என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIADMK"

    • அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்.
    • திமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.

    தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். இதனிடையே அதிமுகவில் இருந்து நிறைய தலைவர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். இதையடுத்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகர் மற்றும் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.

    இந்நிலையில், கோவையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றவர்கள் தற்போது அங்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே பதவியும், மரியாதையும் வழங்கப்பட்டால் மீண்டும் அதிமுகவிற்கே வர அவர்கள் தயாராக உள்ளனர்" என்று தெரிவித்தார்.

    எஸ்.பி. வேலுமணியின் ந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விஜய் அண்மையில் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்து வருகிறார்.
    • விஜயை அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். திமுகவின் மீது கடுமையாகந விமர்சனங்களை முன்வைத்து வரும் விஜய் அண்மையில் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்து வருகிறார்.

    இதையடுத்து விஜயை அதிமுக அத்தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.அவ்வகையில் கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விஜயை கடுமையாக தாக்கி பேசினார்.

    கோவை கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "விஜய் கரூர் செல்கிறார். 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் அதை கண்டுகொள்ளாமல் சென்னை சென்ற விஜய் திரும்பி வரவே இல்லை.." அவர் உடனே மருத்துவமனைக்கு போயிருக்க வேண்டாமா... காப்பாத்தியிருக்க வேண்டாமா... இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

    விஜய்யின் பட ரிலீஸ் பிரச்னையின்போது அவர் என் வீட்டில் இருந்தார், நான்தான் அவரை காரில் அழைத்துச் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைத்து, படத்தை ரிலீஸ் செய்ய உதவினேன்" என்று தெரிவித்தார்.

    • பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள்.
    • மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கூட்டணிக்கு தலைமை அதிமுக தான் என்று எடப்பாடி கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அக்கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள். இதை பாஜகவும் மறுக்கவில்லை.

    போற போக்கை பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது. மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது" என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக NDA கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன், அமமுக கட்சிக்கு தகுதியான தொகுதிகளை முறையில் பாஜக மூலம் முயற்சி செய்வோம்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பள்ளியிலேயே சக மாணவர்கள் ஜாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
    • எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு இருப்பதாக செய்திகள் வருகின்றன.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில், கடந்த 19.02.2026 (வியாழக்கிழமை) அன்று, 11-ம் வகுப்பு மாணவன் ஜீவானந்தம் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் ஜாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    தாக்குதல் நடந்து நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை வழக்கு பதியாமல், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு இருப்பதாக செய்திகள் வருகின்றன.

    இது தான் சமூகநீதியா ஸ்டாலின் அவர்களே? இந்த சம்பவமெல்லாம் எந்த மாடலில் வருகிறது?

    இப்படி மாணவர்கள் இடையே ஜாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு?

    பிரச்சார மேடை போட்டு தன் ஆட்சி பற்றி இல்லாத பெருமைகளை ரீல் ரீலாக அளந்து விடும் பொம்மை முதல்வர், ரியலாக நடக்கும் இந்த சமூக அநீதிகளைப் பற்றி ஒருவார்த்தை பேசினாரா? அல்லது, இனியாவது பேசுவாரா?

    தன் கூட்டணி கட்சித் தலைவரே சுட்டிக்காட்டி இருக்கும் இந்த செய்திக்கு, தனது அரசின் நடவடிக்கையின்மைக்கு, என்ன விளக்கம் தரப்போகிறார் இந்த பொம்மை முதல்வர்?

    மாணவன் ஜீவானந்தம் தாக்குதல் குறித்து உடனடியாக வழக்கு பதிந்து, சட்டபூர்வ நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    தமிழக மக்களே- சமத்துவ சமுதாயம் காணும் நாளே உண்மையான விடியல். இந்த விடியா ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, அந்த சமூகநீதி விடிவுகாலத்தை நோக்கி நாம் பயணிப்போம் ஒன்றாக!

    • பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 5 லட்சம் பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும்.
    • முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு, பொன்னேரி தொகுதிக்குட்பட்ட தடாபெரும்பாக்கம், பொன்னேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திறந்தவெளி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எழுச்சியுரை மேற்கொண்டார்.

    அப்போது இபிஎஸ் பேசியதாவது, ''இன்னும் இரண்டு மாதம் தான்… ஏப்ரலில் தேர்தல் வரும். இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தேடித் தரவேண்டும். நம் கூட்டணி வலிமையானது அதிமுக தான் தலைமை. வெற்றி பெற்று அதிமுக தான் ஆட்சி அமைக்கும், அதிமுக தலைவர் தான் முதல்வர்.

    திமுக கூட்டணி அப்படியா இருக்கிறது? காங்கிரஸ் பங்கு கேட்கிறது. எப்போதும் உங்களுக்கு அடிமையாக இருக்கிறோம் என்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடம் என்று பிரச்னை. தேர்தல் வரை இந்தக் கூட்டணி நிலைக்குமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.

    இரண்டு மாதம் முன்பு ஸ்டாலின் என்ன பேசினார்..? இபிஎஸ் கடையை விரித்து வைத்திருக்கிறார், யாரும் வரவில்லை என்றார். பலமான கூட்டணி அமைந்துவிட்டது. இது, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும் என்பதற்கு உருவான கூட்டணி. உங்கள் கூட்டணி அப்படியில்லை சுயநலம் நிறைந்த கூட்டணி. அதனால் தான் திமுகவின் நிலை தெரிந்து காங்கிரஸ் பங்கு கேட்கிறது, விசிக பட்டும் படாமலும், பங்கு இருந்தால் பரவாயில்லை என்று கேட்கிறார்கள்.

    இப்போது புதிதாக ஒரு கட்சி சேர்ந்திருக்கிறது. அந்தம்மா மாநாடு நடத்தியபோது, அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்கிறது. அப்படிப்பட்ட கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கூட்டணி வைத்துள்ளன.

    நம் கூட்டணி ஒரே நிலைப்பாடு அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும், மக்கள் விரோத திமுகவுக்கு நிரந்தர விடுதலை கொடுக்க வேண்டும். இதுதான் நம் கூட்டணிக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம். லேட்டாக கூட்டணி அமைத்தாலும் லேட்டஸ்டா அமைத்த கூட்டணி.

    சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா..? நாட்டு மக்களை ஏமாற்றும் திமுகவுக்கு இதுதான் கடைசி தேர்தலாக இருக்க வேண்டும். பல வாக்குறுதிகளைக் கொடுத்து இன்னும் பலவற்றை நிறைவேற்றவே இல்லை. திமுக வாக்குறுதியில் நான்கில் ஒரு பங்கு தான் நிறைவேற்றினர், வெள்ளை அறிக்கை கேட்டேன், பதிலில்லை.

    இது கிராமங்கள் நிறைந்த பகுதி. விவசாயத் தொழிலாளிகள் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்துவேன் என்று சொன்னார்கள் செய்யவில்லை. நாம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததால் மத்திய அரசு 125 நாளாக உயர்த்தியது. ஆனால் திமுகவினர் போராட்டம் நடத்துகிறார்கள்.

    பணிப் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இதை ரத்துசெய்ய முடியாது. ஊராட்சிக்கு பணியை தேர்வுசெய்ய அதிகாரம் கொடுத்துள்ளனர். ஊழியர்களுக்கு 15 நாளில் பணம் பட்டுவாடா செய்யப்படும். இதெல்லாம் செய்துகொடுத்தது மத்திய அரசு. அதிமுகவின் வேண்டுகோளை ஏற்று. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 125 நாள் 150 நாளாக உயர்த்தப்படும்.

    10 அறிவிப்புகளை நான் அறிவித்தேன். குடும்பத் தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் கொடுப்போம். நாங்கள் அறிவித்ததால் பயந்துபோய் அவர் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார், ஏன் கோடை காலத்துக்கு முன்பு கொடுக்கவில்லை.? மக்களை பற்றி சிந்தித்தார்களா? தேர்தல் வருவதால் வாக்கு தேவை அதனால் கொடுத்தனர். 2022, 23, 24, 25 நான்கு கோடைக் காலம் முடிந்தது, அப்போதெல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லை, உங்களுக்கு சும்மா கொடுக்கவில்லை, வாக்குக்கு விலை பேசி கொடுத்துள்ளனர்.

    உரிமைத் தொகையை 28 மாதம் கழித்து, அதிமுகவின் அழுத்தத்தால் தான் கொடுத்தனர். சட்டமன்றத்தில் பேசினோம் வேறு வழியின்றி கொடுத்தார். தாய்மார்கள் கஷ்டத்தைப் பார்த்துக் கொடுக்கவில்லை. இப்போது தேர்தல் வருவதால் ஆயிரம் ரூபாய் நிறுத்தப்படும் என்கிறார், அப்படியென்றால் 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லவா..? நிறுத்தவில்லை. மக்களிடம் பொய் சொல்லி ஓட்டுகளைப் பெறுவதற்கு தந்திரமாக ஸ்டாலின் சொல்லும் காரணம். தொடர்ந்து நடைபெறும் திட்டத்தை எந்த அரசும் நிறுத்த முடியாது. இந்த 3 மாதம் உங்களுக்கு பணம் வராது. மே மாதம் அதிமுக ஆட்சியில் 2 ஆயிரம் ரூபாய் வரும்.

    ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் கொடுக்கப்படும். ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். கணவன், மனைவி இருவரும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யலாம். பட்டியலின மக்கள், ஏழை மக்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டி தரப்படும். தனிக்குடித்தனம் சென்றாலும் பட்டியலின மக்களுக்கு வீடு கட்டித்தரப்படும். ஒவ்வொரு தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச் சேலை வழங்கப்படும். பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 5 லட்சம் பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும்.

    முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மாணவர் கல்விக் கடன் ரத்துசெய்யப்படும். ஜல்லிக்கட்டு வீரர் மரணம் அடைந்தால் 10 லட்சம் குடும்பத்துக்கு கொடுக்கப்படும். சிறுபான்மை மகளிர் தொழில் தொடங்க கடனுதவி வழஙப்படும். நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் தள்ளுபடி, புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும்.

    உதயநிதி இன்று இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருக்கிறார். எடப்பாடி பாஜகவுக்கு முரட்டு அடிமையாம். புதிதாக கண்டுபிடித்திருக்கிறார், இதற்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம். உதயநிதி சிந்தியுங்கள், எனக்கு முரட்டு அடிமை என்றால் உங்க தாத்தாவுக்கு என்ன பட்டம் கொடுப்பது..? வாஜ்பாயோடு கூட்டணியில் இருந்தாரே, அவருக்கு என்ன பட்டம் கொடுக்கப்போறீங்க..? கத்துக்குட்டி நீங்க, வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. நீங்க கூட்டணி வைத்தால்

    பாஜக நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் கெட்ட கட்சியா?

    அரசியலில் ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுகள் சிதறாமல் இருக்க கூட்டணி வைப்போம். அதிமுகவோடு கூட்டணி வைத்தவர்கள் தான் திமுகவோடும், திமுகவோடு கூட்டணியில் இருந்தவர்கள் அதிமுகவோடும் கூட்டணி வைத்துள்ளனர். தேர்தலுக்கு தேர்தல் இது மாறுபடும். இதை வைத்துக்கொண்டு உதயநிதி பேசுகிறார். நான் முரட்டு அடிமை இல்லை, உங்கள் தாத்தாதான் முரட்டு அடிமை.

    தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கிறது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். ஊழல் நடக்காத துறையே இல்லை.

    ரெய்டை கண்டு பயப்பட மாட்டேன், ஆட்சி போனால் போகட்டும் என்கிறார், ஆட்சி போகத்தான் போகிறது, மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஆக ஆட்சி போகப்போகிறது என்று ஸ்டாலினே முடிவுசெய்து அறிவித்துவிட்டார். ஸ்டாலின் கட்டுப்பாட்டில் எந்த துறையும் இல்லை, எல்லா அமைச்சர்களும் கொள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

    சமீபத்தில் தீர்ப்பு வந்தது, நகராட்சி நிர்வாகத்துறையில் ஆயிரக்கணக்கான பணியிடங்களுக்கு ஒவ்வொரு பணியிடத்துக்கும் லட்சக்கணக்கில் பணம் வாங்கியும், டெண்டர் விட்டு கமிஷனும் வாங்கி இருக்கிறார்கள். அதெல்லாம் ஆதாரத்தோடு அமலாக்கத்துறை அனுப்பியது. அதிமுக சார்பில் வழக்கு தொடர்ந்தோம் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர், ஆக, லஞ்சம் வாங்குவது உண்மையாகிவிட்டது.

    திட்டங்களை கொண்டுவர நிதி இல்லை, எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க 82 கோடி. தேவையா? எழுதும் பேனாவை அரசு மாணவர்களுக்கு கொடுத்தால் பாராட்டுவார்கள். காலுக்கு செருப்பே இல்லாமல் இருக்கிறார்கள். நான் விவசாயிகள் கஷ்டத்தை அனுபவ ரீதியாக உணர்ந்தவன், இவர்கள் கஷ்டத்தை அனுபவிக்காதவர்கள். சென்னையில் கார் ரேஸ் நடத்துகிறார். ஏழை மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவிடும் அரசு தேவையா?

    ஒவ்வொரு ரூபாயும் மக்களின் வரிப்பணம். கருணாநிதியின் குடும்ப பணம் இல்லை. ஊழல் அரசை வீட்டுக்கு அனுப்ப தேதி நெருங்கிவிட்டது, குடும்ப ஆட்சி தேவையா வாரிசு அரசியல் தேவையா? இரண்டுக்கும் முடிவுகட்டும் தேர்தல். மிகப்பெரிய பணக்கார குடும்பம் ஸ்டாலின் குடும்பம். இப்படியே விட்டுவிட்டால் குடும்ப ஆட்சியைக் கொண்டுவந்து நாட்டை குட்டிச்சுவராக்கி விடுவார்கள். அதனால் விழிப்புடன் இருந்து அதிமுகவை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும்.

    மின்கட்டணம், வரி உயர்வு, குப்பைக்கும் வரி, வரிமேல் வரி போடும் அரசு வேண்டுமா? வாக்குறுதி நிறைவேற்றவில்லை, எல்லோரும் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டக்களமாகிவிட்டது. மக்களை ஏமாற்றும் ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல். கொரோனா காலத்தில் விலைவாசி உயரவில்லை, ஓராண்டு விலையில்லா பொருட்கள் கொடுத்தோம், ஆயிரம் ரூபாய் கொடுத்தோம், தைப்பொங்கல் அன்று 2500 ரூபாய் கொடுத்தோம். அற்புதமான ஆட்சி கொடுத்தோம். மாணவர்கள் மன உளைச்சலில் இருந்தனர், ஆல்பாஸ் போட்டோம். மாணவர்கள் குறைகளையும் போக்கினோம்.

    ஏரி குளம் குட்டை குடிமராமத்து திட்டம் மூலம் தூர் வாரினோம். விவசாயத்துக்கு, குடிப்பதற்கு தேவையான நீர் கொடுத்தோம். மும்முனை மின்சாரம் கொடுத்தோம். ஒரே ஆண்டில் இரண்டுமுறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்தோம். நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்துகொடுத்தோம்.

    7.5% இடஒதுக்கீடு, ஏழை அரசு பள்ளியில் படிக்கிறார்கள், அவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க இடஒதுக்கீடு கொடுத்தோம். 3 ஆயிரம் பேர் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் மருத்துவம் படித்தனர். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி, 68 கலை கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம், 4 பொறியியல் கல்லூரி, 4 வேளாண்மை கல்லூரி, 7 சட்டக்கல்லூரி ஏழை மாணவர்களுக்கும் பட்டப்படிப்பு படிக்கும் சூழல் உருவாக்கினோம்.

    இளைஞர்கள் சிந்திக்க வேண்டும், யார் யாரோ புதுப்புது கட்சி நடத்துகிறார்கள். அவர்களா இதெல்லாம் செய்தார்கள்? ஏழை மாணவர்கள் பட்டப்படிப்பு சூழல் உருவாக்கி தந்தது அதிமுக. கல்விச்செல்வம் அழியாச்செல்வம், உயிர் இருக்கும் வரை ஒரே செல்வம் கல்வி செல்வம். அதை கொடுத்தது அதிமுக அரசு. இளைஞர்கள் அதை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த தேர்தலில் இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் அனைவரும் தே.ஜ.கூட்டணியை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    மீனவ மக்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் நிவாரண நிதி உயர்த்தினோம். இப்போது 8 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள், அந்த தொகை அதிமுக ஆட்சி அமைந்ததும் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற நற்செய்தியை சொல்லிக்கொள்கிறேன். அதிமுக வேட்பாளர் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டால் அவர்களின் சின்னத்துக்கும் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின். வந்திருக்கும் அனைவரும் பாதுகாப்பாக வீடுபோய் சேர வேண்டும்…" என்று முடித்தார்.

    • தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சியை கொண்டு வர முயல்கிறார் ஸ்டாலின்
    • 10 ஆண்டுகள் எங்கள் ஆட்சியின் திட்டங்கள் குறித்து நான் பொதுவெளியில் பேசுகிறேன்.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதிக்குட்பட்ட பி.டி.மூர்த்தி நகர், பாடியநல்லூரில் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

    அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா என இருபெரும் தெய்வங்களை வணங்கி துவங்குகிறேன். மாதவரம் மக்கள் அனைவரும் இங்கு குழுமியிருப்பதால் மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சியளிக்கிறது. அதிமுக வேட்பாளர் இத்தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டார், இது வெற்றி விழா பொதுக்கூட்டம் போல் காட்சியளிக்கிறது.

    ஸ்டாலின் துரோகத்தைப் பற்றி பேசுகிறார். துரோகத்தின் மொத்த அடையாளமே ஸ்டாலின்தான். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் தான் துரோகி. உண்ணாவிரத நாடகம் நடத்தி ஈழத்தமிழர்களுக்கு துரோகம், கட்சத்தீவை தாரை வார்த்த துரோகி, டெல்டாவில் மீத்தேன் கொண்டுவந்து நிலத்தை பறிக்க முயன்ற துரோகி, 2021 தேர்தலில் பொய் வாக்குறுதி அள்ளி வீசிய துரோகி ஸ்டாலின்.

    73 ஆண்டுகள் 2021 வரை 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி தான் கடன். 5 ஆண்டில் பல்வேறு திட்டங்கள் என்று சொல்லி கொள்ளையடித்த துரோகி ஸ்டாலின். 100 நாள் வேலையை 150 நாட்கள் உயர்த்துவேன் என்று சொல்லி ஏமாற்றிய துரோகி. ஆட்சியே போனாலும் பரவாயில்லையாம், போகத்தான் போகுது. இப்பதான் ஸ்டாலினுக்கு பயம் வந்திருக்கு. எடப்பாடி பழனிசாமி பயந்தாங்கோலி என்கிறார், நான் மட்டுமல்ல என் தொண்டர் கூட பயப்பட மாட்டான், வீரம் நிறைந்த மறவர் கூட்டம். சொந்தக் காலில் நிற்கும் கட்சி. திமுக போல பல கட்சிக் கூட்டணியில் முதுகில் சவாரி செய்யும் கட்சியல்ல, மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி, உழைப்பை நம்பியிருக்கும் கட்சி.

    எங்களைப் பொறுத்தவரை மக்கள்தான் எஜமானர்கள். உங்களுக்கு குடும்பம் தான் முக்கியம். மக்களைப் பற்றி கவலைப்படாதவர். அதிமுக மக்களை பற்றி சிந்திக்கும் கட்சி. அதனால் தான் கடுமையான வறட்சியில் காப்பாற்றினோம், தடையில்லா குடிநீர் கொடுத்தோம். புயலை எதிர்கொண்டு நிவாரணம் கொடுத்தோம். கொரோனா கடுமையான பிரச்னை. காற்றில் பரவியது. அப்படிப்பட்ட காலத்தில் திறமையாக செயல்பட்டு விலைமதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றினோம். ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணம் அதிமுக அரசு.

    உங்கள் அரசு கொள்ளை அடிக்கும் அரசு. அரசு இருக்குதா இல்லையா என்று மக்கள் கேட்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கொரோனாவில் விலைவாசி உயரவில்லை. ஏழைகளுக்கு அம்மா உணவகம் மூலம் உணவு கொடுத்தோம். ரேஷன் கடையில் ஓராண்டு பொருட்கள் விலையில்லாமல் கொடுத்தோம், ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். அரசுக்கு ஒரு ரூபாய் வரி வருவாய் இல்லை. டாஸ்மாக், பத்திரப்பதிவு, பெட்ரோல் டீசல், ஜிஎஸ்டி எதுவும் இல்லை, வரியே இல்லாமல் ஆட்சி செய்தோம்.

    திமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன். மக்களை கடனாளியாக்கிவிட்டார். இதுக்கு ஸ்டாலின் தான் காரணம். அப்படிப்பட்டவர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமா? அந்த கடனை நீங்கள் தான் கட்டணும். உங்கள் தலை மீதுதான் கடன் விழுகிறது.

    525 வாக்குறுதிகள் கொடுத்தனர், 100 நாள் வேலைதிட்டம் 150 நாளாக உயர்த்தவில்லை, சம்பளம் உயர்த்தவில்லை. கேஸ் மானியம் 100 ரூபாய் கொடுக்கவில்லை. கூடுதல் சர்க்கரை ஒருகிலோ கொடுக்கவில்லை, பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை. மாணவர் கல்விக் கடன் ரத்து செய்யவில்லை.

    ஆனால், எப்போதும் ஸ்டாலின் உரிமைத் தொகை பற்றி பேசுகிறார். இவர் சொந்தப் பணத்தை கொடுப்பது போல சொல்கிறார். ஸ்டாலின் டிரஸ்ட்டில் 8 ஆயிரம் கோடி பணம் இருக்கிறது. அதெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதிச்சதா?

    அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் நிறைவேற்றவில்லை. செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யவில்லை, சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி ஊழியர்கள், விவசாயிகள், மருத்துவர்கள் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. கொள்ளை அடித்தது தான் மிச்சம்.

    மக்கள் தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள், தேர்தல் மிஷின் ஸ்தம்பிக்கும் வகையில் ஒட்டுமொத்தமாக அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்கள் ஆட்சியில் 2011-21 வரை குறைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

    10 ஆண்டுகள் எங்கள் ஆட்சியின் திட்டங்கள் குறித்து நான் பொதுவெளியில் பேசுகிறேன். 2021-26 வரை திமுக ஆட்சி திட்டங்கள் குறித்து நீங்கள் விளக்குங்கள் பொதுமக்கள் தீர்ப்பு கொடுக்கட்டும் என்று அழைத்தேன். இதுவரை பதிலில்லை.. குடும்ப ஆட்சி வேண்டுமா? வாரிசு அரசியல் தொடர வேண்டுமா?

    அந்தக் காலத்தில் அரசர் தனக்கு பின் மகனுக்கு முடிசூட்டுவார்.. அதுபோல ஸ்டாலின் முயற்சிக்கிறார். கருணாநிதி தலைவர், முதல்வர், அதன் பின்னர் ஸ்டாலின், அதன் பின்னர் எந்த உழைப்புமே இல்லாமல் உதயநிதியை பிரச்சாரம் செய்ய வைத்து துணை முதல்வர் ஆக்கிவிட்டார். திமுகவுக்கு உழைத்தவர்கள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டுவிட்டார்கள். துரைமுருகன் உழைப்பு கொடுத்திருக்கிறார். அதிக நாள் எம்.எல்.ஏவாக இருந்தவர், அவர் கருணாநிதி குடும்பத்தில் பிறக்காததால் துணை முதல்வர் கிடைக்கவிலை.

    அதிமுக ஜனநாயகப்படி செயல்படும் கட்சி. விசுவாசமாக செயல்பட்டால் உயர்ந்த பதவி கிடைக்கும். இல்லை என்றால் நான் எல்லாம் உங்கள் முன்பு வந்து பேச முடியுமா? கனவிலும் நடக்காது. அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் கூட பொதுச்செயலாளர், முதல்வர் ஆக முடியும். ஸ்டாலினால் ஒரு வார்த்தையாவது இப்படி பேச முடியுமா..? திமுகவில் உழைத்தவர்களுக்கு தலைவர், முதல்வர் பதவி கிடைக்கும் என்று அவரால் சொல்ல முடியுமா? முடியாது.

    திமுக ஆட்சியில் கஞ்சா விற்காத இடமே இல்லை. இளைஞர்கள் அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. நீங்கள் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. அது நல்ல முடிவாக இருக்க வேண்டும்.

    அதிமுக பாஜகவை கண்டு நடுங்குகிறதாம். எப்போதும் யாரைக் கண்டும் அதிமுக நடுங்கியது இல்லை. திமுகவும் காங்கிரசும் மத்தியில் இருந்தபோது அறிவாலயத்தில் ரெய்டு கூட்டணிப் பேச்சு நடந்தது. அதிமுக அப்படியல்ல, காவிரி நீர் பிரச்னைக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தும் கூட, உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தை 22 நாட்கள் முடக்கி விவசாயிகள் உரிமையை பாதுகாத்தோம்.

    நீட் தேர்வு ரத்து என்றார், செய்தாரா? ரகசியம் தெரியும் என்று உதயநிதி சொன்னார். ஆனால், ஸ்டாலின் எங்களால் விதிவிலக்கு பெறமுடியவில்லை என்று கைவிரித்து விட்டார். திமுக.வுக்கு 39 எம்.பிக்கள் இருக்கிறார்கள், அவர்கள் என்ன செய்தார்கள்? தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டம் நிதி பெற்றீர்களா? நீட் தேர்வு ரத்துக்கு முயற்சி எடுத்தீர்களா? பேசினால் ரெய்டு வந்துவிடும், அத்தனை பயம்.

    வெளியில் வீரப்பாகப் பேசுறது, ஆனால் உள்ளே பயம். பிரதமர் மோடிக்கு கருப்பு பலூன் விட்டார், இன்று மோடி சென்னை வந்ததும் வெள்ளைக் குடை பிடித்தார். மக்களுக்கு எதுவும் தெரியாதா? எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒருமாதிரி, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு மாதிரி என்பதை மக்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு. காவல்துறை இருக்கிறதா என்பதே கேள்வி. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட ஆட்சி மீண்டும் வரவேண்டுமா? நல்லாட்சி மலர தே.ஜ.கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். நல்ல கல்வி, உணவு, இருப்பிடம், தடையில்லா மின்சாரம், விவசாயம், நீர், சுகாதாரம் எல்லாம் கிடைக்க வேண்டும், அதெல்லாம் அதிமுக ஆட்சியில் கொடுத்தோம் அதனால் தான் அதிமுக நிலைத்து நிற்கிறது. மீண்டும். அப்படிப்பட்ட ஆட்சி தொடரவேண்டும்.

    பல வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறோம். குடும்பத் தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் கொடுப்போம். உடனே ஸ்டாலின் பயந்துபோய் 5 ஆயிரம் கொடுத்தார். அதிமுக அழுத்தத்தினால் தான் ஸ்டாலின் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். ஆண்களுக்கும் கட்டணமில்லா நகரப் பேருந்து பயணம். ஏழைகள் அனைவருக்கும் வீடு, பட்டியலின மக்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டித்தரப்படும். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும். பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 5 லட்சம் பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். மாணவர் கல்வி கடன் அரசே செலுத்தும். ஆண்டுக்கு குடும்பத்துக்கு 3 கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.

    ஜல்லிக்கட்டு வீரர்கள் மரணம் அடைந்தால் 10 லட்சம் ரூபாய், காயம் அடைந்தால் 2 லட்சம் இன்சூரன்ஸ், காளைகளுக்கு இன்சூரன்ஸ். சிறுபான்மை பெண்கள் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன், மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். பொங்கல் தோறும் வேட்டி, சேலை வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச் சேலை வழங்கப்படும். தரமான பொங்கல் பரிசு வழங்கப்படும்.

    மக்கள் மனம் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு அதிமுக கொடுக்கும். அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணிக் கட்சி நின்றால் அவர்களின் சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் அரசு. பைபை ஸ்டாலின். பத்திரமாக வீடு போய் சேருங்கள்" என்று தெரிவித்தார்.

    • லோகேஷ் தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
    • இவரது திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்தார்

    முன்னாள் சபாநாயகரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விஜயை சந்தித்து தவெகவில் இணைந்தார்.

    லோகேஷ் தமிழ்ச்செல்வன் 2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 3வது இடம் பெற்றிருந்தார்.

    லோகேஷ் தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். தான் பெயர் வைத்தார். இவரது திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எம்.ஜி.ஆரின் இதயக்கனி படம் வெற்றிகரமாக 225வது நாளை எட்டியுள்ளது
    • எடப்பாடி பழனிசாமி ரசிகர்களுடன் இதயக்கனி படம் பார்த்தார்.

    சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் இதயக்கனி படம் வெற்றிகரமாக 225வது நாளை எட்டியுள்ளது.

    ஆல்பர்ட் தியேட்டரில் MGR-ன் இதயக்கனி படத்தின் 225வது நாள் வெற்றி விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரசிகர்களுடன் படம் பார்த்தார்.

    அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜு, வேலுமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் படத்தை பார்த்தனர்.

    படம் பார்த்த பின்பு பேசிய எடப்பாடி பழனிசாமி, "எம்.ஜி.ஆர். பெயரை சொல்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது" என்று தெரிவித்தார்.

    எம்.ஜி.ஆர். குறித்து தவெக தலைவர் விஜய் அண்மையில் அடிக்கடி பேசிவரும் நிலையில், இதயக்கனி பட வெற்றி விழாவில் விஜயை மறைமுகமாக தாக்கி எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

    • எம்.ஜி.ஆரின் இதயக்கனி படம் வெற்றிகரமாக 225வது நாளை எட்டியுள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி ரசிகர்களுடன் இதயக்கனி படம் பார்த்தார்.

    சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் இதயக்கனி படம் வெற்றிகரமாக 225வது நாளை எட்டியுள்ளது.

    ஆல்பர்ட் தியேட்டரில் MGR-ன் இதயக்கனி படத்தின் 225வது நாள் வெற்றி விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரசிகர்களுடன் படம் பார்த்தார்.

    அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜு, வேலுமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் படத்தை பார்த்தனர். 

    • தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார்
    • இவரது மகன் புதுச்சேரியில் புதிய கட்சி தொடங்கியுள்ளார்.

    சமீபத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், தவெகவின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    கடந்த 14 ஆண்டுகளாக ஐ.ஜே.கேவில் இருந்த இவர், தனது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், சில கசப்பான அனுபவங்கள் காரணமாகவும் விலகுவதாக தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. அவரை கட்சிக்குள் இழுக்க முயற்சித்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார் லீமா ரோஸ்.

    மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் திருவாடானை அல்லது கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பரில் இவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரிசயில் "லட்சிய ஜனநாயக கட்சி" என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.

    முன்னதாக கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த போது, அவர் அதிமுகவில் இணைந்துவிட்டதாகப் பரவிய செய்திகளை லீமா ரோஸ் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • தே.மு.தி.க.வை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன
    • சிவராத்திரி விழாவில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதாவும் கலந்து கொண்டார்.

    தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு பரபரப்பாகி கொண்டிருக்கிறது. தங்களின் கூட்டணியை இறுதி செய்வதற்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தீவிரம் காட்டி வருகின்றன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.

    இதனால் அந்தக் கட்சி தி.மு.க. கூட்டணிக்கு செல்லுமா? அல்லது மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் இணையுமா? என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

    ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

    தே.மு.தி.க தொண்டர்கள் மற்றும் மக்கள் விரும்பும் கூட்டணியில் இடம்பெறும் என்று மட்டும் அவர் அறிவித்து இருந்தார்.

    தே.மு.தி.க.வை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் தே.மு.தி.க. இதுவரை பிடி கொடுக்காமல் இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் பிரேமலதா ஒரே மேடையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை.

    இந்த நிலையில் மீண்டும் வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் அதற்குள் கூட்டணி வடிவத்தை இறுதி செய்ய அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.

    தற்போது தே.மு.தி.க.வை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதற்கு கோவையில் நேற்று நடந்த சிவராத்திரி விழா தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கட்சியினர் கூறி வருகிறார்கள்.

    நேற்று கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய இணை மந்திரி எல்.முருகன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். முக்கியமாக இந்த விழாவில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதாவும் கலந்து கொண்டார்.

    மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் முன் வரிசையில் அருகருகே அமர்ந்து இருந்தனர்.

    முன்வரிசையில் இருந்த முக்கிய பிரமுகர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அப்போது எஸ்.பி.வேலுமணி, பிரேமலதாவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

    இருவரும் அருகருகே அமர்ந்து சிவராத்திரி விழாவை பார்த்தனர். அவ்வப்போது இருவரும் பேசிக் கொண்டனர். அந்த சமயம் கூட்டணி தொடர்பாகவும் அவர்கள் கருத்துக்களை பரிமாறி கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பானது அ.தி.மு.க. பா.ஜ.க. தேமு.தி.க. கூட்டணிக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க இடம் பெறுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இன்றும் பிரேமலதா விஜயகாந்த் கோவையில் தான் தங்கி உள்ளார். அவருடன் இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறலாம் என தெரிகிறது.

    மேலும் கோவையில் தங்கி இருக்கும் பிரேமலதா விஜயகாந்த்தை கோவை மற்றும் ஈரோடு, திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியினரை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    மகா சிவராத்திரி விழாவில் ஆண்டுதோறும் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பார். நேற்று பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்தினருடன் சிவராத்திரி விழாவில் பங்கேற்றார். இந்த சந்திப்பு இயல்பாக நடந்தது. இதற்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து ஏற்கனவே பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தபடி தொண்டர்கள் மக்கள் விரும்பும் கூட்டணியை நிச்சயம் அமைப்பார்.

    • அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட 10 தொகுதிகளை கேட்டுள்ளோம்
    • சீட் தராவிட்டால் 51 தொகுதிகளில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவோம்.

    தமிழ்நாட்டில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த கூட்டணியில் அமமுக, அன்புமணி தலைமையிலான பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட 10 தொகுதிகளை கேட்டுள்ளோம் என்று இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், "அதிமுக தலைமையிலான கூட்டணியில் எங்களுக்கு சீட் தராவிட்டால் 51 தொகுதிகளில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவோம். போட்டியிடாத தொகுதிகளில் NDA கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம்" என்று கூறினார்.

    ×