என் மலர்
நீங்கள் தேடியது "Harassment"
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மஜாம் அலியை கைது செய்தனர்.
- வாழ்நாள் முழுவதும் (அதாவது சாகும் வரை) சிறை தண்டனை விதித்து கடந்த 2022-ம் ஆண்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மதுரை:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த 20.1.2020 அன்று பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்தார். மாலை 4.30 மணி அளவில் வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அந்தப் பகுதியில் செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜாம் அலி (வயது 20) என்பவர் அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்றுள்ளான்.
அவர் முட்புதற்களுக்குள் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர் சிறுமி அணிந்திருந்த உடையில் இணைக்கப்பட்டிருந்த கயிற்றின் மூலமாக அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பிவிட்டார். சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அதே பகுதியில் புதருக்குள் பிணமாக சிறுமி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மஜாம் அலியை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. மு வில் மஜாம் அலி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் (அதாவது சாகும் வரை) சிறை தண்டனை விதித்து கடந்த 2022-ம் ஆண்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக மஜாம் அலி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் பா.நம்பி செல்வன் ஆஜராகி, சிறுமி கொலை வழக்கில் நேரடி சாட்சியங்கள் கிடையாது. சூழ்நிலை சாட்சிகள் மற்றும் விஞ்ஞானபூர்வமான சாட்சிகளின் அடிப்படையில் கீழ் கோர்ட்டு மேல்முறையீட்டாளருக்கு தண்டனை விதித்து உள்ளது.
இறந்த சிறுமியின் உடலில் மேல்முறையீட்டாளர் முடி இருந்தது. இது அவருடையது தான் என்பது விஞ்ஞானபூர்வமான பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டாளருக்கு கீழ் கோர்ட்டு விதித்த சாகும் வரை தண்டனையை உறுதி செய்தும், அவருடைய மேல்முறையீட்டு மனுவை தள்ளு படி செய்தும் உத்தரவிட்டனர்.
- பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது.
- வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,
திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம்பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்?
இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும்.
மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- இளம்பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
- இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 3 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
வேலூரை சேர்ந்ததாக கூறப்படும் இளம்பெண் தனது காதலனுடன் ராணிப்பேட்டை மாவட்டம் நவ்லாக் பண்ணை பகுதிக்கு நேற்று இரவு வந்ததாக கூறப்படுகிறது.
அங்கு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அவரகரையை சேர்ந்த 3 பேர் காதலர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் நகை, பணம் கேட்டு மிரட்டினர். இதையடுத்து இளம்பெண்ணின் காதலனை அடித்து உதைத்தனர். அடி தாங்க முடியாமல் வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததாக தெரிகிறது.
பின்னர் தனியாக இருந்த இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக அந்த இளம்பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 3 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் ராணிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஓட்டலுக்கு அழைத்ததா நடிகை பரபரப்பு புகார்.
- கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்ய மேலிடம் வலியுறுத்தியதால், இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்தவர் ராகுல் மம்கூத்தத்தில். இவர் எம்.எல்.ஏ. ஆகவும் உள்ளார். இவர் மீது நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார். தன்னை ஓட்டலுக்கு அழைத்ததாகவும், பலகட்டங்களில் மோசமான தகவல்கள் அனுப்பியதாகவும் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.
இதனால் கட்சியின் அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு, சுயேட்சை எம்.எல்.ஏ. போன்று செயல்படலாம் என கட்சி வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில் இளைஞர் அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா? என்பது தெரியவில்லை.
ராகுலுக்குப் பதிலாக அபின் வர்கீஸ் மற்றும் கே.எம். அபிஜித் ஆகியோரில் ஒருவர் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்படலாம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடிகை பெயரை வெளியிட மறுத்துவிட்ட நிலையில், பா.ஜ.க ராகுல் மம்கூத்தத்திலுக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்தது. இதனைத் தொடர்ந்து கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- மயக்க மருந்துகளை கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
மகாராஷ்டிராவில் 14 வயது வங்கதேச சிறுமி 3 மாத காலத்திற்குள் 200 ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பால்கர் மாவட்டத்தில் வசாய் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த மாதம் 25-ந்தேதி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் இருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி உள்பட 3 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வங்கதேசத்தில் இருந்து சிறுமிகளை இந்தியாவுக்கு நுழைய உதவி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி போலீசாரிடம் கூறுகையில், பள்ளியில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்ததால் வீட்டை விட்டு வந்ததாகவும், அப்போது தனக்குத் தெரிந்த ஒரு பெண்மணியால் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததாகவும், பின்னர் பாலியல் தொழிலில் தன்னைத் தள்ளிவிட்டதாகவும் கூறினார். மேலும் மயக்க மருந்துகளை கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், சூடான கரண்டியால் முத்திரை குத்தியுள்ளதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். கடந்த 3 மாதத்தில் 200 ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பல்வேறு சித்ரவதைகள் செய்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதனிடையே, முன்கூட்டியே பருவமடைவதைத் தூண்டுவதற்காக சிறுமிக்கு ஹார்மோன் ஊசிகள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி நவி மும்பை, மகாராஷ்டிராவின் புனே, குஜராத், கர்நாடகா மற்றும் நாட்டின் பிற இடங்களுக்கு கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆசிரியர் செல்வம் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.
- குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 35). மாற்றுத்திறனாளி. இவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்கப்பட்டுள்ள இவர் வரலாறு மற்றும் புவியியல் வகுப்புகளுக்கு பாடம் எடுத்து வருகிறார், கடந்த ஒரு ஆண்டாக இந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் செல்வம் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழ்நதைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள், மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்கள். அந்த நேரம் மாணவிகள் ஆசிரியர்கள் மீது புகார் அளித்தனர்.
இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஆசிரியர் செல்வதை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஹைதர் அலியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது.
- மான்செஸ்டரில் உள்ள வணிக வளாகத்தில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்படுகிறது.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வம்சாவளி பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டதை அடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'ஏ' அணியில் இடம்பெற்றிருந்த 24 வயதான ஹைதர் அலி மீது கூறப்பட்ட புகாரில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது.
பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணி இங்கிலாந்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கடந்த மாதம் 23-ந்தேதி மான்செஸ்டரில் உள்ள வணிக வளாகத்தில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்படுகிறது. இதையடுத்து ஹைர் அலியை கைது செய்த போலீசார் அவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து அவரை ஜாமினில் விடுவித்துள்ளதாக தெரிவித்தனர்.
- ஆத்திரம் அடைந்த மாமியார் அருகில் இருந்த கட்டையை எடுத்து மருமகன் தலையில் பலமாக தாக்கினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், ஹிமாயத் நகரை சேர்ந்தவர் ஷேக் நஜீம் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி, மகன் மற்றும் மாமியாருடன் தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம், தரோடா கிராமத்திற்கு வந்தார்.
ஷேக் நஜீம் கூலி வேலை செய்து வந்தார். அவரது மனைவி கட்டிட வேலைகளுக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நஜீமின் மனைவி தனது மகனுடன் மகாராஷ்டிரா மாநிலம், ஷிவானிக்கு சென்றார். இதனால் அவரது மாமியார் வீட்டில் தனியாக இருந்தார்.
கடந்த வாரம் மது போதையில் வீட்டிற்கு வந்த ஷேக் நஜீம் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதனால் அவரது மாமியாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த ஷேக் நஜீம் மீண்டும் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த மாமியார் அருகில் இருந்த கட்டையை எடுத்து மருமகன் தலையில் பலமாக தாக்கினார். இதில் ஷேக் நஜீம் மயக்கம் அடைந்தார். அவரது கழுத்தை நெரித்து மாமியார் கொலை செய்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஷேக் நஜீமின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- தனது குழந்தைகளுடன் அந்த இளம்பெண், அனீசுடன் விடுதி அறையில் தங்கினார்.
- இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த அந்த இளம்பெண், அதனை வெளியே கூறாமல் அப்படியே மூடி மறைத்துவிட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மாதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனீஷ்(வயது40). ஆட்டோ டிரைவரான இவருக்கு சமூக வலைதளத்தின் மூலமாக இளம்பெண் ஒருவர் அறிமுகமானார். அந்த பெண்ணுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
இருந்தபோதிலும் அந்த இளம்பெண்ணுடன் அனீஷ் பழகி வந்தார். நாளடைவில் அது கள்ளத்தொடர்பாக மாறியது. இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் அனீஷ், அந்த இளம்பெண்ணை அந்தூர் நகராட்சிக்குட்பட்ட பரசினிக்கடவு பகுதிக்கு அழைத்திருக்கிறார்.
அதன்படி அந்த இளம்பெண், 2 மகள்கள் உள்பட 3 குழந்தைகளுடன் அங்கு சென்றார். இளம்பெண்ணின் மூத்த மகள் பிளஸ்-2 வும், இரண்டாவது மகள் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தனது குழந்தைகளுடன் அந்த இளம்பெண், அனீசுடன் விடுதி அறையில் தங்கினார்.
இரவில் அனைவரும் ஒரே அறையில் படுத்து தூங்கினர். அப்போது அதிகாலை 2 மணியளவில், 9-ம் வகுப்பு படிக்கும் இளம்பெண்ணின் 14 வயது மகளை அனீஷ் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை மூத்த மகளான 12-ம் வகுப்பு மாணவி பார்த்து விட்டார்.
அதுபற்றி அவர் தனது தாயிடம் கூறினார். ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த அந்த இளம்பெண், அதனை வெளியே கூறாமல் அப்படியே மூடி மறைத்துவிட்டார். இருந்தபோதிலும் தனக்கு நடந்த கொடுமையை மறக்க முடியாத சிறுமி, அதுபற்றி தன்னுடைய வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்தார்.
அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து "சைல்டுலைன்" அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அதுபற்றி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஆட்டோ டிரைவர் அனீசை கைது செய்தனர்.
அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கள்ளக்காதலியுடன் விடுதியில் தங்கியிருந்த போது, அவரது மகளையே கள்ளக்காதலன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
- பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இங்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி நேற்று மாலை கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருந்த அசாம் மாநில வாலிபர் ஒருவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறுமி வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சிறுமி மாலை தனது தாயிடம் அடி வயிற்றில் வலி ஏற்படுவதாகவும், மேலும் பள்ளியில் நடந்த சம்பவத்தையும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த நபரை கைது செய்ய கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவலறிந்த கே.வி.ஆர் நகர் சரக உதவி கமிஷனர் ஜான் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய அசாமை சேர்ந்த ஜெய் (27) என்பவரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 100க்கு மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி முன்பு ஒன்று கூடி பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளி நிர்வாகம் நடந்த சம்பவத்திற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .
- மயக்கம் தெளிந்தபோது தனக்கு நேர்ந்த கொடூரத்தை அந்தப்பெண் உணர்ந்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆஸ்பத்திரி ஊழியர் யோகேஷ் பாண்டேவை கைது செய்தனர்.
உத்தரபிரதேசத்தின் பல்ராம்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் 28 வயதான இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு நோய்க்கான ஊசி எனக்கூறி, யோகேஷ் பாண்டே என்ற ஊழியர் மயக்க ஊசி போட்டுள்ளார்.
இதனால் மயக்கமடைந்த அந்த பெண்ணை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டார். பின்னர் மயக்கம் தெளிந்தபோது தனக்கு நேர்ந்த கொடூரத்தை அந்தப்பெண் உணர்ந்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆஸ்பத்திரி ஊழியர் யோகேஷ் பாண்டேவை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
நோய்க்கு சிகிச்சை பெறச் சென்ற பெண்ணை ஆஸ்பத்திரி ஊழியர் மயக்க ஊசி போட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தாரா ஷிவ் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக லந்தூர் மாவட்டத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் விடுதி ஊழியர் ஒருவர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். இதனைத் தொடர்ந்து விடுதி உரிமையாளர் மற்றும் கண்காணிப்பாளர், ஊழியர் ஒருவரும் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்தனர்.
இதுகுறித்து சிறுமி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். சிறுமி எழுதிய கடிதங்களை விடுதி நிர்வாகிகள் கிழித்து எறிந்தனர்.
சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுமியை சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆஸ்பத்திரியில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர்.
சிறுமி தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி உரிமையாளர் ரவி பாபட்லா, கண்காணிப்பாளர் ரச்சனா பாபட்லா, ஊழியர்கள் அமித் மகாமுனி மற்றும் பூஜா வாக்மாரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.






