என் மலர்tooltip icon

    சண்டிகர்

    • முதியவர் ஒருவர் ஒரு பெண்ணை பார்த்து ஆபாச சைகைகள் செய்துள்ளார்.
    • குற்றம் சாட்டப்பட்ட அசோக் குமாரை குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

    பெண்ணை பார்த்து கண் அடிப்பதும் பிளையிங் கிஸ் கொடுப்பதும் ஒருவித பாலியல் தொல்லைதான் என்று சண்டிகர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

    2021 ஆம் ஆண்டு 62 வயது முதியவர் ஒருவர் ஒரு பெண்ணை பார்த்து கண் அடித்தும் பிளையிங் கிஸ் கொடுத்ததும் ஆபாச சைகைகள் செய்துள்ளார்.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த சண்டிகர் நீதிபதி சச்சின் யாதவ், குற்றம் சாட்டப்பட்ட அசோக் குமாரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். இருப்பினும் குற்றவாளியை விடுவித்த நீதிமன்றம் அவர் 6 மாத கால கண்காணிப்பில் இருப்பார் என்றும் அந்த காலகட்டத்தில் அவர் ஏதேனும் தவறு செய்தால் சிறைத்தண்டனை அனுபவிப்பார் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • முதலில் ஆடிய சண்டிகர் அணி முதல் இன்னிங்சில் 136 ரன்களில் சுருண்டது.
    • சவுராஷ்டிரா சார்பில் ஜெயதேவ் உனத்கட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    சண்டிகர்:

    ரஞ்சி கோப்பை தொடருக்கான போட்டி சண்டிகரில் நடந்து வருகிறது. இங்கு சவுராஷ்டிரா, சண்டிகர் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்ற சவுராஷ்டிரா பவுலிங் தேர்வ்ய் செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சண்டிகர் அணி முதல் இன்னிங்சில் 136 ரன்களில் சுருண்டது.

    சவுராஷ்டிரா அணி சார்பில் ஜெயதேவ் உனத்கட் 4 விக்கெட்டும், சேட்டன் சகாரியா, சிராக் ஜானி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய சவுராஷ்டிர அணி முதல் இன்னிங்சில் 106.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 453 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    போனஸ் புள்ளியுடன் வெற்றிபெற வேண்டும் என்பதால் அந்த அணி சீக்கிரம் டிக்ளேர் செய்துள்ளது. சிறப்பாக ஆடிய ஹர்விக் தேசாய் இரட்டை சதம் கடந்து அசத்தினார்.

    தனது முதலாவது இரட்டை சதத்தை அடித்த ஹர்விக் தேசாய் 200 ரன்னுடன் (305 பந்து, 21 பவுண்டரி, ஒரு சிக்சர்)அவுட் ஆகாமல் இருந்தார்.

    ஜெய் கோஹில் 98 ரன்னும், அர்பித் வசவதா 96 ரன்னும் எடுத்து அவுட்டாகி சதத்தை தவறவிட்டனர்.

    இதையடுத்து, 317 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய சண்டிகர் அணி 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்துள்ளது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

    • வெடிகுண்டு மிரட்டலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளி வளாகத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
    • போலீஸ் குழுக்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று முழுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

    சண்டிகரில் உள்ள சில பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளி வளாகத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் குழுக்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று முழுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதுவரை எந்த சந்தேகத்திற்கிடமான பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

    • பாஜக மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது" என்று விஜய் சௌதாய்வாலே தெரிவித்தார்.
    • "சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது. இதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

    சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு டெல்லியில் உள்ள பாஜக தேசியத் தலைமையகத்திற்கு நேற்று வருகை தந்தனர்.

    பாஜக தலைமையகத்தில் வைத்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறையின் துணை அமைச்சர் சுன் ஹையான் தலைமையிலான குழுவினரும், பாஜக சார்பில் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் வெளியுறவுத் துறை பொறுப்பாளர் விஜய் சௌதாய்வாலே ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    "பாஜக மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது" என்று விஜய் சௌதாய்வாலே தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    2018-ல் ராகுல் காந்தி சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ரகசிய ஒப்பந்தம் செய்ததாக பாஜக குற்றம் சாட்டியிருந்தது. அதே நேரத்தில் எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்துப் பிரதமர் மௌனம் காப்பதாகக் காங்கிரஸ் விமர்சித்தது.

    இத்தகைய சூழலில், எல்லையில் 20 இந்திய வீரர்கள் சீன ராணுவத்தால் கொல்லப்பட்ட 2020 கல்வான் தாக்குதலுக்கு பிறகு பாஜக - சீன கம்யூனிஸ்ட் கட்சி இடையே நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இதனிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவுக்கு தான் சொந்தம் என அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் இன்று தெரிவித்துள்ளதும் தெரிவித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவிற்கு வழங்கப்பட்டது.

    சீனா இந்தப் பள்ளத்தாக்கில் நிரந்தர சாலைகள் மற்றும் ராணுவத் தளவாட கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது.

    இது காரகோரம் மலைத்தொடருக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. இதனால் இந்திய வெளியுறவுத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங், "சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது. இதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

    1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படியே இப்பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டது. எனவே அது அது சட்டப்பூர்வமானது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது, வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சி" என்று தெரிவித்தார். 

    நேற்று சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஜக தலைமையகம் வருகை, இன்று ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு தங்களுக்கு சொந்தம் என சீனா கூறியுள்ளது ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பிலும், சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்கள் பரவி வருகின்றன. 

    மகாராஷ்டிராவின் சரத் பாவர் தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர் சுப்ரியா ஸ்ரீநாடே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜம்மு காஷ்மீரின் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கை சீனா தனது பிராந்தியமாக அறிவித்துள்ளது.

    கடந்த சில நாட்களாக சீனா இங்கு சிபிஇசி திட்டத்தின் பெயரில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. லடாக்கிற்குப் பிறகு, சீனா எப்படி இங்கு நுழைந்தது?

    சீனா இவ்வளவு அத்துமீறல்களில் ஈடுபடுகிறதா? பாஜக தலைவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் சந்திப்பு நடத்துகிறார்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.

    • மோடி அரசும் பாஜகவும் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு விரோதமாக நடந்து கொள்வது ஏன்?.
    • சகோதரத்துவத்துடன் இயங்கும் இரண்டு மாநிலங்களிடையே மோதலை உருவாக்கியுள்ளது.

    பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தின் தலைநகராக சண்டிகர் உள்ளது. சண்டிகர் நிர்வாகத்தை அரசியலமைப்பு சட்டப்பிரிவு 240-ன் கீழ் கொண்டு வரும் வகையில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வருகிற 1-ந்தேதி பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதில் 10 மசோதாக்கள் கொண்டு வர இருக்கிறது. இதில் அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா 2025 ஒன்றாகும் என மக்களவை மற்றும் மாநிலங்களவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் சண்டிகர் நிர்வாகம் தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அரசியலமைப்பு 240 சட்டத்தின்படி, யூனியன் பிரதேசத்திற்கான விதிமுறைகளை உருவாக்கி நேரடியாக சட்டம் இயற்ற ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யும். அதன்படி துணைநிலை ஆளுநரை நியமிக்க முடியும்.

    இந்த முயற்சி சண்டிகர் மக்களின் அடையாளங்களை அழிப்பதற்கான முயற்சி என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், "இது பஞ்சாபின் அடையாளம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைத் தாக்குகிறது என்றும் கூட்டாட்சி கட்டமைப்பைப் பிளவுபடுத்துகிறது. சண்டிகர் பஞ்சாபிற்குச் சொந்தமானது, அது பஞ்சாபுடனேயே இருக்கும்" என்றும் வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, கூட்டாட்சி மீதான பழவீனப்படுத்தும் தாக்குதல் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அத்துடன் "1966 பஞ்சாப் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் இரு மாநில தலைநகராக சண்டிகர் இருக்கும் நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உரிமைகளின் மீதான தக்குதலாகும்.

    கேள்வி என்னவென்றால், மோடி அரசும் பாஜகவும் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு விரோதமாக நடந்து கொள்வது ஏன்?. சகோதரத்துவத்துடன் இயங்கும் இரண்டு மாநிலங்களிடையே மோதலை உருவாக்கியுள்ளது. பக்ரா அணை அரியானா மாநிலத்தின் உரிமையாகும். ஆனால், பஞ்சாப் மாநில அரசு பாதுகாப்பிற்கான காவலாளர்கனை நிறுத்துவது மற்றும் கதவுகளை மூடுவது போன்ற உரிமையை பெற்றுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    • அரியானாவின் அல்-பலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல மருத்துவர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கைது செய்தது.
    • டெல்லி சம்பவத்திற்கும் அவர்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று NIA அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த திங்கள்கிழமை மாலை 13 பேர் உயிரிழந்த டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அரியானாவின் அல்-பலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல மருத்துவர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கைது செய்தது.

    கைதுசெய்யப்பட்ட  மருத்துவர்கள் ரெஹான், முகமது மற்றும் முஸ்தகிம் ஆகிய மூவைரயும், உர வியாபாரி தினேஷ் சிங்கிளா என்பவரையும் 3 நாள் தொடர் விசாரணைக்குப் பிறகு இன்று NIA இறுதியாக விடுவித்தது.

    டெல்லி குண்டுவெடிப்புகளுடன் எந்த குறிப்பிட்ட தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    டெல்லி குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி மருத்துவர் உமர் உன்-நபியுடன் அவர்களுக்கு ஏதேனும் தொடர்பு இருந்ததா என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இருப்பினும், டெல்லி சம்பவத்திற்கும் அவர்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று NIA அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு உமருடன் பழகியிருந்தாலும், சமீப காலங்களில் அவர்களுக்கு எந்த தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. எனவே, அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் சில நாட்களுக்கு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று NIA தெரிவித்துள்ளது.  

    • பங்களாவின் கழிவறையில் தங்க முலாம் பூசப்பட்ட மலத்தொட்டிகள் இருப்பதாவதும் பாஜக மேடை தோறும் பிரசாரம் செய்தது.
    • பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியை தோற்கடித்து பாஜக வெற்றி பெற்றது.

    அரவிந்த் கேஜிரிவால் தனது அரசு பங்களாவை புதுப்பிக்கப் பொதுப் பணத்தில் இருந்து ரூ.45 கோடி செலவு செய்து சொகுசு பங்களாவாக மாற்றியதாகவும், அந்த பங்களாவின் கழிவறையில் தங்க முலாம் பூசப்பட்ட மலத்தொட்டிகள் இருப்பதாவதும் பாஜக மேடை தோறும் பிரசாரம் செய்தது.

    இந்நிலையில் பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ள நிலையில் அதன் தலைநகர் சண்டிகரில் அரவிந்த் கெஜ்ரிவால் சொந்த பயன்பாட்டுக்கு 7 நட்சத்திர சொகுசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளதாக  பாஜக குற்றம்சாட்டி உள்ளது.

    பாஜக தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பஞ்சாப் அரசின் பொது நிதியை தனது தனிப்பட்ட ஆடம்பரத் தேவைகளுக்காக கெஜ்ரிவால் தவறாகப் பயன்படுத்துவதாகவும், சண்டிகரில் அவரின் சொந்த பயன்பாட்டுக்கு 2 ஏக்கரில் அமைந்துள்ள அரசின் 7 நட்சத்திர சொகுசு பங்களாவை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பங்களா என்று கூறப்படும் கட்டிடத்தின் படங்களை பாஜக வெளியிட்டுள்ளது.

    பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.  

    • ஏடிஜிபி பூரன் குமார் மீது உயர் போலீஸ் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டியுள்ளனர்
    • ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மீது தற்கொலை கடிதத்த்தில் பூரன் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

    அரியானாவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) பூரன் குமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அக்டோபர் 7 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில், சண்டிகர் செக்டார் 11-ல் உள்ள அவரது அரசு குடியிருப்பு வீட்டின் அடித்தளத்தில், தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக்கொண்டு அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.

    தலித் ஐபிஎஸ் அதிகாரியான பூரன் குமார் மீது உயர் போலீஸ் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டியது தான் அவரின் தற்கொலைக்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பூரன் குமார் தனது தற்கொலை கடிதத்தில், ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மற்றும் எஸ்பி நரேந்திரன் உட்பட 8 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சாதி ரீதியிலான பாகுபாடு கட்டியதாகவும் மனரீதியாக துன்புறுத்தி அவமானப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதனிடையே பூரன் குமாரின் மனைவியும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அம்னீத் குமார், தனது கணவரின் தற்கொலைக்கு காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரை எப்ஐஆரில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து அரியானா டிஜிபி சத்ருஜீத் கபூருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. பூரன் குமாரின் மனைவி அம்னீத் குமார் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தற்கொலை செய்துகொண்ட ஏடிஜிபி பூரன் குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சாதி ரீதியான துன்புறுத்தல் காரணமாக ஹரியானா ஐபிஎஸ் அதிகாரி பூரன் குமார் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, சண்டிகரில் உள்ள பூரன் குமாரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதுபோன்ற சம்பவங்கள் நாட்டிலும் சமூகத்திலும் படிந்துள்ள கறையாகும். மேலும் தாழ்த்தப்பட்டோர் நம்பிக்கையை இழந்து வருகின்றனர் என்பதற்கு இது சான்றாகும்.

    பாஜக - ஆர்எஸ்எஸ்ஸின் வெறுப்பு மற்றும் மனுவாத சிந்தனை மனிதநேயம் இறந்துபோகும் அளவுக்கு சமூகத்தை விஷமாக்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

    • தலித் ஐபிஎஸ் அதிகாரி மீது உயர் போலீஸ் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டியுள்ளனர்.
    • ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மீது தற்கொலை கடிதத்த்தில் பூரன் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

    அரியானாவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) பூரன் குமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அக்டோபர் 7 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில், சண்டிகர் செக்டார் 11-ல் உள்ள அவரது அரசு குடியிருப்பு வீட்டின் அடித்தளத்தில், தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக்கொண்டு அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.

    தலித் ஐபிஎஸ் அதிகாரியான பூரன் குமார் மீது உயர் போலீஸ் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டியது தான் அவரின் தற்கொலைக்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பூரன் குமார் தனது தற்கொலை கடிதத்தில், ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மற்றும் எஸ்பி நரேந்திரன் உட்பட 8 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சாதி ரீதியிலான பாகுபாடு கட்டியதாகவும் மனரீதியாக துன்புறுத்தி அவமானப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதனிடையே பூரன் குமாரின் மனைவியும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அம்னீத் குமார், தனது கணவரின் தற்கொலைக்கு காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரை எப்ஐஆரில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து அரியானா டிஜிபி சத்ருஜீத் கபூருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    • தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக்கொண்டு அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.
    • பூரன் குமாரின் மனைவியும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அம்னீத் குமார், அரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனியின் தலைமையிலான குழுவுடன் ஜப்பான் சென்றுள்ளார்.

    அரியானாவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) பூரன் குமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.30 மணியளவில், சண்டிகர் செக்டார் 11-ல் உள்ள அவரது அரசு குடியிருப்பு வீட்டின் அடித்தளத்தில், தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக்கொண்டு அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.

    சண்டிகர் காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் கன்வர்தீப் கவுர் கூறுகையில், "பூரன் குமாரின் உடல் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே கூடுதல் விவரங்கள் தெரியவரும்" என்று அவர் தெரிவித்தார்.

    சம்பவ இடத்தில் இதுவரை எந்த தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்கொலை நடந்த சமயத்தில், பூரன் குமாரின் மனைவியும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அம்னீத் குமார், அரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனியின் தலைமையிலான குழுவுடன் ஜப்பான் நாட்டிற்குப் பயணம் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • சோவியத் யூனியன் காலத்தில் வடிவமைக்கப்பட்ட MiG-21 விமானம் வரலாற்றில் அதிகம் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் போர் விமானங்களில் ஒன்றாகும்.
    • MiG-21 இடத்தை தேஜஸ் விமானம் நிரப்பும் என்பதை குறிக்கும் வகையில் இது அமைந்தது.

    60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விமானப்படையில் பெரும்பங்காற்றிய MiG-21 போர் விமானங்கள் இன்று விடைபெற்றன.

    விமானப்படையில் இரண்டு படைப்பிரிவுகளில் 36 MiG-21 விமானங்கள் சேவையில் இருந்து வந்தன.

    இந்நிலையில் இன்று (செப்டம்பர் 26) சண்டிகரில் நடைபெற்ற பிரியாவிடை விழாவில் இந்த விமானம் அதிகாரப்பூர்வமாக சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

    விமான படைத் தளத்தில் நடந்த விழாவில் புதிய தேஜஸ் போர் விமானங்கள் உடன் MiG-21 விமானம் வானில் சாகசம் நிகழ்த்தியது. MiG-21 இடத்தை தேஜஸ் விமானம் நிரப்பும் என்பதை குறிக்கும் வகையில் இது அமைந்தது.

    இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், விம்மன படை தளபதி ஏபி சிங் மற்றும் பிற படைத் தளபதிகள் கலந்துகொண்டனர். விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவும் கலந்துகொண்டார். 

    சோவியத் யூனியன் காலத்தில் வடிவமைக்கப்பட்ட MiG-21 விமானம் வரலாற்றில் அதிகம் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் போர் விமானங்களில் ஒன்றாகும்.

    இது 1963 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. MiG-21 விமானங்கள் வினாடிக்கு 250 மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டவை.

    தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 11,000க்கும் மேற்பட்ட MiG-21 விமானங்கள் பயன்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

     MiG-21

    1965 மற்றும் 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போர்கள், 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் மற்றும் 2019 ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதல் ஆகியவற்றில் MiG-21 விமானம் முக்கிய பங்காற்றியது.

    இருப்பினும், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகள் MiG-21 விமானத்திற்கு பாதகமாக அமைந்தது.

    62 ஆண்டுகளில் MiG-21 சந்தித்த 400 விபத்துகளில் 200 விமானிகள் மற்றும் 60 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    காலாவதியான தொழில்நுட்பம் மற்றும் அதிக பராமரிப்பு தேவைபடுவதால் MiG-21 கைவிடப்பட உள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றுக்கு மாற்றாக உள்நாட்டு தயாரிப்பான Tejas Mk2 விமானங்கள் இருக்கும். 

    • முதலில் பேட் செய்த இந்தியா 49.5 ஓவரில் 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • ஸ்மிரிதி மந்தனா பொறுப்புடன் ஆடி சதமடித்து 117 ரன்னில் அவுட்டானார்.

    சண்டிகர்:

    ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 49.5 ஓவரில் 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மந்தனா 117 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் டார்சி பிரவுன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 293 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆனால் இந்தியாவின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அன்னாபெல் சதர்லேண்ட் 45 ரன் எடுத்தார். இதன்மூலம் 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் கிராந்தி கவுட் 3 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    ×