search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Quad Summit"

    • இந்தியாவின் ஆதரவை மீண்டும் தெரிவித்தேன்.
    • ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒன்றாக வேலை செய்கிறோம்.

    நியூயார்க்:

    பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு கடந்த 22-ந்தேதி சென்றார். பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்பியாவுக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோபைடனை சந்தித்து பேசினார்.

    பின்னர் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்றார். மேலும் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதன்பின் நியூயார்க் சென்றடைந்த மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். மசாசு செட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஏற்பாடு செய்த வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்று பேசினார்.


    இதையடுத்து ஐ.நா. பொதுச்சபையில் நடந்த எதிர்க்கால உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற பிற நாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் உக்ரைன்-ரஷியா இடையேயான போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது உக்ரைன்-ரஷியா இடையே நிலவும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் மோடிக்கு ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறும்போது, "நியூயார்க்கில் உக்ரைன் அதிபரை சந்தித்தேன். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த கடந்த மாதம் உக்ரைனுக்கு நான் மேற்கொண்ட பயணத்தின் முடிவுகளை செயல்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். உக்ரைனில் உள்ள மோதலை விரைவில் தீர்க்கவும், அமைதி மற்றும் ஸ்திரத் தன்மையை மீட்டெடுக்கவும் இந்தியாவின் ஆதரவை மீண்டும் தெரிவித்தேன் என்றார்.


    இந்த சந்திப்பு குறித்து ஜெலென்ஸ்கி கூறும்போது, எங்கள் உறவுகளை தீவிரமாக வளர்த்து வருகிறோம். பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒன்றாக வேலை செய்கிறோம்.

    எங்கள் பேச்சுவார்த்தையின் முக்கிய கவனம் சர்வதேச தளங்களில், குறிப்பாக ஐ.நா மற்றும் ஜி 20-ல் எங்கள் தொடர்புகளை மேம்படுத்துவது, அத்துடன் அமைதியை செயல்படுத்துவது ஆகும் என்றார்.

    கடந்த 3 மாதங்களில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது 3-வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு இந்தியாவுக்கு புறப்பட்டார்.

    • குவாட் அமைப்பின் 4-வது உச்சிமாநாடு, வில்மிங்டன் நகரில் நடைபெற்றது.
    • மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு நேற்று சென்றார். பிலடெல்பியா விமான நிலையத்தை சென்றடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    டெலவர் மாகாணம் வில்மிங்டன் நகரில் நடை பெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்ற மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடனை சந்தித்து பேசினார். அப்போது இரு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

    இதுகுறித்து பிரதமர் மோடி கூறும்போது, அமெரிக்க அதிபர் ஜோபைடன் உடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பிராந்தியம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம் என்றார்.

    இதையடுத்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் 4-வது உச்சிமாநாடு, வில்மிங்டன் நகரில் நடைபெற்றது.


    இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா. ஆஸ்தி ரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

    அவர்கள் இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் அமைதி, வளா்ச்சி, ஸ்திரத்தன்மை, உக்ரைன் மற்றும் காசா போர் பிரச்சனைக்கு அமைதித் தீா்வைக் கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்தனர்.

    மேலும், சுகாதாரம் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், வளரும் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, போக்கு வரத்து தொடா்புகள், பயங்கரவாத எதிா்ப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப் படுத்துவது குறித்தும் விவா தித்தனர்.

    பதற்றமும் பல்வேறு விதமான பிரச்சினைகளும் உலகை சூழ்ந்திருக்கும் நேரத்தில் குவாட் உச்சி மாநாடு நடக்கிறது. ஜன நாயக அடிப்படையில் குவாட் உறுப்பு நாடுகள் செயல்படுவதில் மகிழ்ச்சி அளிக்கிறது.

    இந்தோ-பசிபிக் பெருங்கடல் உள்ளடக்கிய பகுதிகளில் குவாட் உறுப்பு நாடுகள் சுதந்திரமாக செயல்பட வேண்டியது முக்கியம். பயங்கரவாத செயல்களுக்கு எதிராக குவாட் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. நாம் அனைவரும் விதிகள் அடிப் படையிலான சர்வதேச ஒழுங்கு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒரு மைப்பாட்டிற்கான மரியாதை மற்றும் அனைத்து சர்ச்சைகளுக்கும் அமைதியான தீர்வு ஆகியவற்றை ஆதரிக்கிறோம்.

    சுதந்திரம், திறந்த, உள்ளடக்கிய மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் நமது முன்னுரிமை என்றார். பின்னர் ஜோபைடன், புமியோ கிஷிடா. அந்தோணி அல்பானீஸ் ஆகியோருடன் பிரதமர் மோடி தனித்தனியாக இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இதில் வர்த்தகம், பாது காப்பு, விண்வெளி மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகள் குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கும் என்று ஜோபைடன் தெரிவித்தார்.

    குவாட் மாநாடு முடிந்த பிறகு பிரதமர் மோடி நியூயார்க்குக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மோடி, நியூயார்க்கில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மேலும் ஐ.நா.வின் எதிர்காலத் துக்கான உச்சி மாநாட்டில் மோடி உரையாற்றுகிறார்.

    • அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்.
    • இந்தியா உடனான அமெரிக்க உறவு வலுவாக உள்ளது என்றார் அதிபர் ஜோ பைடன்.

    வாஷிங்டன்:

    இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது.

    குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    மேலும், அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். அப்போது அதிபர் ஜோ பைடன், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது என தெரிவித்தார்.

    இந்நிலையில், குவாட் மாநாட்டில் பங்கேற்க வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்போன்ஸ் ஆகியோரை அதிபர் ஜோ பைடன் உற்சாகமாக வரவேற்றார்.

    அதன்பின், குவாட் அமைப்பின் தலைவர்கள் 4 பேரும் சந்தித்து ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • தொடர்ந்து பிரதமர் மோடி அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்.

    வாஷிங்டன்:

    இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது.

    குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    இதற்கிடையே, அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்.

    இந்நிலையில், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது. இருவரும் ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போதெல்லாம், புதிய விவகாரத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கண்டறிகிறோம். இன்றும் அதில் எந்த வித்தியாசமும் இல்லை என பதிவிட்டுள்ளார்.

    • குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
    • பிலடெல்பியா விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது.

    அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் அமெரிக்க நேரப்படி 21-ம் தேதி (இன்று) பங்கேற்கிறார்.

    இந்த அமைப்பு கடந்த ஆண்டில் செய்த பணிகள் குறித்தும், வரும் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.

    அடுத்த நாள் நியூயார்க் நகரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 23-ம் தேதி எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இந்தப் பயணத்தின்போது பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார்.

    இந்நிலையில், குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று இரவு அமெரிக்கா சென்றடைந்தார். பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி மகிழ்ந்தார்.

    • ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் குவாட் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
    • எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் ஐ.நா. சபையில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார்.

    குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது. ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் அமெரிக்க நேரப்படி 21-ந்தேதி (இன்று) பங்கேற்கிறார்.

    இந்த அமைப்பு கடந்த ஆண்டில் செய்த பணிகள் குறித்தும், வரும் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.

    அடுத்த நாள் நியூயார்க் நகரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 23-ந்தேதி தேதி எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இந்த பயணத்தின்போது பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

    அமெரிக்க புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி "இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, செழிப்புக்காக பணியாற்றும் முக்கிய குழுவாக குவாட் உருவெடுத்துள்ளது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

    அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு சார்பில் போட்டியில் முன்னாள் ஜனாதிபதி டொனால் டிரம்ப் சந்திப்பதாக தெரிவித்துள்ளார்.

    • அவர்களின் சந்திப்பு பற்றிய கூடுதல் விவரங்களை கூறவில்லை.
    • குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் வில்மிங்டனில் 21-ம் தேதி நடைபெறுகிறது.

    அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசும், டிரம்பும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனிடையே நேற்று மிச்சிகனில் பிரசாரத்தில் ஈடுபட்ட குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் பேசுகையில், அடுத்த வாரம் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக கூறினார். மேலும், பிரதமர் மோடி "அற்புதமானவர்" என்றும் அவரை அடுத்த வாரம் சந்திப்பேன் என்று கூறினார். ஆனால் அவர்களின் சந்திப்பு பற்றிய கூடுதல் விவரங்களை கூறவில்லை.

    பிரதமர் மோடியும் டொனால்ட் டிரம்பும் கடைசியாக 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய அமெரிக்க அதிபராக இந்தியா வந்தபோது சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் வில்மிங்டனில் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    இதற்காக பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 21-ம் தேதி அமெரிக்காவுக்குச் செல்கிறார். வரும் 21, 22, 23 ஆகிய 3 நாள்கள் அவர் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் என்று இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இம்மாதம் அமெரிக்கா செல்கிறார்.
    • 22-ம் தேதி இந்திய வம்சாவளி மக்களுடன் கலந்துரையாடுகிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 21-ம் தேதி அமெரிக்காவுக்குச் செல்கிறார். வரும் 21, 22, 23 ஆகிய 3 நாள்கள் அவர் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

    இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

    இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் வில்மிங்டனில் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    செப்டம்பர் 22-ம் தேதி நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்துப் பேச உள்ளார்.

    செப்டம்பர் 23-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் உரையாற்றுகிறார்.

    இந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பிரதமர் மோடி ஈடுபட உள்ளார் என தெரிவித்துள்ளது.

    • டெலவாரேவில் 21-ந் தேதி ‘குவாட்’ மாநாடு நடக்கிறது.
    • நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபையின் 79-வது அமர்வு நடக்கிறது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி இம்மாதம் அமெரிக்கா செல்கிறார். நியூயார்க் நகரில் 21-ந் தேதி 'குவாட்' உச்சி மாநாட்டில் பங்கேற்பதுடன் அவரது அமெரிக்க சுற்றுப்பயணம் தொடங்குகிறது.

    'குவாட்' அமைப்பு என்பது அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்த அமைப்பாகும். இந்த ஆண்டு அதன் மாநாட்டை இந்தியா நடத்துவதாக இருந்தது.

    கடந்த ஜனவரி மாதம், குடியரசு தின விழா சமயத்தில் டெல்லியில் அந்த மாநாட்டை நடத்த இந்தியா விரும்பியது. அதற்கு சிறப்பு விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைக்கப்பட்டு இருந்தார். ஆனால், அவர் வர மறுத்து விட்டதால், மாநாடு நடக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து, இம்மாதம் நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்துடன் 'குவாட்' மாநாட்டை நடத்தலாம் என்று இந்தியா யோசனை தெரிவித்தது. ஆனால், ஜோ பைடன், தனது சொந்த ஊரான டெலவாரேவில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.

    ஜனாதிபதி ஆவதற்கு முன்பு, டெலவாரேவில் இருந்துதான் 36 ஆண்டுகளாக செனட் சபைக்கு ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.

    எனவே, டெலவாரேவில் 21-ந் தேதி 'குவாட்' மாநாடு நடக்கிறது. அதில், பிரதமர் மோடி, ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அப்போது, ஜோ பைடனை மோடி சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.

    22-ந் தேதி, நியூயார்க் மாகாணம் லாங் ஐலண்ட் என்ற இடத்தில் உள்ள பிரமாண்ட அரங்கில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அந்த அரங்கம், 16 ஆயிரம் இருக்கைகளை கொண்டது.

    ஆனால் அதில் பங்கேற்க இதுவரை 24 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

    ஐ.நா. தலைமையகத்தில் 22 மற்றும் 23-ந் தேதிகளில் ஐ.நா. நடத்தும் 'எதிர்காலத்துக்கான உச்சி மாநாடு' என்ற உயர்மட்ட மாநாடு நடக்கிறது. அதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

    உலகில் போர், கிளர்ச்சி நடந்து வரும் சூழலில், சிறப்பான எதிர்காலத்தை அடைவதற்கான வழிமுறைகள் குறித்து மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபையின் 79-வது அமர்வு நடக்கிறது. அதில் நடக்கும் பொது விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்தது.

    ஆனால், அவர் கலந்து கொள்ள மாட்டார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 28-ந் தேதி பங்கேற்று பேசுவார் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

    இந்தியா தனது உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை எந்த வேகத்தில் அதிகரித்து வருகிறது என்பதை உலகம் உணர்ந்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

    நான் ஜப்பானுக்கு வரும் போதெல்லாம் உங்களிடம் இருந்து அதீத அன்பைப் பெறுகிறேன். உங்களில் சிலர் பல ஆண்டுகளாக ஜப்பானில் தங்கியிருந்தாலும் இந்திய கலாச்சாரம் மற்றும் மொழி மீதான அர்ப்பணிப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் முக்கியப் பங்காற்றி உள்ளது.

    வன்முறை, அராஜகம், பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் என இன்று உலகம் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களிலிருந்தும் மனித குலத்தைக் காப்பாற்றுவதற்கு புத்தர் காட்டிய பாதையில் உலகம் பயணிக்க வேண்டும். புத்தரின் ஆசீர்வாதத்தைப் பெறும் அளவுக்கு இந்தியா அதிர்ஷ்டசாலி.

    கொரோனா தொற்று காலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய நெருக்கடியான சமயத்திலும் இந்தியா உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உதவியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்ததும் கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கும், 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வழங்கியது.

    இந்தியா தனது உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை எந்த வேகத்தில் அதிகரித்து வருகிறது என்பதை உலகம் உணர்ந்து வருகிறது. இந்த திறனை வளர்ப்பதில் ஜப்பான் ஒரு முக்கிய பங்குதாரராக உள்ளது. உலகில் நடக்கும் 40 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் மட்டுமே நடக்கிறது என தெரிவித்தார்.

    ஜப்பான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா தலைவர்களுக்கு பிரதமர் மோடி நிணைவுப் பரிசு வழங்கினார்.
    புதுடெல்லி:

    இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் நேற்று நடைபெற்றது. இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற இந்த 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, பிரதமர் மோடியின் 2 நாள் ஜப்பான் பயணம் நிறைவு பெற்றது. இதனல் அவர் தனி விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி புறப்பட்டார்.

    இந்நிலையில், ஜப்பானில் குவாட் உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று காலை டெல்லி வந்தடைந்தார்.
    டோக்கியோவில் நடந்த சந்திப்பின் போது அமெரிக்க அதிபர், ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் ஜப்பான் பிரதமர் ஆகியோருக்கு பிரதமர் மோடி தனித்தனியாக பரிசு வழங்கினார்.
    டோக்கியோ:

    ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை தனித்தனியே சந்தித்தார்.

    அப்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி சஞ்சி கலை ஓவிய தொகுப்பைப் பரிசாக வழங்கினார்.

    சஞ்சி ஓவியம் என்பது கிருஷ்ணரின் வழிபாட்டு முறையிலிருந்து தோன்றி, உத்தர பிரதேசத்தில் செழித்து வளர்ந்த கலை பாரம்பரியம். சஞ்சி என்பது காகிதத்தில் கையால் டிசைன்களை வெட்டும் கலை. இந்த ஓவியம் இப்பகுதியின் நாட்டுப்புற கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் வைணவ கோவில்களில் அதிகம் காணப்பட்டது. இந்த சஞ்சி கலை ஓவிய தொகுப்பு, தேசிய விருது பெற்ற கலைஞரால், மதுராவிலிருந்து வரும் தாக்குராணி மலைகளை பற்றிய கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டது.

    இதேபோல், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்க்கு பிரதமர் மோடி கோண்ட் கலை ஓவியத்தை பரிசாக வழங்கினார்.

    கோண்ட் ஓவியங்கள் மிகவும் போற்றப்படும் பழங்குடியினரின் கலை வடிவங்களில் ஒன்றாகும். கோண்ட் என்ற வார்த்தை கோண்ட் என்ற சொல்லிலிருந்து வந்தது, அதாவது பச்சை மலை. இதையடுத்து, விரைவில் இந்தியா வருமாறு ஆஸ்திரேலிய பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். 

    மேலும், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு ரோகன் ஓவியம் வரைந்த மரத்தால் செய்யப்பட்ட கைவினைப் பெட்டியை பரிசாக வழங்கினார்.

    ×