search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIADMK"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கள்ளந்திரி, மேலூர், திருமங்கலம் ஆகிய 3 பகுதிகளுக்கும் சேர்த்தே பாசனத்திற்கு தண்ணீர்திறக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
    • 58 கிராம பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர், 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    திருமங்கலம் தாலுகாவில் பெரியாறு-வைகை பாசன திட்டத்தின் கீழ் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. வைகை அணையில் 6 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கும்போது திருமங்கலம் பகுதிகளுக்கு செப்டம்பர் 15-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பது வழக்கமான ஒன்று. மதுரை மாவட்டத்தில் பேரணை முதல் கள்ளந்திரி வரையான இருபோக பாசனத்திற்கான 45 ஆயிரம் ஏக்கர், மேலூர் ஒருபோக பாசனத்திற்கான 85 ஆயிரம் ஏக்கர், திருமங்கலம் ஒருபோக பாசனத்திற்கான 19 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பிற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ஆனால் தற்போது கள்ளந்திரி பகுதியில் மட்டும் தண்ணீர்திறக்கப்பட்டு விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. வைகை, முல்லை பெரியாறு அணைகளின் மொத்த நீர் இருப்பு 6 ஆயிரம் மில்லியன் கன அடியை தாண்டினாலே கள்ளந்திரி, மேலூர், திருமங்கலம் ஆகிய ௩ பகுதிகளுக்கும் சேர்த்தே பாசனத்திற்கு தண்ணீர்திறக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

    முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சிகாலத்தில் 58 கிராம பாசன கால்வாய் திட்டத்திற்கு தேவையான நிதி முழுமையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு 2018-ம் ஆண்டு முதல் முறையாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்திட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 36 கண்மாய்கள், 110 கிராமங்கள் மற்றும் 5 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும் வகையில் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. விவசாயம், குடிநீர், கால்நடை தேவைக்கும் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

    தற்போது போராட்டம் நடத்தி வருகிற பாசன விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையிலும், பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவும் மதுரை மாவட்ட கலெக்டர் திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர், 58 கிராம பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூட்டணியை உறுதிப்படுத்த பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • தற்போதைய நிலையில் பா.ம.க. எந்த கூட்டணியில் சேரும் என்பதில் இன்னும் தெளிவான முடிவு இல்லை.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் கூட்டணியை உறுதிப்படுத்த பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ஆனால் இன்னும் கூட்டணியில் இடம் பெறுவதில் சில கட்சிகள் நழுகியும், வழுகியும் பிடி கொடுக்காமல் இருப்பதால் விட்டுப்பிடிக்கும் மன நிலையில் தலைவர்கள் இருக்கிறார்கள்.

    தற்போதைய நிலையில் பா.மக. எந்த கூட்டணியில் சேரும் என்பதில் இன்னும் தெளிவான முடிவு இல்லை. தனது கட்சியினரிடம் 'அவசரப்படாதீர்கள். பொறுமையாக இருங்கள்' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

    வட மாவட்டங்களை மனதில் கொண்டு பா.ம.க.வை கூட்டணியில் சேர்க்க தி.மு.க.வுக்கும் விருப்பம் இருக்கிறது. ஆனால் பா.ம.க. இடம் பெற்றால் நாங்கள் வெளியேறுவோம் என்று விடுதலை சிறுத்தைகளும் முரண்டு பிடிக்கின்றன.

    இந்த நிலையில் இப்போது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் 'பா.ம.க. இடம் பெறும் கூட்டணியில் நாங்கள் இடம் பெறமாட்டோம் என்று கூறி இருக்கிறார்.

    எனவே அப்படி ஒரு சூழ்நிலைவந்தால் வேல்... வேல்... வெற்றிவேல் என்று அ.தி.மு.க.வை நோக்கி வேல்முருகன் புறப்படுவார் என்கிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாவட்ட கவுன்சிலருமான ரத்தினமங்கலம் கஜா என்ற கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • காயரம்பேடு ஊராட்சியில் 7 பூத் கமிட்டி நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    கூடுவாஞ்சேரி:

    காட்டாங்கொளத்தூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அ. தி.மு.க. சார்பில் காரணைப் புதுச்சேரி, பெருமாட்டுநல்லூர் மற்றும் காயரம்பேடு ஆகிய ஊராட்சிகளில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ரத்தினமங்கலம் கஜா என்ற கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    காயரம்பேடு ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம். எல்.ஏ. தன்சிங், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் காட்டூர் கன்னியப்பன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், காயரம்பேடு ஊராட்சி மன்ற துணை தலைவர் திருவாக்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக பிரிவு செயலாளருமான செல்ல பாண்டியன் கலந்துகொண்டு பூத் கமிட்டி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் 11 பூத் கமிட்டி நிர்வாகிகளும், பெரு மாட்டுநல்லூர் ஊராட்சியில் 6 பூத் கமிட்டி நிர்வாகிகளும், காயரம்பேடு ஊராட்சியில் 7 பூத் கமிட்டி நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    கிளை பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. மதன்சிங் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் வேங்கடமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, நிர்வாகிகள் ரங்கன், பொன்.தர்மராஜ், துளசிங்கம், கார்த்திக் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த ஆண்டு சூர்யா சிவாவை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி பாஜக அறிவித்தது.
    • பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவாவிற்கு கட்சியில் மீண்டும் பதவி வழங்க உள்ளதாக அறிவிப்பு.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓ.பி.சி. அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று பொதுவெளியில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தொலைபேசியில் ஆபாசமாக திட்டி திருச்சி சூர்யா சிவா பேசிய ஆடியோ வைரலானது.

    இந்த விவகாரம் தொடர்பாக, டெய்சி சரண், சூர்யா சிவா ஆகியோரிடம் திருப்பூரில் வைத்து பா.ஜ.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து, சூர்யா சிவாவை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி பாஜக அறிவித்தது.

    இதைதொடர்ந்து, பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவாவிற்கு கட்சியில் மீண்டும் பதவி வழங்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அறிவித்தார்.

    மேலும், தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடரவும் திருச்சி சூர்யா சிவாவுக்கு அண்ணாமலை அறிவுறுத்தினார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக திருச்சி சூர்யா சிவா தன் முடிவை அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து திருச்சி சிவா கூறுகையில், "திட்டமிட்டபடி எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் என்னை இணைத்து கொள்கிறேன். அதிமுகவில் இணைவது உறுதி" என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, பொய்யர் பழனிசாமி என்று குறிப்பிட்டுள்ளார்.
    • எங்களை பற்றி அதிகளவில் விமர்சனம் செய்து வருகிறார்.

    சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "என்னை பற்றி பல்வேறு விமர்சனம் செய்துள்ளார்கள். அதில் ஒருசிலவற்றை குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த கூட்டத்தின் நோக்கம், அந்த கட்சி சம்பந்தப்பட்டது. அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால், அந்த கூட்டத்தில் என்னைப் பற்றி அதிக நேரம் பேசியுள்ளார்."

    "குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, பொய்யர் பழனிசாமி என்று குறிப்பிட்டுள்ளார். நான் இதுவரை ஊடகத்திலோ, பத்திரிகையிலோ பொய் செய்தி வெளியிட்டதில்லை. எனது அறிக்கையிலோ அல்லது ஊடகத்தில் பேட்டி அளிக்கும் போதோ, பொய்யான செய்தியை நான் எப்போதும் கொடுத்ததில்லை. ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு, திரு ஸ்டாலின் அவர்கள் என்னை பற்றி தவறான விமர்சனம் செய்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது."

    "இதோடு, இரண்டறை ஆண்டு திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக் கொண்டு தி.மு.க. ஆட்சியில் மக்கள் கொதித்துப்போய், வெறுத்துப் போய் இருக்கின்றார்கள். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், பயத்தில் என்னைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார் என்றுதான் நான் பார்க்கிறேன். அதுமட்டுமல்லாமல், நாங்கள் பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணியில் இருந்து விலகிவிட்ட பிறகு, எங்களை பற்றி அதிகளவில் விமர்சனம் செய்து வருகிறார்."

    "ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பது, விலகுவது அந்த கட்சியை பொருத்தது. எங்களை பொருத்தவரை நாங்கள் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம். விலகிவிட்ட காரணத்தினால் தி.மு.க. தலைவர் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சு மற்றும் அறிக்கையில் இருந்து இதனை புரிந்து கொள்ள முடிகிறது."

    "தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சிறுபான்மையினருக்கு நன்மை செய்வது போன்று தோற்றத்தை ஏற்படுத்தி வந்தார்கள். நாங்கள் கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து, சிறுபான்மை மக்கள் அ.தி.மு.க.வை சேர்ந்த என்னையும், தலைமை கழக நிர்வாகிகளை சந்திப்பதை அவரால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் தான் இதுபோன்ற வெறுப்பு பேச்சு வந்து கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன்."

    "அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு முடிக்கும் தருவாயில் இருந்த போது தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிறகு முதல்வர் ஆன மு.க. ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, முடிக்கப்பட்ட திட்டங்களைத் தான் திறந்து வைத்து வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியின் போது ஒரே ஆண்டில் மட்டும் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன."

    "இந்த மருத்துவ கல்லூரிகளின் பணிகள் 70 சதவீதம் முடிந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிறகு, மீதமுள்ள பணிகளை முடித்துவைத்து, அந்த கட்டிடங்களை தான் அவர் திறந்து வைத்துள்ளார். இதே போன்று, பல்வேறு பாலங்களுக்கான பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டன. அவற்றையும் திரு. ஸ்டாலின் தான் திறந்து வைத்தார்," என்று தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
    • அப்போது, சபாநாயகர் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறினார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கையின் அருகில் உள்ள துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில், தான் விதிப்படியே செயல்பட்டு வருவதாக தொடர்ந்து கூறி வந்துள்ளார். கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் போதும், அ.தி.மு.க. துணைத் தலைவர் இருக்கை விவகாரம் எதிரொலித்தது.

    இந்நிலையில் 3 நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடர் இன்றுடன் முடிகிறது. கடைசி நாளான இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தை எழுப்பி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக தங்களிடம் இதுவரை 10 முறை கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. (எந்தெந்த நாட்களில் கடிதம் கொடுக்கப்பட்டது என்பதையும் தெரிவித்தார்).

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்துள்ளது. இதுபோன்ற ஆவணங்களை எல்லாம் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக நீங்கள் கேட்டு இருக்கிறீர்கள். 2 நாட்களுக்கு முன்பும் கூட அது தொடர்பான நகல்களை நாங்கள் உங்களிடம் வழங்கி இருக்கிறோம்.

    இருப்பினும் எதற்காக நீங்கள் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கி தர மறுக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. இதற்கான காரணம் என்ன என்பதும் எங்களுக்கு தெரியவில்லை. இது எங்களுக்கு வேதனை அளிக்கும் விஷயமாகவே உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத் தொடர்ந்து சபா நாயகர் அப்பாவு, துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து கூறியதாவது:-

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருக்குதான் குறிப்பிட்ட இடத்தில் இருக்கை ஒதுக்கி தர வேண்டும் என்கிற விதி உள்ளது. துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக அது போன்ற எந்த விதியும் இல்லை. இதற்கு முன்பு இருக்கை விவகாரம் தொடர்பாக எனக்கு முன்பு இருந்த சபாநாயகர் எடுத்த முடிவைத்தான் நானும் எடுத்துள்ளேன்.

    துணைத் தலைவராக, கொறடாவாக நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்களோ அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இருக்கை விவகாரத்தை பொறுத்தவரை யாரும் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அது எனது அதிகாரத்துக்கு உட்பட்டது. இந்த விஷயத்தில் மரபுப்படியும், விதிப்படியும் நான் செயல்பட்டு வருகிறேன். அது போன்றே தொடர்ந்து செயல்படுவேன். விதிப்படியும், சட்டப்படியும் நான் இந்த அவையை நடத்தி வருகிறேன். ஒரு சின்னத்தில் போட்டியிட்டு அதற்கு எதிராக வாக்களித்த 11 பேர் மீது அப்போதைய சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு நீங்கள்தான் (எடப்பாடி பழனிசாமி) உங்கள் அருகில் இடம் ஒதுக்கி கொடுத்தீர்கள். நான் கொடுக்கவில்லை.

    என்னைப் பொறுத்தவரையில் யாருடைய மனமும் கோணாத வகையில் இந்த அவையை நேர்மையுடன் நான் நடத்தி வருகிறேன்.

    இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேசினார்.

    இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி எழுந்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக மீண்டும் பேசினார். ஆனால் அவரது மைக் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அவர் பேசியது எதுவும் வெளியில் கேட்கவில்லை.

    இந்த நேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு எதிராக எழுந்து சத்தமாக பேசினார். அவரது பேச்சுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

    இந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் எழுந்து ஏதோ பேசினார். அதுவும் வெளியில் கேட்கவில்லை. இப்படி ஒரே நேரத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியனும் பேசிக் கொண்டே இருந்ததால் அவையில் கடுமையான கூச்சல்-குழப்பம் நிலவியது.

    இதைத் தொடர்ந்து சபா நாயகர் அப்பாவு அனைவரும் தங்களது இருக்கையில் அமருங்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரின் நட வடிக்கை ஒருதலைப்பட்சமாக இருக்கிறது என்று கூறி கோஷம் எழுப்பிய படியே தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து சென்று சபாநாயகரின் இருக்கை முன்பு திரண்டனர். அப்போது அ.தி.மு.க. துணை கொறடா ரவி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் சிலர் தரையில் அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சபாநாயகர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து நீங்களே வெளியில் செல்கிறீர்களா? அல்லது வெளியேற்றவா? என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தரையில் அமர்ந்தபடியும், சபாநாயகர் இருக்கையை சுற்றி நின்ற படியும் கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து சபைக் காவலர்கள் மூலமாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சபை காவலர்கள் சட்டசபை அரங்கினுள் வந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை குண்டு கட்டாக வெளியேற்றினர்.

    அப்போதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியதால் சபையில் பரபரப்பு நிலவியது.

    இதற்கிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்படும் போது, உங்கள் அரசியலை சபைக்குள் செய்ய வேண்டாம். வெளியில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கமலாலயத்தில் முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை இல்லாமல் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
    • சுதாகர்ரெட்டி கூறும்போது கூட்டணி பற்றி தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் எங்கள் பதிலை அறிவிப்போம் என்றார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் அண்ணாமலை டெல்லியில் இருப்பதால் இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் கட்சி அலுவலகமான கமலாலயத்தில் முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை இல்லாமல் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த கூட்டத்தில் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவவிநாயகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாநில நிர்வாகிகள், கோட்ட பொறுப்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பா.ஜனதா துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறும்போது, அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடக்கிறது. கூட்டணி தொடர வேண்டும் என்பதால்தான் ஆலோசனை நடக்கிறது என்றார்.

    மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி கூறும்போது, கூட்டணி பற்றி தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் எங்கள் பதிலை அறிவிப்போம் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    • கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை.

    பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகுவதாக வெளியான அறிவிப்பு குறித்து, இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது பொதுச்செயலாளரின் முடிவு அல்ல. ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு. கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என சிலர் கூறுகிறார்கள்; அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்," என்று தெரிவித்து உள்ளார்.

    மேலும் பேசிய அவர், "ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை அறிவித்த பிறகா தேர்தலை சந்திக்கின்றனர். மாநிலத்தின் உரிமையை காக்க பாராளுமன்றத் தேர்தலை அ.தி.மு.க. சந்திக்கும். தேர்தல் வந்தால் அழகாக பேசி ஏமாற்றும் அனைத்து தந்திரங்களையும் தி.மு.க. முன்னெடுக்கும்."

    "மகளிருக்கு இலவச பயணம் எனக் கூறிவிட்டு சில பஸ்களுக்கு மட்டும் பிங்க் நிற பெயின்ட் அடித்துள்ளனர். கொரோனாவில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீது தாங்க முடியாத சுமையை தி.மு.க. அரசு சுமத்தியுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில், கொடுக்கப்படாத வாக்குறுதிகளையும் சேர்த்து நிறைவேற்றி இருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

    காவிரி விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஆளும் தி.மு.க. கட்சிக்கு எதிராகவும், தமிழகத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும் அ.தி.மு.க. போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருக்கிறது.

    இது தொடர்பான அறிவிப்பை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளார். அதன்படி தமிழகத்தின் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் அக்டோபர் 6-ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரைப் பெற முயற்சி மேற்கொள்ளாமல், குறுவை சாகுபடியினை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்காததற்கு தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட இருக்கிறது.

    மேலும் குறுவை சாகுபடி மேற்கொண்ட சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் கருகிய நெற்பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றிற்கு 35 ஆயிரம் ரூபாயை நிவாரணத் தொகையாக உடனடியாக வழங்க வலியுறுத்தப்பட இருக்கிறது. இதோடு உச்சநீதிமன்ற ஆணை படி, உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட இருக்கிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print