என் மலர்
அமெரிக்கா
- திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெற்ற நன்மைகள் ஏராளம்.
- என் வாழ்க்கத்துணை ஷிவோன் ஜிலிஸ் கூட பாதி இந்தியர் தான்
Zerodha இணை நிறுவனர் நிகில் காமத்தின் பாட்காஸ்டில் உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் தனது மனைவி, குடும்பம் குறித்து விரிவாக பேசியுள்ளார்.
அந்த பாட்காஸ்டில் பேசிய எலான் மஸ்க், "திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெற்ற நன்மைகள் ஏராளம். இவ்வளவு ஏன் என் வாழ்க்கத்துணை ஷிவோன் ஜிலிஸ் கூட பாதி இந்தியர் தான். அவர் கனடாவில் வளர்ந்தாலும், குழந்தையிலேயே தத்து கொடுக்கப்பட்டவர். இதுகுறித்த முழு தகவல் தெரியவில்லை.
அதேபோல நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்கர் சுப்ரமணியன் சந்திரசேகரின் நினைவாக என் மகனின் பெயரில் ஒரு பகுதிக்கு 'சேகர்' என சூட்டியுள்ளேன்" என்று தெரிவித்தார்.
- விருந்தில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓடினர்.
- துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஸ்டாக்டனில் உள்ள விருந்து மண்டபத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது அங்கு துப்பாக்கி சூடு நடந்தது. இதனால் விருந்தில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓடினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கி சூடு நடத்தியவர் யார்? என்ன காரணம்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அமெரிக்காவில் போதைப்பொருள் புழங்குவதற்கு வெனிசுலாதான் காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்
- கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. அமெரிக்காவில் போதைப்பொருள் அதிகளவு புழங்குவதற்கு வெனிசுலா தான் காரணம் என்று டிரம்ப் குற்றச்சாட்டி வரும் நிலையில், கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது.
இந்த நிலையில் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக வெனிசுலா வான்வெளியில் பறக்கும் போது எச்சரிக்கை யாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்தது. இதனால் உலக அளவில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.
ஸ்பெயின், போர்ச்சுகல், சிலி, கொலம்பியா, பிரேசில், டிரினிடாட் டொபாகோ ஆகிய நாடுகளை சேர்ந்த சில விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமான சேவைகளை ரத்து செய்தன.
இந்நிலையில், வெனிசுலாவின் வான்வெளி மூடப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வான்வெளி மற்றும் அதை சுற்றியுள்ள வான்வெளி மூடப்படுகிறது. இதனை அனைத்து விமான நிறுவனங்கள், விமானிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் கவனத்தில் கொள்ளவும்" என்று சரிகை விடுத்துள்ளார்.
டிரம்பின் இந்த மிரட்டலுக்கு கண்டனம் தெரிவித்த வெனிசுலா, இது ஒரு 'காலனித்துவ அச்சுறுத்தல்' என்று தெரிவித்துள்ளது.
- ஆப்கானிஸ்தான் குடிமக்களின் விசா பரிசீலனையை அமெரிக்கா உடனடியாக நிறுத்தியது.
- அமெரிக்கர் அல்லாதோருக்கு கிடைத்து வரும் அரசு சலுகைகளையும் தான் நிறுத்தப்போவதாக டிரம்ப் உறுதிபட தெரிவித்தார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தில் ஆப்கானிஸ்தான் இளைஞர் நேற்று முன் தினம் நடத்திய துபாஷிச்சூட்டில் 2 காவல்படை வீரர்கள் படுகாயமடைந்தனர். அதில் இரு பெண் வீராங்கனை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய மிருகம் பெரிய விலையை கொடுக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
மேலும் ஆப்கானிஸ்தான் குடிமக்களின் விசா பரிசீலனையை அமெரிக்கா உடனடியாக நிறுத்தியது.
தாக்குதல் நடத்திய இளைஞர் கடந்த ஜோ பைடன் ஆட்சியில் 2021 இல் சரியான பரிசோதனை இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்தவர் என டிரம்ப் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு மூன்றாம் உலக நாடுகளில் இருந்து இடம்பெயர்வை முழுமையாக தனது நிர்வாகம் நிறுத்த உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்கா மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்ப அவகாசம் கிடைக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் சமூக வலைதள பதிவில், முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் மில்லியன் கணக்கானோரை அமெரிக்காவுக்குள் அனுமதித்ததை தான் ரிவர்ஸ் செய்ய போவதாக தெரிவித்த டிரம்ப், அமெரிக்காவுக்கு பயன்படாதோரும், அமெரிக்காவை நேசிக்க முடியாத அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என சூளுரைத்துள்ளார். அதுமட்டுமின்றி அமெரிக்கர் அல்லாதோருக்கு கிடைத்து வரும் அரசு சலுகைகளையும் தான் நிறுத்தப்போவதாக டிரம்ப் உறுதிபட தெரிவித்தார்.
அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள், தொழில்வளர்ச்சி பெற்ற ஜனநாயகங்கள் முதல் உலக நாடுகள், சோவியத் யூனியன்(ரஷியா), சீனாவை சார்ந்த நாடுகள் இரண்டாம் உலக நாடுகள், இந்த இரண்டு அணியிலும் இல்லாத, வளர்ந்து வரும் அல்லது பின்தங்கிய ஆபிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்டுகின்றன.
தற்போதைய மூன்றாம் உலக நாடுகள் பட்டியலில், ஆப்கானிஸ்தான், ஈரான், மியான்மர், காங்கோ, கியூபா, எரித்திரியா, ஹெய்டி, வெனிசுலா, சோமாலியா, சூடான் உள்ளிட்ட சில நாடுகள் இடம்பெற்றுள்ளன.
- சிகிச்சை பலனின்றி பெண் பாதுகாப்பு படைவீரர் சாரா பெக்ஸ்ட்ரோம் பரிதாபமாக உயிரிழந்தார்.
- மற்றொரு இளைஞன் ஆண்ட்ரூ வுல்ப் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே நேற்று மர்ம நபர் ஒருவர் அங்கு ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.
இதில் ஒரு ஆண், ஒரு பெண் என 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். உடனே சுதாரித்த மற்ற பாதுகாப்பு படை வீரர்கள் அந்த மர்ம நபரை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர். படுகாயமடைந்த வீரர்களை உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனின்றி பெண் பாதுகாப்பு படைவீரர் சாரா பெக்ஸ்ட்ரோம் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர்," மிகவும் மதிக்கப்படும் ஒரு அற்புதமான இளம் வீரரை நாடு இழந்துள்ளது. அவர் இப்போது நம்முடன் இல்லை. அவரை காப்பாற்ற முடியாத எங்களை இப்போது அவர் இழிவாக எண்ணிக்கொண்டிருப்பார். அவரது பெற்றோர்களுக்கு நாங்கள் ஆறுதலாக இருக்கிறோம். நடந்ததை சரி செய்யமுடியாது.
இது தற்செயலாக நடந்த ஒன்று. தாக்குதலில் பாதிக்கப்பட்ட 24 வயதே ஆன மற்றொரு இளைஞன் ஆண்ட்ரூ வுல்ப் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவர் உயர்பிழைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்றார்.
துப்பாக்கி சூடு நடத்திய ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 29 வயதான ரகமானுல்லா லகன்வால் பற்றி சி.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா ராணுவம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த காலக் கட்டத்தில் சி.ஐ.ஏ.வின் ஆதரவு பெற்ற ஆப்கானிஸ்தான் ரகசிய போராட்டக்குழுவான ஜீரோ யூனிட்டில் ரகமானுல்லா லகன்வால் பணியாற்றினார்.
கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து தனது ராணுவத்தை திரும்பப் பெற்றதையடுத்து, அப்போதைய அதிபர் ஜோபைடனின் அலைஸ் வெல்கம் திட்டத்தின் கீழ் ரகமானுல்லா அமெரிக்கா வில் குடியேறினார்.
இந்த குடியேற்றத்தை ஜோபைடன் அரசு பல வழிகளில் நியாயப்படுத்தியது.
பாதுகாப்பு படை வீரர்களை மிக அருகிலிருந்து சுட்டதால் நாம் இப்போது இளம் வீரரை இழந்துள்ளோம் என சி.ஐ.ஏ. இயக்குனர் ராட்கிளிப் தெரிவித்துள்ளார்.
- போலீசார் சுட்டதில் ரஹ்மானுல்லாவுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை
- அவர் புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ பண்ணை வீட்டில் இருந்தார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிசூடு நடத்தினார்.
இந்த தாக்குதல் வெள்ளை மாளிகையின் வடமேற்கே உள்ள ஒரு மெட்ரோ நிலையம் அருகே நடந்தது. இதில் மேற்கு வர்ஜீனியாவை சேர்ந்த தேசிய காவல்படையின் 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
முதலில் பெண் காவலர் மீது துப்பாக்கிசூடு நடத்திய அந்த வாலிபர் பின்னர் மற்றொரு காவலரையும் சுட்டுள்ளார். உடனே மற்ற பாதுகாப்பு படை வீரர்கள், தாக்குதல் நடத்திய நபர் மீது துப்பாக்கியால் சுட்டு அவரை மடக்கி பிடித்தனர்.
படுகாயம் அடைந்த 2 பாதுகாப்பு படை வீரர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 29 வயதான ரஹ்மானுல்லா லகன்வால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
போலீசார் சுட்டதில் ரஹ்மானுல்லாவுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நிலவிய குழப்பமான சூழலின்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர் என்றும் அப்போதைய அதிபர் ஜோபைடன் நிர்வாகத்தின் திட்டமான ஆபரேஷன் அல்லீசஸ் வெல்கம் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் துப்பாக்கிசூடு நடத்திய காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
துப்பாக்கிச்சூடு நடந்த போது வெள்ளை மாளிகை யில் அதிபர் டிரம்ப் இல்லை. அவர் புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ பண்ணை வீட்டில் இருந்தார். இச்சம்பவத்துக்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, துப்பாக்கி சூடு சம்பவம் நமது சிறந்த தேசிய காவல்படை வீரர்கள் மீதான கொடூரமான தாக்குதல் ஆகும். தாக்குதல் நடத்திய நபர் ஒரு மிருகம். அவர் காயமடைந்திருந்தாலும் அந்த மிருகம் மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும். இது ஒரு தீய, வெறுப்பு மற்றும் பயங்கரவாத செயல். முந்தைய ஜோபைடன் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்களை சரியாக ஆய்வு செய்யவில்லை என்றார்.
இதற்கிடையே வாஷிங்டன் நகரத்துக்கு மேலும் 500 தேசிய பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்புமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.
- முதலில் பெண் காவலர் மீது துப்பாக்கிசூடு நடத்திய அந்த வாலிபர் பின்னர் மற்றொரு காவலரையும் சுட்டுள்ளார்.
- ஆபரேஷன் அல்லீசஸ் வெல்கம் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்தார்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிசூடு நடத்தினார்.
இந்த தாக்குதல் வெள்ளை மாளிகையின் வடமேற்கே உள்ள ஒரு மெட்ரோ நிலையம் அருகே நடந்தது. இதில் மேற்கு வர்ஜீனியாவை சேர்ந்த தேசிய காவல்படையின் 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
முதலில் பெண் காவலர் மீது துப்பாக்கிசூடு நடத்திய அந்த வாலிபர் பின்னர் மற்றொரு காவலரையும் சுட்டுள்ளார். உடனே மற்ற பாதுகாப்பு படை வீரர்கள், தாக்குதல் நடத்திய நபர் மீது துப்பாக்கியால் சுட்டு அவரை மடக்கி பிடித்தனர்.
படுகாயம் அடைந்த 2 பாதுகாப்பு படை வீரர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 29 வயதான ரஹ்மானுல்லா லகன்வால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
போலீசார் சுட்டதில் ரஹ்மானுல்லாவுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நிலவிய குழப்பமான சூழலின்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர் என்றும் அப்போதைய அதிபர் ஜோபைடன் நிர்வாகத்தின் திட்டமான ஆபரேஷன் அல்லீசஸ் வெல்கம் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் துப்பாக்கிசூடு நடத்திய காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
துப்பாக்கிச்சூடு நடந்த போது வெள்ளை மாளிகை யில் அதிபர் டிரம்ப் இல்லை. அவர் புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ பண்ணை வீட்டில் இருந்தார். இச்சம்பவத்துக்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- உக்ரைன் ரஷியா இடையிலான போர் மூன்றரை ஆண்டுகளைத் தாண்டியும் நடந்து வருகிறது.
- இந்தப் போரை நிறுத்த 28 அம்சம் கொண்ட ஒரு அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் பரிந்துரை செய்தார்.
வாஷிங்டன்:
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதாக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. மூன்றரை ஆண்டுகளைத் தாண்டியும் இந்தப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசி வருகிறார். ஆனால் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதற்கிடையே போரை நிறுத்த 28 அம்சம் கொண்ட ஒரு அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் பரிந்துரை செய்தார். ஆனால் ரஷியாவுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறி அந்த ஒப்பந்தத்தை உக்ரைன் நிராகரித்தது.
இந்நிலையில், ரஷியா-உக்ரைன் போரில் கடந்த மாதம் மட்டும் இரு தரப்பைச் சேர்ந்த 25 ஆயிரம் வீரர்கள் பலியாகினர் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
எனவே இந்தப் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷிய தூதுக்குழுவை அமெரிக்க அதிகாரிகள் அபுதாபியில் சந்தித்துப் பேசினர். இதன்மூலம் போர் நிறுத்தத்துக்கான அமைதி ஒப்பந்தத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
- உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக தகவல்.
- சீனாவுடனான எங்கள் உறவு மிகவும் வலுவானது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் டெலிபோனில் பேசியதாக தெரிவித்துள்ளார். அப்போது ஜி ஜின்பிங் சீனாவுக்கு வர அழைப்பு விடுத்ததை ஏற்றுக் கொண்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு செல்ல இருப்பதாகவும், தனது அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வருடம் இறுதியில் அமெரிக்க வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவுடனான எங்கள் உறவு மிகவும் வலுவானது என சமூக வலைத்தளத்தில் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இருவரும் உக்ரைன், அமெரிக்க சோயாபீன்ஸ் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
வரி விதிப்பு காரணமாக அமெரிக்கா- சீனா இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில், தென்கொரியாவில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். அப்போது இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடிவு செய்தனர்.
தைவான் குறித்து ஜப்பான் கருத்து தெரிவித்ததால் சீனா- ஜப்பான் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தைவான் குறித்து டொனால்டு டிரம்ப் குறிப்பிடவில்லை.
சுயாட்சி பெற்ற தைவான் சீன ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தைவான் குறித்து யாரும் கருத்து தெரிவித்தால் அதற்கு கடும் கண்டனமும் தெரிவித்து வருகிறது.
தைவானுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுத்தால், அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான ஜப்பானின் ராணுவம் இதில் ஈடுபடக்கூடும் என ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி குறிப்பிட்டிருந்தார்.
- இந்த அமைதி திட்டம் ரஷியாவுக்கு சாதகமாக இருப்பதாக உக்ரைன் கருதுகிறது.
- நாங்கள் சமாதானத்திற்கு செல்ல விரும்புகிறோம்.
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
இதற்காக அவர் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதற்கிடையே ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 28 அம்ச அமைதி திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷியாவுக்கு விட்டுகொடுக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. டிரம்ப்பின் இந்த அமைதி திட்டம் ரஷியாவுக்கு சாதகமாக இருப்பதாக உக்ரைன் கருதுகிறது.
இதனால் இத்திட்டத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்து வருகிறார். இதற்கிடையே அமைதி திட்டத்தை உக்ரைன் ஏற்க வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அமைதிதிட்டத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்தால் அவர் தனது சிறிய இதயத்துடன்தான் போராட வேண்டியதிருக்கும். ஆனால் இந்த திட்டம் பேச்சுவார்த்தைக்கு திறந்தே உள்ளது. இந்த அமைதிதிட்ட வரைவு இறுதி சலுகை அல்ல. நாங்கள் சமாதானத்திற்கு செல்ல விரும்புகிறோம்.
2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போர் ஒருபோதும் நடந்திருக்காது என்றார். முன்னதாக போர் நிறுத்த வரைவு திட்டத்தை வருகிற 27-ந் தேதிக்குள் உக்ரைன் ஏற்க வேண்டும்.
இல்லையென்றால் அமெரிக்கா அளித்துவரும் ஆதரவு நிறுத்தப்படும் என்று டிரம்ப் கூறினார். ஆனால் அமைதி திட்டத்தை உக்ரைன் ஏற்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
இதற்கிடையே இந்த அமைதி வரைவு திட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இந்த நிலையில் இன்று இத்திட்டம் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, உக்ரைன் ஆகிய நாடுகளின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜெனீவாவில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
- நியூ யார்க் மக்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்லாமியராக மம்தானியை தங்கள் மேயராக தேர்ந்தெடுத்தனர்.
- சந்திப்பின் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மம்தானியை நேற்று வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப்-ஐ 'பாசிஸ்ட்' என மம்தானியும், மம்தானியை கம்யூனிஸ்ட் என டிரம்ப்பும் விமர்சித்தனர். மம்தானி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நியூ யார்க்கிற்கான நிதி குறைக்கப்படும் என டிரம்ப் தேர்தலுக்கு ஒரு நாள் முன் மிரட்டினார். இருப்பினும் நியூ யார்க் மக்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்லாமியராக மம்தானியை தங்கள் மேயராக தேர்ந்தெடுத்தனர்.
இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நேற்று அவர்களின் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் போது டிரம்ப் மம்தானியுடன் இணக்கமாக நடந்து கொண்டார்.
மேலும் சந்திப்பின் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இது மிகவும் சிறந்த மற்றும் பயனுள்ள சந்திப்பு என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசுகையில், "நாங்கள் ஒரு சிறந்த சந்திப்பை நடத்தினோம், இது ஒரு நல்ல, மிகவும் பயனுள்ள சந்திப்பு. நாங்கள் இருவரும் நேசிக்கும் இந்தப் நகரம் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற பொதுவான ஒரு இலக்கு எங்களிடம் உள்ளது. நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். வீட்டுவசதி மற்றும் உணவு விலைகள் போன்ற சில விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம்" என்று தெரிவித்தார்.
மேலும் "நீங்கள் ஒரு மிகச் சிறந்த மேயரைப் பெறுவீர்கள் என்று நான் நினைக்கிறேன். அவர் சிறப்பாகச் செயல்பட்டால், நான் மகிழ்ச்சியடைவேன். இதில் கட்சி வேறுபாடு இல்லை என்று நான் சொல்வேன். உண்மையில், அவர் சில பழமைவாதிகளுக்கும், சில தீவிர தாராளவாதிகளுக்கும் கூட ஆச்சரியத்தை அளிப்பார் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
அதேநேரம் , நீங்கள் இன்னும் டிரம்ப்-ஐ பாசிஸ்ட் என கருதுகிறீர்களா என்று பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது பேசிய மம்தானி பதிலளிக்க முற்பட்டார்.
அப்போது டிரம்ப் குறுக்கிட்டு, "பரவாயில்லை, நீங்கள் 'ஆம்' என்று மட்டும் சொன்னால் போதும். அதை விளக்குவதைவிட அது எளிது. ஐ டோன்ட் மைண்ட். தேட்ஸ் ஓகே. அதை விட மோசமாக கூட நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்" என்று கூறி மம்தானியை தட்டிக்கொடுத்தார்.
நீங்கள் என்னை 'பாசிஸ்ட்' என்று தொடர்ந்து அழைத்தாலும் பரவாயில்லை என டிரம்ப் காட்டிய காட்டிய இணக்கம் பலரை கவர்த்துள்ளது.
- நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார்
- அமெரிக்க அதிபர் டிரம்பும் மம்தானியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர் என்ற பெருமையை இதன்மூலம் பெற்றார்.
நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே போல் மம்தானியை டிரம்ப்பும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
குறிப்பாக மம்தானியை கம்யூனிஸ்டு என்று விமர்சித்து வந்த டிரம்ப் அவர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால் நியூயார்க் நகரம் மோசமாகிவிடும் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே, நியூயார்க் மேயர் மம்தானியை வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் என்னை சந்திக்க உள்ளார் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப் நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானியை சந்தித்தார். இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் கூறுகையில், நியூயார்க் நகர வளர்ச்சிக்கு தேவையான அனைத்தும் செய்து தரப்படும் என தெரிவித்தார்.






