என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Visakhapatnam"

    • ஆந்திர அரசு ஒதுக்கிய 480 ஏக்கர் நிலத்தினை அதானி நிறுவனத்திற்கு மாற்ற ரெய்டன் இன்ஃபோடெக் ஒப்புதல்
    • மாநில அரசு ரூ.22,000 கோடியை ஊக்கத்தொகையாக வழங்குகிறது

    ஏஐ தரவு மையங்கள் அமைப்பதற்காக ஆந்திர அரசு ஒதுக்கிய 480 ஏக்கர் நிலத்தினை அதானி நிறுவனத்திற்கு மாற்ற ரெய்டன் இன்ஃபோடெக் ஒப்புதல் அளித்துள்ளது.

    ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் அனகப்பள்ளி மாவட்டங்களில் அமையவுள்ள இந்த திட்டத்தில் அதானி இன்ஃப்ரா (இந்தியா) பிரைவேட் லிமிடெட், அதானி கோனெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், அதானி பவர் இந்தியா பிரைவேட் லிமிடெட், பாரதி ஏர்டெல் லிமிடெட், என்எக்ஸ்ட்ரா டேட்டா லிமிடெட் மற்றும் என்எக்ஸ்ட்ரா விசாக் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் தங்கள் கூட்டாளிகள் என முன்னரே மாநில அரசிடம் கூகிளுக்கு சொந்தமான ரெய்டன் தெரிவித்தது.

    இந்நிலையில்," 28/11/2025 ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன்படி, விசாகப்பட்டினம் மற்றும் அனகப்பள்ளி மாவட்டங்களில் உள்ள 480 ஏக்கர் நிலத்தை அதானி இன்ஃப்ரா (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு அரசாங்கம் இதன் மூலம் அனுமதி அளிக்கிறது" என டிசம்பர் 2 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திராவில் ஏஐ தரவு மையங்களை அமைக்க ரெய்டன் நிறுவனம் ரூ. 87,500 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ள நிலையில், மாநில அரசு ரூ.22,000 கோடியை ஊக்கத்தொகையாக வழங்குகிறது.

    • விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகப் பகுதிக்கு அருகே விபத்து நிகழ்ந்தது.
    • எரிவாயு சிலிண்டர், வெல்டிங் பணியின்போது திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

    விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகப் பகுதிக்கு அருகே உள்ள பழைய பொருட்கள் சேகரிப்பு கடையில் எரிவாயு சிலிண்டர், வெல்டிங் பணியின்போது திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.

    இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

    சம்பவம் இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினரும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மாநகர காவல் ஆணையர் சங்கபத்ரா பாக்சி உத்தரவிட்டார்.

    • சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றிற்கு மட்டுமே 2 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும்.
    • இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கூகிள் இந்த முதலீட்டைச் செய்கிறது.

    ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 50,000 கோடி) முதலீட்டில், 1 ஜிகாபைட் திறன் கொண்ட தரவு மையத்தை (data center) கூகுள் நிறுவனம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக ஆந்திரப்ரதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

    இந்தியாவில் இவ்வளவு பெரிய தொகையை கூகிள் முதலீடு செய்வது இதுவே முதல் முறை. மேலும், ஆசியாவில் இவ்வளவு பெரிய தரவு மையம் இவ்வளவு அதிக செலவில் கட்டப்படுவது இதுவே முதல் முறை.

    இந்த தரவு மையத்திற்கு மின்சாரம் வழங்க, சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றிற்கு மட்டுமே 2 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கூகிள் இந்த முதலீட்டைச் செய்கிறது.

    நேற்று முன் தினம் சிங்கப்பூரில் நடைபெற்ற வணிக வட்டமேசை மாநாட்டில் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், கூகிள் கிளவுட் இயக்குனர் ட்ரூ பெய்ன்ஸை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஆலையில் எஃகு உருக்கும் அமைப்பு-2ல் உள்ள எந்திரத்தில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
    • எந்திரத்தில் எண்ணெய் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    விசாகப்பட்டினம்:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் எஃகு ஆலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஆலையில் எஃகு உருக்கும் அமைப்பு-2ல் உள்ள எந்திரத்தில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. பின்னர் தீ மளமளவென்று மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அங்கு புகை மூட்டம் ஏற்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக போராடினார்கள்.

    ஒரு எந்திரத்தில் எண்ணெய் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், பின்னர் தீ அருகில் இருந்த கேபிள்கள், எந்திரங்களுக்கு பரவியதாகவும் கூறப்படுகிறது.

    • தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
    • தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையாக வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்து கார்களுக்கு வேகமாக பரவி எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் விலை உயர்ந்த பல கார்கள் எரிந்து நாசமானது. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    தீ விபத்தில் கார்களின் சேதம் குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தவளைகளின் உடலில் உள்ள முட்கள் குத்தினால் கடுமையான வலி ஏற்படும்.
    • தவளைகளை பத்திரமாக கொண்டு சென்று நடுக்கடலில் விட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று ருசி கொண்டா கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது அவர்களது வலையில் முட்களுடன் கூடிய தவளை கூட்டம் ஒன்று சிக்கியது. அதனை மீனவர்கள் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.


    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், பெரிய உயிரினங்கள் தங்களை தாக்கும் போது இந்த வகை தவளைகள் தங்களது உடலில் உள்ள முட்களை பயன்படுத்தி தங்களை தற்காத்துக் கொள்கின்றன.

    இந்த தவளைகளின் உடலில் உள்ள முட்கள் குத்தினால் கடுமையான வலி ஏற்படும் என தெரிவித்தனர். பின்னர் தவளைகளை பத்திரமாக கொண்டு சென்று நடுக்கடலில் விட்டனர்.

    • உடலை துணியால் போர்த்தி நடுவில் தூக்கி வைத்துக் கொண்டு பைக்கில் சென்றனர்.
    • உடந்தையாக இருந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள சலூரு மண்டலம் மர்ரி வாணி வலசா கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 20).

    இவர் அங்குள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தார். அங்குள்ள தத்தி வலசை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு. இவர் ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் வாகனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் திருமணமானதை மறைத்து ஐஸ்வர்யாவை காதலிப்பதாக கூறினார்.

    இதனைத் தொடர்ந்து பல இடங்களில் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். ராம் பாபுவை முழுமையாக நம்பிய ஐஸ்வர்யா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.

    தொடர்ந்து அவர் வற்புறுத்தியதால் ராம்பாபுவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. கடந்த 27-ந் தேதி இருவரும் விசாகப்பட்டினம் சென்றனர். அரிலோவா என்ற இடத்தில் இருவரும் சந்தித்து பேசினர்.

    அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஐஸ்வர்யா கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராம்பாபு ஐஸ்வர்யாவின் கழுத்தை கயிறால் இறுக்கினார். இதில் ஐஸ்வர்யா துடிதுடித்து இறந்தார்.

    போலீசில் சிக்காமல் இருக்க ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டது போல நாடகம் ஆட ராம்பாபு முடிவு செய்தார்.

    இதுகுறித்து அவருடைய நண்பர் ஒருவரை வரவழைத்தார். ஒரு பைக்கில் உடலை கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதன்படி ஐஸ்வர்யாவின் உடலை துணியால் போர்த்தி நடுவில் தூக்கி வைத்துக் கொண்டு பைக்கில் சென்றனர்.

    தேசிய நெடுஞ்சாலையில் சென்றால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்பதால் கிராமப் பகுதியில் வழியாக அவர்கள் நள்ளிரவில் இளம்பெண் பிணத்துடன் சென்று கொண்டிருந்தனர்.

    நடுவழியில் பைக்கில் பெட்ரோல் தீர்ந்து நின்றது. இதனையடுத்து அவர்கள் மற்றொரு நண்பர் மூலம் பெட்ரோல் கொண்டு வந்து நிரப்பினர்.

    பின்னர் 3 பேரும் சேர்ந்து இளம்பெண் உடலை 105 கிலோமீட்டர் கொண்டு சென்றனர். ஒரு முந்திரி தோட்டத்தில் ஐஸ்வர்யாவை தூக்கில் தொங்க விட்டு சென்று விட்டனர்.

    அந்தப் பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர. இதில் ஐஸ்வர்யா ராம்பாபுவை காதலித்தது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    விசாரணையில் ஐஸ்வர்யாவை கொலை செய்து பைக்கில் கொண்டு வந்து தூக்கில் தொங்க விட்டதாக ராம்பாபு தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் சட்டப் பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது.
    • ஆந்திர சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்குகிறது.

    விஜயதசமி முதல் ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என்று அம்மாநில சட்டமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று ஆந்திர பிரதேச சட்டமன்ற கூட்டம் கூடியது.

    ஆந்திர பிரதேச மாநிலத்தின் மழைகால கூட்டத் தொடர் நாளை (செப்டம்பர் 21) துவங்க இருக்கும் நிலையில், இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில், புதிய தலைநகர் பற்றிய அறிவிப்பு வெளியானது. நவம்பர் 2-ம் தேதி துவங்கும் விஜயதசமி நாள் முதல் முதலமைச்சர் அலுவலகம் விசாகப்பட்டினத்திற்கு மாறுகிறது.

    இதே போன்று மற்ற அமைச்சர்களும் விசாகப்பட்டினத்தில் இருந்து பணியாற்ற தயாராக வேண்டும். ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியே பிரிந்ததில் இருந்து, ஆந்திரா மாநில தலைநகராக அமராவதி நகரம் செயல்பட்டு வருகிறது. இம்மாநிலத்தின் மிகப் பெரிய நகரம் விசாகப்பட்டினம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடற்கரை விமானங்கள் வானத்தில் வட்டமிட்டபடி குறுக்கும் நெடுக்கமாக சென்று சாகசத்தில் ஈடுபட்டனர்.
    • சாகச நிகழ்ச்சியில் போர் விமானங்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

    திருப்பதி:

    கடற்படை தினத்தை முன்னிட்டு ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ராமகிருஷ்ணா கடற்கரையில் நேற்று முதல் முறையாக கடற்படை வீரர்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று மாலை 4 மணி அளவில் சூரியன் மறையும் பின்னணியில் கடற்கரை விமானங்கள் வானத்தில் வட்டமிட்டபடி குறுக்கும் நெடுக்கமாக சென்று சாகசத்தில் ஈடுபட்டனர்.

    சாகச நிகழ்ச்சியை கடற்கரை வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வீட்டின் மாடி மற்றும் பால்கனிகளில் இருந்து பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    ஹெலிகாப்டர்களில் ராணுவ வீரர்கள் தாழ்வாக பறந்து வந்து சாகசத்தில் ஈடுபட்ட நிகழ்ச்சியை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    ஏரோ பாட்டிக்ஸ் கமாண்டோ படை வீரர்கள் விமானத்தில் பறந்து வந்து ஸ்கை டைவிங் செய்தபடி விமானத்தில் இருந்து குதித்து பாராசூட் மூலம் கடற்கரை மணலில் இறங்கினர். இந்த சாகச நிகழ்ச்சியில் போர் விமானங்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

    மேலும் போர்க்கப்பல்களும் நீர்மூழ்கி கப்பல்களும் கடற்கரை சாலையை நெருங்கி வந்து தீப்பிழம்பை கொட்டியது.

    கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் பொது மக்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

    மீண்டும் டிசம்பர் 2-ந்தேதி மற்றும் இறுதி சாகச நிகழ்ச்சி டிசம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
    • விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், 11 வயதில், ஆந்திராவின் உள்நாட்டு (domestic) அணியுடன் பயிற்சி செய்யத் தொடங்கினார்.

    இந்தியா -இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எஸ்.பாரத் ஆந்திர கிரிக்கெட் சங்கத்தால் கவுரவிக்கப்பட்டார்.

    அவர் தனது சொந்த ஊர் மைதானத்தில் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியதால் கௌரவிக்கப்பட்டுள்ளார். சொந்த ஊர் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் மாநிலத்தின் இரண்டாவது கிரிக்கெட் வீரர் பரத் ஆவார்.

     

    விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், 11 வயதில், ஆந்திராவின் உள்நாட்டு (domestic) அணியுடன் பயிற்சி செய்யத் தொடங்கினார். 2005-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி நடந்தபோது, அந்த போட்டியில் கே.எஸ்.பாரத் பால் யாயாக (Ball boy) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவருக்கு முன்னர் இரு ஆந்திர வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி உள்ளனர். அவர்கள் விஹாரி, எம்எஸ்ஏகே பிரசாத் ஆகியோர் ஆவர்.

    • தீ விபத்து ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது .
    • விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

    விசாகப்பட்டினம் ரெயில் நிலையத்தில் நின்றிருந்த ரெயிலின் 3 ஏசி பெட்டிகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    B6, B7,M1 ஆகிய 3 பெட்டிகளில் மளமளவெனப் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து அணைத்தனர்.

    சத்தீஸ்கரின் கோர்பா நகரில் இருந்து விசாகப்பட்டினம் வந்திருந்த ரெயிலிலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு தீப்பிடித்ததால், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த தீ விபத்து விசாகப்பட்டினம் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது .

    • கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டார்.
    • வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு இருப்பது தெரியவந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அனக்கா பள்ளியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர்.

    இளம்பெண் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பம் தரித்தார். ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளதால் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள இளம் பெண்ணிற்கு விருப்பம் இல்லை.

    இதனால் மருந்து கடைக்கு சென்று கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டார். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் இளம்பெண்ணுக்கு பாதி அளவு கரு கலைந்தது.

    இதனால் கடந்த 3 வருடங்களாக இளம் பெண் வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். கடந்த வாரம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் இளம் பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் ஆபரேஷன் செய்து இளம் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடை அகற்றினர்.

    தற்போது இளம் பெண் நலமுடன் இருப்பதாகவும் ஒரு வார சிகிச்சைக்கு பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ×