என் மலர்
நீங்கள் தேடியது "bomb threat"
- எழிலக வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.
- சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள எழிலக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு உண்டானது.
எழிலக வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
பாலாஜி என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிய வந்ததையடுத்து அவரை பிடித்து திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக, சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்திய நிலையில் புரளி என தெரிய வந்தது.
- பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
- டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு மிரட்டல் வந்துள்ளது.
அண்மைக் காலங்களாக விமானங்கள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது தொடர்கதையாகி உள்ளது. சில நாட்கள் முன் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் விமானத்துக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது.
இந்நிலையில் குஜராத்தில் உள்ள அகமதாபாத் சர்தார் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும்விதமாக கடிதம் ஒன்று விமான நிலைய வளாகத்தில் கிடந்துள்ளது.
பெயர் எழுதப்படாத அந்த கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி மற்றும் சில தனியார் பள்ளிகளுக்கும் போலி வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- அலங்காநல்லூர் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்களும் வந்து பள்ளியில் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.
- பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து குழந்தைகளை வந்து அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோவில் பாபாக்குடி பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2035 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். பள்ளி மாணவர்களை அழைத்து வருவதற்காக நிர்வாகம் சார்பில் பஸ், வேன்கள் இயக்கப்படுகிறது.
இந்தநிலையில் பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு இன்று மர்ம நபர் ஒருவர் மெயில் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் இந்த தனியார் பள்ளியில் வெடிகுண்டு வீச போவதாக தெரிவித்து இருந்தார். இதைப்பார்த்த பள்ளி ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் நிர்வாகத்தினருக்கும் தகவல் கூறினர்.
இதுகுறித்து அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஏராளமானோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து அலங்காநல்லூர் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்களும் வந்து பள்ளியில் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.
அனைத்து வகுப்பறைகளிலும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாகவும் சோதனை நடத்தப்பட்டது. அத்துடன் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன்கள், இருசக்கர வாகனங்களிலும் போலீசார் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். இதற்கிடையே பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து குழந்தைகளை வந்து அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதைக்கேட்டு பதட்டம் அடைந்த பெற்றோர்கள் அவசரம் அவசரமாக பள்ளிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வளாகத்தில் தயாராக இருந்த பிள்ளைகளை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே, பள்ளி நிர்வாகம் போக்குவரத்துக்காக எந்த ஒரு ஏற்பாடும் செய்யாமல் அலட்சியமாக இருப்பதாக கூறி பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
- பள்ளியின் இ-மெயிலுக்கு மர்ம மெயில் ஒன்று வந்தது.
- புதுவையில் இருந்து வெடிகுண்டு செயலழப்பு நிபுணர்களும் வந்தனர்.
பாகூர்:
புதுச்சேரி எல்லைப்பகுதியான முள்ளோடையில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். நேற்று மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்தநிலையில் பள்ளியின் இ-மெயிலுக்கு மர்ம மெயில் ஒன்று வந்தது. அதில் நீதிமன்றத்தால் பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும், இல்லை யென்றால் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதை பார்த்து பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மெயில் காலையில் வந்திருந்த நிலையில், மாலை 5 மணிக்கே பார்க்கப்பட்டது.
இது குறித்து உடனடியாக கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சஜித், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.
மேலும் தகவல் தெரிவித்து புதுவையில் இருந்து வெடிகுண்டு செயலழப்பு நிபுணர்களும் வந்தனர்.
அவர்கள் பள்ளியில் வெடி குண்டு ஏதேனும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்று மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியு டன் சோதனை செய்தனர். பள்ளி வளாகம், வகுப்பறை, விளையாட்டு மைதானம், ஆசிரியர்கள் ஓய்வறை என அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்க வில்லை. வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி என்பது சோதனையின் முடி வில் தெரியவந்தது.
பள்ளிக்கு வந்த இ-மெயில் முகவரியை வைத்து, மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, தேடி வருகின்றனர்.தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
- இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்துக்கு இன்று [பிப்ரவரி 4] அதிகாலை 237 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த சர்வதேச விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டதும், தீவிர சோதனை நடத்தப்பட்டதில், விமானத்தில் வெடிபொருள்கள் எதுவுமில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டது.
விமானம் குறித்த மேலதிக தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று உறுதி செய்த அதிகாரிகள் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளி வளாகத்தில் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்.
- மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பதி:
ஐதராபாத் போலாரத்தில் ராணுவ பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு நேற்று ஆன்லைன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில் பள்ளி வளாகத்தில் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக பள்ளி கட்டிடத்தை காலி செய்து மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். நிலைமை குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரிவான சோதனைக்கு பிறகு வெடிகுண்டு ஏதும் இல்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். பள்ளி நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாளை குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- சென்னையில் இருந்து நெல்லை மாநகர காவல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நெல்லை:
நாளை (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்கள், முக்கிய சாலைகள் மற்றும் பஸ், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று முதல் குடியரசு தினம் வரை சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்திப்பு ரெயில் நிலையத்திலும் தண்டவாளங்கள், பார்சல் அலுவலகங்களில் போலீசார் சோதனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து சென்னையில் இருந்து நெல்லை மாநகர காவல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் கீதா, சந்திப்பு உதவி கமிஷனர் தர்ஷிகா ஆகியோர் மேற்பார்வையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ரெயில்வே போலீசாரும் அங்கு விரைந்து வந்து சோதனை செய்தனர்.
மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையிலான போலீசார் ரெயில் நிலைய காத்திருப்பு அறைகள், பார்சல் அறைகள், பார்சல்கள் உள்ளிட்டவற்றை மெட்டல் டிடெக்டர் மூலமாகவும், மோப்பநாய் மூலமாகவும் போலீசார் சோதனையிட்டனர். மேலும் ரெயிலுக்கு காத்திருந்த பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது.
குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் வண்ண வண்ண மின் விளக்குகளால் ரெயில் நிலையம் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சியளித்தது. இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து போலீசார் அதிக அளவில் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால், மிரட்டல் வந்த செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த செல்போன் எண் 'சுவிட்ச் ஆப்' என்று வந்துள்ளது.
இதையடுத்து மர்ம நபர்கள் மதுபோதையில் புரளியை கிளப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். எனினும் மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேர்வுகளை நிறுத்துவதற்காக அந்த மாணவன் இவ்வாறு செய்துவந்துள்ளான்.
- வளாகத்தில் ஆபத்தான வெடிபொருட்கள் இருப்பதாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
டெல்லியில் உள்ள 23 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக 12 ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லியின் பல்வேறு பள்ளிகளுக்கு ஈமெயில் மூலம் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதுபற்றி விசாரணை நடத்தி வந்த போலீசார், அந்த மாணவனை கண்டறிந்தனர்.
தேர்வுகளை நிறுத்துவதற்காக அந்த மாணவன் இவ்வாறு செய்துவந்துள்ளான். யாருக்கும் சந்தேகம் வராமல் ஒவ்வொரு முறையும் தனது பள்ளியை தவிர்த்து மற்ற பள்ளிகளின் பெயரை குறிப்பிட்டு வளாகத்தில் ஆபத்தான வெடிபொருட்கள் இருப்பதாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளான்.

போலீசாரும் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு சென்று ஏமாற்றம் அடைத்துள்ளனர். இதுபோல 6 முறை 23 பள்ளிகளுக்கு அம்மாணவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த புதன்கிழமையும், வசந்த் விஹாரில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி மற்றும் ஆர்கே புரம், ப்ளூ பெல்ஸ் மற்றும் தாகூர் இன்டர்நேஷனல் உள்ளிட்ட பள்ளிகளுக்கு மாணவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து சைபர் காவல்துறை அவனை கண்டுபிடித்துள்ளது. அந்த மாணவனை தற்போது கைது செய்துள்ளாதாக தெற்கு டெல்லி டிசிபி அங்கித் சவுகான் தெரிவித்துள்ளார்.

- அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு கட்டிடத்தையும் சோதனை செய்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தின் மையப்பகுதியான வண்ணார்பேட்டை கொக்கிரகுளம் பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது.
இங்கு ஊரக வளர்ச்சி முகமை, வருவாய்த்துறை, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் துறை என 20-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் பாளை தாலுகா அலுவலகம், இ-சேவை மையம், தபால் நிலையம் உள்ளிட்டவையும் இயங்கி வருகிறது.
இங்கு பல்வேறு பணிகளுக்காகவும் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு கருதி இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றி கொண்டு இருப்பார்கள். மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அதிகாலை 1.20 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது பேசிய நபர், நெல்லையில் இருந்து பேசுகிறேன். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.

இந்த தகவல் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமனிக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவரது உத்தரவின்பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்கு விரைந்து சென்றனர்.
வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து மெட்டல் டிடெக்டர் மூலமாக அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு கட்டிடத்தையும் சோதனை செய்தனர்.
மேலும் போலீசாரும் மோப்பநாய் மூலமாக கட்டிடங்கள், அரசு வாகனங்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். கலெக்டர் அலுவலகம் முழுவதும் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் வேறு எதுவும் சிக்கவில்லை. இதனை தொடர்ந்து அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
பின்னர் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் அழைப்பு வந்த செல்போன் எண்ணை போலீசார் செல்போன் சிக்னல் மூலமாக ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிக்னல் பேட்டை ஆசிரியர் காலனியை காட்டியது. உடனடியாக பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் அங்கு விரைந்தனர்.
அங்குள்ள 3-வது தெருவில் விசாரணை நடத்தியபோது கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் செய்யது அப்துல் ரஹ்மான்(வயது 45) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து நடத்திய விசாரணையில், செய்யது அப்துல் ரஹ்மான் பேட்டை பகுதியில் கார் டிங்கரிங் மற்றும் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வருவரு தெரியவந்தது. இவருக்கு மனைவி , ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
சமீபத்தில் செய்யது அப்துல் ரஹ்மானின் மனைவி, தமிழக அரசின் திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1000 கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், பணம் வழங்கப்படவில்லை என்பதால் செய்யது அப்துல் ரஹ்மான் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மகளிர் உரிமை தொகையும் கிடைக்காத நிலையில், பொங்கலுக்கு எதிர்பார்த்த ஆயிரம் ரூபாயும் தரவில்லையே என்று செய்யது அப்துல் ரஹ்மான் ஆத்திரம் அடைந்துள்ளார்.
உடனே நேற்று மாலை பேட்டையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்திய அவர், இரவில் மதுபோதையின் உச்சத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து செய்யது அப்துல் ரகுமானை பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- தலைமைச் செயலகத்தில் கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
சென்னை:
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் போனில் பேசினார்.
சென்னை தலைமைச் செயலகம், டி.ஜி.பி. அலுவல கம் ஆகியவற்றில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு அவர் போனை துண்டித்துவிட்டார். இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டு 2 இடங்களிலும் தீவிரசோதனை நடத்தப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்களும் நேரில் சென்று தலைமைச் செயலகம், டி.ஜி.பி. அலுவலகம் ஆகியவற்றில் அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இருப்பினும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிப்பதற்காக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போனில் பேசிய நபரின் தொலைபேசி எண்ணை வைத்து அவரை கண்டு பிடிக்கும் பணியில் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவல கங்கள் ஆகியவற்றுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், டி.ஜி.பி. அலுவலகத்திற்கும், தலைமைச் செயலகத்துக்கும் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டம் நாளை தொடங்க உள்ள நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதால் தலைமைச் செயலகத்தில் கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
- கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் பிரசித்த பெற்ற முருகன் கோவில்களுள் ஒன்று வடபழனி முருகன் கோவில். இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து கோவில் நடை திறந்த பின் நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
- செல்போன் மூலம் தொடர்பு கொண்டது யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது பேசிய நபர், கடலூர் சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதற்கிடையே மருத்துவ மனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த உள்நோயாளிகளும், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளும் வெடி குண்டு மிரட்டலால் பீதியடைந்தனர். பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதை அறிந்ததும் நிம்மதி அடைந்தனர்.
இந்த நிலையில் காவல்துறை கட்டுப்பட்டறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டது யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வெடிகுண்டு வைத்ததாக பேசி இணைப்பை துண்டித்தது தெரிய வந்தது.
மேலும் இந்த மாணவன் விழுப்புரம் மாவட்டம் பூவரசன் குப்பத்தை சேர்ந்தவர் என்பதும், தனது உறவினர் வீடான கடலூர் முதுநகருக்கு வந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் மாணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.