search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramdas Athawale"

    • எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
    • 26 கட்சிகள் பங்கேற்ற எதிர்க்கட்சிகளின் அணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்தன.

    26 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் அணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது. மேலும், தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவற்றை வகுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் ஆகஸ்டு மாதம் 25 மற்றும் 26-ம் தேதிகளில் மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பீகார் முதல் மந்திரியான நிதிஷ்குமார் எப்போது வேண்டுமானாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பி வருவார்.

    தற்போதைய சூழ்நிலையில் நிதிஷ்குமார் மகிழ்ச்சியாக காணப்படவில்லை. எதிர்க்கட்சி கூட்டணிகள் அடுத்த கூட்டம் நடைபெறும் மும்பைக்கு அவர் நிச்சயம் செல்ல மாட்டார் என தெரிவித்தார்.

    • மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடி உரையாற்றும் போது பொது சிவில் சட்டம் கொண்டு வருவதன் அவசியம் குறித்து பேசினார்.
    • பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கோ பழங்குடி சமூகங்களின் நலன்களுக்கோ எந்த தீங்கும் விளைவிக்காது.

    அகமதாபாத்:

    இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக இந்தியாவின் 22வது சட்ட ஆணையம் கடந்த மாதம் 14ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் பொது சிவில் சட்டம் பற்றிய பெரிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளின் பார்வைகள் மற்றும் யோசனைகளை கோரியிருந்தது. 

    இந்நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி, மத்திய பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது பொது சிவில் சட்டம் கொண்டு வருவதன் அவசியம் குறித்து பேசினார். இதையடுத்து பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு தலைவர்களும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், தலித்துகள் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான பல்வேறு திட்டங்களையும் அவை செயல்படுத்தப்படும் நிலை குறித்தும் குஜராத் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாட மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அகமதாபாத் வந்திருந்தார்.

    அப்பொழுது அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:

    பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கோ பழங்குடி சமூகங்களின் நலன்களுக்கோ எந்த தீங்கும் விளைவிக்காது. நமது அரசியலமைப்பின் சிற்பி அம்பேத்கர் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக, 'மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த இது அவசியம்' என்று கூறியிருந்தார்.

    பாஜகவும், அதன் அரசும் அரசியல் சட்டத்தை மாற்றப்போவதாக காங்கிரஸ் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறது. பொது சிவில் சட்டம் உங்களுக்கு எதிரானது அல்ல என்பதை இஸ்லாமியர்களுக்கு நான் கூற விரும்புகிறேன். இதில் அரசியல் செய்வதற்குப் பதிலாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இதனை கொண்டு வருவது மிகவும் முக்கியம். பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமியர்களின் விரோதியோ அல்லது தலித்களின் விரோதியோ அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய குடியரசு கட்சியின் முப்பெரும் விழா வருகிற 2-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
    • இந்திய குடியரசு கட்சியின் முப்பெரும் விழாவில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பங்கேற்கிறார்.

    சென்னை:

    இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) முப்பெரும் விழா வருகிற 2-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பங்கேற்கிறார்.

    கட்சியின் மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.சூசை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். தலைமை நிலைய செயலாளர் மனோகரன் இதனை தெரிவித்துள்ளார்.

    பாஜக-அதிமுக கூட்டணி அமையும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறியிருப்பது, பாஜகவின் கருத்து அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். #LSPolls #Jayakumar #RamdasAthawale
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், கடந்த சில தினங்களாக அதற்கு எதிர்மாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன. சில நாட்களுக்கு முன்பு அதிமுக எம்பியும் மக்களவைத் துணை சபாநாயகருமான தம்பிதுரை, செய்தியாளர்களை சந்தித்தபோது, பாஜகவுடன் கூட்டணி குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என கூறினார்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு நேற்று ஆஜரான தம்பிதுரை, பாஜகவை விமர்சித்தார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது என்றும் பாஜக தலைவர்கள் தமிழக அரசை விமர்சிக்கும்போது மவுனமாக இருக்க முடியாது என்றும் கூறினார்.



    இது ஒருபுறமிருக்க, பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கூறும்போது, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி அமைய வேண்டும் என்றார்.

    இந்த நிலையில், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி தொடர்பாக மத்திய மந்திரி அத்வாலே மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரின் கருத்துக்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து ஜெயக்குமார் கூறியதாவது:-

    அனைத்துக்கும் அதிமுக ஜால்ரா அடிக்காது, அன்னப்பறவை போல் பிரித்து பார்க்கும். எதிர்க்க வேண்டியதை எதிர்க்கும், ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்கும்.

    மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பாஜகவைச் சேர்ந்தவர் அல்ல; பாஜக கூட்டணியில் உள்ளவர். எனவே, கூட்டணி தொடர்பாக, தனிப்பட்ட முறையில்தான் அத்வாலே கருத்து கூறியுள்ளார்; அது பாஜக தலைமையின் கருத்து அல்ல.

    பாஜவை விமர்சிக்கும் தம்பிதுரையின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே; அது அதிமுகவின் கருத்து அல்ல. தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும்.

    தமிழகத்திற்கு நல்லது செய்பவர்களுடன் தான் அதிமுக கூட்டணி அமைக்கும். தற்போதைக்கு யாருடனும் கூட்டணி இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Jayakumar #RamdasAthawale
    மோடி அளித்திருந்த தேர்தல் வாக்குறுதியின்படி இந்திய மக்கள் அனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் 15 லட்சம் ரூபாய் வந்து சேரும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே குறிப்பிட்டுள்ளார். #RamdasAthawale
    மும்பை:

    இந்திய குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    மகாராஷ்டிரா மாநிலம், சங்லி மாவட்டம், இஸ்லாம்பூர் பகுதியில் இந்திய குடியரசு கட்சியின் மாநில செயலாளரின் உறவினர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுவதற்காக ராமதாஸ் அத்வாலே இன்று இங்கு வந்திருந்தார்.

    அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் 3 மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட செல்வாக்கு சரிவு தொடர்பாக கூட்டணி கட்சிகள் கவலை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை முன்வைத்து பா.ஜ.க. கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என குறிப்பிட்ட்ட அவர் பா.ஜ.க.வுடன் சிவசேனா மீண்டும் கைகோர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது இந்தியர்கள் அனைவரின் வங்கி கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால், மத்திய (ரிசர்வ்) வங்கியில் அவ்வளவு தொகை இல்லாததால்தான் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.



    வெகு விரைவாக குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் அனைவரின் வங்கி கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என நம்புகிறேன் என இன்றைய பேட்டியின்போது ராமதாஸ் அத்வாலே குறிப்பிட்டார்.

    இதே மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ராம்தாஸ் அத்வாலேவை பிரவீன் கோசுவாமி என்பவர் கன்னத்தில் அறைய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். #15lakh #15lakhinbankaccounts #RamdasAthawale
    மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். #RamdasAthawale #Petrol #Diesel #GST
    சண்டிகார்:

    மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே சண்டிகாரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனினும் இதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறோம்.



    ஜி.எஸ்.டி. வரம்பில் பெட்ரோல், டீசலை கொண்டு வருவதன் மூலம் ரூ.20 முதல் ரூ.30 வரை விலை குறையும். இது நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாநில அரசுகளும் பெட்ரோல், டீசலுக்கான தங்கள் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது.

    ரபேல் விவகாரத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பொய் பிரசாரம் செய்து வருகிறார்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும். பா.ஜனதா கட்சி மட்டுமே 300-க்கும் அதிகமான இடங்களை பிடிக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்களே கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #RamdasAthawale #Petrol #Diesel #GST 
    எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தனது பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி ராமதாஸ் அதவாலே தெரிவித்துள்ளார். #RamdasAthawale #MeToo #MJAkbar
    புதுடெல்லி :

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அவ்வகையில், மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பரும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். அவர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர்.

    மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் பத்திரிகையாளராக இருந்தபோது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சில பெண்கள் புகார் செய்தனர். ‘இது பொய்யானது, கற்பனையானது’ என அவர் மறுத்துள்ளார். புகார் பற்றி மத்திய மந்திரி ராமதாஸ் அதவாலேவிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:-



    பெண்களை துன்புறுத்தும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் நானா படேகர், எம்.ஜே.அக்பர் போன்று பிரபலமானவர்களாக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்பர் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், ‘மீ டூ’ சிலரை பொய் புகாரில் சிக்கவைக்கும் தலமாக மாறிவிட வாய்ப்பு உள்ளது என்பது எனது கருத்து. அதுபோன்ற புகார்கள் குறித்து போலீசார் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு ராமதாஸ் அதவாலே கூறினார். #RamdasAthawale #MeToo #MJAkbar
    நான் ஒரு மந்திரி, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பு இல்லை என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே வருத்தம் தெரிவித்தார். #FuelPriceHike #RamdasAthawale
    மும்பை:

    நாடு முழுவதும் தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல். டீசல் விலை குறித்து மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே, ‘நான் ஒரு மந்திரி. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பு இல்லை. மந்திரி பதவியை இழந்தால் நான் விலைஉயர்வால் பாதிக்கப்படலாம்’ என்று நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். மந்திரியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து ராம்தாஸ் அதவாலே நேற்று வருத்தம் தெரிவித்தார். இதுதொடர்பாக மும்பையில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘பெட்ரோல், டீசல் விலைஉயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை நான் அறிவேன். சாமானிய மக்களை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை’ என்று கூறியுள்ளார்.  #RamdasAthawale #UnionMinister
    அ.தி.மு.க, பா.ஜனதா கட்சிகள் இடையே நல்லுறவு நிலவி வருவதால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. இணையும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறினார். #RamdasAthawale #ParliamentaryElection
    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ‘‘வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது ஆட்சியை தக்க வைக்கும். பிரதமர் மோடி சிறப்பான ஆட்சி நடத்துகிறார். ஏழை- எளிய மற்றும் நடுத்தர மக்களின் நல்வாழ்வுக்கு பல சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.



    இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரையும் மோடி அரவணைத்து செல்கிறார். எனவே மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் அமையும். வரும் பாராளுமன்ற தேர்தல் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் மட்டுமே தேர்தல் களத்தில் இடம்பெற போகிறது.

    ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. நாடு முழுவதும் 80 இடங்களை பிடிப்பது சிரமம். காங்கிரஸ் கட்சி மீண்டும் எதிர்க்கட்சியாக தான் அமரும்.

    தமிழகத்தை பொறுத்த வரை ஏற்கனவே முதல்-அமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்தனர். மத்திய அரசு மக்களுக்கு தரும் நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

    அதே போலதான் தமிழகத்தில் ஆளும் தற்போதைய அ.தி.மு.க. அரசும் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசுடன் இணக்கமாக உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற மேல்-சபை துணை தலைவர் தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தது. அதேபோன்று நாங்களும் பாராளுமன்ற துணை சபா நாயகர் தம்பிதுரைக்கு (அ.தி.மு.க.) தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறோம்.

    அ.தி.மு.க-பா.ஜனதா கட்சிகள் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. எனவே வரும் தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. சேரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RamdasAthawale #ParliamentaryElection
    ×