என் மலர்

    நீங்கள் தேடியது "ADMK"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேருந்து நிலையம் அமைந்தால் பொதுமக்களுக்கு மனச்சுமையும், பொருளாதார சுமையும், கால விரயமும் ஏற்படும்.
    • முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    எனது தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியின்போது, கடலூர் மாநகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 18.26 ஏக்கர் நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், விதிவசத்தால் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த தி.மு.க. அரசு, புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை, சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எம். புதூருக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைந்தால் பொதுமக்களுக்கு மனச்சுமையும், பொருளாதார சுமையும், கால விரயமும் ஏற்படும்.

    புதிய பஸ் நிலையத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி, கழக ஆட்சியின்போது தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வலியுறுத்தியும்; கடலூர் மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாக சீர்செய்திட வலியுறுத்தியும், அ.தி.மு.க. கடலூர் வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கடலூர் மாநகராட்சி தலைமை தபால் நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சின்ன பையன் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதலமைச்சர்களை இழிவாக பேசினார்.
    • இனிமேல் எந்த நிலையிலும் பா.ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. ஒரு போதும் கூட்டணிக்கு போகாது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை ஒன்றியம் குருவரெட்டியூர் பகுதியில் அண்ணாவின் 115 -வது பிறந்த நாள் விழாவையொட்டி அம்மாபேட்டை ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. கூட்டத்தில் பேசினார்.

    2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக வேண்டும் பா.ஜனதா வற்புறுத்தியதால் தான் அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி முறிவு ஏற்பட்டது. இந்த முடிவிற்கு தமிழக முழுவதும் அ.தி.மு.க. மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    கொரோனா காலகட்டத்திலேயே பல லட்ச ரூபாய் நிதி உதவி மத்திய அரசிடம் இருந்து கிடைத்திருந்தாலும் கூட அதற்காக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பலமுறை பொறுத்து போனார்.

    ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் தற்போது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையின் வயது கூட இல்லாத சின்ன பையன் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் அண்ணா ஆகியோர் பற்றி இழிவாக பேசினார்.

    இனிமேல் எந்த நிலையிலும் பா.ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. ஒரு போதும் கூட்டணிக்கு போகாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டணி முறிவு குறித்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சியினர் கருத்து கூறாத நிலையில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தற்போது கூறிய கருத்து இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விவசாய விளைநிலங்களை ‘சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்’ என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான செயலில் தி.மு.க. அரசு இறங்கி உள்ளது.
    • அனக்காவூர் கிழக்கு ஒன்றியம், மேல்மா கூட்டு ரோடு என்ற இடத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    எதிர்க்கட்சியாக இருக்கின்றபோது அரசியல் காரணங்களுக்காகவும், வாக்குகளைக் கவர வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், அம்மா அரசு செயல்படுத்திய பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையே தனது குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.

    தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கின்றபோது என்னென்ன காரணங்களுக்காக ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தியதோ, அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, தற்போது இந்த அரசு மக்கள் விரோத அரசாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    அந்த வகையில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளைநிலங்களை 'சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்' என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான செயலில் தி.மு.க. அரசு இறங்கி உள்ளது. இச்செயல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் செயலில் ஈடுபட்டுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும்; விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முடிவை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க. திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், 4.10.2023 (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில், அனக்காவூர் கிழக்கு ஒன்றியம், மேல்மா கூட்டு ரோடு என்ற இடத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலும்; திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தூசி மோகன், கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளருமான பாபு முருகவேல் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்.

    விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கும்; விவசாய விரோத தி.மு.க. அரசைக் கண்டித்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாரதிய ஜனதா இல்லாத புதிய கூட்டணியை பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அமைக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
    • கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக கடந்த 25-ந்தேதி அ.தி.மு.க. அறிவிப்பு வெளியிட்டது.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மற்றும் மாநில தலைவர்கள் வெளிப்படையாக எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காமலேயே உள்ளனர்.

    அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி விவகாரம் தொடர்பாக டெல்லி தலைவர்கள் கருத்து தெரிவிப்பார்கள் என்று மட்டும் தெரிவித்தார். அவரும் வேறு எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

    அ.தி.மு.க. கூட்டணியை முறித்துக் கொண்டிருப்பதை பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் விரும்பவில்லை. கூட்டணி இல்லாமல் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது சாத்தியம் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

    இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி மேலிட தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தியுள்ளனர். இது தொடர்பாக அக்கட்சியின் மேலிட தலைவர் ஒருவர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவரை போனில் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியிடம் பேசுங்கள். மனக்கசப்புகளை மறந்து மீண்டும் கூட்டணி அமைத்து செயல்படலாம் என்று அவர் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.

    தேவைப்பட்டால் நானே சென்னைக்கு வருகிறேன். நேரில் அமர்ந்து பேசி பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    டெல்லி மேலிட தலைவரின் இந்த பேச்சை கவனமுடன் கேட்டுக்கொண்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அதனை அப்படியே எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து... அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்துள்ளார்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமியோ பாரதிய ஜனதாவுடன் இனி கூட்டணி வைக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனவே அதுபற்றி எல்லாம் பேச வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறியிருப்பதாக அ.தி.மு.க. முன்னணி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    எடப்பாடி பழனிசாமி இப்படி தெரிவித்ததை தொடர்ந்தே முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூட்டணி முறிவு தொடர்பாக நேற்று விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் அ.தி.மு.க.வுக்கு எந்த பயனும் இல்லை. பாரதிய ஜனதா கட்சியினர் எங்கள் முதுகில் சவாரி செய்து பயணிப்பதால் சிறுபான்மையினரின் ஓட்டுகளை நாங்கள் இழந்ததுதான் மிச்சம். இதுவே தேர்தல் தோல்விக்கு காரணம் என்பதை உணர்ந்துதான் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்து உள்ளோம் என்றார்.

    பாரதிய ஜனதா இல்லாத புதிய கூட்டணியை பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அமைக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

    இந்த கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர மேலும் சில கட்சிகளை சேர்ப்பதற்கு அ.தி.மு.க. காய் நகர்த்தி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராயபுரம் மனோவை அமைப்பு செயலாளராக நியமனம் செய்துள்ளார்.
    • ராயபுரம் மனோவுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    ராயபுரம்:

    அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் புதிதாக மாவட்ட செயலாளர்களையும் அமைப்பு செயலாளர்களையும் நியமனம் செய்துள்ளார்.

    அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக இருந்த ராயபுரம் ஆர்.மனோ அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இவரை அமைப்பு செயலாளராக நியமனம் செய்துள்ளார்.

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ராயபுரம் மனோவுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்கள் பிரச்சனையை வைத்தே பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறி இருந்தார்.
    • முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு, பா.ஜ.க. முன்னாள் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார்.

    சென்னை:

    2024 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். அண்ணா குறுகிய காலத்தில் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்தவர். நாங்கள் ஒரு போதும் ஒரு கட்சியின் மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று கூற மாட்டோம்.

    அண்ணாமலையை மாற்ற கோருவது எங்கள் நோக்கமல்ல. இனி ஒரு போதும் பா.ஜ.க. உடன் கூட்டணி என்பதே கிடையாது.

    2026ம் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிப்போம். நாங்கள் மக்கள் பிரச்சனையை வைத்தே பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறி இருந்தார்.

    இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு, பா.ஜ.க. முன்னாள் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார். அவரது பதிவில், "புனிதமான திருவள்ளுவர் மண்ணில் தாமரை பெரும் வெற்றி பெறும்" என்று கூறி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சில ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் எங்கள் நிலைப்பாடு குறுத்து தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
    • தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்தியா கூட்டணிக்கு இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் இன்று காலை அ.தி.மு.க. துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக பா.ஜக.வை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர்கள்.

    அ.தி.மு.க. தலைவர்கள் அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் குறித்து தமிழக பா.ஜ.க. தலைமை உண்மைக்கு புறம்பாக பேசி, அவதூறாக விமர்சனம் செய்து வருவது, 2 கோடி அ.தி.மு.க. தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த முடிவை கழக செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அது தொண்டர்களின் உணர்வு அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

    சில ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் எங்கள் நிலைப்பாடு குறுத்து தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். ஊடகங்களில் அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கும் என விமர்சனம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் இந்த முடிவு நாடகம் என்று சொல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் உண்மை தெரியவரும். அது போன்ற விமர்சனங்களை தவிர்க்கவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பு.

    சிலர் தேர்தல் வரும்போது உண்மைத் தெரியும் என்று எங்கள் முடிவு குறித்து விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் தேர்தல் பயத்தின் காரணமாக இவ்வாறு பேசுகிறார்கள். அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. 30 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டுள்ளது. இன்று தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக விளங்கி வருகிறது.

    அண்ணா குறித்து விமர்சனம் வைக்கப்படும்போது அவரின் பெயரை கட்சியின் பெயராக வைத்து இருக்கும் இயக்கத்தால் எப்படி அதனை சகித்துக் கொள்ள முடியும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகுகிறது. 2024 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். நாங்கள் ஒரு போதும் ஒரு கட்சியின் மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று கூற மாட்டோம்.

    அண்ணாமலையை மாற்ற கோருவது எங்கள் நோக்கமல்ல. இனி ஒருபோதும் பா.ஜ.க. உடன் கூட்டணி என்பதே கிடையாது. அது 2024 பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி 2026 சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி கூட்டணி கிடையாது அ.தி.மு.க. சார்பில் உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்தியா கூட்டணிக்கு இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை. தமிழக மக்களின் நலன், உரிமைகள் சார்ந்தே 2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை அ.தி.மு.க. பொது செயலாளர் பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் சந்திப்போம்.

    இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா? காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி சேர்ந்து உள்ளனர். மிசாவை கொண்டு வந்தவர் இந்திரா காந்தி அப்போது சிறை சென்று வந்த ஸ்டாலினை மிசா வீரன் மாவீரன் என்றார்கள்.

    காங்கிரசை முன்னாள் முதல்வர் கருணாநிதியும், ஸ்டாலினும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள் அவர்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளார்கள்.

    2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிப்போம். நாங்கள் மக்கள் பிரச்சனையை வைத்தே பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம். அ.தி.மு.க.வின் குரல் மக்களுக்காக ஒலிக்கும் திராவிட மாடலை உருவாக்கிவர் அண்ணா என்பதை ஸ்டாலின் மறந்து விட்டு பேசி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 12 புதுமுகங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
    • பா.ஜ.க.வில் இருந்து, அ.தி.மு.க.வுக்கு வந்தவர்களுக்கு, கட்சியில் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தத் தொடங்கி உள்ளார்.

    குறிப்பாக பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இதைக் கருத்தில் கொண்டு கட்சி உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளார்.

    அதன்படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கட்சி மாவட்ட எல்லைகளை மாற்றியமைத்து உள்ளார். அந்த மாவட்டங்களில் புதிய நிர்வாகிகளை நியமித்து இருக்கிறார். மேலும் அ.தி.மு.க.வில் சில மூத்த முக்கிய நிர்வாகிகளுக்கு பதவிகளையும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இதையடுத்து அ.தி.மு.க.வில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற ரீதியில் நிர்வாகிகளை நியமிக்கும் பணியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி உள்ளார். அந்த வகையில் நேற்று கட்சியில் 7 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இதனால் கட்சி ரீதியிலான மாவட்டங்களின் எண்ணிக்கை 75-ல் இருந்து 82 ஆக உயர்ந்து உள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் மாவட்டச் செயலாளர்களாக இருந்த 6 மாவட்டச் செயலாளர்கள் இடங்கள் காலியாக இருந்த நிலையில், அவற்றோடு மேலும் மாவட்டங்களை உருவாக்கி, அவற்றுக்கும் மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ளார். இதன் மூலம் 12 புதுமுகங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    பா.ஜ.க.வில் இருந்து, அ.தி.மு.க.வுக்கு வந்தவர்களுக்கு, கட்சியில் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்கு வந்த திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன், மருத்துவ அணி இணை செயலர் நிர்மல்குமார், தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலர் முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அ.ம.மு.க.வில் இருந்து வந்த மனோகரன், காங்கிரசில் இருந்து வந்த மனோ, கட்சியில் இருந்து விலகி மீண்டும் இணைந்த அன்வர்ராஜா ஆகியோர், கட்சியின் அமைப்பு செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள புதிய நிர்வாகிகள் விவரம் வருமாறு:-

    ராணிப்பேட்டை, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, தேனி, திருநெல்வேலி என செயல்பட்டு வந்த மாவட்டக் கழக அமைப்புகள் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டு, மாவட்டக் கழகச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

    ராணிப்பேட்டை கிழக்கு:-(அரக்கோணம், சோளிங்கர்)-சு.ரவி, ராணிப்பேட்டை மேற்கு:-(ராணிப்பேட்டை, ஆற்காடு)-எஸ்.எம். சுமார், திருவண்ணாமலை கிழக்கு:-(திருவண்ணாமலை , கீழ்பென்னாத்தூர்)-எஸ்.ராமச்சந்திரன், திருவண்ணாமலை மத்திய மாவட்டம்:-(ஆரணி, போளூர்) மாவட்டச் செயலாளராக எல்.ஜெயசுதாவும் (போளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர்), திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் செய்யார் (68), வந்தவாசி (தனி) (69) மாவட்டச் செயலாளராக தூசி கே.மோகனும் (மாவட்ட செயலாளர்), திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் கலசபாக்கம் (65), செங்கம் (தனி) (62) மாவட்டச் செயலாளராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியும் (கழக விவசாயப் பிரிவுச் செயலாளர், மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர்),

    தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தில் திருவிடைமருதூர் (தனி) (170), கும்பகோணம் (171) மாவட்டச் செயலாளராக ஆர்.கே.பாரதி மோகனும் (திருப்பனந்தாள் தெற்கு ஒன்றியச் செயலாளர்), தஞ்சாவூர் மேற்கு மாவட்டத்தில் பாபநாசம் (172), திருவையாறு (173) மாவட்டச் செயலாளராக எம்.ரெத்தின சாமியும் (பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர்), தஞ்சாவூர் மத்திய மாவட்டத்தல் தஞ்சாவூர் (174), ஒரத்தநாடு (175) மாவட்டச் செயலாளராக எம்.சேகரும் (ஒரத்த நாடு பேரூராட்சி மன்றத் தலைவர்), தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் பட்டுக்கோட்டை (176), பேராவூரணி (177) மாவட்டச் செயலாளராக சி.வி.சேகர் (மாவட்ட புரட்சித்தலைவி, பேரவைச் செயலாளர்),

    தேனி கிழக்கு மாவட் டத்தில் ஆண்டிப்பட்டி(198), பெரியகுளம் (தனி) (199) மாவட்டச் செயலாளராக முருக்கோட்டை எம்.பி.ராமரும் (மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர்), தேனி மேற்கு மாவட்டத்தில் போடிநாயக்கனூர் (200), கம்பம் (201) மாவட்டச் செயலாளராக எஸ்.டி.கே. ஜக்கையனும் (முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர்), திருநெல்வேலி மாநகர் மாவட்டத்தில் திருநெல்வேலி (224), பாளையங்கோட்டை (226) மாவட்டச் செயலாளராக தச்சை என்.கணேசராஜாவும் (மாவட்ட செயலாளர்), திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தில் அம்மாசமுத்திரம் (225), நாங்குநேரி (227), ராதாபுரம் (228) மாவட்டச் செயலாளராக இசக்கி சுப்பையாவும் (அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர்) நியமிக்கப்படுகிறார்கள்.

    கழக அமைப்பு செயலாளர்களாக ஜி.பாஸ்கரன் (முன்னாள் அமைச்சர், சிவகங்கை), அ.அன்வர்ராஜா (முன்னாள் அமைச்சர், ராமநாதபுரம்), ஆர்.மனோகரன் (அரசு தலைமை முன்னாள் கொறடா, திருச்சி), வி.ராமு (மாவட்ட முன்னாள் செயலாளர், வேலூர்), ராயபுரம் மனோ (வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டம்), துரை.செந்தில் (மதுக்கூர் கிழக்கு ஒன்றியம், தஞ்சாவூர்), ஆர்.காந்தி (தஞ்சாவூர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வழக்கறிஞர் பிரிவு செயலாளராக ஐ.எஸ்.இன்பதுரை (திருநெல்வேலி), சிறுபான்மையினர் நலப்பிரிவுச் செயலாளராக எஸ்.அப்துல் ரகீம் (முன்னாள் அமைச்சர், திருவள்ளூர்), கொள்கை பரப்பு இணைச் செயலாளராக விந்தியா (தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்), கொள்கை பரப்பு துணைச்செயலாளராக எஸ்.அய்யாத்துரை பாண்டியன் (சங்கரன் கோவில்), கொள்கை பரப்பு இணைச் செயலாளராக கி.மாணிக்கம் (சோழவந்தான்), அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலாளராக ஏ.டி.சி. தனபால் (அயோத்தியாப்பட்டினம், சேலம்), வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளராக இ.பாலமுருகன் (வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டம்), வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளராக என்.மாரப்பன் (கரூர் மாவட்டம்), மருத்துவ அணி இணைச் செயலாளராக பி.சரவணன் (திருப்பரங்குன்றம்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை கிழக்கு, தஞ்சாவூர் மேற்கு, தஞ்சாவூர் தெற்கு ஆகிய மாவட்டங்களில் நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்காணும் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.

    திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர்-பெருமாள்நகர் கே.ராஜன், தஞ்சாவூர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர்-எம்.ராம்குமார், தஞ்சாவூர் மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர்-டி.அய்யப்பன் (எ) சண்முகபிரபு, திருவையாறு தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.ராஜா (எ) தண்டபாணி, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர்-எஸ்.வி.திருஞான சம்பந்தம்.

    அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்-கே.கே.சிவசாமி, எஸ்.ஜி.சுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

    கன்னியாகுமரி கிழக்கு, திருச்சி, மாநகர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் மாவட்டக் கழகச் செயலாளர்களாகவும், தஞ்சாவூர் கிழக்கு, தஞ்சாவூர் மத்தியம் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகரக் கழகச் செயலாளர்களாகவும் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக என்.தளவாய் சுந்தரமும் (அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்), திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக ஜெ.சீனிவாசனும் (திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர்), பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இளம்பை இரா.தமிழ்ச்செல்வனும், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக (கும்பகோணம் மாநகரம்) ராம. ராமநாதனும், தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளராக எஸ்.சரவணனும் (மருத்துவக் கல்லூரி பகுதி முன்னாள் செயலாளர்) நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவராக சிங்கை ஜி.ராமச்சந்திரனும் (பாலாஜி நகர், வரதராஜபுரம், கோவை), துணைத்தலைவர்களாக என்.ராஜராஜ சோழனும் (தெற்கு அக்ரஹாரம், வலங்கைமான் அஞ்சல், திருவாரூர் மாவட்டம்), டி.கவுரி சங்கர் (நாவினிப்பட்டி அஞ்சல், மேலூர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம்), செயலாளராக வி.வி.ஆர்.ராஜ் சத்யனும் (பழைய விளாச்சேரி சாலை, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம்), இணைச் செயலாளர்களாக எம்.கோவை சத்யனும் (தியாகராய நகர், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்), துணைச் செயலாளர்களாக டி.பிரசாத்தும் (ஆர்.கே.சாலை, மயிலாப்பூர், தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம், இந்திராணி சுடலைமுத்துவும் (விக்னராஜபுரம், வேங்கைவாசல், சென்னை புறநகர் மாவட்டம்), பொருளாளராக எஸ்.டி. தர்மேஷ்குமாரும் (ஆற்காடு குப்பம் கிராமம், திருத்தணி, திருவள்ளூர் மேற்கு மாவட்டம்) நியிக்கப்படுகிறார்கள்.

    கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் புதுச்சேரி கிழக்கு, புதுச்சேரி மேற்கு ஆகிய மாநிலக் கழகங்கள், கழக நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு இன்று முதல் 'புதுச்சேரி மாநிலம்' என ஒருங்கிணைக்கப்பட்டு மாநில அவைத் தலைவராக ஜி.அன்பானந்தமும், மாநில செயலாளராக ஏ.அன்பழகன் (முன்னாள் எம்.எல்.ஏ.) மாநில இணைச் செயலாளர்களாக டாக்டர் மு.ராமதாசும், எம்.மகாதேவியும், மாநில துணைச் செயலாளர்களாக உமா (எ) கோவிந்தம்மாளும், வையாபுரி மணிகண்டமும் (முன்னாள் எம்.எல்.ஏ.), டி.குணசேகரனும், மாநிலப் பொருளாளராக பி.ரவி பாண்டுரங்கனும் நியமிக்கப்படுகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளராக விந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதிமுக மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, நெல்லை மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இளம்பை தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளராக விந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும், அதிமுக அமைப்பு செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, பாஸ்கரன், ராயபுரம் மனோ, திருச்சி மனோகரன், தஞ்சை காந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அதிமுக மருத்துவ அணி இணை செயலாளராக மருத்துவர் சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுச்சேரி கிழக்கு, மேற்கு என இருந்ததை ஒருங்கிணைத்து, புதுச்சேரி மாநிலம் என மாற்றியமைத்து, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆதித்தனார் ஐயாவின் பிறந்தநாள் நன்னாளில் அ.தி.மு.க. சார்பில் பிறந்தநாள் விழாவிற்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளோம் என்றார்.
    • அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்ட போராட்டம் நடத்தி அம்மா நிலையான அரசாணையை மத்திய அரசு வெளியிட செய்தார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து நன்றி சொன்னார். பின்னர் அவர் கூறியதாவது:-

    அன்போடு, பாசத்தோடு, தமிழர் தந்தை என்று போற்றப்படும் ஆதித்தனார் ஐயாவின் பிறந்தநாள் நன்னாளில் அ.தி.மு.க. சார்பில் பிறந்தநாள் விழாவிற்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளோம் என்றார்.

    காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு, அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்ட போராட்டம் நடத்தி அம்மா நிலையான அரசாணையை மத்திய அரசு வெளியிட செய்தார். அதை மாற்றவோ திருத்தம் செய்யவும் முடியாது என்றார்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பிளவு குறித்த கேள்விக்கு, தமிழர் தந்தை பிறந்தநாளில் நல்லவைகளை பற்றி மட்டும் பேசுவோம் என்