search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK"

    • ஓபிஎஸ் அ.தி.மு.க.வின் கொடி, சின்னம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
    • பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார்.

    சென்னை:

    கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும், பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், அவர் உட்பட 4 பேரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது.

    இந்த நிலையில், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவில், பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை.

    எனவே, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

    சென்னை ஐகோர்ட்

    சென்னை ஐகோர்ட்

     இதையடுத்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஓபிஎஸ் தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் தீர்ப்பில், அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர், தடை விதித்தது செல்லும் என தீர்ப்பளித்தனர். மேலும் ஓபிஎஸ் தரப்பு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அதேநேரம் வேண்டுமானால் ஓபிஎஸ் தரப்பு, தனி நீதிபதி முன் உரிய மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டது.

    மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நிரந்தரம் செய்தும் உத்தரவிட்டது.

    பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அ.தி.மு.க.வின் கொடி, சின்னம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
    • உலக மக்கள் நலம் பெற சுவாமி தரிசனம் செய்ததாக பதிலளித்தார்.

    திருச்செந்தூர்:

    முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று இரவு வந்தார்.

    திருச்செந்தூரில் தனியார் விடுதியில் தங்கிய அவர் இன்று அதிகாலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் தீர்த்தம் எடுத்துகொண்டு நேராக கோவிலுக்கு சென்று காலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் சத்ரு சம்கார மூர்த்தி சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து காலை 6 மணிக்கு மூலவருக்கு நடத்த அபிஷேகத்தில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

    ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் கொடி, சின்னம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

    தீர்ப்பு இன்று வரவுள்ள நிலையில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தது அரசியல் வட்டாரத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சுவாமி தரிசனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், உலக மக்கள் நலம் பெற சுவாமி தரிசனம் செய்ததாக பதிலளித்தார். மேலும் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்ய வந்தபோது எடுத்த படம்.

    • பாமக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல்.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் பாமக எம்எல்ஏ அருள் சந்தித்துள்ளார்.

    மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக- பாமக இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    பாமக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    அன்புமணி மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க. எத்தனை தொகுதி போட்டியிடும்? அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை முதல் ஆளாக வெளியிடுவார்.
    • தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முக்கிய தொகுதிகளில் யார்-யாரை நிறுத்துவது என்பதை ஏற்கனவே டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து விட்டனர்.

    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என்பதை ஏற்கனவே அறிந்து இருந்த தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகளின் தலைவர்கள் ஏற்கனவே எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதை 90 சதவீதம் தீர்மானித்து விட்டனர்.

    அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களையும் கடந்த வாரமே தேர்வு செய்து முடித்து விட்டனர்.

    காங்கிரசில் 2 தொகுதிகளில் மட்டுமே இழுபறி உள்ளது. அதுவும் நாளை காலை தீர்க்கப்பட்டு விடும். அதன் பிறகு நாளையே தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியில் மட்டும்தான் தமிழகத்தில் அந்த கட்சி போட்டியிடும் 9 வேட்பாளர்கள் யார்-யார் என்பதை முடிவு செய்வதில் கடும் சவால் நிலவுகிறது. அந்த 9 தொகுதிகளில் 6 தொகுதி வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியிட்டு எம்.பி. ஆனவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    திருநாவுக்கரசர், ஜோதிமணி ஆகிய இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மனுதாக்கல் நிறைவுபெறும் 27-ந்தேதி வரை காங்கிரசில் இழுபறி நீடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. சேருமா? என்பதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதால் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் உள்ளது. ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க. எத்தனை தொகுதி போட்டியிடும்? அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை முதல் ஆளாக வெளியிடுவார்.

    தற்போது அந்த சூழ்நிலை இல்லாத நிலையில் பா.ம.க., தே.மு.தி.க. வந்தால் எந்த தொகுதிகள் கொடுப்பது என்பது பற்றி அ.தி.மு.க.வில் ஒருமித்த கருத்து முடிவாகாத நிலை உள்ளது. என்றாலும் அ.தி.மு.க. வேட்பாளர்களும் 90 சதவீதம் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் தயாராக உள்ளது.

    பா.ம.க., தே.மு.தி.க. தொகுதி பங்கீடு சுமூகமாக தீர்க்கப்பட்டால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலையும் நாளை அல்லது நாளை மறுநாள் எடப்பாடி பழனிசாமி வெளியிட வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.

    பாரதிய ஜனதா கூட்டணியிலும் இதே நிலைதான் நிலவுகிறது. பா.ம.க., தே.மு.தி.க. தலைவர்களுடன் பாரதிய ஜனதா தலைவர்கள் தொடர்ந்து ரகசியமாக பேசி வருவதால் தொகுதி பங்கீடு முடிவாகவில்லை. என்றாலும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முக்கிய தொகுதிகளில் யார்-யாரை நிறுத்துவது என்பதை ஏற்கனவே டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து விட்டனர்.

    எனவே பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களும் இன்னும் 2 நாட்களில் தெரிய வாய்ப்பு உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் 39 வேட்பாளர்களும் ஒரே நாளில் அறிவிக்கப்படுவார்கள் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

    இதன் மூலம் தி.மு.க. கூட்டணியிலும், அ.தி.மு.க. கூட்டணியிலும், பாரதிய ஜனதா கூட்டணியிலும் 80 சதவீத வேட்பாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. தொகுதி பங்கீடு நிறைவு பெற்றதும் வேட்பாளர் பட்டியல் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிகிறது.

    வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டால் தமிழக தேர்தல் மேலும் சூடு பிடிக்கும்.

    • பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
    • தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் தனி சின்னத்தில் போட்டியிடுவது பற்றி ஓ.பி.எஸ். ஆலோசித்து வருகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளார்.

    பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

    இந்த தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட ஓ.பி.எஸ். விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் பாரதிய ஜனதா கட்சியினரோ தாமரை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்து வருகிறார்கள்.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஓ.பி.எஸ். தவித்து வருகிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருவதாக கூறிவரும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரையில் போட்டியிட்டால் நமது தனித்தன்மையை இழந்து விடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

    இதனை ஆமோதித்துள்ள ஓ.பி.எஸ். அடுத்த கட்டமாக என்ன செய்வது? என்பது பற்றி ஆலோசித்து வருகிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளரான புகழேந்தி டெல்லி ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    இது ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தேர்தல் நேரத்தில் சிக்கலை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. இதனால் தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் தனி சின்னத்தில் போட்டியிடுவது பற்றி ஓ.பி.எஸ். ஆலோசித்து வருகிறார்.

    ஆனால் அவரது இந்த முடிவை பாரதிய ஜனதா கட்சியினர் விரும்பவில்லை. பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், "நீங்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால்தான் சரியாக இருக்கும். புதிதாக ஒரு சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் மக்களிடம் அதனை எளிதாக கொண்டு போய் சேர்க்க முடியாது" என்று கூறி வருகிறார்கள்.

    இது ஓ.பி.எஸ்.சுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாரதிய ஜனதா கட்சியினர் சொல்வதை கேட்பதா? ஆதரவாளர்களின் கருத்துபடி செயல்படுவதா? என்று முடிவெடுக்க முடியாமல் ஓ.பி.எஸ். திணறி வருகிறார்.

    • பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை.
    • நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ். கூறி வருகிறார்.

    சென்னை:

    கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி ஒருமன தாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

    இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். ஏறாத நீதிமன்றம் இல்லை. ஆனால் எங்கும் ஓ.பி.எஸ்.க்கு தீர்ப்பு சாதகமாக வரவில்லை. இதனால் அரசியல் ரீதியாக அ.தி.மு.க.வுக்கு பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்து வந்தார். இன்னும் நான் தான் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்றும் கூறி வருகிறார்.

    அ.தி.மு.க.வின் சின்னத்தை பயன்படுத்துவது அ.தி.மு.க. கரை வேட்டியை உடுத்துவது, காரில் அ.தி.மு.க. கொடியை பறக்க விடுவது போன்று அவரது ஆதரவாளர்கள் இருந்தனர்.

    இதுபோன்ற செயல்கள் அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்ததால் அ.தி. மு.க. தொடர்பான எதையும் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த கூடாது என்று ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அ.தி.மு.க. கட்சி பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்தனர்.


    இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்திருந்தனர். இதை அடுத்து பிரதான மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு வந்த போது இருதரப்பு வாதங்களுக்கு பின் வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை.

    ஆனால் அதற்கு முன்பே செல்லும் இடமெல்லாம் பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் கூறி வந்தார்.

    இந்த நிலையில்தான் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலில் படிவம் 'ஏ' மற்றும் 'பி' படிவத்தில் கையெழுத்திட இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    அப்படி கொடுக்க முடியாத பட்சத்தில் இரு தரப்புக்கும் வேறு சின்னத்தை ஒதுக்க வேண்டும்.

    அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) தொண்டர் மீட்பு குழுவுக்கு பொதுசின்னம் தர வேண்டும் என்று அதில் வலியுறுத்தி உள்ளார்.

    இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதுவரை பா.ஜனதா கூட்டணியில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்று ஓ.பி.எஸ். இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    இந்த சூழலில் தேர்தல் ஆணையத்தில் உள்ள ஓ.பி.எஸ். கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அதை பதிவு செய்து கொண்டது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை அங்கீகரித்து அவருக்கு மீட்டிங் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. எனவே இப்போது வரை அ.தி.மு.க. கொடி, சின்னம் என அனைத்தும் எடப்பாடி பழனிசாமி வசம்தான் உள்ளன.

    நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ். கூறி வருகிறார். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் நாளை இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வர உள்ளது.

    இதில் ஓ.பி.எஸ்.க்கு எதிராக தீர்ப்பு அமையும் பட்சத்தில் அதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் செயல்படும். எனவே இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஓ.பி.எஸ். மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்றனர்.

    பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களிடம் விருப்ப மனு வாங்கி உள்ள நிலையில் பா.ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? அல்லது ஆதரவு தெரிவிப்பாரா? என்பது நாளை தெரிந்துவிடும். அதற்கேற்பதான் தேர்தல் கமிஷனில் முடிவும் அமையும்.

    • இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
    • மன்சூர் அலிகான் தான்தோன்றித்தனமாக, நிர்வாகிகளிடம் விவாதிக்காமல் எங்கிருந்தோ வரும் தகவலை கொண்டு தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கிறார்

    அண்மையில் நடிகர் மன்சூர் அலிகான், தன்னுடைய தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப் புலிகள் என்று மாற்றினார். இதனையடுத்து வரும் மக்களவை தேர்தலில் ஆரணி தொகுதி வேட்பாளராக தான் போட்டியிட இருப்பதாக தெரிவித்திருந்தார்.

    இதற்காக கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையும் நடைபெற்று வந்தது. அதிமுக உடன் அவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

    இந்நிலையில்தான் அவர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளதாக நேற்று கட்சி தரப்பில் அறிக்கையொன்று வெளியானது.

    அதை வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அதில், "சென்னை வளசரவாக்கத்தில் இந்திய ஜனநாயகப்புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் பொதுச்செயலாளர் கண்ணதாசனான எனது தலைமையில் கூட்டப்பட்டது. இதில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

    கட்சி தொடர்பான பொறுப்புகள் மற்றும் வரும் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் பொறுப்புகள் என அனைத்தையும் இனி பொதுச்செயலாளருக்கு வழங்க நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், மன்சூர் அலிகான் தான்தோன்றித்தனமாக, நிர்வாகிகளிடம் விவாதிக்காமல் எங்கிருந்தோ வரும் தகவலை கொண்டு தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கிறார்.

    இது கட்சியின் உள்ளேயே நிர்வாக ரீதியாக தேக்க நிலையை ஏற்படுத்துகிறது. இதனால் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். எங்களுடைய அவசர கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். தேர்தலுக்கு பிறகு புதிய தலைவர் உருவாக்கப்படுவாரா என்பதை தெரிவிப்போம்.

    மற்றபடி இனி மன்சூர் அலிகான் தன்னிச்சையாக இயங்க முடியாது. ஏனெனில் கட்சி நிர்வாகம் அவரிடத்தில் இல்லை. கட்சி பதிவிற்கான ஆவணங்களில் பெரும்பான்மையான ஆவணங்கள் எங்களுடையதாகாதே இருக்கிறது. குறிப்பிட்ட 5, 6 ஆவணங்கள்தான் அவரிடத்தில் உள்ளன. மீதமுள்ள 110 ஆவணங்களும் எங்களுடையதாகவே உள்ளது. ஆகவே கட்சி பெரும்பான்மை எங்களுக்குதான் சொந்தம்.

    நாங்கள் இவ்வளவு காலம், கொள்கை அடிப்படையில் இயங்கியவர்கள். ஆகவே இவர் போகிறப்போக்கில் பேசுவதை எங்களால் ஏற்று கொள்ளமுடியாது. இவர் இக்கட்சியில் இனி ஒரு உறுப்பினராக இருக்கலாம், அதைத்தாண்டி எந்த அதிகாரமும் அவருக்கு இல்லை" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், இது தொடர்பாக மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "இந்திய ஜனநாயக புலிகள் என்ற இயக்கத்திற்கு பொதுச்செயலாளராக குன்றத்தூரை சேர்ந்த பாலமுருகன்தான் உள்ளார். சகோதரர் கண்ணதாசன் என்ற நபர் மூத்த சங்க உறுப்பினர் செல்ல பாண்டியன் அவர்களால் ஆபீஸ் பாயாகத்தான் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அவ்வபோது 'உடன் வருகிறேன் அண்ணா' என்று வந்து பயன்பெற்றார். தமிழ்நாடு தமிழருக்கே என சட்டை அணிந்து அவர் வந்ததை கூட கண்டித்தேன். மேலும் இலங்கைக்கு யாரையோ அனுப்ப வேண்டும் என ஒரு லட்சம் ரூபாய் கேட்டார்.

    சமீபத்தில் ரப்பர் ஸ்டாம்ப், ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளார். அவர்குறித்து யாரும் கவலை தெரிவிக்க வேண்டாம். தமிழனை இதனால்தான் வேலைக்கு யாரும் வைப்பதில்லை. அவர் சேர்த்த உறுப்பினர்களை விடுவித்து புதிய உறுப்பினர்களை கொண்டு வந்து மீள் மனு செய்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் வாங்கி விட்டோம்.

    நான் ஆரணி, பெரம்பலூர் பகுதியில் ஆதரவு திரட்டி வருவதால் மிகுந்த வேலையாக உள்ளேன். உறுப்பினர்கள் யாரும் அவர் மீது கோபம் கொள்ள வேண்டாம்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

    • அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி.
    • பிரதமரின் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம் இல்லை.

    மதுரை:

    மதுரை கோச்சடையில் புதிய ரேசன் கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வுக்கு நிலையான கொள்கை கிடையாது. நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டது தி.மு.க.

    நீட் ரத்து ரகசியத்தை உதயநிதி இதுவரை சொல்லவில்லை. தி.மு.க. காலத்தில் தான் தமிழர்களின் உரிமைகள் பறிபோனது. தமிழ்நாட்டில் உள்ள ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான்.

    மத்தியில் ஆளும் கட்சி என்ற மமதையில் அண்ணாமலை மறைந்த தலைவர்களை மதிக்காமல் அரைவேக்காடு தனமாக பேசுகிறார்.


    அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பெட்டியை உடைக்கும் போது தான் பா.ஜ.க.வுக்கு மக்கள் என்ன ஆப்பு வைத்துள்ளார்கள் என்று தெரியும். அதன் பிறகு அண்ணாமலை இருப்பாரா? தொடர்வாரா? என்பது தெரியும்.

    கட்சி என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால் எல்லா சமூகத்ததையும், மதத்தினரையும் அரவணைத்து செல்ல வேண்டும். பாரதிய ஜனதா அப்படி கிடையாது. ஒரு மதத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்துகின்றது என்பது தான் மனவேதனை.

    பிரதமரின் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம் இல்லை. தேர்தலில் மக்கள் நன்றாக பதில் கொடுப்பார்கள். கூட்டணியில் இருப்பவர்கள் போனால் போகட்டும் எங்களுக்கு கவலை இல்லை.

    கடந்த முறை தேர்தலில் மசூதி பக்கம் செல்லவே முடியவில்லை. பா.ஜ.க.வை விட்டு வாருங்கள். நாங்கள் அனுமதிக்கிறோம் என்று இஸ்லாமியர்கள் கூறினார்கள். பா.ஜ.க.வை ஆதரித்ததால் மட்டுமே தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களின் ஓட்டு எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த முறை அப்படி இல்லை. இஸ்லாமியர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எங்கள் தலைவரை இழிவாகப் பேசும் அண்ணாமலைக்கு எப்படி நாங்கள் துணை போவோம். நாங்க என்ன இழி பிறவியா?

    விஜய் கட்சியை சேர்ந்தவர்கள் சிறு பிள்ளைகள். 2026-ம் ஆண்டு தேர்தல் வரும்போது பார்க்கலாம். விஜய் கட்சி ஆரம்பித்ததால் பாதிப்பு தி.மு.க.வுக்கு தான். ஏனெனில், விஜய் ரசிகர்கள் பெரும்பகுதி தி.மு.க.வுக்கு வாக்களித்துள்ளனர். அதனால் விஜய் கட்சி ஆரம்பித்ததில் தி.மு.க.வுக்கு கோபம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார்.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் தங்களது கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார்

    நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தங்களது கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் நேற்று தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவுகள் சரிவர அமையாத சூழலில் மேலும் ஒரு பெரிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறினார்.

    மேலும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னையில் இன்று மன்சூர் அலிகான் செய்தியர்களை சந்தித்தார். அப்போது சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக அவர் பதில் அளித்தார்.

    அதில், "நாட்டாமை கிளியை வளர்த்து பாழுங்கிணத்துல தள்ளிட்டியே. அதற்காக நான் ஏன் என் மனைவியைக் கேட்டு முடிவெடுக்கவில்லை என்று கேட்காதீர்கள் என கூறி சிரிக்க ஆரம்பித்தார்.

    நீங்களும் கட்சியை அது போன்று வேறுவொரு கட்சியில் இணைத்து விடுவீர்களா? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அதற்கு நான் கட்சியே ஆரம்பிக்காமல் இருந்து விடுவேனே என்று மன்சூர் அலி கான் பதில் அளித்தார்.

    அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருவதைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, "'போயும் போயும் எனக்கெல்லாம் சீட் கொடுக்க வேண்டுமா?' என ஒரு அரசியல் கட்சி ஏளனமாகக் கேட்டிருக்கிறது. அது பாஜக என்று நினைக்கிறேன். அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் கால்தூசிக்குக் கூட வரமாட்டார்கள். உழைப்பால் முன்னேறியவர் அவர். திமுக-அதிமுகவுடன் எனக்கு இருப்பதெல்லாம் பங்காளி சண்டை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

    இந்த மண்ணுக்கு சம்பந்தமில்லாத ஒரு இயக்கத்தை வேரூன்ற விடமாட்டோம். சிஏஏ என குடியுரிமைச் சட்டத்தை கொண்டு வருகிறீர்களே, உங்கள் குடியுரிமை முதலில் என்ன?" என மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காத்திருந்தால் காலங்கள் ஓடி விடும்.
    • பேச்சுவார்த்தை நடப்பது போல் நடக்கட்டும்.

    சென்னை:

    நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தங்களது கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் நேற்று தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவுகள் சரிவர அமையாத சூழலில் மேலும் ஒரு பெரிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறினார்.

    மேலும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னையில் இன்று மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணியில் ஒரு சீட் நாங்கள் போட்டியிட கேட்டுள்ளோம். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

    மேலும் ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி பற்றி பேசி வருகிறோம். காத்திருந்தால் காலங்கள் ஓடி விடும். பேச்சுவார்த்தை நடப்பது போல் நடக்கட்டும். நான் தேர்தல் பணிகளை இன்று முதல் தனியாக தொடங்க இருக்கிறேன். இன்று தேர்தல் பணிக்காக வேலூர் செல்கிறேன்.

    நான் சாதாரண கிள்ளுக் கீரை கிடையாது. சினிமாவிலும் அரசியலிலும் 40 ஆண்டு காலமாக இருக்கிறேன் என்று கூறினார்.

    • அ.தி.மு.க.வின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்து எடுத்துள்ளது.
    • பெரும்பான்மை அடிப்படையில் அ.தி.மு.க. கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான புகழேந்தி மனு தாக்கல் செய்திருந்தார்.

    நீதிபதி சச்சின் தத்தா அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

    தேர்தல் ஆணையத்திலும் பல்வேறு புகார்கள் வழங்கப்பட்டுள்ளன என்று புகழேந்தி தரப்பில் வாதிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி தற்போது என்ன நிவாரணம் வேண்டும் என தெரிவியுங்கள் என்றார்.



    தற்போது பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ளதால், பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு அ.தி.மு.க. கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது எனவும், தேர்தலுக்கான வேட்பாளர் மனுவில் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி கையெழுத்திட அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தனித்தனி புகார்களை தேர்தல் ஆணையத்தில் வழங்கி உள்ளோம். ஆனால் அதன் மீது தேர்தல் ஆணையம் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே அந்த மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். தற்போது பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், சின்னம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று புகழேந்தி தரப்பில் கோரப்பட்டது.

    இதையடுத்து தற்போது அ.தி.மு.க கட்சி இரண்டு அணிகளாக உள்ளதா?

    அதனால் தான் இரு தரப்பும் அ.தி.மு.க.வை உரிமை கோருகிறீர்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இதை தொடர்ந்து அ.தி.மு.க தரப்பு வழக்கறிஞரான பாலாஜி சீனிவாசன் வாதிடும் போது கூறியதாவது:-

    அ.தி.மு.க என்பது ஒரே அணிதான், எந்த அணிகளும் அ.தி.மு.க.வுக்கு இல்லை.

    இதை பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. குறிப்பாக என்.சி.பி. கட்சி வழக்கை எடுத்துக்காட்டாக எடுத்து கொள்ளலாம், ஏனெனில் யாருக்கு 'மெஜாரிட்டி' உள்ளதோ அவர்களுக்கே கட்சியும், சின்னமும். அதன் அடிப்படையில்தான் இந்த விவகாரத்தை பார்க்க வேண்டும்.

    அந்த வகையில் அ.தி.மு.க. கட்சிக்கோ, சின்னத்துக்கோ எந்த பிரச்சனையும் இல்லை.

    இந்த நபருக்கு ஏதேனும் கோரிக்கை உள்ளதென்றால் அதனை தேர்தல் ஆணையத்திடம் முறையிடலாம். அதில் நியாயம் இருக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.

    மேலும் புகழேந்தி ஒரு அடிப்படை உறுப்பினர் கிடையாது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். எனவே அவருக்கு எந்த உரிமையும் இல்லை.

    அ.தி.மு.க.வின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்து எடுத்துள்ளது. அதேபோல அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி பக்கம் உள்ளனர்.

    எனவே பெரும்பான்மை அடிப்படையில் அ.தி.மு.க. கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. எனவே இந்த விவகாரத்தில் புகழேந்தி வருவதற்கு எந்த உரிமையும் இல்லை.

    இவ்வாறு அவர் வாதிட்டார்.

    இதனை கேட்ட நீதிபதி இந்த மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.

    • தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமை தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
    • பா.ம.க. இடம் பெற்றிருந்தால் அந்த கட்சிக்கான வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்திருக்கும்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி என மும்முனைப்போட்டி உருவாகியுள்ளது.

    தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமை தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிறிய கட்சிகள் ஆதரவு அளித்திருந்தாலும், குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உள்ள கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறவில்லை.

    இந்த நிலையில் பா.ம.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் உட்பட 23 பேர் கட்சித்தலைமையிடம் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

    விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் சமீபத்தில் தொகுதிவாரியாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது. புதுவையில் 23 பேரும் நேர்காணலில் பங்கேற்றனர். ஆனால் இதில் அ.தி.மு.க. அவைத்தலைவர் அன்பானந்தம், அன்பழகன் உடையார், இளைஞர் பாசறை தலைவர் தமிழ்வேந்தன் ஆகியோரிடம் மட்டும் நேர்காணல் நடத்தப்பட்டது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியின்றி தனித்து விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற கட்சிகளுக்கு புதுவையில் வாக்கு சதவீதம் கிடையாது.

    பா.ம.க. இடம் பெற்றிருந்தால் அந்த கட்சிக்கான வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்திருக்கும். ஆனால் அதுவும் தற்போது கானல்நீராகிவிட்டது. பாராளுமன்ற தேர்தலில் பெரும் ஓட்டுகள், வரும் காலத்தில் கூட்டணி அமைந்தால் அ.தி.மு.க.வுக்கு கூடுதல் சீட் பெற உதவும்.

    இதனால் கணிசமான சதவீத வாக்குகளை பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் புதுவை அ.தி.மு.க.வினர் உள்ளனர். 

    ×