என் மலர்
நீங்கள் தேடியது "GirlFriend Murder"
- உடலை துணியால் போர்த்தி நடுவில் தூக்கி வைத்துக் கொண்டு பைக்கில் சென்றனர்.
- உடந்தையாக இருந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள சலூரு மண்டலம் மர்ரி வாணி வலசா கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 20).
இவர் அங்குள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தார். அங்குள்ள தத்தி வலசை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு. இவர் ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் வாகனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் திருமணமானதை மறைத்து ஐஸ்வர்யாவை காதலிப்பதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து பல இடங்களில் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். ராம் பாபுவை முழுமையாக நம்பிய ஐஸ்வர்யா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.
தொடர்ந்து அவர் வற்புறுத்தியதால் ராம்பாபுவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. கடந்த 27-ந் தேதி இருவரும் விசாகப்பட்டினம் சென்றனர். அரிலோவா என்ற இடத்தில் இருவரும் சந்தித்து பேசினர்.
அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஐஸ்வர்யா கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராம்பாபு ஐஸ்வர்யாவின் கழுத்தை கயிறால் இறுக்கினார். இதில் ஐஸ்வர்யா துடிதுடித்து இறந்தார்.
போலீசில் சிக்காமல் இருக்க ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டது போல நாடகம் ஆட ராம்பாபு முடிவு செய்தார்.
இதுகுறித்து அவருடைய நண்பர் ஒருவரை வரவழைத்தார். ஒரு பைக்கில் உடலை கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதன்படி ஐஸ்வர்யாவின் உடலை துணியால் போர்த்தி நடுவில் தூக்கி வைத்துக் கொண்டு பைக்கில் சென்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் சென்றால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்பதால் கிராமப் பகுதியில் வழியாக அவர்கள் நள்ளிரவில் இளம்பெண் பிணத்துடன் சென்று கொண்டிருந்தனர்.
நடுவழியில் பைக்கில் பெட்ரோல் தீர்ந்து நின்றது. இதனையடுத்து அவர்கள் மற்றொரு நண்பர் மூலம் பெட்ரோல் கொண்டு வந்து நிரப்பினர்.
பின்னர் 3 பேரும் சேர்ந்து இளம்பெண் உடலை 105 கிலோமீட்டர் கொண்டு சென்றனர். ஒரு முந்திரி தோட்டத்தில் ஐஸ்வர்யாவை தூக்கில் தொங்க விட்டு சென்று விட்டனர்.
அந்தப் பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர. இதில் ஐஸ்வர்யா ராம்பாபுவை காதலித்தது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் ஐஸ்வர்யாவை கொலை செய்து பைக்கில் கொண்டு வந்து தூக்கில் தொங்க விட்டதாக ராம்பாபு தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- தீபாவின் வாயில் பூச்சிக்கொல்லி மருந்து ஊற்றுவதை பக்கத்து வீட்டை சேர்ந்த ஜீவனா என்ற 10 வயது சிறுமி பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
- கரீம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கமலிகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் வெங்கட்ராவ் பேட்டையை சேர்ந்தவர் தீபா (வயது 18). கல்லூரி மாணவி. அதே பகுதியை சேர்ந்தவர் கமலிகர். ஆட்டோ டிரைவர் இருவரும் காதலித்து வந்தனர்.
நெருக்கமாக பழகி வந்த இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தீபா காதலனை சந்திப்பதை தவிர்த்து வந்தார். தீபாவை சந்தித்து பேச கமலிகர் பலமுறை முயற்சி செய்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தீபாவின் பெற்றோர் மற்றும் சகோதரர் யாரும் வீட்டில் இல்லை. இதனை அறிந்த கமலிகர் தீபாவின் வீட்டிற்குள் நுழைந்தார்.
அப்போது வீட்டில் இருந்த தீபாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தினார். இதற்கு தீபா மறுப்பு தெரிவித்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த கமலிகர் தீபாவை சரமாரியாக தாக்கினார்.
பின்னர் தான் மறைத்து வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை வலுக்கட்டாயமாக தீபாவின் வாயில் ஊற்றினார்.
தீபாவின் வாயில் பூச்சிக்கொல்லி மருந்து ஊற்றுவதை பக்கத்து வீட்டை சேர்ந்த ஜீவனா என்ற 10 வயது சிறுமி பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தார்.
அவர்கள் வருவதற்குள் கமலிகர் அங்கிருந்து தப்பிச் சென்றார். தீபாவின் வீட்டிற்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரீம் நகர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரீம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கமலிகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள வடக்கனந்தல் காமராஜர் நகரை சேர்ந்தவர் அழகப்பிள்ளை. விவசாயி. இவரது மகள் அமராவதி (வயது 20). டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (28). இவர் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் குணசேகரனுக்கும், அமராவதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
கடந்த 1½ ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி அமராவதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் கவலை அடைந்த அவரது பெற்றோர் மகளை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
நேற்று மாலையில் வடக்கனந்தலில் உள்ள காட்டுப்பகுதியில் சிலர் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அங்குள்ள கிணற்றில் இளம்பெண் ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கச்சிராயப்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சண்முகம், கச்சிராயப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், மாணிக்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் கிடந்த உடலை மீட்டனர். அங்கு பிணமாக கிடந்தது அமராவதி என்பது தெரிய வந்தது.
போலீசார் அமராவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது அமராவதியை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் குணசேகரன் காதலித்து வந்தது தெரிய வந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது குணசேகரன் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் குணசேகரனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அமராவதியை கொலை செய்து உடலை கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து குணசேகரனை போலீசார் கைது செய்தனர். போலீசில் அவன் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
நானும், அமராவதியும் கடந்த 1½ ஆண்டாக காதலித்து வந்தோம். கடந்த 28-ந் தேதி இரவு 8 மணிக்கு அமராவதி என்னுடன் செல்போனில் பேசினாள். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளிக்கு வருமாறு கூறினாள். நான் அங்கு சென்று காத்திருந்தேன்.
9 மணி அளவில் அமராவதி அங்கு வந்தாள். பின்னர் நாங்கள் இருவரும் பேசி கொண்டிருந்தோம். அப்போது அமராவதி, எங்கள் வீட்டில் இருந்து ரூ.20 ஆயிரத்தை எடுத்து வந்துள்ளேன். நாம் 2 பேரும் கேரளா மாநிலம் சென்று அங்கு வைத்து திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்றாள்.
நான் அதற்கு மறுத்து விட்டேன். ஆனால், அமராவதி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் மீண்டும் வற்புறுத்தினாள். மேலும் அவள் எனது சட்டையை பிடித்து இழுத்தாள்.
இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். பின்னர் அமராவதி அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து, அவளது கழுத்தை இறுக்கினேன். சிறிது நேரத்தில் அவள் மூச்சு திணறி இறந்து விட்டாள். இதையறிந்த நான், அவளது உடலை தூக்கி சென்று அருகில் உள்ள கிணற்றில் வீசினேன்.
அதன் பின்னர் அமராவதி கொண்டு வந்த பணத்தை வைத்து கடந்த 4 நாட்களாக ஜாலியாக செலவு செய்தேன். ஆனால், போலீசார் துப்பு துலக்கி என்னை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட குணசேகரனை கள்ளக்குறிச்சி கோர்ட்டில் போலீசார் இன்று ஆஜர்படுத்துகிறார்கள்.
திருமணத்துக்கு வற்புறுத்தியதால் காதலியை துப்பட்டாவால் இறுக்கி காதலன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






