என் மலர்
நீங்கள் தேடியது "மாவட்ட செயலாளர்கள் கூட்டம்"
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக இன்று காலை 9 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக இன்று காலை 9 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் என அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
- கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
- அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் 28-06-2025 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
- கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
- மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அட்டவணைப்படி நடைபெற உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 25,26 தேதிகளில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 24.6.2025, 25.6.2025 ஆகிய தேதிகளில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கீழ்கண்ட கால அட்டவணைப்படி நடைபெற உள்ளது.
24.6.2025 - செவ்வாய் கிழமை காலை 9.30 மணிக்கு
கலந்துகொள்ளும் மாவட்டங்கள்:
1. சிவகங்கை
2. திண்டுக்கல் கிழக்கு
3. திண்டுக்கல் மேற்கு
4. அரியலூர்
5. பெரம்பலூர்
6. கரூர்
7. நாமக்கல்
8. தருமபுரி
9. கிருஷ்ணகிரி கிழக்கு
10. கிருஷ்ணகிரி மேற்கு
11. விழுப்புரம்
12. கடலூர் கிழக்கு
13. கடலூர் வடக்கு
14. கடலூர் தெற்கு
15. கடலூர் மேற்கு
16. திருவண்ணாமலை வடக்கு
17. திருவண்ணாமலை தெற்கு
18. திருவண்ணாமலை கிழக்கு
19. திருவண்ணாமலை மத்தியம்
20. ராணிப்பேட்டை கிழக்கு
21. ராணிப்பேட்டை மேற்கு
24.6.2025 - செவ்வாய் கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு
கலந்துகொள்ளும் மாவட்டங்கள்:
1. கன்னியாகுமரி கிழக்கு
2. கன்னியாகுமரி மேற்கு
3. தூத்துக்குடி வடக்கு
4. தூத்துக்குடி தெற்கு
5. தென்காசி வடக்கு
6. தென்காசி தெற்கு
7. திருநெல்வேலி மாநகர்
8. திருநெல்வேலி புறநகர்
9. ராமநாதபுரம்
10. விருதுநகர் கிழக்கு
11. விருதுநகர் மேற்கு
12. தேனி கிழக்கு
13. தேனி மேற்கு
14. மதுரை மாநகர்
15. மதுரை புறநகர் கிழக்கு
16. மதுரை புறநகர் மேற்கு
17. புதுக்கோட்டை வடக்கு
18. புதுக்கோட்டை தெற்கு
19. ஈரோடு மாநகர்
20. ஈரோடு புறநகர் கிழக்கு
21. ஈரோடு புறநகர் மேற்கு
25.6.2025 - புதன் கிழமை காலை 9.30 மணிக்கு
கலந்துகொள்ளும் மாவட்டங்கள்:
1. திருவாரூர்
2. மயிலாடுதுறை
3. நாகப்பட்டினம்
4. தஞ்சாவூர் கிழக்கு
5. தஞ்சாவூர் மேற்கு
6. தஞ்சாவூர் மத்தியம்
7. தஞ்சாவூர் தெற்கு
8. கள்ளக்குறிச்சி
9. சேலம் மாநகர்
10. சேலம் புறநகர்
11. திருச்சி மாநகர்
12. திருச்சி புறநகர் வடக்கு
13. திருச்சி புறநகர் தெற்கு
14. நீலகிரி
15. கோவை மாநகர்
16. கோவை புறநகர் வடக்கு
17. கோவை புறநகர் தெற்கு
18. திருப்பூர் மாநகர்
19. திருப்பூர் புறநகர் கிழக்கு
20. திருப்பூர் புறநகர் மேற்கு
25.6.2025 - புதன் கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு
கலந்துகொள்ளும் மாவட்டங்கள்:
1. திருப்பத்தூர்
2. வேலூர் மாநகர்
3. வேலூர் புறநகர்
4. திருவள்ளூர் வடக்கு
5. திருவள்ளூர் மத்தியம்
6. திருவள்ளூர் தெற்கு
7. திருவள்ளூர் கிழக்கு
8. திருவள்ளூர் மேற்கு
9. செங்கல்பட்டு கிழக்கு
10. செங்கல்பட்டு மேற்கு
11. காஞ்சிபுரம்
12. சென்னை புறநகர்
13. வட சென்னை வடக்கு (கிழக்கு)
14. வட சென்னை வடக்கு (மேற்கு)
15. வட சென்னை தெற்கு (கிழக்கு)
16. வட சென்னை தெற்கு (மேற்கு)
17. தென் சென்னை வடக்கு (கிழக்கு)
18. தென் சென்னை வடக்கு (மேற்கு)
19. தென் சென்னை தெற்கு (கிழக்கு)
20. தென் சென்னை தெற்கு (மேற்கு)
மேற்கண்ட ஆலோசனைக் கூட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்களும்; மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
- அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, தென்காசி மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் 29, 30ம் தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதன்படி, வரும் 29, 30 ஆகிய தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் காலை 9.30 மணி, பிற்பகல் 3.30 மணி என இரு நேரங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, தென்காசி மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே 3ம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
- மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்துக் கொள்ளும்படி உத்தரவு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் மே 3ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே 3ம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச் செலயாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
மேலும், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்துக் கொள்ளும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.
- அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
- அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், விருந்து ஆகியவற்றை தவிர்த்த செங்கோட்டையன் இபிஎஸ் உடன் சந்தித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் செங்கோட்டையன் சந்தித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், விருந்து ஆகியவற்றை தவிர்த்த செங்கோட்டையன் இபிஎஸ் உடன் சந்தித்துள்ளார்.
இங்கு, முதல் வரிசையில் இபிஎஸ்-ஐ நேராக பார்த்தபடி செங்கோட்டையன் அமர்ந்திருந்தார்.
- 12 மாவட்டச் செயலாளர்கள் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில் வியூகம் அமைத்து செயல்பட வேண்டும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கட்சியினரை தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி தலைமை கழகத்தில் இன்று காலை 11 மணியளவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சென்னை மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, டி.ஜெயக்குமார், கே.பி.கந்தன், ஆதிராஜாராம், விருகை வி.என்.ரவி, ஆர்.எல்.ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, தி.நகர் சத்யா, அசோக் உள்ளிட்ட 12 மாவட்டச் செயலாளர்கள் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டணியை பற்றி யோசிக்காமல் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும். தேர்தலுக்கு அடிப்படை பூத் கமிட்டிகள். எனவே, பூத் கமிட்டிகளை முழுமையாக அமைத்து தலைமைக் கழகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

கிளைக் கழக அளவில் மக்களை நேரில் சந்திக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி பொதுமக்கள் மனங்களில் பதிய வைக்க வேண்டும்.
தெருமுனை கூட்டங்கள், திண்ணை பிரசாரங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கட்சியினர் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில் வியூகம் அமைத்து செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தலில் போட்டியிட தகுதியானவர்களை தேர்வு செய்யுங்கள். அவர்கள் சமூகத்தில் மதிப்பும், மரியாதையுடன் நல்ல அந்தஸ்தில் இருக்க வேண்டும். ஆரம்பகால கட்சி தொண்டர்களாக இருக்க வேண்டும். தொகுதியில் பிரபலமாகவும், மக்கள் செல்வாக்கு உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்டவர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தலைமைக்கு அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளார்கள்.
இளம்பெண்கள், இளைஞர் பாசறை, தகவல் தொழில்நுட்ப அணிகளை முடுக்கிவிட்டு மக்கள் மத்தியில் பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.






