search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Microsoft"

    • போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள் உடபட பல்வேறு தொழில்கள் முடங்கின
    • பங்குச் சந்தையில் மைரோசாப்ட் மற்றும் Crowdstrike பங்குகள் வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது.

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோ சாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் (விண்டோஸ்) மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள், வங்கிகள், பங்கு சந்தைகள் உள்பட பல்வேறு முக்கிய அத்தியாவசிய சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    மைக்ரோ சாப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த 'கிரவுட் ஸ்டிரைக்' என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் நிலையில் நேற்று நடந்த சென்சார் மென்பொருள் அப்டேட்டில் குளறுபடி ஏற்பட்டதால் மைக்ரோசாப்ட் சர்வர்கள் முடங்கின. இந்த சர்வர் முடக்கத்தால் உலகம் முழுவதும் கணினி மற்றும் மடி கணினிகளின் முகப்பு திரை நீல நிறமாக மாறி பல்வேறு சேவைகள் முடங்கியது.

    பாதிப்புகள் ஓரளவு சரிசெய்யப்பட்ட நிலையில்பங்குச் சந்தையில் மைரோசாப்ட் மற்றும் Crowdstrike பங்குகள் வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது.மைக்ரோசாப்ட் பங்குகள் 0.74 சதவீதம் சரிந்துள்ள்ள நிலையில் Crowdstrike பங்குகள் 11.10 சதவீதம் வரையில்  சரிந்துள்ளன. இந்த பாதிப்புகளால் Crowdstrike நிறுவனம் 9 பில்லியன் டாலர்கள் [சுமார் ரூ.75,350 கோடி] சந்தை மூலதனத்தை இழந்துள்ளது.

    • உலகம் முழுவதும் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாக உள்ளன.
    • இந்தியாவில் நேற்று மட்டும் சுமார் 300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    சென்னை:

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோ சாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் (விண்டோஸ்) மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள், வங்கிகள், பங்கு சந்தைகள் உள்பட பல்வேறு முக்கிய அத்தியாவசிய சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    மைக்ரோ சாப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த 'கிரவுட் ஸ்டிரைக்' என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. மைக்ரோ சாப்ட், கூகுள் உள்பட உலகம் முழுவதும் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாக உள்ளன.

    'கிரவுட் ஸ்டிரைக்' நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய அடிக்கடி தனது பால்கன் சென்சார் மென் பொருளை மேம்படுத்துவது உண்டு. அப்படி மேம்படுத்தினால்தான் மென் பொருள் நிறுவனங்களின் இயங்கு தளங்கள் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் சிறப்பாக செயல்பட முடியும்.

    இந்த நிலையில் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருளில் நேற்று 'கிரைவுட் ஸ்டிரைக்' நிறுவனம் பால்கன் சென்சார் மென்பொருளை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அப்போது விண்டோஸ் மென்பொருளின் குறிப்பிட்ட சில இயங்கு தளங்களில் திடீர் கோளாறு ஏற்பட்டது.

    இத்தகைய சர்வர் முடக்கத்தால் உலகம் முழுவதும் கணினி மற்றும் மடி கணினிகளின் முகப்பு திரை நீல நிறமாக மாறி பல்வேறு சேவைகள் முடங்கியது. இதனால் 'கிரவுட் ஸ்டிரைக்' நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பால்கன் சென்சார் மென்பொருளை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

    என்றாலும் தொழில்நுட்ப செயலிழப்பை உடனடியாக சரி செய்ய இயலவில்லை. இதனால் நேற்று மதியம் முதல் உலகம் முழுவதும் போக்குவரத்து, மருத்துவம், தொலைத் தொடர்பு, வங்கி பணிகள் போன்றவற்றில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.


    அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்பட பல நாடுகளில் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் முடங்கின. இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் விமான சேவைகள் முடங்கின.

    இந்தியாவில் நேற்று மட்டும் சுமார் 300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. அது போல வங்கி சேவை, பங்கு சந்தை சேவை ஆகியவற்றிலும் பாதிப்பு காணப்பட்டது.

    'கிரவுட் ஸ்டிரைக்' நிறுவனத்தினர் இன்று பால்கன் சென்சார் மென்பொருளை ஓரளவு சரி செய்து விட்டனர். இதன் காரணமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. என்றாலும் உலகம் முழுவதும் இன்று 2-வது நாளாக தொழில்நுட்ப செயல் இழப்பின் பாதிப்பு இருந்தது.

    மைக்ரோ சாப்ட் தொழில் நுட்ப பிரச்சனையால் உலகம் முழுவதும் வர்த்தகத்தில் முடக்கம் ஏற்பட்டு உள்ளது. பல நாடுகளில் இன்றும் பெரிய நிறுவனங்கள் மற்றும் நடுத்தர அலுவலகங்கள் ஸ்தம்பிக்கும் நிலையில் இருந்தன. இன்று மாலை முதல் இயல்பு நிலை முழுமையாக திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் இன்று 2-வது நாளாக விமான சேவை, வங்கி சேவை, பங்கு சந்தை நிறுவன செயல்பாடு ஆகியவற்றில் பாதிப்பு காணப்பட்டது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத் உள்பட பல நகரங்களில் 2-வது நாளாக விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

    சென்னையில் நேற்று மதியத்தில் இருந்து, நள்ளிரவு வரை 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகி ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னை விமான நிலையத்தில் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    இந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதுவரை வருகை விமானங்கள் 8 புறப்பாடு விமானங்கள் எட்டு என மொத்தம் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ரத்தான அந்த 16 விமானங்களில் செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகளில் பலர் பயணத்தை ரத்து செய்து விட்டு வீடுகளில் திரும்பி சென்றனர். சில பயணிகள் காத்திருந்து மாற்று விமானங்களில் புறப்பட்டு சென்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் லண்டன், சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், குவைத், அபுதாபி, தோகா, இலங்கை மற்றும் டெல்லி மும்பை கொல்கத்தா, புனே, அந்தமான், திருவனந்தபுரம் கொச்சி, திருச்சி, மதுரை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

    இதனால் சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக பயணிகள் இன்றும் அவதிக்குள்ளானார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு பிறகு தொழில் நுட்ப செயல் இழப்பு கொஞ்சம் கொஞ்சமாக சீராக தொடங்கியது. இதன் காரணமாக சென்னை விமான நிலைய கணினிகள் ஓரளவு செயல்பாட்டுக்கு வந்தன. இதன் மூலம் விமான இயக்கம் இயல்பு நிலைக்கு வர தொடங்கி உள்ளது.

    11 மணிக்கு பிறகு உள்ளூர் விமான சேவைகள் வழக்கம் போல செயல்பட தொடங்கின. இதனால் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவைக்கு இன்று வழக்கம் போல விமான சேவைகள் இயக்கப்பட்டன.

    என்றாலும் வங்கி சேவைகளில் இன்றும் பாதிப்பு காணப்படுகிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தவிர மற்ற வங்கிகள் இன்று மதியத்திற்கு இயல்பு நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலைக்காட்சி சேவை மற்றும் ரெயில் போக்குவரத்திலும் இன்று பாதிப்பு இருந்தது. மைக்ரோ சாப்ட் தொழில்நுட்ப பிரச்சனையில் ரஷியா, சீனா இரு நாடுகளும் எந்த பாதிப்பையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெரு நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்புக்காக CrowdStrike மென்பொருளை சார்ந்துள்ளது
    • இது சைபர் தாக்குதல் கிடையாது என்றும் CrowdStrike சிஇஓ ஜார்ஜ் குர்டிஸ் தெரிவித்துள்ளார்.

    உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மைக்ரோசாப்ட் வின்டோஸ் கணினி திரைகளில் நேற்று  தோன்றிய புளூ ஸ்க்ரீன் ஆப் டெத் Blue Screen of Death (BSOD) குளறுபடி  உலகம் முழுவதிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. மைகோரசாப்டை ஐ.டி நிறுவனங்கள், விமான நிலையங்கள், வங்கிகள், தொழில்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கியது. இதற்கு முக்கிய காரணம் CrowdStrike எனப்படும் சைபர் பாதுகாப்பு நிறுவனம் மைக்ரோசாப்டில் செய்ய முயன்ற அப்டேட் ஆகும்.

     

    அமெரிக்கவைத் தலைமையிடமாக கொண்டு 2011 முதல் இயங்கி வரும் CrowdStrike சைபர் பாதுகாப்பு மென்பொருள் நிறுவனமானது முன்னணி நிறுவனங்கள், அரசு அமைப்புகள், வங்கிகள், விமான நிலையங்களின் சைபர் ஸ்பேஸ் பாதுகாப்பை உறுதி செய்யும் நிறுவனம் ஆகும். சுருக்கமாக தனிநபர்கள் காஸ்பர்ஸ்கை, அவாஸ்ட் உள்ளிட்ட ஆட்டிவைரஸ்களை தங்களின் கணினியின் பாதுகாப்புக்காக நிறுவுவது போல், பெரு நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்புக்காக CrowdStrike மென்பொருளை சார்ந்துள்ளது. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் CrowdStrike மென்பொருளை உபயோகித்து வருகிறது.

    CrowdStrike மென்பொருளை கணினியில் இன்ஸ்ட்டால் செய்ததும் அது ஆட்டோமேட்டிக்காக வைரஸ் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளையும், ஆபத்துகளையும் ஸ்கேன் செய்யும். கணினியில் உள்ள மிகவும் நுட்பமான தகவல்களையும் அணுகுவதால், இந்த மென்பொருளில் ஏற்படும் சின்ன பிரச்சனையும் கணினிக்கும் எளிதாக பரவும். சோனி நிறுவனத்தை வட கோரிய ஹேக்கர்கள் ப்ரீச் செய்த விவகாரத்தை ஆராய்ச்சி செய்தது, அமெரிக்க ஜனநாயக கட்சியின் செர்வர்கள் ஹேக் செய்யப்பட்ட போது அதில் சம்பந்தப்பட்ட ரஷிய சைபர் நடவடிக்கைகளை ஆராய்ந்தது உள்ளிட்ட முக்கிய விவகாரங்களிலும் CrowdStrike பணியாற்றியுள்ளது. 

     

    இந்நிலையில் தற்போது மைகோரஸாப்ட் விண்டோஸில் நடந்துள்ள இந்த சைபர் குளறுபடியாந்து  தங்களின் நிறுவனம் மென்பொருளில்  புதிதாக அறிமுகப்பபடுத்திய சாப்ட்வேர் அப்டேட் குளறுபடியானதால் ஏற்பட்டது என்று விளக்கம் CrowdStrike நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் manual ஆக மென்பொருளை ரீசெட் செய்து வருகிறோம் என்றும்   அந்நிறுவனத்தின்  தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி பரவலாக கூறப்படுவது போல் இது சைபர் தாக்குதல் கிடையாது என்றும் CrowdStrike சிஇஓ ஜார்ஜ் குர்டிஸ் தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பு வின்டோஸ் கணினிகளில் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் Mac, Linux உள்ளிட்டவற்றில் இயங்கும் கணினிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    • கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில் பாதிப்பு.
    • பாதிப்புக்கான காரணம் குறித்து ஆய்வு.

    விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்கள் புளூ ஸ்கிரீன் (Blue Screen of Death) பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த பாதிப்பு விண்டோஸ் இயங்குதளத்தின் கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில் ஏற்பட்டுள்ளது முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.

    மைக்ரோசாப்ட் சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டதை கிரவுட்ஸ்டிரைக் உறுதிப்படுத்தி இருக்கிறது. பாதிப்பை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது. மேலும், இந்த பாதிப்பு ஏற்பட என்ன காரணம் என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    பாதிப்பை பயனர்கள் தாங்களாகவே சரி செய்ய முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பாதிப்பை சரி செய்வதற்கான பணிகளில் கிரவுட்ஸ்டிரைக் ஈடுபட்டுள்ளது. பாதிப்பு சரி செய்வது தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • 2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார்.
    • டுவிட்டர் நிறுவனத்தில் பணிப்புரிந்த 80 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவை எடுத்தார்.

    2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். அப்பொழுது அவரது நெருங்கிய நண்பர்களான ஸ்டீவ் டேவிஸ் மற்றும் ஜேம்ஸ் மஸ்க்- ஐ டுவிட்டர் நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் நாம் தரும் சம்பளத்திற்கு தகுதியானவர்களா? என்று ஆராய கூறினார்.

    அதன்படி டுவிட்டர் நிறுவனத்தில் பணிப்புரிந்த 80 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவை எடுத்தார். இந்த முடிவு காரணமாக ப்ராடக்ட் அண்ட் டிசைன் பிரிவில் பணியாற்றி வந்த பலர் பாதிக்கப்பட்டனர்.

    உலகின் பெரிய நிறுவனமான டுவிட்டர் தனது பணியாளர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்தது, மற்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களையும் இது குறித்து பரிசீலனை செய்ய வைத்தது. இந்நிகழ்வை தொடர்ந்து வேலை வாய்ப்பு எண்ணிக்கை கணிசமாக குறைய தொடங்கியது.

    இதே ஃபார்முலாவை பெரும்பான்மையான நிறுவனங்கள் கையில் எடுத்தனர். கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் போன்ற பிரபல நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டு மட்டும் 1.5 லட்சத்திற்கு அதிகமானோரை பணி நீக்கம் செய்தது.

    இதில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் மிட்டில் மேனேஜர்ஸ் எனப்படும் ஊழியர்கள் மற்றும் தலைமை பொறுப்புகளில் வகிப்பவர்களுக்கு இடையில் பணியாற்றும் மேலாளர்கள் தான். ஒரு நிறுவனத்தை மொத்தமாக விலைக்கு வாங்கி, உடனடியாக அதன் ஊழியர்கள் எண்ணிக்கையை பெருமளவு குறைத்த எலான் மஸ்க்-இன் நடவடிக்கை தொழில்நுட்ப துறையில் பேசுபொருளாக மாறியது.

    இந்த நிலையில், எலான் மஸ்க்-இன் இந்த நடவடிக்கை காரணமாகவே தொழில்நுட்ப துறையில் இயங்கி வரும் இதர முன்னணி நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கையை தீவிரப்படுத்த காரணமாக அமைந்தது என தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • டெல்லி ராஷ்டிரபதி பவனில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
    • இதில் தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்றார்.

    வாஷிங்டன்:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

    இதற்கிடையே, டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்நிலையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில் கேட்ஸ் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பில் கேட்ஸ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். சுகாதாரம், விவசாயம், பெண்கள் தலைமையிலான மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மாற்றம் போன்ற துறைகளில் உலகளாவிய முன்னேற்றத்திற்கான புதுமைக்கான ஆதாரமாக இந்தியாவின் நிலையை நீங்கள் பலப்படுத்தி உள்ளீர்கள். இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு தொடர்ச்சியான கூட்டாண்மையை எதிர்நோக்குகிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • கடந்த மாதம் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
    • உலக முழுவதும் ஐரோப்பிய யூனியனை தவிர்த்து குறைந்தது 64 நாடுகளில் இந்த ஆண்டு பொது தேர்தல் நடக்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் தேர்தலை சீர்குலைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக மைக்ரோ சாப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சீனாவின் ஆதரவு பெற்ற சைபர் குழுக்கள் 2024-ல் நடக்கும் பல்வேறு பொது தேர்தல்களை குறி வைத்துள்ளது. இதற்கு வடகொரியாவின் ஆதரவும் உண்டு. இந்த தேர்தலின் போது நிலவும் பொதுக் கருத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தகவல்களை சமூக வலைதளங்களில் பரவ வைக்க அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

    இந்த ஆண்டு உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, தென் கொரியாவில் முக்கிய தேர்தல் நடைபெறுவதால் தனது நலனுக்கு பயன் அளிக்கும் வகையில் இதனை செயல்படுத்தி இடையூறு செய்ய சீனா திட்டமிட்டுள்ளதாக நாங்கள் மதிப்பிடுகிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மைக்ரோ சாப்ட் நிறுவன அதிகாரி கூறியதாவது:-

    டீப்பேக் மற்றும் நடக்காத நிகழ்வுகளை வைத்து உருவாக்கப்பட்ட தவறான மற்றும் மோசடி விளம்பரங்கள் மூலம் அரசியல் விளம்பரத்தை உருவாக்குவது பெரிய அச்சுறுத்தல் ஆகும். இது போன்ற மோசடி விளம்பரங்கள் வேட்பாளர்கள் குறித்து தவறான தகவலை பொதுமக்கள் இடையே பரப்பி அவர்களை தவறாக வழி நடத்தும்.


     செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. இது காலப்போக்கில் அந்நாட்டுக்கு பெரிய பயனளிக்கும்.

    தைவானில் ஆதிக்கத்தை செலுத்துவதற்காக சீனா இதனை சோதித்து பார்த்து உள்ளது. அங்கு போலியான தகவலை பரப்பியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த மாதம் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சமூக காரணங்களுக்காக பயன்படுத்துவது, பெண்கள் தலைமையில் வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் விவசாயத்தில் புதுமைகள் ஆகியவை குறித்து அவர்கள் விவாதித்தனர்.

    உலக முழுவதும் ஐரோப்பிய யூனியனை தவிர்த்து குறைந்தது 64 நாடுகளில் இந்த ஆண்டு பொது தேர்தல் நடக்கிறது.

    • பதவியை ராஜினாமா செய்து அமேசான் நிறுவனத்தில் இணைந்தார்.
    • மிகைல் பராகின் விண்டோஸ் பிரிவுக்கு தலைமை வகித்தார்.

    ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் பவன் தவுலுரி மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பொறுப்பில் பனோஸ் பனய் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு பனோஸ் தனது பதவியை ராஜினாமா செய்து அமேசான் நிறுவனத்தில் இணைந்தார்.

    முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் குழுக்களை தனியாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனி அதிகாரிகளை தலைமை பதவிகளில் நியமித்து இருந்தது. அதன்படி தவுலுரி சர்பேஸ் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தார். மிகைல் பராகின் விண்டோஸ் பிரிவுக்கு தலைமை வகித்தார்.

    பராகின் புதிய பதவிகளில் பணியாற்ற விரும்பியதை அடுத்து, தவுலுரி விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவுகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தவுலுரி ஐ.ஐ.டி. மெட்ராஸ்-இல் பட்டம் பெற்றவர் ஆவார். இதன் மூலம் இவர் உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமை பொறுப்பேற்ற இந்தியர்கள் பட்டியலில் தவுலுரி இணைந்துள்ளார்.

    • பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • கேமிங் பிரிவில் இருந்து 8 சதவீதம் பேர் வேலையிழக்க உள்ளனர்.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆக்டிவிஷன் ப்லிசர்ட் மற்றும் எக்ஸ்பாக்ஸ்-இல் பணியாற்றி வருவோரில் சுமார் 1900 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. தொழில்நுட்ப துறையில் பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மைக்ரோசாப்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

    தற்போதைய அறிவிப்பின் மூலம் மைக்ரோசாப்ட் கேமிங் பிரிவில் இருந்து 8 சதவீதம் பேர் வேலையிழக்க உள்ளனர். இதில் பாதிக்கப்படுவதில் பெரும்பாலானோர் ஆக்டிவிஷன் ப்லிசர்ட்-இல் பணியாற்றுவோர் ஆவர்.

     


    ப்லிசர்ட் தலைவர் மைக் யபரா மற்றும் டிசைன் பிரிவின் மூத்த அலுவலர் ஆலென் ஆதெம் ஆகியோரும் நிறுவனத்தை விட்டு வெளியேறுகின்றனர். இதோடு ப்லிசர்ட் ஏற்கனவே அறிவித்து இருந்த கேம் ஒன்றும் நிறுத்தப்படுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்து இருக்கிறது.

    சமீபத்தில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் 5 லட்சத்து 73 ஆயிரத்து 621 கோடி ரூபாய்க்கு ஆக்டிவிஷன் ப்லிசர்ட் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. இதன் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனம் கேமிங் பிரிவில் அதிக கவனம் செலுத்தவும், கேமிங்கில் முன்னணியில் உள்ள சோனியை எதிர்கொள்ளவும் திட்டமிட்டது.

    • மிட்நைட் ப்ளிசார்ட் எனும் ஹேக்கர் குழு ரஷிய ஆதரவுடன் செயல்படுகிறது
    • 2023 நவம்பரிலும் இக்குழு தாக்குதல் நடத்த முயன்றதாக மைக்ரோசாப்ட் தெரிவித்தது

    கணினிகளை பயன்படுத்த முக்கியமாக தேவைப்படுவது "இயக்க முறைமை" எனும் ஆபரேட்டிங் சிஸ்டம் (Operating System).

    உலக அளவில் கம்ப்யூட்டர்களில் பரவலாக பயன்படுத்தப்படும் ஆபரேட்டிங் சிஸ்டம், விண்டோஸ்.

    இதை தயாரிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் மாநில ரெட்மண்ட் (Redmond) பகுதியில் உள்ள மைக்ரோசாப்ட்.

    நேற்று, தனது நிறுவன பாதுகாப்பு கட்டமைப்பு குறித்து மைக்ரோசாப்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் அந்நிறுவனம் தெரிவித்திருப்பதாவது:

    சைபர் தாக்குதல்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    கடந்த 12 அன்று ரஷிய ஆதரவுடன் செயல்படும் மிட்நைட் ப்ளிசார்ட் (Midnight Blizzard) எனும் "ஹேக்கர்" (hacker) குழு, மைக்ரோசாப்டின் கார்ப்பரேட் மென்பொருள் கட்டுமானத்திற்கு உள்ளே அத்துமீறி ஹேக் செய்தது. பல ஈ-மெயில்களையும், பணியாளர்களின் கணக்கிலிருந்து சில கோப்புகளையும் திருடியது.

    மூத்த அதிகாரிகள், சட்டத்துறை மற்றும் சைபர் பாதுகாப்பு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரின் ஈ-மெயில்கள் திருடப்பட்டுள்ளன.

    அக்குழுவினரின் செயல்கள் குறித்து எங்கள் நிறுவனம் அறிந்துள்ள ரகசிய தகவல்கள் என்னென்ன என வேவு பார்க்க இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

    கடந்த 2023 நவம்பரில் "பாஸ்வேர்ட் ஸ்பிரே தாக்குதல்" எனும் முறையில் இதே குழு, பல முக்கிய அதிகாரிகளின் மின்னஞ்சல்களை ஊடுருவ முயன்றது.

    அரசாங்க துணையுடன் செயல்படும் குழுக்களால் இது போன்ற தாக்குதல்கள் தொடர்கிறது.

    இவ்வாறு மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

    சில தினங்களுக்கு முன், நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்பில் சைபர் தாக்குதல்கள் நடைபெற்றால் அது குறித்தும், அதன் தாக்கம் குறித்தும் நிறுவனங்கள் அனைத்து தகவல்களையும் வெளியிட வேண்டும் என அமெரிக்காவில் புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவில் 2022 இறுதியில் இருந்தே ஆட்குறைப்பு தொடங்கியது
    • 50 சதவீத ஊதிய குறைப்புக்கு முன்வந்தாலும் பணி கிடைப்பது கடினமாக உள்ளது

    கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

    2022 இறுதியில் தொடங்கி, டெஸ்லா, எக்ஸ், மெட்டா, கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கின.

    உலகெங்கும் இருந்து அந்நிறுவனங்களில் பணியாற்ற சென்ற ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைக்காததால் விசா காலம் நிறைவடைந்து அமெரிக்காவில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    இந்தியாவிலிருந்தும் அவ்வாறு பணியாற்ற சென்று ஆட்குறைப்பு நடவடிக்கையில் பணியிழந்தவர்களில் பலர் மீண்டும் தாயகம் திரும்பினர்.

    ஆனால், அவர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    2023ல் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கி விட்டன.

    இங்கு பணியிழக்கும் ஊழியர்கள் ஊதியம் குறைந்தாலும், வேறு வேலை கிடைத்தால் போதும் எனும் முடிவில் கிடைக்கும் நிறுவனங்களில் உடனடியாக பணியில் சேர்கின்றனர்.

    அமெரிக்காவிலிருந்து வரும் இந்திய ஊழியர்கள் பெற்ற ஊதியத்துடன் ஒப்பிட்டால் இங்கு பணியில் இருப்பவர்களுக்கும், வேலையிழப்பினால் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வருபவர்களுக்கும் நிறுவனங்கள் வழங்க வேண்டிய ஊதியம் மிகக் குறைவு.

    எனவே, அங்கிருந்து வருபவர்களுக்கு தகுதி இருந்தும் வேலை கிடைப்பது கடினமாக உள்ளது.

    அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் தகவல் தொழில்நுட்ப துறையில் காலியிடங்கள் மிக குறைவாக உள்ளதாகவும், ஒரே பணிக்கு 100க்கும் மேற்பட்ட திறமை வாய்ந்த ஊழியர்கள் விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் மனிதவள நிபுணர்கள் தெரிவித்தனர்.

    சுமார் 50 சதவீதம் வரை ஊதியத்தை குறைத்து கொள்ள அவர்கள் முன்வந்தாலும், மீண்டும் பணி கிடைப்பதே கடினமாகி வருகிறது.

    அங்கும் வேலை இழந்து, இங்கும் வேலை கிடைக்காமல், பல வருட சேமிப்புகளும் நாளுக்கு நாள் கரைந்து அவர்களின் நிலை நலிவடைந்து வருகிறது.

    2024-ஆம் வருடத்திலும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை நீடித்தால், மேலும் பல சாஃப்ட்வேர் துறை ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    • அதிக மதிப்பு மிக்க நிறுவனம் என்ற அந்தஸ்த்தை எட்டியது.
    • அஸ்யூர் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததும் காரணம் என தகவல்.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. சத்ய நாதெல்லா தலைமை வகிக்கும் நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி சந்தையில் அதிக மதிப்பு மிக்க நிறுவனம் என்ற அந்தஸ்த்தை எட்டியுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி மைக்ரோசாப்ட் சந்தை மதிப்பு 2.87 டிரில்லியன் டாலர்கள் ஆகும். முன்னதாக 2018 மற்றும் 2021 ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதே போன்று உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற நிலையை எட்டியது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் இந்த அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது.

     


    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூடிங் பிரிவான அஸ்யூர் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததே அந்தஸ்த்து அதிகரிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அமேசான் வெப் சேவைகளுக்கு கடும் போட்டியாளரான அஸ்யூர் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 40 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது.

    கிளவுட் கம்ப்யூடிங் பிரிவில் மைக்ரோசாப்ட் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும், இதன் சந்தை மதிப்பு மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது. இதேபோன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்தும் போது மைக்ரோசாப்ட்-இன் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    ×