என் மலர்
நீங்கள் தேடியது "ஏஐ"
- செயற்றை நுண்ணறிவுத்துறை மிகவும் போட்டி வாய்ந்த துறையாக மாறிவிட்டது.
- ஏ.ஐ. ஒரு நீர்க்குமிழி போன்றது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் நிறுவனர் பில்கேட்ஸ். அபுதாபியில் நடந்த தொழில்மாநாட்டில் பில்கேட்ஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஏ.ஐ. துறையில் முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "செயற்றை நுண்ணறிவுத்துறை மிகவும் போட்டி வாய்ந்த துறையாக மாறிவிட்டது. இருப்பினும் இந்தநிலை வருங்காலத்தில் நீடிக்குமா என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் சொல்வேன். ஏ.ஐ. ஒரு நீர்க்குமிழி போன்றது. இதில் அனைத்து நிறுவனங்களின் முதலீடுகளும் உயருமா என்று கேட்டால் வாய்ப்பில்லை. ஆகையால் முதலீட்டாளர்கள் ஒரு மாபெரும் சரிவுக்கு தயாராக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
- 218-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 1,22,000-க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
- மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை AI, கிளவுட் கம்ப்யூட்டிங் மீது திருப்பின.
செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பம் இந்த ஆண்டு அசுர வளர்ச்சி கண்டது. கூகுள் ஜெமினி, ஓபன் ஏஐ சாடஜிபிடி, மெட்டா ஏஐ, பெரிப்ளெக்ஸிட்டி ஏஐ, டீப்சீக் என ரக ரகமாக வெகு ஏஐ மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
குறிப்பாக நிறுவனங்கள் தங்கள் பணிகளை எளிதாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கின.
இதனால் மனிதர்கள் செய்து வந்த பல தொழில்நுட்ப வேலைகளுக்கு ஏஐ ஆப்பு வைத்தது. நடப்பாண்டில் உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர்.

சர்வதேச பணிநீக்க கண்காணிப்பு வலைத்தளமான 'Layoffs.FYI' இன் தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள 218-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 1,22,000-க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஆட்டோமேஷனை நோக்கி பெரு நிறுவனங்கள் நகர்ந்து வருவதே இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஏஐ மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பு ஆகிய காரணங்களை நிறுவனங்கள் வெளிப்படையாகவே பணிநீக்கங்களின்போது குறிப்பிடுகின்றன.
கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை AI, கிளவுட் கம்ப்யூட்டிங் மீது திருப்பின. இதன் விளைவாக, பாரம்பரிய பிரிவுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

தொழில்நுட்பம் மட்டுமின்றி உற்பத்தி, நிதி மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடந்துள்ளது.
2025 இல் அதிக பணிநீக்கம் நடைபெற்ற நிறுவனங்களின் பட்டியல்
1) இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்தாண்டு 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
2)மைக்ரோசிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் (Intel) தனது 24,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
3) தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசோன் (Verizon) 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
4) மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏஐ மீது முதலீடு செய்வதால் செலவுகளை குறைக்கும் நோக்கில் பல்வேறு பிரிவுகளில் 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. குறிப்பாக இதில் பலர் சாப்ட்வேர் இன்ஜீனியர்கள் ஆவர்.
5) ஐ.டி. கம்பெனியான அக்சென்சர் (Accenture) ஏஐக்கு தங்களை தகவமைத்து கொண்டிராத 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
6) இந்தியாவை சேர்ந்த ஐ.டி. சேவை நிறுவனமான டி.சி.எஸ் (TCS) 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இது அந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஓராண்டில் நடந்த மிகவும் அதிக பணிநீக்கம் ஆகும்.
7) எலக்ரானிக் உற்பத்தி நிறுவனமான பானாசோனிக் (Panasonic) 10,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது.
8) எரிசக்தி துறையில் முக்கிய நிறுவனமான செவ்ரான் (Chevron) 8,000 முதல் 10,000 ஊழியர்களை நீக்கியது.
9) அழகுசாதனப் பொருட்கள்நிறுவனமான எஸ்டீ லாடர் (Estee Lauder) விற்பனைச் சரிவைச் சமாளிக்க 7,000ஊழியர்களை நீக்கியது.
10) தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிஃபோனிக்கா (Telefonica) 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
செலவுக் குறைப்பு மற்றும் செயல்திறனை அதிகரித்தல், ஏஐக்கு தகவமைத்துக் கொள்ளுதல் ஆகிய காரணங்களையே பெரும்பாலான நிறுவனங்கள் பணிநீக்கங்களுக்கு மேற்கோள் காட்டி உள்ளன.

இவை தவிர்த்து பல்வேறு தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் கணிசமான பணிநீக்கங்களை இந்தாண்டு மேற்கொண்டுள்ளன. டிசிஎஸ், மைக்ரோசாப்ட், அசென்சர், அமேசான் போன்ற நிறுவனங்களின் இந்திய பிரிவில் பணியாற்றி வந்த ஊழியர்களும் இந்த பணிநீக்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
ஏஐ மென்மேலும் வளர்ந்து வருவதால் இந்த பணிநீக்க போக்கு அடுத்தாண்டும் இன்னும் கூடுதலாக தொடரும் என்றே தொழிலுட்ப வட்டாரங்கள் கணிக்கின்றன. ஒட்டுமொத்தமாக மனிதர்களின் வேலைகளை தொழில்நுட்பங்கள் பறிக்கும் சைன்ஸ் பிக்ஷன் அதிபுனைவு நினைவாகி வருகிறது.
- ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
- இந்த முன்மொழியப்பட்ட மசோதா முயல்கிறது
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவரை போன்ற போலியான உருவத்தை உருவாக்குவதே deep fake. இவற்றின் மூலம் ஒருவரை ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக நடிகைகள், பிரபலங்கள் இதற்கு இரையாகி உள்ளனர். மேலும் பெண்களை தவறாக சித்தரித்து பிளாக் மெயில் செய்யவும் இது பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே Deep fake ஒழுங்குமுறை மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவில் deep fake களை உருவாக்குதல், விநியோகித்தல் மற்றும் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கான தெளிவான சட்ட கட்டமைப்பை நிறுவ இந்த முன்மொழியப்பட்ட மசோதா முயல்கிறது என்று அவர் கூறினார்.
இந்த மசோதா, தேசிய பாதுகாப்பு அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கும், deep fake தனியுரிமை, பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் தேர்தல்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்கும் ஒரு deep fake பணிக்குழுவை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஷிண்டே கூறினார்.
- AI ஒரு எரிச்சலூட்டும் விதமாக தான் இருக்கிறது.
- AI தொழில்நுட்பம் வளர வளர பாதிப்பும் அதிகரித்து வருகிறது
ரிவால்வர் ரீட்டா' பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கீர்த்தி சுரேஷ், "இப்போ இருக்கின்ற பெரிய பிரச்சனை AI. தொழில்நுட்பம் என்பது மனிதர்கள் கண்டுபிடித்தது. அது நம்மையே மீறி எங்கேயோ போகின்றது போல் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் பார்க்கும்போது, நான் இதுபோன்று உடை அணிந்தேனா என்று..? அவ்வளது ரியலாக இருக்கிறது பார்ப்பதற்கு..
சமீபத்தில் நடந்த படப்பூஜையின் புகைப்படங்களில் என் டிரஸ்ஸ பாத்து நானே ஷாக் ஆயிட்டேன். அவ்வளவு ஆபாசமாக நான் போஸ் கொடுக்கவில்லையே என்று. அப்போது தான் தெரிந்தது நான் இல்லை. என்னை வைத்து உருவாக்கிய AI படம் என்று.. AI ஒரு எரிச்சலூட்டும் விதமாக தான் இருக்கிறது. இது எங்கு போகுதுன்னு தெரியல. தொழில்நுட்பம் வளர வளர பாதிப்பும் அதிகரித்து வருகிறது" என்று தெரிவித்தார்.
கீர்த்தி சுரேஷ் பேசியது தொடர்பாக நடிகர் விஜய் ஆன்டனியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "வரும் காலங்களில் AI தொழில்நுட்பத்தால் விவசாயிகள் அதிக அளவில் பயன்பெற வாய்ப்புள்ளது. மனிதனின் உழைப்பை எளிமைப்படுத்தும் ஒரு தளமாக தான் தற்போதைய AI விளங்கி வருகிறது" என்று தெரிவித்தார்.
கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற 28-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், `ரிவால்வர் ரீட்டா' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "AI" குறித்து பகிர்ந்துக் கொண்டார்.
இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில்," இப்போ இருக்கின்ற பெரிய பிரச்சனை AI. தொழில்நுட்பம் என்பது மனிதர்கள் கண்டுபிடித்தது. அது நம்மையே மீறி எங்கேயோ போகின்றது போல் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் பார்க்கும்போது, நான் இதுபோன்று உடை அணிந்தேனா என்று..? அவ்வளது ரியலாக இருக்கிறது பார்ப்பதற்கு..
சமீபத்தில் நடந்த படப்பூஜையின் புகைப்படங்களில் என் டிரஸ்ஸ பாத்து நானே ஷாக் ஆயிட்டேன். அவ்வளவு ஆபாசமாக நான் போஸ் கொடுக்கவில்லையே என்று. அப்போது தான் தெரிந்தது நான் இல்லை. என்னை வைத்து உருவாக்கிய AI படம் என்று..
AI ஒரு எரிச்சலூட்டும் விதமாக தான் இருக்கிறது. இது எங்கு போகுதுன்னு தெரியல. தொழில்நுட்பம் வளர வளர பாதிப்பும் அதிகரித்து வருகிறது" என்றார்.
- பயனர்கள் அவற்றை மேலும் ஒரு தகவல் ஆதாரமாகக் கருத வேண்டும்.
- எந்தவொரு நிறுவனமும் தப்ப முடியாது, எங்களுக்கும் சேர்த்துதான்.
கூகுள் உடைய தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து எச்சரித்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ உடைய புழக்கம் அதிகரித்து வருகிறது.
அண்மையில் பிசிசிக்கு அவர் அளித்த பேட்டியில், செயற்கை நுண்ணறிவு பிழைகளை செய்ய வாய்ப்புள்ளது. எனவே அவை சொல்லும் அனைத்தையும் கண்ணை மூடித்தனமாகக் நம்பிவிடக் கூடாது. பயனர்கள் அவற்றை மேலும் ஒரு தகவல் ஆதாரமாகக் கருத வேண்டும்.
இந்தத் தொழில்நுட்பத்தின் முழு பலன்களையும் மக்கள் பெற வேண்டுமானால், ஏஐ தரும் தகவல்களுடன் மற்ற நம்பகமான தகவல் ஆதாரங்களையும் ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முதலீடுகள் அதிகரித்து வருவது குறித்து பேசிய அவர், இந்த ஏஐ முதலீட்டு குமிழி வெடித்தால் எந்தவொரு நிறுவனமும் தப்ப முடியாது, எங்களுக்கும் சேர்த்துதான். இணையதளம் அறிமுகமானபோது அதில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டன. அதன் தாக்கம் ஆழமானது. அது போல தான் ஏஐ துறையும்" என்று தெரிவித்தார்.
மேலும் ஏஐ அடிப்படையிலான சூப்பர் சிப்களை தாங்கள் உருவாக்கி வருவதாகவும், ஓபன் ஏஐ உடைய சாட்ஜிபிடி போட்டியை எதிர்கொள்ள ஆல்பாபெட் தனது முதலீடுகளை இரட்டிப்பாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
- அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன.
- ஏஐ மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பு காரணமாக கூறப்படுகிறது.
உலகெங்கிலும் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
சர்வதேச பணிநீக்க கண்காணிப்பு வலைத்தளமான 'Layoffs.FYI' இன் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை 218 நிறுவனங்கள் 1,12,700 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஆட்டோமேஷனை நோக்கி பெரு நிறுவனங்கள் நகர்ந்து வருவதே இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஏஐ மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பு ஆகிய காரணங்களை நிறுவனங்கள் வெளிப்படையாகவே பணிநீக்கங்களின்போது குறிப்பிடுகின்றன.
- இந்தாண்டு தொடக்கத்தில் AI பிரிவில் புதிதாக 50 பேரை பணிக்கு அமர்த்தியது.
- ஏற்கனவே வருடக் கணக்கில் வேலை செய்து வந்தவர்களை பணிநீக்கம் செய்தனர்.
இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பதால் நன்மை ஏற்பட்டாலும், பெரும்பாலும் தீங்காகவே அமைகிறது. அந்த வகையில், AI தொழில் நுட்பம் வந்த பிறகு பல துறைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில், மெட்டா நிறுவனம் தற்போது சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையாக மெட்டாவில் பணிபுரியும் சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அந்நிறுவனத்தின் AI பிரிவு தலைமை அதிகாரி அலெக்சாண்டர் வாங் தெரிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் AI உள்கட்டமைப்பு அலகுகள், அடிப்படை செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி பிரிவு (FAIR) மற்றும் பிற தயாரிப்பு தொடர்பான பதவிகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இந்தாண்டு தொடக்கத்தில் AI பிரிவில் புதிதாக 50 பேரை பணிக்கு அமர்த்தி, ஏற்கனவே வருடக் கணக்கில் வேலை செய்து வந்தவர்களை பணிநீக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தற்போது, அட்லஸ் வெப் பிரவுசர் ஆப்பிள் MacOS பயனர்கள் பயன்படுத்தலாம்
- விரைவில் Windows, iOS மற்றும் Android இயங்குதளங்களிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இப்போதுவரை இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி, டீப்சீக், எக்ஸ் குரோக் ஆகியவையே நிறுவனங்கள் கோலோச்சி வருகின்றன.
இதில் சாட்ஜிபிடியை மிக அதிகமானோர் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கூகுள் குரோமுக்கு போட்டியாக ஓபன் ஏஐயின் சாட்ஜிபிடி அட்லஸ் வெப் பிரவுசர் களம் இறங்கியுள்ளது.
தற்போது, அட்லஸ் வெப் பிரவுசர் ஆப்பிள் MacOS பயனர்கள் இதை பயன்படுத்தக்கூடிய நிலையில், விரைவில் Windows, iOS மற்றும் Android இயங்குதளங்களிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் குரோமைப் போலவே இதுவும் Chromium based பிரவுசர் என்பதால், கூகுள் குரோமுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூகுளுக்கு சுமார் $150 பில்லியன் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- உலகப் பிரமாண்டங்களைப் பின்னுக்கு தள்ளி முதன்மை ஏஐ செயலியாக பெர்ப்ளெக்சிட்டி உயர்ந்துள்ளது.
- சமீப காலங்களில் இந்தியா சிறந்த கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது மட்டுமில்லாமல் அவற்றை உருவாக்குவதிலும் முன்னணியில் உயர்ந்து நிற்கிறது.
ஏஐ (AI) சார்ந்து உலகமே மாறி வரும் இந்த வரலாற்று தருணத்தில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) செயலியின் பயன்பாடு வரலாற்றிலேயே முதன்மையான மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிலும் முதல் இடத்தைப் பிடித்து சாட்ஜிபிடி, ஜெமினி போன்ற உலகப் பிரமாண்டங்களைப் பின்னுக்கு தள்ளி முதன்மை ஏஐ செயலியாக பெர்ப்ளெக்சிட்டி உயர்ந்துள்ளது.
இந்தியாவை சார்ந்த புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவு சேவை பெரும் வெற்றி பெற்றிருப்பது பெருமையான தருணம் ஆகும். பெர்ப்ளெக்சிட்டி சாதாரண சாட்பாட் சேவையாக மட்டுமின்றி தேடல் (Search), உரையாடல் (Cha), மற்றும் உற்பத்தித் திறன் கருவிகளை ஒருங்கிணைக்கும் ஒரு செயலியாக இருக்கிறது.
மாணவர்கள், படைப்பாளர்கள், தொழில்முனைவோர், மற்றும் அலுவலக வல்லுநர்கள் ஆகியோருக்கு இது தினசரி வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஏஐ செயலியின் மில்லியன் கணக்கான பதிவிறக்கங்கள் இதன் வெற்றியை எடுத்துக்காட்டுகின்றன.
தீபாவளி சீசனில் பெர்ப்ளெக்சிட்டியின் வெற்றி, இந்திய தொழில்நுட்பத் துறையின் பெருமையையும் உலக அரங்கில் அதன் வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. சமீப காலங்களில் இந்தியா சிறந்த கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது மட்டுமில்லாமல் அவற்றை உருவாக்குவதிலும் முன்னணியில் உயர்ந்து நிற்கிறது.
- பல செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளும் இதை வெளியிட்டன.
மகரிஷி வால்மீகி வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தோன்றும் ஒரு திரைப்படத்தின் டிரைலர் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.
இந்த வீடியோ வேகமாகப் பரவிய நிலையில், பல செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளும் இதை செய்தியாக வெளியிட்டன.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து தனது சமூக வலைதளத்தில் அக்ஷய் குமார் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், "நான் மகரிஷி வால்மீகி வேடத்தில் நடித்ததாகக் காட்டப்படும் சில ஏஐ வீடியோக்களை நான் சமீபத்தில் பார்த்தேன்.
அந்த வீடியோக்கள் அனைத்தும் போலியானவை என்றும், ஏஐ-யைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்றும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், சில செய்தி சேனல்கள் இதைச் சரிபார்க்காமல் செய்தி என்று எடுத்துக்கொண்டன" என்று குறிப்பிட்டுள்ளார்.
- புடவைகளில் இருக்கும் புகைப்படங்களை பெண்கள் ஜெமினியில் ஜெனரேட் செய்து பதிவிட்டனர்.
- ஜெமினியில் புகைப்படங்களை எடிட் செய்வது பாதுகாப்பானதா? என்று கேள்வி எழுந்துள்ளது.
கூகுளின் Gemini Al தளம் மூலம் உருவக்கப்படும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
Gemini 2.5 Flash Image Tool மென்பொருளை பயன்படுத்தி இந்த புகைப்படங்களை ஜெமினி நொடிகளில் உருவாக்கித் தருகிறது.
Nano Banana என அழைக்கப்படும் இந்த புதிய ட்ரெண்ட்-ல் இணையவாசிகள் தங்களுக்கு விருப்பமான புகைப்படங்களை ஜெனரேட் செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக புடவைகளில் இருக்கும் அழகான புகைப்படங்களை பெண்கள் ஜெமினியில் ஜெனரேட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர்.
இந்நிலையில், ஜெமினியில் புகைப்படங்களை எடிட் செய்வது பாதுகாப்பானதா? என்று கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பெண் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜெமினியில் புடவையுடன் இருக்கும்படியாக ஒரு புகைப்படம் ஜெனரேட் செய்தேன். ஆனால் அதில், நான் கொடுத்த படத்தில் தெரியாத என்னுடைய மச்சம் ஜெனரேட் செய்யப்பட்ட படத்தில் உள்ளது. ஆகவே ஆன்லைனில் பதிவிடப்படும் அனைத்து அனைத்து புகைப்படங்களையும் ஏஐ கவனிக்கிறது. ஆகவே புகைப்படங்களை பதிவிடும்போது கவனமாக இருங்கள்" என்று தெரிவித்தார்.






