என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhra"

    • ஆந்திர அரசு ஒதுக்கிய 480 ஏக்கர் நிலத்தினை அதானி நிறுவனத்திற்கு மாற்ற ரெய்டன் இன்ஃபோடெக் ஒப்புதல்
    • மாநில அரசு ரூ.22,000 கோடியை ஊக்கத்தொகையாக வழங்குகிறது

    ஏஐ தரவு மையங்கள் அமைப்பதற்காக ஆந்திர அரசு ஒதுக்கிய 480 ஏக்கர் நிலத்தினை அதானி நிறுவனத்திற்கு மாற்ற ரெய்டன் இன்ஃபோடெக் ஒப்புதல் அளித்துள்ளது.

    ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் அனகப்பள்ளி மாவட்டங்களில் அமையவுள்ள இந்த திட்டத்தில் அதானி இன்ஃப்ரா (இந்தியா) பிரைவேட் லிமிடெட், அதானி கோனெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், அதானி பவர் இந்தியா பிரைவேட் லிமிடெட், பாரதி ஏர்டெல் லிமிடெட், என்எக்ஸ்ட்ரா டேட்டா லிமிடெட் மற்றும் என்எக்ஸ்ட்ரா விசாக் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் தங்கள் கூட்டாளிகள் என முன்னரே மாநில அரசிடம் கூகிளுக்கு சொந்தமான ரெய்டன் தெரிவித்தது.

    இந்நிலையில்," 28/11/2025 ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன்படி, விசாகப்பட்டினம் மற்றும் அனகப்பள்ளி மாவட்டங்களில் உள்ள 480 ஏக்கர் நிலத்தை அதானி இன்ஃப்ரா (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு அரசாங்கம் இதன் மூலம் அனுமதி அளிக்கிறது" என டிசம்பர் 2 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திராவில் ஏஐ தரவு மையங்களை அமைக்க ரெய்டன் நிறுவனம் ரூ. 87,500 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ள நிலையில், மாநில அரசு ரூ.22,000 கோடியை ஊக்கத்தொகையாக வழங்குகிறது.

    • மருத்துவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டிருக்கலாம் அல்லது தனக்குத்தானே ஊசி போட்டுக்கொண்டிருக்கலாம் என்று போலீசார் தகவல்.
    • அமெரிக்கா செல்லும் கனவு தடைப்பட்ட நிலையில் மருத்துவர் உயிர்மாய்ப்பு.

    ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோகிணி என்ற 38 வயது பெண் மருத்துவர், அமெரிக்க விசா மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஹைதராபாத்தில் உள்ள பத்மாராவ் நகரில் ரோகிணி தனியாக வசித்து வந்தநிலையில், குடும்பத்தினர் அவருக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் யாருடைய அழைப்பையும் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே ரோகிணி வீட்டு பணிப்பெண்ணும் நீண்டநேரம் கதவை தட்டியுள்ளார். ரோகிணி கதவைத் திறக்காததால், அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது இறந்தநிலையில் கிடந்துள்ளார்.

    இதுதொடர்பாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிர் மாய்ப்பு குறிப்பு ஒன்றையும் ரோகிணியின் அறையிலிருந்து எடுத்துள்ளனர். மருத்துவப் பணியில் கவனம் செலுத்தி வந்த ரோகிணி, அமெரிக்காவில் தனது எதிர்காலத்தை திட்டமிட்டிருந்துள்ளார். ஆனால் விசா மறுக்கப்பட்டதால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

    • இபிஎஸ் கல்லூரியில் ஒரு மாதத்திற்குள் 2 மாணவிகள் உயிர்மாய்ப்பு.
    • மாணவி மன உளைச்சலில் இருந்ததாக போலீசார் தகவல்

    ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் நர்சிங் மாணவி ஒருவர் நேற்று காலை தான் தங்கியிருந்த விடுதி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 19 வயது மாணவி பல்லவி, குப்பத்தில் உள்ள பிஇஎஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு (பிஎஸ்சி நர்சிங்) படித்து வந்தார்.

    போலீசாரின் கூற்றுப்படி பல்லவி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வியாழனன்று மாலை (20.11.25) விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். மாணவி குதித்ததை பார்த்த சக மாணவிகளும், அங்கிருந்த ஊழியர்களும் அவரைமீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் வெள்ளிக்கிழமை காலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல்லவியின் குடும்பத்தினர் கல்லூரி மற்றும் விடுதி நிர்வாகத்தை குற்றம் சாட்டியுள்ளனர். 

    முன்னதாக அக்.31ஆம் தேதி முதலாமாண்டு மாணவி ஒருவர் தூக்க மாத்திரை உட்கொண்டு இறந்த நிலையில், ஒரு மாதத்திற்குள் இரண்டு மாணவிகள் உயிரை மாய்த்துக்கொண்டது அங்குள்ள சக மாணவிகள் மத்தியிலும், ஊழியர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாத தொடக்கத்தில் சித்தூர் மாவட்டத்தில் பொறியியல் மாணவர்கள் இருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

    மற்றொரு மாணவர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஒரு பொறியியல் மாணவர் உயிரை மாய்த்துக்கொண்டார். மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்வது பெற்றோர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

    • ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க தெலுங்கு நடிகர்கள் காத்திருந்தனர்.
    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டசபையில் சலசலப்பு

    ஆந்திர சட்டசபையில் சட்டம் ஒழுங்கு குறித்த விவாதத்தின்போது, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏவும் நடிகருமான பாலகிருஷ்ணா, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை, சட்டப்பேரவையில் வைத்து சைக்கோ என திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை கேட்டு ஆத்திரமடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஆவேசமுற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது.

    சட்டசபையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. காமினேனி ஸ்ரீனிவாஸ், 'முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில், முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க தெலுங்கு நடிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அவர்களை சந்திக்க ஜெகன் மோகன் நேரமே ஒதுக்கவில்லை. சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின்னரே, அவர் நேரம் ஒதுக்கினார்" என்று தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட பாலகிருஷ்ணா, "தெலுங்கு நடிகர்கள் ஒரு 'சைக்கோ'வை சந்திக்க சென்றனர்" என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பேசிய பாலகிருஷ்ணா, "சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின் தான், தெலுங்கு நடிகர்களை ஜெகன் மோகன் சந்தித்தாக கூறுவது பொய்" என்று தெரிவித்தார்.

    இந்த விவகாரம் குறித்து பேசிய சிரஞ்சீவி, "ஜெகன் மோகன் அழைப்பின் பேரிலேயே அவரது வீட்டுக்குச் சென்றேன். தெலுங்கு திரையுலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவரிடம் விளக்கினேன்" என்று தெரிவித்தார்.

    • ஆண்டு வருவாய் பற்றாக்குறை 33,186 கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் மதிப்பீடு.
    • ஆனால், 4 மாதத்திற்குள் வருவாய் பற்றாக்குறை 36,741 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

    ஆந்திராவின் வருவாய் பற்றாக்குறை பட்ஜெட் மதிப்பீட்டில் ஆண்டு முழுவதும் ரூ. 33,186 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் நான்கு மாதங்களில் 110 சதவீதத்தை தாண்டி ரூ.36,741 கோடியை எட்டியுள்ளது, இது.

    இது ஆந்திர மாநிலம் கடன்களையோ அல்லது மத்திய அரசின் உதவியையோ பெரிதும் நம்பியிருக்க வேண்டியிருக்கும் என்பதைக் குறிக்கிறது.

    தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) வெளியிட்ட சமீபத்திய புள்ளிவி வரங்களின்படி, ஏப்ரல்- ஜூலை மாதத்திற்கான நிதிப் பற்றாக்குறை ரூ. 48,354.02 கோடியாக இருந்தது, இது நிதியாண்டிற்கான திட்டமிடப்பட்ட ரூ. 79,926.90 கோடியில் சுமார் 61 சதவீதம்.

    இந்தக் காலகட்டத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.16,754.91 கோடியாகும், இது முழு ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டான ரூ.57,477.15 கோடியில் 29.15 சதவீதமாகும்.

    இந்த முழு ஆண்டிற்கான மொத்த வருவாய் வரவுகளான ரூ.2,97,929.16 கோடியில், மாநிலம் முதல் நான்கு மாதங்களில் 33 சதவீதம் அல்லது ரூ.98,281.42 கோடியை அடைந்தது. இதில் ரூ.49,198.29 கோடி கடன்கள் மற்றும் பிற பொறுப்புகளிலிருந்து பெறப்பட்டது.

    இந்தியா தரவரிசைகள் மற்றும் ஆய்வு (India Ratings & Research) தனது சமீபத்திய அறிக்கையில், மாநில அரசு 2026 நிதியாண்டிற்கான வருவாய் பற்றாக்குறை 1.8 சதவீதமாகவும், மாநில ஜிடிபியில் 4.4 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிட்டுள்ளது, ஜிடிபி-யில் கடன் 35.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    கடந்த நான்கு மாதங்களில் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக துறைகள் சார்ந்த திட்டங்களுக்காக மாநிலம் ரூ.50,000 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது.

    • ஆந்திராவில் 12 சதவீத பெண்கள் கருவுறுத்தல் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
    • 3,4-வது குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அரசு சார்பில் ரூ 50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    ஆந்திராவில் 2047-ம் ஆண்டுக்குள் முதியவ ர்களின் எண்ணிக்கை 23 சதவீதமாக உயரக்கூடும் என்பதால் அதை மனதில் கொண்டு மக்கள் தொகையை உயர்த்த மேலாண்மை திட்டத்தை மாநில அரசு தயாரித்து வருகிறது.

    அதன்படி குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு பின்பற்ற வேண்டிய உக்திகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

    ஆந்திராவில் 12 சதவீத பெண்கள் கருவுறுத்தல் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் அவர்கள் செயற்கை முறை கருத்தரித்தல் மையங்களை தேடி செல்கின்றனர்.

    செயற்கை முறை கருத்தலுக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவாகிறது. இதற்கான நிதி உதவியை மாநில அரசு வழங்க முன் வந்துள்ளது. இதேபோல் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் குடும்பத்திற்கு சொத்து வரிகளில் இருந்து விலக்கு அளிக்க உள்ளது.

    3,4-வது குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அரசு சார்பில் ரூ 50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தபட உள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களின் குழந்தைகளை பராமரிக்க பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

    விரைவில் இதுகுறித்து புதிய சட்டம் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சலுகை திட்டங்களால் ஆந்திராவில் உள்ள பெண்கள் உற்சாகமாக உள்ளனர்.

    • கிராமத்தில் உள்ள பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் சேர்ந்து 4 மாணவர்கள் படித்து வந்தனர்.
    • ஒரே ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார்.

    ஆந்திர மாநிலம் மடிகேரா பொம்மன பள்ளியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 170 மாணவ, மாணவிகள் படித்தனர். கிராமத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேலை தேடி ஐதராபாத்திற்கு புலம் பெயர்ந்து சென்றனர்.

    இதனால் கிராமத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்தது. மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் தனியார் பள்ளி மோகத்தால் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்து வருகின்றனர். இதனால் கிராமத்தில் உள்ள பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் சேர்ந்து 4 மாணவர்கள் படித்து வந்தனர்.

    ஒரு சில காரணங்களால் 3 மாணவர்கள் பள்ளிக்கு வருவதே இல்லை. இந்த பள்ளியில் தற்போது ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். ஒரே ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார்.

    • ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டர் கார் டயரில் சிக்கி உயிரிழந்தார்.
    • ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டிரைவர் ரமண ரெட்டி என்பவரை கைது செய்தனர்

    ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர் செலி சிங்கையா (வயது 62) என்பவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

    இதனையடுத்து, ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது கார் ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேர் மீது மரணத்தை விளைவித்த குற்றத்தின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில், விபத்து ஏற்படுத்திய ஜெகன் மோகனின் புல்லட்ப்ரூப் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

    • ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டர் கார் டயரில் சிக்கி உயிரிழந்தார்.
    • ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டிரைவர் ரமண ரெட்டி என்பவரை கைது செய்தனர்.

    ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர் செலி சிங்கையா (வயது 62) என்பவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாக பரவியது.

    இதனையடுத்து, போலீசார் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டிரைவர் ரமண ரெட்டி என்பவரை கைது செய்தனர். மேலும் ஜெகன் மோகன் ரெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

    ஜெகன் மோகன் ரெட்டியின் தனி உதவியாளர் கே.நாகேஷ்வர் ரெட்டி, ஒய்.வி.சுப்பாரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னி வெங்கடராமையா, முன்னாள் அமைச்சர் விடடலா ரஜினி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் உரிய நடைமுறை மற்றும் பொருந்தக்கூடிய சட்ட விதிகளின்படி சட்ட நடவடிக்கை தொடரும் என்று எஸ்.பி. குமார் கூறினார்.

    • ஒவ்வொரு 150 மீட்டர் தூரத்திற்கு ஒரு டிஜிட்டல் திரை அமைக்கப்பட உள்ளது.
    • யோகாசன தினத்தில் ஆந்திரா முழுவதும் 20 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.

    சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் இருந்து பீமிலி கடற்கரை வரை 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு யோகாசனம் நடைபெறுகிறது.

    இதில் அனக்கா பள்ளி, அல்லூரி சீதாராம ராஜ், விஜயநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த 5 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

    கின்னஸ் சாதனைக்காக இந்த யோகாசனம் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

    இதுகுறித்து மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை தலைமை செயலாளர் கிருஷ்ணா பாபு கூறுகையில்:-

    ஒவ்வொரு 150 மீட்டர் தூரத்திற்கு ஒரு டிஜிட்டல் திரை அமைக்கப்பட உள்ளது.

    ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திற்கு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. யோகாசன தினத்தில் ஆந்திரா முழுவதும் 20 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.

    அவர்களுக்கு மாநில அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வழித்தடத்தில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.
    • சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கர்னூலின் புறநகர்ப் பகுதியான துபாடு அருகே உள்ளபெங்களூரு ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் 6 மீட்டர் அகலம் 16 மீட்டர் ஆழமும் கொண்ட திடீர் பள்ளம் ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் வேகமாக வந்த கார் சாலையின் நடுவில் சாய்வதற்கு பதிலாக ஒரு பக்கமாக சாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த வழித்தடத்தில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.

    சில வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டாலும் பெரும்பாலான வாகனங்கள் நேற்று இரவு 8 மணி வரை அங்கேயே சிக்கித் தவித்தன.

    இந்தப் பகுதியில் சுரங்கப்பாதை பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். அதனை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    • ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மரக்கட்டைகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் அதிரடிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    நடத்திய வாகன சோதனையில், ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மரக்கட்டைகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த கடத்தலில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×