என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பெண்"

    • 24 வயதான சுஜிதா என்பவருக்கும் இம்மாத தொடக்கத்தில் முன் திருமணம் நடைபெற்றது.
    • சுஜிதாவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை பகுதியை சேர்ந்த விஜய் (31) என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்த 24 வயதான சுஜிதா என்பவருக்கும் இம்மாத தொடக்கத்தில் முன் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் திருமணம் ஆன 18-வது நாளில் (நவம்பர் 21) மாலையில் புதுப்பெண் திடீரென மாயமாகியுள்ளார். மேலும் புதுப்பெண்ணின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    பின்னர் தனது கணவருக்கு, வாட்ஸ் ஆப்பில் அப்பெண் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், பெற்றோரின் வற்புறுத்தலால் தான் நான் உங்களை திருமணம் செய்துகொண்டேன்... 7 சவரன் தாலியை வீட்டில் கழற்றி வைத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சந்தனாவின் உறவினர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வீடு புகுந்து பிரவீனை தாக்கியதாக கூறப்படுகிறது.
    • கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி வந்து பஞ்சாயத்து பேசினர்.

    பெங்களூரு:

    பெங்களூரு கோவிந்தராஜ் நகரில் பிரவீன்- சந்தனா (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு கடந்த மே மாதம் 5-ந்தேதி தான் திருமணம் நடந்தது. முதலிரவு மற்றும் அடுத்தடுத்த நாட்களிலும் பிரவீன், தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என தெரிகிறது.

    இதையடுத்து சந்தனா, தனது கணவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதில் பிரவீன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் அவர் மன அழுத்தம் காரணமாக தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்துள்ளார். இதனால் டாக்டர் தாம்பத்தியத்தில் ஈடுபடும்படி பிரவீனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

    இருப்பினும் பிரவீன், மனைவி சந்தனாவுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை. இதுபற்றி அறிந்த சந்தனாவின் உறவினர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வீடு புகுந்து பிரவீனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரவீன் கோவிந்தராஜ் நகர் போலீசில் பரபரப்பு புகார் அளித்தார்.

    அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

    சந்தனா என்னை ஆண் அல்ல. திருநங்கை என கூறி அவதூறான தகவலை பரப்பினார். மேலும் சந்தனா தனது உறவினர்களை வீட்டுக்கு வரவழைத்து என்னை தாக்கினார். கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி வந்து பஞ்சாயத்து பேசினர். அப்போது ரூ.2 கோடி சொத்தை சந்தனாவுக்கு எழுதி கொடுக்கும்படி கூறினர். சந்தனாவும் என்னிடம் சொத்து கேட்டு மிரட்டுகிறார்.

    ஆனால் நான் கால அவகாசம் கேட்டேன். அதன்பிறகு ஆகஸ்டு 17-ந்தேதி சந்தனாவும், அவரது உறவினர்களும் என்னுடன் தகராறு செய்து என்னை தாக்கினர். அத்துடன் வீட்டில் இருந்த எனது பொருட்களை வீட்டில் இருந்து வெளியே அள்ளிப்போட்டதுடன் என்னையும் வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டனர்.

    எனது தொழில்முறை வாழ்க்கையின் அழுத்தத்தால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியவில்லை என கூறினாலும், சந்தனா என்னை தொடர்ந்து அவமானப்படுத்தினார். அவரது குடும்பத்தினர், உறவினர்களும் என்னை தாக்கினர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்ற பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
    • பிரீத்திக்கு கடந்தாண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி சதீஷ்வர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

    திருப்பூர் மாவட்டத்தில் ரிதன்யா (வயது 27) என்ற பெண் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய ஆடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து, ரிதன்யா தற்கொலை செய்த விவகாரத்தில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், திருப்பூரில் வரதட்சணைக் கொடுமையால் மேலும் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்ற பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

    பிரீத்திக்கு கடந்தாண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி சதீஷ்வர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது கணவர் குடும்பத்திற்கு 120 சவரன், 25 லட்சம் ரொக்கம், இன்னோவா கார் உள்ளிட்டவை தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே, பெண்ணின் பூர்வீகச் சொத்து விற்பனையில் வந்த ரூ.50 லட்சத்தை கேட்டு கணவர் குடும்பத்தினர் பிரீத்தியை கொடுமைப்படுத்தியதாகி கூறப்படுகிறது

    இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    • ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பி உள்ளார்.
    • ஒருத்தனுக்கு ஒருத்திதான்,மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என ரிதன்யா தெரிவித்திருந்தார்.

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யா (வயது 27) என்ற பெண்ணுக்கும் அப்பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது

    இந்நிலையில், மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகளை சாப்பிட்டு ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பி உள்ளார்.

    அந்த ஆடியோவில், தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கடுமையாக சித்ரவதை செய்வதாகவும், இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது, ஒருத்தனுக்கு ஒருத்தி தான் எனவே மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என கூறியிருந்தார்.

    இதனையடுத்து, ரிதன்யா தற்கொலை செய்த விவகாரத்தில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், ஊடகத்திற்கு பேட்டி அளித்த பெண்ணின் தந்தை, "சிலர் மாற்று வாழ்க்கை அமைக்கிறாங்க, அமைக்கல என்பது அவரவர் விருப்பம். என் பொண்ணு ஒருத்தனுக்கு ஒருத்தின்னு செத்துட்டா. என் பொண்ணை இழந்தால்கூட எனக்கு அது பெருமையாகத்தான் இருக்கிறது.. இதே போல எல்லா பொண்ணுங்களும் இருக்க வேண்டும் என்று கூறவில்லை. தற்கொலை தீர்வாகாது. புகுந்த வீட்டில் பிரச்னை என்றால் அம்மா அப்பா கூடவே இருந்து விடுங்கள்" என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து இணையத்தில் ரிதன்யா அப்பாவின் கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற பிற்போக்குத்தனமான கருத்தால் கணவரின் கொடுமையை தாங்க முடியாமல் ஒரு பெண் தற்கொலை செய்து கொள்வது ஒரு அப்பாவிற்கு பெருமை கிடையாது என்று இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று கணவன் என்ன கொடுமை செய்தாலும் அவனை விட்டு பிரியாமல் விவாகரத்து செய்யாமல் குறிப்பாக இன்னொரு திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண் வாழ வேண்டும் என்று கூறுவது பிற்போக்கு தனமான கருத்தாகும். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால் அந்த உறவை முறித்துக்கொண்டு இன்னொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அனைத்து உரிமைகளும் உள்ளது என்று இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • ரிதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு சில ஆடியோக்களை அனுப்பி உள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யா (வயது 27) என்ற பெண்ணுக்கும் அப்பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது

    இந்நிலையில், மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகளை தின்ற நிலையில், ரிதன்யா பிணமாக கிடந்தார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் சேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ரிதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பி உள்ளார். அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அந்த ஆடியோவில், தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கடுமையாக சித்ரவதை செய்வதாகவும், இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது, மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என கூறியிருந்தார்.

    இதனையடுத்து, ரிதன்யா தற்கொலை செய்த விவகாரத்தில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • திருமணமான 10 மாதத்தில் புதுப்பெண் திடீரென இறந்தார்.
    • இதுகுறித்து தேவகோட்கோடை ட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கும் சினேகா (வயது 21) என்பவருக்கும் கடந்த இவருக்கும் சினேகா என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்தநிலையில் சினேகாவுக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், சிகிச்சைக் காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் பரிதாபமாக இறந்த தாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவலறிந்த கண்டவராயன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் சினேகா இறப்பு குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் நெடுமரம் கிராம நிர்வாக அலுவலர் கோகிலா தேவி கொடுத்தபுகாரின் பெயரில் தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு குறித்த தன்மையை மருத்துவர் சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையின் போது திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, திருப்புத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம், சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, கண்டவராயன்பட்டி சார்பு ஆய்வாளர் சேதுராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கணவர் புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து காணாமல்போனவரை தேடி வருகிறார்கள்.
    • இவர்கள் 2 பேருக்கும் கடந்த 23-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே வருக்கன் பூவன்விளை, மாத்தூர், அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்பர் (வயது 34), வீரப்புலி பகுதியை சேர்ந்தவர் சோபியா (25). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 23-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் கணவர் ஜாஸ்பர் காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டில் வந்து பார்க்கும்போது மனைவி சோபியாவை காணவில்லை. உடனே அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் ஆக இருந்தது. இதுபற்றி அக்கம்பக்கம் உள்ள வர்களிடம் விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தபோது, காணவில்லை. இதுகுறித்து ஜாஸ்பர் திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து திருமணமாகி 7 நாளில் மாயமான புதுப்பெண் சோபியாவை தேடி வருகிறார்கள்.

    • கணவர் பிரிந்து சென்றதால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • திருமணமாகி கணவருடன் ஒரு மாதம் மட்டுமே வாழ்ந்த புதுப்பெண் தற்கொலை செய்தார்.

    மதுரை

    மதுரை திருப்பாலை பசும்பொன் நகரை சேர்ந்த வர் பெருமாள். இவரது மகள் அருணாதேவி (வயது 23). இவருக்கும், அருண் குமார் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி திருமணம் நடை பெற்றது. இருவரும் தனி குடித்தனம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அருணா தேவிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி திடீரென வலிப்பு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித் தனர். அங்கு சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

    இதைத்தொடர்ந்து கணவர் அருண்குமார், அருணாதேவிக்கு வலிப்பு நோய் இருப்பதாக கூறி தகராறு செய்து மனைவி யுடன் சேர்ந்து வாழ முடியாது என கூறி விட்டார். அதன் பின்னர் அருணாதேவி தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

    திருமணமான ஒரு மாதத்தில் கணவர் வலிப்பு நோயை காரணம் காட்டி பிரிந்து சென்றதால் அருணாதேவி மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். இதுதொடர்பாக தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் அருணாதேவி மட்டும் தனியாக இருந்தார். ஏற்கனவே மனம் உடைந்த நிலையில் இருந்த அவர், வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நேற்று மதியம் வெளியில் சென்ற பெருமாள் வீட்டிற்கு வந்தார். அப்போது மகள் தூக்கில் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மின் விசிறியில் தொங்கிய அருணாதேவி உடலை மீட்டு உறவினர்கள் பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து திருப்பாலை போலீசில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அருணா தேவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணமாகி கணவரு டன் ஒரு மாதம் மட்டுமே வாழ்ந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மணிமேகலை கடும் வயிற்று வலி தாங்க முடியாத காரணத்தால் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டுள்ளார்.
    • 3 நாட்கள் கழித்து தனது கணவர் சுரேஷிடம் கூறியுள்ளார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் ( வயது 32) என்பவருக்கும் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த மணிமேகலை (22) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு காங்கேயம் அருகே உள்ள வட்டமலை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று மணிமேகலை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், வலி தாங்க முடியாத காரணத்தால் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். அதனை யாரிடமும் சொல்லாமல் 3 நாட்கள் கழித்து தனது கணவர் சுரேஷிடம் கூறியுள்ளார். உடனே கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மணிமேகலையை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த மணிமேகலை சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மேச்சேரி அருகே திருமணமான ஒரு ஆண்டில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி காளிகவுண்டனூரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 28). இவருக்கும், தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி மகள் சந்தியா (28) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் காளிகவுண்ட னூரில் வசித்து வந்தனர்.

    கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதில், மனம் உடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையத்தில் புதுப்பெண் கணவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
    • மோட்டார் சைக்கிள் கேட்டு துன்புறுத்தியதால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக தெரிகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள வத்திராயிருப்பு சத்திரம் தெருவை சேர்ந்த வர் பொன்னன். இவரது மகள் லட்சுமி (வயது 24).

    இவருக்கும் ராஜபாளை யம் தெற்கு தேவதானம் கீழ மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் சிவநேசன் என்பவருக்கும் கடந்த 20 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சனை யாக கொடுக்கப்பட்டது.

    கடந்த சில மாதங்களாக சிவநேசன் தனக்கு மோட்டார் சைக்கிள் பெற்றோர் வீட்டில் இருந்து வாங்கி வரும்படி லட்சுமியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெற்றோரின் குடும்ப சூழ்நிலையால் ேமாட்டார் சைக்கிள் வாங்கி தரமுடியாது என லட்சுமி மறுத்து விட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது குறித்து சம்பவத்தன்று லட்சுமி தனது தந்தை பொன்னையா விடம் செல்போனில் கூறி யுள்ளார். அப்போது அவர் ஆறுதல் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் லட்சுமி நேற்று மதியம் வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மகளின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    இந்த நிலையில் சேத்தூர் போலீசில் பொன்னன் புகார் அளித்துள்ளார். அதில் எனது மகள் லட்சமி சாவில் மர்மம் இருக்கிறது. எனவே இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்கு பதிவு செய்து லட்சமி வரதட்சணை பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்

    • கடிதம் எழுதி வைத்து புதுப்பெண் திடீர் மாயமானார்.
    • ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சின்ன கல்லுப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது27). இவருக்கும், முகல்யா (19) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்துப்பாண்டி ஊர் திருவிழாவுக்கு மனைவியை வீட்டில் விட்டு விட்டு சென்று விட்டார். திருவிழா முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது முகல்யா மாயமானார்.

    அப்போது வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அதில், "என்னை தேட வேண்டாம், மன்னித்து விடுங்கள்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து முத்துப்பாண்டி, காரியாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள கீழ திருத்தங்கல், திருவள்ளு வர் காலனியை சேர்ந்தவர் இன்னாசிமுத்து. இவரது மகள் லூர்து மேரி(வயது19). கல்லூரி மாணவியான இவர் சம்பவத்தன்று மாயமா னார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சுழி குரவை குளத்தை சேர்ந்த 17 வயதுடைய பெண் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×