி ஒருவர் மறுத்தார். கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. விரைவில் முடிவெடுக்கும் என்றும், யாரையும் சந்திக்க நாங்கள் இப்போது திட்டமிடவில்லை என்றும் தெரிவித்தார். இதனால் தே.மு.தி.க.வின் கூட்டணி முடிவு என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் நடைபெற்று வருகிறது.
- டாஸ்மாக் கடைகளை நிறைய திறந்து வைத்து போதை பழக்கம் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது.
தருமபுரி:
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தருமபுரிக்கு இன்று வருகை தந்த தே.மு.தி.க. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் தான் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. ஜனாதிபதி தமிழகம் வருகையின்போது நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. இது கண்டனத்துக்குரியது.
தி.மு.க. எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் வன்முறை கொண்டு வருவார்கள் என்பது வரலாறு. கவர்னர் மாளிகை பெட்ரோல் குண்டுவீச்சு போன்று வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்கவும், அதனை தடுப்பதும் தமிழக அரசின் கடமை.
திராவிடம் என்பது பொய் தவறான விஷயம், திராவிடம் இல்லை என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது, திராவிடம் என்பது கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழகம் ஆகிய 4 மாநிலங்களுக்கு பொதுவானது. பாராளுமன்ற தேர்தலுக்காக யாருடன் கூட்டணி, எந்தெந்த தொகுதிகள், வேட்பாளர்கள் யார் என்பது குறித்து ஜனவரி மாதம் உரிய அறிவிப்பு கட்சி தலைமை முறையான அறிவிப்பு வெளியிடும். விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது.
2½ ஆண்டில் தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேறவில்லை 10 சதவீதம் தான் நிறைவேற்றி உள்ளனர்.
பெண்களுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தில் பல்வேறு குளறுபடி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்று கூறினர். அதுகுறித்தும் எந்த அறிவிப்பு இல்லை.
டாஸ்மாக் கடைகளை நிறைய திறந்து வைத்து போதை பழக்கம் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் அரசு எடுக்கவில்லை.
"நீட்" ஒட்டுமொத்த மாணவர்களையும் தி.மு.க. குழப்பி விடுகிறது. நீட் இந்தியாவிற்கு பொதுவானது. நீட்டை ஒழிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியும் நீட் விலக்குக்கு உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து இயக்கம் நடத்தினாலும் எடுபடாது. அரசியல் செய்வதற்காக இந்த வேலையை செய்கின்றனர் என்று மாணவர்கள் தெளிவாகி விட்டனர். மாணவர்கள் குழம்பி போகாமல் எந்தவொரு தேர்வை அறிவித்தாலும், அதில் தேர்ச்சி பெற்று சிறந்த மருத்துவராக வேண்டும் என்றும் தே.மு.தி.க. சார்பில் கேட்டு கொள்கிறோம். நீட் என்பது வேறு, ஜூரோ மார்க் என்பது வேறு. நம்மை விட பின்தங்கிய மாநிலங்களில் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. அரசியல் லாபத்திற்காக நீட்டை எதிர்ப்பது மாணவர்களை தவறான பாதையில் வழி நடத்தி செல்வதாகும்.
தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள போனஸ் குறித்து போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு திருப்தி கிடையாது. 40 சதவீதம் வரை போனஸ் உயர்த்தி தர வேண்டும் என்று போக்குவரத்து துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கும் முயற்சி ஆபத்தானது. காவிரி உபரிநீர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். நாட்டில் எவ்வளவு பிரச்சனை உள்ளது. அதற்கு தீர்வு காணாமல், தி.மு.க. அரசு செய்யும் தவறுகளை மறைப்பதற்காக சாதனத்தை பற்றி பேசி வருகின்றனர். வாக்கு வங்கி சரிந்து வருகிறது என்பது தே.மு.தி.க.விற்கு மட்டுமல்லாமல், தேர்தல் நேரங்களில் அ.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகளும் பெரிய தோல்விகளை சந்தித்து உள்ளன. தே.மு.தி.க. அபாரமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்களுடைய வரிப்பணத்தை சொந்த பணமாக மாற்றும் நபர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றமில்லை.
- தி.மு.க. ஆட்சி ஒரு ஹிட்லர் ஆட்சி போல உள்ளது.
மதுரை:
விருதுநகர் மாவட்டம் திருமங்கலம் அருகே காங்கேய நத்தத்தில் உள்ள வீரசின்னம்மாள் கோவில் உள்ளது. தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் குலதெய்வ கோவிலான இங்கு சாமி கும்பிடுவதற்காக பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருமான வரித் துறையினர், அமலாக்கத் துறையினர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் வீடுகளில் மட்டும் சோதனை செய்வது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சோதனைக்கு பின்னர் என்ன என்பது மர்மமாகவே உள்ளது. மக்களுடைய வரிப்பணத்தை சொந்த பணமாக மாற்றும் நபர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றமில்லை.
தமிழகத்தில் அதிகமாக லஞ்ச ஊழல் தலை விரித்தாடுகிறது. அதனால் இது போன்ற சோதனைகள் கட்டாயம் நடைபெற வேண்டும். இந்த சோதனையை தே.மு.தி.க. வரவேற்கிறது.
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் உள்ளது. நிச்சயமாக ஜனவரி மாதம் கூட்டணி குறித்தும், தே.மு.தி.க. நிலைப்பாடு குறித்தும் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். தமிழகத்தில் பட்டாசு வெடி விபத்து அதிகமாக உள்ளது.
அதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீர் பிரச்சனையில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. எந்த ஆட்சி வந்தாலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. மாறி மாறி வந்தாலும் இதே நிலை தான் தொடர்கிறது. மத்திய அரசு தலையிட்டு நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
தி.மு.க. ஆட்சி ஒரு ஹிட்லர் ஆட்சி போல உள்ளது. உரிமைக்காக போராடுபவர்கள் நியாயமான கோரிக்கையாக இருந்தால் நிச்சயமாக அரசு அவர்களுக்கு செவிசாய்க்க வேண்டும்.
இஸ்ரேல் போரில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து அவர்களை மீட்கும் நடவடிக்கை தாமதமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- காவிரி நீரை பெறுவதற்காக நமது ஒன்று பட்ட உணர்வை காட்ட வேண்டும்.
- தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போதை பழக்கத்துக்கு அடிமையாகி கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி நதிநீர் பிரச்சனையில் 55 ஆண்டுகளாக கண் துடைப்பு நாடகம் தான் நடக்கிறது.
தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரையும் கர்நாடக அரசு கொடுக்கவில்லை. அந்த மாநில அரசும், அங்குள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் மொத்தமாக ஒன்றிணைந்து போராடுகின்றன.
தமிழகத்திலும் அனைவரும் ஒருங்கிணைந்து போராடும் சூழலை உருவாக்காதது ஏன்? உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். காவிரி நீரை பெறுவதற்காக நமது ஒன்று பட்ட உணர்வை காட்ட வேண்டும்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. சோனியா மூலம் அந்த மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்பது நதிகளை இணைப்பதுதான். இதுபற்றி கவர்னரை சந்தித்தபோதும் வற்புறுத்தினோம்.
தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போதை பழக்கத்துக்கு அடிமையாகி கொண்டிருக்கிறார்கள். இதை தடுக்க போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தே.மு.தி.க என்றைக்கும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.
- மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை அதிக அளவில் நடந்து வருகிறது.
தஞ்சாவூர்:
டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி தஞ்சையில் தே.மு.தி.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
கர்நாடக அரசு உரிய தண்ணீர் வழங்காததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் காய்ந்து வருகிறது. கண்முன்னே வாடிய பயிரை கண்டு விவசாயி ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவரது குடும்பத்தினரிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். தே.மு.தி.க நிர்வாகிகள் நேரில் சென்று ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
விவசாயிகள் நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். ஆனால் தமிழகத்தில் விவசாயிகளின் நிலைமை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. நாட்டிற்கே உணவு அளிப்பவர்கள் விவசாயிகள்.
ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீருக்காக கர்நாடகத்தை நாடி இருக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த 1968-ம் ஆண்டிலிருந்தே காவிரி நதிநீர் பிரச்சனை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக காவிரி பிரச்சனை உள்ளது. ஆனால் இதுவரை நிரந்தர தீர்வு காணவில்லை. ஆண்ட கட்சிகள், ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகள் இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது தான் உண்மை. இனிமேலாவது காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க செய்ய வேண்டும்.
இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய நதிநீர் இணைப்பே இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். தே.மு.தி.க என்றைக்கும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.
தற்போது வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தண்ணீர் கடைமடை வரை நிச்சயமாக செல்லாது.
டெல்டா மாவட்டங்களில் சரியாக தூர்வாரவில்லை. மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை அதிக அளவில் நடந்து வருகிறது. பருவ காலங்களில் பெய்யும் மழை நீர் எங்கு செல்கிறது. அதனை முறையாக சேமிக்கவில்லை. தடுப்பணைகளை அமைத்து மழைநீரை சேமிக்க வேண்டும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் காவிரி பிரச்சனை வருகிறது. மழைக்காலம் வந்தால் மறந்துவிடுகிறோம்.
உண்ணாவிரத நோக்கம் குறித்து கவர்னரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம். விவசாயிகளுக்கு வழங்கப்படக்கூடிய நிவாரணம் என்பது தற்காலிக தீர்வுதான். அவர்களுக்கு தேவை நிரந்தர தீர்வு. எப்பொழுதுதான் அந்த நிரந்தர தீர்வை நாம் அளிக்கப் போகிறோம். எத்தனை வருடங்கள் போராட போகிறோம் .இதற்கு நிரந்தர தீர்வு வர வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சோனியா காந்தியை சந்தித்து கர்நாடகாவை வலியுறுத்தி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி பிரிந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை. இந்த கூட்டணி பிரிவதற்கு இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் தான் காரணம். இது நிரந்தரமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன. நிச்சயம் ஒரு நல்ல தீர்வை தே.மு.தி.க எடுக்கும். உரிய நேரத்தில் தே.மு.தி.க நிலைப்பாடு என்ன என்பதை விஜயகாந்த் நிச்சயம் அறிவிப்பார்.
தமிழகத்தில் அரசியல் செய்பவர்கள் அடுத்த தேர்தலுக்கான அரசியலை தான் செய்கிறார்களே தவிர அடுத்த தலைமுறைக்கான அரசியலை செய்வது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சின்னத்துரை, சகோதரி சந்திரா செல்வி ஆகியோரை தே.மு.தி.க. நிர்வாகிகள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.
- மாணவன், அவரது சகோதரி குறித்து பிரேமலதா விஜயகாந்த் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் நெல்லை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தே.மு.தி.க. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.
அப்போது கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செல்போன் மூலமாக, சிகிச்சை பெற்று வரும் மாணவரின் தாயாரிடம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மாணவன், அவரது சகோதரி குறித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
மாநில நெசவாளர் அணி செயலாளர் மீனாட்சி சுந்தரம், புறநகர் மாவட்ட செயலாளர் விஜி வேலாயுதம், தலைமை செயற்குழு உறுப்பினர் கலைவாணன், பாளை பகுதி செயலாளர் அந்தோணி, தச்சை பகுதி செயலாளர் ராஜ், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, நிர்வாகிகள் கணேசன், மாசானம், மகேந்திரன், ராஜா, பாலாஜி உட்பட பலர் உடன் சென்றனர்.
- தே.மு.தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
- கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
விருத்தாசலம்:
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 1000 வழங்க வேண்டும். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நதி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும். விளை நிலங்களை அழித்து வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன் படி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதனையும் மீறி இன்று விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன், நகர செயலாளர் ராஜ்குமார், ஆனந்தகோபால், பிரபா, மாவட்ட இளைஞரணி ஜானகிராமன், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் வசந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் புருசோத்தமன், நாராயணன், ராசவன்னியன், சிவகுரு, ராமச்சந்திரன், பாலமுருகன் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கண்டன கோஷங்களிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கடலூர் மாவட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடக்கிறது
- 37 மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
சென்னை:
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 ரூபாய் வழங்க வேண்டியும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நதிநீரை கர்நாடகா அரசு திறக்க கோரியும், விளை நிலங்களை அழித்து வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும் தே.மு.தி.க. சார்பில் வருகிற 10-ந் தேதி காலை 10 மணி அளவில் ஒருங்கிணைந்த மாவட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடக்கிறது.
சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்கிறார்.
தே.மு.தி.க. துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி-தஞ்சாவூர், ஏ.ஆர்.இளங்கோவன்-கோவை பேராசிரியர் மகாலெட்சுமி-திருவள்ளூர் இளைஞர் அணிச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி-விழுப்புரம்.
மகளிர் அணி செயலாளர் மாலதி வினோத்-நாமக்கல், சுபமங்களம் டில்லிபாபு-செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பங்கேற்கிறார்கள். இதே போல் 37 மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.