என் மலர்
நீங்கள் தேடியது "Andhra"
- ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க தெலுங்கு நடிகர்கள் காத்திருந்தனர்.
- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டசபையில் சலசலப்பு
ஆந்திர சட்டசபையில் சட்டம் ஒழுங்கு குறித்த விவாதத்தின்போது, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏவும் நடிகருமான பாலகிருஷ்ணா, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை, சட்டப்பேரவையில் வைத்து சைக்கோ என திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை கேட்டு ஆத்திரமடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஆவேசமுற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. காமினேனி ஸ்ரீனிவாஸ், 'முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில், முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க தெலுங்கு நடிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அவர்களை சந்திக்க ஜெகன் மோகன் நேரமே ஒதுக்கவில்லை. சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின்னரே, அவர் நேரம் ஒதுக்கினார்" என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட பாலகிருஷ்ணா, "தெலுங்கு நடிகர்கள் ஒரு 'சைக்கோ'வை சந்திக்க சென்றனர்" என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பேசிய பாலகிருஷ்ணா, "சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின் தான், தெலுங்கு நடிகர்களை ஜெகன் மோகன் சந்தித்தாக கூறுவது பொய்" என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய சிரஞ்சீவி, "ஜெகன் மோகன் அழைப்பின் பேரிலேயே அவரது வீட்டுக்குச் சென்றேன். தெலுங்கு திரையுலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவரிடம் விளக்கினேன்" என்று தெரிவித்தார்.
- ஆண்டு வருவாய் பற்றாக்குறை 33,186 கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் மதிப்பீடு.
- ஆனால், 4 மாதத்திற்குள் வருவாய் பற்றாக்குறை 36,741 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
ஆந்திராவின் வருவாய் பற்றாக்குறை பட்ஜெட் மதிப்பீட்டில் ஆண்டு முழுவதும் ரூ. 33,186 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் நான்கு மாதங்களில் 110 சதவீதத்தை தாண்டி ரூ.36,741 கோடியை எட்டியுள்ளது, இது.
இது ஆந்திர மாநிலம் கடன்களையோ அல்லது மத்திய அரசின் உதவியையோ பெரிதும் நம்பியிருக்க வேண்டியிருக்கும் என்பதைக் குறிக்கிறது.
தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) வெளியிட்ட சமீபத்திய புள்ளிவி வரங்களின்படி, ஏப்ரல்- ஜூலை மாதத்திற்கான நிதிப் பற்றாக்குறை ரூ. 48,354.02 கோடியாக இருந்தது, இது நிதியாண்டிற்கான திட்டமிடப்பட்ட ரூ. 79,926.90 கோடியில் சுமார் 61 சதவீதம்.
இந்தக் காலகட்டத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.16,754.91 கோடியாகும், இது முழு ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டான ரூ.57,477.15 கோடியில் 29.15 சதவீதமாகும்.
இந்த முழு ஆண்டிற்கான மொத்த வருவாய் வரவுகளான ரூ.2,97,929.16 கோடியில், மாநிலம் முதல் நான்கு மாதங்களில் 33 சதவீதம் அல்லது ரூ.98,281.42 கோடியை அடைந்தது. இதில் ரூ.49,198.29 கோடி கடன்கள் மற்றும் பிற பொறுப்புகளிலிருந்து பெறப்பட்டது.
இந்தியா தரவரிசைகள் மற்றும் ஆய்வு (India Ratings & Research) தனது சமீபத்திய அறிக்கையில், மாநில அரசு 2026 நிதியாண்டிற்கான வருவாய் பற்றாக்குறை 1.8 சதவீதமாகவும், மாநில ஜிடிபியில் 4.4 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிட்டுள்ளது, ஜிடிபி-யில் கடன் 35.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக துறைகள் சார்ந்த திட்டங்களுக்காக மாநிலம் ரூ.50,000 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது.
- ஆந்திராவில் 12 சதவீத பெண்கள் கருவுறுத்தல் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
- 3,4-வது குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அரசு சார்பில் ரூ 50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
ஆந்திராவில் 2047-ம் ஆண்டுக்குள் முதியவ ர்களின் எண்ணிக்கை 23 சதவீதமாக உயரக்கூடும் என்பதால் அதை மனதில் கொண்டு மக்கள் தொகையை உயர்த்த மேலாண்மை திட்டத்தை மாநில அரசு தயாரித்து வருகிறது.
அதன்படி குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு பின்பற்ற வேண்டிய உக்திகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
ஆந்திராவில் 12 சதவீத பெண்கள் கருவுறுத்தல் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் அவர்கள் செயற்கை முறை கருத்தரித்தல் மையங்களை தேடி செல்கின்றனர்.
செயற்கை முறை கருத்தலுக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவாகிறது. இதற்கான நிதி உதவியை மாநில அரசு வழங்க முன் வந்துள்ளது. இதேபோல் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் குடும்பத்திற்கு சொத்து வரிகளில் இருந்து விலக்கு அளிக்க உள்ளது.
3,4-வது குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அரசு சார்பில் ரூ 50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தபட உள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களின் குழந்தைகளை பராமரிக்க பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
விரைவில் இதுகுறித்து புதிய சட்டம் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சலுகை திட்டங்களால் ஆந்திராவில் உள்ள பெண்கள் உற்சாகமாக உள்ளனர்.
- கிராமத்தில் உள்ள பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் சேர்ந்து 4 மாணவர்கள் படித்து வந்தனர்.
- ஒரே ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார்.
ஆந்திர மாநிலம் மடிகேரா பொம்மன பள்ளியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 170 மாணவ, மாணவிகள் படித்தனர். கிராமத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேலை தேடி ஐதராபாத்திற்கு புலம் பெயர்ந்து சென்றனர்.
இதனால் கிராமத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்தது. மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் தனியார் பள்ளி மோகத்தால் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்து வருகின்றனர். இதனால் கிராமத்தில் உள்ள பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் சேர்ந்து 4 மாணவர்கள் படித்து வந்தனர்.
ஒரு சில காரணங்களால் 3 மாணவர்கள் பள்ளிக்கு வருவதே இல்லை. இந்த பள்ளியில் தற்போது ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். ஒரே ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார்.
- ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டர் கார் டயரில் சிக்கி உயிரிழந்தார்.
- ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டிரைவர் ரமண ரெட்டி என்பவரை கைது செய்தனர்
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர் செலி சிங்கையா (வயது 62) என்பவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
இதனையடுத்து, ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது கார் ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேர் மீது மரணத்தை விளைவித்த குற்றத்தின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில், விபத்து ஏற்படுத்திய ஜெகன் மோகனின் புல்லட்ப்ரூப் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டர் கார் டயரில் சிக்கி உயிரிழந்தார்.
- ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டிரைவர் ரமண ரெட்டி என்பவரை கைது செய்தனர்.
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர் செலி சிங்கையா (வயது 62) என்பவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாக பரவியது.
இதனையடுத்து, போலீசார் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டிரைவர் ரமண ரெட்டி என்பவரை கைது செய்தனர். மேலும் ஜெகன் மோகன் ரெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
ஜெகன் மோகன் ரெட்டியின் தனி உதவியாளர் கே.நாகேஷ்வர் ரெட்டி, ஒய்.வி.சுப்பாரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னி வெங்கடராமையா, முன்னாள் அமைச்சர் விடடலா ரஜினி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் உரிய நடைமுறை மற்றும் பொருந்தக்கூடிய சட்ட விதிகளின்படி சட்ட நடவடிக்கை தொடரும் என்று எஸ்.பி. குமார் கூறினார்.
- ஒவ்வொரு 150 மீட்டர் தூரத்திற்கு ஒரு டிஜிட்டல் திரை அமைக்கப்பட உள்ளது.
- யோகாசன தினத்தில் ஆந்திரா முழுவதும் 20 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.
சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் இருந்து பீமிலி கடற்கரை வரை 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு யோகாசனம் நடைபெறுகிறது.
இதில் அனக்கா பள்ளி, அல்லூரி சீதாராம ராஜ், விஜயநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த 5 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
கின்னஸ் சாதனைக்காக இந்த யோகாசனம் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை தலைமை செயலாளர் கிருஷ்ணா பாபு கூறுகையில்:-
ஒவ்வொரு 150 மீட்டர் தூரத்திற்கு ஒரு டிஜிட்டல் திரை அமைக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திற்கு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. யோகாசன தினத்தில் ஆந்திரா முழுவதும் 20 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.
அவர்களுக்கு மாநில அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வழித்தடத்தில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.
- சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கர்னூலின் புறநகர்ப் பகுதியான துபாடு அருகே உள்ளபெங்களூரு ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் 6 மீட்டர் அகலம் 16 மீட்டர் ஆழமும் கொண்ட திடீர் பள்ளம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் வேகமாக வந்த கார் சாலையின் நடுவில் சாய்வதற்கு பதிலாக ஒரு பக்கமாக சாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த வழித்தடத்தில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.
சில வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டாலும் பெரும்பாலான வாகனங்கள் நேற்று இரவு 8 மணி வரை அங்கேயே சிக்கித் தவித்தன.
இந்தப் பகுதியில் சுரங்கப்பாதை பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். அதனை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
- ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மரக்கட்டைகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன.
- சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் அதிரடிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நடத்திய வாகன சோதனையில், ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மரக்கட்டைகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கடத்தலில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கருப்பு நிற கோடுகளுடன் கூடிய அடர் பச்சை நிற மீன் ஒன்று சிக்கியது.
- கடலின் அடிப்பகுதியில் வாழும் பிசாசு மீன்கள் ஆறுகள் வழியாக குளங்களை அடைவதாகக் கூறப்படுகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் குரோசூரில் உள்ள ஒரு குளத்தில் வண்ணமயமான மீன்கள் காணப்பட்டன. முக்காந்தி என்ற உள்ளூர் மீனவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது கருப்பு நிற கோடுகளுடன் கூடிய அடர் பச்சை நிற மீன் ஒன்று சிக்கியது. அதன் உடல் முழுவதும் முட்கள் நிறைந்திருந்தது. உள்ளூர் மீனவர்கள் இதை சக்கர் மீன் என்று அழைக்கிறார்கள். சில பகுதிகளில் இது பிசாசு மீன் என்றும் அழைக்கப்படுகிறது.
கடலின் அடிப்பகுதியில் வாழும் பிசாசு மீன்கள் ஆறுகள் வழியாக குளங்களை அடைவதாகக் கூறப்படுகிறது. சிலர் இந்த மீன்களை மீன் தொட்டிகளில் வளர்க்கின்றனர். பிசாசு வகை மீன்களை சாப்பிடுவதில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.
- அழகிய ருஷிகொண்டா மலையின் கிட்டத்தட்ட பாதி பகுதி இந்த அரண்மனையை கட்டுவதற்காக அழிக்கப்பட்டுள்ளன.
- கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை கடுமையாக மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆந்திர மாநிலம் ரிஷி கொண்டா மலையில் முன்னாள் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி ரூ.500 கோடி அரசு செலவில் பிரம்மாண்டமான அரண்மனை ஒன்றை கட்டினார். இது முதல் மந்திரியின் முகாம் அலுவலகம் என கூறப்பட்டது.
இந்த கட்டிடத்தில் விலை உயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இது ஆந்திர மாநிலத்தின் ஷீஷ் மஹால் அரண்மனை என அழைக்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
பிரமாண்டமான வளாகத்தின் உள்ளே தங்க முலாம் பூசப்பட்ட அலங்காரங்கள், இத்தாலிய பளிங்கு தரை மற்றும் பட்டுப் போன்ற அலங்காரங்கள் உட்பட ஆடம்பரமான உட்புறங்களை கொண்டுள்ளது.
இந்த அரண்மனை ஒரு முக்கிய கடலோர சுற்றுலா மையமான அழகிய ருஷிகொண்டா பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் நன்கு பரந்த தொகுதிகளைக் கொண்டுள்ளது.
விரிவான உள்கட்டமைப்பு நடைபாதை சாலைகள், வடிகால் அமைப்புகள், 100 கே.வி. மின் துணை மின்நிலையம் ஆகியவை என வியக்கும் வைக்கும் வகையில் அபரிதமான செலவில் அமைக்கப்பட்டுள்ளன.
ஜெகன்மோகன் ரெட்டி கட்டிய ஷீஷ்மஹால் அரண்மனையின் பிரம்மாண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த ஆடம்பரமான கட்டுமானம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை கடுமையாக மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அழகிய ருஷிகொண்டா மலையின் கிட்டத்தட்ட பாதி பகுதி இந்த அரண்மனையை கட்டுவதற்காக அழிக்கப்பட்டுள்ளன. இது கடுமையான சுற்றுச்சூழல் கவலைகளை எழுப்புவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில்:-
முன்னாள் முதல் மந்திரி நீதிமன்றங்களை ஏமாற்றி சுற்றுச்சூழல்களை மீறி பிரம்மாண்ட மாக ஆடம்பர வாழ்க்கை நடத்துவதற்காக பொதுப் பணத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார்.
அரசியலில் இது போன்ற தலைவர்கள் இருப்பது உண்மையிலேயே நமக்கு தேவையா. இது போன்ற விவாகரத்தில் நீண்ட விவாதம் தேவை.
தற்போது இந்த கட்டிடங்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அவற்றிலிருந்து அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டுவது என்பதற்கு நாங்கள் எந்த விதமான ஆலோசனையும் செய்யவில்லை.
இந்த கட்டமைப்புகள் சுற்றுலாத் துறைக்கு சாத்தியமானது அல்ல. இந்த விவகாரத்தில் விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
டெல்லியில் முன்னாள் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அவருடைய பங்களாவை ஆடம்பரமாக ரூ.36 கோடி செலவில் புதுப்பித்தார்.
அதேபோல் ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஜெகன்மோகன் ரெட்டியும் ஷீஷ் மஹால் அரண்மனையை கட்டி உள்ளார் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஷீஷ் மஹால் அரண்மனை விவகாரம் ஆந்திர அரசியலில் தற்போது புதிய புயலை கிளப்பி உள்ளது. * * * ஷீஷ் மஹால் அரண்மனையின் பிரமாண்ட தோற்றம்.
- ராஜினாமா கடிதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியதாக தகவல்.
- ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு.
ஆந்திர மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகவும் இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஒய்.எஸ். சர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.
இவர் கடந்த 4ம் தேதி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். டெல்லி அலுவலகத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, ஆந்திர மாநிலத்தில் சர்மிளாவிற்கு முக்கிய பதவி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஆந்திர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை கடந்த வாரம் அவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
அண்மையில் கட்சியில் இணைந்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






