என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி"
- துப்பாக்கியால் சுட்டத்தில் பள்ளியின் தாளாளர் காயமடைந்தார். மேலும் 2 சிறுவர்கள் காயம் அடைந்தனர்.
- அந்த இளைஞன் ஆயுதத்தை கீழே போட்டு போலீசாரிடம் சரணடைந்தான்.
தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்தில் ஹாட் யாய் மாவட்டத்தில் இயங்கி வந்த பள்ளியில் 18 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று மாலை, துப்பாக்கியுடன் பள்ளிக்குள் புகுந்த அந்த இளைஞன் துப்பாக்கியால் சுட்டத்தில் பள்ளியின் தாளாளர் காயமடைந்தார். மேலும் 2 சிறுவர்கள் காயம் அடைந்தனர். தொடர்ந்து அந்த இளைஞன் பள்ளிக்குள் ஆசிரியர்களையும் மாணவர்களையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தான்.
தகவலறிந்து விரைந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே பெற்றோர்கள் பள்ளியின் முன் குவிந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இறுதியில் அந்த இளைஞன் ஆயுதத்தை கீழே போட்டு போலீசாரிடம் சரணடைந்தான். அவனை கைது செய்த போலீசார் ஆசிரியர்களையும் மாணவர்களையும் பத்திரமாக மீட்டனர். காயமடைந்த பள்ளி தாளாளர் மற்றும் 2 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் நடத்த பள்ளிக்குள் நுழைவதற்கு முன் அந்த இளைஞன் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் இருந்து துப்பாக்கியை பரிந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்த இளைஞன் தனது தங்கையை கண்டித்த ஆசிரியரை தேடி அங்கு வந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
- தாக்குதல் நடந்த சில மணிநேரங்களிலேயே போலீசார் அந்தச் சிறுவனைக் கைது செய்தனர்.
- லண்டன் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு இந்த விசாரணையைத் கையில் எடுத்துள்ளது.
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனின் ப்ரெண்ட் பகுதியில் கிங்ஸ்பரி உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
நேற்று மதியம் 12:40 மணியளவில் பள்ளியில் பயிலும் 13 வயது சிறுவன் ஒருவன், அதே பள்ளியில் பயிலும் 12 மற்றும் 13 வயதுடைய 2 மாணவர்களைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடினான்.
தாக்குதல் நடந்த சில மணிநேரங்களிலேயே போலீசார் அந்தச் சிறுவனைக் கைது செய்தனர். அவனிடமிருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கத்திக்குத்துக்கு உள்ளான இரண்டு மாணவர்களும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு இந்த விசாரணையைத் கையில் எடுத்துள்ளது.
- பள்ளிக்குள் இருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஊழியர்களை போலீசார் பத்திரமாக வெளியேற்றினர்.
- தாக்குதல் நடத்தியவர் ஒரு பெண் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் டம்ளர் ரிட்ஜ் பகுதியில் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு 7 முதல் 12-ம் வகுப்பு வரை 175 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்பள்ளிக்குள் மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அந்த நபர் பள்ளிக்குள் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்.
இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினார்கள். தாக்குதலில் பலர் மீது குண்டு பாய்ந்ததில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பள்ளிக்குள் சென்று தாக்குதல் நடத்தியவரை தேடினர். அப்போது துப்பாக்கிசூட்டில் 9 பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது. 25 பேர் காயம் அடைந்திருந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பள்ளிக்குள் இருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஊழியர்களை போலீசார் பத்திரமாக வெளியேற்றினர்.
இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய நபர் இறந்துகிடந்தார். அவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அந்த நபர் குறித்த விவரங்களை போலீசார் வெளியிட வில்லை.
அதேவேளையில் தாக்குதல் நடத்தியவர் ஒரு பெண் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இத்தாக்குதலில் மற்றொரு நபரும் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளி அருகே உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிசூடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பள்ளிக்குள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு அந்த எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.
- மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிபின் ராம்தாஸ் ஐதராபாத் ஐகோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
- அசைவ உணவுப் பொருட்கள் விற்பனையை தடுக்க ஒரு கொள்கையை வகுக்குமாறு மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஐதராபாத்:
ஐதராபாத்தின் ரெட் ஹில்ஸில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிபின் ராம்தாஸ் என்பவர் இறைச்சி மற்றும் அசைவ உணவு பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி கோரினார். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர். இதனை எதிர்த்து அவர் ஐதராபாத் ஐகோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்தப் பிரச்சனையில் வழிகாட்டுதல்களை வகுக்க உத்தரவிட்டார்.
மேலும் நீதிபதி கூறுகையில், தெலுங்கானா மாநிலத்தில் கோவில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு 100 மீட்டருக்குள் இறைச்சி மற்றும் அசைவ உணவுப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க ஒரு கொள்கையை வகுக்குமாறு மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பக்தர்களின் உணர்வுகள், அமைதி, தூய்மை, சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்சனைகளை மனதில் கொண்டு வழிகாட்டுதல்களை வகுக்குமாறு நகராட்சி மற்றும் உள்துறை முதன்மை செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.
இறைச்சி விற்பனை மையங்களைத் திறப்பதற்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதற்கான விதியைச் சேர்க்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது. இந்த செயல்முறையை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
- சிட்-அப்கள் செய்து முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது.
- குழந்தையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் தாலுகாவில் பள்ளிக்கு தாமதமாக வந்ததற்காக தண்டனையாக 100 முறை சிட்-அப் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதால் 13 வயது சிறுமி உயிரிழந்தார்.
கடந்த வாரம், ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியின் மாணவி அன்ஷிகா கவுட்-க்கு, பள்ளிப் பையுடன் 100 முறை சிட்-அப்கள் செய்து முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது.
மாலை வீடு திரும்பியபோது சிறுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் பெற்றோர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நிலைமை மேலும் மோசமடைந்து சிறுமி மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஒரு வாரமாக சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் பலனளிக்காமல் நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
தண்டனைக்குப் பிறகு, தங்கள் மகளின் கழுத்து மற்றும் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டதாகவும், குழந்தையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்த காவல்துறை, பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
அன்ஷிகாவின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக வட்டார கல்வி அதிகாரி பாண்டுரங் கலங்கே தெரிவித்தார்.
- பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிநடைபெற்றது.
- இப்போட்டியை காண மாணவர்களும் பெற்றோரும் குவிந்திருந்தனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மிசிசிபி மாகாணத்தில் உள்ளூர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிநடைபெற்றது. இப்போட்டியை காண மாணவர்களும் பெற்றோரும் குவிந்திருந்தனர். கால்பந்து போட்டியின் முடிவில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 12 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேரின் நிலைமை சுவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என போலீசார் அச்சம். மைதானத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- பொதுவாக விஜயதசமி நாளில் தனியார் பள்ளிகளில் மட்டுமே தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் அதிகம் வருவார்கள்.
- ஆனால் சமீப காலமாக அரசு செயல்படுத்தும் திட்டங்களால் அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 5-ம் ஆண்டாக மாணவர் சேர்க்கை 100 சதவீதம் அடைந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் வருகிற அக்டோபர் 2-ம் தேதி விஜயதசமி நாளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என அனைத்து தரப்பு மக்களும் போற்றி புகழும் வேளையில் அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களால் மாணவர்கள் எவ்வாறு பயனடைந்து வருகின்றனர் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் கூமாபட்டி ரீல்ஸ் ஸ்டைலில் பெற்றோர்களுக்கு வித்தியாசமான அழைப்பு விடுத்துள்ளனர்.
அதில் ஏ.....ங்க..... இங்க பாருங்க..... அரசு பள்ளிங்க நம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்களால் நாங்கள் பயனடைந்து வருகிறோம். தினந்தோறும் தரமான காலை உணவு வழங்கப்படுகிறது பாருங்க....
எங்க பள்ளியில் எவ்வளவு பெரிய டி.வி. இருக்கு பாருங்க.....
எங்க பள்ளியில் கழிப்பறை வசதி எப்படி இருக்கு பாருங்க.....
எங்க பள்ளியில் வகுப்பறை எல்லாம் வேற லெவலில் இருக்கு பாருங்க....
என பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்களை மாணவ-மாணவிகள் தங்கள் மழலை கலந்த மொழியில் நகைச்சுவை உணர்வுடன் கைகளை காட்டி வெளிப்படுத்தும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுவாக விஜயதசமி நாளில் தனியார் பள்ளிகளில் மட்டுமே தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் அதிகம் வருவார்கள். ஆனால் சமீப காலமாக அரசு செயல்படுத்தும் திட்டங்களால் அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கிராமபுரத்தில் உள்ள பெற்றோர்களை ஈர்க்கும் வகையில் தலைமை ஆசிரியர் மேற்கொண்டுள்ள இந்த விழிப்புணர்வு பிரசாரம் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் பள்ளி, கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
- வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள 2 பள்ளிகள் மற்றும் துவாராகாவில் உள்ள ஒரு கல்லூரிக்கு இன்று காலையில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் பள்ளி, கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடயவியல் நிபுணர்களுடன் மிரட்டல் வந்த பள்ளி கல்லூரிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். மின்னஞ்சல் அனுப்பியவர் யார், எங்கிருந்து மின்னஞ்சல் அனுப்புப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதமும் இதேபோல் டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- விஷ நீரை குடித்த 11 பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- முஸ்லிம் தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற இந்த கொடும் செயலை இந்துத்துவ கும்பல் செய்துள்ளது.
கர்நாடகா மாநில பெலகாவி மாவட்டம் ஹுல்லிகட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த கன்னட அரசு பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மர்ம நபர்கள் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளனர். இந்த விஷ நீரை குடித்த 11 பள்ளி மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் 3 பேரை கைது செய்தனர். அதில், இந்து வலதுசாரி அமைப்பான ஸ்ரீராம் சேனா அமைப்பின் அப்பகுதி தலைவரும் அடக்கம்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், "சம்பந்தப்பட்ட பள்ளியில் முஸ்லிம் தலைமை ஆசிரியர் பணியாற்றி வருவதாகவும் அவர் மீது பழி சுமத்தி வேறு பள்ளிக்கு மாற்றுவதற்காக தான் பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்ததாக" தெரிவித்தனர்.
முஸ்லிம் தலைமை ஆசிரியர் மீதான மத வெறுப்பால் பள்ளி தண்ணீர் தொட்டியில் இந்து வலதுசாரி கும்பல் விஷம் கலந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "மத அடிப்படைவாதமும் வகுப்புவாத வெறுப்பும் கொடூரமான செயல்களுக்கு வழிவகுக்கும், மேலும் அப்பாவி குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்திருக்கக்கூடிய இந்த சம்பவம் அதற்கு ஒரு சான்றாகும்" என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்
- பயிற்சிக்கு புறப்பட்ட போர் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
- பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் நேற்று வங்கதேச விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
வங்காளதேசத்தில் உள்ள குர்மிடோலா என்ற இடத்தில் உள்ள விமான படை தளத்தில் இருந்து பயிற்சிக்கு புறப்பட்ட போர் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள பள்ளி கட்டிடம் மீது விழுந்து நொறுங்கியது.
இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். 170-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் சிகிக்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்தது. விபத்திற்கான காரணத்தை கண்டறிய வங்காளதேச விமானப்படை, உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக இன்று துக்க தினமாக அரசு அறிவித்துள்ளது.
- ஜூம்பா நடனப் பயிற்சிக்கு மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
- மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை கருத்தில்கொண்டு இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜூம்பா நடனப் பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை கருத்தில்கொண்டு அம்மாநில அரசு இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளது.
அரசின் இந்த முயற்சிக்கு இதற்கு மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், மாணவர்கள் பள்ளி சீருடையிலேயே இந்த நடனப் பயிற்சியை மேற்கொள்வதாக கல்வி அமைச்சர் சிவன்குட்டி விளக்கம் அளித்துள்ளார்.
- ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.
- இந்தச் சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
வியன்னா:
ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அதன்பின் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், தகவலறிந்து காலை 10 மணிக்கு (உள்ளூர் நேரம்) சிறப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளியிலிருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தனர். பலியானோர் விவரங்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.
300,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராஸ் நகரம், ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.






