search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman"

    • அறுவை சிகிச்சை என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற கவலையிலும் இருந்துள்ளார்.
    • உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள கே.சிதம்பராபுரம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராமர். ஆடு வியாபாரி. இவருக்கு அரிய நாச்சியார் என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர. இவரது 2-வது மகள் உமா மகேஸ்வரி (24). இவர் எம்.சி.ஏ. படித்துள்ளார்.

    இந்நிலையில் ராமருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு உமா மகேஸ்வரி தந்தையுடன் தங்கி இருந்து அவரை கவனித்து வந்தார். இதையடுத்து நேற்று ராமருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    இதனால் நேற்று முன்தினம் இரவு உமா மகேஸ்வரி வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் பின்னர் தனது தாயிடம் தந்தை ராமர் என்னை படிக்க வைப்பதற்காக கஷ்டப்பட்டு வேலை செய்ததால் அவருக்கு நோய் ஏற்பட்டுவிட்டது என்று கூறி புலம்பி வந்துள்ளார். மேலும் அறுவை சிகிச்சை என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற கவலையிலும் இருந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து நேற்று மாலை உமா மகேஸ்வரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மகேஸ்வரியை தேடிய போது வீட்டின் பின்னால் உள்ள கிணற்றின் அருகே அவரது செருப்பு கடந்துள்ளது. இதில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கிணற்றுக்குள் தேடிப்பார்த்தனர். அப்போது உமா மகேஸ்வரி, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது குறித்து கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை உடல் நலம் பாதிப்பால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆட்டோவில் இருந்து கீழே சட்டையை பிடித்து வெளியே இழுத்து போட்டு செருப்பால் சரமாரியாக தாக்கினார்.
    • அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

    ராயபுரம்:

    புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 36 வயது திருமணமான இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக வண்ணாரப்பேட்டையில் இருந்து ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தார்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் இளம்பெண் டிரைவர் இருக்கை அருகே அமர்ந்து இருந்தார். அப்போது ஷேர் ஆட்டோ டிரைவர் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனை இளம்பெண் கண்டித்தும் ஆட்டோ டிரைவர் தனது சில்மிஷத்தை தொடர்ந்தார்.

    இதனால் பொறுமை இழந்த இளம்பெண் புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி கோயில் பஸ் நிறுத்தத்தில் இறங்கியதும் அந்த டிரைவரை ஷேர் ஆட்டோவில் இருந்து கீழே சட்டையை பிடித்து வெளியே இழுத்து போட்டு செருப்பால் சரமாரியாக தாக்கினார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பெண் டிரைவரை கடுமையாக எச்சரித்து அங்கிருந்து சென்றார். சில்மிஷம் செய்த ஆட்டோ டிரைவரை இளம்பெண் இழுத்துபோட்டு செருப்பால் தாக்கும் காட்சியை ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

    • இளம்பெண்ணை அவதூறாக பேசிய 2 வாலிபர்கள் கைது செய்தனர்.
    • யாழினி பலமுறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அண்ணா குடி யிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகள் யாழினி (வயது 21). இவர் சம்பவத் தன்று ராமநாதபுரத்தில் இருந்து அரசு பேருந்தில் ஏறி தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

    இந்த பேருந்து வேதாளை ஊராட்சி குஞ்சார்வலசை பஸ் நிறுத்தம் வந்த போது தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த கிருஷ் ணன் மகன் டாரஸ் (19), சந்தியா மகன் கிர்லோஸ்கார் (20) ஆகியோர் பேருந்தில் ஏறினர். பின்னர் அவர்கள் யாழினி அருகில் நின்று கொண்டு அவரை ஆபாச மாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து யாழினி பலமுறை எச்சரித் தும் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து யாழினி தனது பெற்றோருக்கு செல் போனில் தகவல் கொடுத் தார். அவர்கள் இதுகுறித்து மண்டபம் காவல் நிலையத் தில் புகார் அளித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் வழக்குப்பதிவு செய்து டாரஸ், கிர்லோஸ் கார் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வாலிபர் கைது
    • திலாசுப் பேட்டையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் தன்னை காதலிக்குமாறு அந்த பெண்ணிடம் அடிக்கடி தொல்லைக் கொடுத்து வந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு ள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இவர் தட்டாஞ்சாவடியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்துள்ளார். அப்போது திலாசுப் பேட்டையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் தன்னை காதலிக்குமாறு அந்த பெண்ணிடம் அடிக்கடி தொல்லைக் கொடுத்து வந்தார்.

    இதுகுறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் முறையிட்டார். அவர்களும் சிவக்குமாரை அழைத்து கண்டித்தனர்.

    இதற்கிடையே அந்த பெண் பெட்ரோல் நிலைய வேலையில் இருந்து நின்றுவிட்டார். இதனை தொடர்ந்து அந்த பெண் காய்கறி கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

    இதனை அறிந்து கொண்ட சிவக்குமார் 4 நாட்களுக்கு முன்பு காய்கறி கடை முன்பு நின்றுக்கொண்டு சைகை காட்டியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் மீண்டும் முறையிட்டார். திருமணம் நிச்சயிக்கப்ப ட்டுள்ளதால் சிவக்குமாரிடம் எந்த பிரச்சி னையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என பெற்றோ ர்கள் கேட்டுக்கொண்டனர்.

    இந்நிலையில், மது போதையில் காய்கறி கடைக்குள் நுழைந்த சிவக்குமார் என்னை தவிர வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டால், உன்னையும், உன்னை திருமணம் செய்து கொள்பவனையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி விட்டு சென்றார்.

    இதனால் பயந்து போன அந்த பெண் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
    • தோட்டத்தில் முருங்கைக்கீரை பறிப்பதற்காக சென்றுள்ளார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் ஊராட்சி வானவன் மகாதேவி கிராமத்தை சேர்ந்தவர் காளிதாசன். இவரது மனைவி கனகா (வயது 30). இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

    நேற்று கனகா வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் முருங்கைக்கீரை பறிப்பதற்காக சென்று கீரை பறித்துக் கொண்டிருந்தார் அப்போது கீழே இருந்த பாம்பு கடித்து விட்டது.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி கொண்டு போய் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி கனகா இன்று அதிகாலை இறந்துவிட்டார். புகாரின் பேரில் தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • வள்ளியூர் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்த திவ்யா நர்சிங் பயிற்சி பள்ளியில் பயிற்சிக்கு சென்று வருகிறார்.
    • மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரது மொபட்டை வழிமறித்து திவ்யா கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறித்து சென்றனர்.

    நெல்லை:

    வள்ளியூர் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் ரூபசேகர். இவரது மனைவி திவ்யா (வயது31). இவர் வள்ளியூரில் உள்ள நர்சிங் பயிற்சி பள்ளியில் பயிற்சிக்கு சென்று வருகிறார்.

    இதற்காக அவர் வீட்டில் இருந்து தனது மொபட்டில் வள்ளியூர் சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பினார். அவர் வள்ளியூர்-சவுந்திரபாண்டியபுரம் பகுதியில் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரது மொபட்டை வழிமறித்து திவ்யா கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக அவர் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோன்ஸ் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

    • கணவன்-மனைவிக்கிைடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு
    • ரம்யா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் தர்மபுரி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மாைதயன். இவரது மகள் ரம்யா (30),

    இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஓமலூரை சேர்ந்த சீனிவாச பெருமாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் மாதையன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ரம்யா தனது கணவருடன் ஓமலூரை அடுத்த காமாண்டபட்டியில் வசித்து வந்தார். மேலும் ரம்யா பெற்றோர் வீட்டிற்கு வந்து தாய் ராணியிடம் அடிக்கடி பணம் பெற்று செல்வது வழக்கம், அதன்படி கடந்த 10-ந் தேதி பணம் பெற்று சென்றார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிைடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மேலும் அவரது மாமியார் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ரம்யா வீட்டில் இருந்த தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே ரம்யாவின் தந்தை மாதையன் ஓமலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உ ள்ளார். அதன் பேரில் ேபாலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடும்பதகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • மனவேதனையில் இருந்த ஜனனி பூச்சி மருந்தை குடித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை அடுத்த அத்திவெட்டி பிச்சினிக்காடு பகுதியை சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இவரது மனைவி ஜனனி (வயது 29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    தாமரைச்செல்வன் அடிக்கடி குடித்துவிட்டு வருவதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சலில் இருந்த ஜனனி பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனனி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜனனியின் சகோதரி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயகணேஷ் தனது மனைவி குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்.
    • முத்துபாரதி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள இரைப்புவாரி புதுக்குளத்தை சேர்ந்தவர் ஜெயகணேஷ். இவரது மனைவி முத்துபாரதி (வயது 25). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

    ஜெயகணேஷ் தனது மனைவி குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் முத்துபாரதி தனது குழந்தை களுடன் புதுக்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.

    மாயம்

    கடந்த 28-ந் தேதி இரவில் முத்துபாரதி பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் படுத்து தூங்கி கொண்டிருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது முத்துபாரதி மற்றும் அவரது 2 குழந்தை களையும் காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை ரகுராஜ் (50) நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தைகளுடன் மாயமான இளம்பெண் முத்து பாரதியை தேடி வருகிறார்.

    • இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
    • திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அடுத்த சோழத்த ரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தம்பியாபிள்ளை மகன் லெனின் (வயது 30). அதே ஊரைச் சேர்ந்த சேர்ந்த 27 வயது பெண்ணை கடந்த 2017-ல் இருந்து காதலித்துள் ளார். இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் அந்த பெண் கருவுற்றார். திருமணம் செய்து கொள்ள இளம்பெண் வலியுறத்தி னார். தனது அக்காவிற்கு திருமணம் முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வ தாக உறுதி கூறிய லெனின், இளம்பெண்ணின் கருவை கலைத்ததாக கூறப்படு கிறது.

    கடந்த மார்ச் மாதம் லெனின் அக்காவிற்கு திரு மணம் நடந்துள்ளது. இருந்த போதும் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் காலங்கடத்தி யுள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த இளம்பெண், சேத்தியாத் தோப்பு மகளிர் போலீ சாரிடம் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணையில், ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் திருமணம் செய்து கொள்வ தாக போலீசாரிடம் லெனின் உறுதியளித்துள் ளார். இதையடுத்து அந்த இளம்பெண் லெனினை தொடர்பு கொண்டு கேட்ட போது, திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். மேலும், ஊரை விட்டு வெளியூ ருக்கும் சென்று விட்டார். இந்நிலையில் பாதிக்கப் பட்ட இளம்பெண், சேத்தி யாத்தோப்பு மகளிர் போலீ சாரிடம் மீண்டும் புகார் அளித்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இளம்பெண்ணை ஏமாற்றிய லெனினை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பரத் தனது ஐ.டி. தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்று பணம் கேட்டார்
    • ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேர் மீது கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்

    கோவை,

    கோவையை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண்.

    இவர் இன்டீரியர் டிசைனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ரத்தினபுரியை சேர்ந்த பரத்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மலர்ந்தது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு அடிக்கடி பேசி வந்தனர். இந்த நிலையில் 2 பேரும் ஒன்றாக வாழ முடிவு செய்ததாக தெரிகிறது.

    இதையடுத்து இளம்பெண் தனது வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் பரத்தும், இளம்பெண்ணும் லிவிங் டுகெதர் முறையில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும், அதன் மூலம் அந்தப் பெண் 4 முறை கர்ப்பம் அடைந்து கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.

    நன்றாக சென்றிருந்த இவர்களது வாழ்க்கையில், பரத் தனது ஐ.டி. தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்றும், அதற்கு பணம் வேண்டும் என்றும் கேட்டார். இதுபோன்று பல முறை அவரிடம் பணம் கேட்டதாக தெரிகிறது.

    மேலும் பரத்தின் தாயார் சாந்தி இளம் பெண்ணிடம், உங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால் ரூ. 10 லட்சம் தர வேண்டும். இல்லை யென்றால் எனது மகனுக்கு வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்து விடுவேன் என அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். இதற்கு வாலிபரின் குடும்பத்தினர் சிலர் உடந்தையாக செயல்ப ட்டுள்ளனர்.

    இதனால் மனம் நொந்துபோன இளம்பெண் சம்பவம் குறித்து கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் பரத், அவரது தாயார் சாந்தி, உறவினர்கள் அருண், ராணி, தினகரன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனுமந்தபுரம் கிராமத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • திருமணமாகி 7ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன் (வயது37).

    இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி வினோதா (28).

    இவர்களுக்கு ஸ்ரீவந்த் (5) என்ற மகனும், யாஷிகா (3) என்ற மகளும் உள்ளனர்.

    நேற்றுமுன்தினம் வினோதா அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக நீடாமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வினோதா உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வினோதாவின் தாய் செண்பகம் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வினோதாவுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளே ஆவதால் மன்னார்குடி ஆர்.டி.ஓ. கீர்த்தனாமணி விசாரணை நடத்தி வருகிறார்.

    ×