search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி"

    நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்
    நாமக்கல்:

    கோடை விடுமுறைக்கு பின்னர் இந்த மாதம்  பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், அதற்கு முன்பாக அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது. 

    இதை தொடர்ந்து , நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்வி வாகனங்கள் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டன. 

    இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் கலந்துகொண்டு வாகனத்தில் பிரேக் சரியாக உள்ளதா? பாதுகாப்பு கருவிகள், அவசர வழிகள் அமைக்கப்பட்டுள்ளனவா? , வாகன படிக்கட்டுகள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார். அப்போது ஓட்டுநர்கள் செல்போன் பேசி கொண்டு வாகனம் இயக்கக்கூடாது. மது அருந்த கூடாது என அறிவுறுத்தப்பட்டன.

     மேலும், தீயணைப்புத் துறையினா் மூலம் தீத்தடுப்பு மற்றும் முதலுதவி தொடா்பான நடவடிக்கைகள் குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டன. 

     ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் மஞ்சுளா, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், டிஎஸ்பி சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமாமகேஸ்வரி, சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    தாரமங்கலம் அருகே பள்ளி மாணவனை தாக்கியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள எடயபட்டி கிராமம் கலர்பட்டி காலனி பகுதியை சேர்ந்த மாணவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளியின் எதிரே உள்ள கம்மங்கூழ் கடையில் உள்ள சேரில் அமர்ந்திருந்தார்.

    அப்போது அங்கு வந்த ராமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர்   மாணவனிடம் உட்கார கூடாது என்று கூறி கட்டையால்  தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த மாணவர் ஜலகண்டாபுரம் தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச் சைக்கு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
     
    இதுபற்றிய புகாரின்பேரில் தாரமங்கலம் போலீசார் ராஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×