என் மலர்
நீங்கள் தேடியது "பாலியல் வன்கொடுமை"
- விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
- பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் இனியாவது எவ்விதச் சமரசமுமின்றி உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை :
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். எனவே, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல், விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
ராணுவத்தில் நம் பெண்கள் வீர தீரத்துடன் சாதித்ததைக் கொண்டாடும் இக்காலத்தில், மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட்டு, பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் இனியாவது எவ்விதச் சமரசமுமின்றி உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
- சிறுமி காரில் இருந்து தப்பி, காவல் நிலையத்தை அடைந்து நடந்த சம்பவத்தைப் தெரிவித்தார்.
- தப்பிக்க முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் கால்களில் சுட்டுப் பிடித்தனர்
உத்தரப் பிரதேசத்தில் ஓடும் காருக்குள் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவரது தோழி கொலை செய்யப்பட்டார்.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட சந்தீப், அமித் மற்றும் கௌரவ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் அந்த 17 வயது சிறுமியையும் அவரது 19 வயது தோழியையும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கிரேட்டர் நொய்டாவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் ஒரு காரில் கடத்தப்பட்டனர்.
கடத்தப்பட்டதை உணர்ந்து பெண்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஓடும் காரிலிருந்து 19 வயது பெண்ணை குற்றவாளிகள் கீழே தள்ளிவிட்டனர். மேலும் 17 வயது சிறுமியை மூவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி காரில் இருந்து தப்பி, காவல் நிலையத்தை அடைந்து நடந்த சம்பவத்தைப் தெரிவித்தார்.
பின்னர் அலிகார்-புலந்த்ஷர் நெடுஞ்சாலை அருகே குற்றவாளிகள் மூவரும் பயணித்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். தப்பிக்க முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் கால்களில் சுட்டுப் பிடித்தனர். சாலையில் விழுந்து படுகாயமடைந்த 19 வயது பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- வெகுநேரமாகியும் மாணவிகளுக்கு மயக்கம் தெளியாததால் வாலிபர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
- மாணவிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவர்கள் மயக்கம் தெளிந்து எழுந்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் களக்கூட்டம் பகுதியில் தம்புரான்முக்கு பகுதியில் ஏராளமான ஓட்டல்கள் மற்றும் லாட்ஜூகள் இருக்கின்றன. அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சம்பவத்தன்று 3 வாலிபர்கள் மற்றும் 2 மைனர் சிறுமிகள் வந்துள்ளனர்.
பள்ளி படிக்கும் அந்த சிறுமிகள், தங்களை அழைத்து வந்த வாலிபர்களுடன் சேர்ந்து மது குடித்ததாக தெரிகிறது. அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் போதை அதிகமாகி மாணவிகள் இருவரும் மயக்கமடைந்தனர்.
இதையடுத்து போதையை தெளியவைக்க முகத்தை கழுவ அறைக்கு அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு, மாணவிகள் இருவரையும் அங்குள்ள ஒரு அறையில் இருந்த குளியலறைக்கு வாலிபர்கள் தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு கொண்டுசென்று முகத்தை கழுவியபிறகும் மாணவிகளுக்கு மயக்கம் தெளியவில்லை.
அதனை பயன்படுத்தி குளியலறைக்குள் வைத்து மாணவிகள் இருவரையும் மயக்க நிலையிலேயே 3 வாலிபர்களும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வெகுநேரமாகியும் மாணவிகளுக்கு மயக்கம் தெளியாததால் வாலிபர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் அவர்கள் மாணவிகளை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். மேலும் மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து, அவர்களது பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாணவிகளின் பெற்றோர் மருத்துவமனைக்கு சென்றனர்.
மாணவிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவர்கள் மயக்கம் தெளிந்து எழுந்தனர். அப்போது தங்களை 3 வாலிபர்களும் சேர்ந்து ஓட்டல் குளியலறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த தகவலை மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.
அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர், அது பற்றி தும்பா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் மாணவிகளை சீரழித்த வாலிபர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திருவனந்தபுரம் சங்குமுகத்தை சேர்ந்த எபின் (வயது19), அபிலாஷ்(24), பைசர்கான்(38) ஆகியோர் என்பது தெரியவந்தது.
அதன்பேரில் 3 வாலிபர்களின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. வாலிபர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மது கொடுத்து மாணவிகள் இருவரையும் மயங்க செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.
பள்ளி மாணவிகள் இருவருக்கு மது கொடுத்து மயங்க செய்து, ஓட்டல் குளியலறையில் வைத்து வாலிபர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாணவிகளின் செல்போன் எண்ணை தெரிந்துவைத்துக் கொண்டு அடிக்கடி மாணவிகளிடம் பேசி ஆசைவார்த்தை கூறி இருக்கிறார்.
- புகாரின் பேரில் குன்னூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் உமேஸ்வரன் (வயது 26). பி.ஏ. பட்டதாரி. இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். திருமணம் ஆனவர். இவரது நடவடிக்கை பிடிக்காமல் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். உமேஸ்வரன் தனியாக வசித்து வந்தார்.
இவரது பெட்டிக்கடைக்கு பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் சிலர் சாக்லேட் உள்ளிட்ட பொருட்கள் வாங்கவும், செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்யவும் சென்று உள்ளனர்.
அப்போது அந்த மாணவிகளின் செல்போன் எண்ணை தெரிந்துவைத்துக் கொண்டு அடிக்கடி மாணவிகளிடம் பேசி ஆசைவார்த்தை கூறி இருக்கிறார். தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அவர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி உள்ளார்.
உமேஸ்வரனின் பேச்சில் மயங்கிய 5 மாணவிகளை தனித்தனியாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். மேலும் வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்றும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.
நாளடைவில் இவரது சுயரூபம் தெரிந்ததும் மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் குழந்தைகள் நல பாதுகாப்புத்துறைக்கு 1099 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ஷோபனா தலைமையிலான குழுவினர் அந்த கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் 5 பழங்குடியின மாணவிகளை உமேஸ்வரன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் குன்னூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உமேஸ்வரன் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை ஜெயிலில் அடைத்தனர்.
பழங்குடியின மாணவிகள் 5 பேருக்கு பட்டதாரி வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- தனிப்படை போலீசார் ஓட்டல் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மைனர் பெண்ணை மீட்டனர்.
- பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மத்தியபிரதேச மாநிலம் ஷாதோல் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண். இவருக்கும் அவருடைய தாயாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மைனர் பெண் வீட்டை விட்டு வெளியேறினார்.
மகள் காணாமல் போனது குறித்து அவருடைய பெற்றோர் அங்குள்ள போலீஸ் நிலையத்தின் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மைனர் பெண்ணை தேடி வந்தனர்.
வீட்டை விட்டு வெளியேறிய மைனர் பெண் கடந்த 29-ந்தேதி ஷாதோல் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சமீர் என்பவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
வாலிபரின் பேச்சை நம்பி மைனர் பெண் அவருடன் சென்றார். ஒதுக்கப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்று அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.
தொடர்ந்து சமீரின் உதவியாளர் உட்பட மேலும் 2 பேர் அங்கு வைத்து மைனர் பெண்ணை வன்கொடுமை செய்தனர். அன்று இரவு முழுவதும் அவர்கள் பெண்ணை அடைத்து வைத்திருந்தனர்.
மறுநாள் 30-ந் தேதி அதிகாலை ரெயில் நிலையம் அருகே விட்டு சென்று விட்டனர்.
அங்கு தவித்துக் கொண்டிருந்த மைனர் பெண்ணை அன்மோல் என்ற மற்றொரு வாலிபர் உதவி செய்வதாக கூறி அழைத்து சென்றுள்ளார். அவரும் அவருடைய நண்பர்கள் 2 பேர் சேர்ந்து மைனர் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை அங்குள்ள விடுதி அருகே விட்டு விட்டு சென்று விட்டனர்.
புர்ஹார் ஜெயிலில் துணை ஜெயிலராக பணியாற்றும் விகாஸ் சிங் என்பவர் அந்த வழியாக வந்தார். அவர் மைனர் பெண்ணை காரில் அங்குள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு பெண்ணை வலுக்கட்டாயமாக அறையில் அடைத்து வைத்தார்.
இதற்கிடையே மைனர் பெண் குறித்து போலீசார் துப்பு துலுக்கினர். அவர் லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் ஓட்டல் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மைனர் பெண்ணை மீட்டனர்.
மேலும் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 2 நாட்களாக வன்கொடுமை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மைனர் பெண்ணை லாட்ஜில் அடைத்து வைத்த ஜெயிலர் விகாஷ் சிங் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணுக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சிறுவன் ஆசிரியையுடன் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன.
- அங்கிருந்து இருவரும் ஜெய்ப்பூருக்குச் சென்று இரண்டு இரவுகள் ஒரு ஹோட்டலில் தங்கினர்.
பதினொரு வயது சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை செய்ததற்காகக் குஜராத் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
சிறுவன் காணாமல் போனது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவன் ஆசிரியையுடன் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன.
மூன்று நாள் தேடுதலுக்குப் பிறகு, குஜராத்-ராஜஸ்தான் எல்லைக்கு அருகில் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர்.
விசாரணையின்படி, ஏப்ரல் 25 ஆம் தேதி, ஆசிரியை மான்சி சிறுவனுடன் சூரத்திலிருந்து புறப்பட்டு பேருந்தில் அகமதாபாத்தையும், பின்னர் வதோதரா வழியாக டெல்லியையும் அடைந்தார்.
அங்கிருந்து இருவரும் ஜெய்ப்பூருக்குச் சென்று இரண்டு இரவுகள் ஒரு ஹோட்டலில் தங்கினர். தற்போது சிறுவன் மீட்கப்பட்டு ஆசிரியை மான்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 127 இன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளார்.
- ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு.
- ஞானசேகரன் மீது பதிவான வழக்குகளில், காவல்துறை விசாரணையில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை.
அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில் ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது என்று உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பாஜக வழக்கறிஞர் மோகன் தாஸ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக தமிழக டிஜிபி அறிக்கை சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில்," அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஞானசேகரன் மீது பதிவான வழக்குகளில், காவல்துறை விசாரணையில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை.
பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் மகிளா நீதிமன்றத்தில் 13 கட்சிகள் இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளது.
அதனால், இந்த விவகாரத்தில் ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது" என குறிப்பிட்டுள்ளார்.
- பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் ஒரு தலித் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் சிங் கூறுகையில், ஏப்ரல் 24 ஆம் தேதி, 16 வயதுடைய அந்த சிறுமி வேரோரு கிரமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
ஏப்ரல் 27 ஆம் தேதி, அதே கிராமத்தைச் சேர்ந்த ஷைலேந்திர சரோஜ் என்கிற ஜாஹித், அவரது நண்பர் ஷேரு என்கிற நாசர் அகமது மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையின் புகாரின் பேரில் மூன்று இளைஞர்கள் மீது பிஎன்எஸ், போக்சோ சட்டம் மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்
- குஜராத்தி புத்தாண்டின் போது பிஸ்கட் கொடுத்து கடத்திச் சென்றார்.
- ஒன்றரை மாதங்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம், ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஆனந்த் மாவட்டத்தின் காம்பட் கிராமப்புற பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் அக்டோபர் 28, 2019 அன்று வெளிச்சத்துக்கு வந்தது.
குஜராத்தி புத்தாண்டின் போது பிஸ்கட் கொடுத்து சிறுமியை தாதோ என்கிற அர்ஜுன் அம்பலால் கோஹெல் (24) கடத்திச் சென்று வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஒன்றரை மாதங்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் தற்போது இந்த தீர்ப்பு வந்துள்ளது.
குஜராத்தின் நீதித்துறை மற்றும் காவல் அமைப்பின் செயல்திறனையும், குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான மாநில அரசின் உறுதிப்பாட்டையும் இந்த முடிவு குறிக்கிறது என அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி பாராட்டினார்.
இரட்டை மரண தண்டனை என்பது மேல்முறையீடு மூலம் உயர் நீதிமன்றத்தில் ஒரு குற்றத்தில் அவர் விடுவிக்கப்பட்டாலும், அவர் மரண தண்டனையை எதிர்கொள்வதை உறுதி செய்கிறது. இந்தியாவில் இந்த இரட்டை மரணதண்டனை தீர்ப்பு அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
- பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூவும் மீதான வர்ஜீனியாவின் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
- ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், பாலியல் அடிமையாகப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அமெரிக்க தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்து பரபரப்பை வர்ஜீனியா கியூஃப்ரே உயிரிழந்தார்.
41 வயதான வர்ஜீனியா ஆஸ்திரேலியாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்தார். வர்ஜீனியா தற்கொலை செய்து கொண்டதை குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூவும் மீதான வர்ஜீனியாவின் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், பாலியல் அடிமையாகப் பயன்படுத்தியதாகவும், இளவரசர் ஆண்ட்ரூவும் 17 வயதில் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் வர்ஜீனியா குற்றம்சாட்டினார்.
இளவரசர் ஆண்ட்ரூவுடன் உடலுறவு கொள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனக்கு 15,000 டாலர் கொடுத்ததாக கியூஃப்ரே வெளிப்படுத்திய ஆதாரங்கள் அடங்கிய நீதிமன்ற ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் பல சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது சுமத்தப்பட்டன.
இந்த வழக்கில் 2008 இல் தண்டனை பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019 இல் நியூயார்க் நகர சிறையில் தற்கொலை செய்து கொண்டார். பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தொடர்ந்து ஆண்ட்ரூ தனது அரச பட்டங்களை இழந்தார்.
- தனது 11 வயது மகளுடன் பண்ணை வீட்டின் வராண்டாவில் பெண் தூங்கிக்கொண்டுருந்தார்.
- குற்றம் சாட்டப்பட்டவர் பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த தர்மேந்திரா (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தியத் தலைநகர் டெல்லி, ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டின் பராமரிப்பாளராக இருந்த 37 வயது பெண் தனது மகளின் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த தர்மேந்திரா (35) என அடையாளம் காணப்பட்டார்.
கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி, நள்ளிரவில் தனது 11 வயது மகளுடன் பண்ணை வீட்டின் வராண்டாவில் பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் வசித்த தர்மேந்திரா சுவர் ஏறிக் குதித்துள்ளான்.
பெண் மற்றும் அவரது மகளின் கை, கால்களைக் கட்டிபோட்டுவிட்டு, சிறுமியின் கண்முன்னே தாயை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.
தனக்கு நேர்ந்தது குறித்து அப்பெண் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தர்மேந்திராவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
- சிறுமியின் தாய் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து பூவரசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பெண் பிள்ளைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால்பேட்டை வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் பூவரசன் (வயது 45). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் இவர் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார். அவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். பூவரசன் அடிக்கடி அந்த பெண் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூவரசன் வழக்கம் போல் அந்த பெண் வீட்டுக்கு சென்றார். அப்போது அந்த பெண் வீட்டில் இல்லை. அவருடைய மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பூவரசன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த சிறுமி வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து பக்கத்து வீட்டில் தஞ்சம் புகுந்தார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவே பூவரசன் அங்கிருந்து சென்று விட்டார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து பூவரசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியில் கடந்த 10 நாட்களில் 3 சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். தற்போது மீண்டும் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் பெண் பிள்ளைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.