என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் மோடி"

    • பிரதமர் எப்போது அனைத்துக் கட்சி கூட்டத்திற்குத் தலைமை தாங்கி தலைவர்களைச் சந்திப்பார்?
    • பஹல்காம் பயங்கரவாதிகள் இன்னும் சுதந்திரமாக உள்ளனர். அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ஜெய்ராம் ரமேஷ் தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமர் மோடி 32 நாடுகளுக்குச் சென்ற இந்த 7 பிரதிநிதிகளின் உறுப்பினர்களாக இருந்த 50 எம்.பி.க்களையும் சந்தித்தது இயல்பானது. எங்களைப் பொறுத்தவரை அது ஆச்சரியமல்ல. ஆனால் எங்களிடம் 4 எளிய கேள்விகள் மட்டுமே உள்ளன. இந்தக் கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

    கேள்வி எண் ஒன்று: பிரதமர் எப்போது அனைத்துக் கட்சி கூட்டத்திற்குத் தலைமை தாங்கி தலைவர்களைச் சந்திப்பார்? பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எழுந்துள்ள உள் மற்றும் வெளிப்புற பாதுகாப்பு சவால்கள் குறித்து விளக்குவாரா?

    இரண்டாவது கேள்வி: கார்கில் போருக்குப் பிறகு எங்களிடம் ஒரு கார்கில் மறு ஆய்வுக் குழு இருந்தது. குறிப்பாக சிங்கப்பூரில் CDS வெளிப்பாடுகளுக்குப் பிறகு இதேபோன்ற பயிற்சி இருக்குமா? மறு ஆய்வு இருக்குமா? பகுப்பாய்வு இருக்குமா? எனவே ஒரு அறிக்கை இருக்குமா? அது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமா?

    மூன்றாவது கேள்வி: மழைக்கால கூட்டத்தொடரின்போது உள்நாட்டு மற்றும் வெளிப்புற பாதுகாப்பு சவால்கள், நாம் எதிர்கொள்ள வேண்டிய புதிய வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், ஜனாதிபதி டிரம்பின் தொடர்ச்சியான கூற்றுகளால் ஏற்படும் சவால்கள் குறித்து 2 முழு நாள் விவாதத்துக்கு பிரதமர் அனுமதி அளிப்பாரா?

    நான்காவது கேள்வி: இந்த மிருகத்தனமான தாக்குதலை நடத்திய பஹல்காம் பயங்கரவாதிகள் இன்னும் சுதந்திரமாக உள்ளனர். அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. டிசம்பர் 23-ல் பூஞ்ச் தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றனர். அக்டோபர் 24-ல் ககாங்கிருக்கு அவர்கள் பொறுப்பேற்றனர். அக்டோபர் 24-ல் குல்மார்க்கில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். இவை அனைத்தும் மறுக்கப்படாத செய்திகள். எனவே, இந்த பஹல்காம் பயங்கரவாதிகள் எப்போது நீதியின்முன் நிறுத்தப்படுவார்கள்?

    பிரதமர் எம்.பி.க்களைச் சந்திப்பது சரி. அது அவரது தனிச்சிறப்பு. ஆனால் அவர் எப்போது அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கப் போகிறார்? வரவிருக்கும் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் இரு நாள் விவாதத்தை எப்போது அறிவிக்கப் போகிறார்? என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

    • கேலோ இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
    • அப்போது பேசிய அவர், பீகார் மண்ணின் மகன் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடினார் என்றார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நான் ஐ.பி.எல். தொடர் பார்த்தேன். பீகார் மண்ணின் மகன் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடினார். இந்த இளம் வயதில் அவர் பெரிய சாதனையை படைத்துள்ளார்.

    இந்த சாதனையின் பின்னணியில் அவரது கடின உழைப்பு உள்ளது. அவர் தனது திறமையை வெளிக்கொண்டு வர பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    நீங்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் பிரகாசிப்பீர்கள். முடிந்தவரை விளையாட்டு போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எப்போதும் விளையாட்டுத் துறைக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

    புதிய கல்வி கொள்கையான தேசிய கல்வி கொள்கையில் விளையாட்டை கல்வியின் ஒரு பகுதியாக மாற்றி உள்ளோம். நாட்டில் நல்ல வீரர்களுடன் சிறந்த விளையாட்டு நிபுணர்களை உருவாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என தெரிவித்தார்.

    பீகாரின் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஐ.பி.எல். தொடரில் விளையாடும் இளம் வீரர் என்ற பெருமையை சூர்யவன்ஷி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர், பூடான் ஆகிய நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.
    • பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் சந்தித்துப் பேசுவது வழக்கம்.

    புதுடெல்லி:

    தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒருங்கிணைந்து பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றன.

    இந்தக் கூட்டமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர், பூடான் ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. வங்கக்கடலைச் சார்ந்துள்ள இந்த நாடுகள் அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது 7 நாடுகளுக்கு இடையே வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, பயங்கரவாத தடுப்பு, சுகாதாரம் உள்பட 14 விஷயங்களில் இணைந்து செயல்பட ஆய்வு செய்யப்படும்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாடு தாய்லாந்து நாட்டில் ஏப்ரல் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தாய்லாந்து அரசு செய்து வருகிறது.

    இந்நிலையில், பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை மறுதினம் தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

    இந்த மாநாட்டில் அவர் வங்கதேசம், இலங்கை நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழக வெற்றிக் கழக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
    • மாநில அரசு சொல்லும் அதே கருத்துகளை விஜய் பிரதிபலித்திருப்பது தான் மேலும் வேடிக்கை என்றார்.

    சென்னை:

    பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழக வெற்றிக் கழக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசை விமர்சித்து விஜய் பேசியது வினோதமாகவும், வேடிக்கையாகவும் இருந்தன.

    பிரதமருக்கு தமிழகம் என்றால் அலர்ஜி, தமிழக ஜி.எஸ்.டி. வருவாயை வாங்கிக் கொண்டு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதியே ஒதுக்குவதில்லை, இருமொழிக் கொள்கையில் உறுதி, வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறவேண்டும், தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்று மாநில அரசு சொல்லும் அதே கருத்துகளை விஜய் பிரதிபலித்திருப்பது தான் மேலும் வேடிக்கை.

    ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேசுவதாக எண்ணி, மத்தியிலே நடந்துகொண்டிருக்கின்ற சிறந்த ஆட்சியை, ஒரு இந்திய குடிமகனாக பாரதத்தை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் பாரத தலைவரை, உலகம் போற்றுகின்ற ஒரு சாதனை மனிதரை, சாதாரண மனிதராக எண்ணிக் கொண்டு கேலியாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    இனி வருங்காலங்களில் இவை அனைத்தும் தவிர்த்து அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து உண்மையான கருத்துகளைப் பேசி ஆக்கப்பூர்வமான, நாகரிகமான அரசியலில் விஜய் ஈடுபடுவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்.
    • நான் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக பீகாரில் பிரசாரம் செய்வேன் என்றார்.

    பாட்னா:

    இந்திய குடியரசுக் கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே பீகார் மாநிலத்தின் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று முதல் மந்திரி நிதிஷ்குமாரைச் சந்தித்தார். அதன்பின், செய்தியாளர் சந்திப்பில் ராம்தாஸ் அதவாலே பேசியதாவது:

    ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். நிதிஷ்ஜி ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலுஜியை விட நிச்சயமாக ஆரோக்கியமானவர். நான் இருவருடனும் நண்பர்களாக இருந்திருக்கிறேன்.

    நிதிஷ்ஜி இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு இருப்பார் என நினைக்கிறேன். பீகாரில் எனது கட்சி வலுவாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நான் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக பிரசாரம் செய்வேன்.

    பிரதமர் நரேந்திர மோடி ஜவகர்லால் நேருவின் சாதனையை முறியடித்து, தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வார்.

    ஊழல் இல்லாத அரசாங்கத்தை நடத்தி வரும் நரேந்திர மோடி தலைமையிலான குழுவில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

    அவரது ஆட்சிக் காலத்தில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கான பாதையில் இருக்கிறோம்.

    தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு திரும்பியதன் மூலம் மோடி ஏற்கனவே நேருவின் சாதனையை சமன் செய்துள்ளார். அவர் நேருவின் சாதனையை முறியடித்து நான்காவது முறையாக ஆட்சியை அனுபவிப்பார் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் நீண்ட கால படிப்புக்கு பிந்தைய விசா வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகம் உலகின் பழமையான மொழி தமிழ்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டில் இன்று தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் படி பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்தார். அதன் பேரில் பிரதமர் மோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார்.

    தலைநகர் பாரீஸ் சென்ற பிரதமர் மோடியை பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார். ஏராளமான இந்திய வம்சாவளியினரும் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து பாரீசில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    வெளிநாட்டில் பாரத் மாதா கீ ஜே என்கிற முழக்கத்தை கேட்கும் போது நான் சொந்த மண்ணில் நிற்பது போல் உணர்கிறேன். நான் பல முறை பிரான்ஸ் வந்துள்ளேன். ஆனால் இந்த முறை எனது வருகை சிறப்பானது. இன்று பிரான்சின் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. பிரான்ஸ் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை அழைத்த பிரான்ஸ் மக்களுக்கு நன்றி. இது இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையிலான பிரிக்க முடியாத நட்புறவின் பிரதிபலிப்பாகும்.

    இன்று உலகம் புதிய பாதையை நோக்கி நகர்கிறது. இதில் இந்தியாவின் பங்கும் கூட மிக வேகமாக மாறி வருகிறது. இந்தியா தற்போது ஜி 20 கூட்டமைப்பின் தலைமையை ஏற்றுள்ளது. இந்தியாவின் சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் பணி தொடங்கி இருக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரலாற்று சிறப்பு மிக்க சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்த இருக்கிறோம்.

    பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் அல்லது பயங்கரவாத எதிர்ப்பு என எதுவாக இருந்தாலும் உலகம் இந்தியாவையே உற்றுப்பார்க்கிறது. எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நாம் நழுவ விட மாட்டோம். ஒவ்வொரு நேரத்தையும் வீணாக விட மாட்டோம் என்று இந்தியா தீர்மானித்துள்ளது.

    எனது ஒவ்வொரு நொடியும் நமது நாட்டு மக்களுக்கானது என தீர்மானித்துள்ளேன். அடுத்த 25 ஆண்டுகளில் ஒரு வளர்ந்த நாடாக மாறும் நோக்கில் இந்தியா செயல்படுகிறது. இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான இடம் இருக்கிறது என்று சர்வதேச நிறுவனங்கள் கூறுகின்றன. இந்தியாவில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

    பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் நீண்ட கால படிப்புக்கு பிந்தைய விசா வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியர்கள் இனி பிரான்சில் யு.பி.ஐ. பேமெண்ட் முறையை பயன்படுத்த இந்தியாவும், பிரான்சும் ஒப்புக்கொண்டு உள்ளன. இனி ஈபிள் கோபுரத்தில் இருந்து இந்திய சுற்றுலாப்பயணிகள் இந்திய ரூபாய்களில் கட்டணங்களை செலுத்த முடியும்.

    ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் 10 முதல் 15 ஆண்டுகளில் 42 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்து மேலே கொண்டு வரப்பட்டு உள்ளனர் என கூறி இருக்கிறது. இந்த எண்ணிக்கை ஐரோப்பியாவின் மக்கள் தெகையை விட அதிகமாகும்.

    அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகம் உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் மிகப்பழமையான மொழி இந்திய மொழி என்பதில் மிகப்பெரிய பெருமை எனக்கு உண்டு.

    பிரான்ஸ் நாட்டில் இந்தியாவின் சார்பில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும். பிரான்சில் திருவள்ளுவர் சிலையை அமைப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை.

    100 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சுக்கான யுத்தத்தில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். பிரெஞ்சு மண்ணில் நிகழ்ந்த யுத்தத்தில் பங்கேற்று பிரெஞ்சு மண்ணில் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இங்கு நடந்த போரில் பங்கேற்ற படைப்பிரிவுகளில் ஒன்றான பஞ்சாப் ரெஜிமென்ட் பிரான்சின் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்ததும் அங்கு இருந்து இந்திய வம்சாவளியினர் பலத்த கரவொலி எழுப்பினார்கள்.

    பிரதமர் மோடி அறிவித்துள்ள திருவள்ளுவர் சிலையை புதுவையைச் சேர்ந்த சிற்ப கலைஞர் முனுசாமி வடிவமைத்து உள்ளார். இந்த சிலை வெண்கலத்தில் 7 அடி உயரத்தில் 600 கிலோ எடை யில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருவள்ளுவர் சிலை பிரான்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.

    பிரான்சில் உள்ள தமிழ் கலாசார மன்றம், பிரான்ஸ் அரசு அனுமதியுடன் பாரீஸ் அருகே செர்ஜி நகரத்தில் உள்ள மைய பூங்கா வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி இன்று பார்வையிட உள்ளார்.

    பாரீசில் இன்று பிரமாண்ட தேசிய தினவிழா நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார், அவர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் சேர்ந்து அணி வகுப்பினை பார்வையிடுகின்றனர்.

    இந்த அணிவகுப்பில் இந்திய முப்படைகளை சேர்ந்த 269 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்களும் பிரான்ஸ் விமாப்படையுடன் இணைந்து சாகசங்களில் ஈடுபட உள்ளன. இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலும் இந்த தேசிய தின விழா அணிவகுப்பில் பங்கேற்கின்றன.

    இந்த நிகழ்ந்சி முடிந்ததும் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பாதுகாப்பு, கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கின்றனர்.

    மேலும் பிரான்சிடம் இருந்து இந்திய கடற்படைக்காக 26 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் மும்பை மலே கான் கப்பல் கட்டும் தளத்தில் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிறது.

    • தி.மு.க. அரசு தொடர்ந்து மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றி வருகிறது.
    • தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு புதூர் பகுதியில் இருந்து பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நடைபயணத்தை நேற்று தொடங்கினார். தொடர்ந்து, அவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஒரத்தநாடு அண்ணாசிலை பகுதிக்கு வந்தடைந்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தி.மு.க. அரசு தொடர்ந்து மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றி வருகிறது. காவேரி பிரச்சினைகளை முந்தைய காலங்களில் தி.மு.க. அரசு சரிவர கையாளத காரணத்தினால் தான் கர்நாடகா தொடர்ந்து அணைகளை கட்டி விட்டது. இதனால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    தி.மு.க. அரசு தேர்தலின் போது அறிவித்த எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றாமல் மாறாக 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி ஏமாற்றுகிறார்.

    மீத்தேன் எரிவாயு

    மீத்தேன் எரிவாயு

    பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகள் மீதும், தமிழகத்தின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். காவேரி பிரச்சினை, மீத்தேன் எரிவாயு போன்றவற்றில் தமிழக விவசாயிகளின் நலன் சார்ந்த விவசாய கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், நெல்லுக்கான விலையை உயர்த்தி விவசாயிகளுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து நடை முறைப்படுத்தி வருகிறார்.

    எனவே, வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பின் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நடைபயணம் மேற்கொண்டார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக தொண்டர்களுடன் இணைந்து மக்களை பார்த்து கை அசைத்தபடி நடைபயணமாக சென்றார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், தனது பிரசார வாகனத்தில் நின்றபடி அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறுகையில்:-

    மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா, தனது சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் 3 ஆயிரம் ஏக்கரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை.

    பா.ஜனதாவை பொறுத்தவரை கடந்த மார்ச் 29-ந்தேதி ஒட்டு மொத்தமாக 8 மண்டலங்களில் நிலக்கரி திட்டம் அறிவிக்கப்பட்டது. அதில் டெல்டாவும் சேர்க்கப்பட்ட நிலையில், இப்பகுதி பா.ஜனதா நிர்வாகிகள் வேண்டுகோளின்படி, நான் நேரடியாக நிலக்கரித்துறை மந்திரியை சந்தித்து அந்த திட்டத்தை டெல்டாவில் நிறைவேற்றுவதில் இருந்து விலக்கு பெற்று அரசாணை வெளியிட வைத்தோம்.

    தஞ்சாவூரில் விமான போக்குவரத்து தொடங்க பா.ஜனதா சார்பில் விமான போக்குவரத்து துறை மந்திரியை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம். காவிரி மேலாண்மை வாரியம், விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி தான் உண்மையான டெல்டாகாரர்.

    இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

    • ஒரு குடும்ப நலனுக்காக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.
    • இரண்டு திராவிட கட்சிகளும் ஊழலுக்கு இலக்கணமாக தங்கள் தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கின்றன.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் ஜனநாயகம் எப்படி இருக்க கூடாதோ அப்படியெல்லாம் தான் இருக்கிறது. ஊழல், குடும்ப ஆட்சியில் திளைத்து, ஒரு குடும்ப நலனுக்காக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.

    தமிழக அரசாங்கம் கடந்த 33 மாதங்களாக கதை, திரைக்கதை, வசனமாக நடக்கிறதே தவிர மக்களுக்கான அரசியலாக இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முறை வெளிநாட்டு பயணம் சென்றும் ஒரு ரூபாய்கூட முதலீடு வரவில்லை.

    உத்தரபிரதேசம் ரூ.33 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ள நிலையில் தமிழகம் ரூ.6.60 லட்சம் கோடியை பெற்றுள்ளதாக கூறுகிறது. அதிலும் முதலீடு வந்து சேரவில்லை.


    நிதி நிலை அறிக்கையில் மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி வைத்துள்ளார்கள். தேர்தல் அறிக்கையில் 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை என்று கூறிவிட்டு நிதி நிலை அறிக்கையில் 60 ஆயிரம் பேருக்கு அரசு வேலை கொடுத்துள்ளதாக கூறி உள்ளார்கள்.

    இரண்டு திராவிட கட்சிகளும் ஊழலுக்கு இலக்கணமாக தங்கள் தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கின்றன.

    பா.ஜனதா கட்சியின் வளர்ச்சியை கண்டு பயந்து இரண்டு பங்காளி கட்சிகளும் (தி.மு.க.-அ.தி.மு.க.) ரகசிய கூட்டணி வைத்து உள்ளன.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு, ஊழல், பித்தலாட்டம் நடந்துள்ளது.
    • குஜராத் மாநிலத்திலும் நீட் தேர்வில் ரூ.3 கோடி வரை லஞ்சம் பெற்று ஊழல் செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரியும், நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடுகளை கண்டித்தும் புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு, ஊழல், பித்தலாட்டம் நடந்துள்ளது. பீகாரில் நீட் தேர்வு கேள்வி தாள்களை கசியவிட்டு ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளனர். குஜராத் மாநிலத்திலும் நீட் தேர்வில் ரூ.3 கோடி வரை லஞ்சம் பெற்று ஊழல் செய்துள்ளனர். இப்படி நீட் தேர்வில் பலதரப்பட்ட ஊழல் நடந்துள்ளது. நீட் தேர்வு முகமை தான் இந்த ஊழல்களுக்கு முக்கிய காரணம்.

    நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இது சம்மந்தமான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீட் தேர்வு முறைகேடு சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    பிரதமர் மோடி ஆட்சியில் எந்த தேர்வும் முறையாக நடைபெறவில்லை. எல்லாவற்றிலும் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே சம்பந்தப் பட்டவர்களுக்கு கிடைக்கிறது. மோடி ஆட்சியில், ஒட்டுமொத்தமாக அரசு நடத்தும் தேர்வுகள் மோசமாக கையாளப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடுகள் நடந்தது இல்லை. மோடி ஆட்சியில் சர்வசாதாரணமாக முறைகேடுகள் நடக்கிறது. பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் இது சகஜமாக நடக்கிறது. ஆகையால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் வலுவாக வந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பால், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் உற்பத்தியில் உலகில் இந்தியா நம்பர் ஒன் நாடாக உள்ளது.
    • உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், காட்டன், சர்க்கரை, டீ உற்பத்தியில் மிகப்பெரிய 2-வது நாடாக உள்ளது.

    இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாய நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். அப்போது இந்தியா உணவு உபரி நாடாகிவிட்டது எனத் தெரிவித்தார்.

    பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

    இந்தியாவின் பொருளாதார கொள்கைகளின் மையமாக விவசாயம் உள்ளது. யூனியன் பட்ஜெட் 2024-25 நிலையான மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிக்கக் கூடிய விவசாயத்திற்கு ஒரு பெரிய உந்துதலை அளித்துள்ளது. இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறது.

    தற்போது இந்தியா உணவு தன்னிறைவு பெற்ற நாடாகிவிட்டது. பால், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் உற்பத்தியில் உலகில் இந்தியா நம்பர் ஒன் நாடாக உள்ளது. உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், காட்டன், சர்க்கரை, டீ உற்பத்தியில் மிகப்பெரிய 2-வது நாடாக உள்ளது.

    இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு உலக நாடுகளுக்கு கவலையளிக்கும் ஒரு காலம் இருந்தது. தற்போது இந்தியா உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டசத்து பாதுகாப்பில் உலகளாவிய தீர்வு வழங்க பணியாற்றி கொண்டிருக்கிறது.

    இந்திய விவசாயத்தில் 90 சதவீத விவசாயிகள் மிகவும் சிறிய அளவிலான நிலத்திற்கு சொந்தக்காரர்கள். இந்த சிறிய விவசாயிகள் இந்தியாவின் உணவு பாதுகாப்பிற்கு மிகப்பெரிய பலம்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி 5வது முறையாக வென்றது.
    • கோப்பை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்தது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    இதில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை சாய்த்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    மற்றொரு அரையிறுதியில் சீனா 2-0 என்ற கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாகிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.

    இதற்கிடையே, நேற்று மாலை நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா, சீனா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி. ஜுக்ராஜ் சிங் ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

    பதில் கோல் அடிக்க சீனா தொடர்ந்து முயற்சித்தும் அதில் பலனில்லை. இதனால் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

    அணியினரின் குறிப்பிடத்தக்க செயல்பாடு, ஈடு இணையற்ற மனவுறுதி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

    • அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • தொடர்ந்து பிரதமர் மோடி அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்.

    வாஷிங்டன்:

    இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது.

    குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    இதற்கிடையே, அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்.

    இந்நிலையில், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது. இருவரும் ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போதெல்லாம், புதிய விவகாரத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கண்டறிகிறோம். இன்றும் அதில் எந்த வித்தியாசமும் இல்லை என பதிவிட்டுள்ளார்.

    ×