search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suicides"

    • 15 தினங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது
    • விஷ மாத்திரையை தின்று மயங்கி கிடந்துள்ளார்.

    பல்லடம்: 

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கே.ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது 67). விவசாயி. இவரது மனைவி கடந்த 15 தினங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் மன வேதனையுடன் இருந்த ராஜாமணி நேற்று தென்னை மரத்திற்கு வைக்கப்படும் விஷ மாத்திரையை தின்று மயங்கி கிடந்துள்ளார். அக்கம்-பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மோகனப்பிரியா 7-ம் வகுப்பு படித்து வந்தார்
    • சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்

    சூலூரைச் சேர்ந்தவர் பிரதீப். இவரது மகள் மோகனப்பிரியா(12). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று விடுமுைற என்பதால் வீட்டில் இருந்தார். அப்போது அவரது தாய் வீட்டை சுத்தம் செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால் அவர் அறைக்கு சென்று தாழிட்டு கொண்டார்.

    வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது அறைக்குள் மோகனப்பிரியா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று மகளை மீட்டு சிகிச்சைக்காக சூலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் விஷம் குடித்து தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • 4 ஆயிரத்து 543 பேர் குணமடைந்தனர் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது

    மதுரை

    சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர், மதுரை அரசு மருத்து வமனை நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்விகள் எழுப்பி யிருந்தார். அதற்கு மருத்துவ மனை நிர்வாகம் பதில் அளித்தது. அதில் மதுரை மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு 2 ஆயிரத்து 380 பேரும், 2022-ம் ஆண்டு 2 ஆயிரத்து 550 பேரும் என மொத்தம் 4 ஆயிரத்து 930 பேர் விஷம் குடித்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் 2021-ம் ஆண்டு 180 பேரும், 2022-ம் ஆண்டு 207 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

    அதாவது 2 ஆண்டுகளில் மட்டும் 387 பேர் விஷம் குடித்து இறந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் விஷம் குடித்தோருக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக பிரிவு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    அங்கு மருத்துவ குழுவினரின் துரித சிகிச்சை காரணமாக 4 ஆயிரத்து 543 பேர் குணமடைந்தனர் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சீவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கரா புரம் வட்டம் மூங்கில்து றைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டு பகுதி யைச் சேர்ந்தவர் ராம கிருஷ்ணன். இவரது மனைவி சஞ்சீவி (வயது 21). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சீவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தாக கூறப்படுகிறது.

    இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வடபொ ன்பரப்பி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சஞ்சீவியின் தந்தை தர்மலிங்கம், தனது மகளை சந்தேகப்பட்டு அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும், தற்கொலைக்கு தூண்டி யதாகவும் மருமகன் ராமகிருஷ்ணன், அவரது தந்தை ராமசாமி, தாய் ஜெயக்கொடி ஆகிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் ெசய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சஞ்சீவிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் அவரது தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா விசாரணை செய்து வருகிறார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டுப்புதூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்நிலையில் சரவணன் நேற்று வீட்டில் வாங்கி வைத்திருந்த தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை குடித்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டுப்புதூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தாமணி (35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    இந்நிலையில் சரவணன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் கணவன் மனைவியே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.

    இந்நிலையில் சரவணன் நேற்று வீட்டில் வாங்கி வைத்திருந்த தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை குடித்துள்ளார். உடனே அவரை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி சாந்தாமணி பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தார். போரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முத்து செல்வி அம்பை பகுதியில் ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
    • முத்து செல்வி மட்டும் தனது குழந்தையுடன் அணைந்தநாடார்பட்டியில் வசித்து வருகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே இடைகாலை அடுத்த அணைந்தநாடார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 31).

    இவருக்கு முத்து செல்வி(27) என்ற மனைவியும், பென்ஷிகா(7) என்ற மகளும் உள்ளனர். சுரேஷ் சென்னையில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    முத்து செல்வி அம்பை பகுதியில் ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் மட்டும் தனது குழந்தையுடன் அணைந்தநாடார்பட்டியில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த முத்து செல்வி தனது கணவருடன் செல்போனில் பேசி உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனை அடைந்த முத்துசெல்வி வீட்டில் இருந்த எலிமருந்தை எடுத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மேலும் தனது 7 வயது குழந்தைக்கும் அதனை கொடுத்துள்ளார்.

    சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர். வீட்டில் அவர்கள் மயங்கி கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூரை விட்டத்தில் மணிகண்டன் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார். .
    • தற்கொலை குறித்து மணிகண்டனின் சகோதரி சௌந்தர்யா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து பல்லடம் போலீசார் விசாரணை

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள குன்னாங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பால்பாண்டி மகன் மணிகண்டன்(வயது 24). அதே பகுதியில் உள்ள சாய தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு அவர் வரவில்லை. உடன் பணிபுரிபவர் வேலைக்கு வராததை குறித்து கேட்பதற்காக சென்றுள்ளார். அப்போது மணிகண்டன் தங்கியிருந்த அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது .கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியே பார்த்தபோது உள்ளே கூரை விட்டத்தில் மணிகண்டன் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார்.

    இதையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த தற்கொலை குறித்து மணிகண்டனின் சகோதரி சௌந்தர்யா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கோவையில் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாத விரக்தியில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை கரும்புக்கடை அருகே உள்ள ஆசாத் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் என்கிற அப்துல் ரகுமான் (வயது 55). கூலித் தொழிலாளி.

    மது பழக்கத்துக்கு அடிமையான இவர் தினசரி குடித்துக்கொண்டே இருந்தார். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அப்துல் ரகுமானை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இனிமேல் மது குடிக்க கூடாது என கூறினர். இதனால் கடந்த சில நாட்களாக அப்துல் ரகுமான் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட அப்துல் ரகுமானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கணபதி அருகே உள்ள சிந்தாமணி நகரை சேர்ந்தவர் சரவணன் (48). வேலைக்கு செல்லும் இவர் தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சரவணன் வி‌ஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி அருகே வெவ்வேறு சம்பவங்களில் முதியவர் - வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி கருமண்டபம் வடக்கு தெருவை சேர்ந்த ராமசாமி (வயது 60). குடிப்பழக்கம் உடையஇவர் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இதில் அவர் மனைவி கோபித்துக் கொண்டு செல்லவே, மனம் உடைந்த ராமசாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலைகைப் பற்றிய செ‌ஷன்ஸ்கோர்ட்டு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி திருவானைக் காவல் கீழகொண்டயம் பேட்டை, குமரன் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (34). இவரது மனைவி லட்சுமி (32). கொரோனா காலகட்டம் காரணமாக அவருக்கு சரியான வேலை இல்லாமல் இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த ரமேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடலை கைப்பற்றிய ஸ்ரீரங்கம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நன்னிலம் அருகே வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள அதம்பாவூர் மேல தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 46). இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். சமீபகாலமாக மனநிலை சரி இல்லாமல் இருந்து வந்தாநிலையில் 20ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். அக்கம் பக்கத்தினர் மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லும் வழியிலேயே அன்பழகன் இறந்தார். இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சித்தோடு அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    சித்தோடு, நடுப்பாளையம் பகுதியை சேர்தவர் கார்த்திபன் (29). பேக்கரி பொருள்கள் தயாரித்து ஊர் ஊராக விற்பனை செய்துவரும் தொழில் நடத்தி வந்தார்.

    கடந்த 6 மாதமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் ஈரோடு சென்று பணம் வாங்கி வருவதாக கூறி சென்றுள்ளார். பின் வாட்ஸ் அப்பில் ஏதோ தகவல் போட்டிருப்பதாக உறவினர் ஒருவரின் போன் மூலம் குடும்பத்தாருக்கு தகவல் தெரிந்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து, கார்த்திபன் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் இடத்திற்கு சென்று பார்க்கும் போது இரும்பு ஆங்கிலில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு சித்தோடு அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கார்த்திபன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    நெல்லை மாவட்டத்தில் மனைவி இறந்த துக்கத்தில் 2 முதியவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பணகுடி அருகே உள்ள நெருஞ்சி காலனி பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 71).

    இவரது மனைவி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார். அப்போது முதல் ஜார்ஜ் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.

    அடிக்கடி மனைவி சென்ற இடத்திற்கு செல்ல போகிறேன் என்று கூறி வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது ஜார்ஜ் வி‌ஷம் குடித்தார்.

    அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாளை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து (70), விவசாயி. இவரது மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதைத்தொடர்ந்து இசக்கி முத்து, மனைவி சென்ற இடத்திற்கே செல்லப்போவதாக தன்னை பார்க்க வந்த உறவினர்களிடம் கூறி வந்தார். அப்போது இருந்து மிகவும் மனமுடைந்து காணப்பட்ட இசக்கிமுத்து நேற்று வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பாளை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×