

கேரளாவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜூம்பா நடனப் பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை கருத்தில்கொண்டு அம்மாநில அரசு இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளது.
அரசின் இந்த முயற்சிக்கு இதற்கு மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், மாணவர்கள் பள்ளி சீருடையிலேயே இந்த நடனப் பயிற்சியை மேற்கொள்வதாக கல்வி அமைச்சர் சிவன்குட்டி விளக்கம் அளித்துள்ளார்.