என் மலர்
நீங்கள் தேடியது "premalatha vijayakanth"
- நாங்கள் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்பதை தெரிந்து கொள்வதில் எங்களைவிட நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள்.
- தே.மு.தி.க.வை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை கலந்தாலோசித்து தெளிவான ஒரு முடிவை உங்களை அழைத்து அறிவிப்பேன்.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி: மத்திய மந்திரி பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். கூட்டணியை பலப்படுத்துவதற்காக பேச்சுவார்த்தைகள் போய் கொண்டிருக்கிறது. கூட்டணி தொடர்பாக உங்கள் முடிவு என்ன என்று தொண்டர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: எங்கள் தொண்டர்கள் காத்திருக்கிறார்கள் என்றால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள்தான் காத்திருக்கிறீர்கள். தொண்டர்கள் அனைவரும் தெளிவாக இருக்கிறார்கள்.
நாங்கள் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்பதை தெரிந்து கொள்வதில் எங்களைவிட நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள். உங்களை நான் அழைத்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். பியூஷ் கோயல் வந்திருப்பதாகவும் எங்களுடன் பேச இருப்பதாகவும் நீங்கள்தான் சொல்கிறீர்கள். எங்களுக்கு இன்னும் தகவல் வரவில்லை. இது தான் உண்மை.
எங்களுக்கு அப்படி ஒரு செய்தி இந்த நிமிடம் வரை வரவில்லை. எங்களை யாரும் அணுகவும் இல்லை. தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ளவில்லை. பியூஷ் கோயல் எதற்காக வந்திருக்கிறார் என்பது எனக்கு தெரியாது. கூட்டணி தொடர்பாக முடிவு எடுத்தால் முதலில் உங்களை கூப்பிட்டு தெரிவிக்கிறேன்.
கேள்வி: யாருடன் கூட்டணி என்று முடிவு எடுத்திருக்கிறீர்கள்?
பதில்: நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நாளை மறுநாள் (23-ந்தேதி) பிரதமர் வருகிறார் என்பதை தொலைக்காட்சியில்தான் பார்த்தேன். அது அவர்கள் கட்சி சார்பான கூட்டமா அல்லது கூட்டணி தொடர்பான கூட்டமா என்பது கூட தெரியவில்லை.
தே.மு.தி.க.வை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை கலந்தாலோசித்து தெளிவான ஒரு முடிவை உங்களை அழைத்து அறிவிப்பேன். வருகிற 24-ந்தேதி முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை 4-ம் கட்ட பயணத்துக்கு நாங்கள் கிளம்புகிறோம். அந்த பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்.
கேள்வி: கூட்டணி குறித்து நாங்கள் உறுதி செய்து விட்டோம். உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று மாநாட்டில் அறிவித்தீர்களே?
பதில்: எங்கள் கட்சிக்குள் கலந்து ஆலோசித்து இருக்கிறோம். அவர்களின் கருத்துக்களை கேட்டு இருக்கிறேன். அவர்கள் விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்கள். அதை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.
கேள்வி: தேசிய ஜனநாயக கூட்டணி குழப்பத்தில் உள்ளதா?
பதில்: பா.ஜ.க. தலைவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டால் பதில் இல்லை.
கேள்வி: தேசிய ஜனநாயக கூட்டணியில் அழைத்தால் சேருவீர்களா?
பதில்: நடக்காத ஒரு விஷயத்துக்கு இப்போது என்னால் பதில் சொல்ல முடியாது. தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.
கேள்வி: பியூஷ் கோயல் அழைத்தால் சந்தித்து பேச தயாராக இருக்கிறீர்களா?
பதில்: இதுவரை அழைக்கவில்லை. அப்படி வந்தால் உங்களுக்கு சொல்கிறேன். பிரதமர் மோடி நாளை மறுநாள் (23-ந்தேதி)தான் வருகிறார். அன்றைக்கு பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எல்.ஐ.சி. மேலாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட தி.மு.க. அரசு, காவல்துறைக்கு பாராட்டுகள்.
- பியூஷ் கோயலை சந்திப்பதாக வெளியான செய்தி தவறானது.
சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எல்.ஐ.சி. மேலாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட தி.மு.க. அரசு, காவல்துறைக்கு பாராட்டுகள்.
* காப்பீட்டுத் தொகை முறைகேட்டை கண்டித்த மேலாளர் கல்யாணியை கொன்ற சக ஊழியருக்கு கடும் தண்டனை தர வேண்டும்.
* கூட்டணி தொடர்பாக செய்தியாளர்களிடம் உரிய நேரத்தில் அறிவிப்பேன்.
* தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக யாரும் எங்களை அணுகவில்லை.
* பியூஷ் கோயலை சந்திப்பதாக வெளியான செய்தி தவறானது.
* பியூஷ் கோயலை சந்திக்க எனக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை.
* கூட்டணி பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. பிரதமர் பங்கேற்கும் கூட்டத்திற்கும் அழைப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறது.
- விஜய் கட்சியுடன் கூட்டணிஅமைப்பதற்கு ஒரு சில மாவட்ட செயலாளர்களே வாக்களித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் தே.மு.தி.க.வும் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாகி உள்ளது. 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த் அடுத்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலேயே அதிரடியாக களமிறங்கினார். அந்த தேர்தலில் விஜயகாந்த் வெற்றி பெற்ற நிலையில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்றனர். முதல் தேர்தலிலேயே 8 சதவீத வாக்குகளை பெற்ற விஜயகாந்த் 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 10 சதவீத வாக்குகளை பெற்றார்.
இதனை அடுத்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டிப்பிடித்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார்.
இதன் பிறகு நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் தே.மு.தி.க. தோல்வியையே தழுவியுள்ளது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 15 ஆண்டுகளாக தே.மு.தி.க. எந்த தேர்தலிலும் வெற்றி பெறாத நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியை வெற்றி பாதைக்கு மீண்டும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வியூகம் வகுத்துள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல் சபை எம்.பி. பதவியை அளிப்பதாக அ.தி.மு.க. உறுதி அளித்து இருந்தது.
ஆனால் சமீபத்தில் மேல்சபை எம்.பி.க்கள் தேர்வான போது தே.மு.தி.க.வை அந்த கட்சி புறக்கணித்து இருந்தது. அ.தி.மு.க.வினர் இருவரை மேல்சபை எம்.பி.யாக்கி எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.
இதனால் கோபமடைந்த தே.மு.தி.க. அதுபற்றி கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியது. இதற்கடுத்து இந்த மாதம் மேல்சபை எம்.பி. பதவி தே.மு.தி.க.வுக்கு அளிக்கப்படும் என்று அ.தி.மு.க. சார்பில் உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது. தே.மு.தி.க. கூட்டணியை தக்க வைப்பதற்காகவே அ.தி.மு.க. இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
இதுபோன்ற சூழலில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி நேற்று நடைபெற்ற மாநாட்டில் பிரேமலதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரேமலதாவோ யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம் என்று மாநாட்டில் அறிவித்துவிட்டார்.
இது பிரேமலதாவின் தேர்தல் வியூகத்தை காட்டுவதாகவே அந்த கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் ஏற்கனவே உள்ள கூட்டணியில் நீடிக்க போகிறது? என்பது இன்னும் முடிவாகாத நிலையில் நாங்கள் மட்டும் எதற்காக அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டும் என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் எங்களது ஆதரவை பெற்றுவிட்டு ஏமாற்றி விடுகிறார்கள். எனவே வருகிற தேர்தலில் அதற்கெல்லாம் இடம் கொடுக்காத அளவுக்கு முடிவெடுக்க வேண்டும் என்பதே தே.மு.தி.க.வினரின் எண்ணமாக உள்ளது.
எனவே மேல்சபை எம்.பி. பதவியுடன் இரட்டை இலக்கத்தில் சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கும் கட்சியோடு கூட்டணி அமைக்கலாம் என்பதே அந்த கட்சியினரின் விருப்பமாக உள்ளது. இதனையே தே.மு.தி.க. சார்பில் நிபந்தனையாக வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தே.மு.தி.க. அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியை முறிக்க வேண்டாம் என்றும் பலர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் கட்சியுடன் கூட்டணிஅமைப்பதற்கு ஒரு சில மாவட்ட செயலாளர்களே வாக்களித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் கருத்தில் வைத்தே தே.மு.தி.க. கூட்டணி தொடர்பாக காய் நகர்த்தி வருகிறது, இதற்கிடையே தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். இதையடுத்து விரைவில் தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. தலைமை பேச்சு நடத்தும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
தி.மு.க. தரப்பிலும் மேல்சபை எம்.பி. பதவி தருவதாக உறுதியளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தே.மு.தி.க.- அ.தி.மு.க. கூட்டணியில் சேருவதா இல்லை தி.மு.க. அணியில் இணைவதா என்கிற குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தை பிறந்த பிறகு கூட்டணி தொடர்பான அதிரடி அறிவிப்பை பிரேமலதா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இவ்வளவு நாள் சத்ரியனாக வாழ்ந்து விட்டோம்.
- இனிமேல் சாணக்கியனாக வாழ வேண்டும்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற்றது. இந்த மாநாட்டில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
* கடலூரில் என்றாலே கேப்டன் கோட்டை.
* கேப்டனுக்கு வெற்றி கொடுத்த மாவட்டம்.
* கடலூரில் கேப்டன் இருந்தபோது, மாநாடு நடத்தப்படவில்லை. அவருக்கு வெற்றி தேடிக்கொடுத்த மாவட்டத்தில் நாம் மாநாடு நடத்துகிறோம்.
* கேப்டன் இல்லாமல் நாம் யாரும் கிடையாது.
* தொண்டர்களுடைய பணிக்கு ஈடு இணை கிடையாது. மாநாட்டில் நிறைவேற்ற தீர்மானம் மக்களுக்கானவை.
* கேப்டன் பேசிய டயலாக்குதான் உலக பிரசித்தி பெற்றது.
* நான் உங்களில் (தொண்டர்கள்) கேப்டனை பார்க்கிறேன்.
* எப்படி ஒரு தலைவராக இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்தவர் கேப்டன்.
* கேப்டனுக்கு இணை எந்த தலைவரும் இல்லை. தலைமைக் கழகத்தில் விதைக்கப்பட்டிருக்கிறார். புதைக்கப்படவில்லை. தேமுதிக கட்சிக்க இணையான கட்சி ஏதும் இல்லை.
* கேப்டன் என்ற சொல்லுக்கு, அன்புக்கு வந்த தொண்டர்களை இரு கை கூப்பி வணங்குகிறேன்.
* தேமுதிக-வை பற்றி ஏளமாக எந்த கொம்பனாலும் இருந்தாலும் சரி பேசினால், தொண்டர்கள் பதில் கொடுப்பார்கள்.
* 1971-ல் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றம் அமைக்கப்பட்ட நாள்.
* தேர்தல் வந்தால் எவ்வளவு பேரம் பேரம் என்கிறார்கள். நான் பேசுவேன். கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுடன் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பேசுவேன். அவர்கள் விரல்கள் காட்டுபவர்களுடன்தான் கூட்டணி.
* தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தேமுதிக உடன் கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும்.
* தேமுதிக-விற்கு வெற்றி ஒன்றுதான் கொள்கை.
* யாருடன் கூட்டணி என்ற முடிவை எடுத்தாகிவிட்டது.
* அதை இந்த மாநாட்டில் அறிவிக்க வேண்டுமா? என்பதுதான் கேள்வி.
* எந்த கட்சியும் கூட்டணி அறிவிக்கவில்லை. மாவட்ட கழக செயலாளர்கள் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்றார். தை பிறந்தால் வழி பிறக்கும்.
* இவ்வளவு நாள் சத்ரியனாக வாழ்ந்து விட்டோம். இனிமேல் சாணக்கியனாக வாழ வேண்டும். மற்ற கட்சிகள் அறிவிக்காதது போது, நாம் மட்டும் ஏன் முந்திரி கொட்டையாக முந்த வேண்டும்.
* நமக்கு கண்ணியம் உண்டு. தொண்டர்களை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி.
* தை பிறந்தால் வழி பிறக்கும்.
- 2011-ல் 29 தொகுதிகளில் வெற்றிப்பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றம் சென்றார்.
- 10 லட்சம் தொண்டர்கள் இன்று மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமத்தில் தேமுதிகவின் மாநாடு நடைபெற்றது. 2026 சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது என்பது உட்பட மாநாட்டில் 11 தீர்மானங்கள் போடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ்,
"கடலூர் என்றாலே கேப்டனின் கோட்டை. ராசியான மாவட்டம் கடலூர். 2011-ல் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் தேமுதிக வெற்றிப் பெற்ற மாவட்டம். 2011-ல் 29 தொகுதிகளில் வெற்றிப்பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றம் சென்றார். மீண்டும் அதேபோல தேதிமுக வெற்றிப்பெற்று பிரேமலதா விஜயகாந்த் துணை முதலமைச்சராக வேண்டும் என்பது எனது ஆசை. 10 லட்சம் தொண்டர்கள் இன்று மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். அதனால் தேமுதிக சீட்டு எண்ணிக்கையில் பேரம் பேசுவதில் தவறில்லை. தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெறுகிறதோ அந்தக் கட்சிதான் வெற்றிப்பெறும்." என தெரிவித்தார்.
- தேமுதிக உடன் கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும்.
- தேமுதிக-விற்கு வெற்றி ஒன்றுதான் கொள்கை.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற்றது. இந்த மாநாட்டில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
* கடலூரில் என்றாலே கேப்டன் கோட்டை.
* கேப்டனுக்கு வெற்றி கொடுத்த மாவட்டம்.
* கடலூரில் கேப்டன் இருந்தபோது, மாநாடு நடத்தப்படவில்லை. அவருக்கு வெற்றி தேடிக்கொடுத்த மாவட்டத்தில் நாம் மாநாடு நடத்துகிறோம்.
* கேப்டன் இல்லாமல் நாம் யாரும் கிடையாது.
* தொண்டர்களுடைய பணிக்கு ஈடு இணை கிடையாது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மக்களுக்கானவை.
* கேப்டன் பேசிய டயலாக்குதான் உலக பிரசித்தி பெற்றது.
* நான் உங்களில் (தொண்டர்கள்) கேப்டனை பார்க்கிறேன்.
* எப்படி ஒரு தலைவராக இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்தவர் கேப்டன்.
* கேப்டனுக்கு இணை எந்த தலைவரும் இல்லை. தலைமைக் கழகத்தில் விதைக்கப்பட்டிருக்கிறார். புதைக்கப்படவில்லை. தேமுதிக கட்சிக்கு இணையான கட்சி ஏதும் இல்லை.
* கேப்டன் என்ற சொல்லுக்கு, அன்புக்கு வந்த தொண்டர்களை இரு கை கூப்பி வணங்குகிறேன்.
* தேமுதிக-வை பற்றி ஏளனமாக எந்த கொம்பனாலும் இருந்தாலும் சரி பேசினால், தொண்டர்கள் பதில் கொடுப்பார்கள்.
* 1971-ல் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றம் அமைக்கப்பட்ட நாள்.
* தேர்தல் வந்தால் எவ்வளவு பேரம் பேரம் என்கிறார்கள். நான் பேசுவேன். கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுடன் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பேசுவேன். அவர்கள் விரல்கள் காட்டுபவர்களுடன்தான் கூட்டணி.
* தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தேமுதிக உடன் கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும்.
* தேமுதிக-விற்கு வெற்றி ஒன்றுதான் கொள்கை.
- மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
- திரும்பிய திசையெங்கும் தே.மு.தி.க. கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளதால் பாசார் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடக்கிறது. இதற்காக 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் கட்சி தோரணங்கள், பதாகைகள் வைக்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன் போன்ற வாகனங்களை நிறுத்த தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் திரும்பிய திசையெங்கும் தே.மு.தி.க. கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளதால் பாசார் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மாநாட்டு திடலுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வருகை தருகிறார். பின்னர் அவர், கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து 3.23 மணிக்கு பரதநாட்டியம், விஜயகாந்த் பற்றிய கதை, 3.40 மணிக்கு பட்டிமன்றம், மாலை 4.40 மணிக்கு கலைக்குழுவினரின் நடனம், பரதநாட்டிய குழுவினரின் நிகழ்ச்சி, கிராமிய கலைக்குழு நிகழ்ச்சி நடக்கிறது.இதையடுத்து மாலை 6 மணி அளவில் மாநாடு தொடங்கி நடக்கிறது. இதற்கு பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார். அப்போது அவர் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை அறிவிப்பார் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் சட்டசபை தேர்தலில் யாருடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என்பதை மாநாட்டில் தெரிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று நடைபெறும் மாநாட்டில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை அவர் அறிவிக்க இருக்கிறார். இதனால் இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சுமார் 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
- பரத நாட்டிய குழுவினரின் நிகழ்ச்சி, கிராமிய கலைக்குழு நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டிற்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றுகிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நடக்கும், இந்த மாநாட்டில் தே.மு.தி.க. கூட்டணி குறித்து அறிவிக்க வாய்ப்பு உள்ளதால், இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாநாட்டிற்காக கடந்த டிசம்பர் மாதம் பந்தக்கால் நடப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக சுமார் 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது மாநாட்டு திடலில் மேடை அமைக்கும் பணி, சாலையின் இருபுறமும் கட்சி தோரணங்கள், பதாகைகள் வைக்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பாசார் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் நிகழ்ச்சியில் பிற்பகல் 2.30 மணிக்கு பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாநாட்டு திடலில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து 3.23 மணிக்கு பரதநாட்டியம், கேப்டனை பற்றிய கதை, 3.40 மணிக்கு பட்டிமன்றம், மாலை 4.40 மணிக்கு கலைக்குழுவினரின் நடனம், பரத நாட்டிய குழுவினரின் நிகழ்ச்சி, கிராமிய கலைக்குழு நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இந்த நிலையில் மேடை அமைக்கும் பணியை நேற்று கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் பார்வையிட்டார்.
அப்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர்கள் சிவக்கொழுந்து, உமாநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
- தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் தொடங்கியது.
- மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஜனவரியில் நடைபெறும் தே.மு.தி.க. மாநாடு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் தொடங்கியது.
மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஜனவரியில் நடைபெறும் தே.மு.தி.க. மாநாடு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
மேலும் வருகிற 2026 சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது.
- கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் கலந்தாலோசிக்கப்பட உள்ளது.
தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 13-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெறவுள்ளது.
கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் கலந்தாலோசிக்கப்பட உள்ளது. அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் அம்சவேணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
- மறைந்த அம்சவேணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி (83) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் அம்சவேணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
பெற்றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்னையை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.க.வின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா, பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோரின் தாயாரான அம்சவேணி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
பாசமிகு தாயாரை இழந்து வாடும் பிரேமலதா, சுதீஷ் மற்றும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அம்சவேணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோரின் அன்புத் தாயாரான அம்சவேணி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு செல்லக்கூடிய விஜய் கரூருக்கு தாமதமாக வந்தார்.
- கரூர் விஷயத்தில் இருபக்கமும் தவறு உள்ளது.
கிருஷ்ணகிரி:
தே.மு.தி.க. சார்பில் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற தலைப்பில் விஜயகாந்த் ரத யாத்திரை - பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று இரவு நடந்தது. இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
கரூரில் நடந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கொடுக்க தவறியதால் 41 பேர் உயிர் இழந்துள்ளனர். மக்களை சந்திக்க தாமதமாக வந்ததே விஜய் செய்த பெரிய தவறு. நாம் சொன்ன நேரத்திற்கு இங்கு வந்தோம். முதலில் விஜய் தாமதமாக வந்தது தவறு. கடமை உணர்வை தவறினார் விஜய்.
சூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு செல்லக்கூடிய விஜய் கரூருக்கு தாமதமாக வந்தார். கரூரில் பிரசார கூட்டம் நடந்த இடத்தில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்பட்டது. அதனாலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதே நேரத்தில் தொண்டர்களுக்கு தண்ணீர், உணவு கொடுக்க வேண்டாமா? வாகனத்தில் உள்ளேயே அமர்ந்து இருக்க கூடாது.
விஜய் நீங்கள் விஜயகாந்த்தை அண்ணன் என்று கூறுகிறீர்கள். அண்ணன் என்ன செய்தார்? என பார்த்து நீங்கள் செயல்படுங்கள். விமானத்தில் ஏறி வீட்டிற்குள் சென்றவர் இதுவரை வெளியே வரவில்லை. அறியாமல் விபத்து நடந்து விட்டதாக கூறுங்கள். ஏன் மகாமகத்தில் இறக்கவில்லையா? கள்ளச்சாராயம் குடித்து சாகவில்லையா? யாரை கைது செய்தார்கள். கள்ளக்குறிச்சிக்கு இந்த முதலமைச்சர் சென்றாரா? இன்று கரூருக்கு தனி விமானத்தில் இரவோடு இரவாக ஓடோடி செல்கிறார். எல்லாம் அரசியல்.
யாரோ ஒருவர் செய்த தவறுக்காக தே.மு.தி.க.வை வஞ்சிக்கிறார்கள். இதுவரை தமிழ்நாட்டிலேயே ஒரு மாநாடு நடத்தி கின்னஸ் சாதனை படைத்த கட்சி தே.மு.தி.க. தான். தொண்டர்களை உண்மையில் நேசித்தவர் விஜயகாந்த். விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும். நிதியுதவியை நேரில் கொடுக்க வேண்டும்.
கரூர் விஷயத்தில் இருபக்கமும் தவறு உள்ளது. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசும் தவறி விட்டது. தொண்டர்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய விஜய்யும் தவறு செய்து விட்டார். இதில் மாற்று கருத்து இல்லை. புஸ்சி ஆனந்த் தலைமறைவு என்கிறார்கள். எதற்காக தலைமறைவாக வேண்டும், தூக்கிலா போட போகிறார்கள். நேரில் வந்து சந்திக்க வேண்டும்.
கர்நாடக மாநில தொழிற்சாலை கழிவுநீர் இந்த மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கலக்கப்படுகிறது. இந்த தண்ணீரை கால்நடைகள் கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இந்த பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க வேண்டும். அதுவே அரசின் கடமை.
இவ்வாறு அவர் பேசினார்.






