என் மலர்
நீங்கள் தேடியது "student suicide"
- பள்ளியில் வீட்டுப்பாடம் எழுதிவரவில்லை என கூறி மாணவன் முத்துகிருஷ்ணனை தலைமை ஆசிரியை கண்டித்ததாக கூறப்படுகிறது.
- மாணவனின் சட்டைப் பையில் ஒரு கடிதம் இருந்தது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் முத்துகுமார். இவரது மகன் முத்துகிருஷ்ணன் (வயது 15). இவர் கஸ்பா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று பள்ளியில் வீட்டுப்பாடம் எழுதிவரவில்லை என கூறி மாணவன் முத்துகிருஷ்ணனை தலைமை ஆசிரியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் முத்துகிருஷ்ணன் நேற்று இரவு வீட்டில் பின்புறம் உள்ள ஆஸ்பெடாஸ் சீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்து மாணவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவனின் சட்டைப் பையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், எனது சாவுக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என 4 ஆசிரியர்களின் பெயர்களை எழுதி வைத்திருந்தார்.
கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விழுப்புரம் மாவட்டத்தில் 192 பள்ளிகள் மூலம் 21,581 பேர் தேர்வு எழுதினர்.
- 95.11 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 18-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
விழுப்புரம்:
தமிழகம் முழுவதும் இன்று காலை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. விழுப்புரம் மாவட்டத்தில் 192 பள்ளிகள் மூலம் 21,581 பேர் தேர்வு எழுதினர். இதில் 20,526 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனால் 95.11 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 18-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் சிறுவாலை கிராமத்தை சேர்ந்த மாணவன் கோகுல்நாத் பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்தார். இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியான போது மாணவன் கோகுல்நாத் தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிறுவாலை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
- மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு மாணவ குலத்திற்கு எதிரானது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியுமா? என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரைச் சேர்ந்த கயல்விழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி கயல்விழியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
2017-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு முந்தைய மாதமும், நீட் தேர்வு முடிவு வெளியாவதையொட்டிய சில காலங்களும் தற்கொலைக் காலங்களாக மாறி விடுகின்றன. இந்தக் கொடுமையிலிருந்து நடப்பாண்டும் தப்பவில்லை. கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி, ஏப்ரல் 3-ஆம் தேதி எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா, ஏப்ரல் 4-ஆம் தேதி புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி, இன்று கயல்விழி என இரு மாதத்தில் 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.
நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று வசனம் மட்டும் தான் தமிழக அரசு பேசுகிறது; நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கவில்லை.
நீட் தேர்வு நடத்தப்படுவது எதற்காக என்பதே தெரியாமல், அதை நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயரவில்லை; நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாவது குறையவில்லை; மாறாக, இந்த இரு சிக்கல்களும் மேலும் தீவிரமடைந்துள்ளன. இதை தெரிந்து கொண்டும் நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல.
மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு மாணவ குலத்திற்கு எதிரானது. அதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மாநில அரசும் அதற்காக என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, நீட் தேர்வு தோல்வி அச்சத்துக்கு தீர்வு தற்கொலை அல்ல என்பதை மாணவச் செல்வங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணத்தைக் கைவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒரு மாதத்தில் 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
- நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகில் உள்ள புதுப்பாக்கத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியான சக்தி புகழ்வாணி நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்ற அச்சத்தால் வீட்டில் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி சக்தி புகழ்வாணியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவி சக்தி புகழ்வாணி அண்மையில் தான் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதி முடித்து விட்டு, முடிவுக்காக காத்திருந்தார். அத்துடன் நீட் தேர்வுக்காகவும் தனிப்பயிற்சி பெற்று வந்தார். மே மாதம் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான நாள்கள் நெருங்க, நெருங்க அதில் தம்மால் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியுமா? என்ற அச்சமும், பதட்டமும் சக்தி புகழ்வாணிக்கு அதிகரித்தது. ஒரு கட்டத்தில் தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, அதைத் தொடர்ந்து மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி, நேற்று முன்நாள் வியாழக்கிழமை எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா, நேற்று புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி என ஒரு மாதத்தில் 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.
ஒருபுறம் கடுமையான போட்டி, இன்னொருபுறம் பெற்றோரின் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு, மூன்றாவதாக தாங்க முடியாத பாடச்சுமை ஆகியவற்றால் நீட் தேர்வை எழுதும் மாணவச் செல்வங்களுக்கு ஏற்படும் அழுத்தங்களையும், மன உளைச்சலையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், அதற்கான தீர்வு தற்கொலை அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதேபோல், பிள்ளைகள் மருத்துவம் படிப்பது தான் தங்களுக்குப் பெருமை என்ற மாயையிலிருந்து பெற்றோர்கள் வெளியில் வர வேண்டும். மருத்துவமும் ஒரு பட்டப்படிப்பு தான்; அதில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் அதைத் தவிர்த்த ஏராளமான படிப்புகளில் ஒன்றை படிக்க மாணவர்களும், அதை அங்கீகரிக்க பெற்றோரும் தயாராக இருக்க வேண்டும். நீட்டுக்கு இனியும் ஒரு குழந்தையைக் கூட பலி கொடுக்கக்கூடாது.
அதற்காக தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும். தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. மாணவர்கொல்லி நீட் தேர்வை திணிப்பதில் தீவிரமாக இருக்கும் மத்திய அரசோ, அந்த சட்டத்தை ஏற்க மறுத்து விட்டது. அதனால் நீட் அச்சுறுத்தல் நிரந்தரமாகி விட்டது.
நீட் தேர்வுக்காக ஏற்கனவே நடத்தப்பட்ட சட்டப் போராட்டங்களும், சட்டமியற்றும் முயற்சிகளும் தோல்வியடைந்து விட்ட நிலையில், அடுத்து தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் எந்த வகையிலும் பயனளிக்காது. நீட் தேர்வை ரத்து செய்யவும், மாணவர்கள் தற்கொலையைத் தடுக்கவும் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- மதுரையில் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
- இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மேலவாசலை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் மணிமேகலை (வயது 14). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். மணிமேகலை கடந்த சில நாட்களாக யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். அதற்கு காரணம் தெரியாததால் எதற்காக இப்படி இருக்கிறார்? என்று அவரது பெற்றோர்கள் கேட்டனர்.
இருந்த போதிலும் அவர் காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மணிமேகலை இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது மர்மமாக உள்ளது.
அவர் குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பள்ளியில் ஆசிரியர்கள் திட்டியதால் இந்த முடிவு எடுத்தாரா? என்பது தெரியவில்லை. இது பற்றி மாணவியின் பெற்றோர் திடீர் நகர் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் திடீர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிராஜன் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் மாணவியின் தற்கொலைக்கு என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
- காதல் விவகாரத்தில் நீட் பயிற்சி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). இவரது மகள் ஆனந்தி (18). பிளஸ்-2 முடித்த இவர் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார்.
நேற்று மாலை மணிகண்டன், ஆனந்தி படிக்கும் நீட் தேர்வு பயிற்சி மையத்துக்கு சென்று தனது மகளை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக காத்திருந்தார். 3 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் 2-வது மாடியில் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பு முடிந்து கழிவறைக்கு செல்வதாக கூறிச்சென்ற ஆனந்தி திடீரென்று 3-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.
சாலையில் விழுந்ததில் அவருக்கு தலையில் அடிப்பட்டு ரத்தம் கொட்டியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உடனடியாக கீழே ஓடிச்சென்று மகளை காப்பாற்ற முயன்றார். மேலும் பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்சு மூலமாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மகளை அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனந்திக்கு பின்தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஆனந்தி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில், மாணவி ஆனந்தியும், திருப்பூரில் உள்ள கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். நேற்று காலை ஆனந்தியை பார்க்க கல்லூரி மாணவர் நீட் பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை நீட் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மற்ற மாணவர்கள் கண்டித்துள்ளனர். மேலும் இது பற்றி ஆனந்தியின் தந்தை மணிகண்டனுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மாலை ஆனந்தியை அழைத்து செல்வதற்காக மணிகண்டன் நீட் பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார். அப்போது ஆனந்திக்கு பல்வேறு அறிவுரைகளை கூறியுள்ளார். இந்தநிலையில் காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் அவமானமடைந்த ஆனந்தி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்தியை காதலித்து வந்த கல்லூரி மாணவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் நீட் பயிற்சி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கிருத்திகா கலைக் கல்லூரியில் பி. காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
- திருச்செந்தூர் நோக்கி சென்ற விரைவு ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
சிதம்பரம் வல்லம்படுகை ெரயில்வே நிலையம் அருகில் கணேசமூர்த்தி மகள் கிருத்திகா (வயது 19) இவர் கடலூர் கலைக் கல்லூரியில் பி. காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கிருத்திகா கல்லூரிக்கு சென்று விட்டு பின்னர் சிதம்பரத்தில் உள்ள கம்ப்யூட்டர் பயிற்சி நிலையத்திற்கும் சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்பி உள்ளார்.
அப்போது வல்ல ம்படுகை -மயிலாடுதுறை ெரயில் நிலையத்திற்கு உட்பட்ட ெரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி விரைவு ரயில் ஒன்று வந்தது. இந்நிலையில் கிருத்திகா வீட்டின் பின்புறம் உள்ள ெரயில் நிலையத்திற்கு வந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற விரைவு ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து மயிலாடுதுறை ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த மயிலாடுதுறை ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருத்திகா உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் இதுகுறித்து ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
- இது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை :
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கோடனூரை சேர்ந்தவர் பிரம்மையா. இவரது மகள் சந்திரகலா (வயது 19). இவர் கோவில்பாளையம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 5-ந் தேதி திடீரென சந்திர கலாவுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் விடுதியில் இருந்த அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து சந்திரகலா விடுதியில் இருந்து வெளியே வந்து 2-வது மாடியில் உள்ள வராண்டாவில் நடை பயிற்சி செய்தார். அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் சந்திரகலாவுக்கு இடுப்பு மற்றும் மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி வார்டன் உடனடியாக சந்திரகலாவை மீட்டு பீளமேட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்தரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மனோநாராயணன் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் நீட் கோச்சிங் சென்டரில் படித்து வந்துள்ளார்
- கோச்சிங் சென்டரில் மாதம்தோறும் நடைபெறும் மாதிரி பயிற்சி தேர்வில் தொடர்ந்து குறைவாக மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது
கோவில்பட்டி:
கோவில்பட்டி அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் மனோநாராயணன்(வயது 20). இவர் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் நீட் கோச்சிங் சென்டரில் படித்து வந்துள்ளார்.
ஏற்கனவே ஒருமுறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடையவில்லை என்பதால் 2-வது முறை தேர்வு எழுத பயிற்சி பெற்று வந்துள்ளார். கோச்சிங் சென்டரில் மாதம்தோறும் நடைபெறும் மாதிரி பயிற்சி தேர்வில் தொடர்ந்து குறைவாக மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மனோ நாராயணன் நேற்று மாலை வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலன் இல்லாமல் மனோநாராயணன் உயிரிழந்தார். இது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சங்கராபுரம் அருகே விஷம் குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
- சம்பவத்தன்று சுவாதி பெற்றோர் சுவாதியை பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த சுதாகர் மகள் சுவாதி (17). தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சுவாதி கடந்த 2 வாரமாக பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்து வந்துள்ளாா். சம்பவத்தன்று சுவாதி பெற்றோர் சுவாதியை பள்ளிக்கு செல்லுமாறு வற்புறு த்தியதாக கூற ப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுவாதி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த விஷத்தை எடு த்து குடித்து விட்டார்.
இதில் மயங்கி விழுந்த சுவாதியை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக மோட்டாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, சுவாதி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதைகேட்ட பெற்றோர், உறவினர்கள் சுவாதியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- குளிர் பானத்தில் விஷம் கலந்து குடித்தார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே இளம் பெண் தற்கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவை சேர்ந்தவர் திருமால் இவரது மகள் சரண்யா (வயது 23) இவர் கிருஷ்ணகிரி கல்லூரியில் எம்ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 11 ம் தேதி எலி பேஸ்ட் குடித்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரண்யா கடந்த 3 வருடங்களாக புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். அவர் தற்போது ராணுவத்தில் பணியாற்றி வருகிறார் இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர் பேசவில்லை இதனால் இருவருக்கும் மனகருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 11 ம் தேதி தான் குடியிருக்கும் வாடகை வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிலிருந்து எலி பேஸ்டை குளிர்பானத்தில் கலந்து குடித்து விட்டதாக சகோதரி கார்த்திகாவுக்கு செல் போனில் தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்நிலையில் கடந்த 23 ம் தேதி சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சகோதரி கார்த்திகா கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சரண்யா குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து குடித்து கொண்டு அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து தனது காதலனுக்கு அனுப்பி உள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- கீர்த்தனாவின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த போது முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. உடனே மகளுக்கு போன் செய்தும் அவர் போன் எடுக்கவில்லை.
- ஜன்னல் வழியாக பார்த்த போது கீர்த்தனா படுக்கை அறையில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த வயலூர் கிராமம் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலித்தொழிலாளி. இவரது மகள் கீர்த்தனா (வயது 17). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
சில நாட்களாக கீர்த்தனா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கீர்த்தனாவின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த போது முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. உடனே மகளுக்கு போன் செய்தும் அவர் போன் எடுக்கவில்லை.
இதனால் அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது கீர்த்தனா படுக்கை அறையில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து இறந்த கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.