என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கல்லூரி  மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து த.வெ.க. கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
    X

    கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து த.வெ.க. கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

    • கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.
    • இந்த சம்பவத்தை கண்டித்து இன்று அதிமுக, பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    கோவையில் நேற்று இரவில், விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றனர்.

    பாதிப்புக்குள்ளான அம்மாணவி, இன்று அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை குறிப்பிட்டு தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என ஆளும் திமுக அரசை அதிமுக, தவெக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த சம்பவத்தை கண்டித்து இன்று அதிமுக, பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில், கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து இன்று கோவையில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டம் கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் அருகே நாளை பகல் 12 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×