என் மலர்
நீங்கள் தேடியது "schools"
- சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
- செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கனமழை எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 03) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னை கடற்கரையில் நிலைக்கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
மேலும் நாளையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- ரெட் அலர்ட் ஆரஞ்ச் அலர்ட்டாக குறைக்கப்பட்டது.
- தொடர்மழையால் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை.
டிட்வா புயல் காரணாமாக இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் ஆரஞ்சு அலர்ட்டாக குறைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் இன்று பெய்த தொடர்மழையால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளது.
டிட்வா புயல் சென்னை கடற்கரை அருகே நிலை கொண்டிருக்கும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை தொடர்ந்து வருகிறது. நேற்று கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் இன்றும் தொடர்ந்தது. நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருவள்ளூர் மாவட்டம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முதலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை தனது எக்ஸ் பக்கத்திலும் ஆட்சியர் பதிவிட்டுள்ளார்.
- சிட்-அப்கள் செய்து முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது.
- குழந்தையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் தாலுகாவில் பள்ளிக்கு தாமதமாக வந்ததற்காக தண்டனையாக 100 முறை சிட்-அப் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதால் 13 வயது சிறுமி உயிரிழந்தார்.
கடந்த வாரம், ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியின் மாணவி அன்ஷிகா கவுட்-க்கு, பள்ளிப் பையுடன் 100 முறை சிட்-அப்கள் செய்து முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது.
மாலை வீடு திரும்பியபோது சிறுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் பெற்றோர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நிலைமை மேலும் மோசமடைந்து சிறுமி மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஒரு வாரமாக சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் பலனளிக்காமல் நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
தண்டனைக்குப் பிறகு, தங்கள் மகளின் கழுத்து மற்றும் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டதாகவும், குழந்தையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்த காவல்துறை, பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
அன்ஷிகாவின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக வட்டார கல்வி அதிகாரி பாண்டுரங் கலங்கே தெரிவித்தார்.
- வெடிகுண்டு நிபுணர்கள் 4 பள்ளிகளிலும் ஒவ்வொரு அறைகளாக சோதனை செய்தனர்.
- வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்று தெரியவில்லை.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் புல்லர்னில் உள்ள 4 பள்ளிகளுக்கு தொடர் வெடி குண்டு மிரட்டல்கள் வந்தது.
அங்குள்ள சன்னிஹில் பள்ளி, யூனியன் பள்ளி, டிராய் மற்றும் பெர்ன் டிரைவ் பள்ளிகளுக்கு தொலைபேசி மூலம் பள்ளியில் குண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டு யாரும் உள்ளே செல்லாமல் இருக்க பூட்டப்பட்டது.
பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் 4 பள்ளிகளிலும் ஒவ்வொரு அறைகளாக சோதனை செய்தனர். இறுதியில் அது வெறும் புரளி என தெரியவந்தது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்று தெரியவில்லை. இந்த சம்பங்களால் புல்லர்டன் பகுதி பரபரப்பாக காணப் பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பீதி நிலவியது.
- காலைநேரத்தில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் வாக்குவாதம் செய்யாதீர்!
- சீக்கிரம் எழுதல், நீரேற்றம், சீரான ஊட்டச்சத்து, குறைவான திரைநேரம் ஆகியவை பிரச்சனைகளை தீர்க்கும்.
ஒரு குழந்தையை காலையில் பள்ளிக்கு அனுப்புவது என்பது எவ்வளவு சிரமம் நிறைந்தது என்பது அவர்களின் தாய்மார்களுக்கு மட்டும்தான் தெரியும். குழந்தைகளைவிட அவர்கள்தான் ஞாயிற்றுக்கிழமைகளை அதிகம் எதிர்பார்ப்பார்கள். ஒரு பள்ளி காலைப்பொழுதை இவ்வளவு கடினமாக்குவது எது என நீங்கள் என்றாவது யோசித்திருக்கிறீர்களா? முன்கூட்டியே திட்டமிடாததுதான் அது. காலையில் சிரமமின்றி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கீழ்க்காணும் எளிய நடைமுறைகளை பெற்றோர்கள் பின்பற்றினாலே போதும்....
சீக்கிரம் எழுவது
குழந்தைகள் 8 மணிக்கு பள்ளிக்கு செல்லவேண்டும் என்றால், அவர்களை 7 மணிக்கு எழுப்பிவிட்டு அரக்க பறக்க பள்ளிக்கு அனுப்பாதீர்கள். 8 மணிக்கு பள்ளி எனில் 6.30-க்கு எழுப்பிவிடுங்கள். அதற்கு முதல்நாள் இரவு தாமதாக தூங்கவைக்கமால், சீக்கிரம் தூங்கவைக்கவேண்டும். சீரான தூக்க அட்டவணை குழந்தைகளை மன அழுத்தத்திற்கு இட்டுசெல்லாது.
தண்ணீர் குடிக்க வைக்கவேண்டும்
குழந்தைகள் எழுந்தவுடன் அவர்கள் முகம், கை, கால்களை கழுவசொல்லவேண்டும். பின்னர் கழிவறைக்கு சென்றுவந்தபின், பல் துலக்க சொல்லிவிட்டு, வெறும் வயிற்றில் கொஞ்சம் தண்ணீர் குடிக்க சொல்லவேண்டும். ஏனெனில் இரவு முழுவதும் தண்ணீர் இல்லாமல் உடல் நீரேற்றம் இன்றி இருக்கும். தூக்கத்திற்குப் பிறகு மீண்டும் நீரேற்றம் பெறுவது வளர்சிதை மாற்றத்தில் தொடங்கி அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கிறது.
காலை உணவு
சீக்கிரம் எழாத குழந்தைகள், தாமதமாகிவிட்டது எனக்கூறி சாப்பிடாமல் செல்வார்கள். காலை உணவை தவிர்ப்பது நினைவாற்றல், கவனம் செலுத்தும் செயல்களை பாதிக்கும். இதனால் கல்வி பாதிக்கப்படும்.

குழந்தைகளின் காலை நேர ரொட்டீனின் மாதிரிப் படம்
திரை பயன்பாட்டை குறைத்தல்
பெற்றோர் பலரும் தங்களுக்கு குழந்தைகள் வேலைகொடுக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு மொபைல் ஃபோன் கொடுப்பது, டிவியை போட்டுவிட்டு பார்க்க சொல்வது என இருப்பர். எழுந்த உடனேயே டிஜிட்டல் சாதனங்களை பார்ப்பது மூளையின் கவனம் செலுத்தும் திறனை சீர்குலைக்கும். இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கவனச்சிதறல் ஏற்படும்.
உடற்பயிற்சி
காலையில் குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய சொல்லலாம். உடல் செயல்பாடு ரத்த ஓட்டத்தை தூண்டும் மற்றும் மூளையை கற்றலுக்கு தூண்டும்.
முன்னேற்பாடு
காலை நேரத்தை எளிதாக்கவும், மோதல்களைத் தவிர்க்கவும் முன்கூட்டியே திட்டமிடுங்கள். முந்தைய நாள் இரவே காலையில் போடவேண்டிய பள்ளி சீருடைகள், அன்றைய வகுப்புக்கு தேவையான புத்தகங்கள், போன்றவற்றை எடுத்துவைத்துவிடவேண்டும். இது குழந்தையின் நாளை அமைதியாக தொடங்க உதவும்.
படித்தல்
அன்றைய நாளில் உள்ள வகுப்புக்கான பாடங்களை ஒருமுறை எடுத்து காலைநேரத்தில் வாசித்து பார்க்க சொல்லலாம். ஒருமுறை தாங்களே வாசித்து பார்த்துவிட்டு, பின்னர் ஆசிரியர் நடத்துவதை கவனிக்கும்போது நன்றாக புரியும். பாடத்தில் இருக்கும் வார்த்தைகள் புரியவில்லையென்றாலும் சந்தேகங்களை எழுப்ப முடியும்.
பெற்றோர் அமைதி அவசியம்
இறுதியாக, பெற்றோர்கள் அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. காலை நேரத்திலேயே பிள்ளைகளுடன் வாக்குவாதம் செய்வது நேரத்தை வீணடிப்பதோடு, குழந்தைகளுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி, காலை நேரத்தை இன்னும் கடினமாக்குகிறது.
சீக்கிரம் எழுதல், நீரேற்றம், சீரான ஊட்டச்சத்து, குறைவான திரைநேரம் ஆகியவை குழந்தைகளின் கவனத்தையும், நல்வாழ்வையும் ஆதரிக்கின்றன என்பதை ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளது.
- தீபாவளி பண்டிகை கடந்த அக்.20-ந்தேதி கொண்டாடப்பட்டது.
- விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 25-ந் தேதி பணி நாளாக செயல்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது.
தீபாவளி பண்டிகை கடந்த அக்.20-ந்தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளி விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புபவர்களுக்கு வசதியாக, கடந்த 21-ந்தேதி (செவ்வாய்கிழமை) பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 25-ந் தேதி பணி நாளாக செயல்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி, சென்னையில் இன்று அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கும். செவ்வாய்க்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு பணி நாளாக செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படுகிறது.
- பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிநடைபெற்றது.
- இப்போட்டியை காண மாணவர்களும் பெற்றோரும் குவிந்திருந்தனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மிசிசிபி மாகாணத்தில் உள்ளூர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிநடைபெற்றது. இப்போட்டியை காண மாணவர்களும் பெற்றோரும் குவிந்திருந்தனர். கால்பந்து போட்டியின் முடிவில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 12 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேரின் நிலைமை சுவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என போலீசார் அச்சம். மைதானத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அசாம் மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் 8 பள்ளி மாணவர்களின் கண்கள் பசியால் ஒட்டப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
அங்கு சாலகுடா பகுதியில் உள்ள சேவாஷ்ரம் பள்ளி விடுதியில் 3,4, 5 ஆம் வகுப்பை சேர்ந்த 8 மாணவர்கள் தூங்கிக்கொண்டிருந்த போது சில சக மாணவர்கள் விளையாட்டாக அவர்களின் கண்களில் இன்ஸ்டன்ட் பசையை தேய்த்துள்ளனர்.
இதனால் 8 பேரும் தூக்கத்தில் இருந்து விழித்தபோது அவர்களின் கண் இமைகள் திறக்க முடியாமல் ஒட்டிக் கொண்டன. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வானம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். தவறு செய்தவர்களை கண்டித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிய்வ்துள்ளது.
- பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
- மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் ‘மகிழ் முற்றம்' குழுத்திட்டத்தை பள்ளிகளில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும்.
சென்னை:
பள்ளிகளில் அமைதியான சூழலை ஏற்படுத்தவும், மாணவர்கள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கவும் மேற்கொள்ளப்பட வேண்டிய சில வழிமுறைகள் குறித்து, பள்ளிகளுக்கு, கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
சாதி அல்லது வகுப்புவாத எண்ணங்களை மாணவர்களிடையே ஏற்படுத்த முயற்சிப்பதாக ஆசிரியர் மீது பெறப்படும் புகார்கள் குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் உடனடியாக விசாரணை மேற்கொள்வதோடு, சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்.
மாணவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கக்கூடிய கல்வி உதவித் தொகை விவரங்கள் ரகசியமாக பராமரிக்கப்படுவது மிக மிக அவசியம். இந்த விவரங்களை பொதுவெளியில் தெரியும் வகையில் காட்சிப்படுத்தக்கூடாது. மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் 'மகிழ் முற்றம்' குழுத்திட்டத்தை பள்ளிகளில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. இருப்பினும் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது தெரியவந்தால், அதை தலைமை ஆசிரியரோ, ஆசிரியரோ பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளிகளில் திருக்குறள் அறநெறி வகுப்புகளை தவறாமல் நடத்த வேண்டும். 'மாணவர் மனசு' புகார் பெட்டியை வாரம் ஒரு முறை பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், தலைமை ஆசிரியர் முன்னிலையில் திறந்து, அதில் உள்ள தபால்களின் எண்ணிக்கையை பதிவு செய்து, அதுகுறித்து விசாரணை செய்து மாவட்டக்கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
- இன்று மதியம் அறிவிக்கப்பட்டுள்ள மாதாந்திர தேர்வுகளை மற்றொரு நாளில் நடத்திட வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு பின்னர் இன்று நீர்நிலைகள் மற்றும் ஆறுகளில் கரைக்க பக்தர்கள் தயாராகி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை 2 கட்டங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 312 சிலைகளையும் ஊர்வலமாக சென்று இன்று நீர்நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக தென்காசி அருகே கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்க அம்மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
விநாயகர் ஊர்வலத்தையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இன்று அரைநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இன்று மதியம் அறிவிக்கப்பட்டுள்ள மாதாந்திர தேர்வுகளை மற்றொரு நாளில் நடத்திட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
- நேற்று முன்தினமும் மர்ம நபர்களால் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
- டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக உள்ளது.
புதுடெல்லி:
டெல்லி மால்வியா நகரில் உள்ள எஸ்.கே.வி. அவுஸ், கரோல் பாக் பகுதியில் உள்ள ஆந்திரப் பள்ளிகள் உள்ளிட்ட 50 பள்ளிகளை குறிவைத்து கடந்த 48 மணி நேரத்திற்குள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல் நேற்று முன்தினமும் மர்ம நபர்களால் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டு மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொண்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். பள்ளிகளில் வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கடந்த மாதம் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மிரட்டல் விடுத்த 12 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். விசாரித்ததில் அவன் விளையாட்டாக செய்ததாக சொல்ல அந்த சிறுவனை எச்சரித்து அனுப்பினர்.
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக உள்ளதால் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் பள்ளி, கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
- வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள 2 பள்ளிகள் மற்றும் துவாராகாவில் உள்ள ஒரு கல்லூரிக்கு இன்று காலையில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் பள்ளி, கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடயவியல் நிபுணர்களுடன் மிரட்டல் வந்த பள்ளி கல்லூரிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். மின்னஞ்சல் அனுப்பியவர் யார், எங்கிருந்து மின்னஞ்சல் அனுப்புப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதமும் இதேபோல் டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






