என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students"

    • சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே.
    • ஒருவேளை படித்திருந்தால் இதை விட சிறப்பான இடத்திற்கு கூட நான் சென்றிருப்பேன்.

    தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் கவின். கவினின் லிஃப்ட், டாடா, ஸ்டார் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றநிலையில், அண்மையில் வெளிவந்த 'கிஸ்' கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது கவின் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'மாஸ்க்'. இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகை ருஹானி சர்மா கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களைத் தவிர சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.

    வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் படத்தை தயாரிக்க அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மதுரை தனியார் கல்லூரியில் நடந்த பட பிரமோஷன் விழாவில் கவின் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.  மாணவர்களிடையே பேசிய கவின், 

    "ஒருவேளை படித்திருந்தால் இதை விட சிறப்பான இடத்திற்கு கூட நான் சென்றிருப்பேன். என்ன பிடிக்கிறதோ அதை படியுங்கள், என்ன வேலை பிடிக்கிறதோ அதை செய்யுங்கள், சந்தோஷமாக இருங்கள், மற்றவர்களையும் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ளுங்கள்.

    மாஸ்க் நவ.21 (நாளை) வெளியாகிறது. வெள்ளிக்கிழமை கல்லூரி இருக்கும். அதனால் அனைவரும் சமத்தாக கல்லூரி செல்லுங்கள். அந்த வேலையை முடித்துவிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையில் சென்று பாருங்கள். எதுவும் பிரச்சனை இல்லை. சினிமா ஒரு பொழுதுபோக்குதான். தேவைப்படும்போது செல்லுங்கள், முடிந்தவுடன் வெளியே வந்துவிடுங்கள். பொழுதுபோக்கு பொழுதுபோக்காக இருக்கும்வரை நல்லது" எனப் பேசியிருந்தார். கவினின் இந்தப் பேச்சு பலரிடமும் பாராட்டுகளை பெற்றுவருகிறது.

    • உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐ.ஐ.டி. கான்பூர் என்ற தொழிற் நுட்ப பல்கலைக் கழகம் உள்ளது.
    • 30 ஆண்டுகள் கடந்தும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    கல்லூரி இறுதி ஆண்டு படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள், ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் கொடுத்தும், கட்டித் தழுவியும், ஆடிப்பாடியும், கண்ணீரோடும் பிரிந்து செல்வார்கள்.

    ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற் நுட்ப பல்கலைக் கழகமான ஐ.ஐ.டி. கான்பூரில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் வினோத நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

    ஐ.ஐ.டி. கான்பூரின் முன்னாள் மாணவரும் சிம்பிளிபை தொழில்நுட்ப நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியுமான பி.கே.பிர்லா அப்படி ஒரு திருமணம் தொடங்கிய சுவையான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

    1994-ம் ஆண்டு குளிர் காலத்தில் கல்லூரியின் விடுதி அறையில் நண்பர்களோடு தூக்கம் வராமல் கதைகள் பேசிக்கொண்டி ருந்தோம். அப்போது சில நண்பர்கள் திருமணத்தின் கதையை சொல்லிக் கொண்டிருந்தனர். கல்லூரி ஆண்டு இறுதியில் இதுபோன்று ஒரு திருமணத்தை நடத்தினால் என்ன என்று யோசனை வந்தது. நண்பரான நிர்மல் சிங் அரோரா அந்த திருமணத்தை ஏற்பாடு செய்தார்.

    அந்த திருமணத்திற்கு பெண்கள் முன்வராததால், மற்றொரு ஆண் நண்பர் பெண்வேடமிட்டு அதில் கலந்து கொண்டார். போலியான புரோகிதரையும் கூட்டி வந்து மணமக்களை குதிரையில் உட்காரவைத்து பெண்கள் விடுதி தோட்டத்தில் உள்ள பராத் ஹால் 1-ல் இருந்து ஹால் எண் 6 வரை அந்த ஊர்வலத்தை நடத்தினோம்.

    இது கல்லூரியில் பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து வந்த மாணவர்கள் இதை நடத்தினார்கள். 30 ஆண்டுகள் கடந்தும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    கடந்த 2004-ம் அண்டு திருமணத்தில் பங்கேற்ற மாணவரான உத்கர்ஷ் தனது திருமண அனுப வத்தை பகிர்ந்து கொண்டார். அது ஒரு நல்ல மகிழ்ச்சியான அனுபவம். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஷாதி இப்போது பிரம்மாண்டமான பிரியாவிடை நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

    • பொதுவாக விஜயதசமி நாளில் தனியார் பள்ளிகளில் மட்டுமே தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் அதிகம் வருவார்கள்.
    • ஆனால் சமீப காலமாக அரசு செயல்படுத்தும் திட்டங்களால் அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 5-ம் ஆண்டாக மாணவர் சேர்க்கை 100 சதவீதம் அடைந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் வருகிற அக்டோபர் 2-ம் தேதி விஜயதசமி நாளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.

    கல்வியில் சிறந்த தமிழ்நாடு என அனைத்து தரப்பு மக்களும் போற்றி புகழும் வேளையில் அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களால் மாணவர்கள் எவ்வாறு பயனடைந்து வருகின்றனர் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் கூமாபட்டி ரீல்ஸ் ஸ்டைலில் பெற்றோர்களுக்கு வித்தியாசமான அழைப்பு விடுத்துள்ளனர்.

    அதில் ஏ.....ங்க..... இங்க பாருங்க..... அரசு பள்ளிங்க நம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்களால் நாங்கள் பயனடைந்து வருகிறோம். தினந்தோறும் தரமான காலை உணவு வழங்கப்படுகிறது பாருங்க....

    எங்க பள்ளியில் எவ்வளவு பெரிய டி.வி. இருக்கு பாருங்க.....

    எங்க பள்ளியில் கழிப்பறை வசதி எப்படி இருக்கு பாருங்க.....

    எங்க பள்ளியில் வகுப்பறை எல்லாம் வேற லெவலில் இருக்கு பாருங்க....

    என பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்களை மாணவ-மாணவிகள் தங்கள் மழலை கலந்த மொழியில் நகைச்சுவை உணர்வுடன் கைகளை காட்டி வெளிப்படுத்தும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுவாக விஜயதசமி நாளில் தனியார் பள்ளிகளில் மட்டுமே தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் அதிகம் வருவார்கள். ஆனால் சமீப காலமாக அரசு செயல்படுத்தும் திட்டங்களால் அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் கிராமபுரத்தில் உள்ள பெற்றோர்களை ஈர்க்கும் வகையில் தலைமை ஆசிரியர் மேற்கொண்டுள்ள இந்த விழிப்புணர்வு பிரசாரம் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

    • மாணவர்களின் குடும்ப சூழலை கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
    • மாணவர்களின் 2-வது பெற்றோர் ஆசிரியர்கள்.

    சென்னை நேரு விளையாட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 243 புதிய பள்ளிக்கட்டடங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக்கட்டங்களை அவர் திறந்து வைத்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வாக 2,715 ஆசிரியர்களுக்கான நுழைவுநிலை பயிற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது:

    * மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியர் பணிக்கு வந்துள்ளவர்களுக்கு வாழ்த்துகள்.

    * மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் எடுப்பார்கள். ஆனால் ஆசிரியர்களுக்கே பாடமெடுத்திருக்கிறார் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி.

    * ஆசிரியர் என்பவர் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுப்பவர் அல்ல. ஆசிரியர் முன்னால் அமர்ந்திருப்பவர்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள்.

    * மாணவர்களின் சிந்தனையை தூண்டி அறிவை மேம்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது.

    * மாணவர்களுக்கு சரியானதை ஆசிரியர்கள் தான் வழிகாட்ட வேண்டும்.

    * சமூகத்திற்கே ஒளி ஏற்றி வைக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்.

    * பாட புத்தகத்தை கடந்து சமூக ஒழுக்கத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.

    * மாணவர்களிடம் ஆசிரியர்கள் நண்பர்களாக நடந்துகொள்ள வேண்டும்.

    * மாணவர்களுக்கு உடல்நலமும், மனநலமும் முக்கியம்.

    * மாணவர்களின் குடும்ப சூழலை கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

    * மாணவர்களின் 2-வது பெற்றோர் ஆசிரியர்கள்.

    * பெற்றோர்களை விட ஆசிரியர்கள் மத்தியில்தான் மாணவர்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.

    * தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நமது பெருமையின் அடையாளமாக திகழ்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பி.எட். மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணைய தள விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
    • 13 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன.

    சென்னை:

    உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி 20.6.2025 அன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26-ம் ஆண்டிற்கான பி.எட். மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணைய தள விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்விற்கு பிறகு 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 49 காலியிடங்கள் மற்றும் 13 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன.

    இணையதளத்தில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து பயில ஏதுவாக இணையதள விண்ணப்பப்பதிவு வசதி இன்று (15-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாணவர்கள் சேர்க்கைக்கான கூடுதல் விவரங்களை www.lwiase.ac.in என்ற இணையதள வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

    அதே போல், எம்.எட். பாடப்பிரிவில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்ந்து பயில ஏதுவாக மாணவர்கள் சேர்க்கை கான இணையதள விண்ணப்பப் பதிவு வசதி வருகிற 30-ந்தேதி வரை செயல்படும். விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    அசாம் மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் 8 பள்ளி மாணவர்களின் கண்கள் பசியால் ஒட்டப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

    அங்கு சாலகுடா பகுதியில் உள்ள சேவாஷ்ரம் பள்ளி விடுதியில் 3,4, 5 ஆம் வகுப்பை சேர்ந்த 8 மாணவர்கள் தூங்கிக்கொண்டிருந்த போது சில சக மாணவர்கள் விளையாட்டாக அவர்களின் கண்களில் இன்ஸ்டன்ட் பசையை தேய்த்துள்ளனர்.

    இதனால் 8 பேரும் தூக்கத்தில் இருந்து விழித்தபோது அவர்களின் கண் இமைகள் திறக்க முடியாமல் ஒட்டிக் கொண்டன. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக மாவட்ட நிர்வானம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். தவறு செய்தவர்களை கண்டித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிய்வ்துள்ளது.  

    • சில மாணவிகள் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியருக்கு கால் அமுக்கி விட்டு உள்ளனர்.
    • மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக கலைவாணி என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த பள்ளியில் 40 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளை தனக்கு கால் அமுக்கி விடுமாறு கூறி வந்ததாக தெரிகிறது. சில மாணவிகள் பள்ளி வளாகத்தில் அவருக்கு கால் அமுக்கி விட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் இது தொடர்பான சில வினாடிகள் ஓடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று பரவியது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் நேற்று அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இது சம்பந்தமாக தலைமை ஆசிரியையிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியை கலைவாணியை அந்த பள்ளியில் இருந்து இடமாற்றம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் அரூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இரட்டை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை வகுக்கும் பணி தொலைதூர கல்வி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
    • கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயனளிக்கும்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்க அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த கல்வியாண்டு (2025-26) முதல் திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி முறையில் பயிலும் மாணவர்கள் மேலும் ஒரு பட்டப்படிப்பை படிக்க வாய்ப்புள்ளது.

    தொலைதூர கல்வி முறையில் படிப்பவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிப்பதற்கான திட்டங்களில் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்று சென்னை பல்கலைக்கழகம் தயாரித்துள்ள இரட்டை பட்டப்படிப்புகளுக்கான வரைவு வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு வழிகாட்டுதல்கள் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்படுகிறது. இந்த இரட்டை பட்டப்படிப்பானது சான்றிதழில் குறிப்பிடப்படும் என்று வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவிப்பை தொடர்ந்து, அதை செயல்படுத்த சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இரட்டை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை வகுக்கும் பணி தொலைதூர கல்வி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:-

    தேசிய கல்விக் கொள்கை-2020 பரிந்துரைகளில் இரட்டை பட்டம் என்பது இடம்பெற்றுள்ளது. வணிகம், கலை மற்றும் அறிவியல் படிப்புகளை படிக்கும் மாணவர்கள் கூடுதல் பாடத்தை படிப்பதன் மூலம் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றதால் நகரங்களில் உள்ள கல்லூரிகளில் பி.காம். சேர்க்கை மிகவும் கடினமாக உள்ளது.

    பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் ஒரு மாணவர் தொலைதூர கல்வி முறையில் பி.காம் படிப்பில் சேர்ந்து ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம். இது அவர்களுக்கு ஆர்வமுள்ள துறையில் வேலை வாய்ப்பை பெற உதவும். இது கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயனளிக்கும். தொலைதூர கல்வி முறையில் பி.சி.ஏ. மற்றும் பி.பி.எம். பட்டம் பெறுவது கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று காலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
    • கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த ஆலங்குடி பூனாயிருப்பு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம்வகுப்பு வரை மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று காலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதனை மாணவர்கள் சாப்பிட்டனர். அப்போது சில மாணவர்கள் சாம்பாரில் பல்லி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர்.

    இதையடுத்து காலை உணவை சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை ஆசிரியர்கள் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • தமிழ்நாடு தேர்வர்களை வஞ்சிக்கும் மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு கடும் கண்டனம்.
    • நெல்லை, கோவை, வேலூரில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்கள் இறுதிப்பட்டியலில் இல்லை.

    மத்திய அரசின் பணியாளர் தேர்வுக்கு மதுரை, திருச்சி, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள தேர்வு மையங்களை தேர்வு செய்த தொல்லியல் துறை மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தின் (SSC) பொறுப்பற்ற நடவடிக்கை. நெல்லை, கோவை, வேலூர் மற்றும் புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்கள் இறுதிப்பட்டியலில் இல்லை. மதுரை, திருச்சி, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள தேர்வு மையங்களை தேர்வு செய்த தொல்லியல் துறை மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெருநகரமான சென்னையில் ஒரே ஒரு தேர்வு மையம். தமிழ்நாட்டு தேர்வர்களை விடாது வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

    ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் பல அரசுத் துறைகள், அமைச்சகங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள 2,423 காலியிடங்களை நிரப்புவதற்கான விளம்பர எண். Phase-XIII/2025/Selection Posts ஐ வெளியிட்டது. ஆன்லைன் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி மற்றும் நேரம் ஜூன் 23, 2025 (2300 மணி நேரம் வரை) என்று தரப்பட்டிருந்தது. கணினி அடிப்படையிலான தேர்வுக்கான தேதிகளும் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இது ஜூலை 24 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 04, 2025 வரையில் நடக்கும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட தேதியில் தேர்வு தொடங்கியது பாராட்டப்பட வேண்டிய அம்சமாகும். ஆனால் தேர்வு நடத்தும் முறை நாடு முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்களை நடுநடுங்கச் செய்ய வைத்துள்ளது. பல்வேறு இடங்களில் தேர்வு எழுதுவதற்காகச் சென்ற விண்ணப்பதாரர்கள் பின்வரும் கருத்துக்களை தெரிவித்தனர்.

    1. விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்கள் அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தன. நுழைவுச் சீட்டுகளை ஜூலை 21, 2025 அன்றுதான் வெளியிட்டார்கள். மேலும், இந்த வெளியீடு கூட அனைத்து நாட்களுக்குமானதாக இல்லை. தேர்வுக்கு குறைந்தது நான்கு நாட்களுக்கு முன்புதான் நுழைவுச்சீட்டு வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்கள். அதாவது, ஆகஸ்ட் 1, 2025 அன்று எழுதவிருக்கும் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

    2. தேர்வு மையத்திற்கு 100 கி.மீ.க்கு மேல் பயணம் செய்த பிறகு, பல்வேறு மையங்களில், தேர்வுகள் நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதாக வாயில்களில் அறிவிப்பைக் கண்டு விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு மையத்தில், அறிவிப்புகள் ஒவ்வொன்றாக ஒட்டப்பட்டபோது அது நகைப்புக்குரியதாக மாறியது. இறுதியாக, ஜூலை 24, 2025 முதல் ஜூலை 26, 2025 வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஒரு அறிவிப்பு ஒட்டப்பட்டது. இந்த நிச்சயமற்ற தன்மை தேர்வர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் தேர்வுகளை சந்திக்க உள்ளவர்கள் பலர் தேர்வு மையங்களுக்கு பயணிக்கத் தயங்குவதால் நேரம் மற்றும் சக்தி வீணாகிவிடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

    3. விளம்பரத்தில் போதிய எண்ணிக்கையிலான மையங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த மையங்கள் பலவற்றில் தேர்வு நடத்தப்படவில்லை என்பது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில், திருநெல்வேலி, கோயம்புத்தூர் போன்ற முக்கியமான மையங்களில் தேர்வுகள் நடத்தப்படவில்லை. ஒரு பெருநகரமான சென்னையில் கூட, ஒரே ஒரு தேர்வு மையம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக போதுமானதாக இல்லை. மையங்கள் வெகு தொலைவில் இருப்பதால் நூற்றுக்கணக்கான தேர்வர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சிலர் தேர்வில் கலந்து கொள்ள மூன்று நாட்கள் செலவிட வேண்டியிருக்கிறது.

    4. தேர்வு அறைகளுக்குள், கணினிகள் சரியாக வேலை செய்யவில்லை. சில தேர்வர்கள் விடை எழுதும்போது தங்கள் கணினிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டதைக் கண்டறிந்தனர். அவர்கள் வேறொரு கணினியில் அமர்த்தப்பட்டனர். பல கணினிகளில் மவுஸ் வேலை செய்யவில்லை. தேர்வு அறைகள் பெரும்பாலும் கணினி ஆய்வகங்களாக உள்ளதால் மூடப்பட்டதாகவே இருக்கும். சில தேர்வு அறைகளில், குளிர்சாதன வசதி வேலை செய்யவில்லை. இந்தியாவின் வட பகுதி மாநிலங்களில் இது கோடைக்காலம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    5. நுழையும் இடத்தில் தேவைப்படும் நடைமுறை மற்றும் தேர்வு மையத்திற்குள் செய்ய வேண்டியவை ஒழுங்கற்ற முறையில் கையாளப்பட்டுள்ளன. சில அரங்குகளில் கதவு மூடப்பட வேண்டிய நேரம் என்று அறிவித்திருந்த நேரமான காலை 9 மணிக்குப் பிறகுதான் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்வு அரங்கிற்குள் அலைபேசிகள் தடைசெய்யப்பட்டவையாகும். ஆனால், தேர்வு அரங்கின் உள்ளிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியில் பகிரப்பட்டுள்ளன. மேலும் சிலர் தாங்கள் தேர்வு எழுதும் கணினியின் திரையைப் பகிர்ந்திருக்கிறார்கள்.

    6. தேர்வுகளை நடத்துவதற்குப் பொறுப்பேற்றுள்ள நிறுவனம் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, டாடா கன்சல்டன்சி நிறுவனம் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை நடத்தி வந்தது, இப்போது எடுக்விட்டி(Eduquity) என்ற புதிய நிறுவனத்திற்கு இந்தப் பணி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மாற்றத்தைச் செய்யும் அதே வேளையில், தேர்வுகளை சீராக நடத்துவதை உறுதி செய்வதில் பணியாளர் தேர்வு ஆணையம் தோல்வியடைந்துள்ளது, இதன் விளைவாக நாடு முழுவதும் உள்ள வேலையற்ற இளைஞர்கள் தேவையற்ற சித்திரவதைக்கு ஆளாகியுள்ளனர்.

    இதன் மூலம் தேர்வர்கள் நலன் சார்பாக முன்வைக்கும் கோரிக்கைகள் என்னவென்றால்,

    1. தேர்வுகள் மீண்டும் திட்டமிடப்படுவதால், எஞ்சியுள்ள தேர்வுகள் சரியான முறையில் நடத்தப்பட வேண்டும். "நிர்வாகக் காரணங்கள்" அல்லது "தொழில்நுட்பக் கோளாறுகள்" போன்றவற்றைச் சொல்வது எதற்கும் பயனளிக்காது.

    2. விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மையங்களில் இருந்தும், தேர்வர்களுக்கு அருகாமையில் உள்ள மையங்களை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.

    3. பெரிய நகரங்களில், அதாவது சென்னையில் உள்ள தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

    4. எதிர்காலத்திலாவது நுழைவுச் சீட்டுகள் முன்கூட்டியே வெளியிடப்பட வேண்டும்,

    5. தேர்வுகளை நடத்தும் பணியை ஒதுக்கும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே, மாற்றத்தின் போது ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க ஒரு தெளிவான செயல்முறையை வகுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    • பள்ளியின் சுவர்கள் மற்றும் கூரை இடிந்து விழும் நிலையில் இருப்பதாக உள்ளூர்வாசிகள் பலமுறை புகார் அளித்தனர்.
    • "ஜூன் மாதத்திலேயே மாணவர்களை பாழடைந்த பள்ளி கட்டிடங்களில் உட்கார வைக்க வேண்டாம் என்று நாங்கள் தெளிவான உத்தரவுகளை பிறப்பித்திருந்தோம்.

    ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிம்ப்லோடில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை அரசுப் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏழு அப்பாவி மாணவர்கள் உயிரிழந்தனர். 11க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    சம்பவத்திற்கு முன்பு மாணவர்கள் கூரையிலிருந்து கற்கள் விழுவதாக என்று ஆசிரியர்களை எச்சரித்திருந்தனர். ஆனால் அவர்கள் அதை அலட்சியம் செய்துள்ளனர்.

    இதுகுறித்து விபத்தில் இருந்து தப்பிய எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் கண்ணீருடன் கூறுகையில், "மேலே இருந்து கற்கள் விழுவதாக ஆசிரியர்களிடம் சொன்னோம். ஆனால் அவர்கள் எங்களைத் திட்டி வகுப்பறையில் உட்காரச் சொன்னார்கள். அப்போது,  கூரை இடிந்து மாணவர்கள் மீது விழுந்தது" என்று கூறினார்.

    இந்த துயரச் சம்பவம் நடந்த நேரத்தில் ஆசிரியர்கள் வெளியே காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இது ஆசிரியர்களின் கடுமையான அலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.

    பள்ளியின் சுவர்கள் மற்றும் கூரை இடிந்து விழும் நிலையில் இருப்பதாக உள்ளூர்வாசிகள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் இந்த சம்பவத்தில் கவனம் செலுத்தவில்லை என்று தெரிகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு மேற்பரப்பு சிமென்ட் மற்றும் பிளாஸ்டரிங் மூலம் தாற்காலிகமாகச் சரிசெய்யப்பட்டதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, ஜலவார் மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் ரத்தோட், அலட்சியத்திற்காக ஐந்து ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்தார்.

    "ஜூன் மாதத்திலேயே மாணவர்களை பாழடைந்த பள்ளி கட்டிடங்களில் உட்கார வைக்க வேண்டாம் என்று நாங்கள் தெளிவான உத்தரவுகளை பிறப்பித்திருந்தோம். இந்த சம்பவத்தில் தெளிவான அலட்சியம் உள்ளது. நாங்கள் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளோம், அதன் அறிக்கையின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ரத்தோட் கூறினார்.   

    • மாணவர்கள் ஒவ்வொரு நாளும் ராமாயணம், பகவத் கீதையில் இருந்து ஒரு வாசகம் கண்டிப்பாக கூற வேண்டும்.
    • வார இறுதியில் ராமாயணம், பகவத் கீதை தொடர்பாக வகுப்பறைகளில் மாணவர்கள் விவாதிக்க வேண்டும்

    உத்தரகாண்டில் உள்ள 7,000 அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத் கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு NCERT-யை ஆம்மாநில பாஜக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    இந்த புதிய பாடத்திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் காலை பிரார்த்தனையில் மானவர்கள் தினமும் ராமாயணம் மற்றும் பகவத் கீதை வாசகங்களை கூறுவது கட்டாயம் என்று அம்மாநில பாஜக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அந்த உத்தரவில், "மாணவர்கள் ஒவ்வொரு நாளும் ராமாயணம் மற்றும் பகவத் கீதையில் இருந்து ஒரு வாசகம் கண்டிப்பாக கூற வேண்டும். வார இறுதியில் ராமாயணம், பகவத் கீதை தொடர்பாக வகுப்பறைகளில் மாணவர்கள் விவாதிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உத்தரகாண்டின் இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசுப்பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மையின குழந்தைகளை கட்டாயப்படுத்தி ராமாயணம், பகவத் கீதை கூற சொல்வது கொடுமையானது என்று இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    ×