என் மலர்
அமெரிக்கா
- இஸ்ரேல் தொடர்ந்து லெபனானில் தாக்குதல் நடத்தி வருகிறது.
- இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததாகவும் 149 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, ஈரான் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட அந்நாடு முழுவதும் இஸ்ரேல் தாக்குதல்களை தொடுத்தது. இந்த தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்ததாகவும் 149 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் தொடர்ந்து லெபனானில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால, லெபனானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.
- அமெரிக்கர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் கொல்லப்படுவார்கள்.
- ஈரானின் முகமூடி கிழிந்து உண்மை முகம் தெரியவந்துள்ளது.
நாங்கள் விரும்பினால் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்கர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தப் போரை நாங்கள் தொடங்கவில்லை, ஆனால் போரை அதிபர் டிரம்ப் முடித்து வைப்பார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும், விரக்தியில் அண்டை நாடுகளின் பொதுமக்கள் மீதே தாக்குதல் நடத்தியதன் மூலம் ஈரானின் முகமூடி கிழிந்து உண்மை முகம் தெரியவந்துள்ளது.
ஏவுகணைகள், டிரோன், அணுசக்தி தொழிற்சாலைகளை தவிர வேறு எந்த வசதிகளையும் ஈரான் செய்யவில்லை.
நாங்கள் பாதுகாவலர்கள் அல்ல, போர்வீரர்கள் என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் பேட்டி அளித்துள்ளார்.
- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடங்கியுள்ள போர் நடவடிக்கையில் 3 வீரர்கள் பலியாகினர்.
- ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறியதை அமெரிக்கா மறுத்தது.
வாஷிங்டன்:
அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடங்கியுள்ள போர் நடவடிக்கையில், அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 5 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறியதை அமெரிக்கா மறுத்துள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில், ஈரான் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.
ஈரானின் இந்தத் தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்கின் அரசியல் நிலைத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.
- டெஹ்ரானில் அயத்துல்லா காமேனியின் அலுவலகம், இல்லத்தைக் குறிவைத்து தாக்குதல் நடந்தது.
- ஈரான் தலைவர் காமேனி உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்றார் இஸ்ரேல் பிரதமர்.
வாஷிங்டன்:
அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நேற்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
டெஹ்ரானில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தைக் குறிவைத்தும் தாக்குதல் நடந்தது.
இதற்கிடையே, ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக ஊடகங்கள் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான காமேனி உயிரிழந்துவிட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமின்றி உலகளவில் காமேனியின் ரத்தவெறி கும்பலால் கொல்லப்பட்ட மக்களுக்குமான நீதி.
அமெரிக்காவின் உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை.
இஸ்ரேலும் நெருக்கமாகப் பணியாற்றியதால், அவராலும், அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது.
தேச பக்தர்களுடன் ஈரானின் புரட்சிகர காவல்படை மற்றும் பாதுகாப்புப் படையினர் ஒன்றிணைந்து, நாட்டை மகத்துவமாக்க செயல்படும் என நம்புகிறோம். அந்தச் செயல்முறை விரைவில் தொடங்க வேண்டும். காமேனியின் கொலை மட்டுமல்ல, நாடே ஒரே நாளில் சுத்தம் செய்யப்பட்டது.
மத்திய கிழக்கில் முழு அமைதி என்ற நோக்கத்தை அடையும்வரை துல்லியமான தாக்குதல்கள் தொடரும் என தெரிவித்துள்ளார்.
- நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்பத்தை ராணுவ பயன்பாட்டுக்கு முழுமையாக அனுமதிக்க வேண்டும் என அரசு கோரியது.
- தார்மீக ரீதியாக சரியல்ல என்று ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி மறுத்துவிட்டார்.
அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு துறையில் கோலோச்சும் ஓபன் ஏஐ (சாட்ஜிபிடி), கூகுள் (ஜெமினி), எக்ஸ் (குரோக்) ஆகியவற்றுக்கு மத்தியில் ஆந்த்ரோபிக் (Claude ஏஐ) குறிப்பிடத்தகுந்த போட்டியாளராக உருவெடுத்துள்ளது.
முன்பு ஓபன் ஏஐ நிறுவனத்தில் துணைத் தலைவர்களாக பணியாற்றிய டேரியோ அமோடி மற்றும் அவரது சகோதரி டேனியலா அமோடி ஆகியோர் 2021ல் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி ஆந்த்ரோபிக் என்ற நிறுவனத்தை தொடங்கினர்.
ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் ஏஐ பாதுகாப்பை விட வணிக லாபத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று குற்றம் சாட்டியே அவர்கள் வெளியேறினர்.
தற்போது ஓபன் ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
இதற்கிடையே டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுக்கும் ஆந்த்ரோபிக் நிறுவனத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை(பென்டகன்) உள்ளிட்ட முக்கிய துறைகள் ஆந்த்ரோபிக் உடைய Claude ஏஐ சேவையை பயன்படுத்தி வந்தது.
அண்மையில், அந்திரோபிக் நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்பத்தை ராணுவ பயன்பாட்டுக்கு முழுமையாக அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் கோரினார்.
ஆனால் அந்திரோபிக் நிறுவனம் இதற்கு வெளிப்படையாகவும், முழுமையாகவும் மறுத்துவிட்டது.
மனிதத் தலையீடு இல்லாத ஆயுதங்கள் மற்றும் மக்கள் மீதான கண்காணிப்பு போன்றவற்றுக்குத் தங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தார்மீக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் சரியல்ல என்று ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி மறுத்துவிட்டார்.

எனவே பென்டகன் உடனான அந்திரோபிக் ஒப்பந்தம் ரத்தாகி உள்ளது.
மேலும் அந்திரோபிக் உடைய பிடிவாதம் டிரம்ப் உடைய கோபத்தையும் சம்பாதித்துள்ளது.
அனைத்து கூட்டாட்சி முகமைகளும் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட டிரம்ப், "ஆந்த்ரோபிக் தொழில்நுட்பம் எங்களுக்குத் தேவையில்லை, அதை நாங்கள் விரும்பவில்லை. இனி அந்த நிறுவனத்துடன் எந்த வணிகமும் செய்யப் போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.
ராணுவம் எப்படிப் போராட வேண்டும் என்று ஒரு தனியார் நிறுவனம் கட்டளையிடுவதைச் சகித்துக்கொள்ள முடியாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் பாதுகாப்புத் துறை போன்ற அமைப்புகள், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அதனை முழுமையாக நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத், ஆந்த்ரோபிக் நிறுவனத்தை 'தேசிய பாதுகாப்பு விநியோகச் சங்கிலிக்கு அச்சுறுத்தல்' (Supply chain risk) என்று அறிவித்துள்ளார்.
அந்த நிறுவனத்தின் முடிவு, அதன் அகங்காரத்தையும் துரோகத்தையும் காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
இந்தத் தடையின் காரணமாக, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் போட்டியாளர்களான, ஓபன் ஏஐ பென்டகன் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் தருவாயில் உள்ளது.
- பாகிஸ்தானுக்கு முழு உரிமை உண்டு.
- 290 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள முழு அளவிளான மோதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "பாகிஸ்தானுடன் நான் மிக மிக நன்றாகப் பழகுகிறேன். அவர்களுக்கு ஒரு சிறந்த பிரதமர் (ஷெபாஸ் ஷெரீப்) மற்றும் ஒரு சிறந்த ராணுவத் தளபதி (ஜெனரல் அசிம் முனீர்) உள்ளனர். நான் மிகவும் மதிக்கும் இருவர் அவர்கள்.
பாகிஸ்தான் தற்போது மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக நான் கருதுகிறேன்" என்று கூறி இந்த மோதலில் இப்போதைக்கு தலையிடப்போவதில்லை என தெரிவித்தார்.
தாலிபான் தாக்குதல்களில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பாகிஸ்தானுக்கு முழு உரிமை உண்டு என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
பாக்-ஆப்கான் மோதல்:
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 6 இல் இஸ்லாமாபாத் ஷியா மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குகளில் 31 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.
தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியதில் 20 பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.
இதற்கு பதிலடியாக நேற்று பாகிஸ்தான் எல்லைப் புறங்களில் உள்ள ராணுவ முகாம்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் கைது செய்யப்பட்டு முகாம்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ஆப்கானிஸ்தான் கூறியது.
பதிலடியாக ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கந்தஹார் நகரங்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் 27 தாலிபான் ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டதாகவும் 290 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.
- இந்த நிகழ்விற்கு நிதியுதவி அளித்து தொகுத்து வழங்கியது ஜெப்ரி எப்ஸ்டீன் தான்.
- அந்தத் தீவில் நடந்த ஒரு 'மைனர் பார்ட்டியில்' கலந்துகொண்டார்.
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.
கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பெயர் இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜெப்ரி எப்ஸ்டீனின் தீவில் ஸ்டீபன் ஹாக்கிங் இரண்டு பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
மார்ச் 2006-ல் கரீபியன் தீவான செயின்ட் தாமஸில் நடைபெற்ற ஒரு அறிவியல் மாநாட்டில் ஹாக்கிங் கலந்து கொண்டார். குவாண்டம் அண்டவியல் குறித்து அவர் அங்கு உரையாற்றினார்.
இந்த நிகழ்விற்கு நிதியுதவி அளித்து தொகுத்து வழங்கியது ஜெப்ரி எப்ஸ்டீன் தான் என்று கூறப்படுகிறது.
அதேநேரம் எப்ஸ்டீனின் தனித்தீவான 'லிட்டில் செயின்ட் ஜேம்ஸ்' க்கும்ஹாக்கிங் சென்றதாக ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகளில் இருந்து வெளியிடப்பட்ட புகைப்படத்தில், ஹாக்கிங் ஒரு ஓய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பதும், அவருக்கு இருபுறமும் பிகினி அணிந்த இரண்டு பெண்கள் இருப்பதும் தெரிகிறது.
அவர்களில் ஒரு பெண் ஹாக்கிங்கின் கையில் காக்டெய்ல் பானத்தை வைத்திருக்கிறார். இது அறிவியல் மாநாடு நடந்த செயின்ட் தாமஸ் தீவில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹாக்கிங்கின் குடும்பப் பிரதிநிதி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண்கள் ஹாக்கிங்கை பராமரிக்கும் செவிலியர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஹாக்கிங்கின் உடல்நிலையை கவனிக்க எப்போதும் அவருடன் வருபவர்கள்.
ALS நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹாக்கிங், 24 மணிநேர மருத்துவக் கண்காணிப்பில் இருந்தவர். சக்கர நாற்காலி மற்றும் குரல் தொகுப்பான் உதவியின்றி அவரால் எதையும் செய்ய முடியாது.
எனவே, அவர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டார் என்பது முற்றிலும் தவறானது.
இந்தப் புகைப்படங்கள் அவரது அறிவியல் பயணத்தின் ஒரு பகுதி மட்டுமே தவிர, இதில் எந்தத் தவாறான நோக்கமும் இல்லை" என்று கூறியுள்ளார்.
எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட வர்ஜீனியா கிஃப்ரே, ஹாக்கிங் அந்தத் தீவில் நடந்த ஒரு 'மைனர் பார்ட்டியில்' கலந்துகொண்டதாகக் கூறியிருந்தார். இதன் காரணமாகவே எப்ஸ்டீன் கோப்புகளில் ஹாக்கிங்கின் பெயர் இடம்பெற்றுள்ளது.
- உலக பொருளாதார மன்ற தலைவரான போர்கே பிரென்ட் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
- போர்கே மீதான குற்றம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
நியூயார்க்:
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார். கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையே, உலக பொருளாதார மன்ற தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான போர்கே பிரென்ட் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. எப்ஸ்டீனுடன் வணிக ரீதியான இரவு விருந்துகளில் கலந்துகொண்டதாகவும், மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் மூலம் தொடர்பில் இருந்ததாகவும் போர்கே மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, உலகப் பொருளாதார மன்றத் தலைவர் பதவியை போர்கே ராஜிநாமா செய்தார். இவர் 2017-ம் ஆண்டு முதல் தலைவர் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், தனது பதவி விலகல் குறித்து போர்கே பேசுகையில், உலகப் பொருளாதார மன்றம் எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அதற்காகவே நான் பதவி விலகும் முடிவை எடுத்துள்ளேன். கடந்த எட்டரை ஆண்டுகளாக இந்தப் பதவியில் பணியாற்றியதில் எனக்கு மிகவும் திருப்தி என தெரிவித்தார்.
போர்கே பதவி விலகியதைத் தொடர்ந்து, அலோயிஸ் ஸ்விங்கி இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்றார்.
- மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சையில் சிக்கினார்.
- எப்ஸ்டீனுடனான தனது தொடர்புகளை ஒரு பெரிய தவறு என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.
கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பில்கேட்ஸ் மற்றும் எப்ஸ்டீனுக்கு இடையிலான பல சந்திப்புகளை விவரிக்கும் படங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கேட்ஸைச் சுற்றி பல விமர்சனங்கள் எழுந்தன. ஆவணங்களில் பில் கேட்ஸ், முகங்கள் மறைக்கப்பட்ட பெண்களுடன் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில்கேட்ஸ் தனது அறக்கட்டளை ஊழியர்களிடம் பொது மன்னிப்பு கோரி உள்ளார்.
இதுதொடர்பாக, அறக்கட்டளை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
சமீபத்திய டவுன் ஹால் கூட்டத்தின்போது பில்கேட்ஸ் தனது செயல்களுக்குப் பொறுப்பேற்றார். அங்கு அவர் எப்ஸ்டீனுடனான தனது உறவுகளைச் சுற்றியுள்ள கேள்விகளுக்கு பதிலளித்தார்.
டவுன் ஹாலில் எப்ஸ்டீன் கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ரஷிய பெண்களுடன் தனக்கு இரண்டு உறவுகள் இருந்ததாக ஒப்புக் கொண்ட பில் கேட்ஸ், அந்த உறவுகள் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையது இல்லை என தெளிவுபடுத்தினார்.
எப்ஸ்டீனுடன் நேரத்தைச் செலவிட்டதும், மூத்த அறக்கட்டளை நிர்வாகிகளை அவருடன் சந்திப்புகளில் ஈடுபடுத்தியதும் ஒரு பெரிய தவறு எனக்கூறிய பில்கேட்ஸ், நான் செய்த தவறு காரணமாக இதில் ஈர்க்கப்பட்ட மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.
2014 வரை எப்ஸ்டீனைச் சந்தித்ததாகவும், எப்ஸ்டீனுடன் ஒரு தனியார் ஜெட் விமானத்தில் பறந்ததாகவும், ஜெர்மனி, பிரான்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் அவருடன் நேரத்தைச் செலவிட்டதாகவும் பில்கேட்ஸ் கூறினார். நான் ஒருபோதும் எப்ஸ்டீனின் தீவுக்குச் சென்றதில்லை என்பதை உறுதிபடுத்தினார் என தெரிவித்துள்ளது.
- சூரிய சக்தி நிறுவனங்களின் பங்குகள் 14 சதவிகிதம் வரையில் சரிவடைந்து உள்ளன.
- நியாயமற்ற முறையில் மானியம் வழங்கியதாக கூறி இந்த வரி விதிப்பை அமெரிக்க வர்த்தகத் துறை அறிவித்து உள்ளது.
அமெரிக்காவின் சூரிய சக்தி இறக்குமதியில் இந்தியா முக்கிய நாடாக உள்ளது. 2025-ம் ஆண்டின் முதல் பாதியில் அமெரிக்காவின் சூரிய சக்தி இறக்குமதியில் இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ் 57 சதவிகிதம் பங்களித்துள்ளன.
இந்தநிலையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்கலம் மற்றும் தகடுகளுக்கு அமெரிக்கா 126 சதவிகித வரி விதித்துள்ளது. அதேபோல் இந்தோனேசியாவுக்கு 86 முதல் 143 சதவிகிதமும், லாவோஸுக்கு 81 சதவிகிதம் வரையிலும் வரி விதித்து உள்ளது.
உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமெரிக்கா இந்த வரியை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது உள்நாட்டு உற்பத்திக்கு நியாயமற்ற முறையில் மானியம் வழங்கியதாக கூறி இந்த வரி விதிப்பை அமெரிக்க வர்த்தகத் துறை அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க சூரிய சக்தி உற்பத்தி மற்றும் வர்த்தக கூட்டணியின் முன்னணி வக்கீல் டிம் பிரைட்பில் கூறும்போது, நியாயமற்ற முறையில் வர்த்தகம் செய்யப்படும் இறக்குமதிகள் சந்தையை சிதைக்க அனுமதித்தால் அவை வெற்றிபெற முடியாது என்றார்.
அதிக வரி விதிப்பால் இந்திய சூரிய மின்சக்தி தகடு உற்பத்தியாளர்களுக்கு அமெரிக்க சந்தை கிடைக்காமல் போகலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே அமெரிக்கா வரி விதித்த நிலையில், சூரிய சக்தி நிறுவனங்களின் பங்குகள் 14 சதவிகிதம் வரையில் சரிவடைந்து உள்ளன.
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் சமீபத்தில் எட்டப்பட்ட நிலையில் இந்தியாவின் சூரிய சக்தி இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டிருக்கும்.
- பாகிஸ்தானில் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பார்கள்
இந்தியாவின் தாக்குதலில் இருந்து பாகிஸ்தான் பிரதமரின் உயிரை காப்பாற்றினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவில் மாநில ஒன்றிய உரையின் போது பேசிய அமெரிக்க டிரம்ப், "அதிபராக எனது முதல் 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன். நான் தலையிடாமல் இருந்திருந்தால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டிருக்கும்.
போரை நிறுத்த நான் ஈடுபடாமல் இருந்திருந்தால் பாகிஸ்தானில் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் என்னிடம் கூறினார்.
போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமர் இறந்திருப்பார்.
எனது நிர்வாகம் 9-வது போரை முடிவுக்குக் கொண்டு வர மிகவும் கடினமாக உழைத்து வருகிறது. ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர், அன்றைய தினத்தில் நான் அதிபராக இருந்திருந்தால் இது ஒருபோதும் நடந்திருக்காது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், உயிருடன் உள்ள அல்லது இறந்த ஒவ்வொரு பணயக்கைதியும் வீடு திரும்புவதை உறுதி செய்து வருகிறோம்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்கர்களுக்கு நாங்கள் பெருமையுடன் பாதுகாப்பை மீட்டெடுத்து வருகிறோம். எனது வரிவிதிப்பு அச்சுறுத்தல் காரணமாக தீர்த்து வைக்கப்பட்டு அமைதி நிலவுகிறது" என்று தெரிவித்தார்.
- அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் வீசி வருகிறது.
- பனிப்புயல் தாக்கத்தால் பட இடங்களில் பனி 3 அடி உயரம் வரை குவிந்தது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் வீசி வருகிறது. பனிப்புயல் தாக்கத்தால் பட இடங்களில் பனி 3 அடி உயரம் வரை குவிந்தது. நியூஜெர்சி மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் அவசர போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் வடகிழக்கு அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பாஸ்டன், கனெக்டிகட், மேரிலேண்ட், விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களிலும் பனிப்புயல் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், வரலாறு காணாத பனிப்புயலால் 153 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தி பாஸ்டன் குளோப் பத்திரிகை, தனது தினசரி செய்தித்தாளை அச்சிடுவதை நிறுத்தியுள்ளது. பாஸ்டன் குளோப் நாளிதழின் 153 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக நாளிதழ் வெளியீடு நிறுத்துப்பட்டுள்ளது.
பாஸ்டன் குளோப் அச்சகம் அமைந்துள்ள மசாசூசெட்ஸ் மாகாணத்தின் பிரிஸ்டாலில் 2 அடி உயரத்துக்கு பனி குவிந்துள்ளது. பனிப்புயலால் ஊழியர்கள் பணிக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டது என்பதாலேயே நாளிதழ் வெளியாவது நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல நாளிதழான தி பாஸ்டன் குளோப், 1872-ம் ஆண்டு நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






