என் மலர்
நீங்கள் தேடியது "young woman"
- வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்ற பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
- பிரீத்திக்கு கடந்தாண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி சதீஷ்வர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் ரிதன்யா (வயது 27) என்ற பெண் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய ஆடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, ரிதன்யா தற்கொலை செய்த விவகாரத்தில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், திருப்பூரில் வரதட்சணைக் கொடுமையால் மேலும் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்ற பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
பிரீத்திக்கு கடந்தாண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி சதீஷ்வர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது கணவர் குடும்பத்திற்கு 120 சவரன், 25 லட்சம் ரொக்கம், இன்னோவா கார் உள்ளிட்டவை தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, பெண்ணின் பூர்வீகச் சொத்து விற்பனையில் வந்த ரூ.50 லட்சத்தை கேட்டு கணவர் குடும்பத்தினர் பிரீத்தியை கொடுமைப்படுத்தியதாகி கூறப்படுகிறது
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
- ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பி உள்ளார்.
- ஒருத்தனுக்கு ஒருத்திதான்,மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என ரிதன்யா தெரிவித்திருந்தார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யா (வயது 27) என்ற பெண்ணுக்கும் அப்பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது
இந்நிலையில், மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகளை சாப்பிட்டு ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பி உள்ளார்.
அந்த ஆடியோவில், தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கடுமையாக சித்ரவதை செய்வதாகவும், இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது, ஒருத்தனுக்கு ஒருத்தி தான் எனவே மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என கூறியிருந்தார்.
இதனையடுத்து, ரிதன்யா தற்கொலை செய்த விவகாரத்தில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஊடகத்திற்கு பேட்டி அளித்த பெண்ணின் தந்தை, "சிலர் மாற்று வாழ்க்கை அமைக்கிறாங்க, அமைக்கல என்பது அவரவர் விருப்பம். என் பொண்ணு ஒருத்தனுக்கு ஒருத்தின்னு செத்துட்டா. என் பொண்ணை இழந்தால்கூட எனக்கு அது பெருமையாகத்தான் இருக்கிறது.. இதே போல எல்லா பொண்ணுங்களும் இருக்க வேண்டும் என்று கூறவில்லை. தற்கொலை தீர்வாகாது. புகுந்த வீட்டில் பிரச்னை என்றால் அம்மா அப்பா கூடவே இருந்து விடுங்கள்" என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இணையத்தில் ரிதன்யா அப்பாவின் கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற பிற்போக்குத்தனமான கருத்தால் கணவரின் கொடுமையை தாங்க முடியாமல் ஒரு பெண் தற்கொலை செய்து கொள்வது ஒரு அப்பாவிற்கு பெருமை கிடையாது என்று இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று கணவன் என்ன கொடுமை செய்தாலும் அவனை விட்டு பிரியாமல் விவாகரத்து செய்யாமல் குறிப்பாக இன்னொரு திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண் வாழ வேண்டும் என்று கூறுவது பிற்போக்கு தனமான கருத்தாகும். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால் அந்த உறவை முறித்துக்கொண்டு இன்னொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அனைத்து உரிமைகளும் உள்ளது என்று இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- பிணமாக கிடந்த பெண்ணுக்கு 30 முதல் 35 வயதுக்குள் இருக்கும் என்பது தெரியவந்தது.
- கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு நடத்தினார்கள்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஸ்கேட்டிங் மைதானத்திற்கு முன்பாக மாநகராட்சியின் குப்பை லாரியை நிறுத்துவது வழக்கம். அதேபோல சம்பவத்தன்று இரவும் குப்பை லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் சென்று விட்டார். அதிகாலையில் ஒரு நபர் குப்பையை போடுவதற்காக அங்கு வந்தார். அப்போது குப்பை லாரியின் பின்புற பகுதியில் ஒரு சாக்கு மூட்டையில் ஒரு பெண்ணின் தலை தெரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி உடனடியாக அவர் சி.கே.அச்சுக்கட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து குப்பை லாரியில் கிடந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது, ஒரு பெண்ணை கொன்று, அவரது கை, கால் கட்டப்பட்டு, உடல் சாக்கு மூட்டைக்குள் திணித்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவம் பற்றி தெரிய வந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது பிணமாக கிடந்த பெண்ணுக்கு 30 முதல் 35 வயதுக்குள் இருக்கும் என்பது தெரியவந்தது. ஆனால் அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது உடனடியாக தெரியவில்லை. அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை. இதனால் அந்த பெண் கழுத்தை நெரித்தோ அல்லது மூச்சை திணறடித்தோ கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
அந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான டி-சர்ட், பேண்ட் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த டி-சர்ட்டில் இருந்த நிறுவனத்தின் பெயர் மூலமாக போலீசார் விசாரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு நடத்தினார்கள்.
அப்போது கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பெண் உளிமாவு அருகே வசித்து வந்த புஷ்பா என்ற ஆஷா என்பது தெரியவந்தது. மேலும் அவர் வேறு மதத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ததும் தெரியவந்தது.
மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட இளம்பெண் புஷ்பா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இவரை வேறு இடத்தில் கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் திணித்து குப்பை லாரியில் வீசி சென்று இருப்பது தெரிய வந்தது.
எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட புஷ்பாவின் கணவரிடமும் விசாரணை நடத்த போலீசார் தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரிதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு சில ஆடியோக்களை அனுப்பி உள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யா (வயது 27) என்ற பெண்ணுக்கும் அப்பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது
இந்நிலையில், மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகளை தின்ற நிலையில், ரிதன்யா பிணமாக கிடந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் சேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ரிதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பி உள்ளார். அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அந்த ஆடியோவில், தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கடுமையாக சித்ரவதை செய்வதாகவும், இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது, மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என கூறியிருந்தார்.
இதனையடுத்து, ரிதன்யா தற்கொலை செய்த விவகாரத்தில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- ஆபத்தான வீடியோக்களை எடுத்து பலரும் சமூக வலைதளத்தில் அரங்கேற்றி வருகின்றனர்.
- இளம் பெண்களும் இந்த செயலில் ஈடுபடுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய இளம் வயதினர் கைகளில் பெரும்பாலும் வைத்திருப்பது செல்போன் மட்டுமே. கையில் பணம் இருக்கிறதோ இல்லையோ. செல்போன் நிச்சயம் இருக்கும். அதனை வைத்து தாங்கள் செல்லும் இடங்கள், செய்யும் சாகசங்கள் போன்றவற்றை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தங்களுக்கு பிடித்தவர்களிடம் காட்டி மகிழ்ந்து வந்தனர்.
நாளடைவில் இந்த மோகம் சமூக வலைதளத்தில் வெளியிட வைக்கும் அளவிற்கு சென்றது. இதில் கிடைத்த வரவேற்பு இன்று ஆபத்தான வீடியோக்களை எடுத்து பலரும் சமூக வலைதளத்தில் அரங்கேற்றி வருகின்றனர். இதில் சில உயிருக்கு ஆபத்தாக முடிகிறது.
கடல் நடுவே உள்ள பாறையில் ஏறி நின்று சீறி வரும் அலைகளுடன் வீடியோ எடுப்பது. ரெயில் மற்றும் பஸ்களில் தொங்கியபடி படம் எடுப்பது, மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்வது என அவர்களின் செயல்கள் சில நேரங்களில் உயிருக்கே உலை வைத்து விடுகிறது.
இது போன்று ஆபத்தான ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், ரீல்ஸ் எடுப்பது தொடர்ந்தே வருகிறது.
இளைஞர்கள் மட்டுமின்றி, இளம் பெண்களும் இந்த செயலில் ஈடுபடுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இளம்பெண் ஒருவர் ஓடும் ரெயிலில் படிக்கட்டில் நின்றபடி ஆடிச்செல்லும் ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்த அந்த பெண் நாகர்கோவில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்தபோது தான் ரீல்ஸ் மோகம் தலைதூக்கி உள்ளது.
அவர், ஓடும் ரெயிலின் படிக்கட்டில் முதலில் இறங்கி நிற்கிறார். பின்னர் படியில் நின்று கொண்டே சினிமா பாடலுக்கு நடனமாடுகிறார். பின்னர் திரும்பி நின்றபடி தொங்கிய நிலையில் செல்கிறார்.
கைகளை அசைத்த படியும், தலையை ஆட்டியபடியும் செல்லும் பெண், பல்வேறு முக பாவனைகளையும் காட்டிச் செல்கிறார். அதனை ரீல்ஸ் வீடியோ எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதுதான் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அவரை பின் தொடர்வோர் கூட கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வீடியோவை அகற்ற வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் தங்களை அதிகமானோர் பின் தொடர வேண்டும் என்ற ஆசையில் உயிருக்கு ஆபத்தான முறையில் நூதன புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து ரிலீஸ் அடிப்படையில் பதிவிட்டு வரும் சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருவதால், இது போன்ற சம்பவங்களை ஊக்குவிக்க கூடாது என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- வீட்டுக்கு வந்ததும் நீதுவுக்கு வாந்தி-மயக்கம் என பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
- நீதுவின் உடலில் ரத்தஓட்டம் சீராக இல்லாமல் போனதால் இடது காலில் 5 விரல்கள் மற்றும் வலது கையில் 3 விரல்களை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் முத்தத்தரா ஸ்ரீவராகம் பகுதியை சேர்ந்த இளம்பெண் நீது (வயது31). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் அவர் தனது வயிற்று பகுதியில் இருந்த கொழுப்புகளை நீக்குவதற்காக திருவனந்தபுரம் கஜக்கூட்டம் பகுதியில் உள்ள தனியார் அழகுசாதன மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்காக அந்த மருத்துவமனையில் நீதுவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
அறுவை சிகிச்சை முடிந்து மறுநாள் வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் நீதுவுக்கு வாந்தி-மயக்கம் என பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரத்த அழுத்தமும் மிகவும் குறைந்தது. இதையடுத்து நீதுவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனையை, அவரது கணவர் பத்மஜித் தொடர்பு கொண்டு பேசினார்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருத்துவர்கள் இல்லை. ஆகவே மறுநாள் வருமாறு மருத்துவமனை தரப்பில் கூறியிருக்கின்றனர். ஆனால் நீதுவின் உடல்நிலை மிகவும் மோசமாகியபடியே இருந்தது. இதனால் நீதுவை அவரது கணவர் வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நீதுவின் உடலில் ரத்தஓட்டம் சீராக இல்லாமல் போனதால் இடது காலில் 5 விரல்கள் மற்றும் வலது கையில் 3 விரல்களை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது.
அவற்றை அகற்றாவிடில் நீதுவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், அவரது கையில் 3 விரல்களும், காலில் 5 விரல்களும் வெட்டி அகற்றப்பட்டன. கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை தவறாக செய்ததன் காரணமாகவே தனது மனைவி 9 விரல்களை இழந்துவிட்டதாக நீதுவின் கணவர் பத்மஜித் குற்றம்சாட்டினார்.
மேலும் அதுகுறித்து நீதுவுக்கு கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை செய்த தனியார் அழகுசாதன மருத்துவமனையின் மீது போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அந்த மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் பிபிலாஷ் மீது வழக்கு பதிந்தனர். மேலும் அவரது மருத்துமனை உடனடியாக மூடப்பட்டது.
கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம்பெண் 9 விரல்களை இழந்த சம்பவம் திருவனந்தபரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
மேற்கு வங்காள மாநிலம் கூச் பெகர் பகுதியை சேர்ந்த சுமார் 20 வயது இளம்பெண் ஒருவர் கேரளாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி மங்களூருவில் உள்ள நிறுவனங்களில் வேலை தேடுவதற்காக தனது நண்பர்களுடன் அந்த இளம்பெண் வந்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் இளம்பெண்ணின் செல்போன் சேதம் அடைந்தது. இதையடுத்து அவர் செல்போனை பழுது பார்க்க ஒரு ஆட்டோவில் ஏறி சென்றார்.
அப்போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பின்னர் இரவு ரெயில் நிலையத்தில் தன்னை இறக்கி விடும்படியும், சொந்த ஊருக்கு செல்ல இருப்பதாகவும் இளம்பெண் ஆட்டோ டிரைவரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணை ரெயில் நிலையத்துக்கு அழைத்து செல்லாமல் உல்லால் அருகே முன்னூர் பகுதியில் உள்ள நேத்ராவதி ஆற்றங்கரைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து இளம்பெண்ணை அவர் வலுக்கட்டாயமாக மதுவை குடிக்க வைத்ததாக தெரிகிறது.
இதனால் அவர் சுயநினைவை இழந்துள்ளார். பின்னர் ஆட்டோ டிரைவர், தனது நண்பர்கள் 2 பேரை அங்கு வரவழைத்துள்ளார். அங்கு வைத்து 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த நிலையில் அதிகாலை 1.30 மணி அளவில் அவருக்கு சுயநினைவு திரும்பியது. அப்போது தான் தன்னை ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்தது அவருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர் உள்ளூர் மக்கள் மற்றும் ஒய்சாலா போலீசார் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து அந்த பெண், உல்லால் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
மேலும் இளம்பெண் ஆட்டோ டிரைவருக்கு கூகுள் பே மூலம் பணம் செலுத்தியிருந்தார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முல்கியை சேர்ந்த பிரபுராஜ் (வயது 38) என்பது தெரியவந்தது. மேலும் அவர் தான் இளம்பெண்ணை கடத்தி சென்றதும், தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
பின்னர் போலீசார் ஆட்டோ டிரைவர் பிரபுராஜ், அவரது நண்பர்களான கும்பாலாவை சேர்ந்த மிதுன் (30), மணீஷ் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இளம்பெண் ஒருவர் ராஜ பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தார்.
- பெண்ணின் தலைமுடியை பிடித்து தரையில் இழுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் கரி வலம்வந்தநல்லூர் அருகே உள்ள கீழவயலியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராஜ பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்தார்.
அதே மில்லில் வேலை செய்து வந்த குவளைக் கண்ணியை சேர்ந்த துரை என்ற ரஞ்சித் ( வயது 25) என்பவர் அந்த பெண்ணிடம், தான் 4 மாதமாக காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று வேலை முடிந்து சுப்புலாபுரத்தில் பணியாளர்களை இறக்கி விட்டபோது அந்த பெண்ணிடம் சென்று துரை நான் உன்னை காதலிப்பதாக கூறுகிறேன். நீ ஒன்றும் பதில் சொல்லவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தாக்குதல்
இதுகுறித்து வேன் டிரைவர் குருசாமி மற்றும் கிளீனர் பாலமுருகன் ஆகியோர் துரையை தட்டி கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த துரை அருகில் இருந்த கம்பியை எடுத்து அவர்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வேன் கண்ணாடியை உடைத்ததாகவும் கூறப்படு கிறது. தொடர்ந்து அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து தரையில் இழுத்து சென்ற தாகவும் கூறப்படு கிறது.
மேலும் வேனில் இருந்து உடைந்த கண்ணாடி துண்டுகளை வைத்து அந்த பெண்ணிடம் என்னை காதலிக்க வேண்டும் என சொல்லி தனக்குத்தானே கையை கிழித்து கொண்ட தாகவும் தெரிகிறது.
இதில் முட்டியில் காயமடைந்த அந்த இளம்பெண் மற்றும் துரை ஆகியோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். மேலும் தாக்குதலில் காயமடைந்த வேன் டிரைவர் குருசாமி, கிளினர் பாலமுருகன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று சென்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கரிவலம்வந்த நல்லூர் போலீசார் பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கைது செய்தனர்.
- இளம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை நடந்துள்ளது.
- கணவரின் சகோதரிகள் நஸ்ரின், ரஹ்மத்து நிஷா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் பர்சானா ருகி (வயது 23). இவருக்கும் திருச்சி வரகநேரி பஜார் மன்சூர் அலி (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது மன்சூர் அலி குடும்பத்தினருக்கு 60 பவுன் தங்க நகையும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள சீர் பொருட்களும் மற்றும் 3லட்சத்து 50 ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் கணவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு மனைவியை பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வர சொல்லி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர். மேலும் கருவுற்ற பர்சானாருகியை கருவை கலைக்க சொல்லி மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸ் நிலையத்தில் பர்சானா ருகி புகார் செய்தார். இதன் பேரில் கணவர் மன்சூர் அலி, மாமியார் புர்கான் பீவி, மாமனார் ஜாபர் அலி கணவரின் சகோதரிகள் நஸ்ரின், ரஹ்மத்து நிஷா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே நிரவி நாகத்தோப்பு தெருவைச்சேர்ந்தவர் கந்தவேல். கொத்தனார் வேலை செய்துவரும் இவரது 2-வது மகள் உமாமகேஸ்வரி(வயது21). இவர் காரைக்கால் அவ்வை யார் அரசு மகளிர் கல்லூரியில், பி.ஏ படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். உமா மகேஸ்வ ரிக்கும், திருவாரூ ரில் உள்ள உறவினர் கலிய பெருமாள் மகன் சதீஷ் என்ப வருகும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
கந்தவேல், உறவினரிடம் திருமணம் குறித்து பேசியபோது, சதீஷ்க்கு மூத்தவர்கள் 2 பேர் இருப்பதால் சதீஷ்க்கு திருமணம் செய்துவைக்க யோசித்தனர். பிறகு, கந்தவேல், தனது மூத்த மகன் இதேபோல் காதல் விசயத்தில் இருந்தபோது, பெண் வீட்டார் சம்மதிக்காத காரணத்தால், தற்கொலை செய்துகொண்டார்.
இருப்பது ஒரே மகள் என கூறியதை அடுத்து, சதீஷ் வீட்டார் கடந்த நவம்பர் 30ந் தேதி கந்தவேல் வீட்டுக்கு சென்று, திருமணம் குறித்து பேசி முடிவெடுத்து, விரைவில் நிச்சயார்த்த தேதி சொல்வதாக கூறி சென்றதாக கூறப்படுகிறது.
மறுநாள் சதீஷ் உமா மகேஸ்வரி ஆகியோர் செல்போனில் பேசியதா கவும், அதன் பிறகு இருவரும் பேசவில்லையென கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3ந் தேதி கந்தவேலின் மனைவி உஷா, விரைவில் நிச்சயதார்த்த தேதி சொல்வதாக கூறினா ர்கள் யாரும் போன் செய்யவில்லை. நீயாவது போன் செய் என மகளிடம் செல்போனை கொடுத்த போது, உமாமகேஸ்வரி போனில் ேபசாமல், போனை உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பகல் 1.30 மணி அளவில், சதீஷ் சகோதரர் கந்தவேலுக்கு போன் செய்து, டிசம்பர் 7ந் தேதி நிச்சயதார்த்தம் செய்துகொள்ளலாம் என்ற தகவலை கூறியுள்ளார். அன்று பிற்பகல் 3 மணி அளவில், உமா மகேஸ்வரி, வீட்டு பூஜை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, கந்தவேல், நிரவி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகி ன்றனர்.
- கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி சுருளியில் கோடிலிங்கம் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
- அதன்பிறகு முத்துலட்சுமியுடன் பாண்டியன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் கம்பம் அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் முத்துலட்சுமி(22). நர்சிங் படித்து முடித்துள்ள இவர் கம்பத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் வேலைபார்த்து வருகிறார். இவரும் போடி அருகில் உள்ள வாழையாத்துப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் பாண்டியன்(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி சுருளியில் கோடிலிங்கம் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு முத்துலட்சுமியுடன் பாண்டியன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர் 5 மாத கர்ப்பிணியானார். இதனால் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்துச்செல்லுமாறு கூறினார்.
ஆனால் பாண்டியன் திருமணத்திற்கு மறுத்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினரும் பாண்டியனை மறந்துவிடும்படியும், கருவை கலைத்துவிடும்படியும் மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர்.
அவரது தந்தை ஈஸ்வரன், தாய் ஈஸ்வரி, சித்தி வசந்தி, பெரியம்மா செல்வி ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளம்பெண் சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
- பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாயமான இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் அருகே நடுவீரப்பட்டு சி. என். பாளையம் சேர்ந்த 20 வயது இளம்பெண் சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வெளியில் சென்ற இளம்பெண் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாயமான இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாயமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.






