search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanyakumari"

    • முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • மீன் பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் நீர்மட்டம் தாழ்வது, உயர்வது, சீற்றம், கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    இந்த நிலையில் அமாவாசையையொட்டி இன்று 5-வது நாளாக சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் நீடித்தது. இதனால் வங்கக்கடல், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் சீற்றமாக காணப்படுகிறது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் இன்று 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.

    மேலும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் தடையை மீறி கடலில் இறங்குபவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்து உள்ள வங்கக்கடல் பகுதி மற்ற கடல் பகுதியை விட அதிகமான அளவில் சீற்றமாக இருந்தது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கடல் சகஜ நிலைக்கு திரும்பியபிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதனால் படகு குழாமில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இதே போல திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. அங்கு அமைக்கப்பட்டு உள்ள கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் இன்று கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மீன் பிடி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வட்டக்கோட்டைக்கும் உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கன்னியாகுமரியில் இன்று காலை பாலசுப்பிரமணியம் என்பவர் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
    • சுற்றுலா வந்தவர்கள் தங்களை குழுப் புகைப்படம் எடுத்து தருமாறு பாலசுப்பிரமணியத்திடம் கேட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 வழிச்சாலையில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட பாலசுப்பிரமணியம் (50) என்பவர் கார் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

    இன்று காலை பாலசுப்பிரமணியம் நடைப்பயிற்சி செல்லும் போது சுற்றுலா வாகனத்தில் வந்தவர்கள் தங்களை குழுப் புகைப்படம் எடுத்து தருமாறு அவரிடம் கேட்டுள்ளனர்.

    அவரும் சாலையின் நடுவே நின்று அவர்களை புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த கார் அவர் மீது வேகமாக மோதியுள்ளது. இதனால் நிகழ்விடத்திலேயே பாலசுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார். 

    • நேற்று அமாவாசை என்பதால் கடலில் மாற்றங்கள் காணப்பட்டன.
    • படகு போக்குவரத்து தொடங்கப்படாததால் அவர்கள் படகு குழாமில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவிடம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று சுற்றுலா பயணிகள் தினமும் பார்வையிட்டு வருகின்றனர். இதற்காக 3 படகுகள் காலை 8 மணி முதல் இடைவிடாது இயக்கப்பட்டு வருகின்றன.

    சுனாமிக்கு பிறகு அமாவாசை மற்றும் பவுர்ணமியின்போது கடலில் அடிக்கடி சீற்றம் ஏற்பட்டு வருவதால் படகு போக்குவரத்து தொடங்குவதில் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று அமாவாசை என்பதால் கடலில் மாற்றங்கள் காணப்பட்டன. இன்று காலையும் கடல் சீற்றமாக இருந்தது. அவ்வப்போது காற்றுடன் கூடிய மழையும் நீடித்தது. இதனால் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    தற்போது பள்ளி விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் போன்ற காரணங்களால் ஏராளமான வடமாநில சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வந்து உள்ளனர். மேலும் விவேகானந்தர் நினைவிடம்-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலம் நேற்று திறக்கப்பட்டு உள்ளது. அதனை பார்ப்பதற்காகவும் ஏராளமானோர் கன்னியாகுமரி வந்திருந்தனர்.

    அவர்கள் இன்று காலை 6 மணியில் இருந்தே படகு குழாமில் காத்திருந்தனர். ஆனால் 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படாததால் அவர்கள் படகு குழாமில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    இதன் காரணமாக அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடுப்பு வேலி அமைத்து கூட்டத்தை சீர்படுத்தினர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • ஐக்கிய கிறிஸ்தவ பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 27-வது கிறிஸ்துமஸ் விழா நேற்று முன்தினம் அருமனையில் தொடங்கியது. 2-வது நாள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி மாலை 6 மணிக்கு நெடிய சாலை சந்திப்பிலிருந்து மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் தாத்தா அணிவகுப்பு, பேண்ட் வாத்தியம், சிங்காரி மேளம், நாசிக் டோல், சிங்கார காவடி, பூக்காவடி, மேஜிக் ஷோ, ஜோக்கர், சிலம்பாட்டம், ஆதிவாசி நிறுத்தம், உலக்கை ஆட்டம், கோலாட்டம், பொம்மலாட்டம், தம்போல, பெல்லி டான்ஸ், பஞ்சாபி டான்ஸ் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சியை தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி நெடுங்குளம் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள தனி மேடையில் இருந்து பார்வையிட்டார். பின்னர் இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் தலைமையில் சமூக நல்லிணக்க மாநாடு நடைபெற்றது.

    முழுக்கோடு சேகர ஆயர் ஜான்பெண்டிங் தொடக்க ஜெபம் செய்தார். டாக்டர் பிரியா சாலமன் வரவேற்று பேசினார். கல்வியாளர் ரவி பச்சமுத்து, எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், தாரகை கத்பட், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், அருட்பணியாளர் ஜார்ஜ் பொன்னையா மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.


    முன்னாள் கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஆசி உரை வழங்கினார். இயக்க செயலாளர் ஸ்டீபன் நினைவு பரிசு வழங்கி பேசினார். தொடர்ந்து தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி 'கேக்' வெட்டியும், குழு பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இயேசு கிறிஸ்து நமக்கு கொடுக்கிற நற்செய்தி என்னவென்றால் அன்பு, மதச்சார்பற்ற பண்பு, மனித குலத்திற்கு சேவை செய்கின்ற பண்பு என்பதாகும். காங்கிரஸ் கட்சியும் அந்த மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்கிறது.

    நமது விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களும் இந்த மதிப்பீடுகளை தான் போதித்தார்கள். இன்று சில சக்திகள் இந்திய மக்களிடையே இருக்கின்ற அன்பை சிதைக்க பார்க்கின்றன.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும் இத்தகைய தீய சக்திகளை எதிர்க்கிறார். அதனால் தான் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை இந்த குமரி மண்ணில் இருந்து தொடங்கினார்.

    தமிழ்நாடு, கேரள மாநிலங்களை நான் பாராட்ட விரும்புகிறேன். ஏனென்றால் நீங்கள் இந்த பாசிச சக்திகளை அனுமதிக்கவில்லை. தெலுங்கானா மக்களும் கலை நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களை பின்பற்றி வாழ விரும்புகிறார்கள்.

    நாங்கள் ஏழை, எளிய மக்களுக்கு நன்மைகள் செய்கின்றோம் என்றால் அதற்கு முக்கியமான காரணம் நாங்கள்சோனியா காந்தியையும், மல்லிகார்ஜுன கார்கேவின் தலைமையையும் போற்றுகின்றவர்களாக இருக்கின்றோம். இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தி வரப் போகிறார்.

    மதச்சார்பற்ற அவருடைய சிந்தனையின் கீழ் இந்த நாடு மிகப்பெரிய வளர்ச்சியை காணப் போகிறது. சீனா போன்ற நாடுகளுக்கு இணையான நாடாக அவருடைய தலைமையின் கீழ் இந்தநாடு உருவாக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் உள்பட பலர் கலந்து கொண் டனர்.முடிவில் இயக்க தலைவர் திலீப் சிங் நன்றி கூறினார்.

    விழா ஏற்பாடுகளை இயக்கநிர்வாகிகள் ஜோஸ் செல்வன், கென்னத், பிரதாப் சிங், டென்னிஸ், கிளாடிஸ் பிரபு ஜான் கிறிஸ்டோபர், சிங், பிஜின் சிங், சேம் ஜெகன், ஆரோன், புஷ்பராஜ், செல்வகாந்த், அருள், ஜஸ்டின் ஜேம்ஸ் ராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • குமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

    இதை கொண்டாடும் விதமாக, "மூப்பிலா தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு கலைஞர் அமைத்த சிலையை #StatueOfWisdom-ஆக கொண்டாடுவோம்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயரச் சிலை அமைத்து ஆண்டுகள் ஆகிறது 25.

    மூப்பிலாத் தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு முத்தமிழ் வித்தகர் கலைஞர் அமைத்த சிலையை #StatueOfWisdom-ஆகக் கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இரயில்வே துறையில் பயிற்சி முடித்து கொண்ட இளைஞர்கள் இன்று வேலை வாய்ப்பு இல்லாமல் அவதி படுகின்றனர்.
    • பொதுத்துறை நிறுவனங்களை அரசு தனியாருக்கு விற்று வருவதும் மக்கள் வேலையை இழப்பதற்கு காரணமாக அமைந்தது.

    நாட்டில் பெருகி வரும் வேலையின்மை குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், "நாட்டில் பெருகி வரும் வேலையின்மை குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த அவசர நிலை குறித்து பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் எனவும் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளேன்.

    இந்தியாவில் வேலைவாய்ப்பு வெறும் 7.8℅ மட்டுமே. அரசு வேலை வழங்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வருவோம் என கூறிய போதிலும் கடந்த ஒரு வருட கணக்குகள் வேலையின்மை தீவிரமடைந்துள்ளதை எடுத்து காட்டுகிறது. அரசின் செயல் திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளதை இது சுட்டிக் காட்டுகிறது. இரயில்வே துறையில் பயிற்சி முடித்து கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று வேலை வாய்ப்பு இல்லாமல் அவதி படுகின்றனர்.

    ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்ற 125 இளைஞர்கள் தங்கள் பணியினை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களை அரசு தனியாருக்கு விற்று வருவதும் மக்கள் வேலையை இழப்பதற்கு காரணமாக அமைந்தது. அரசு தனது கொள்கைகளை திருத்தி படித்த இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை கிடைக்க ஆவன செய்ய வேண்டியது மிக அவசியம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • இன்று பயங்கர சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டது.
    • 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுகின்றன.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    அதன்படி பவுர்ணமியை யொட்டி கன்னியாகுமரியில் இன்று பயங்கர சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால்யில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் பகுதியில் வங்க கடல், இந்திய பெருங்கடல், அரபிக் கடல் ஆகிய 3 கடல்களும் சீற்றமாக காணப்பட்டது.

    இதனால் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுகின்றன. இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு அச்சப்பட்டனர்.

    கடலில் இறங்கிய சிலரை ரோந்து பணியில் ஈடுபட்ட சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் அங்கு இருந்து வெளியேற்றி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்து உள்ள வங்ககடல் பகுதியில் கடுமையான சீற்றம் காணப்பட்டதால் அங்கு செல்வதற்கான படகு போக்குவரத்து காலையில் ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணி கள்ஏமாற்றமடைந்தனர்.

    கடல் சகஜநிலைக்கு திரும்புவதை பொறுத்து படகு போக்குவரத்து இயக்கப்படும்என்று பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழகம் அறிவித்து உள்ளது. இது சம்பந்தமான அறிவிப்பு பலகை படகுத்துறை நுழை வாயிலில் வைக்கப்பட்டு உள்ளது.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திரு வள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்புபால பணிகள் நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு ஏற்கனவே கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்க ளிலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. 

    • விரைவு வர்த்தக நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.
    • சிறு கடைகள் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்கள் பாதிப்பை தடுக்க வேண்டும்.

    கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி மத்திய அரசிடம் கோரிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    நாட்டில் பெருகி வரும் விரைவு வர்த்தகம் காரணமாக சிறு கடைகள் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்கள் பாதிப்பு அடைவதை சுட்டிக்காட்டி அதனை நிவர்த்தி செய்ய விரைவு வர்த்தக நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். இதனை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் இலக்கணம் வகுத்த மாபெரும் கவிஞர்.
    • தேசத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை நினைத்து பெருமைகொள்வோம்.

    கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இந்திய சுதந்திர போராட்ட வீரர் மகாகவி பாரதியார் பிறந்தநாள். கவிதைகள் மூலம் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் இலக்கணம் வகுத்த மாபெரும் கவிஞரான பாரதியாரை அவரது பிறந்தநாளில் போற்றுவோம். தேசத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை நினைத்து பெருமைகொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நிதி ஒதுக்கி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
    • பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.

    கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    இயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக மாற்ற இயலும்.

    எனவே மத்திய அரசு இதற்காக போதிய நிதி ஒதுக்கி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.


    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடலில் சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது.
    • சபரிமலை சீசன் மீண்டும் களைகட்டி உள்ளது.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தளமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

    இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.

    இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறையை யொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர்.

    அந்த அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கடலில் சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது. அதனை பார்த்து சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்பு பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அங்கு கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் கன்னியாகுமரியில் விடுமுறை நாளான இன்று சபரிமலை சீசன் மீண்டும் களைகட்டி உள்ளது. இதைத்தொடர்ந்து சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதால் சுற்றுலா தலங்களும் களை கட்டியது.

    இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • பகவதி அம்மன் கோவில் வெளிபிரகாரத்தில் உள்ள கியூ செட்டில் பக்தர்களின் நீண்ட “கியூ” காணப்பட்டது.
    • கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் ”சூட்கேஸ்”, கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    கடந்த 16-ந்தேதி முதல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு நேரம் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பகல் 12-30 மணிக்கு அடைக்கப்படும் நடை 1 மணிக்கு அடைக்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப்படுகிறது.

    சபரிமலை சீசன் தொடங்கிய நாள் முதலே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த சீசனையொட்டி இன்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    இதனால் பகவதி அம்மன் கோவில் வெளிபிரகாரத்தில் உள்ள கியூ செட்டில் பக்தர்களின் நீண்ட "கியூ" காணப்பட்டது. பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் "கியூ"வில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் "சூட்கேஸ்", கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிமூலம் கடுமையான சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

    ×