என் மலர்
நீங்கள் தேடியது "சாதி பாகுபாடு"
- தலித் ஐபிஎஸ் அதிகாரி மீது உயர் போலீஸ் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டியுள்ளனர்.
- ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மீது தற்கொலை கடிதத்த்தில் பூரன் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
அரியானாவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) பூரன் குமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அக்டோபர் 7 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில், சண்டிகர் செக்டார் 11-ல் உள்ள அவரது அரசு குடியிருப்பு வீட்டின் அடித்தளத்தில், தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக்கொண்டு அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.
தலித் ஐபிஎஸ் அதிகாரியான பூரன் குமார் மீது உயர் போலீஸ் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டியது தான் அவரின் தற்கொலைக்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பூரன் குமார் தனது தற்கொலை கடிதத்தில், ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மற்றும் எஸ்பி நரேந்திரன் உட்பட 8 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சாதி ரீதியிலான பாகுபாடு கட்டியதாகவும் மனரீதியாக துன்புறுத்தி அவமானப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே பூரன் குமாரின் மனைவியும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அம்னீத் குமார், தனது கணவரின் தற்கொலைக்கு காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரை எப்ஐஆரில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து அரியானா டிஜிபி சத்ருஜீத் கபூருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- சாதிய பெருமிதம் என்பது தேச விரோதம் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது.
- சாதிய அடையாளங்களை நீக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாதிய பெருமிதம் என்பது தேச விரோதம் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது. ஆகவே சாதிய அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மாநில அரசு இதற்கான பல்வறு விதிமுறைகளை பிறப்பித்துள்ளது.
அதாவது உத்தரபிரதேசத்தில் சாதி சார்ந்த ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதிப் பெயர், சாதிய கோஷங்களை வாகனத்தில் ஒட்டினால் அபராதம். விதிக்கப்படும் என்றும் சாதிய அடையாளங்களை பெருமைப்படுத்தும் பலகைகளை கிராமங்களின் பொதுவெளியில் இருந்து அகற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் நோட்டிஸ் போர்டு மற்றும் முதல் தகவல் அறிக்கையில் (FIR) சாதி பெயரை குறிப்பிடாமல் சம்பந்தப்பட்ட நபரின் அப்பா பெயரை அடையாளத்திற்கு குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் சாதிய வன்கொமை வழக்குகளில் மட்டும் இந்த விதிமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்நாட்டில் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் உள்ளது
- அனைத்து சமூகத்தினரிடமும் நன்கொடை வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நாட்டில் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் உள்ளது. சாதியை காரணமாகக் காட்டி, கோயில் விழாவில் குறிப்பிட்ட சமூகத்தினரிடம் நன்கொடை பெற மறுப்பதும் அதில் ஒன்றுதான் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயில் பிரமோற்சவ விழாவில், குறிப்பிட்ட சமூகத்தினரிடம் மட்டுமே நன்கொடை வசூலிக்கப்படுகிறது எனத் தொடரப்பட்ட வழக்கில், அனைத்து சமூகத்தினரிடமும் நன்கொடை வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மசோதாவுக்கு ஆதரவாக 34 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவானது.
- மசோதாவை கலிபோர்னியா சட்டசபை தாமதமின்றி நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தல்
கலிபோர்னியா:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடு பார்ப்பதை தடை செய்வதற்கான புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. மாநிலத்தின் செனட் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 34 வாக்குகள் மசோதாவுக்கு ஆதரவாகவும், ஒரு வாக்கு எதிராகவும் பதிவானது. இதனால் மசோதா நிறைவேறியது.
இதையடுத்து மாநில பிரதிநிதிகள் சபையில் மசோதா அறிமுகம் செய்யப்படும். அங்கு நிறைவேற்றப்பட்டதும் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அமெரிக்காவில் இதுபோன்ற சட்ட மசோதாவை நிறைவேற்றும் முதல் மாநிலம் கலிபோர்னியா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதாவை அறிமுகம் செய்த செனட்டர் ஆயிஷா வகாப்புக்கு அமெரிக்கவாழ் இந்திய முஸ்லிம்கள் கவுன்சில் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் சாதி பாகுபாட்டுக்கு இடமில்லை என்ற வலுவான செய்தியை இந்த மசோதா வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
மசோதாவை கலிபோர்னியா சட்டசபை தாமதமின்றி நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேணடும் என்று இந்திய முஸ்லிம் கவுன்சில் நிர்வாக இயக்குனர் ரஷித் அகமது வலியுறுத்தினார். கலிபோர்னியாவை பின்பற்றி அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களும், பாராளுமன்றமும் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
- சிறைச்சாலை கையேடுகள் சிறைக் கைதிகளுக்கான பணிகளை ஒதுக்குவதிலும், கைதிகளை அடைத்து வைப்பதிலும் சாதிய பாகுபாட்டை ஊக்குவிப்பதாக உள்ளன.
- விசாரணை கைதிகளையும், தண்டனை கைதிகளையும் தனித்தனியாக பிரித்து வைப்பது வழக்கம்.
புதுடெல்லி:
மகாராஷ்டிரத்தை சேர்ந்த சுகன்யா சாந்தா சார்பில் வக்கீல் எஸ்.பிரசன்னா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சிறைச்சாலைகளில் உள்ள கையேடுகள், விதிகள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் எஸ்.முரளிதர் ஆஜராகி, 'தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களின் சிறைச்சாலை கையேடுகள் சிறைக் கைதிகளுக்கான பணிகளை ஒதுக்குவதிலும், கைதிகளை அடைத்து வைப்பதிலும் சாதிய பாகுபாட்டை ஊக்குவிப்பதாக உள்ளன' என வாதிட்டார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'சிறைச்சாலைகளில் சாதிய பாகுபாடு குறித்து கேள்வி எழவில்லை. விசாரணை கைதிகளையும், தண்டனை கைதிகளையும் தனித்தனியாக பிரித்து வைப்பது வழக்கம்' என வாதிட்டா்ா.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 'தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களின் சிறைக் கையேடுகளை தொகுக்குமாறு மூத்த வக்கீல் எஸ்.முரளிதரை கேட்டதுடன், சிறைச்சாலை கையேடுகள் சிறைகளில் சாதி பாகுபாட்டை ஊக்குவிப்பதாக தெரிவித்து தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.
- அமைச்சர் மூர்த்தி தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதாக குற்றச்சாட்டு.
- தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன.
மதுரை ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடு பார்க்கப்பட்டதாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு!
இருமுறை முதல் பரிசு வென்ற வீரர் தமிழரசன் என்று அனைவரும் அறிந்தும் திட்டமிட்டு டோக்கன் அளிக்காமல் நேரத்தை வீணடித்துள்ள நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
அமைச்சர் மூர்த்தி தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதும், போராடி டோக்கன் வாங்கியும் தன்னை ஜல்லிக்கட்டில் அனுமதிக்கவில்லை, களமிறங்க முயற்சித்தும் காவல்துறை ஒருபக்கம் தாக்கினார்கள் இதற்கு முழு காரணம் சாதிதான் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன, வீரர் தமிழரசன் புறக்கணிக்கத்திருப்பது ஏன் ???
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பெட்டிக்கடையில் சிறுவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்து சாதி பாகுபாடு காட்டப்படுவதாக புகார் எழுந்தது.
- இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தி கடை உரிமையாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சான்குளம் கிராமத்தில் ஒரு பெட்டிக்கடையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பள்ளி சிறுவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்து சாதி பாகுபாடு காட்டப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வீடியோ வெளியாகி வைரலானது.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தி கடை உரிமையாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரசு பள்ளி
இந்நிலையில் அங்குள்ள ஒரு ஊராட்சி தொடக்கப் பள்ளியிலும் சாதி ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கு மாறு கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். பின்னர் அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியாக நடத்தப் படுவதாக தெரியவந்ததாக அவர் தெரிவித்தார்.
கல்வி அதிகாரி ஆய்வு
இந்நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி கபீர் இன்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாக சென்று ஆசிரியர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் இதுகுறித்து அவர் கூறிய தாவது;-
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சாதி பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த புகாரையடுத்து அங்கு விசாரணை நடத்தி னோம். அதில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என தெரிய வந்துள்ளது.
அந்த பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவது தெரிய வந்தள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடமும் அறிக்கை அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறி னார்.
- உதவி தலைமை ஆசிரியை சாதி குறித்து பேசியபோது ‘எல்லாருமே சமம்தானே டீச்சர்’ என மாணவர் பதிலளிக்கிறார்.
- அவர்களின் கைகளில் பள்ளி நிர்வாகம் போனால் உங்க ஊர் பிள்ளைகளுக்கு சீட் கொடுக்கமாட்டார்கள்
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அரசுப் பள்ளி உதவி தலைமை ஆசிரியை, மாணவர் ஒருவரிடம் சாதி ரீதியாக பேசிய ஆடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குளத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக, உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, செல்போனில் மாணவர் ஒருவரிடம் செல்போனில் பேசி உள்ளார்.
அப்போது, அந்த மாணவரின் சாதி குறித்து கேட்பது மட்டுமின்றி, பள்ளியில் சில ஆசிரியர்களின் பெயரைச் சொல்லி அவர்களை எல்லாம் உனக்குப் பிடிக்குமா? என்று கேட்கிறார் ஆசிரியை கலைச்செல்வி. அதற்கு அந்த மாணவர், அவர்களை பிடிக்கும் என்று சொல்கிறார்.
நான் இந்த ஜாதி, நீ இந்த ஜாதி, அவர்கள் அந்த ஜாதி (தாழ்த்தப்பட்ட ஜாதி). அவர்களின் கையில் இப்போது பள்ளி நிர்வாகம் போகப்போகிறது. அப்படி செல்வதற்கு நாம் விடலாமா? என்று ஆசிரியை கேட்க, 'எல்லாருமே சமம்தானே டீச்சர்' என மாணவர் நறுக்கென பதிலளிக்கிறார்.
அவர்களின் கைகளில் பள்ளி நிர்வாகம் போனால் உங்க ஊர் பிள்ளைகளுக்கு சீட் கொடுக்கமாட்டார்கள், பரவாயில்லையா? என ஆசிரியை கலைச்செல்வி கேட்கிறார். இவ்வாறு உரையாடல் தொடர்கிறது.
தொடர்ந்து பேசும் ஆசிரியை, அந்த மாணவரின் ஊரைச் சேர்ந்தவர்களை பெற்றோர் ஆசிரியர் கழக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும், இது தொடர்பாக ஊரில் உள்ளவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இதுபற்றி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவின்பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி விசாரணை நடத்தினார். அதன்பின்னர் உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, அவருக்கு உதவியாக இருந்த கணினி ஆசிரியை மீனா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.






