என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "IJK"
- அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்களை இந்திய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர்.
- மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணபிரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலைப்பேட்டை ,மடத்துக்குளம், தாராபுரம் பகுதியை சேர்ந்த மாற்று கட்சியினர் சக்தி பழனிச்சாமி தலைமையில் இன்று இந்திய ஜனநாயக கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் -திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பி.என்.ஆர். பாரி கணபதியை அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்களை இந்திய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர்.
அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் சோனை முத்து, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் கொங்கு வேலுச்சாமி, மாவட்ட துணை தலைவர் முருகேசன், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் கிருபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணபிரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கள்ளக்குறிச்சியில் ஐ.ஜே.கே. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும், ஆன்லைன் ரம்மி, ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில முதன்மை அமைப்பாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பழனிசாமி, மாநில விவசாய அணி செயலாளர் சபா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும், ஆன்லைன் ரம்மி, ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது நூதன முறையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இருந்தது. தொடர்ந்து நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். இதில் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ஜெகநாதன், விழுப்புரம் மாவட்ட தலைவர் செந்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ், மாவட்ட துணைத்தலைவர் கணேசன்உள்ளிட்ட நிர்வாகிகள்மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.
பெரம்பலூர் தொகுதியில் 13,91,011 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 10,94,659 வாக்குகள் பதிவானது.
இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதி 2,80,179 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாந்தி 53,545, அமமுக வேட்பாளர் ராஜசேகரன் 45,591 வாக்குகள் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.
இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் 12 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 4,14,769 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதி 1,73,953 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-
ஐ.ஜே.கே.யை பொறுத்தவரை எப்போதுமே பா.ஜனதாவுக்கும், மோடிக்கும் விருப்பமான நிலையிலேயே சென்று கொண்டிருக்கிறோம். 2014-ம் ஆண்டு தாமரை சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த முறை நாங்கள் அவர்களோடு தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறோம் என்று பல நேரங்களில் சொல்லி இருக்கிறேன்.
ஆனால் இன்னும் பா.ஜனதா தலைமையிடம் இருந்து எங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை.
1 மாதத்துக்கு முன்பாக பியூஸ்கோயல் என்னை டெல்லிக்கு அனைத்து பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பேசினார். அப்போது நமது கூட்டணி தொடர்கிறது என்று அவருக்கு சொன்னேன். என்னிடம் எந்த தொகுதி என்றும் கேட்டார். அதை அவருக்கு குறித்தும் கொடுத்திருக்கிறேன். அதன்பிறகு எங்களுக்கு எந்த தகவலும் இல்லை.
திருச்சியில் நான் கமல்ஹாசனுடன் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நான் தங்கியிருந்த ஓட்டலில் அவர் தங்கினார். அப்போது என்னை பார்த்தார். நம் இருவருக்கும் ஒரே கொள்கையாக இருக்கிறது என்பதால் நாம் ஏன் இணைந்து செயல்படக்கூடாது என்று கேட்டார். செயல்படலாமே என்று சொன்னேன். அதைத் தொடர்ந்து மீண்டும் பேசலாம் என்று சொன்னார். பேசினோம். அது அந்த நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறது.

3-வது அணி அமைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. பா.ஜனதா எனக்கு சரியான முடிவு சொல்லாவிட்டால் 3-வது அணியில் நான் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Parivendhar
இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனர் பச்சமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-
தோழமை கட்சியான பா.ஜ.க.வுடன் இன்றும் தோழமையுடன் இருந்து வருகிறோம். ஆனால் கூட்டணியில் இருந்து விலகி சென்ற கட்சிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோருடனான நட்பு மட்டும் இருந்து அரசியல் செய்ய முடியாது. தமிழகத்தில் உரிய மரியாதை வழங்கப்படவேண்டும். தமிழக பா.ஜ.க.வானது எங்களை அலட்சியப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் கேட்கும் தொகுதிகள், எண்ணிக்கையில் இடங்கள் வழங்கினால் மட்டுமே தோழமையுடன் தொடருவதா? என்பது குறித்து பரிசீலிப்போம். இல்லாவிட்டால் தனித்து போட்டியிடுவோம். தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலோ, டி.டி.வி.தினகரன் தலைமையிலான கூட்டணியிலோ இடம்பெற மாட்டோம்.
8 ஆண்டுகளில் எங்களது கட்சி நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. எங்கள் கட்சியின் கொள்கைகள் அனைத்தும் சிறந்தவை. எனவே மெதுவாகவே அவை மக்களிடம் சேரும். அரசியலில் இருந்து சம்பாதித்து மக்களுக்கு வழங்கும் கட்சியில்லை இது. சொந்த தொழிலில் இருந்து வரும் வருவாயில் மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி.
கஜா புயல், தானே புயல் தருணங்களில் பாதிப்பு பகுதிகளை சேர்ந்த எஸ்.ஆர்.எம். குழும மாணவர்களின் கல்வி கட்டணத்தில் ரூ.55.5 கோடி விலக்கு அளித்துள்ளோம். ரூ.1 கோடியில் நிவாரண உதவி வழங்கியுள்ளோம். 1 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கி வருகிறோம். தொடர் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம்.
புயல் பாதித்த பகுதிகளில் மரங்களை அப்புறப்படுத்தவும், அவற்றை தூள்களாக்கி எருவாக மாற்றி விற்கவும் தேவையான எந்திர உதவிகளை வழங்கியுள்ளோம். மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
வாக்குகளுக்கு தரப்படும் பணத்தை வாங்க வேண்டாம்? என 30 மாணவர்கள் கொண்ட குழு மூலம் சென்னை தொடங்கி குமரி வரை விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறோம். மேற்கு வங்க மாநில முதல்வரை போல செயல்பட்டால் ஒவ்வொரு மாநிலமும் தனி நாடாக மாற வேண்டியதுதான். சி.பி.ஐ. உள்ளிட்ட அந்தந்த அமைப்புகளுக்குரிய பொறுப்பை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும்.
ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களது மறைவுக்கு பிறகு தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக கூறுவதை ஏற்க முடி யாது. வேறு தலைவர்கள் வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டும். நதிகள் இணைக்கப்பட வேண்டும். மக்களவை தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க நிறுவனர் பச்சமுத்துவுக்கு அதிகாரம் அளிப்பது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, மாநில பொதுச்செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் ராஜன், கொள்கை பரப்பு செயலாளர் ராஜேந்திரன், மாநில இளைஞரணி செயலாளர் வரதராஜன், வெங்கடேசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். #IJK #Pachamuthu
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
