என் மலர்

    நீங்கள் தேடியது "Students"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெற்றோர், மாணவர் நலச்சங்கம் வலியுறுத்தல்

    புதுச்சேரி:

    புதுவை பெற்றோர், மாணவர் நலச்சங்க தலைவர் வை.பாலா என்ற பாலசுப்பிரமணியன் கவர்னருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    சென்டாக் நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டு, முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கு அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வாணையம் மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட உள்ளது.

    இதில் புதுவை மாணவர்களுக்கான தரவரிசை பட்டிய லில் தவறுதலாக வெளிமாநில மாணவர்கள் இருந்தால் அவர்களை நீக்கம் செய்ய வேண்டும். புதுவை மண்ணின் மைந்தர் களை மட்டுமே கொண்ட தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும்.

    3 தனியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் உள்ள 328 இடங்களில் 50 சதவீத 164 இடங்கள் தேசிய மருத்துவ கமிட்டி விதி யின்படி பெறப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு புதிய அனுமதி பெற்றாலும், அதிலும் சரிபாதி இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற வேண்டும்.

    சென்டாக் கலந்தாய்வுக்கு முன்பு அரசு, நிர்வாக ஒதுக்கீடாக பெற்ற இடங்களின் விபரங்களை அறிவிக்க வேண்டும். கல்வி கட்டண விபரங்களையும் சென்டாக் இணையதளத்தில் வெளியிட வேண்டும். உயர்கல்வி கட்டணக்குழு தலைவர், உறுப்பினர்களை அறிவிக்க வேண்டும்.

    சென்டாக் நிர்வாகத்தில் அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களின் இருப்பிடம், சாதி, படிப்பு சான்றிதழ்களை சரிபார்த்து, குறைகளை களைந்து புதுவை மாநில மாணவர்களின் உரிமை களை நிலைநாட்ட வேண்டும்.

    இவ்வாறு வை.பாலா குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனர்களிடம் காண்பித்து பயணிக்க அனுமதிக்க வேண்டும்.
    • அடையாள அட்டைகளை வைத்து இருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அனைத்து கிளை மேலாளர்கள், கண்டக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாணவர்-மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டைக்கான விபரங்கள் சேகரித்து, அச்சடித்து, லேமினேஷன் செய்து வழங்குதலில் உள்ள கால அளவு போன்றவற்றினை கருத்தில் கொண்டு, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பள்ளி மாணவ-மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்தில் இருந்து பயிலும் பள்ளி வரையிலும் சென்று வர அனுமதிக்க வேண்டும்.

    அதே போன்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு இசைக் கல்லூரி, அரசு கவின் கலைக் கல்லூரி, அரசினர் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரி (மாமல்லபுரம்) அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழில் பயற்சி நிலைய மாணவ-மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது மாநகர போக்குவரத்து கழகத்தில் 2022-2023-ம் ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை மாநகர போக்குவரத்து கழக நடத்துனர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரை மாநகர போக்குவரத்து கழகத்தால் கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படும் வரை கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து மாநகர போக்குவரத்து கழக நடத்துனர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது.

    இந்த உத்தரவினை மீறி சீருடையில் உள்ள மாணவர்களை அல்லது மேற்கூறிய அடையாள அட்டைகளை வைத்து இருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆசிரியர் பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றது.
    • சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் கே. செட்டிப்பாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 10-ம்வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவும், ஆசிரியர் பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் செயலாளர் எக்ஸ்லான். கே. ராமசாமி வரவேற்புரை ஆற்றினார். மணிப்பூர், மேகலாயா மாநிலங்களின் முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    மேலும் அவர் 10 ம்வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற மாணவி காவ்யா மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற மாணவி பிரதிக்ஷாவிற்கும் சிறப்பிடம் பெற்ற பிற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    இவ்விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் தலைவர் வீனஸ். குமாரசாமி நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகளுக்கான கலந்தாய்வு வரும் மே 31 தொடங்கி ஜூன் 6ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • அசல் மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் இல்லாமல் இருப்பின் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.

    இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் மே 31 தொடங்கி ஜூன் 6ந் தேதி வரை நடைபெறுகிறது. தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ள நிலையில், விண்ணப்பித்தவா்களின் தரவரிசைப் பட்டியல் கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆகவே விண்ணப்பித்துள்ள மாணவா்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு தங்கள் தரவரிசையை அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கும், கைப்பேசி எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். இதனடிப்படையில் மாணவா்கள் கல்லூரியில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். கலந்தாய்வுக்கு அடுத்தடுத்த தரவரிசையில் இருந்தே அழைக்கப்படுவா். அழைக்கப்படுபவா்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும். மாற்றுத்திறனாளி, விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவா் படை 'ஏ' சான்றிதழ் பெற்றவா்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவா் சோ்க்கை புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் நடைபெறுகிறது.

    இந்த சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் சேர விரும்பும் விளையாட்டு வீரா்கள் சா்வதேச, தேசிய, மாநில, மாவட்ட அளவில் விளையாட்டில் சிறப்பிடம் பெற்றவா்கள் உரிய சான்றிதழ்களை எடுத்துவர வேண்டும். மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவா்களின் சான்றிதழ் மாவட்ட விளையாட்டு அலுவலரால் கையொப்பமிடப்பட்டவை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். பள்ளியில் தேசிய மாணவா் படையில் 'ஏ' சான்றிதழ் பெற்றவா்கள் சிறப்பு ஒதுக்கீட்டில் பங்கு பெறலாம். முன்னாள் மற்றும் தற்போதைய ராணுவத்தினரின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், அந்தமான் நிகோபாா் தீவுகளின் தமிழா்கள் ஆகியோா் சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்து கொள்ள உரிய அசல் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

    கலந்தாய்வில் பங்கேற்க கல்லூரிக்கு வருவோா் கட்டாயம் பெற்றோா் உடன் வரவேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தைக் கட்டாயம் கொண்டு வரவேண்டும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல்பக்கம் ஆகியவற்றின் 2 நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் கொண்டுவர வேண்டும். பாஸ்போா்ட் அளவிலான 6 புகைப்படம் மற்றும் கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகையுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம். அதே வேளையில், அசல் மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் இல்லாமல் இருப்பின் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.

    உரிய நேரத்தில் கலந்தாய்வில் பங்கேற்காமல் தாமதமாக வந்தால் அந்த நேரத்தில் பாடப் பிரிவுகளில் இருக்கும் இடங்களின் அடிப்படையிலேயே தகுதியுள்ள பிரிவுகளில் சோ்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜூன் 9-ந்தேதி பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கில பிரிவிற்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
    • அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் குறிப்பிட்ட தேதியில் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்து கல்லூரி முதல்வர் ராஜா வரதராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

    பூதலூர் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு 2023-24 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வரும் 30-ந்தேதி தொடங்குகிறது. வரும் 30-ந்தேதி காலை 9 மணிக்கு சிறப்பு ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.

    அதனை தொடர்ந்து ஜூன் முதல் தேதி பி.காம் ,பிபிஏ பிரிவுகளுக்கும் ,ஜூன் 8-ம் தேதி பி.எஸ்.சி.கணினி அறிவியல் பிரிவுக்கும், ஜூன் 9-ஆம் தேதி பிஏ தமிழ் மற்றும் ஆங்கில பிரிவிற்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

    இணைய வழியில் விண்ணப்பம் அனுப்பிய விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு வரும் பொழுது தங்களின் கல்வித் தகுதி குறித்த 10ம் வகுப்பு 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல் ,மாற்றுச் சான்றிதழின் அசல் மற்றும் நகல், இனச் சான்றிதழ், ஆதார் அட்டை மாணவர்களின் புகைப்படங்கள் இரண்டு, சிறப்பு ஒதுக்கீடு கோருப வர்கள் அதற்கான சான்றிதழ்களுடன் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

    திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு நடப்பு ஆண்டு மொத்தம் 3376 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.

    இதில் கணினி அறிவியல் பிரிவு கோரி 753 விண்ணப்பங்களும், இளங்கலை தமிழ் படிக்க 751 விண்ணப்பங்களும், வணிக நிர்வாகவியல் (பிபிஏ) படிக்க 648 விண்ணப்ப ங்களும், வணிகவியல் (பிகாம்) படிக்க 585 பேரும், பி.ஏ.ஆங்கிலம்படிக்க 4 54 விண்ணப்பங்களும், சிறப்பு பிரிவினர் 185 பெரும் விண்ணப்பித்துள்ளனர்.

    விண்ணப்பதாரர்கள் அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் உடன் இரண்டு புகைப்படங்களுடன் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிளஸ்-2-வில் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • தகுதியுள்ளவர்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    ஹெச்சிஎல் நிறுவனத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு ஹெச்சிஎல் டெக்னாலஜில் வேலைவாய்ப்புடன் இராஜஸ்தான் மாநிலத்தி லுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லுரியில் பிஎஸ்சி பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைகழகத்தில் பிசிஏ பட்டப்படிப்பு அமிட்டி பல்கலைகழகத்தில் பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.காம்., மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம்., பல்கலைகழகத்தில் ஒருங்கிணைந்த மேலாண்மை

    பட்டபடிப்பு சேர்ந்து படித்திடவும், வாய்ப்பும் பெற்றுதரப்படும்.

    இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தாவராக இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பில் 2022 -ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இ எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் இப்படிப்பி ற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.

    இத்திட்டத்தில் வருடாரந்திர ஊதியமாக ரூ.1,70,000- முதல் ரூ.2,20,000- வரை பெறலாம்.

    மேலும் திறமைக்கேற்ற வாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம்.

    இப்பயிற்சியில் சேர தாட்கோ இணைதளம்

    www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவல கத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்க ளுடன் பதிவேற்றம் செய்யலாம்.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தாட்கோ மேலாளர் அலுவல கத்தை அணுகவும் தொலை பேசி எண்:04364-211217.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநகராட்சி பள்ளிகளில் அரசின் காலை உணவுத்திட்டம் வரும் கல்வியாண்டில் செயல்படுத்–தப்பட உள்ளது.
    • துணை மேயர் பாலசுப்பிரமணியம், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்களின் குழந்தைகள் மாநகர பகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிகளில் படித்து இடைநின்ற, படிப்பை பாதியில் விட்ட குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமை தாங்கினார். மேயர் தினேஷ்குமார் பேசும்போது, `பள்ளியில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் அரசின் காலை உணவுத்திட்டம் வரும் கல்வியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. அதை சிறப்பாக செயல்–படுத்த வேண்டும். ஆத்துப்பாளையம், வெங்கமேடு பகுதிகளில் வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் 84 பேர் பள்ளி செல்லாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களை அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அவர்களின் தாய்மொழியை கற்றுக்கொடுக்கவும் ஆசிரியர்களை நியமிக்கலாம்' என்றார். இந்த கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் வலியுறுத்தல்
    • புதுவை மாநில மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மிகவும் பாதிக்கும்.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     தற்போது புதுவை கல்வி துறை அவசர கோலத்தில், மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என்ற ஒரே காரணத்தால், இதுவரை இருந்த பாடத்திட்டத்தை மாற்றி பிளஸ்-1 வகுப்பு வரை சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை வரும் ஆண்டில் புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடை முறைப்படுத்துவது வன்மையாக கண்டிக் கத்தக்கது.

    தகுந்த பயிற்சி இல்லாத ஆசிரியர்களைக் கொண்டு இத்தகைய புதிய முயற்சியை எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் எடுப்பது மேலும் புதுவை மாநில மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மிகவும் பாதிக்கும்.

    எனவே பெரும்பாலான வசதியுள்ள மாணவர்கள் ஏற்கனவே சி.பி.எஸ்.சி. முறையை பின்பற்றும் தனியார் பள்ளிகளை நாடி செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரும்பாலும் உள்ள நடுத்தர மற்றும் ஏழை மாணவர்களின் நிலைமை மிகவும் பின்னடைவை சந்திக்க நேரிடும். புதுவை அரசின் பெரும்பாலான அறிவிப்புகள் எல்லாம் தனி யாரை ஊக்கு விப்பதாகவே உள்ளது.

    எனவே இந்த முயற்சியை புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் முதல்-அமைச்சர் ரங்கசாமியும் தற்காலிகமாக தடுத்து நிறுத்திட வேண்டும்.

    அதேபோல் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது மிகவும் வேதனையானதாகும்.

    இது புதுவை அரசுக்கு தலைகுனிவான விஷயமாக கருதி இந்த நிலைமைக்கு காரணமான அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருந்து 90க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.
    • சிறப்பாக செயல்படும், பள்ளி தலைமையாசிரியர்களை ஒருங்கிணைத்து, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்துகிறது.

    திருப்பூர்:

    அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு, கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில், முன்னாள் மாணவர்களை ஈடுபடுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.மாவட்ட வாரியாக, முன்னாள் மாணவர் சங்கம் சிறப்பாக செயல்படும், பள்ளி தலைமையாசிரியர்களை ஒருங்கிணைத்து, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்துகிறது. கோவை மண்டல அளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருந்து 90க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். இவர்கள் தங்கள் பள்ளிகளில், முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்த விதம் குறித்து, கருத்துக்களை பகிர்ந்ததோடு, இத்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும், விரிவாக்குவதற்கான செயல் திட்டங்களையும் முன் வைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 3000 வழங்கப்பட்டது.
    • கல்வி ஊக்கத்தொகை மறைந்த அவிநாசியப்பகவுண்டர் நினைவாக மணிவேலுச்சாமியால் வழங்கப்பட்டு வருகிறது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் மேல்நிலைப் பள்ளியில் 10,11, மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை மறைந்த அவிநாசியப்பகவுண்டர் நினைவாக மணிவேலுச்சாமியால் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி இந்த கல்வியாண்டில் (2022-2023) பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ 10,000 ,இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.7500,மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.5000, பொருளியல் ,கணக்குப்பதிவியல் வரலாறு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தலா ரூ. 3000 மும் ஆக மொத்தம் ரூ. 60 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்வில் ஏ.வி.ஏ.டி. பள்ளியின் தலைமை ஆசிரியர் ரா. செல்வகுமார் வரவேற்புரையாற்றினார், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகாபழனிச்சாமி , சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ரத்தின சபாபதி , பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மோகன்குமார், ஆடிட்டர் தெய்வசிகாமணி உள்பட பலர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்கள். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print