என் மலர்

    நீங்கள் தேடியது "Fishermen"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
    • அரசு மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த மீன வர்களை தனியாக பிரித்து ஈ.பி.சி. என்ற பிரிவை உருவாக்கியது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தங்களை ஈ.பி.சி. பிரிவிலிருந்து மாற்றி எம்.பி.சி. எனப்படும் மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கோரிக்கை மிகவும் நியாயமானது. 2005-ம் ஆண்டு வரை மிக பிற்படுத்தப்பட்டோர் என்ற சமூக பிரிவே புதுவையில் கிடையாது. பல போராட்டத் துக்கு பின் எம்.பி.சி. பிரிவு உருவாக்கப்பட்டது.

    இதன்பின் ஓ.பி.சி.யில் இருந்த 12 சமுதாயங்கள் எம்.பி.சி. பட்டியலில் சேர்க்கப்பட்டன. அதில், புதுவை, காரைக்கால், மாகி, ஏனம் மீனவர்களும் சேர்க்கப் பட்டனர். இவர்க ளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அர சாணை பிறப்பிக்கப்பட்டது.

    இந்த ஒதுக்கீடு 2010-ம் ஆண்டுவரை தொடர்ந்தது. 2010-ல் புதுவை அரசு மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த மீன வர்களை தனியாக பிரித்து ஈ.பி.சி. என்ற பிரிவை உருவாக்கியது.

    அதற்கு எம்.பி.சி. இட ஒதுக்கீடான 20 சதவீதத்தில் 2 சதவீதத்தை ஒதுக்கியது. இந்த பிரிவு புதுவை, காரைக்காலுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டது.

    இந்த நடைமுறையால், மீனவர் பிள்ளைகளுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உரிமைகள் பறிக்கப்பட்டு வஞ்சிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு எந்த சலுகையும் கிடைக்க வில்லை. எனவே காரைக்கால் மீனவர்களை மீண்டும் எம்.பி.சி.யில் சேர்க்கவேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விஸ்வகர்மா திட்டத்தில் மீனவர்கள் பயனடைந்தனர்.
    • பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் குமரன் உடனிருந்தார்.

    ராமநாதபுரம்

    மீன்பிடி, மண்பாண்டம் தயாரித்தல், பனை ஓலை பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சகம் விஷ்வ கர்மா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தில் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும் உறுப்பினர்களுக்கு தொழில் தொடங்க 5 சதவீத வட்டியில் முதற்கட்டமாக ரூ 1 லட்சம் வங்கி கடனுதவி அளிக்கப்படுகிறது. தவணை தொகையை உரிய காலத்தில் திரும்ப செலுத்தும் பாரம்பரிய தொழிலாளர்களுக்கு 2-ம் கட்டமாக ரூ.2 லட்சம் திரும்ப வழங்கப் படும்.

    இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் சம்மேளனம் பரிந்துரை படி காந்திஜி மீனவர் சங்க தலைவர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வட்டாணம் அருகே தாமோதர பட்டினத்தை சேர்ந்த நாட்டுப்படகு வலை பின்னும் தொழிலாளி பழனிவேல்,ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் சம்மேளன உறுப்பினர் ராமேஸ்வரம் நடராஜபுரத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர் கருப்பசாமி ஆகியோருக்கு கடந்த 17-ம் தேதி டெல்லியில் நடந்த விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அடையாள அட்டை வழங்கினார். பிரதமரை சந்தித்து விட்டு ஊர் திரும்பிய பழனி வேல்,கருப்பசாமி ஆகி யோரை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி ஆர்.முருகேசன் வர வேற்று வாழ்த்து தெரி வித்தார்.

    பழனிவேல் கூறுகையில், பாரம்பரிய தொழில்கள், அதனை சார்ந்த துணை தொழில்கள் அழிவின் விளிம்பில் சென்று விடாமல் இருக்க பிரதமர் மோடி தலைமையில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் நாடு முழுவதும் பராம்பரிய தொழில்கள் பாதுகாக்கப் பட்டுள்ளது என்றார்.

    பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் குமரன் உடனிருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு சென்று கொண்டிருந்த இழுவை கப்பல் மீனவர்கள் விசைப்படகு மீது மோதியது.
    • குமரி மாவட்ட மீனவர்கள் தங்களது இல்லங்களுக்கு வந்து சேர்ந்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் தூத்துறை சேர்ந்த பைஜு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 7 பேர், புதுவை மாநிலம் மற்றும் கடலூர் பகுதியை சேர்ந்த 2 பேர், அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 பேர், கேரளா சேர்ந்த ஒருவர் உட்பட 12 மீனவர்கள் ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு சென்று கொண்டிருந்த இழுவை கப்பல் மீனவர்கள் விசைப்படகு மீது மோதியது. இதில் அவர்களது விசைப்படகு நடுகடலில் மூழ்கியது. 12 மீனவர்களும் கடலிலே தத்தளித்துக்கொண்டிருந்த நேரத்தில் விபத்து ஏற்ப டுத்திய இழுவை கப்பல் 12 மீனவர்களை மீட்டு மாலத்தீவு கொண்டு சேர்த்தது.

    மாலத்தீவு அதிகாரிகள் 12 மீனவர்களையும் விசாரணை கைதிகளாக மாலத்தீவில் வைத்திருந்தனர். மாலத்தீவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விரைந்து சென்று 12 இந்திய மீனவர்களையும் சந்தித்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.

    பின்னர் மீனவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். இதையடுத்து 12 மீனவர்களும் விமானம் மூலம் மாலத்தீவில் இருந்து மும்பை வந்து சேர்ந்தனர்.

    பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் நேற்றிரவு 11 மணிக்கு திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர். அங்கி ருந்து மீனவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

    குமரி மாவட்ட மீனவர்கள் தங்களது இல்லங்களுக்கு வந்து சேர்ந்தனர். வீடுகளுக்கு வந்த மீனவர்களை அவரது உறவினர்கள் கட்டித்தழுவி கண்ணீர் மல்க வரவேற்றனர். மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட மாலத்தீவு இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தெற்காசிய மீனவர் தோழமை பணி சர்ச்சில் நன்றி தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 17 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • 8 மீனவர்களை சிறை பிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 5 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.

    இதில் அட்டமால் பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவரது விசைப்படகை சிறைபிடித்தனர். படகில் இருந்த ஜான்சன், அருண், முருகன், கிங்ஸ்டன், கிரிட்டன், முருகன், ராரல் மானிக்ஸ், ரிமோட்டன் ஆகிய 8 மீனவர்களை சிறை பிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெக தாப்பட்டினத்தை சேர்ந்த நடராஜன், கோவிந்தராஜ், சோனையன், சேப்பான், ராமகிருஷ்ணன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், ரங்கய்யன், அழகிரி முருகேசன், கருப்பையா உள்பட 2 விசைப்படகுகள் மற்றும் 9 மீனவர்களையும் கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

    ஒரே நாளில் மூன்று விசைப்படகுகள் மற்றும் 17 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள் ளது.

    மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்திட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சூறைக்காற்றின் வேகம் குறைந்ததால் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்றனர்.
    • இதனால் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் களை கட்டியது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக ராமேசு வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் இருந்து மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்தது. அவர்களுக்கான மீன்பிடி அனுமதியும் வழங் கப்படவில்லை.

    இதன் காரணமாக 1,650 விசைப்படகும், 6 ஆயிரத் துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் நான்கு நாட்க ளாக கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந் தன. இந்த நிலையில் இன்று காற்றின் வேகம் குறைந்ததின் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ராமேசு வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இன்று காலை சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கட லுக்கு மீன் பிடிக்க சென்ற னர். இதனால் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் களை கட்டியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 1,600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
    • மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் 1,600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக சூறைகாற்று வீசி வருகிறது. இன்றும் கடற்பகுதியில் காற்றின் வேகம் 55 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை இருக்கக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்பு இருக்கலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

    ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 26-ந்தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது படகின் என்ஜின் திடீரென பழுதானது.
    • கடலோர காவல்படையினர் ரோந்து படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காசிமேடு மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ராயபுரம்:

    காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடந்த 24-ந்தேதி ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் வேலு உள்பட 9 பேர் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

    கடந்த 26-ந்தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது படகின் என்ஜின் திடீரென பழுதானது. அதனை சரிபார்க்க முயன்றும் முடியவில்லை. இதனால் மீனவர்கள் 9 பேரும் கரைதிரும்ப முடியாமல் படகில் தத்தளித்தனர்.

    மேலும் காற்றின் திசைக்கு ஏற்ப விசைப்படகு நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் தங்களிடம் இருந்த வயர்லெஸ் மூலம் அருகில் மீன்பிடித்து கொண்டு இருந்த மற்ற தமிழக விசைப்படகுகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி ராயபுரத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மீன்வளத்துறை இயக்குனர் பழனிசாமி கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக கடலோர காவல்படையினர் ரோந்து படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காசிமேடு மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து 240 கடல் மைல் தூரத்தில் பழுதான படகில் மீனவர்கள் தத்தளிப்பதை அந்தபகுதி வழியாக வந்த சரக்கு கப்பலில் இருந்த ஊழியர்கள் கண்டு பிடித்தனர். அவர்கள் மீனவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்டவை கொடுத்து உதவினர். இதுபற்றி சரக்கு கப்பல் அதிகாரிகள் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கடலோரகாவல் படையினர் ரோந்து படகில் விரைந்து சென்று பழுதான விசைப்படகில் இருந்த காசிமேடு மீனவர்கள் 9 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

    பின்னர் விசைப்படகை தங்களது படகில் கயிறு மூலம்கட்டி இழுத்தபடி நேற்று இரவு அருகில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கு காசிமேடு மீனவர்கள் 9 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் துறைமுக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    விசைப்படகை சரிசெய்து மீனவர்கள் விரைவில் காசிமேடு திரும்ப உள்ளனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது.
    • மீன் பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரை திரும்பினர்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடி யக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது.

    இதனால் கடல் சீற்றமாக காணப்படுகிறது.

    இதனால் இன்று 2-வது நாளாக 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    ஒரு சில மீனவர்கள் கரையோரம் மீன்பிடிக்க சென்ற நிலையில் காற்று அதிகமாக வீசியதால் உடனடியாக கரை திரும்பி னார்.

    இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்ப டுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமநாதபுரம் மாவட்டத்தின் பிரதான தொழிலான மீன்பிடி தொழில் கடந்த சில தினங்களாக முடங்கியுள்ளது.
    • 8,800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 8-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதற்கிடையே ராமநாதபு ரம் மாவட்டத்தின் பிரதான தொழிலான மீன்பிடி தொழில் கடந்த சில தினங்களாக முடங்கியுள்ளது. ஒரு சில மீன் ரகங்களுக்கு போதிய விலையை ஏற்றுமதி நிறுவனங்கள் வழங்காததை கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மீன்பிடி தொழில் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசுவதால் மீனவர்கள் இரண்டாம் நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை.

    இது தொடர்பான எச்சரிக்கையையும் மீன்வளத் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்வதற்கான அனுமதி சீட்டும் வழங்கப்படவில்லை. குறிப்பாக ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தொண்டி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8,800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் மற்றும் அதன் சார்பு தொழிலாளர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். மீன்பிடி தொழில் முடங்கியதால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.10 முதல் ரூ.11 கோடி அளவிலான வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இயற்கை சீற்ற காலங்களில் படகுகள் சேதம் அடைவதை தடுக்கவும், படகுகளை நிறுத்தி வைக்கவும் ராமேசுவரம் பகுதியில் துறைமுகம் அமைக்க வேண்டும் எனவும், இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் வருமான இழப்பிற்கு மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாட்டின் எல்லையை காப்பவர்களாக மீனவர்கள் இருக்கிறார்கள் என மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார்.
    • இந்திய பொருளாதாரத்தில் 8 சதவீதம் மீனவர்கள் பங்கு உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற் றும் பால் வளத்துறை மந் திரி புருஷோத்தம ரூபாலா 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து தனுஷ்கோடி சென்று பார்வையிட்டார்.

    பின்னர் ராமேசுவரம் வந்த மத்திய மந்திரி புருஷோத்தம ரூபாலாவும், மத்திய இணை மந்திரி எல்.முருகனும் துறைமுக கடல் பகுதியில் மீன்வளத்துறை மூலம் நடைபெற்று வரும் துறைமுக சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட–னர். அப்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார்.

    அதன்பின்னர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறி–ய–தாவது:-

    சாகர் பரிக்கிரமா யாத்தி ரையானது கடந்த 4 மாதத் திற்கு முன்பு குஜராத்தில் தொடங்கி பல மாநிலங்களில் உள்ள கடற்கரையோர பகுதிகளில் உள்ள மீனவர்களை சந்தித்து வருகிறோம். தமி ழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி பகுதிகளுக்கு சென்று மீனவர்களை சந்தித்துவிட்டு, தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளை பார்த்துவிட்டு, திட்டங்களை ஆய்வு செய்தோம். ராமேசு வரத்தில் துறைமுக பணி களை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம்.

    இங்குள்ள மீனவர்கள் ராமேசுவரம் கடல் பகுதியில் புதிய துறை முகம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து மாநில அரசு ஆய்வு நடத்தி வருவதால் அந்த ஆய்வு முடிந்த பின்னர் இதுபற்றி முடிவு செய்யப்ப டும். ஏர் ஆம்புலன்ஸ் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்களின் படகு களை மத்திய வெளியுறவு துறை மூலம் மீட்க நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    கன்னியாகுமரி, தூத்துக் குடி, திருநெல்வேலி ஆகிய பகுதி மீனவர்களை சந்தித்த போது மீனவர்கள் வைத்த பிரதான கோரிக்கை என்ன வென்றால், கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும்போது மீனவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடன டியாக அவர்களை மீட்டு காப்பாற்ற வசதியாக ஏர் ஆம்புலன்ஸ் வசதி வேண்டு மென்று கோரிக்கை வைத் துள்ளனர். இது குறித்து அரசிடம் பேசி ஏர் ஆம்பு லன்ஸ் கொண்டுவர நடவ டிக்கை எடுக்கப்படும்.

    ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் மீனவர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள கடல் பகுதிக்கு செல்லும்போது, அந்த துறைமுகப் பகுதிக்குள் சென்று படகுகளை நிறுத்த வசதியாக குறிப்பாக ஒடிசா, குஜராத், மங்களூரு போன்ற கடல் பகுதிகளுக்கு சென் றால் அங்குள்ள துறைமு கத்தில் படகுகளை நிறுத்த வசதியாக தேசிய அடையாள அட்டை வேண்டுமென கேட்டுள்ளனர்.

    இந்த கோரிக்கை குறித் தும் பரிசீலனை செய்யப்ப டும். ரூ.38,500 கோடி நிதி பிரதமர் மோடி, மீன்வளத்து றைக்கு மட்டும் ரூ.38 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தால் ஏராள மான பணிகள் நடந்துள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.1500 கோடி நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தில் 8 சத வீதம் மீனவர்களின் பங்கு உள்ளது. நாட்டை காப்ப வர்களாகவும், நாட்டின் எல்லையை காப்பவர்களா கவும் மீனவர்கள் இருந்து வருகின்றனர்.

    மீனவர்கள் முன்னேற்றத் துக்காகவே மத்திய அரசு நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன்பிடி படகு களை வழங்கியுள்ளது. அதை மீனவர்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். இருநாட்டு குழு தமிழக மீனவர்கள் பிரச்சி னைக்கு நிரந்தர தீர்வு காண இந்தியா-இலங்கை என இருதரப்பிலும் அதிகாரிகள் மட்டத்திலும், அமைச்சர்கள் மட்டத்திலும் குழு அமைக் கப்பட்டுள்ளது. இதுவரை அதிகாரிகள் மட்டத்தில் கூட்டம் நடைபெற்றுள்ளது.

    கொரோனா உள்ளிட்ட சூழ்நிலையால் இருநாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற வில்லை. அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடை பெற வேண்டும் என்று வெளியுறவுத்துறை மூலம் கேட்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. கச்சத்தீவை யார் தாரை வார்த்தது என்பது அனை வருக்குமே தெரியும். கச்சத் தீவை மீட்பது குறித்து உரிய நேரத்தில் அதற்கான நடவ டிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி, பா.ஜ.க. மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், நகர் தலைவர் ஸ்ரீதர் உள் ளிட்ட பலர் உடன் இருந்த னர். விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசு ராஜா, தேவதாஸ், எமெரிட், சகாயம், நாட்டு படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் ஆகியோர் மீன்வளத்துறை மத்திய மந்திரியிடம் மீனவர்களின் கோரிக்கைகளை விளக்கி கூறினர்.

    • Whatsapp