search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rape"

    • பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் எனது இதயத்தை உலுக்கியது.
    • ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

    ராஜஸ்தான் மாநிலம், கோட்புல்லு என்ற நகரில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி ராஜேந்திர யாதவ் என்பவர் 25 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதானார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜாமீனில் வெளியே வந்த ராஜேந்திர யாதவ், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தன் மீதான வழக்கை திரும்ப பெற கோரி மிரட்டி உள்ளார். வழக்கை திரும்ப பெற முடியாது என்று அப்பெண் உறுதியாக இருந்திருக்கிறார்.

    இதனால் கோபமடைந்த ராஜேந்திர யாதவ் தனது கூட்டாளிகளான மஹிபால் குர்ஜார், ராகுல் குர்ஜார் ஆகியோருடன் இணைந்து, தனது சகோதரருடன் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அப்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேலும் கூர்மையான ஆயுதங்களை கொண்டும் அவரையும், அவரது சகோதரரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

    விவரம் அறிந்த காவல்துறையினர், ஹிபால் குர்ஜார், ராகுல் குர்ஜார் ஆகிய இருவரை கைது செய்யப்பட்டனர். ராஜேந்திர யாதவ் இன்னும் கிடைக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    இந்நிலையில் காயமடைந்த அப்பெண்ணுக்கு உள்ளூர் மருத்துவமனையில் தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அப்பெண்ணின் சகோதரருக்கும் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து முக்கிய குற்றவாளியான ராஜேந்திர யாதவை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

    இந்நிலையில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

    இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் எனது இதயத்தை உலுக்கியது. மருத்துவர்கள் தங்களால் இயன்றவரை அவரது உயிரை காப்பாற்றுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். ஏஎஸ்ஐயை சஸ்பெண்ட் செய்வது போதாது, இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

    • சிறுமிக்கு ஆறுதல் கூறிய போட்டோகிராபர் ஓட்டலில் சாப்பாடு வாங்கி தருவதாக அழைத்துச் சென்றார்.
    • உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த சிறுமி போலீசாரிடம் பேச முடியாத அளவுக்கு பாதிப்பு அடைந்து இருந்தார்.

    திருப்பதி:

    ஒடிசா மாநிலம், காலாஹண்டி மாவட்டம் பனிமுந்திராவை சேர்ந்தவர் 44 வயது காவலாளி.

    இவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கஞ்சரபாலத்தில் தங்கி இருந்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

    இவரது 17 வயது மகள் துறைமுக குடியிருப்பில் உள்ள கடற்படை அதிகாரி வீட்டில் பணி பெண்ணாக வேலை செய்து வந்தார்.

    சிறுமி உள்ளூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வருகிறார். கடந்த 17-ந் தேதி சிறுமி தனது காதலுடன் லாட்ஜிக்கு சென்றார்.

    அப்போது இருவரும் உல்லாசமாக இருந்தனர். பின்னர் காதலன் தனது நண்பர்களுக்கு போன் செய்து லாட்ஜிக்கு வர வழைத்தார். சிறுமியை மிரட்டி காதலனின் நண்பரும் பலாத்காரம் செய்தார்.

    பின்னர் லாட்ஜில் இருந்து வெளியே வந்த சிறுமி இது குறித்து தனக்கு தெரிந்த போட்டோகிராபர் ஒருவரிடம் கூறினார். சிறுமிக்கு ஆறுதல் கூறிய போட்டோகிராபர் ஓட்டலில் சாப்பாடு வாங்கி தருவதாக அழைத்துச் சென்றார்.

    பின்னர் அங்குள்ள அறைக்கு அழைத்துச் சென்ற போட்டோகிராபர் மேலும் தனது 7 நண்பர்களை போன் செய்து வர வழைத்தார்.

    8 பேரும் சேர்ந்து சிறுமியை 1 வாரம் அறையில் அடைத்து மாறி மாறி பலாத்காரம் செய்தனர். இதில் சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து பலாத்காரம் செய்த வாலிபர்கள் அவரை ஒரிசாவில் உள்ள சொந்த ஊரில் விட்டு விட்டு வந்தனர். வேலைக்குச் சென்ற மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது இளம் பெண் தனது சொந்த ஊரில் இருப்பது தெரியவந்தது.

    அவரை மீண்டும் விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த சிறுமி போலீசாரிடம் பேச முடியாத அளவுக்கு பாதிப்பு அடைந்து இருந்தார்.

    பின்னர் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த 8 வாலிபர்களை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சிறுமிக்கு பேஸ்புக் மூலமாக ஏற்கனவே அறிமுகமானவர் என கூறப்படுகிறது.
    • கற்பழிப்பு, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குவாலியர்:

    மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 21-ந் தேதி அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக காரில் இளைஞர்கள் சிலர் வந்துள்ளனர். அதில் ஒரு வாலிபர் அந்த சிறுமிக்கு பேஸ்புக் மூலமாக ஏற்கனவே அறிமுகமானவர் என கூறப்படுகிறது. அந்த வாலிபர் சிறுமியை காரில் ஏறுமாறு கூறியுள்ளார்.

    அதை நம்பி காரில் ஏறிய சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு கடத்தி சென்று அந்த வாலிபரும், அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

    பின்னர் சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

    அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்துள்ளனர். அதன் பேரில் 4 வாலிபர்கள் மீதும் கற்பழிப்பு, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார்.
    • வழக்கு திருவனந்தபுரம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு 11 மற்றும் 7 வயதில் 2 மகள்கள் உள்ளனர். அவரது கணவருக்கு திடீரென மனநிலை பாதிக்கப்பட்டது.

    இதனால் அந்த பெண், தனது கணவரை பிரிந்துசென்றார். அவர் தனது காதலன் சிசுபாலன் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். அந்த பெண், 7 வயதான தனது இளைய மகளை மட்டும் தன்னுடன் வைத்திருந்தார். அப்போது அந்த பெண்ணின் காதலன், பெண்ணின் இளைய மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

    இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தது மட்டுமின்றி, அதுபற்றி வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார். இந்நிலையில் அந்த பெண்ணின் மூத்த மகள் தாய் மற்றும் சகோதரி தங்கியிருந்த வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

    அப்போது அவரிடம் தனக்கு நேர்ந்த விஷயங்களை சிறுமி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, அதுபற்றி தனது பாட்டியிடம் கூறினார். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி, பள்ளிக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்த சிசுபாலன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை நடந்துவந்த போதே, சிசுபாலன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் சிறுமியின் தாய் மீதான வழக்கு விசாரணை மட்டும் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா, சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். மேலும் அவருக்கு ரூ20ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணின் இரு மகள்களும் தற்போது காப்பகத்தில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2019-ம் ஆண்டு கடை உரிமையாளரின் 17 வயது மகளை தனது வீட்டிற்கு வரவழைத்தார்.
    • பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ரூ 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், ஓங்கோல் மாவட்டம், கனி கிரியை சேர்ந்தவர் மகபூப் பாஷா (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டு கடை உரிமையாளரின் 17 வயது மகளை தனது வீட்டிற்கு வரவழைத்தார். பின்னர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரது விருப்பத்திற்கு மாறாக பலமுறை பலாத்காரம் செய்தார்.

    இதேபோல் ஐதராபாத் அழைத்துச் சென்றும் அங்கு சிறுமியை பலாத்காரம் செய்தார்.

    இதுகுறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். ஓங்கோல் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் மெகபூப் பாஷாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக ஓங்கோல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி சோமசேகர் தீர்ப்பு வழங்கினார்.

    மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த மகபூப் பாஷாவிற்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ 3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ரூ 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

    இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு இரவு நேரத்தில் டீக்கடை யில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

    கடலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட் டத்தை சேர்ந்த 24 வயதுள்ள இளம்பெண் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.அப்போது அந்த கம்பெனிக்கு அருகில் உள்ள டீக்கடையில் கேரள மாநிலம் மலப்புழா மாவட்டம் ஒலப்பிடுக்கா கிராமத்தைச் சேர்ந்த முகமது அஸ்வாக் (வயது 24) என்பவர் வேலை செய்து வந்தார்.

    அப்போது இவர் களுக்குள் காதல் ஏற்பட்டு இரவு நேரத்தில் டீக்கடை யில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.பின்பு கடந்த மே மாதம் 26-ந் தேதி பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தில் உள்ள இளம்பெண்ணின் சித்தப்பா வீடான குடி யிருப்புக்கு வந்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ள னர்.தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்ப தாக முகமது அஸ்வாக் மீது இளம்பெண் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து முகமது அஸ்வாக்கை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சூர்யா மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • வழக்கை விசாரித்த திருப்பூர் மகளிர் கோர்ட்டு நீதிபதி பாலு தீர்ப்பு கூறினார்.

    திருப்பூர்:

    திருச்சி மாவட்டம் மிளகுபாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சூர்யா ( வயது 21). இவர் இன்ஸ்டா கிராம் மூலம் திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரிடம் பழகி உள்ளார். இதில் இருவரும் முதலில் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அந்த மாணவியை சூர்யா திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி திருச்சிக்கு வரும்படி அழைத்துள்ளார். கடந்த 13.9.2021ம் ஆண்டு மாணவி வீட்டிற்கு தெரியாமல் திருச்சி சென்றுள்ளார். திருச்சி பஸ் நிலையத்தில் தயாராக நின்று கொண்டிருந்த சூர்யா மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இது குறித்து தனது பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார் . மாணவியின் பெற்றோர் மூலனூர் மகளிர் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்நிலையில் வழக்கை விசாரித்த திருப்பூர் மகளிர் கோர்ட்டு நீதிபதி பாலு தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்டுள்ள சூர்யாவிற்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அவரை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

    • திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.
    • வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு சியாம் கணேசை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேலபாலையத்தை சேர்ந்தவர் முத்து லட்சுமி (வயது21). இவர் வத்திரா யிருப்பு போலீசில் புகார் அளித்துள் ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள கார்மெண்டில் வேலை பார்த்து வந்தேன். அப் ேபாது தெற்கு தெருவை சேர்ந்த சியாம் கணேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. தன்னை திருமணம் செய்து கொள்வ தாக ஆசை வார்த்தை கூறி சியாம்கணேஷ் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    தற்போது திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினால் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்ப டையில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் செய்வ தாக கூறி இளம்பெண்ணை கற்பழித்த சியாம் கணேசை தேடி வருகின்றனர்.

    • பெண்னை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
    • தனது பணத்தை மீட்டு தரக்கோரியும் தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் அலுவலகத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.

    தூத்துக்குடி:

    சென்னை வேளச்சேரி கன்னிகாபுரத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் சென்னையில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2013-ம்ஆண்டு திருமணமாகி ஒரு பெண்குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த ஆசிரியை தூத்துக்குடி புதுக்கோட்டை மங்களகிரி விலக்கில் உள்ள ஒரு தியான இல்லத்திற்கு சென்று போதகர் மைக் மகிலன் என்பவரிடம் முறையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் மற்றொரு போதகரை இளம்பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

    இந்நிலையில் அந்த போதகர் இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். மேலும் தான் தொழில் செய்ய வேண்டும் என்றும் அப்பெண்ணிடம் இருந்து தனது சகோதரர் மூலமாக ரூ 5 லட்சம் வரை பெற்றுள்ளார். இதற்கிடையே அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டதற்கு அந்த போதகர் மறுத்துள்ளார். இதனால் அந்தபெண் இதுகுறித்து போதகர் மகிலனிடம் முறையிட்டபோது அவரும், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

    இந்நிலையில் இது தொடர்பாக கடந்த 11-ந் தேதி நேரடியாக ஆலயத்திற்கு சென்று இருவரிடம் கேட்டபோது வெளியே அந்த பெண்னை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து மதபோதகர் மைக் மகிலன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனது பணத்தை மீட்டு தரக்கோரியும் தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் அலுவலகத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.

    அதன்பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, போதகர் மைக் மகிலன் மீது இந்திய தண்டனை சட்டம் 294 பி, 417, 420, 506 (1) மற்றும் பெண்களை கொடுமைப்படுத்துதல் தடைச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாணவனை அங்கிருந்த கரும்பால் தாங்கி விரட்டிவிட்டு, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • டிரைவர் மற்றும் மாணவி ஆகியோரிடம் பஞ்சாயத்து பேசி முடித்ததாக கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே பரசுரெட்டிப்பா ளையத்தை சேர்ந்த 13 வயது மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் கேரளாவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். அதே ஊரில் உள்ள பாட்டியின் பராமறிப்பில் இம்மாணவி உள்ளார். இதே ஊரைச் சேர்ந்த மாணவன், மாணவி படிக்கும் அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். இவ்விருவரும் கடந்த 11-ந் தேதி மாலை அதே ஊரில் உள்ள கரும்பு தோட்டம் அருகே பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த தனியார் பள்ளி டிரைவர் மணிகண்டன் (வயது 38) இருவரையும் கண்டித்துள்ளார். மேலும், அந்த மாணவனை அங்கிருந்த கரும்பால் தாங்கி விரட்டிவிட்டு, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இரவு 7 மணியளவில் வீட்டிற்கு வந்த மாணவி, நடந்த விஷயத்தை பாட்டியிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக ஊராட்சி தலைவரை முன்னிலையில் மாணவன், தனியார் பள்ளி டிரைவர் மற்றும் மாணவி ஆகியோரிடம் பஞ்சாயத்து பேசி முடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வளவனூர் மருத்துவமனைக்கு பிளஸ்-2 மாணவன் சிகிச்சைக்காக வந்துள்ளார். அங்கு தன்னை ஒருவர் கரும்பால் அடித்து விட்டதாக கூறியுள்ளார். இத்தகவல் அறிந்த வளவனூர் போலீசார் விரைந்து சென்று மாணவனிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின் படி தனியார் பள்ளி டிரைவர் மணிகண்டனிடம் வளவனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிறுவந்தாடு பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என்றும் மிரட்டி உள்ளார்.
    • பொதுமக்களுக்கு தெரியவந்ததும் சமையல்காரரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் ஒடிசாவைச் சேர்ந்த 47 வயதுள்ள ஒருவர் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். இவர் ஹூப்ளியில் உள்ள சித்தலிங்கேஸ்வரர் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வருகிறார்.

    இவர் சிறுவர்களுடன் பழகி அவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டு திண்பண்டங்கள், சாக்லேட்டுகள் மற்றும் பணம் தருவதாக ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுவர்களை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர்களை இயற்கைக்கு மாறான பாலியல் செயல்களுக்கு வற்புறுத்தி மற்றொரு சிறுவனின் உதவியுடன் தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என்றும் மிரட்டி உள்ளார்.

    இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தெரியவந்ததும் சமையல்காரரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் பழைய ஹூப்ளி போலீசில் அவரை ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவர் மீது இயற்கைக்கு மாறான குற்றங்கள், கொலை மிரட்டல், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

    • 3 குழந்தைகளின் தந்தை போக்சோவில் கைது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 38). இவர் வேலூரில் உள்ள சுவீட் கடை ஒன்றில் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது மனைவி உஷா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இறந்து விட்டார்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஆசை வார்த்தைக்கூறி தனது வீட்டிற்கு வரவழைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதனால் சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர்.

    அப்போது நடந்ததை கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதைதொடர்ந்து போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மோகன்தாசை கைது செய்தனர்.

    ×