என் மலர்
நீங்கள் தேடியது "Students"
- பாளை முருகன்குறிச்சி சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீசாருக்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
- நெல்லை மாநகர பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும்.
நெல்லை:
பாளை முருகன்குறிச்சி சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீசாருக்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதனை மாநகர கிழக்கு மண்டல துணை கமிஷனர் சீனிவாசன் திறந்து வைத்தார்.
தொடர்ந்து அந்தப் பகுதியில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த வாகன ஓட்டிகளுக்கு அல்வா வழங்கினார். அதேபோல் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு திருக்குறள் எழுதுமாறு அறிவுறுத்தினார். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாநகர பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். இதற்காக நெல்லை மாநகர காவல் துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
நெல்லை மாநகர பகுதியில் இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் தலைகவசம் அணியாமலும், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் வருகிறார்கள். இது தொடர்பாக 1,200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாநகர பகுதிகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் மாணவர்கள் சென்றால் அவருடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் காவல் நிலையத்திற்கு அவர்களின் பெற்றோர்களை அழைத்து வரப்பட்டு எச்சரிக்கை செய்யப்படும்.
அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை கமிஷனர் முத்தரசு, இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
- புத்தக திருவிழாவின் பயனாக மாணவர்களுக்கு கதை புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
- மாணவர்களுக்கு பத்தாயிரம் குடைகள், பாட புத்தகங்கள், உணவு, உடைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை தனது சொந்த செலவில் செய்து வருகிறார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் வசந்தாஇல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும்த ன்னார்வலர்கள் மைய ங்களுக்கு, வரும் மாணவர்களுக்கு கதை சொல்லிக் கொடுப்பதற்கான கதைப் புத்தகங்களை தனது சொந்த செலவில் வாங்கி பரிசளித்திருக்கிறார் .
நாகப்பட்டினத்தில் ஜூன் 24-ம்தேதி முதலாவது புத்தக கண்காட்சி தொடங்கியது. அதில் ஒவ்வொரு நாளும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு புத்தக கண்காட்சியைச் சிறப்பித்தனர். முதல் முதலாக நடத்தப்பட்ட இந்த புத்தகத் திருவிழாவை இந்த பகுதி மக்கள் வெகுவாக ரசித்து பெருமளவில் புத்தகங்களை வாங்கி சென்றனர். அந்த புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிலையில் புத்தகக் கண்காட்சியில் புத்தகமும் வாங்க வேண்டும், அது மாணவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்று சிந்தித்த அண்டர்காடு பள்ளி ஆசிரியை வசந்தா, தன்னுடைய சொந்த செலவில் ரூ 30,000த்துக்கு 2500 கதை புத்தகங்கள் வாங்கினார். ஆசிரியை வசந்தா மாணவர்களுக்கு பத்தாயிரம் குடைகள், பாட புத்தகங்கள், உணவு, உடைகள் கொரோனா பரவலை கட்டுபடுத்த சுமார் 5 லட்சம்மாஸ்க்உள்ளிட்ட பல்வேறு தேவைகளைத் தொடர்ந்து தனது சொந்த செலவில் செய்து வருகிறார். இந்த புத்தகத் திருவிழாவின் பயனாக மாணவர்களுக்கு கதைப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
நேற்று முன்தினம்இரவு நடைபெற்ற நிறைவு விழாவில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர், திருமருகல் மற்றும் நாகப்பட்டினம் வட்டாரங்களில் செயல்பட்டு வரும் 2365 இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கும் தலா ஒரு கதை புத்தகம் வீதம் வழங்கிடுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்விடம் வழங்கினர்
அவற்றை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர்களிடம் அந்த புத்தகங்களை வழங்கினார்.
இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நாகை மாவட்ட தலைவர் ஆரிப், செயலாளர் பால இரணியன், வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கதைப் புத்தகங்களை வழங்கிய ஆசிரியர் வசந்தாவுக்கு அனைவரும் பாராட்டுத் தெரிவித்தனர்.
- மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயிற்சி முகாம் நடந்தது.
- சிலம்பம் மாணவிகளுக்கு கல்லூரி சான்றிதழ் வழங்கியது.
மதுரை
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கான வளரி, சிலம்பம் தொடர்பான பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட வீராங்கனைகள் சிலம்பம் சுழற்றி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். அவர்களுக்கு கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் இன்டர்நேஷனல் மார்டன் மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தேவராட்டம், சிலம்பம் மருத்துவர் குழு மாவட்ட செயலாளர் முத்துமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் செயல்படுகிறது என அமைச்சர் மூர்த்தி ெபருமிதம் கொண்டார்.
- அரசு பள்ளிகளில் 12-ம் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மேலூர்
மேலூர் டைமண்ட் ஜூபிலி கிளப் சார்பில் மேலூர் தாலுகா அளவில் அரசு பள்ளிகளில் 12-ம் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசுகையில், தனியார் பள்ளிக்கு இணையாக தமிழக அரசு பள்ளிகள் சிறப்பாக இயங்குகின்றன.
50 சதவீதத்திற்கு மேல் அரசு அலுவலகங்களிலும் தனியார் அலுவல கங்களிலும் பெண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். பெண்கள் 60 சதவீதத்திற்கும் மேல் படித்துவிட்டு தங்களது குடும்பத்தை பாதுகாத்து வருகின்றனர்.கிராமப்புற மாணவ-மாணவிகள் 12 -ம் வகுப்பு வரை படித்துவிட்டு கல்வி பயில முடியாமல் இருந்து வந்தனர். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மேல் படிப்பு படிப்பதற்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்றார்.
அதனைத் தொடர்ந்து மேலூர் டைமண்ட் ஜுபிலி கிளப் சார்பில் மேலூர் அரசு கலைக் கல்லூரி சாலை சந்திப்பில், சிவகங்கை சாலை உள்ள 4 வழிச்சாலை பாலம் அருகில், மேலூர் - மதுரை 4 வழிச்சாலை ஆகிய இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களை அமைச்சர் மூர்த்தி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் மணிவாசகம் தலைமை தாங்கினார்.
டைமண்ட் ஜுபிலி கிளப் செயலாளரும், மேலூர் முன்னாள் யூனியன் சேர்மனுமான செல்வராஜ் வரவேற்றார். நகராட்சி தலைவர் முகமது யாசின், நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், பொறியாளர் பட்டு ராஜன், தலைமை ஆசிரியர்கள் கொட்டாம்பட்டி சித்ரா ஹெலன், மேலூர் செந்தில் நாயகி, செம்மிணிபட்டி சுகுணா கலாமதி, திருவாதவூர் சிவக்குமார், கருங்காலக்குடி கண்மணி மாதா, தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் துரை மகேந்திரன், பொருளாளர் ரவி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வேலாயுதம், முன்னாள் கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், மலம்பட்டி முருகன், மார்க்கெட் ராஜேந்திரன், விஜயராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிளப் பொருளாளர் வெங்கடேச பெருமாள் நன்றி கூறினார்.
- இரு வாரங்களாக ஆசிரியர்கள் பாடம் நடத்தி வரும் நிலையில் நோட்டுகள் எப்போது கிடைக்கும் என தெரியாமல் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- பல ஆண்டுகளாக இலவச நோட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் இந்தாண்டு வழங்கப்படாமல் உள்ளது.
உடுமலை :
உடுமலை கல்வி மாவட்டத்தில் 168 அரசு தொடக்க பள்ளிகள், 39 நடுநிலை பள்ளிகள், 16 உயர்நிலைப் பள்ளிகள், 16 மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன.இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் இலவசமாக பாடப்புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப்பை, சீருடை, காலணி, வண்ணப்பென்சில், கணித உபகரண பெட்டி, பஸ் பயண அட்டை, புவியியல் வரைபட புத்தகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் 13-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டபோது மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆனால் நோட்டு உள்ளிட்ட பிற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை. இரு வாரங்களாக ஆசிரியர்கள் பாடம் நடத்தி வரும் நிலையில்நோட்டுகள் எப்போது கிடைக்கும் என தெரியாமல் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சிலர் சொந்த செலவில் நோட்டுகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:-
அவ்வப்போது துறை ரீதியான அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர். அப்போது மாணவர்களின் நோட்டுகளை சரிபார்க்க கோரி மாணவர்களிடம் கேள்வி எழுப்பினால், இன்னும் நோட்டுகள் தரவில்லை என்கின்றனர். அதே பதிலை ஆசிரியர்களும் தெரிவிக்கும்போது கடிந்து கொள்கின்றனர். பல ஆண்டுகளாக இலவச நோட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் இந்தாண்டு வழங்கப்படாமல் உள்ளது.சில பள்ளிகளில் தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் ஒன்றிணைந்து சொந்த செலவில் எழுது பொருட்களையும் நோட்டுகளையும் விலைக்கு வாங்கி மாணவர்களுக்கு அளித்து வருகின்றனர். விரைந்து நோட்டுகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஆட்டோ டிரைவர்கள் அரசு அனுமதித்த எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்ற வேண்டும்.
- மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே வாகனத்தை ஓட்ட வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூரில் பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக ஆட்டோவில் அழைத்து செல்ல வேண்டுமென டிரைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இது குறித்து போலீசார் ஆட்டோ டிரைவர்களுக்கு அறிவுறுத்தியதாவது:-
ஆட்டோ மற்றும் டிரைவர்கள் அரசு அனுமதித்த எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்ற வேண்டும். அனுமதியை மீறி அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றக்கூடாது. மாணவர்களை ஏற்றிச்செல்லும் டிரைவர்கள் கதவு பூட்டப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே வாகனத்தை ஓட்ட வேண்டும். விபத்துகள் இல்லாமல் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்ட வேண்டும்.போக்குவரத்து விதி மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். குழந்தைகளை ஏற்றி செல்லும் டிரைவர்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் வாகனங்களை இயக்க வேண்டும். மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.
வேகத்தடைகள் உள்ள பகுதிகளிலும் மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் கவனமாக கடந்து செல்ல வேண்டும். வாகனத்தில் பிரேக் நல்ல முறையில் உள்ளதா என அடிக்கடி கண்காணிக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு போலீசார் அறிவுறுத்தினர்.
- "சிராஜுல் மில்லத்"விருது மற்றும் பரிசு வழங்கும் விழா இக்பால் நகரில் நடைபெற்றது.
- 33-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செய்யது அலி பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவ -மாணவிகளுக்கு விருதுகளை வழங்கினர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் இக்பால் நகர் "சிராஜுல் மில்லத் அறக்கட்டளையின் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் கடையநல்லூர் நகரத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு "சிராஜுல் மில்லத்"விருது மற்றும் பரிசு வழங்கும் விழா இக்பால் நகரில் நடைபெற்றது.
விழாவிற்கு ஜபருல்லாஹ்கான் தலைமைதாங்கினார். தலைமை ஆசிரியர்கள் செய்யது முகைதீன், அப்துல் கனி, சிக்கந்தர் சாகிப், ஹுசைன் , முஸ்லிம் லீக் முன்னாள் மாவட்ட தலைவர் இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறக்கட்டளை தலைவர் ஹாஜா மைதீன் வரவேற்றார். கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் , டாக்டர் சஞ்சிவீ, வரலாற்று எழுத்தாளர் இப்ராகீம், மடத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செய்யது இப்ராகீம், 33-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செய்யது அலி பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவ -மாணவிகளுக்கு விருதுகளை வழங்கினர்.
இதில் முஹம்மது கோயா, இஸ்மத், அப்துல் லத்தீப், யூசுப், ரஹமத்துல்லாஹ், சேகுதுமான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். யாகூப் நன்றி கூறினார்.
- சோழவந்தானில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
- ரூ.25ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள், எழுதுபொருட்களை முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
சோழவந்தான்
சோழவந்தான் சி.எஸ்.ஐ.தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் எழுதுபொருள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தாளாளர் எபினேசர்துரைராஜ் தலைமை தாங்கினார்.பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவர் ஆதிபெருமாள் முன்னிலை வைத்தார். ரூ.25ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள் மற்றும் எழுதுபொருட்களை முன்னாள் மாணவர்களான கரூர் எல்.ஐ.சி. துணை மேலாளர் முத்துராமன்,சொக்கலிங்கபுரம் ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஜோயல்ராஜ், இல்லம் தேடிகல்வித் திட்ட மாநில கருத்தாளர் ராணிகுணசீலி ஆகியோர் வழங்கினர்.
தலைமை ஆசிரியர் ராபின்சன்செல்வகுமார் ஒருங்கிணைத்தார். ஆசிரியை பிரேமாஅன்னபுஷ்பம் வரவேற்றார். ஆசிரியைகள் வனிதாசாந்தகுமாரி, திவ்யா, கிறிஸ்டிஜெயஸ்டார் மற்றும் பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். ஆசிரியை பிரேம்குமாரி நன்றி கூறினார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் 4 ஆயிரம் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட கையேடுகள் வழங்கப்பட்டது.
- எண்ணும் எழுத்தும் கையேடு வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியை மேரி தலைமையில் நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கையேடு வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியை மேரி தலைமையில் நடந்தது. ஆசிரியை ஆனந்தவல்லி வரவேற்றார்.
புத்தகங்களை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் மலர்கொடி பேசியதாவது:-
நடப்பு கல்வியா ண்டிலிருந்து எண்ணும் எழுத்தும் திட்டம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
2025-ம் கல்வியாண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 3-ம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள், பொருள் புரிந்து படிக்கவும் எழுதவும் அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது எண்ணும் எழுத்தும் திட்டத்தின் இலக்கு ஆகும்.
இதற்காக மாணவர்களுக்கு சிறப்புக் கையேடுகள் அரும்பு, மொட்டு, மலர் என 3 வகையாக தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 1-ம் வகுப்பு படிக்கும் 1272 மாணவர்களுக்கும், 2-ம் வகுப்பு படிக்கும் 1509 மாணவர்களுக்கும், 3-ம் வகுப்பு படிக்கும் 1514 மாணவர்களுக்கும் என மொத்தம் 4295 மாணவ-மாணவிகளுக்கு இந்த கையேடு வழங்க ப்பட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் வகுப்பறையின் அமைப்பு, கற்றல் களங்கள், துணைக்கருவிகள் மூலம் குழந்தைகள் பங்கேற்றுக் கற்பதை பெற்றோர் அறியும்வகையில் வகுப்பறையைப் பெற்றோருக்கு காட்சிப்படுத்த வேண்டும்.
குழந்தைகளின் தனித்திறன்கள் வகுப்பறையில் ஊக்குவிக்கப்படுவது குறித்து விளக்கிக் கூறுவதோடு குழந்தைகளின் திறன்களைப் பெற்றோர் காணும்வகையில் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இந்த கருத்துக்களை முதன்மைப்படுத்தி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு) வகுப்பு வாரியாக பெற்றோர் கூட்டம் நடத்த தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆசிரியை ஆவுடையம்மாள் நன்றி கூறினார்.
- மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் நாடு முழுவதும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் மொழி திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது.
- 4 ஆண்டு களுக்கு மொத்தம் ரூ.48 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்படு கிறது. மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக இந்த தொகை செலுத்தப்படும்.
கோவை:
தேசிய திறனிறித் தேர்வில் கோவையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 196 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் நாடு முழுவதும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் மொழி திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த தேர்வினை எழுதினர். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தொடர்ந்து 9,10,11,12 ஆகிய 4 வகுப்புகளுக்கான கல்வி உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.
இதன்படி 4 ஆண்டு களுக்கு மொத்தம் ரூ.48 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்படு கிறது. மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக இந்த தொகை செலுத்தப்படும். வறுமை காரணமாக திறமையான மாணவர்கள் பள்ளிக்கல்வியை நிறுத்தி விடக்கூடாது என்பதே இந்த கல்வி உதவி தொகையின் நோக்கமாகும்.
மாணவர்களின் நுண்ணறிவுத்திறனை சோதிக்கும் வகையில் 90 மதிப்பெண்கள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு 90 மதிப்பெண்கள் என மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு கடந்த மார்ச் 5-ந் தேதி தேர்வு நடைபெற்றது.
தேர்வு முடிவுகள் வெளி யானதில் தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 900 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கோவையில் மட்டும் 196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- அரசு உத்தரவுப்படி 40மாணவருக்கு 1 ஆசிரியர் நியமிக்கப்படவேண்டும்.
- மாணவிகளுக்கு தேவையான கழிப்பிடம் 4 மட்டுமே உள்ளது.
வீரபாண்டி :
திருப்பூர் மாநகராட்சி 54வது வார்டுக்குட்பட்ட வீரபாண்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது .6ம் வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரை மொத்தமாக 1975 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். தற்போது 11ம் வகுப்புக்கு அட்மிஷன் நடைபெறுகிறது. இப்பள்ளியில் அரசு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடம் மொத்தம் 38.இதில் பணிபுரிவோர்கள் 33.காலிப்பணியிடம் 5 உள்ளது.
அரசு உத்தரவுப்படி 40மாணவருக்கு 1 ஆசிரியர் நியமிக்கப்படவேண்டும். அப்படிெயன்றால் 50ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் 33 ஆசிரியர்கள் மட்டுமே இருக்கிறார்கள். வகுப்பறைகள் இருப்பது 22.வகுப்பறைகள் தேவை 21.மேல்நிலை கல்விக்கு தேவையான இயற்பியல். வேதியியல். உயிரியல் உட்பட்ட எந்த ஆய்வகமும் இல்லை. விளையாட்டு மைதானமும் இல்லை.900க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் பெண் உடற்கல்வி ஆசிரியரும் இல்லை.மாணவிகளுக்கு தேவையான கழிப்பிடம் 10. ஆனால் 4கழிப்பிடம் மட்டுமே உள்ளது.மாணவர்களுக்கு தேவையான கழிப்பிடம் 10.ஆனால் 2 கழிப்பிடம் மட்டுமே உள்ளது. இப்படி எல்லாவற்றிற்கும் தேவை இருக்கிறது.
இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் தெரியப்படுத்தியும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே பள்ளியில் வகுப்பறை, ஆசிரியர்கள் நியமனம் மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.