search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK"

    • அ.தி.மு.க.வில் அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம்.
    • எங்களை உடைக்க முயற்சி செய்பவர்களுக்கு மூக்கு உடைந்து போகும்.

    சட்டசபையில் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க.வில் அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம்.

    * 8 வருடமாக கட்சியை உடைக்க திட்டமிடுகின்றனர்.

    * அ.தி.மு.க.வை யாராலும் உடைக்க முடியாது.

    * அனைத்து திட்டங்களையும் தவிடு பொடியாக்கி கொண்டு தான் இருக்கிறோம்.

    * எங்களை உடைக்க முயற்சி செய்பவர்களுக்கு மூக்கு உடைந்து போகும்.

    * மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனதில் இருந்து திட்டத்தை போட்டுக்கொண்டு இருக்கிறார். அதனை முறியடித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 4.5 லட்சம் கோடி கடன் வாங்கியும் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
    • இவர்கள் தொடுத்தால் சரியான வழக்கு, மற்றவர்கள் தொடுத்தால் பொய்யா?

    சட்டசபையில் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 4.5 லட்சம் கோடி கடன் வாங்கியும் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

    * தங்கள் ஆட்சியின் மீதுள்ள குறைகளை மறைக்க அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் என பேசுகிறார் முதலமைச்சர்.

    * டாஸ்மாக்கில் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    * டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் உங்கள் மீது தவறில்லை என்றால் அமலாக்கத்துறை வழக்கை எதிர்க்கொள்ளுங்கள்.

    * இவர்கள் தொடுத்தால் சரியான வழக்கு, மற்றவர்கள் தொடுத்தால் பொய்யா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர் பேச அதிக நேரம் வாய்ப்பு தரப்பட்டது.
    • தங்கள் ஆட்சியின் மீதுள்ள குறைகளை மறைக்க அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் என பேசுகிறார் முதலமைச்சர்.

    சட்டசபையில் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டி இருந்ததால் சட்டசபையில் அதிக நேரம் எடுத்துக்கொண்டோம்.

    * தமிழகத்தில் அதிக பிரச்சனைகள் உள்ளதால் அதிக நேரம் பேச வேண்டி இருந்தது.

    * அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர் பேச அதிக நேரம் வாய்ப்பு தரப்பட்டது.

    * நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நான் பேசியது ஒளிபரப்பப்படவில்லை.

    * சட்டப்பேரவை தலைவர் இரண்டு தரப்பிற்கும் சமமாக நடப்பதுதான் அவருக்கு அழகு.

    * மீண்டும் சட்டசபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சபாநாயகரே பதில் அளிக்கிறார்.

    * 2.52 மணி நேரம் எதிர்க்கட்சியினர் பேசியதாக கூறுகிறார்கள். வீடியோவை பார்த்தபோது பாதி கூட பேசவில்லை என்பது தெரிகிறது.

    * கே.பி.முனுசாமி பேசியபோது அமைச்சருக்கு பதில் சபாநாயகர் குறுக்கிட்டு பதில் கூறுகிறார். இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.

    * ஆளுங்கட்சி இருக்கையில் அமர்ந்து அப்பாவு கருத்து கூறலாம். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தால் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு ஒரே நாளில் 2 அல்லது 3 மானியக்கோரிக்கை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் வைத்தீர்கள்.
    • எதிர்க்கட்சியினரை ஏன் இவ்வளவு நேரம் பேச அனுமதித்தீர்கள் என முதல்வர் இதுவரை என்னிடம் கேட்டதில்லை.

    சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

    பேரவையில் நடந்த குரல் வாக்கெடுப்பிலும் டிவிஷன் முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் அ.தி.மு.க. கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

    நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 63 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அ.தி.மு.க. கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக 154 பேர் வாக்களித்த நிலையில் தீர்மானம் தோல்வி அடைந்தது.

    நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அப்பாவு அமர்ந்தார்.

    சபாநாயகர் இருக்கையில் மீண்டும் அப்பாவு அமர்ந்தபோது சட்டசபை உறுப்பினர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதையடுத்து சபாநாயகர் அப்பாவு உரையாற்றினார். உரையில் அவர் கூறியதாவது:

    * எதிர்க்கட்சி தலைவர் உட்பட தோழமை கட்சி தலைவர்கள் பேசிய அனைத்தையும் நான் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.

    * ஒரு சில தவறு நடந்திருந்தால் நானே திருத்தி இருப்பேன். அல்லது முதல்வரால் திருத்தப்பட்டிருப்பேன்.

    * அரசு ஒரே நாளில் 2 அல்லது 3 மானியக்கோரிக்கை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் வைத்தீர்கள்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் 30-க்கும் மேற்பட்ட துறைகளின் மானிய கோரிக்கைகளை ஒரே நாளில் நடத்தியதும் நினைவு கூர்கிறேன்.

    * எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதிக்கவில்லை என கூறினார். அவர் 259 நிமிடம் பேசி உள்ளார்.

    * எதிர்க்கட்சியினரை ஏன் இவ்வளவு நேரம் பேச அனுமதித்தீர்கள் என முதல்வர் இதுவரை என்னிடம் கேட்டதில்லை.

    * ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசுவதற்கு ஆளுங்கட்சியினருக்கு 25, எதிர்க்கட்சியினருக்கு 49 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலில் நடந்த குரல் வாக்கெடுப்பில் அ.தி.மு.க. கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.
    • அ.தி.மு.க. கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக 154 பேர் வாக்களித்த நிலையில் தீர்மானம் தோல்வி அடைந்தது.

    சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அவையை துணை சபாநாயகர் நடத்தினார்.

    சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார். எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

    சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர். மக்கள் பிரச்சனைகளை அவையில் பேச அனுமதி அளிக்காமல் சபாநாயகர் அப்பாவு பாரபட்சம் காட்டுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார்.

    சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

    முதலில் நடந்த குரல் வாக்கெடுப்பில் அ.தி.மு.க. கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

    குரல் வாக்கெடுப்பை தொடர்ந்து டிவிசன் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

    டிவிஷன் முறையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெற்றபோது பேரவையின் நுழைவுவாயில் கதவுகள் மூடப்பட்டன.

    பேரவையில் நடந்த குரல் வாக்கெடுப்பிலும் டிவிஷன் முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் அ.தி.மு.க. கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

    நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 63 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அ.தி.மு.க. கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக 154 பேர் வாக்களித்த நிலையில் தீர்மானம் தோல்வி அடைந்தது.

    நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அப்பாவு அமர்ந்தார்.

    சபாநாயகர் இருக்கையில் மீண்டும் அப்பாவு அமர்ந்தபோது சட்டசபை உறுப்பினர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • நாங்கள் வெளிநடப்பு செய்தால் போங்க... போங்க... என எங்களை பார்த்து சபாநாயகர் நகைக்கிறார்.
    • வரலாற்று சிறப்புமிக்க பேரவை தலைவரை பெற்றுள்ளோம் - செல்வப்பெருந்தகை

    சட்டசபை சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் வாக்கெடுப்பு தொடங்கியது.

    சபாநாயகர் அப்பாவு இருக்கையை விட்டு இறங்கினார். அவையை துணை சபாநாயகர் நடத்தினார்.

    சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார். எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார்.

    நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையில், சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர். மக்கள் பிரச்சனைகளை அவையில் பேச அனுமதி அளிக்காமல் சபாநாயகர் அப்பாவு பாரபட்சம் காட்டுகிறார். கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் பேசும்போது நேரலை செய்வதில்லை. எதிர்க்கட்சி தலைவராக நான் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை என்று ஆவேசமாக கூறினார்.

    எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பதிலடி அளித்தனர்.

    கடந்த கால பிரச்சனைகள் எல்லாம் ஏன் பேசுகிறார்கள். அதற்கும் அப்பாவுவிற்கும் என்ன சம்பந்தம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இங்கே விவாதமா நடக்கிறது? - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

    மக்கள் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும்பொழுது அதனை பேச அவை தலைவர் அனுமதிக்கவில்லை- எடப்பாடி பழனிசாமி

    நாங்கள் வெளிநடப்பு செய்தால் போங்க... போங்க... என எங்களை பார்த்து சபாநாயகர் நகைக்கிறார். சட்டசபை தலைவர் ஒரு தலைபட்சமாக நடந்துகொள்ளுவது எப்படி நியாயமாக இருக்கும்- எடப்பாடி பழனிசாமி

    சபாநாயகர் அப்பாவுவை காங்கிரஸ் பேரியக்கம் ஆதரிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

    சபாநாயகர் அப்பாவு இரண்டு பக்கத்தின் கருத்துக்களையும் கேட்கிறார்- செல்வப்பெருந்தகை

    நான் பேச மறந்ததை சபாநாயகர் பேச ஆரம்பித்து விடுகிறார். வரலாற்று சிறப்புமிக்க பேரவை தலைவரை பெற்றுள்ளோம் -செல்வப்பெருந்தகை

    சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும் இன்று சட்டசபைக்கு வரவில்லை.

    • சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர்.
    • எதிர்க்கட்சி தலைவராக நான் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை.

    சட்டசபை சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் வாக்கெடுப்பு தொடங்கியது.

    சபாநாயகர் அப்பாவு இருக்கையை விட்டு இறங்கினார். துணை சபாநாயகர் அவையை நடத்தினார்.

    சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார். எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார்.

    நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

    இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர்.

    * மக்கள் பிரச்சனைகளை அவையில் பேச அனுமதி அளிக்காமல் சபாநாயகர் அப்பாவு பாரபட்சம் காட்டுகிறார்.

    * அதிக நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெற வேண்டும் என வலியுறுத்துவோம். ஆனால் குறைந்த நாட்கள் தான் நடந்துள்ளது.

    * கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் பேசும்போது நேரலை செய்வதில்லை.

    * எதிர்க்கட்சி தலைவராக நான் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை.

    * அ.தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் பேசும்போது பல குறுக்கீடுகள் செய்வதால் முழுமையாக பேச முடியவில்லை. இது ஜனநாயகமா?

    * 2 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவித்தார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேள்வி நேரத்தில் தொகுதிக்கான கேள்வியை கேட்ட பின்னர் இருக்கையில் இருந்து செங்கோட்டையன் எழுந்து சென்றார்.
    • சட்டசபைக்கு செங்கோட்டையனும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் ஒன்றாகவே வந்துள்ளனர்.

    சட்டசபையில் கடந்த 4 ஆண்டுகளாக ராதாபுரம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு சபாநாயகராக பதவி வகித்து வருகிறார்.

    சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார்.

    தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, அதாவது இன்று அந்த தீர்மானத்தின் மீது விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

    இந்நிலையில் சட்டசபை கூடியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, குணசீலன் மற்றும் மருத்துவர் செரியன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்றது.

    கேள்வி - பதில் நிகழ்வில் செங்கோட்டையன் கலந்துகொண்டார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை.

    கேள்வி நேரத்தில் தொகுதிக்கான கேள்வியை கேட்ட பின்னர் இருக்கையில் இருந்து செங்கோட்டையன் எழுந்து சென்றார்.

    அவையில் இருந்து செங்கோட்டையன் எழுந்து சென்றதையடுத்து, அ.தி.மு.க. கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது அவைக்கு செங்கோட்டையன் மீண்டும் வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்த 16 அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களில் செங்கோட்டையனும் ஒருவர்.

    செங்கோட்டையனை சமாதானப்படுத்தும் முயற்சியில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

    முன்னதாக செங்கோட்டையன் வீட்டிற்கே சென்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சட்டசபைக்கு செங்கோட்டையனும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் ஒன்றாகவே வந்துள்ளனர்.

    • தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அந்த தீர்மானத்தின் மீது விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • சபாநாயகர் மீது கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எம்.எல்.ஏ.க்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளாக சபாநாயகராக பதவி வகித்து வருகிறார்.

    சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார்.

    தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, அதாவது இன்று அந்த தீர்மானத்தின் மீது விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    சபாநாயகர் மீது கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எம்.எல்.ஏ.க்களுடன் அவர் ஆலோசனை செய்து வருகிறார்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இன்றைய ஆலோசனையிலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரமான ‘ஜீரோ அவர்' எடுக்கப்படும்.
    • சட்டசபையில் தற்போது தி.மு.க.வின் பலம் 133 ஆகவும், அ.தி.மு.க.வின் பலம் 66 ஆகவும் உள்ளது.

    சென்னை:

    ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளாக சபாநாயகராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார்.

    தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, அதாவது இன்று (திங்கட்கிழமை) அந்த தீர்மானத்தின் மீது விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்று காலை சட்டமன்ற கூட்டத்தின் தொடக்கத்தில் திருக்குறளை படித்து அவையை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைப்பார். பின்னர், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், டாக்டர் செரியன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். அதன் பிறகு கேள்வி நேரம் நடைபெறும்.

    கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரமான 'ஜீரோ அவர்' எடுக்கப்படும். அப்போது உதயகுமார் தனது தீர்மானத்தை உடனே வாக்கெடுப்புக்கு விடும்படி கோருவார். அல்லது வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஒரு நேரத்தை குறிக்கும்படி அவர் கோரலாம். தீர்மானத்தை உடனே எடுக்கும்பட்சத்தில், சபாநாயகர் அப்பாவு, தனது இருக்கையில் இருந்து எழுந்து வெளியே சென்று விடுவார்.

    பின்னர் துணை சபாநாயகர் அல்லது அவையை நடத்துவோர் பெயர் பட்டியலில் உள்ளவர், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து வாக்கெடுப்பை நடத்துவார்.

    பின்னர் அந்த தீர்மானத்தின் மீது உதயகுமார் பேசுவார். அவரது விவாதத்திற்கு முதலமைச்சரோ அல்லது அவை முன்னவரோ பதில் அளித்து பேசுவார்கள். அதன் பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு தீர்மானம் விடப்பட்டால், 'ஏற்போர் ஆம் என்க, மறுப்போர் இல்லை என்க' என்று கூறும்படி துணை சபாநாயகர் கேட்டுக்கொள்வார்.

    தீர்மானத்தை ஏற்று ஆம் என்று ஒலிக்கும் மொத்த குரலையும், இல்லை என்று ஒலிக்கும் குரலையும் கணக்கிட்டு துணை சபாநாயகர் தீர்ப்பளிப்பார்.

    சட்டசபையில் தற்போது தி.மு.க.வின் பலம் 133 ஆகவும், அ.தி.மு.க.வின் பலம் 66 ஆகவும் உள்ளது. தீர்மானம் தோற்றுவிட்டால், சபாநாயகர் அப்பாவு மீண்டும் சபாநாயகர் இருக்கையில் வந்தமர்ந்து, அடுத்த அலுவல்களை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிப்பார்.

    ஒருவேளை எண்ணிக் கணிக்கும் 'டிவிஷன்' முறைப்படி வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டால், நேரம் குறிக்கப்பட்டு அவையின் நுழைவு வாயில்கள் அடைக்கப்படும். அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்தால், அவர் அமைச்சர் என்றாலோ அல்லது எம்.எல்.ஏ. என்றாலும் யாரும் அவைக்குள் வர முடியாது.

    அந்த வாக்கெடுப்பை சட்டசபை செயலாளர் நடத்துவார். தமிழக சட்டசபையில் 6 டிவிஷன்கள் உள்ளன. ஒவ்வொரு டிவிஷனிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களை எழுந்து நிற்கச் செய்து அவர்களின் வாக்குகளை சட்டசபை செயலாளர் பெற்று, அதை எண்ணிக் கணித்து, அதை துணை சபாநாயகரிடம், சட்டசபை செயலாளர் அளிப்பார். அதன் அடிப்படையில் தீர்மானத்தின் முடிவை துணை சபாநாயகர் அறிவிப்பார்.

    2017-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது அப்போதிருந்த சபாநாயகர் தனபாலுக்கு எதிராக இந்த தீர்மானத்தை அப்போதிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். அ.தி.மு.க.வின் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 11 எம்.எல்.ஏ.க்கள் தனித்து செயல்பட்டதால், அரசியல் நோக்கத்தில் தி.மு.க. அதை சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டது. எந்த இடத்திலும் அரசியலில் எதிர்வினைகள் உண்டு என்பதற்கு, சட்டசபையில் இன்று கொண்டுவரப்படும் சபாநாயகருக்கு எதிரான தீர்மானமும், ஒரு சாட்சியாக அமையும்.

    • கூட்ட நெரிசலைத் தவிர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததே இன்றைய உயிரிழப்புக்கு காரணம்.
    • உயிரிழந்த ஓம்குமாரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்காக , 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்று காத்திருந்த காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் (50) என்ற பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

    இந்நிலையில், "பக்தர் ஓம்குமாரின் உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசும், அறநிலையத்துறை அமைச்சருமே முழு பொறுப்பு" என இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்ய 100 ரூபாய் கட்டண வரிசையில் காத்திருந்த காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்பவர் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    கடந்த ஜனவரி மாதம் திருச்செந்தூர் கோயிலுக்கு திமுக அரசின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

    சென்றிருந்த போதே, கோயிலில் கட்டண வரிசை உட்பட அனைத்து தரிசன வழிகளிலும் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படுவதை மக்கள் முறையிட்ட போது, "திருப்பதிக்கு போறான், 24 மணி நேரம் நிப்பான்" என்று பக்தர்களின் உணர்வுகளையும் முறையிடலையும் உதாசீனப்படுத்தி பேசியதோடு அல்லாமல், கூட்ட நெரிசலைத் தவிர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததே இன்றைய உயிரிழப்புக்கு காரணம்.

    எனவே, பக்தர் ஓம்குமாரின் உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசும், அறநிலையத்துறை அமைச்சருமே முழு பொறுப்பு!

    திருப்பணி என்பது பக்தியுடன் செய்யப்பட வேண்டியது. ஆனால், பகல்வேஷம் போடும் இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில் அதுவும் வெறும் விளம்பர நோக்கத்தில் மட்டும் தான் செய்யப்பட்டு வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்யவேண்டும் என்ற எண்ணம். இந்த அரசுக்கு துளியும் இல்லை. இது கடும் கண்டனத்திற்குரியது.

    உயிரிழந்த ஓம்குமாரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், இனியேனும் இந்த விளம்பர நாடகங்களை எல்லாம் விட்டுவிட்டு, அறநிலையத்துறையை அதற்குரிய அறத்துடன் வழிநடத்த வேண்டுமென மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாடு அரசின் வருவாய் இழப்பு 1000 கோடி என்ற செய்தி வந்துகொண்டு இருக்கின்றது.
    • ஈகோ பிடித்த தலைவர்கள் ஈகோவை விட்டுகொடுத்து கட்சி நலனுக்காக செயல்பட வேண்டும்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    டாஸ்மாக்கில் இருந்து வரி கட்டிய மதுபானங்கள், பெறுவது தான் அரசின் நடவடிக்கையாக இருந்தது, வரிகட்டாத டாஸ்மாக் மதுபானங்கள் இன்றைக்கு சில்லறை விற்பனை கடைகளில் வருவது மூலமாக கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் என்ற அளவிற்கு முறைகேடு நடைப்பெறுவதாக செய்திகள் வருகிறது.

    அரசுக்கு வரவேண்டிய நியாயமான வரிகள், மறுக்கப்பட்டு,வேறு இடங்களுக்கு அந்த வரிகள் செல்வதனால், தமிழ்நாடு அரசின் வருவாய் இழப்பு 1000 கோடி என்ற செய்தி வந்துகொண்டு இருக்கின்றது. அதனை தடுக்கும் பொறுப்பு தி.மு.க அரசுக்கு இருக்கின்றது.

    அ.தி.மு.க.எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, வருங்காலத்தில் சிறப்பாக செயல்பட சட்டவிதிகளை வரையறுத்தார்கள், அதை தான் ஜெயலலிதாவும் கடைபிடித்தார்கள். அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க அ.தி.மு.க. இன்றைக்கு பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றது.

    பிரிந்த அ.தி.மு.க. ஒன்றிணைந்து, எந்த நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர் உருவாக்கினார்களோ, அதற்காக பாடுபட வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சி 2026-ல் வர வேண்டும் என்றால், அ.தி.மு.க.வில் பிரிந்த சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்.

    அதுதான் அ.தி.மு.க. தொண்டர்களின் கருத்து. அவரவர் மனதில் உள்ள ஈகோவை உதறிதள்ளிவிட்டு, தலைவர் காட்டிய வழியில் செல்ல வேண்டும். ஈகோ பிடித்த தலைவர்கள் ஈகோவை விட்டுகொடுத்து கட்சி நலனுக்காக செயல்பட வேண்டும்.

    அனைவரும் ஒன்றிணைந்து 2026-ல் அ.தி.மு.க ஆட்சி மலரசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×